Page 390 of 402 FirstFirst ... 290340380388389390391392400 ... LastLast
Results 3,891 to 3,900 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3891
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஆம் ! வழி வழியாக நம் பக்தர்கள் குடும்பங்களில் இப்படித்தான் சின்னஞ் சிறு பிள்ளைகள் கூட தலைவரை பற்றி அறிந்து மகிழ்கிறார்கள் ! அடுத்தடுத்த தலைமுறைக்கு தலைவர் புகழ் பயணமாகிறது ! ......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3892
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    என் அப்பாவுக்கு அவர் தந்தை சொன்னார் தலைவரை பற்றி
    என்* அப்பா *எனக்கு சொன்னார் தலைவரை பற்றி...
    நாளை நான் என் குழந்தைக்கு சொல்லுவேன் தலைவரை பற்றி...

    ஆம்*
    #அதிமுக என்பது
    #இயக்கம் அல்ல
    எங்கள்
    #இதயம்....
    பல தலைமுறைகளுக்கும் அணையாமல் துடிக்கும்... எப்பொழுதும் அவர் படம் பார்க்கும் முழு ரசிகன்...

    இவன்
    அஇஅதிமுக
    அடிமட்ட
    தொண்டன்
    அருண்.......... Thanks.........

  4. #3893
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மறக்க முடியாத மாணிக்கம் தான் அருமையான பதிவு செய்து இருக்கிறார் வாழ்க வளமுடன் கண்களில் கண்ணே சேர்ந்து கொண்டு அழுகிறது அருமையான பதிவு பாராட்டுகள்....... Thanks...

  5. #3894
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம் புரட்சி தலைவரின் அருமைகளை, பெருமைகளை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். என்றும் ஒரே தலைவர் என்றால் அது நம் தலைவரே. சத்தியம் தவறாத, ஒப்பற்ற தலைவர் ஆவார். மக்களே மனம் திரும்பி வாருங்கள் தலைவர் பக்கம். உங்களுக்காக நல்ல, பல அரிய வாய்ப்புகள் காத்து கிடக்கின்றன.......... Thanks...

  6. #3895
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கண்ணுக்குள் பட்ட அத்தனை மக்களும்
    கன்னத்தை தொட்டு முத்தம் இடுபவர்களே
    மிச்சம் மீதி வைக்காத சுத்தமான தங்கமகனே
    எப்படியும் எந்தவிதத்திலேயும் ஒவ்வொருக்கும்
    புரிய வைத்த மஹான் என்பது .... காலம் செல்ல செல்ல தெய்வமாகியது எந்த விதமான ஆச்சர்யமில்லையே.....
    யாரொருவன் தனக்கென வைத்துக் கொள ளாமல் பிறருக்காக வாழ்ததே.....இன்றும் தெய்வமாக இருக கிறார் என்பதில் ......உண்மையே அதிகம்
    உறவுகள் சொல்வதில் உறுதியானதே......
    வாழ்த்துகள் பதிவிற்கு....... Thanks to Keshavkumar

  7. #3896
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றும் தொலைக்காட்சி மூலம் அனைவரையும் கவரும் மன்னாதி மன்னன், இதயம் கவரும் மனிதநேய சக்கரவர்த்தி, மஹான், சித்தர் மக்கள் திலகம் புகழ் என்றென்றும் நீடூழி வளர்க, வாழ்க......... Thanks...

  8. #3897
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    படத்தில் இருப்பவர்களுடன் புரட்சி தலைவர் சந்திப்பு ஏன் என்று யூகிக்க முடிகிறதா? அவர்கள் அனைவரும் நேஷனல் சர்க்கஸ் கலைஞர்கள். மக்கள் திலகம் பார் விளையாடும் கலைஞராக "பறக்கும் பாவை"யில் நடித்திருப்பார். அந்த படத்தில் நடித்த பார் விளையாடும் கலைஞர்கள் தலைவரை காண பேராவல் கொணடதை தெரிந்து கொண்டு தலைவரே அவர்களை நேரில் சர்க்கஸ் கூடாரத்திலேயே சந்தித்து அளவளாவினார். சுமார் 15 நாட்கள் அவர்கள் சர்க்கஸ் கூடாரத்தில் படப்பிடிப்பு நடந்ததை நினைவு கூர்ந்தார்கள்.

    ஒரு தடவை தலைவரை சந்தித்து விட்டால் போதும் வாழ்நாளில் அது ஒரு மறக்கமுடியாத நினைவுகளாக மாறி விடுகிறது. ம்.ம் கொடுத்து வைத்தவர்கள் நேஷனல் சர்க்கஸ் கலைஞர்கள்.......... Thanks...

  9. #3898
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Filmography Film 52 (1962) Poster

    1961ஆம் ஆண்டின் முதல் எம்ஜியார் படம் ஒரு ராஜா ராணி காஸ்ட்யூம் படமாக (அரசிளங்குமரி) வெளியாகி சராசரி ஆனது. பின்னர் ஒரு சமூகப்படம் (திருடாதே) அவரை மீண்டும் வசூல் சக்ரவர்த்தியாக்கியது.
    1962ஆம் ஆண்டு . அந்த ஆண்டின் முதல் படமாக வெளியானது இந்திய வரலாற்றில் ஒரு பாகமாக அமைந்து விட்ட ப்ரிதிவிராஜ் சம்யுக்தாவின் காதல் கதை.
    கண்ணதாசன் திரைக்கதை வசனம் பாடல்கள் அனைத்தையும் மேற்கொள்ள, எம்ஜியாரின் ஃபேவரிட்டான மாமா (கேவி மகாதேவன்) இசையமைக்க டி.யோகானந்த் இயக்கிய இப்படம் 1962ஆம் ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியானது. மொத்தம் எட்டு பாடல்கள்; எட்டும் ஹிட் ஆகின. ஆனால் படம் ஹிட் ஆகவில்லை. வணிக ரீதியாக ஆவரேஜ் எம்ஜியார் படங்கள் என்ற லிஸ்ட்டில் இது சேர்ந்துவிட்டது.

    ஓரளவு கச்சிதமான திரைக்கதை, எம்ஜியாருக்கான ஆக்ஷன் சீக்வன்ஸ்கள், பத்மினிக்குத் தேவையான அளவு செண்டிமெண்ட் சீன்கள் எல்லாம் இருந்தும் இந்தப் படம் வெற்றி பெறாததற்கு, காஸ்ட்யூம் டிராமாக்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு குறைந்து விட்டது பிரதான காரணமாக இருக்கலாம் இல்லையேல் எம்.ஜி.ஆர் மரணிக்கும் முடிவு கொண்ட படம் திரும்ப திரும்ப ரசிகர்களால் ரசிக்கபடாது என்ற காரணமாகவும் இருக்கலாம்
    எம்ஜிஆர் இறப்பதாக நடித்த எந்த படமாவது வெற்றி பெற்றிருக்கிறதா?

    சின்ன அண்ணாமலை எழுதிய நம்ப மாட்டீர்கள் என்ற புத்தகத்தில் அவர் ஒரு அனுபவத்தை சொல்கிறார். ஒரு பயணத்தின் போது இரவு வேளையில் ஒரு டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தாராம். நைட் ஷோ முடிந்து மக்கள் திரும்பிக் கொண்டிருந்தார்களாம். என்ன படம் என்று இவர் கேட்டிருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றும் சிவாஜியின் நடிப்பை புகழ்ந்தும் பலர் பேசினார்களாம், ஆனால் ஒருவர் இதெல்லாம் ஒரு படமா என்ற தோரணையில் பேசி இருக்கிறார். இவர் ஏன் உங்களுக்கு சிவாஜியின் நடிப்பு பிடிக்கவில்லையா என்று கேட்டிருக்கிறார். அவர் சொன்னாராம், “நடிப்பெல்லாம் கிடக்குதுங்க, இதுவே எம்ஜிஆரா இருந்தா வெள்ளைக்காரங்களை எல்லாம் ஒரு போடு போட்டுட்டு குதிரை மேல ஏறி வந்து முடி சூட்டிக்கிட்டிருப்பாரு!” என்றாராம். தமிழனான கட்டபொம்மனே எம்ஜிஆர் நடித்தால் தோற்கமாட்டார் என்றால் அவ்வளவாக தெரியாத ப்ரித்விராஜின் கதி என்ன? இது உண்மைக் கதை என்றே நிறைய பேருக்கு தெரிந்திருக்காது.

    ஓ வெண்ணிலா, நிலவென்ன பேசும் போன்ற டூயட் கானங்களுக்காகவும், ஜமுனா ரராணியின் சித்திரத்தில் பெண்ணெழுதி எனும் சோக கீதத்திற்காகவுமே நினைவில் கொள்ளத் தக்கதாகி விட்டது இப்படம்.......... Thanks...

  10. #3899
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு திரைப்படத்தின் தாக்கம் சமுதாயத்திலும் எதிரொலிக்குமா என்றால், ஆம் எதிரொலிக்கும். சமூக அவலங்களைப் பேசும் சினிமா அரசியலையும் பேசித்தானே ஆக வேண்டும். ஆளும் ஆட்சியாளர்களை இந்த சினிமா தான் அடையாளம் காட்டியது.

    அது அறுபதுகளின் பிற்பகுதி. பரபரப்பான தேர்தல் நேரம். வீதிக்கு வீதி மேடை போட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டிருந்தனர். பெருந்தலைவர் மத்தியப் பணிக்காக டெல்லியில் இருந்தார். இங்கே ஆண்டுகொண்டிருந்தது பக்தவத்சலம். அவரால் நிர்வாகத்தை சரியாக கவனிக்க முடியவில்லை. அரிசிப் பஞ்சம் தலைவிரித்தாட அதையே பிரச்சாரமாக்கி படியரிசித் திட்டத்தை முன் மொழிந்தார் அண்ணா. காங்கிரஸை கழகம் வறுத்தெடுத்துக்கொண்டிருந்த நேரம்.

    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே இருந்த ரயில்வே கேட் அன்று ஃபேமஸ். மூடினால் அவ்வளவு சீக்கிரம் திறக்காது. மக்கள் திலகத்தின் கார் அதில் சிக்கிக்கொண்டது. மக்கள் கூட எதிரே ஒரு கருப்பு அம்பாஸிடர். சபாபதி அது பெரியவர் காரா பாரு என உதவியாளரிடம் கேட்க ஆமங்க அவரு கார் தான். உள்ளே இருக்காரு என்றார். சட்டென கதவைத் திறந்து காரை நோக்கி நடந்தார் மக்கள் திலகம்.

    காரின் உள்ளே அமர்ந்திருந்தது பெருந்தலைவர். மேடைக்கு மேடை அவரை திட்டித் தீர்த்த கழகத்தவர்களில் அவரை விமர்சிக்காத ஒரே பிரபலம் மக்கள் திலகம்தான். எம்.ஜி.ஆரைக் கண்ட பெரியவர் கதவைத் திறந்து வெளியே வரமுயல வேண்டாம் வேண்டாம் உள்ளேயே உட்காருங்க என சொல்லிக்கொண்டே குனிந்து அவரிடம் உரையாடத் தொடங்கினார். டெல்லி வாசம் பற்றி விபரம் கேட்டுவிட்டு ஏன் தனியா வந்திருக்கீங்க செக்யூரிட்டி கூட இல்லாம எனக் கேட்டதும் எனக்கெதுக்கு செக்யூரிட்டி. என் மக்களாள எனக்கெப்படி ஆபத்து வரும்.?. ஈசியாகச் சொன்னார் தலைவர். அதற்குள் கேட் திறக்க அவரிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு காருக்குத் திரும்பினார் மக்கள் திலகம்.

    காரில் அமர்ந்திருந்த ரவீந்தரைப் பார்த்து உரையாடலைச் சொல்லி விட்டு நம்ம அடுத்த படத்துக்கு கதைக்கரு கெடச்சிருச்சு ரவீந்தர். ஒரு நாட்டுக்கு உண்மையான அரசன் யாரு தெரியுமா?. கத்தியில்லாம பாதுகாப்பு இல்லாம சவால் இல்லாம யாரு மக்கள் மத்திய எளிதா வர்ராங்களோ அவங்க தான் உண்மையான அரசன். நம்ம பிரச்சாரத்துக்கு ஏத்த மாதிரி இதை வெச்சு ஒரு கதை பண்ணு. நம்ம ஏ.கே.வேலன் கதை ஒண்ணு படமாகாம நின்னு போச்சில்ல.?. எது பவானியா?. அந்தக் கதையும் கொஞ்சம் மிக்ஸ் பண்ணிக்கலாம். அண்ணன் ஃபேமிலிக்காக இந்தப் படத்தை எடுக்கலாம் அவரே டைரக்ட் பண்ணட்டும் என்றார். அப்படிப் பிறந்த படம் தான் அரச கட்டளை. பொம்மை இதழுக்காக ரவீந்தர் அளித்த தொடரில் இந்தச் செய்தி இருந்தது.

    சக்கரபாணியின் மகனான ராமமூர்த்தி மகளான சத்தியபாமா பெயரில் உருவான பட நிறுவனம் தான் சத்திய ராஜா பிக்சர்ஸ். பெரியவரே படத்தை இயக்க முழுக்க முழுக்க கதை திரைக்கதை வசனங்களை மேற்கொண்டது ரவீந்தர். வழக்கம்போல் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா என டைட்டில் கார்டு வந்தது கூடப் பரவாயில்லை. சம்பந்தமே இல்லாமல் இலாகாவிற்குக் கீழே மூன்று பெயர்கள் இருந்தது. ஆர்.எம்.வீரப்பன் , வித்வான் லட்சுமணன்,மற்றும் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் பங்குதாரர் ஏ.டி.கே.சாமி. மூவருமே நிர்வாகத்தில் இருந்தவர்கள். வரவு செலவு கணக்குகளை கவனித்துக்கொண்டவர்கள் கதை திரைக்கதையில் உள்ளே நுழைந்தது எங்குமே நடக்காத அதிசயம்.

    படத்தை விரைவாக முடிக்க இரவு பகல் பாராது விழித்திருந்து வசனம் எழுதிய ரவீந்தர் வசனங்கள் தான் படத்தில் வந்தவை. எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் இந்தப் பாவிகளின் நாக்கை துண்டு துண்டாக வெட்டுவேன். கலைச் செல்வி பொங்க அதற்கு மக்கள் திலகம் மறு மொழியாக அதனால் தான் அதிகாரம் உன் கையில் இல்லை என்பார். மதனா!. கல்லடியும் சொல்லடியும் கடமைவாதிகள் சந்திக்க வேண்டிய முதல் படி. அரசியல் அகராதிப்படி. அப்படியா!.. இன்னும் எத்தனை படிகளோ!.. அதற்குள் உருப்படியாக ஓடிவிடுவோம் வாருங்கள்.

    ஓடு ஓடு என்று யார் சொன்னாலும் நாடு நாடு என்று தான் முழங்கிக்கொண்டிருப்பேன் என் லட்சியம் நிறைவேறும் வரை. ஆட்சியில் ஆபத்து நிறைந்திருந்தாலும் எவ்வளவு சுகமாக இருக்கிறது பார்த்தீர்களா!.. அந்த சுகத்திலே தான் பதவி வெறியே பிறக்கிறது மதனா. இதில் மயங்கித் தான் ஆட்சியிலே இருப்பவர்கள் மக்களை மறந்தார்கள். துன்பத்தை விதைத்தார்கள் துயரத்தை வளர்த்தார்கள். அட்டகாசமான வசனங்கள் அத்தனையும் ரவீந்தர் கை வண்ணம். உன் உயிரைப் பறித்துவிடுவேன் என நம்பியார் எச்சரிக்க செடியில் பூத்த மலரல்ல பெரியவரே என் உயிர் நீங்கள் நினைத்த உடன் கை நீட்டிப் பறிப்பதற்கு என்பார் மக்கள் திலகம்.

    கழகத்தவர் பலர் திரைத் துறையில் கோலோச்சக் காரணம் அவர்களது எழுத்து வலிமை. அறிஞர் அண்ணாவும் கலைஞரும் மாறனும் பல படங்களில் தங்களை நிரூபித்தவர்கள். அவர்கள் பெயரும் பிரபலமானது. அதைப் பின்பற்றித்தான் சொர்ணமும் உள்ளே நுழைந்தார். ஆனால் அவர் எழுதிய அநேக எம்.ஜி.ஆர்.பட வசனங்களை கூடவே இருந்து எழுதியது ரவீந்தர். நாடோடி மன்னனில் டைட்டில் கார்டில் கவியரசோடு இணைந்து வந்ததோடு சரி.அதற்குப் பிறகு எங்குமே அவரது பெயரைக் காண முடியவில்லை. அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி. சொன்னது ரவீந்தர்.அதை அவரே ஒரு கட்டுரையில் சொன்னார்.யாருமே மறுக்கவில்லை.

    மக்கள் திலகத்தைப் பொறுத்தவரை பாடல் வரிகளை உற்றுப் பார்ப்பார். காரணம் ரெக்கார்டிங் போனால் மாற்றுவது கடினம்.வசனங்கள் ஆன் த ஸ்பாட்டில் மாற்றிப் பேசலாம். அதனால் அதிகம் அலட்டிக்கொள்ளமாட்டார். அவருக்கு ஆழமான தமிழறிவு உண்டு. கொஞ்சம் கோடிட்டுக் காட்டுவதோடு சரி. அவரது டேஸ்டிற்கு வசனம் எழுத அவர் கூட இருப்பவர்களுக்குத் தெரியும். பாய்ஸ் கம்பெனி காலம் தொட்டே அவர் தமிழோடு விளையாடியவர். தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல்கள் அப்போதே அவருக்கு மனப்பாடம். ஆன் த ஸ்பாட்டில் குறைகளைக் கண்டுபிடித்துவிடுவார்.

    இதே அரச கட்டளைக்காக வாலியிடம் அவர் பாடல் கேட்க பல்லவியைப் பார்த்த மாத்திரத்திலேயே கோபமானார். வாலி எழுதியிருந்த பல்லவி தொடங்கும்போதே அந்த ஆண்டவன் கட்டளை முன்பு உன் அரசகட்டளை என்னாகும். நடிகர் திலகத்தின் ஆண்டவன் கட்டளை ஓடிக்கொண்டிருக்கிறது . அரச கட்டளை ரிலீஸாகப் போகிறது. பல்லவியே படத்தை டேமேஜாக்கிவிடும் என்பதை சட்டென புரிந்து வாலியிடம் சொல்ல ஏகப்பட்ட பாடல்கள் எழுதிய வாலிக்கே அப்போது தான் அந்த விபரீதம் புரிந்தது. நீங்க வேற சிச்சுவேஷனுக்கு எழுதுங்க என இன்னொரு பாடல் கொடுக்க பயந்து போன வாலி பாட்டாலே அவரைக் குளிர்வித்தார். அந்தப் பாடல் தான் என்னைப் பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன் தான் தலைவன். அவர் மிஸ் பண்ணிய சிச்சுவேஷனுக்கு வந்த பாடல் தான் ஆடிவா ஆடிவா ஆடிவா.

    எல்லாப் பாடல்களுமே ஹிட்டாகக் காரணம் திரையிசைத் திலகம். அவசர அவசரமாக தேர்தலுக்காக எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் உணர்ச்சிப்பூர்வமான வரிகளுக்கு அதே உணர்வோடு அவர் மெட்டமைத்திருந்தார். ஆடிவா பாடலின் ஊடே ஒரு சண்டைக் காட்சியும் இருக்கும். அதற்கேற்ப இடையிசை தந்திருப்பார். தடை மீறிப் போராட சதிராடி வா செந் தமிழே நீ பகை வென்று முடி சூட வா என ஐயா அழைத்தது அறிஞர் அண்ணாவை. மயிலாட வான் கோழி தடையா?. குயில் பாட கோட்டான்கள் தடையா?. முயற் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ என ஏகப்பட்ட கேள்விக் கணைக்கள் அரசை நோக்கி இந்தப் பாடலில் அவர் வைத்தார்.

    வேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு ஒரு அருமையான பாடல். குறும்பையாடு முந்தாதே குள்ள நரியை நம்மாதே என ஒரு பாடலில் அட்வைஸ்.பண் பாடும் பறவையே என்ன தூக்கம் என கண்மணிகளை எழுப்பி விட்டது இன்னொரு பாடல்.நீ தாயற்ற கன்று போல ஆகலாமா?. ஆண்டாண்டு காலம் நாமாண்ட நாடு.தூங்கித் தூங்கி சோர்ந்துவிட்டதிந்த நாடு. பகுத்தறிந்து வாழ்பவரை சரித்திரம் பேசும் அவர் பரம்பரையின் கால்கள் மீது மலர்களை வீசும் பயந்து வாழும் அடிமைகளை பூனையும் ஏசும் அவர் பால் குடித்த தாயைக் கூட பேயெனப் பேசும். ஆஹா ஆஹா என புகழ்ந்தார் அதே வாலியை மக்கள் திலகம்.

    புத்தம் புதிய புத்தகமே உனை புரட்டிப் பார்க்கும் புலவன் நான். அந்தப் புலவனே வியந்த பாடல் இதே வாலியின் கற்பனைச் சிறகு விரிந்த பாடல். அஞ்சு விரல் பட்டால் என்ன அஞ்சுகத்தை தொட்டால் என்ன?. தொட்ட சுகம் ஒன்றா என்ன துள்ளும் உள்ளம் பந்தா என்ன?. செவ்விதழை கண்டால் என்ன தேனெடுத்து உண்டால் என்ன?. கொத்து மலர்ச் செண்டா என்ன கொஞ்சும் மன்னன் வண்டா என்ன?. மக்கள் திலகத்தை அசரடிப்பதில் வாலி என்றுமே சளைத்ததில்லை. குறுகிய நாட்களில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட பேர்கள் உழைத்தார்கள். அதன் பலனை அனுபவிக்கும் முன்பே அங்கொரு குண்டு வெடிக்க இந்தப் படம் தப்பிக்க ரவீந்தர் உழைத்த காவல்காரன் மாட்டிக்கொண்டது ஒரு ஆன்ட்டி க்ளைமாக்ஸ்.......... Thanks.........

  11. #3900
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சார் அட்டாகசமான அலசல். எம்.ஜி.ஆர் சுடப் பட்டதால் இந்தப் படம் பாதியில் நின்று விட்டது. பிறகு அவர் உயிர் பிழைத்து, குண்டடி தாக்கத்தில் இருந்து மீண்டு வந்தபின் வெளி வந்த முதல் படம். அதனால்தான் இந்தப் படத்தில், "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை,ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை" எங்கிற விருத்தமே வந்தது என்று சொல்லுவார்கள். இதில் பல பேர் கவனிக்காத ஒரு விசேஷம் இருக்கிறது. காலத்தை வென்றவன் நீ, காவியமானவன் நீ எங்கிற பாடலில் கடைசி வரிக்குப் பின் இசை மட்டும் வரும். அந்த சமயத்தில் ஜோதிலக்ஷ்மி ஆடிக் கொண்டே தன் இரு கால்களையும் கைகளை விரிப்பது போல விரித்து அமர்வார். இது சாதாரணமாக யாராலும் முடியாது. இந்தப் பாடலைப்போட்டு இப்பொழுது பாருங்கள். நான் சொல்வது புரிய வரும்....... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •