-
28th April 2020, 07:25 PM
#3921
Junior Member
Diamond Hubber
-
28th April 2020 07:25 PM
# ADS
Circuit advertisement
-
28th April 2020, 07:25 PM
#3922
Junior Member
Diamond Hubber
-
28th April 2020, 07:29 PM
#3923
Junior Member
Diamond Hubber
-
28th April 2020, 07:35 PM
#3924
Junior Member
Diamond Hubber
தலைவர் வராமல் தாலி கட்ட மாட்டேன் என்ற தொண்டர்கள் மத்தியில் அன்று தலைவர் வராமல் முதலிரவு கிடையாது என்றவர்.....படியுங்கள்.
கோவை உடுமலை பேட்டை பகுதி சார்ந்த அடுக்கு மொழி பேச்சாளர் திரு. லியாகத் அலிகான் தலைவருக்கு பிடித்தவர்....தலைவரே 1 மணி நேரம் அமர்ந்து மேடையில் இவரை பேச விட்டு ரசித்தவர்.
இவர் திருமண தேதி கேட்டு முதல்வர் தலைவர் வீட்டுக்கு போக அங்கே கூட்டம்...வந்த விஷயம் கேட்க சொன்னார் முதல்வர் என்ற உடன் ஒரு சாதாரண துண்டு சீட்டில் தனக்கு திருமண தேதி நீங்கள் நடத்தி வைக்க தரவேண்டும் என்று எழுதி அவர் கொடுக்க.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள். அவரை வீட்டுக்குள் போய் பாயாசம் சாப்பிட்டு போக சொல்லுங்கள் என்கிறார் மன்னவர்.
அதன் படி அதே வருடம் செப்டம்பர் 13 மதுரையில் திருமணம் அடுத்த நாள் உடுமலையில் வரவேற்பு ஏற்பாடுகள் முடிந்தன....மதுரையில மணம் முடித்து மாலை உடுமலை வந்த அவருக்கு மாவட்ட ஆட்சியர் மொயினுதீன் அவர்கள் இடம் இருந்து இரவு 7 மணிக்கு தகவல்...நாளை முதல்வர் வர முடியாதாம்...வேறு தேதியில் வரவேற்பு வைத்து கொள்ள சொன்னார் உங்களிடம் என்று சொல்ல.
அதற்கு அவர் எப்ப வேண்டுமானாலும் வரட்டும் அதுவரை எனக்கு முதலிரவு இல்லை...இதை தலைவரிடம் சொல்லிவிடுங்கள் என்று லியாகத் அவர்கள் சொல்ல.
இது என்ன வம்பு என்று ஆட்சியர் முதல்வர் அலுவலகத்தில் சொல்ல மீண்டும் தொலை பேசி அழைப்பு இரவு 11 மணி அளவில் வர...இவர் போஸ்ட் ஆபீஸ் ஓட அதற்குள் அது கட் ஆகி விட.
இவர் அங்கேயே காத்து இருக்க அதிகாலை 5 மணி அளவில் தலைவரின் உதவியாளர் வீரையா IAS மறுபடி பேசி நீங்கள் உங்கள் முதலிரவை முடியுங்கள் தலைவர் வரும் 19 அன்று காலை உடுமலை வருகிறார் என்று சொல்ல...இனி எங்கே முதல் இரவு மணி காலை 5.30 மணி சரி என்று தலைவரிடம் சொல்லுங்கள் என்று இவர் சொல்ல.
செப்டம்பர் 19 அன்று காலை ஒரு பதவியும் இல்லாத அந்த தொண்டன் வீட்டுக்கு 600 கிலோமீட்டர் பயணம் செய்து நிகழ்ச்சி நடைபெற்ற உடுமலை தாஜ் திரை அரங்குக்கு வருகிறார் முதல்வர் எம்ஜியார்.
வந்து மேடை எறியவுடன் லியாகத் அவர்கள் போட்ட மாலையை வாங்கி கொண்ட முதல்வர் அவர் காதில் என்ன எல்லாம் முடிந்ததா என்று கேட்க இல்லை என்று இவர் சொல்ல.
அவரை கையை பிடித்து கொண்டு நாற்காலியில் அமர வைக்கிறார் பொன்மனம்...அன்று கோவை மாவட்டம் சார்ந்த குழந்தைவேலு, கோவை தம்பி, திருப்பூர் மணிமாறன், மருதாசலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிய பின் தலைவர் இவரை பற்றி புகழ்ந்து பேசி என் வாழ்வில் இது ஒரு புது அனுபவம் என்று சொல்லி.
