Page 379 of 402 FirstFirst ... 279329369377378379380381389 ... LastLast
Results 3,781 to 3,790 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3781
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3782
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ... Thanks...

  4. #3783
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    '#எம்ஜியார் ஆட்சி தருவேன்' என்று முழங்கிய ரஜினி, அதே #எம்ஜிஆர் ஆட்சியில்தான் கைது செய்யப்பட்டார். ஏன்?

    ஆம் நண்பர்களே.. அது 1979-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டார். 8-ஆம் தேதி காலை '#ரஜினிகாந்த்கைது' என்ற செய்தி முக்கிய நாளிதழ்களில் கொட்டை எழுத்துகளில் இடம் பிடித்தன.

    'எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்த ரஜினியின் கைது செய்தியின் பின்னணி இதுதான்.

    ரஜினியின் கைதுக்கு காரணமாக இருந்தவர் ஜெயமணி. வாரப் பத்திரிகை ஒன்றில், சினிமா செய்தியாளராக இருந்த ஜெயமணி, போலீஸில் அதிரடியாக அளித்த புகாரில்தான் ரஜினி கைதானார்.

    ''சென்னை மியூசிக் அகாடமி அருகில் சாலையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே காரில் வந்த ரஜினிகாந்த், என் மீது மோத முயன்றார். நான் சுதாரித்து நகர்ந்து கொண்டதால் தப்பித்தேன். என் மீது காரை ஏற்ற முயற்சித்ததோடு என்னை கொலை செய்துவிடுவதாகவும் ரஜினிகாந்த மிரட்டினார்.''

    -என ஜெயமணி கொடுத்த புகாரில் 1979 மார்ச் 7-ம் தேதி இரவு ரஜினி கைது செய்யப்பட்டார்.

    அப்போது ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரமும்,
    சப் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் ஆகிய இருவரும்தான் ரஜினியை கைது செய்தவர்கள்.

    ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு முதலில் ரஜினி விசாரணைக்கு அழைக்கப்பட்டார். நள்ளிரவு வரையில் விசாரணை நடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இ.பி.கோ 506 (மிரட்டுதல்), 336 (மற்றவர்களுக்கு ஆபத்து உண்டாக்கக் கூடிய காரியத்தில் கவனக் குறைவாக ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    விசாரணையின்போது வாக்குமூலமும் கொடுத்திருந்தார் ரஜினி.

    ''கார் ஓட்ட எனக்கு லைசென்ஸ் இல்லை. டிரைவர் இல்லாததால் காரை நானே ஓட்டினேன். ஜெயமணி என்னை தாக்கி நிறைய செய்திகளை எழுதினார். வழியில் அவரைப் பார்த்ததும் இதுபற்றி கேள்வி கேட்க நினைத்து, காரை நிறுத்தி பின்னால் இயக்கினேன்.

    மோதவில்லை. அவரைக் கொலை செய்யும் நோக்கமும் எனக்கில்லை. காரைவிட்டு இறங்கியதும், ஜெயமணி செருப்பை கழற்றினார். அதனால் அவரின் சட்டையைப் பிடித்தேன். அவ்வளவுதான் நடந்தது. அவரை நான் மிரட்டவில்லை.''

    -என வாக்குமூலத்தில் சொல்லி இருந்தார் ரஜினிகாந்த்.

    அடுத்த மூன்று மாதங்களுக்குள் ரஜினிகாந்த் மீண்டும் கைதானார். இந்த கைது ஐதராபாத்தில் நடந்தது.

    இதுபற்றிய செய்தியை 'மாலை முரசு' பதிவு செய்திருக்கிறது. அதில் வந்த செய்தி இதுதான்.

    'சூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றிருந்தார் ரஜினி. ஜூன் 20-ம் தேதி சென்னை திரும்புவதற்காக இரவு 11 மணி விமானத்துக்கு டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது. அப்போது ரஜினி மது அருந்தியிருந்தார்.

    ஏர்போர்ட்டுக்கு வந்ததும் அங்கிருந்தவர்களுடன் ரஜினி தகராறில் ஈடுபட்டார். தன்னுடன் வந்த நண்பர்களிடமே ரஜினி சண்டை போட்டார்.

    ஏர்போர்ட் அதிகாரிகள் சமாதானம் செய்ய முயன்று தோற்றுப் போனார்கள். அவரை ஒரு அறைக்கு அழைத்துப் போனார்கள் அதிகாரிகள். அங்கிருந்த கண்ணாடிகளை ரஜினி உடைத்தார்.

    இதனால் போலீஸ் அவரைக் கைது செய்தனர். அவரது விமான டிக்கெட்டும் ரத்து செய்யப்பட்டது' என அந்த செய்தியில் சொல்லப்பட்டிருந்தது.'

    - Vikatan Emagazine

    இந்த மூஞ்சிதான் எம்ஜிஆ-ரின் நல்ல ஆட்சி தருமாம்.......... Thanks fb., Friends...

  5. #3784
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர்.தினமும் கேட்ட பாடல் !

    'ஆண்டவன் கட்டளை', கே.சங்கர் இயக்கத்தில் சிவாஜி நடித்த படம். அதில் 'ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு' என்ற கண்ணதாசன் எழுதிய பாடல் வரும். முருகனின் அறுபடை வீடுகளிலும் படமாக்கப்பட்ட இந்த பாடல் காட்சியில் நடிப்பதற்காக சிவாஜிகணேசன் சிகரெட் உட்பட எந்த பழக்கமும் இன்றி விரதமிருந்தாராம். ஒருவாரம் மேற்குறிப்பிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. சிவாஜியும்
    செருப்பின்றி கடும் வெயிலில் நடித்திருக்கிறார்.

    இந்த பாடல் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானது. தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டால் தான் அவருக்கு நிம்மதியும், மன அமைதியும் கிடைக்குமாம்.

    "பாடல் கவிஞர் எழுதி, எம்.எஸ்* வி. இசையமைத்து, டி.எம். எஸ். பாடி,
    சிவாஜி நடித்தது ஒரு சிறப்பு என்றால், இந்த பாடல் தெய்வாம்சம் கொண்டதாக இருக்கிறது. அப்படி ஒரு தன்மையுள்ள பாடல் இது. எனக்காக பாடலாக்கப்பட்ட மாதிரி இருக்கிறதே. இதில் நாம் நடித்திருக்கலாமோ என்று என்னை யோசிக்க வைக்கிறது " என்று எம்.ஜி.ஆர்., சங்கரிடம் சொன்னாராம்.

    ('இதயக்கனி' இதழுக்காக
    திரு கொற்றவன், இயக்குனர்
    திரு கே.சங்கர் அவர்களை சந்தித்து பேசி தொடராக எழுதியபோது விடுபட்டுப்போன விசயம் இது).

    படம் : எம்.ஜி.ஆருடன் கே.சங்கர், உடன்
    அவரது மகள் வயிற்று பேரன் சந்தீப்.
    அண்மையில் காலமான அவரது மகள் விஜயலட்சுமி, பெரியவர்
    திரு சக்ரபாணியின் மூத்த மகன்
    திரு ராமமூர்த்தியை மணந்து கொண்டவர். ராமமூர்த்தி 'அரச கட்டளை'
    படத்தின் தயாரிப்பாளர்.

    Ithayakkani S Vijayan...... Thanks...

  6. #3785
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்து திரையிடப்பட்ட
    24, 25, 26 வது படங்கள்
    வரிசைப் பட்டியலில், ஒவ்வொரு பதிவிலும் சிறிது முரண்பாடு உள்ளது...

    சிலர் எம்ஜிஆர் நடித்த சர்வாதிகாரி தெலுங்கு படத்தை, வரிசைப் பட்டியலில் கடைசியில் சேர்த்திருக்கிறார்கள்...

    சிலர் அவர் நடித்த ஏக் தா ராஜா இந்தி படத்தை கடைசியில் சேர்ந்திருக்கிறார்கள்...

    இந்த முரண்பாடு ஏன் வந்தது என்று தெரியவில்லை...

    சர்வாதிகாரி தமிழ்படம் வெளிவந்த 14.09.1951 அன்றே தெலுங்கு சர்வாதிகாரி வெளிவந்தது என்று சிலரும்...
    05.10.1951ல்தான் வெளிவந்தது என்று சிலரும்... பதிவு செய்துள்ளார்கள்...

    ஏக் தா ராஜா இந்திபடம் வெளிவந்த நாள் 15.06.1951 என்று சிலரும்,
    15.12.1951.என்று சிலரும் பதிவு செய்துள்ளார்கள்........ Thanks mr. SKRK.,

  7. #3786
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #கட்சி ஆரம்பித்து 47-ஆண்டுகள் அதில் 30-ஆண்டுகள் ஆட்சி பீடத்தில்
    தமிழகத்தை அதிக முறை ஆண்ட, ஆளுகிற, ஆண்டு கொண்டே இருக்கப்போகும் ஒரே கட்சி
    இந்தியாவில் அதிக நாட்கள் ஆட்சியில் இருந்த பெண் முதல்வரை கொண்ட கட்சி
    கட்சி ஆரம்பித்து அடுத்த தேர்தலிலேயே ஆட்சியை பிடித்த கட்சி
    இவற்றுக்கெல்லாம் மேலாக எந்தவித பிரதிபலனும் இல்லாமல் தலைமை மீது அளவில்லாத பாசம் கொண்ட கோடிக்கணக்கான விசுவாசமிக்க தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி
    பொன்செம்மல் "புரட்சித்தலைவர்" ஆரம்பித்து, இதயதெய்வம் "புரட்சித்தலைவி" அவர்கள் வழி நடத்தும் கட்சி...

