-
27th April 2020, 10:52 PM
#3861
Junior Member
Diamond Hubber
[# “வேட்டைக்காரன் வருவான் ...ஏமாந்து விடாதீர்கள்”
காமராஜர் , கடுமையான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சமயம்...,
தி.மு.க.விற்கு எதிராக ஒரு கூட்டத்தில் பேசி விட்டு முடிவில் கூட்டத்தினரை இப்படி எச்சரித்தாராம்..!
அதன் காரணம்.. அவருக்கு அடுத்து அந்த ஊருக்கு எம்.ஜி.ஆர். பிரசாரத்திற்காக வருகிறார் என்று தகவல் வந்ததாம்..!
ஆனால் காமராஜர் எவ்வளவு எச்சரித்தும் மக்கள் வேட்டைக்காரனைத்தான் வெற்றி பெற வைத்து கொண்டாடினார்கள்..
கடைசியில் கோட்டைக்கும் அனுப்பி வைத்தார்கள் ..!
# சரி..அந்த வேட்டைக்காரன் எம்.ஜி.ஆர்.,
தி.மு.க.வில் இருக்கும்போது , காமராஜரைப் பற்றி சொன்ன ஒரு வார்த்தை , மிகப் பெரும் கலகத்தை , கழகத்தில் உண்டாக்கி விட்டது...!
அப்படி என்னதான் சொன்னார் எம்.ஜி.ஆர்...?
“காமராஜர் என் தலைவர்..அண்ணா என் வழிகாட்டி..”
எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னதும் எரிமலையாய்க் கொந்தளித்துப் போன ஒரு கூட்டம் , நேராக அண்ணாவிடம் போய்.. “எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுங்கள்..” என்று சொல்ல , அண்ணா அமைதியாகச் சொன்னாராம்.. “ ராமச்சந்திரனைப் பற்றி எனக்குத் தெரியும்..அமைதியாக இருங்கள்..”
அப்புறம்தான் அமைதியானர்களாம் அந்தத் தொண்டர்கள்..!
# அதன் பின்.....
1969 ல் நடைபெற்ற நாகர்கோவில் எம்.பி. இடைதேர்தலில் , காமராஜர் போட்டியிட்டபோது ..அவரை எதிர்க்கக் கூடாது என்ற காரணத்திற்காக , அந்த தேர்தல் பிரச்சாரத்திற்கே.போகவில்லையாம் எம்.ஜி.ஆர்...!
அது மட்டுமா..?
1972 ல் அ.தி.மு.க.வை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். , தன் கட்சிக்காரர்களுக்கு கண்டிப்புடன் இட்ட கட்டளை :
“காமராஜரை எந்த மேடையிலும் , எவரும் தாக்கிப் பேசக் கூடாது..!”
# நாமும் அமைதியாக இருந்து , ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால்...
இன்றைய காங்கிரஸ்காரர்களை விட ,
காமராஜரை அதிகமாக மதித்தவர் ,
அன்றைய எம்.ஜி.ஆர்.தான் என்றே தோன்றுகிறது....... Thanks...
-
27th April 2020 10:52 PM
# ADS
Circuit advertisement
-
27th April 2020, 10:53 PM
#3862
Junior Member
Diamond Hubber
1980ல் திமுக கூட்டணியில் இராமநாதபுர மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் (இப்போது சிவகங்கை மாவட்டம்) காங்.வால்மீகி MLA ஆனார்.அவர் 1981ல் இறந்து விட்ட பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் காங்.கட்சிக்கு விட்டுக்கொடுத்து இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கும் வந்து காங்.கட்சி அருணகிரியை வெற்றி பெற செய்தார் மக்கள்திலகம்...... Thanks...
-
27th April 2020, 10:55 PM
#3863
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆரின் சிறப்பு !
ஒரு துறையில் மிகப் பெரிய, பிரம்மிப்பூட்டும் சாதனைகளைச் செய்தவரை அச்சாதனைகளின் நினைவு என்றுமே மக்கள் மனதில் நிலைத்திருக்கச் செய்தவரை சரித்திரம் போற்றுபவர் என்று குறிப்பிடுகிறோம்.
அப்படிப் பார்த்தால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை பல சரித்திரங்களை படைத்தவர் என்றுதான் குறிப்பிட வேண்டும். தவிர தமிழக மக்களின் ஏழை எளிய மக்களின் இதயங்களில் என்றும் நீங்காத இடம் பிடித்து மக்கள் திலகம் என்று போற்றப்பட்டவர் என்றும் குறிப்பிட வேண்டும்.
இன்னும் விளக்கமாகச் சொல்வதாக இருந்தால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எத்துறையில் எல்லாம் அடி எடுத்து வைத்தாரோ அத்துறை அனைத்திலும் சரித்திரத்தை படைத்திருக்கிறார்.
சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் ஒரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். வரலாற்றில் இடம் பெறத்தக்க சாதனைகள் புரிந்தவர்கள் அனைவரும் ஏறத்தாழ ஒரே மாதிரியான குண நலன்களைப் பெற்றிருக்கிறார்கள்.
மன உறுதி எதையும் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளுதல் மனம் தளராமல் தீவிரமாக எதிர்த்துப் போராடுதல் பதட்டமின்மை போன்ற குணநலன்கள் சரித்திரம் படைத்த சாதனையாளர்கள் அனைவரிடமுமே காணப்படுகின்றன.
புரட்சித்தலைவர் எம்ஜிஆரும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த குணநலன்கள் அனைத்தும் அவரிடம் அபரிதமிகமாகவே குடிக்கொண்டிருந்தனவென்று சொல்லலாம் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் வாழ்க...... Thanks...
-
27th April 2020, 10:56 PM
#3864
Junior Member
Diamond Hubber
[
#கர்மவீரர் #காமராஜருக்கும் #புரட்சித்தலைவர் #எம்ஜிஆருக்கும் ஆரம்பம் தொட்டே நல்ல உறவு இருந்து வந்தது. காமராஜரை உயிரென நேசித்தவர் மக்கள்திலகம்.
காரணம் மக்கள்திலகம் ஆரம்பகாலத்தில் தீவிர காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தே இதற்குக் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.
ஹீரோவாக உயர்ந்து அண்ணாவின் நட்பு கிடைத்த பின்னர் தான் திமுக வில் சேர்ந்தார்.
ஆனாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் காமராஜரை தரிசித்து வந்தார்.
காமராஜருக்கு திமுக வைப் பிடிக்காது. ஆனால் அண்ணாவின் அறிவும், எம்ஜிஆரின் கொடைத்தன்மையும், வசீகரமும் மிகவும் பிடிக்கும்.
கர்மவீரருக்கு அரசியல் நிகர்வுகளைப் பற்றிய "தீர்க்கதரிசனம்" எப்போதும் உண்டு. இது குறித்து பேரறிஞர் அண்ணாவே பலமுறை ஆச்சரியப்பட்டுள்ளார்.
ஒரு சந்திப்பில் கர்மவீரர் எம்ஜிஆரிடம் "#ராமச்சந்திரா ! #எல்லோருக்கும் #பசி #ஆற்றும் #நீ...#ஏழை #மாணவ #மாணவிகளுக்கும் #சோறு #போடணும்..."
"#கல்விக்கு #உன்னால #முடிஞ்சஅளவு #உதவணும்...#நாடு #மாறணும்னா #கல்வி #ஒன்று #தான் #ஒரேவழி...#இல்லைன்னா #தமிழ்நாடு #மாறவே #மாறாது..."
அதற்கு #மாணவமாணவிகள் பசியில்லாம இருக்கணும்...அதுக்கு உனக்கு ஒரு காலம் கண்டிப்பா வரும்...அப்படி வரும்போது செய்வியா??? எனக் கர்மவீரர் வாக்கு கேட்க ஆடிப்போய்விட்டார் எம்ஜிஆர்...
"எனக்கு எப்படி, அப்படி ஒரு காலம் வரும்??? " என குழம்பினாலும் கர்மவீரரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத எம்ஜிஆர், வாக்குக் கொடுத்தார்.
தன் இளமைப்பருவத்தில் ஒருவேளை உணவிற்கே தவித்ததாலும், தான் பட்ட கஷடங்களை அடுத்தவர் படக்கூடாது என்ற உயர்ந்த சிந்தனையாலும் கர்மவீரர் சொன்னதை செய்வதாக சத்தியம் செய்தார் எம்ஜிஆர்...
பின்னர் எம்ஜிஆர் முதல்வரானதும், மந்திரிசபையைக்கூட்டினார்..."பள்ளிக்குழந்தைங்க சாப்பிடணும்...சத்துணவுத்திட்டம் கொண்டுவரப்போறேன்" என்று கட்டளையே இட்டுவிட்டார்...
"நிதிநிலைமை மோசமாக உள்ளது " என அதிகாரிகள் தடுத்தும், 'அதெல்லாம் எனக்கு தெரியாது...செயல்படுத்தணும்னு" ஒரே வரிகளில் கூறி முடித்துவிட்டார்...
சத்துணவுத்திட்டம் பிறந்தது. கர்மவீரரின் லட்சியமும், தீர்க்கதரிசனமும் பலித்தது.
எம்ஜிஆர் ஒருவரால் தான் செயல்படுத்தமுடியும் என கர்மவீரர் நினைத்தாரோ என்னவோ!!!
சத்துணவால் பள்ளிக்குழந்தைகள் படித்து உயர்ந்தார்கள். அவர்களுக்கு நோட்டு புத்தகம், பள்ளிச்சீருடை, காலணிகள் என இலவசத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தினார் மக்கள்திலகம்.]........ Thanks...
-
27th April 2020, 11:01 PM
#3865
Junior Member
Diamond Hubber
இவர்களா? அப்படியா??
-----------------------------------
அசோகன்!!
கலிங்கத்து பரணியின் கருத்துச் செறிவாய்
போரில்லா வாழ்வில் பொருதிக் கொண்ட
அசோக சக்கரவர்த்தியின் இன்னொரு அம்சம்!
பத்திரிகை விருட்சத்தின் வேர்ப் பகுதியை
கரையான் அரித்து,, சீரை கெடுக்க முயலும்போது-கரையான் எந்தத் தோல்வியிலும்? என ஆர்த்தெழுந்த இலக்கிய உலகின் இனிய மகவு!!
|பட்டப் படிப்பின் பந்தாவால் ஒரு பெருமையுமில்லை!
பல முதலாளிகளால் பந்தாடப்பட்டு பாதி உயிரை தொலைப்பது தான் மிச்சம் என்ற உண்மையை உண்மையாக்கப் புறப்பட்டு,,அதற்கு உண்மையாக உழைத்தவர்,,உழைத்துக் கொண்டிருப்பவர் இவர் என்பதே உண்மை!!
சாதாரண பழைய பேப்பர் கடையை,,மூலதனமாக இவர் தந்தை இவருக்குக் கொடுக்க--
இவரது முன்னேற்றமும் ஒரு பரமபத விளையாட்டானது!!
பாக்கட் நாவல் அசோகன் என்றால் எள்லோருக்கும் தெரியும் என்றாலும்,,இவருக்கு சுவாரஸ்யம் சேர்த்தது க்ரைம் நாவல் அசோகன் என்ற அடை மொழி தான்!!
கவனிக்கவும்!
இலக்கணத்தை மீறிய மெய் எழுத்தில் ஆரம்பம்-க்ரைம்!!
இலக்கணத்தை மீறாத அசுர உழைப்பு!!
இன்று இவர் பல வார--மாத இதழ்களின் அதிபதி!!
இங்கே தான் அசோகன் நம்மிடம் வருகிறார்!
அசோகன் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்!!
அவரது ஆரம்பக்கால இதழ்களில் பார்த்தீர்கள் என்றால் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு விதமாக எம்.ஜி.ஆர் போற்றப் பட்டிருக்கிறார்!
சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆரின் வீரம் என்ற தொடரே இவரது பாக்கட் நாவலில் பல வாரங்கள் பவனி வந்தது!!
ஏற்றம் இல்லாத பேச்சு! அதில் எவரையும் எப்போதும்
இறக்கம் தராத கண்ணியம் கொட்டிக் கிடக்கும்!
ஒருவரது குறையை அவருக்கு சுட்டிக் காட்ட வேண்டுமா?
நான் அடித்துச் சொல்வேன்!!
இவரது பதில்களைப் படியுங்கள்!!
கலைஞரை இவர் விமர்சிப்பது தெரியாமல் விமர்சிப்பார்!
கத்தி இறக்கினார் என்பது --
எதிரியின் உடலில் உதிர முத்து பூக்கும் போது தான் தெரியும்!
எப்போது,,எந்த இடத்தில் கத்தியை இறக்கினார் என்பது எதிரிக்கேத் தெரியாது??
அவ்வளவு லாவகமாக,,எதிரியின் நிறைகளைப் பட்டியல் இட்டுக் கொண்டே வந்து,,ஒரு இடத்தில் காயப்படுத்தி இருப்பார்??
தேவருக்கு ஒரு எம்.ஜி.ஆரைப் போல-
அசோகனுக்கு ஒரு ராஜேஷ்குமார்!!
35 வருடங்களாக நாவல் உலகில் ஒரு பதிப்பாசிரியரும் ஒரு எழுத்தாளரும் கைக் கோர்த்தது அசோகன்--ராஜேஷ்குமார் கூட்டணி தான்!!
ராஜேஷ்குமாரும் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரே!
எம்.ஜி.ஆர் பற்றி,,பத்திரிகைகளில் அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்களைத் தனியாகப் பதிவிடுவேன்!!
பாக்கெட் நாவல் அசோகன்,,ராஜேஷ்குமாருடன் இணைந்து ஐம்பதாம் ஆண்டு பொன் விழாக் கொண்டாடுகிறார்கள்!!
அசோகன்!
|------------------
மூலதனம் என்பது வெறும் கரன்ஸி இல்லை!
மூல--தனமாக முயற்சிப்பது இருக்குமானால்???
ராஜேஷ்குமார்!
--------------------------
இறங்கினார் எழுத்துலகில்!! ஆனால் இன்றும்--
ஏறிக் கொண்டே இருக்கிறார்??
இவர்கள் காணும் பொன் விழா உத்ஸவத்தில்-
ஊருக்கு உழைப்பவரின் உள்ளம் தொட்ட இவர்களின்-உழைக்கும் கரங்களுக்கு வாழ்த்து முத்தம் வழங்கி மகிழ்வோமா தோழமைகளே???.... Thanks...
-
27th April 2020, 11:31 PM
#3866
Junior Member
Diamond Hubber
சில திருத்தங்கள்....By mr.Loganathan Sir...
--_--------------------------
தேவி பாரடைஸ் - ரிக் ஷாக்காரன் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் 163.ஓடிய நாட்கள் தேவி பாரடைஸ் ஸ்ரீ கிருஷ்ணா-142 நாட்கள்
உ.சு.வாலிபன் - தேவி பாரடைஸ் தொடர் அரங்கு நிறை காட்சிகள்-227(76 நாட்கள்)ஓடிய நாட்கள் -182. அகஸ்தியா-175.
உமா-112 வில்லிவாக்கம் ராயல்-100. பல்லாவரம் லட்சுமி -64 ......... Thanks...
7. இன்று போல் என்றும்
வாழ்க திரைப்படம்- 101 நாட்கள்.
8.மீனவ நண்பன்-104 நாட்கள்.
-
27th April 2020, 11:56 PM
#3867
Junior Member
Diamond Hubber
புரட்சித்தலைவரின் சரித்திர வெற்றிகள் :.........
1977 ஜூன் 12, 14, தேதிகளில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது இதில் புரட்சித்தலைவரின் அதிமுக 130 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் பெரும் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். புரட்சித்தலைவர் பெற்ற வாக்குகள் 43,065. ஓட்டு வித்தியாசம் 29,378
30.06.1977 அன்று மேதகு தமிழக ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி அவர்கள் புரட்சித் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
1980 ஜூன் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 128 தொகுதிகளில் அதிமுக வெற்றி வாகை சூடியது. மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் 57,019 வாக்குகள் பெற்று 21000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
9.06.1980 இல் அன்று சென்னை கலைவாணர் அரங்கில் மேதகு ஆளுனர் பிரபுதாஸ் பட்வாரி இரண்டாம் முறையாக புரட்சித் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
24.12.1984 இல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 132 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் 60,510 வாக்குகள் பெற்று 31,484 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
உடல் நலமின்றி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த புரட்சித்தலைவர் மக்களின் அன்பு பிரார்த்தனையால் உடல்நலம் தேறி மீண்டும் முதல்வராக தமிழகம் திரும்பினார்.
10.02.1985 மேதகு ஆளுநர் எஸ்.எல்.குரானா அவர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக தொடர்ந்து 3வது முறையாக புரட்சித் தலைவர் பதவியேற்றுக் கொண்டார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க......... Thanks.........
-
28th April 2020, 08:21 AM
#3868
Junior Member
Diamond Hubber
......... Thanks.........
-
28th April 2020, 08:22 AM
#3869
Junior Member
Diamond Hubber
ஆயிரம் விமர்சனம் கூறுபவர் கூட எம்ஜிஆரின் கருணை மனதை விமர்சிக்க மாட்டார்கள்
எதிரி துரோகி நல்லவன் கெட்டவன் என பாராமல் பொழியும் மழை போல் எம்ஜிஆர் மனிதநேய கருணை மனம் காத்து நின்றது இக்கட்டான நேரங்களில் எல்லோர்க்கும் அதனால் தான் இன்று பொன்மனசெம்மல் எம்ஜிஆரை எவ்வளவு புகழ்ந்தாலும் தெய்வமாக கொண்டாடியபோதும் எவருக்கும் விமர்சிக்க முடியவில்லை
கலியுக கடவுளாய் கொணடாடுகிறார்கள் மக்கள் எம்ஜிஆரை
வாழ்க எம்ஜிஆர் புகழ்....... Thanks AM.,.........
-
28th April 2020, 08:23 AM
#3870
Junior Member
Diamond Hubber
#குரு #பார்க்க #கோடி #நன்மை.........
நாகேஷ்….
தமிழகம் எத்தனையோ நகைச்சுவை கலைஞர்களை கண்டிருந்தாலும் என்றும் உச்சத்தில் தெரியும் கலைஞன். அந்த சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர்ந்துவிட்ட நடிகர் அவர்.
நாடகங்களில்தான் நடித்துக் கொண்டிருந்தார், அப்பொழுது ஒரு நாடகத்திற்கு தலைமைதாங்க நம்ம வாத்தியார் வந்திருந்தார். நாடகத்தில் நாகேஸ்வரன் எனும் பாத்திரத்தில் சில காட்சிகளில் தோன்றியிருப்பார் அந்த குண்டுராவ் @ நாகேஷ். அதில் தனது கதாபாத்திரமான வயிற்றுவலி நோயாளி வேடத்தில் பின்னி எடுத்துவிட்டார்.
நம்ம வாத்தியாரு நாகேஷ் தோன்றும் காட்சிகளிலெல்லாம் சிரிச்சு சிரிச்சு ஓய்ந்தே போயிட்டாருன்னா பாருங்களேன்.
அப்புறம் நாகேஷை மேடைக்கு அழைத்து
ஒரு கோப்பை வழங்கினார் வாத்தியார்.
அப்ப நாகேஷ் நம்ம வாத்தியரப் பாத்து கேட்டாரே ஒரு கேள்வி...
“அண்ணே எல்லார் முன்னாடியும் கோப்பை குடுக்குறீங்க, அப்புறமா புடுங்கிற மாட்டீங்களே, ஏன்னா நான் அவ்வளவா ஒண்ணும் நடிக்கல!” ன்னாரு.
அதைக் கேட்ட வாத்தியாருக்கு சிரிப்பு தாங்கல..."நீ தாம்பா உண்மையான காமெடியன்" னு மனசார வாழ்த்தினாரு.
தமிழகத்திற்கு நாகேஷ் எனும் சிறந்த கலைஞனை அடையாளம் காட்டினார் நம்ம வாத்தியாரு....... Thanks...
Bookmarks