எங்கே மணப்பெண் என்று கேட்க அதற்கு லியாகத் அவர்கள் அண்ணா எங்கள் மார்க்க ஜமாத் படி மணப்பெண்ணை மேடையில் அமர வைக்க கூடாது என்று முடிவெடுத்து இருந்தாலும் நான் அவரை அழைத்து வந்து அரங்க மேலாளர் அறையில் அமர வைத்து இருக்கிறேன் கூப்பிடவா என்று கேட்க.
அதற்கு தலைவர் வேண்டாம் நீ ஆண்மகன் பரவாயில்லை ஆனால் பெண் வந்துவிட்டால் அவர்களை பற்றி தவறாக பேச கூடாது உங்கள் ஜமாத் விருப்பத்தை மீற வேண்டாம்...
பின்னால் தோட்டத்துக்கு அழைத்து வா என்று சொல்லி மீண்டும் காதில் ஏதோ சொல்லி கை கூப்பி விடை பெறுகிறார் முதல்வர் வாத்தியார்.
என்ன ஒரு நாகரீகமாக நடத்தை தலைவரிடம் என்று அவையோர் முணுமுணுத்த படி வெளியேற அதுதான் மக்கள் முதல்வர் அவர்.
படத்தில் தலைவர் பற்றி ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இருப்பவர் லியாகத் அலிகான் அவர்கள்.
அவர் மாணவர் பிரிவு மாநில செயலர் ஆக இருந்த போது நாங்கள் நெல்லையில் நடத்திய மாணவர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்ட படம் அடுத்தது.
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி...தொடரும்..உங்களில் ஒருவன் நெல்லை மணி....தொடரும்........ Thanks...
-
28th April 2020, 07:38 PM
#3925
Junior Member
Diamond Hubber
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"
தலைவரை பற்றிய ஒரு தகவல்:
இன்று 17-ம் தியதி
தலைவர் நடிப்பில் வெளிவந்த 136 படங்களில் ஜெனோவா ( மலையாளம் ) மட்டுமே 17-ம் தியதி வெளிவந்த ஒரே ஒரு திரைப்படம்.
ஜெனோவா ( மலையாளம்)
17-04-1953
ஜெனோவா மலையாளம்
மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது, மலையாள படம் வெளியாகி 6 வாரங்களுக்கு பிறகு தான் தமிழில் 01--06-1953-ம் தியதி வெளியிடப்பட்டது.
மலையாளத்தில் தயாரான ஒரே எம்.ஜி.ஆர் படம்
இதன் மலையாள பதிப்பில் பி.எஸ்.வீரப்பா நடித்த வில்லன் கேரக்டரில் மலையாள வில்லன் நடிகர் ஆலப்பி வின்செண்ட் நடித்தார்.
இதன் மலையாள பதிப்பில் எம்.ஜி.ஆருக்கு பதில் வேறொருவர் டப்பிங் பேசினார். எம்.ஜி.ஆருக்கு சரியாக மலையாளம் பேச வரவில்லை என்று அதன் தயாரிப்பாளர் அப்படிச் செய்தார். இதை எதிர்த்து எம்.ஜி.ஆர் வழக்கு தொடர்ந்தார். பின்னர் வழக்கை வாபஸ் பெற்றார்.
MGR நடித்த ஒரே ஒரு மலையாள படம் இது தான். 1953 -ம் ஆண்டு ஈஸ்டர் அன்று இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. எனினும், இது ஈஸ்டருக்கு 13 நாட்களுக்கு பின்னர் 17-04-1953-ம் தியதி தான் திரையரங்குக்கு வந்தது. ஈஸ்டருக்கு பின்னர் வெளியான போதிலும், ஜெனோவா பெரிய வெற்றி பெற்றது.
ஜெனாவா -
"ஜானோவா நாடகம்" மற்றும் "ஜானோவா பர்வம்" ஆகியவற்றின் கீழ் கேரளாவில் பிரபல நாடக குழுவால் நடத்தப்பட்ட ஒரு இசை நாடகம் (சங்கீகா நாடகம்) தழுவலாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் - 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மலையாள இசை நாடகங்களில் ஒன்றான டி.சி.அச்சுத மேனனின் வேடங்களில் ஒன்றான இந்த இசை நாடகம் மிகவும் பிரபலமானது.
இயக்கம் :- ஈச்சப்பன்
தயாரிப்பு :- ஈச்சப்பன்
கதை :- சுவாமி பிரம்ம வரதன்
இளங்கோவன் (உரையாடல்)இசை :- விஸ்வநாதன்
ஞானமணி கல்யாணம்
ஒளிப்பதிவு :- G.விட்டல்ராவ்
நடிப்பு :- எம். ஜி. இராமச்சந்திரன்
பி. எஸ். வீரப்பா
எம். ஜி. சக்ரபாணி
டி. எஸ். துரைராஜ்
பி. எஸ். சரோஜா , கண்ணம்பா,
ராஜமணி
@ வெளியிடூ : 17th April, 1953
( மலையாளம்)
@ வெளியீடு : 1st June, 1953
( தமிழில் )
நன்றி ...
என்.வேலாயுதன் , திருவனந்தபுரம்........ Thanks...
-
28th April 2020, 07:40 PM
#3926
Junior Member
Diamond Hubber
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய " வணக்கம்"
தட்சயக்ஞம். - 31-03-1938 (Dakshayagnam) இது ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் 31-03-1938-ல் வெளிவந்த 3-வது எம் ஜி ஆர் படம்
நடிப்பு
வி.ஏ.செல்லப்பா, சி.ஜி.வெங்கடேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.நடராஜ பிள்ளை, என்.எஸ்.கிருஷ்ணன், கே.கே.பெருமாள், எம்.எம்.ராதாபாய், கே.ஆர்.ஜெயலட்சுமி, டி.ஏ.மதுரம், டி.என்.சந்திராம்மாள்
கதை
ராஜா சந்திரசேகர்
இசை
என்.எஸ்.பாலகிருஷ்ணன்
இயக்கம்
ராஜா சந்திரசேகர்
தயாரிப்பு நிறுவனம்
மெட்ரோபலிடன் பிக்சர்ஸ்
வெளியீடு
31 மார்ச் 1938
தட்சயக்ஞம், ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் வி.ஏ.செல்லப்பா, சி.ஜி.வெங்கடேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.நடராஜ பிள்ளை, என்.எஸ்.கிருஷ்ணன், கே.கே.பெருமாள், எம்.எம்.ராதாபாய், கே.ஆர்.ஜெயலட்சுமி, டி.ஏ.மதுரம், டி.என்.சந்திராம்மாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர். தட்சயக்ஞம் என்ற பெயரில் பல படங்கள் வெளிவந்திருந்தாலும், அவற்றில் இப்படம் தான் முதல் பேசும் படமாகும்.
பிரம்மன் வழி வந்த தட்சணின் மகளான சதி, தன் தந்தையின் விருப்பத்திற்கு எதிராக, சிவபெருமானை (வி.ஏ.செல்லப்பா) திருமணம் செய்கிறார். இதனால் சிவனை அவமானப்படுத்த யாகம் செய்யும் தட்சன், அனைத்து கடவுள்களையும் அழைக்கிறார். ஆனால் சிவபெருமானை மட்டும் அழைப்பதில்லை. அந்த யாகத்தில் கலந்து கொள்ள கணவன் சிவனின் விருப்பத்திற்கு மாறாக வருகிறார் சதி. ஆனால் சதியை அவள் தந்தை அவமானப்படுத்துகிறார். அவமானம் தாங்காத சதி தீயில் விழுந்து தன்னை மாய்த்துக் கொள்கிறாள். வீரபத்ரர் மூலமாக சிவபெருமான், தட்சனின் யாகத்தை தடுத்து, அவன் தலையை வெட்டி, ஆட்டுத் தலையை அவ்விடத்தில் பொருத்தச் செய்கிறார். பின்னர் சிவபெருமான் சதியின் உடல் முன் ருத்ர தாண்டவம் ஆடுகிறார். இதனால் உலகம் அழியும் நிலை ஏற்படுகிறது. அப்போது பிற கடவுள்கள் அங்கு தோன்றுகின்றனர். விஷ்ணுவின் சக்கரம், சதியின் உடலை பல பாகங்களாக வெட்டுகிறது. அவை இந்தியாவின் பல பகுதிகளில் விழுந்து சக்தி பீடங்களாக மாறுகின்றன. இது தான் இப்படத்தின் கதை.
@@@@@
பாடல்கள் :-
ஸ்ரீகணேச பாஹிமாம் சந்ததம்
தனியாய் எனை விடுத்தாய் சதியே நீ
வருவாயே தின்பம் தருவாயே
ஸ்ரீமந்நாராயண கோவிந்தா
மழையில்லா சீமையில் மாடுகள் பூட்டி
ஆதியில் பாற்கடல் விஷத்தினை உண்டு
பரமானந்த சுபதினம்
மனமோகனாங்க சுகுமாரா
மனதிற்கிசைந்திடாத மணத்தினாலே
ஹர ஹர ஹர ஹர அகிலாதிபனே
சிவானந்த ரசம் இதுவே
பெறும் புவிதனிலே மாந்தர் பெருநெறி
ஹா மாதர் மனோகர வாழ்க்கை
அஞ்சி உன் கட்டளைக்கே
அதிரூப லாவண்ய சுந்தரா
மாதருக்கெல்லாம் குணம்
பவாநீ பவாநீ பவாநீ
வாருங்கள் எல்லோரும் தட்சன்
இருவரும் ஒன்றாய் கூடி வாழலாம்
பார்வதியாக ஜனிப்பாய்
இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக தோவியை தழுவியது
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்......... Thanks...
-
28th April 2020, 07:42 PM
#3927
Junior Member
Diamond Hubber
சதிலீலாவதி : 28-03-1936
@ நமது தங்க தலைவரின் முதல் திரைப்படம் "சதிலீலாவதி " இப்படத்தில் நடிக்க முதலாளி எம்.கந்தசாமி முதலியார் அவர்கள் தான் எம்.ஜி.ஆரை சிபாரிசு செய்து இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க வைத்தார். இவரது மகன் தான் நடிகர் எம்.கே.ராதா- சதிலீலவதியின் கதாநாயகன்.
@ இந்த படம் எம்.கே.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ். பாலையா, கே.ஏ.தங்கவேலு, சகஸ்ரநாமம் ஆகியோருக்கும் கூட முதல் படம்
சதிலீலாவதி : 28-03-1936
தயாரிப்பு : - மனோரமா ஃபிலிம்ஸ்
கதாபாத்திரம் : - ஆய்வாளர் ரெங்கையா நாயுடு ( சிறு வேடம்)
இயக்குனர் : - எல்லீஸ் R. டங்கன்
கதை : - எஸ்.எஸ் வாசன்
இசை : - சுந்தர் வாத்தியார்
கதாநாயகன் : - M.K.ராதா
கதாநாயகி. : - M.R.ஞானம்மாள்
வெளியான தியதி :- 28 -03-1936
ஆனந்த விகடன் இதழில் சுப்பிரமணியம் சீனிவாசன் புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். 1935ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்திருந்தாலும், வழக்கின் காரணமாக இந்தத் திரைப்படத்தின் வெளியீடு தாமதமானது. பின்னர், 28 மார்ச் 1936 ஆம் தேதி படம் வெளியானது.
கதைச்சுருக்கம்:-
சென்னையில் செல்வந்தர் கிருஷ்ணமூர்த்தி தன் மனைவி லீலாவதி மற்றும் மகள் லட்சுமியுடன் வாழ்ந்து வருகிறார். தன் நண்பன் ராமநாதன் மூலமாக மது மற்றும் சூதாட்டத்திற்கு அறிமுகம் கிடைக்கிறது. பின்னர் மோகனாங்கி என்ற பெண் வாசம் ஆசை கொள்வதால் அவளுக்கு ரூபாய் 50000 தருவதாக வாக்கு கொடுக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
கிருஷ்ணமூர்த்தியின் நண்பன் பரசுராமன் அவரை நல்வழிப்படுத்த முயற்சி செய்கிறார். அந்த ஆடம்பரமான வாழ்க்கைக்காக கிருஷ்ணமூர்த்தி வாங்கிய கடனை கட்ட இயலாததால் மேலும் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகிறார். அதன் பின்விளைவாக தன் மனைவி லீலாவதியை சந்தேகிக்கிறார்.
பின்னர் ஒரு சமயம் குடிபோதையில் கிருஷ்ணமூர்த்தி இருக்கும்பொழுது, தன் நண்பன் பரசுராமனை தான்தான் கொன்று விட்டதாக தவறாக நினைத்து, மனைவி மற்றும் மகளை கோவிந்தனிடம் விட்டுவிட்டு ஸ்ரீலங்காவிற்கு தப்பிச் சென்று, ஒரு தேயிலை தோட்டத்தில் வேலை செய்கிறார் கிருஷ்ணமூர்த்தி. லீலாவதி மற்றும் லட்சுமி இருவரும் வறுமையில் வாடுகிறார்கள்.
தலைவரின் முதல் படமான " சதிலீலாவதி" வெளியான அந்த பொன்னான நாளை குறிக்கும் ( 28-03-36 ) குறிக்கும் ஒரு ரூபாய் நோட்டு மிக்க மகிழ்ச்சியுடன் உங்கள் பார்வைக்கு..........
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்..... Thanks...
-
28th April 2020, 07:46 PM
#3928
Junior Member
Diamond Hubber
" Special cover " released on Centenary celebration of Dr.M.G.Ramachandran by Chief Postmaster General, Tamil Nadu Circle
*Marudur Gopalan Ramachandran, popularly known as MGR was an Indian actor and politician who served as Chief Minister of Tamil Nadu for eleven years between 1977 and 1987.
M.G.Ramachandran (1917-1987) popularly known as MGR dominated like no other, the film's and politics of Tamilnadu. A Charis matic actor and philanthropist, he commanded the idolatrous adulation of millions of Tamilians. His achievements in 3 fields, viz, films, phianthrophy and politics were remarkable considering his humble origins.*
( * These are the words written on the back of the cover )
Design approved by :
Chief Postmaster General,
Tamilnadu Circle Chennai -600 002
Special cover :
Concept And Design By
South India Philatelists' Association
Price 75 Rupees
By. N.Velayudhan
Trivandrum
தமிழில்:-
சிறப்பு அட்டை "டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் தமிழக வட்டத்தின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் வெளியிட்டார்
எம்.ஜி.ஆர் என்று பிரபலமாக அழைக்கப்படும் மருதுர் கோபாலன் ராமச்சந்திரன் ஒரு இந்திய நடிகரும் அரசியல்வாதியும் ஆவார், இவர் 1977 முதல் 1987 வரை பதினொரு ஆண்டுகள் தமிழக முதல்வராக பணியாற்றினார்.
எம்.ஜி.ஆர். ஒரு கவர்ச்சியான நடிகரும், பரோபகாரியுமான அவர் பல லட்ச கணக்கான தமிழர்களின் இதய தெய்வம் ஆனார். திரைப்படங்கள், பரோபகாரம் மற்றும் அரசியல் ஆகிய 3 துறைகளில் அவர் செய்த சாதனைகள் பல அவரது தாழ்மையான தோற்றத்தை கருத்தில் கொண்டு குறிப்பிடத்தக்கவை. *
சிறப்பு கவர் விலை 75 ரூபாய்.......... Thanks...
-
28th April 2020, 07:49 PM
#3929
Junior Member
Diamond Hubber
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"
தலைவரை பற்றிய ஒரு தகவல் :-
12 -ஆம் தியதி;
நமது தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் நடிப்பில் 12- ஆம் தியதி வெளிவந்த திரைப்படங்கள் 3 எண்ணம் ஆகும். அவை நமது நண்பர்கள் பார்வைக்கு.....
1). பிரகலாதா - 12-12-1939
2). நேற்று இன்று நாளை - 12-07-1974
3). ஊருக்கு உழைப்பவன் - 12-11-1976
நன்றி
என்.வேலாயுதன் - திருவனந்தபுரம்....... Thanks...
-
28th April 2020, 07:52 PM
#3930
Junior Member
Diamond Hubber
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"
தலைவரை பற்றிய ஒரு தகவல் :-
இன்று 8 -ஆம் தியதி;
நமது தங்க தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் 136 -ல் ஒரு படம் கூட 8-ஆம் தியதியில் வெளிவந்த தில்லை என்பது தான் உண்மை.
மற்ற எல்லா தியதிகளிலும் படம் வெளியானது உண்டு.
நன்றி
என்.வேலாயுதன் - திருவனந்தபுரம்.
* நண்பர்களே திண்டுக்கல்லில் நடைபெறும் நமது தலைவரின் 103-வது பிறந்தநாள் விழாவில் சந்திப்போம் *........ Thanks...
Bookmarks