    "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்"........ Thanks CKS.,

  8. #3787
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரை கவுரவிக்க கலைஞர் வரிசைப்படுத்திய மூன்றெழுத்து!
    ����������������������������
    "புதுமைப்பித்தன்' படத்தில் சந்திரபாபு எம்.ஜி.ஆரைப் பற்றி அறிமுகப்படுத்தும்போது இவர் நடிகர், புரட்சி நடிகர் என்று குறிப்பிடுவார். வசனம் கலைஞர்தான். வசனம் மட்டுமன்று அந்தப் பட்டத்தையும் கொடுத்தது கலைஞர்தான். இதனைப் பற்றி மணப்பாறை வசந்த கலா மன்றம் உறந்தை உலகப்பன் கூறுகிறார்: ""கலைஞரை எங்கள் நாடகம் ஒன்றிற்கு தலைமை வகிக்கக் கேட்டதுடன் எம்.ஜி.ஆரையும் முன்னிலை வகித்திட கூட்டிவரக் கோரினேன். கலைஞரும் எம்.ஜி.ஆரும் வருவதாக 3-4-1952-ல் தகவல் கார்டில் வந்தது. 5-4-52ல் திருச்சி தேவர் மன்றத்தில் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில், சினிமா நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் முன்னிலையில் என அச்சிடப்பட்டு வெளியாகியது.
    ✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌
    எம்.ஜி.ஆருக்கு ஒரு பட்டம் அளித்து நோட்டீசில் போடுவோம். நாடக மேடையில் அறிவித்துவிடலாம் என நினைத்து புரட்சி நடிகர் என வழங்கலாம் என்று முடிவுசெய்தேன். எங்களது குழுவிலுள்ள ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்.ஜி.ஆர் என்ன புரட்சி பண்ணிவிட்டார். சினிமா நடிகர் என்றே போடுவோம் என்று தன் கருத்தைச் சொன்னார்.நான் பிடிவாதமாக என் எண்ணப்படியே செய்தேன். ஆயிரக்கணக்கான நோட்டீஸ் அச்சிட்டு விநியோகம் செய்தோம். மேக்கப்பைக் கூட சரியாகக் கலைத்திடாமல், கலைஞருடன் காரிலேயே 5-4-1952 மாலையே திருச்சி வந்து சேர்ந்தார் எம்.ஜி.ஆர்...
    ��✌..mgr.....��✌
    நாடகம் தொடங்கி இடைவேளையில் கலைஞர் அவர்களை, புரட்சி நடிகர் என எம்.ஜி.ஆரை கவுரவித்திட கோரிட, அவரும் தனக்கே உரிய பாணியில் பேசும்போது அன்பு என்பது மூன்றெழுத்து என்று சுமார் 33 மூன்று எழுத்து வார்த்தைகளை வரிசைப்படுத்தி முடிக்கும்போது, "அண்ணா' என்ற மூன்றெழுத்து, "தி.மு.க.' என்றமூன்றெழுத்து, ‘எம்ஜி.ஆர்.’ என்ற மூன்றெழுத்துக்காரருக்குப் புரட்சி நடிகர் என்ற பட்டத்தினை இந்தத் நாடக நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகம் செய்கிறேன்'' என்றபோது பலத்த கைத்தட்டலுக்கு இடையே எழுந்து நின்றார் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.......... Thanks.........

  9. #3788
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தவறு.
    புரட்சித்தலைவருக்கு புரட்சிநடிகர் பட்டத்தை கொடுத்தவர் திருச்சி மணப்பாறையைச்சேர்ந்த உலகப்பன்....... Feedback ...Manithaneyam Groups... Thanks.........

  10. #3789
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆருக்கு 'புரட்சி நடிகர்' என்ற பட்டம் வழங்கியவர் மணப்பாறையை
    சேர்ந்த உறந்தை உலகப்பன். அதற்காக
    எம்.ஜி.ஆரையும், மு.கருணாநிதியையும்
    மணப்பாறைக்கு வரவழைத்து விழா நடத்திய உலகப்பன், கருணாநிதியைக் கொண்டே மேடையில் 'புரட்சி நடிகர்'
    என்று அறிவிக்கச் செய்தார்.
    1952 ல் நடைபெற்ற விழா அது.

    இந்த விபரங்களையெல்லாம் மணப்பாறைக்கு நேரில் சென்று
    திரு உலகப்பனை சந்தித்து பேசி படங்கள் எடுத்து 'தேவி' வார இதழில்
    'எம்.ஜி.ஆர். கதை' தொடரில் எழுதினேன்.

    Ithayakkani S Vijayan with Plato Rajagopalan........ Thanks........

  11. #3790
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மேடையில் வைத்து கருணாநிதியை அறிவிக்கச் செல்லலாமா அந்தாளு மலைமுமுங்கி நல்லவேளை இன்றாவது விவரம் தெரிந்ததே ... நாங்கள் கருணாநிதி கொடுத்ததாக நினைத்திருந்தோம் நன்றி...S.Kumar, Madurai... Thanks...........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •