Page 383 of 402 FirstFirst ... 283333373381382383384385393 ... LastLast
Results 3,821 to 3,830 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3821
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீ MGR வாழ்க

    சித்திரை 14 திங்கள்

    MGR பக்தர்களே

    எம்ஜிஆர் சரோஜாதேவி தோன்றுகின்ற இந்த பாடல்காட்சி

    எங்க வீட்டுப் பிள்ளை என்ற சினிமா படத்திற்காக எடுக்கப்பட்டது

    படத்தின் நீளம் அதிகமாக இருந்த காரணத்தினால் இந்த பாடல் காட்சியை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்

    ++++++++++++++++++++++++++++++++

    நன்றி நன்றி நன்றி

    MGR அவர்களை திமுக வில்இருந்து

    நீக்கிய

    கருணாநிதி அவர்களுக்கு நன்றி

    1949 ஆண்டு
    தி.மு.க வை ஆரம்பித்தவர்அண்ணா

    MGR தி.மு.க வில் சேர்ந்தது

    1952 ம் ஆண்டு

    +++++++++++++++++++++++++++++++++

    முதல்வர் கருணாநிதி அவர்கள் 1970 1971 / ஆம் ஆண்டில் குமுதம் பத்திரிகை யில் நெஞ்சுக்கு நீதி என்று
    தனது வாழ்க்கை வரலாற்றை எழுதினார்

    நான் முதல் முதலில் எம்ஜிஆர் அவர்களை சந்தித்தது கோவையில் உள்ள சினிமா ஸ்டுடியோவில் நான்MGR அவர்களைசந்தித்தபோது

    எம்ஜிஆர் அவர்கள் கதர் வேஷ்டி கதர் சட்டை போட்டு கழுத்தில் ருத்ராச்சக்கொட்டை அணிந்திருந்தார்

    எம்ஜிஆர் அவர்களின் நிறம்

    ரோஸ் கலந்த எலுமிச்சம்பழ கலர்

    எம்ஜிஆர் அவர்களும் சினிமா உலகில் புதுமுகம் நானும் சினிமா உலகில்புதுமுகம்

    எப்படியாவது எம்ஜிஆரை திமுகவில் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்

    அண்ணா எழுதிய புத்தகங்களை எம்ஜிஆரிடம் படிக்க கொடுப்பேன்

    எம்ஜிஆர் அவர்கள் காந்திய புத்தகங்களை என்னிடம் கொடுப்பார்

    MGR அவர்களை எப்படியாவது திமுகவில்
    சேர்த்துவிடவேண்டும் என்று நீண்டநாள்
    முயர்சி செய்து நான் அண்ணாவிடம்
    அழைத்து செண்றேன் எண்று கட்டுரை
    எழுதியிருந்தார்

    ++++++++++++++++++++++++++++++++++

    அடுத்த நாள் தினசரி பேப்பரில்

    நடிகர் S.S.R. அவர்களின் ( முதல்மனைவின் அண்ணன் நடிகமணி T.V .நாராயணசாமி அவர்கள் ஒருஅறிக்கை விட்டார்

    MGR ரைபோன்ற அழகான. MGRயைபோல கத்தி சண்டை தெரிந்த. .


    MGR. ரைபோல் சிலம்பாட்டம்தெரிந்த

    எம்ஜிஆரை போல் இரக்கசுபாவம்உள்ள
    MGR ரைபோன்றதர்ம சிந்தனையுள்ள

    நடிகர் திமுகவிற்குதேவைஎண்று

    நான்தான்

    MGR அவர்களை அண்ணா விடம் அழைத்து சென்றேன் எண்று அவர்
    ஒரு அறிக்கை விட்டார்

    எம்ஜிஆர் பக்தர்களே

    முதலமைச்சர் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி வரலாற்றிலும்

    நடிகமணி டிவி நாராயணசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலும்

    எம்ஜிஆர் அவர்களை அண்ணாவிடம் அழைத்துச்சென்று திமுகவில் சேர்த்தது

    நான்தான் என்று இருவரும் அறிக்கை வெளியிட்டு உள்ளார்கள்

    இதிலிருந்து ஒரு செய்தி தெரிய வருகிறது

    எம்ஜிஆர் அவர்கள் அரசியலுக்கு வர விரும்பவில்லை என்று

    ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தால் நமக்கு புகழ் கிடைக்கும் மாலை மரியாதை கிடைக்கும் என்று திட்டமிட்டு எம்ஜிஆர் அரசியலுக்கு வரவில்லை

    எம்ஜிஆர் திமுகவில் சேர்ந்த பிறகு

    அதனுடைய வளர்ச்சிக்கு கடுமையாகப் பாடுபட்டார்

    தான் சினிமா மூலம் சம்பாதித்த பணத்தை திமுக தொண்டர்களுக்கும் திமுக தலைவர்களுக்கும் கொடுத்து உதவினார்

    ஆனால் எம்ஜிஆர் துரோகம் செய்து

    திமுகவை கைப்பற்ற நினைக்கவில்லை

    எம்ஜிஆர் துரோகம் செய்து திமுக கொடி எனக்குத்தான் வேண்டும் என்று கோர்ட்டுக்கு செல்ல வில்லை

    எம்ஜிஆர் துரோகம் செய்து உதயசூரியன் சின்னம் எனக்குத்தான் வேண்டுமென்று
    கோர்ட்டுக்கு செல்லவில்லை

    எம்ஜிஆர் துரோகம் செய்து திமுகவின் தலைமை நிலைய கட்டிடம் எனக்குத்தான் வேண்டும் என்று கோர்ட்டுக்கு செல்லவில்லை

    திமுகவில் இருந்து கொண்டே முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு பக்கத்திலிருந்து கொண்டே

    தனியாக டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியை கொல்லைப்புற வழியாக சந்தித்து

    முதலமைச்சர் கருணாநிதியை முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்கி விட்டு

    தான் முதலமைச்சராக வருவதற்கு எம்ஜிஆர் முயற்சி எடுக்கவில்லை

    +++++++++--++++++++++++++++++++?+++

    எம்ஜிஆர் பல முதலமைச்சர்களை ஆட்சியில் அமர்த்தியவர்

    இந்தியாவில் உள்ள நடிகர்களில் மக்கள் சக்தி அதிகம் உள்ளவர் MGR

    ஆகவே தனிமனிதனாக அண்ணா திமுகவை உருவாக்கினார்

    தன் மனைவி ஜானகி அம்மையாருக்கு சொந்தமான கட்டிடத்தை அண்ணா திமுக தலைமைக் கழகத்திற்கு இலவசமாக கொடுத்தார்

    அண்ணா திமுகவிற்கு கொடியை உருவாக்கினார்

    அண்ணா திமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை உருவாக்கினார்

    தனிமனிதனாக மூன்று முறை முதலமைச்சராக வந்தார்

    எம்ஜிஆரிடம் உள்ள பழக்கம் தான் சம்பாதித்த பணத்தை அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவுவது

    பணத்தை மட்டும் கொடுக்கவில்லை முதலமைச்சர் பதவிகளையும் பல பேர்களுக்கு கொடுத்தவர் எம்ஜிஆர்

    அவர் முதலமைச்சராக இருந்தபொழுது

    யாருடைய சொத்துக்களையும் மிரட்டி எழுதி வாங்கவில்லை

    கட்சியினுடைய மூத்த தலைவர்களை வாடா போடா என்று தரம் கெட்ட வார்த்தை யில்பேசவில்லை

    அவர் மேல் ஊழல் விசாரணை கமிஷன் கிடையாது

    அவர் மரணமடைந்த பிறகு கோர்ட் குற்றவாளி என்று அவருக்கு தீர்ப்பு கூறவில்லை

    ++++++++++++++++++++++++++++++++++

    எம்ஜிஆரை தலைவராக ஏற்றுக்கொண்ட நாங்கள் தலை நிமிர்ந்து நடக்கிறோம்

    என் தலைவன் தன்னுடைய சொந்த செல்வாக்கில் தான் முதலமைச்சராக வந்தாரே தவிர

    சினிமா மார்க்கெட்டை இழந்து மரியாதை இழந்து

    அடுத்தவர் கட்சியை குறுக்குவழியில் கைப்பற்றி என் தலைவன் எம்ஜிஆர் முதலமைச்சராக வரவில்லை

    என் தலைவன் முதலமைச்சராக வந்தபிறகுபல லட்சம் கோடி கொள்ளை அடிக்கவில்லை

    ஆகவே எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாங்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றோம்

    +++++++++++++++++++++++++++++++++

    MGR திமுகவில் சேர்ந்த பிறகு

    1952 / 1957 / 1962/ 1967 / 1971. ஆகிய

    ஆண்டுகளில் நடந்த சட்டமன்றபொது தேர்தல்களிலும்

    பட பாராளுமன்ற தேர்தல்களிலும் பலஇடைத்தேர்களிலும் சென்னை மாநகராட்சி தேர்தலிலும் உள்ளாட்சி
    தேர்தல் களிலும் MGR அவர்கள் திமுகவிற்கு தமிழ்நாடு முழுவதும் வேனில் சென்று பிரசாரம் செய்தார்
    அந்த காலத்தில் இந்தியாவில் MGRஅவர்கள் தான்
    வேனில் நின்றபடி படி பிரசாரம் செய்த
    முதல் அரசியல் வாதி

    MGR அவர்களை
    திமுக வில் இருந்து நீக்கியபிறகுதான்
    கருணாநிதி அவர்கள் வேனில்தமிழ்நாடுமுழுதும் சென்று பிரசாரம் செய்யும் நடைமுறைக்கு வந்தார்

    +++++++++++++++++++++++++++++++++

    கருணாநிதி அவர்கள் MGR ரை கட்சியிலிருந்து நீக்காமல் இருந்திருந்தால்

    MGR அவர்கள் மரணம் அடையும் வரை திமுகவிற்கு பாடுபட்டு
    பிரசாரம் செய்து
    கருணாநிதி அவர்களை
    தொடர்ந்து தமிழ் நாட்டின் முதலமைச்சர்

    பதவியில் அமர வைத்திருப்பார்

    கருணாநிதி அவர்கள்

    MGRரை கட்சியில்

    இருந்து நீக்கிய காரணத்தால் தான்

    MGR தனிக்கட்சி ஆரம்பித்து

    தனிமனிதனாக மூன்று முறை

    முதலமைச்சரானார்

    அதன் பின் MGRன் புகள் உலகம்முழுதும்
    பரவியது
    ஆகவேதான்

    MGR ரை கட்சியில் இருந்து நீக்கிய

    கருணாநிதி அவர்களுக்கு

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    ++++++++++++++++++++++++++++++++

    தீயசக்திகருனாநிதியால்

    செய்ய முடியாத காரியத்தை

    நல்ல சக்திசெயலலிதா செய்து முடித்தார்

    அது என்ன காரியம்

    அதிமுக வில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியிலும்

    அதிமுக ஆட்சி நிகழ்ச்சியிலும்

    MGR பெயரை சொல்ல விடாமல் செய்தார்

    எம்ஜிஆருக்கு கட்டவுட் கிடையாது

    எம்ஜிஆருக்கு பிளக்ஸ் போர்டு கிடையாது

    கட்சி விளம்பரங்களில் எம்ஜிஆர் படங்கள் கிடையாது

    தினசரி பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களில் எம்ஜிஆர் படம் கிடையாது

    வால் போஸ்டரில் எம்ஜிஆர் படத்தை சிறிதாக போடுவது

    அண்ணா திமுக மேடையில் எம்ஜிஆரை புகழ்ந்து பேசுவது கிடையாது

    எம்ஜிஆருக்கு சிலை வைக்க அனுமதி கேட்டால் கொடுப்பது கிடையாது

    அண்ணா திமுக பொதுக் கூட்டத்தில் முன்பு எம்ஜிஆர் நடித்த சினிமா படத்தில் வருகின்ற கொள்கை பாடல்கள் ஒலிபரப்பு செய்வார்கள்

    ஆனால் ஜெயலலிதா முதலமைச்சர் ஆகிய பிறகு ஜெயலலிதாவை புகழ்ந்து பாடிய பாடல்களை தான் அண்ணா திமுக பொதுக்கூட்டத்தில் ஒலிபரப்பு செய்தார்கள்

    அனைத்து அரசு திட்டங்களுக்கும் ஜெயலலிதா பெயரை வைத்துக் கொண்டார்

    எம்ஜிஆர் பெயரில் ஒரு டிவி கூட ஆரம்பிக்காமல்

    ஜெயலலிதா பெயரில் நான்கு டிவியை ஆரம்பித்தார்

    எம்ஜிஆர் விசுவாசிகளை கட்சியிலிருந்து ஓரம் கட்டினார்கள்

    எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியில் உட்கார்ந்துகொண்டு

    எம்ஜிஆரால் கிடைத்த முதலமைச்சர் பதவியை பயன்படுத்தி

    எம்ஜிஆருக்கு இவ்வளவு துரோகங்களையும் ஜெயலலிதா செய்தார்

    உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது பழமொழி

    உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே என்பதும் பழமொழி

    குரு துரோகம் செய்யாதே என்பதும் பழமொழி

    இப்படிப்பட்ட துரோகத்தை நான் எடுத்துச் சொல்லும்போது

    சில எம்ஜிஆர் ரசிகர்களுக்கு என் மீது மன வருத்தம் வருகிறது

    எம்ஜிஆரின் உண்மையான ரசிகர்களே

    இவ்வளவு துரோகத்தையும் இவ்வளவு கெடுதலையும் கருணாநிதி செய்தால் கருணாநிதி ஒருஅயோக்கியப் பயல் தீயசக்தி என்று கூறிஇருப்போம்

    ++++++++++++++-+++++/+++++++++++

    தீய சக்தி கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபொழுது

    சென்னை நகரில் புதிதாக. ஒரு எம்எல்ஏ தொகுதியை உருவாக்கினார் அதற்க்குஅண்ணா நகர் தொகுதி என்று பெயர் வைத்தார்

    ++++++++++++++++++++++++++++++++

    நல்ல சக்தி ஜெயலலிதாவிடம் மனு கொடுத்தோம்

    +++++++++++++++++++++++++++++++

    சென்னையில் எழும்பூர் பூங்காநகர் என்று இரண்டு தொகுதிகள் உள்ளன

    இதில் ஏதாவது ஒரு தொகுதிக்கு எம்ஜிஆர் சட்டமன்றத் தொகுதி என்று பெயர் வையிங்கள் எண்று

    நல்ல சக்தி ஜெயலலிதாவிடம்

    மனு கொடுத்தார்கள் MGR ரசிகர்கள்

    அவர்களுக்கு

    நெற்றியில் பட்டை நாமம்

    போட்டார் ஜெயலலிதா

    பாவம் MGR ரசிகர்கள்

    +++++++++++++++++++++++++++++++++

    MGR முதலமைச்சராக வருவதற்கு

    MGR அவர்களை திமுகவிலிருந்து நீக்கிய

    கருணாநிதி அவர்களுக்கு

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    இப்படிக்கு

    மன்றம் வைத்து

    கட்சி ஆரம்பித்து கட்சி வளர்த்த

    MGR பக்தன்

    +++++++++++++++++++++++++++++++++

    என்னைபோன்ற கோடிக்கணக்கான

    MGR ரசிகர்கள் கட்சி வளர்த்த காரணத்தால் தான்

    செயலலிதா வைப் போன்ற வர்கள்

    குறுக்கு வழியில் கட்சிக்குள்

    வந்து உல்லாசமாக பதவியை

    அனுபவித்தார்

    என்னைப் போன்ற கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் அடி உதை பட்டு வருமானத்தை இழந்து கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான்

    இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது....... Thanks to PM & KN

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3822
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    14.ரிக்சாக்காரன் பட வசனங்கள் பின்வருமாறு.
    அசோகன்: உன்னை யார் இங்கே உள்ள விட்டது.
    எம்ஜிஆர் :ஒரு கொலைகாரனுக்காக
    வாதாட வேண்டாம் என வக்கீலிடம் சொல்லதான் வந்திருக்கிறேன்.
    அசோகன் :ஒரு ரிக்சாக்காரனுக்கு இவ்வளவு திமிரா
    எம்ஜிஆர் :ஊரார் சோற்றிலே உடம்பு வளர்க்கிற ஒரு கொலைகாரனுக்கே இவ்வளவு திமிர் இருக்கும் போது உழைச்சு பிழைக்கிற
    ரிக்சாக்காரனுக்கு ஏன்
    இருக்க கூடாது.
    அசோகன்; என்னை மிருகமாக்காத
    எம்ஜிஆர் :இனிமேல் தான் ஆகப்போறியா.
    சுந்தர்ராஜன் :என்ன இங்கு கலாட்டா?
    எம்ஜிஆர் :கலாட்டா ஒன்னும் இல்லீங்க
    அனாதையாக இருக்கும்
    இந்த பச்சிளங்குழந்தையைப்
    பாருங்க
    அசோகன் :ஓஹோ
    இந்த குழந்தையைக் காட்டி 5 ,10 வாங்கலாமுன்னு வந்தியா
    எம்ஜிஆர்:சே.!அது உன் புத்தி.
    சுந்தர்ராஜன் :என்னப்பா எங்கவந்து என்ன
    பேசுறே?
    எம்ஜிஆர் :ஐயா கொலையை நேரிலே பார்த்த நீங்களே இப்படி பேசலாமா?
    சுந்தர்ராஜன் :எல்லாம் எனக்கு தெரியும்
    நீ போகலாம்.
    அசோகன்:ஹா ..ஹா ..
    எம்ஜிஆர்; இந்த சிரிப்பை உன்னை நெருப்பாகப் போகிறது.
    உன்னை தூக்குமேடையிலே ஏத்துறவரைக்கும் நான்
    ஓய மாட்டேன்
    உறங்க மாட்டேன்.
    இந்த குழந்தையின்......Rickshawkaran Conversations.....By KN... Thanks...
    மீது ஆணை. என்பார்.

  4. #3823
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரை உலகின் சாதனை மன்னன் :::
    சரித்திரம், சகாப்தம் படைத்த சக்கரவர்த்திகளின், சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,......
    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திரை உலகில் முடிசூடா மன்னனாக விளங்கினார். அவர் நடித்த படங்கள் வசூலில் சரித்திரம் படைத்தன. அவரை வைத்து படமெடுக்க படாதிபதிகள் போட்டி போடுவார்கள். அவர் நடிக்கும் படம் என்றால் பூஜை போடும் தினத்தன்று எல்லா ஏரியாக்களும் விற்பனையாகிவிடும்.

    ஆனால் அத்தகைய இமாலய நிலையை அவர் எளிதில் அடைந்துவிடவில்லை. மிக மிகக் கடுமையாக போராடி படிப்படியாக உயர்ந்து தான் அந்த உன்னத நிலையை அடைந்தார் .

    இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைவதே அவருடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். எதிர்ப்பு ஏற்பட்டால் கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும். லட்சியத்தை அடையும் வரை சற்றும் ஓயக் கூடாது .

    சரித்திரம் படைத்த சாதனையாளர்கள் அதைத்தான் செய்தார்கள் மக்கள் திலகமாக விளங்கிய எம்ஜிஆரும் அதையே செய்தார்.

    அவருடைய முகம் திரையில் தெரிந்ததுமே ஆயிரமாயிரம் ரசிகர்கள் கைகளைத் தட்டித் தங்கள் மகிழ்ச்சியையும் ஆதரவையும் வெளிப்படுத்துவார்கள். தேங்காய் உடைத்து சூடம் கொளுத்தி திரைப்படக் கொட்டகையிலேயே தங்கள் பக்தியை வெளிப்படுத்திய ரசிகர்களும் உண்டு.

    ஆனால் ஆரம்பகாலத்தில் அதே முகம் திரையில் தோன்றுவதற்கு இலாயக்கானதாக இல்லை என்று அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த டைரக்டர் ஒருவர் சொன்னார் என்பதைக் கேட்கும்போது பலருக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம் ஆனால் அது உண்மை.

    ஆரம்ப நாட்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திரை படங்களில் நடிப்பதற்காக சந்தர்ப்பம் கேட்டு அலைந்து கொண்டிருந்தபோது, ஒரு டைரக்டர் அவருடைய முகத்தை பார்த்துவிட்டு அவருடைய முகநாடி இரட்டையாக அமைந்திருப்பது போல் காணப்படுவதால் அவருடைய முகம் அழகாக தெரியாது என்று கூறி அவருக்கு சந்தர்ப்பம் கொடுக்க மறுத்துவிட்டார்.

    பொதுவாக வளரத் துடிக்கும் எந்த நடிகரும் அத்தகைய வார்த்தைகளை கேட்டதும் பெரிதும் மனமுடைந்து போவார்கள். நடிப்பு துறையில் இறங்க வேண்டும் என்னும் எண்ணத்தையே அவர்கள் கை விட்டு விட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.

    ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அந்த டைரக்டர் சொற்களைக் கேட்டு மனம் உடைந்து போகவில்லை நடிப்புத் துறையிலிருந்து ஒதுங்கிவிட நினைக்கவில்லை. தன்னுடைய முகம் திரையில் தோன்ற அதற்கு முற்றிலும் ஏற்ற வகையிலேயே இருக்கிறது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.

    எதிர்காலத்தில் திரையுலகில் தான் மிகப் பெரிய புரட்சியை உண்டு பண்ணப் போகிறோம் சரித்திரம் படைக்கப் போகிறோம் என்பது அவருக்கு மிக மிக நன்றாக தெரியும்.

    எனவே அவர் அந்த டைரக்டர் வார்த்தைகளைக் கேட்டு ஒன்றும் சொல்லவில்லை அமைதியாகவும் மௌனமாக வீடு திரும்பிவிட்டார்.

    உலகில் மிகப்பெரிய சாதனைகளைப் புரிந்தவர்களின் மனோநிலையைக் கூர்ந்து கவனித்தால் மற்றோர் உண்மை புலப்படும் . அவர்கள் தங்களைப் பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பார்கள். தங்களுடைய திறமையையும் எதிர்காலத்தையும் மிகமிக நன்றாக அறிந்து வைத்திருப்பார்கள்.

    புரட்சித்தலைவர் எம்ஜிஆரும். அப்படித்தான் திரையுலகில் நுழைவதற்குத் தான் சிரமப்பட வேண்டியிருந்தாலும் நுழைந்தபின் அத்துறையில் நிச்சயம் சரித்திரம் படைக்கப் போகிறோம் என்று நம்பிக்கை அவருக்கு எப்போதும் இருந்து வந்தது. அது யாருடைய சொற்களை கேட்டும் குறைந்துவிடவில்லை.

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புகழ் வாழ்க.......... Thanks.........

  5. #3824
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இதயக்கனி செய்தியில் சிவாஜி*கணேசன் நடித்து 1964ல் வெளியான ஆண்டவன் கட்டளை*படத்தின் ஆறு மனமே ஆறு என்கிற*பாடல் நாள் தவறாமல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கேட்டு வந்ததாகவும், அது மாதிரி பாடல் எனக்காக அமைந்தது*போல் உள்ளது. இதில்*தான் நடித்திருக்கலாமோ என்று யோசிக்க வைக்கிறது*என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இயக்குனர் சங்கரிடம் கூறியதாகவும், திரு.கொற்றவன்*என்பவர் , இயக்குனர் சங்கரை சந்தித்து*பேசி தொடராக*எழுத*முற்பட்டு விடுபட்டு போன விஷயம் என்று பதிவாகியுள்ளது .
    இப்போது , எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன், கண்ணதாசன், எம்.எஸ். விஸ்வநாதன்,*இயக்குனர் சங்கர்*எவரும்*உயிருடன் இல்லை. இதுவரை எந்த எம்.ஜி.ஆர். பக்தரோ, ரசிகரோ*இதுபற்றி*அறிந்ததாக தெரியவில்லை.* எந்த பத்திரிகையிலும் வெளியான செய்தியாக தெரியவில்லை .* அனுமானத்தின் பேரில் வெளியாகிற தகவல்களுக்கு எந்த ஆதாரமும்*இருப்பதில்லை.**

    நான் இதயக்கனி வாசகர் .* இதயக்கனி மாத இதழ் சார்பில்*நடைபெறும்*விழாக்களில்*பங்கேற்றுள்ளேன ். இதயக்கனி மாத இதழில்*பல நல்ல செய்திகள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை புகழ்ந்து வெளியாகி வருவதில்*மகிழ்ச்சி. ஆனால் ஆண்டவன் கட்டளை*பாடல் பற்றிய செய்தி உண்மையல்ல என்று கருதுகிறேன்.* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்து 37ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில்*, இப்படிப்பட்ட செய்திகள் அவருக்கு*புகழ் சேர்க்காது .* ஏனென்றால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த*போது* வெளிநாட்டவர் அவரது*படங்கள்*சிலவற்றை பார்க்க முற்பட்டபோது* , நான் நடித்த*படங்களை மட்டுமல்லாமல், தம்பி சிவாஜி*கணேசன் நடித்த தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களையும் பார்த்தால்தான் , தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்*என்று பேட்டி அளித்துள்ளதை நான் பத்திரிகைகளில் படித்துள்ளேன் .**
    எனவே இதயக்கனி செய்திகளில் இது போன்ற உண்மைக்கு புறம்பான செய்திகள் இனியும்*வெளிவராது*என்று நம்புகிறேன் .........எழுத்தாக்கம் by. திரு லோகநாதன் Sir... Thanks......

  6. #3825
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீ MGR வாழ்க

    சித்திரை 14 திங்கள்

    எம்ஜிஆர் பக்தர்களே

    படத்தில் அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்களுக்கு பக்கத்தில் இருப்பவரின் பெயர்

    A.C.சண்முகம்

    1980 ஆண்டு / ஆரணி தொகுதிகளில் போட்டியிட்டு MLA பதவிக்கு வந்தார்

    1984 ஆண்டு வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு

    M.P. பதவிக்கு வந்தார்

    இவரை பத்திரிக்கையிலும் அரசியல்வாதிகளும் தொண்டர்களும்

    ஆரணி சண்முகம்

    என்று தான் அழைப்பார்கள்

    இவர் சென்னை மதுராவயலில்

    MGR பல்கலைக்கழகத்தை சொந்தமாக உருவாக்கினார்

    எம் ஜி ஆர் மறைந்த பிறகு

    ஜானகி அம்மையாரை முதலமைச்சராக கொண்டுவந்த. M.P. .எம்பி களில் இவரும் ஒருவர்

    இவர் உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தவர்

    இவர் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்....... Thanks...
    .

  7. #3826
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீ MGR வாழ்க

    சித்திரை 14 திங்கள்

    எம்ஜிஆர் பக்தர்களே

    படத்தில் இருப்பவர்கள்

    சரவணன் ராஜகோபால்

    அவருடைய அன்புத் தந்தை

    எம்ஜிஆர் பக்தர்களே

    சரவணன் ராஜகோபால் அவர்கள்

    சென்னையில் கனரா வங்கி உயர் அதிகாரியாக பணிபுரிகிறார்

    எம்ஜிஆர் அவர்களின் மீது தீவிர அன்பும் பாசமும் கொண்டவர்

    பல எம்ஜிஆர் பிறந்த நாள் விழாக்களுக்கு தன்னுடைய சொந்தப் பணத்தை வாரி வழங்கியவர்

    தமிழ்நாட்டில் எந்த மூலையில் எம்ஜிஆர் பிறந்த தின விழா நடந்தாலும் அந்த விழாவில் கலந்து கொள்பவர்

    நானும் ஒரு எம்ஜிஆர் விழாவில் தான் ஐயா சரவணன் ராஜகோபால் அவர்களை சந்தித்து பேசினேன்

    அன்பானவர் பண்பானவர் பாசம் ஆனவர்

    இன்று இவருக்கு இனிய பிறந்தநாள்

    இவரும் இவருடைய குடும்பத்தினர் அனைவரும் இவருடைய குழந்தைகளும்

    பல்லாண்டு பல்லாண்டு பல நூறாண்டு காலம் நோய் நொடியில்லாமல் பண செழிப்புடன் வாழ்க வாழ்க என்று உலகில் உள்ள அனைத்து எம்ஜிஆர் பக்தர்களின் சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்

    /////////////////////////////////////?///////////?

    இந்தப் படத்தில் சரவணன் ராஜகோபால் அவர்கள்

    தன்னுடைய தந்தையை அரவணைத்து கொண்டுள்ளார்

    இந்த வயதான தந்தை தன் மனதுக்குள் என்ன நினைக்கிறார் தெரியுமா

    இந்தக் காலத்தில் திருமணம் நடந்தவுடன் தாய் தந்தையரை ஒதுக்கி விடுகிறார்கள்

    ஆனால் நமது மகன் சரவணன் ராஜகோபால் அவர்கள்

    நம் மீது இவ்வளவு அன்பும் பாசமும் வைத்துள்ளாரே என்று அந்த தந்தை பெருமைப்படுகிறார்

    தாய் தந்தையரின் ஆசிர்வாதத்துடன்

    சரவணன் ராஜகோபால் அவர்கள் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன்.......PM.,. ... Thanks...

  8. #3827
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீ MGR வாழ்க

    சித்திரை 13 ஞாயிறு

    முகநூல் எம்ஜிஆர் பக்தர்களே

    1969 ஆண்டு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது

    அருமைதலைவர் எம்ஜிஆருக்கு பக்கத்தில் அமைச்சர்

    K.ராஜாராம்

    சேலம்

    இவர் திமுகவின் ஆரம்ப காலகட்ட தலைவர்

    இவர் கருணாநிதி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்

    1972 ஆண்டு எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்த பொழுது

    கருணாநிதி மந்திரிசபையில் இவர் அமைச்சராக பணிபுரிந்தார்

    கருணாநிதி அவர்களின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்த பிறகு

    இவர் அண்ணா திமுகவில் சேர்ந்தார்

    1984 ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலின்போது

    இவர் / பனைமரத்துப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்

    1984 எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தார்

    எம்ஜிஆர் மரணமடைந்த பிறகு ஜானகி அம்மையாரை முதலமைச்சராக உருவாக்கிய எம்எல்ஏக்களில்இவரும் ஒருவர்

    இவர் நம் கட்சிக்கு இடையில் வந்தாலும்

    எம்ஜிஆர் மரணமடையும் வரை எம்ஜிஆருக்கு விசுவாசமாக இருந்தார்

    உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தார்

    உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்... Thanks...

  9. #3828
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீ MGR வாழ்க

    சித்திரை 13 ஞாயிறு

    அருமை தலைவரோடு

    வளர்மதி /பிடி சரஸ்வதி

    இந்தப் படம் 1972 ஆண்டு எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்த பொழுது எடுத்த படம்

    ++++++++++++++++++++++++++++++++

    இந்தப் படத்தில் பிஸ்கட் கலர் சேலை அணிந்து முதலாவது நபராக நிற்பவர் பெயர்

    வளர்மதி

    இவர் ஒரு பயங்கரமான முரட்டு எம்ஜிஆர் ரசிகை

    1972 ஆண்டு எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்தவுடனேயே இவர் கட்சியில் சேர்ந்து கொண்டார்

    இவர் தமிழ்நாடு முழுவதும் சென்று அண்ணா திமுக பொதுக்கூட்டத்தில் பேசி கட்சி வளர்த்த எம்ஜிஆர் ரசிகை

    1984 ஆண்டு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்

    எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜானகி அம்மையாரை முதலமைச்சர் ஆகிய எம்எல்ஏக்களிள் இவரும் மிக மிக மிக முக்கியமானவர்

    உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தவர்

    உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்காதவர்

    எம்ஜிஆர் மறைந்த பிறகு இவர் ஜானகி அணியில் இருந்தார்

    தமிழ்நாடு முழுவதும் ஜானகி அணி பொதுக்கூட்டங்களில் பேசினார்

    எம்ஜிஆர் உயிரோடு இருக்கும்பொழுதே ஒரு துரோகி ராஜீவ்காந்தியின் மூலமாக எம்ஜிஆரை முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்க முயற்சி செய்தார்

    இந்த சதிச் செயல்களை தமிழ்நாடு முழுவதும் பட்டிதொட்டி எல்லாம் சென்று பொதுக் கூட்டத்தின் வாயிலாக மக்களிடம் எடுத்துக் கூறினார்

    அந்த துரோகியை இவர்திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகத்தை விட கேவலமாக பேசினார்

    அந்த துரோகியை வன்னைஸ்டெல்லா என்ற திமுக பேச்சாளரை விட கேவலமாக பேசினார்

    அந்தத் துரோகியை இவர் திமுக பேச்சாளர் கோடம்பாக்கம் குமாரை விட கேவலமாக பேசினார்

    அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர்
    வெற்றிகொண்டான் அவர்களைவிட கேவலமாக பேசினார்

    அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர் நன்னிலம் நடராஜனை விட கேவலமாக பேசினார்

    அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர்

    முரசொலி அடியார் அவர்களை விட கேவலமாக பேசினார்

    அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர் கேரளா சுந்தரம் அவர்களை விட கேவலமாக பேசினார்

    அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர் கோவை ராமநாதனை விட கேவலமாக பேசினார்

    அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர் நெல்லை நெடுமாறனை விட கேவலமாக பேசினார்

    அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர் இளம்வழுதியைவிட கேவலமாக பேசினார்

    அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர்

    ராதாரவியை விட கேவலமாக பேசினார்

    அந்த துரோகி யைஇவர் திமுக பேச்சாளர் சினிமா நடிகர் எஸ் எஸ் சந்திரனை விட கேவலமாக பேசினார்

    இவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இடி முழக்கத்தை போல் கைதட்டல் விண்ணைப் பிளக்கும்

    எம்ஜிஆர் குடும்பத்தின் உண்மையான விசுவாசி இவர்...... Thanks...

  10. #3829
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீ MGR. வாழ்க

    சித்திரை 12 சனி

    எம்ஜிஆர் பக்தர்களே

    நம் அருமை தலைவன் எம்ஜிஆருக்கு அருகில் இருப்பவர் பெயர்

    J. பங்க ராஜ்

    இவரை ஜேப்பியார் என்றுதான் அழைப்பார்கள்

    J. P. R.

    மாவீரன் J. P. R.

    இவர் ஒரு போலீஸ்காரர்

    இந்த பெயர் தமிழ்நாட்டு மக்கள்

    தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்

    அண்ணா திமுக தொண்டர்கள் அனைவருக்கும் தெரிந்த பெயர்

    ///////////////////////////////////////////////////

    1988 எம்ஜிஆர் அவர்கள் மறைந்த பிறகு ஜானகி அம்மையாரை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்

    ஜானகி அம்மையார் பதவியேற்ற பிறகு முதல் முறையாக
    சட்டசபை கூடியது

    ஜெயலலிதா ஆதரவு எம்எல்ஏக்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள்

    அப்பொழுது ஜானகி அணி எம்எல்ஏக்களுக்கும் ஜெ அணி எம்எல்ஏக்களுக்கு ம் கைகலப்பு ஏற்பட்டது

    சட்டசபை காவலர்கள் வந்து அனைத்து எம்எல்ஏ களையும் வெளியேற்றினார்கள்

    சட்டசபைக்கு வெளியே உலக நாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்தும்

    வந்திருந்த

    T.V. மற்றும் பத்திரிகை நிருபர்களும் குவிந்து இருந்தார்கள்

    அவர்களிடம் சென்று ஜெ அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள்

    எங்களை ஜானகி அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அடித்து விட்டார்கள்

    வேஷ்டி சட்டையை எல்லாம் கிழித்து விட்டார்கள்

    இதோ பாருங்கள் இந்த எம்எல்ஏ டவுசருடன் நிற்கிறார் இவருடைய வேஷ்டியை காணவில்லை

    இதற்கெல்லாம் காரணம்

    J.P.R. அவர்கள்தான்

    J P R அவர்கள் தன்னுடைய

    அடியாட்களைவிட்டு

    எங்கள் அணி எம்எல்ஏக்களை எல்லாம் அடித்து உதைத்து விட்டார்கள்

    சட்டை வேஷ்டி எல்லாம் கிழித்து விட்டார்கள்

    சில எம்எல்ஏக்களுக்கு வேஷ்டி கிடையாது

    டவுசர் ரோடு நிற்கின்றார்கள்

    ஆகவே நாங்கள் அனைவரும் கவர்னர் மாளிகைக்கு சென்று

    எங்கள் நிலைமையை எடுத்து கவர்னரிடம் கூறுவோம்

    என்று பத்திரிகை நிருபர்களிடம் கூறிவிட்டு அவர்கள் புறப்பட்டார்கள்

    அடிபட்ட எம்எல்ஏக்கள் அனைவரையும் ஒரு பஸ்சில் ஏற்றி கவர்னர் மாளிகைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தார்கள்

    அந்தப் பஸ்சை கவர்னர் மாளிகைக்கு ஓட்டிச் சென்றவர் ஒரு எம்எல்ஏ

    அவருடைய பெயர் மேட்டூர் நாச்சிமுத்து M.L.A.

    +++++++++++++++++++++++++++++++++

    அன்று டிவியிலும் மாலை பத்திரிக்கைகளிலும்
    2 செய்திகள் முக்கிய செய்திகளாக வெளிவந்தது

    1. ஜேப்பியாரின் ஆட்கள் சட்ட சபைக்குள் நுழைந்து ஜெயலலிதா ஆதரவு எம்எல்ஏக்களை அடித்து உதைத்தனர்

    2. அடி வாங்கிய ஜெயலலிதா ஆதரவு எம்எல்ஏக்களை

    கவர்னர் மாளிகைக்கு பஸ்சில் அழைத்து சென்றபோது

    அந்த பஸ்சை ஓட்டி யவர் ஒரு எம்எல்ஏ

    அவருடைய பெயர் மேட்டூர் நாச்சிமுத்து

    இப்படித்தான் இந்தியா முழுவதும் உள்ள தினசரி பத்திரிக்கைகளிலும் செய்தியை வெளியிட்டார்கள்

    இந்தியா முழுவதும் உள்ள டிவி களிலும் இந்த செய்தியைக் கூறினார்கள்

    +++++++++++++++++++++++++++(++++(+(

    அடுத்து சில மாதங்களில்

    எந்த ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டு ஜானகி அம்மையாரின் ஆட்சியைக்கவிழ்க்க துணை போனாரோ அந்த நாச்சிமுத்து வை

    எந்த ஜெயலலிதாவிற்காக சட்டசபையில் அடி உதை வாங்கினாரோ அந்தநாச்சிமுத்துவை

    எந்த ஜெயலலிதாவிற்காக கவர்னர் மாளிகைக்குபஸ்சைஓட்டிச் சென்றாறோ

    அந்த நாச்சி முத்துவை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கிவிட்டார்

    ++++++++++++++++++++++++++++++

    கழகத் தொண்டர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

    எனக்கு எதிராக துரோகச் செயலில் ஈடு பட்ட காரணத்தினால்

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

    மேட்டூர் நாச்சிமுத்து

    அவர்கள் இன்றுமுதல் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்

    அவருடன் கழகத் தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்

    என்று பொன்மனம் பத்திரிக்கை யில்

    ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்

    ஜெ அணியின் அதிகாரப் பூர்வ நாளேடு பொன்மனம் பத்திரிக்கை

    இதன் முதலாளி திருநாவுக்கரசு
    ++++++++++++++++(++++++++++++++++++

    உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உதவிய ஜே பி ஆர் வாழ்க

    உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்காத. ஜே பி ஆர் வாழ்க...... Thanks...

  11. #3830
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீ MGR வாழ்க

    சித்திரை 10. வியாழன்

    MGR பக்தர்களே

    நம் அருமைத்தலைவன்

    MGR அவர்களுக்குப்பின்னால் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருப்பவர்
    பெயர்

    ஜெமினி S.S. வாசன்

    MGR. அவர்கள் முதன் முதலாக சினிமாவில் அறிமுகமான
    திரைப்படம் / சதிலீலாவதி

    சதிலீலாவதி சினிமாவிற்க்கு வசனம்

    எழுதியவர் / S.S. வாசன்

    பிறகு இவர் / ஆனந்தவிகடன் / என்றபத்திரிக்கையை / தொடங்கினார்

    இந்த நேரத்தில் சென்னையில் இ ருந்தஒரு

    சினிமா ஸ்டுடியோ நஸ்டத்தில் இயங்கிய
    காரணத்தினால் அதைவிற்பதற்க்கு முடிவெடுத்தார்கள்

    அந்த ஸ்டுடியோவை / S.S. வாசன்

    விலைக்கு வாங்கினார் / அதற்க்கு

    ஜெமினி ஸ்டுடியொ என்று பெயர்

    வைத்தார்

    அந்தக்காலத்தில் தமிழ் நாட்டில் தயாரிக்கின்ற. கலர் சினிமா படங்களை

    கழுவி பிரிண்ட் எடுப்பபதற்கு பம்பாயிலுள்ள

    பிலிம் செண்டர் / கலர் லேப்பபிற்குத்தான் தமிழ் நாட்டைச்சேர்ந்தவர்கள் செல்வார்கள்

    இதையரிந்த / S.S.வாசன் அவர்கள்

    சென்னையில் / ஜெமினி கலர்லேப்

    ஆரம்பித்தார். அது ஈஸ்ட்மென் கலர்லேப்

    அடுத்து MGR நடித்த 100 படம் ஒளிவிளக்கு

    இந்த படத்தை S.S.வாசன் ஜெமினி ஸ்டுடியோ சார்பில் தயாரித்தார்

    இவர் மரணம் அடைந்தபிறகு இவருடையமகன்

    S.S.பாலன்
    ஸ்டுடியோநிர்வாகத்தைபார்த்தார்

    MGR நடித்த / சிரித்து வாழவேண்டும்

    சினிமா படத்தை S.S.பாலன் இயக்கினார்

    இவர் ஆரம்பித்த பத்திரிக்கைதான்

    ஜூனியர் விகடன்

    ++++++++++++++++++++++++++++++++++

    MGR இறந்தபிறகு ஜூனியர்விகடன் / தராசு / இந்த

    இரண்டுபத்திரிக்கைகளும்

    போட்டி போட்டுக்கொண்டு

    மணம் திறந்த பேட்டி / என்று MGR கட்சியைசேர்ந்தவர்களிடம்பேட்டிஎடுத்து

    வெளியிட்டார்கள்

    ஜூனியர்விகடன் வெளிவந்து மூண்றுநாட்களுக்குப்பிறகு

    தராசு பத்திரிக்கைவெளிவரும்

    சியாம் / என்பது தராசு பத்திரிக்கை

    ஆசிரியர் பெயர்

    ++++++++++++++++++++++++++++++++++

    S.S.பாலன் / சியாம் / இப்பொழுது

    உயிரோடு உள்ளார்கள்

    அவர்கள் ஆபிசுக்கு போன் போட்டு இந்த செய்தி உண்மையா பொய்யா என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்

    /////////////////////////////////?////////////////////

    1988

    எம்ஜிஆர் அவர்கள் மரணம் அடைந்த பிறகு

    மனம் திறந்த பேட்டி என்று வெளிவந்தது

    அதை இப்பொழுது நான் பதிவிடுகிறேன்

    ///////////////////////////////////////////////////?

    1972 MGR அண்ணா திமுகவை ஆரம்பித்த நாளிலிருந்து

    1977 ஆண்டுவரை அண்ணா திமுக மேடைகளில் பேசிக் கொண்டிருந்தவர் பெயர்

    ஜி கே சுப்பிரமணியன்

    இவர் சிறுவயதில் இருந்தே எம்ஜிஆர் ரசிகன்

    இவருடைய பொதுக்கூட்டம் நிறைய வித்தியாசமாகவே இருக்கும்

    இவர் மேடைக்கு வரும் பொழுது சினிமா நடிகரை போல்முகத்திற்க்கு மேக்கப் போட்டுக் கொண்டு தான் வருவார்

    கையில் தப்பு
    என்ற ஒரு இசைக்கருவியை வைத்திருப்பார்

    மேடையிலே பேசிக்கொண்டிருப்பார்

    திடீரென்று இடையிலே எம்ஜிஆர் பட பாடல்களை டேப் அடித்துக்கொண்டே பாடுவார் ஆடுவார்

    இவருடைய பொதுக்கூட்டத்தை

    கோவை உக்கடம் பகுதியில் உள்ள கெம்பட்டி காலனியில்

    ராமர் கோயில் வீதியில் கேட்டேன்

    அதன் காரணமாக இவருடைய பொதுக்கூட்டத்திற்கு பொதுமக்கள் நிறைய பேர் வருவார்கள்

    இந்த செய்தி எம்ஜிஆர் அவர்களுக்கு நீண்ட நாட்களாகவே தெரியும்

    சட்டசபை பொதுத் தேர்தலின்போது எம்ஜிஆர் அவர்கள் திடீரென்று

    1980 ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலின்போது

    பவானிசாகர்

    தொகுதி சட்டமன்ற அண்ணா திமுக வேட்பாளராக

    G.K. சுப்ரமணியன் அவர்களை எம்ஜிஆர் வேட்பாளராக அறிவித்தார்

    சுப்பிரமணியன் வெற்றிபெற்றார்

    இவரை சுப்பிரமணியன் எம்எல்ஏ என்றால் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது

    G.K.S. நவரசம் என்றால்தான் கட்சித் தொண்டர்களுக்கும் தெரியும் பொது மக்களுக்கும் தெரியும்

    இவர் எம்ஜிஆரின் குடும்பத்திற்கு ரெண்டகம் நினைக்காதவர்

    உப்பிட்ட எம்ஜிஆரை உயிருள்ளவரை நினைத்துக் கொண்டிருந்தவர்

    எம் ஜி ஆர் மறைந்த பிறகு ஜானகி அணியில் இருந்தார்

    +++-+++++++-++++++++++++++++++++++

    ஜானகி அணியும் ஜெஅணியும் இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து விட்டது

    ஆனால் இவர் அரசியலில் ஈடுபடாமல் வீட்டிலேயே இருந்தார்

    அப்பொழுது அண்ணா திமுக வில் இருந்த எஸ்டி சோமசுந்தரம் எஸ்எஸ்ஆர்

    இவர்கள் எல்லாம் பதவிக்காக மாமா வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்

    ஜே அணியில் இருந்தவர்

    கோவை தம்பி / சினிமா தயாரிப்பாளர்

    இந்த நேரத்தில் கோவைத்தம்பி அவர்கள்

    முன்னாள் எம்எல்ஏ நவரசம் அவர்களை சந்தித்து

    கட்சி ஒன்று சேர்ந்து விட்டது

    ஆகவே நீங்கள் சென்னை வந்து ஜெயலலிதாவை சந்தியுங்கள் என்று அழைத்துள்ளார்

    அதற்கு நவரசம் அவர்கள்

    எம்ஜிஆர் உயிரோடு இருந்த காலகட்டத்திலேயே எம்ஜிஆரை முதலமைச்சர் பதவியிலிருந்துஇறக்குவதற்கு ஜெயலலிதா திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்

    எம்ஜிஆர் இறந்த பிறகும்

    ஜெ அணி சார்பில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்திலும்

    ஜெ அணி சார்பில் கொடுக்கப்படுகிற பத்திரிக்கை விளம்பரங்களிலும்

    எம்ஜிஆர் உருவத்தை சிறிதாக போட்டார்கள் எம்ஜிஆர் பெயரை இருட்டடிப்பு செய்தார்கள்

    ஆகவே நான் வந்து ஜெயலலிதாவை சந்திக்க விரும்பவில்லை என்று கூறி யிருக்கிறார்

    கோவைத்தம்பி அவர்கள் நவரசம் அவர்களை அடுத்து அடுத்து சந்தித்து ஜெயலலிதாவிடம் அழைத்து சென்றுள்ளார்

    கோவைத்தம்பி அவர்களும் நவரசம் அவர்களும் இப்பொழுது ஜெயலலிதா வீட்டிற்கு உள்பகுதியில் அமர்ந்து உள்ளார்கள்

    ஜெயலலிதா அறையிலிருந்து வெளியில் வந்து ஒருவர்

    வரிசைப்படி ஒவ்வொருவரையும் அறைக்குள் அனுப்பி கொண்டு இருப்பார்

    அவர் இப்பொழுது நவரசம் அவர்களுக்கு அருகில் வந்து

    நீங்கள் பொதுச்செயலாளர் அறைக்குள் செல்லும் பொழுது

    உங்கள் கையில் உள்ள மோதிரத்தை கழட்டி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்

    பொதுச் செயலாளருக்கு இது பிடிக்காது என்று கூறியுள்ளார்

    தமிழ்நாட்டிலுள்ள எம்எல்ஏக்களில்

    தாமரைக்கனி / நவரசம் / இவர்கள்தான் எம்ஜிஆர் படத்தை பெரிதாக பதித்து மோதிரம் அணிந்துள்ள எம்எல்ஏக்கள்

    உடனே நவரசம் அவர்கள் ஜெயலலிதாவை சந்திக்காமல் ஜெயலலிதாவின் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார்

    பின்னால் ஓடிவந்த கோவைத்தம்பி அவர்கள்

    இவ்வளவு தூரம் வந்துவிட்டு ட பொதுச் செயலாளரை பார்க்காமல் போகக்கூடாது வாருங்கள் வாருங்கள் என்று கையை பிடித்து இழுத்து இருக்கிறார்

    அதற்கு நவரசம் அவர்கள் சொன்ன பதில்

    என் உடம்பில் ஓடுவது எம்ஜிஆர் ரத்தம்

    மேடையில் பேசிக் கொண்டிருந்த என்னை சட்டசபையில் பேச வைத்தவர் எம்ஜிஆர்

    எனக்கு விழுந்த மாலை மரியாதையும் நான் உண்ணும் உணவும் எம்ஜிஆர் கொடுத்தது

    எம்ஜிஆர் மோதிரத்தை கழட்டி வைத்து விட்டு ஜெயலலிதாவை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கூறிவிட்டு வந்துவிட்டார்

    அதற்குப் பிறகு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கோவை தம்பியும் நானும் சந்தித்துக் கொண்டோம்

    அப்பொழுது கோவைத்தம்பி என்னிடம் கூறினார்

    நீங்கள் சென்ற பிறகு நான் ஜெயலலிதாவின் வீட்டிற்குள் சென்றேன்

    ஜெயலலிதா அவர்கள் என்னை பார்த்து

    யாரையோ நீங்கள் கூட்டி வருகிறேன் என்று கூறி இருந்தீர்களே எங்கே அவர் என்று கேட்டார்

    நான் மோதிரம் சம்பந்தப்பட்ட விஷயத்தை ஜெயலலிதாவுடன் கூறினேன்

    ஜெயலலிதா மிகவும் கோபமாக என்னைப் பார்த்து

    உன்னை போன்றவர்களை கட்சியில் வைத்துக் கொண்டு என்னால் மாறடிக்க முடியாது

    என்று கூறி தன் கையிலுள்ள ஒரு புத்தகத்தை எதிர்புறம் உள்ள ஜன்னல் மீது வீசி எறிந்தார்

    நானும் வெளியே வந்து விட்டேன்

    எனக்கு ம்அரசியல் தேவை இல்லை இனிமேல் மீண்டும் நான் சினிமா தயாரிக்க திட்டமிட்டு உள்ளேன்

    என்று கோவைத்தம்பி அவர்கள் என்னிடம் கூறினார்

    எம்ஜிஆர் இறந்த பொழுது ஜானகி அம்மையாரை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்குவதற்கு கோவைத்தம்பி கடுமையாக முயற்சி செய்தவர்.... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •