Page 375 of 402 FirstFirst ... 275325365373374375376377385 ... LastLast
Results 3,741 to 3,750 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3741
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை பல்கலைக்கழக 125 ஆவது ஆண்டு விழா 20.09.1983 இல் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மத்திய அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் உள்ளிட்ட 11 பேருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

    புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவது அறிவிக்கும்போது .மனித குலத்திற்கு அவர் ஆற்றிவரும் சேவைக்காகவும், வள்ளல் தன்மைக்காகவும் இந்த பட்டம் வழங்கப்படுவதாக துணைவேந்தர் சாந்தப்பா தெரிவித்தார்.

    விழாவிற்கு தமிழக கவர்னர் எஸ்.எல். குரானா தலைமைத்தாங்கினார். ஜனாதிபதி ஜயில்சிங் பல்கலைக்கழக 125 ஆவது ஆண்டு விழாவை தொடங்கி வைத்தார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டத்தை கவர்னர் குரானா வழங்கினார். ஜனாதிபதி ஜயில்சிங் கைகுலுக்கி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் டாக்டர் பட்டம் பெற்றதையொட்டி திரையுலகம் சார்பில் சென்னையில் நவம்பர் 20ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி நடிகர்- நடிகைகள் கலந்து கொண்ட பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்றது. அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஊர்வலத்தைப் பார்வையிட்டார்.

    பிறகு டைரக்டர் பாரதிராஜா தலைமையில் விழா நடந்தது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவித்தார். சத்துணவுத் திட்டத்திற்கு திரையுலகின் முதல் தவணையாக ரூபாய் 10 லட்சத்தை பாரதிராஜா வழங்கினார்.

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க. .... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3742
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஏசுவாக நடிக்க விரும்பி எம்ஜிஆர் நடிக்க கருணை நிரம்பிய எம்ஜிஆர் முகம் ஏசுவாகவே மாற இந்த படம் பிரபலமானால் எம்ஜிஆரையே ஏசுவாக வணங்க படுவார் என்பதை பலர் கூற படம் பாதியில் கைவிடபட்டது
    கருணை தேவன் ஏசு
    கருணை எம்ஜிஆரிடம்

    வாழ்க எம்ஜிஆர் புகழ் ..... Thanks...

  4. #3743
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை என்றதும் சில சுவையான நினைவுகள். எம்.ஜி.ஆரின் திரைப்பட, அரசியல் வாழ்க்கையில் மதுரைக்கு தனி இடம் உண்டு. தமிழகம் முழுவ திலும் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு உண்டு என்றாலும் மதுரை அவரது கோட்டையைப் போல விளங்கி

    சிறுவயதில் எம்.ஜி.ஆர். நடித்த நாடகக் கம்பெனியின் பெயர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து வெள்ளி விழா கண்ட முதல் படம் ‘மதுரை வீரன்'. படம் வெள்ளி விழா கொண்டாடியது மதுரையில்.

    1958-ம் ஆண்டு ‘நாடோடி மன்னன்’ படத்தின் அசுர வெற்றிக்காக முதன் முதலில் பொதுமக்கள் முன்னிலையில் விழா நடந்த இடம் மதுரை தமுக்கம் மைதானம். இந்த விழாவில்தான் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு 110 பவுனில் அவருக்கு தங்கவாள் வழங்கப்பட்டது.

    அதிமுகவை தொடங்கிய பின் அப் போதைய திமுக ஆட்சிக்கு எதிராக பிரதமர் இந்திரா காந்தியிடம் புகார் மனு கொடுக்க மதுரைக்கு எம்.ஜி.ஆர். சென்ற ரயில், வழிநெடுக மக்களின் வரவேற்பால் 10 மணி நேரம் தாமதமாகச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய 7 மாதத்தில் அவரது கட்சிக்கு முதல் வெற்றியைக் கொடுத்தது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர் தல். அப்போது திண்டுக்கல் தனி மாவட் டமாக பிரிக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. அதிமுக வுக்கு முதல் மேயரைக் கொடுத்தது மதுரைதான்.

    1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர், நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி மதுரை மேற்கு. மீண்டும் முதல்வரான பின்னர், மதுரை யில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி னார். 1984-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப்பட்டி தொகுதி யில் போட்டியிட்டு வென்றார். அப்போது ஆண்டிப்பட்டி மதுரை மாவட் டத்தில்தான் இருந்தது. 1986-ம் ஆண்டு ஜூலையில் மதுரையில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை நடத்தினார். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படம் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’. இப்படி மதுரையோடு எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான பிணைப்பு உண்டு!

    ஜப்பானில் எக்ஸ்போ 70 கண்காட் சியில் ‘உலகம் சுற்றும் வாலிபன்' படத் தின் படப்பிடிப்பு நடந்தது. ‘உலகம் அழகு கலைகளின் சுரங்கம்…’ பாடலின் சில காட்சிகளை 30 ஆயிரம் பல்புகளைக் கொண்டு ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட்ட ஸ்விஸ் பெவிலியனில் எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்.

    அந்த சமயத்தில் ஒரு காட்சிக்காக ஒளிப்பதிவாளர் அழைக்கும்வரை எம்.ஜி.ஆர், நடிகை சந்திரகலா, அசோ கன், நாகேஷ் ஆகியோர் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அவர் கள் அருகில் வந்த ஜப்பானியர் ஒருவர் மது மயக்கத்தில் இருந்தார். ஆர்வத் தோடு சந்திரகலாவின் உடையை கவ னித்தார். திடீரென சில்மிஷம் செய்யும் எண்ணத்துடன் சந்திரகலாவின் உட லைத் தொட்டுவிட்டார். ஜப்பானியரின் கை சந்திரகலாவின் உடலைத் தொட்ட மறுகணம் எம்.ஜி.ஆரின் கை அவர் கன்னத்தில் விழுந்தது. ஜப்பானியரை எம்.ஜி.ஆர். பலமாக அறைந்து விட்டார். இதில் ஜப்பானியர் அணிந்திருந்த கண்ணாடி தெறித்து விழுந்தது.

    தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.ஆர். பந்துலுவுக்கு உதவுவதற்காக அவரது ‘ஆயிரத் தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். ‘‘தொலைபேசியில்தான் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன். உடனே நடிக்க ஒப்புக் கொண்டு ‘கால்ஷீட்’ கொடுத்தார்’’ என்று பின்னர், 5-2-1971 தேதியிட்ட ‘சித்ராலயா’ இதழில் பந்துலு நன்றியுடன் கூறியிருந்தார். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முதலில் பந்துலுதான் இயக்குவதாக இருந்தது. இடையே அவர் இறந்து விட்டதால் எம்.ஜி.ஆரே படத்தின் இயக்குநராக பணியாற்றினார்.

    சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘தெய்வத்தாய்’ திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. அப்போது, கடுமையான அரிசிப் பஞ்சம் இருந்தது. மக்கள் அவதிப்படும் நிலையில், படம் வெற்றி பெற்றதற்காக 100வது நாள் விழா தேவையில்லை என்று எம்.ஜி.ஆர். கூறியதால் வெற்றி விழா கொண்டாடப்படவில்லை

    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஆதரவற்ற பெண் களுக்கு திருமண நிதி உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் வழங் கும் திட்டம் ஆகியவற்றை செயல் படுத்தியதோடு, ஆதரவற்ற விதவை தாய்மார்களின் பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங் கவும் உத்தரவிட்டார்.

    எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’ திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்ட 33 திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது. எந்த கருப்பு வெள்ளை படமும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. பெங்களூரிலும், இலங்கையிலும் தலா ஒரு திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் வெள்ளி விழா படம் என்பதோடு, ரூ.1 கோடி வசூல் செய்த முதல் தமிழ்படம் என்ற பெருமை பெற்றது ‘மதுரை வீரன்.’

    இதயவீணை’ படத்தை தொடர்ந்து ‘உதயம் புரொடக் ஷன்ஸ்' நிறுவனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘பல்லாண்டு வாழ்க’ ஆகிய படங் களையும் மணியன் தயாரித்தார். இந்த மூன்று படங்களுமே 100 நாட் கள் ஓடி அமோக வெற்றி பெற்ற

    எம்.ஜி.ஆரின் 100-வது படம் ‘ஒளிவிளக்கு’. 1968-ம் ஆண்டில் வெளியாகி அமோக வெற்றி பெற்றது. மதுரையில் 21 வாரங்கள் ஓடியது. மறு வெளியீடுகளிலும் சக்கைபோடு போட்டது. 1979-ம் ஆண்டு இலங்கையில் மறு வெளியீட்டிலும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது ‘ஒளிவிளக்கு’.

    அடிமைப் பெண்’ படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர். ராஜஸ்தான் சென்றபோது, அந்த மாநில முதல்வராக இருந்த மோகன்லால் சுகாதியா, எம்.ஜி.ஆருக்கு விருந்தளித்து கவுரவித்தார். அப்போது அவர் பரிசளித்த புசுபுசுவென்ற வெள்ளைத் தொப்பி, எம்.ஜி.ஆருக்கு அழகாக பொருந்தியது. அதிலிருந்துதான் எம்.ஜி.ஆருக்கு தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது...... Thanks...

  5. #3744
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #கேள்விக்குப் #பதில்

    ஒரு சமயம் பொங்கல் பண்டிகையின் போது தன் ஊழியா்களுக்கு தர பணம் இன்றி தவித்துள்ளாா் மக்கள்திலகம்...

    அப்போது ஒரு தயாாிப்பாளா் தலைவாிடம் கால்ஷீட் கேட்பதற்கு தயக்கத்துடன் இருப்பதைக் கேள்விப்பட்டு அவரை வரச்சொல்லி கால்ஷீட் கொடுத்து பதினெட்டு இலட்சம் பெற்று அதனைஅப்படியே ஒருவர் விடாமல் அனைத்து ஊழியா்களுக்கும் கொடுத்துள்ளார்...

    அந்த படம் தான்
    #நான் #ஏன் #பிறந்தேன்....!

    பொன்மனச்செம்மல், 'நான் ஏன் பிறந்தேன்' என்ற தனது படத்தலைப்பின் கேள்விக்குத் தன் இந்தச் செயலையே பதிலாக்கிவிட்டார்...... Thanks...

  6. #3745
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ..... Thanks...

  7. #3746
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் 100 | 25 - திரையுலகில் முடிசூடா மன்னர்!

    M.G.R. எப்போதுமே எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட்டவர் அல்ல. திரையுலகில் முடிசூடா மன்னராக இருந்தபோதும் சரி; அரசியலில் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோதும் சரி, அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை இருந்தபோதிலும் எதிர் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தவர் அவர். அதை விட முக்கியம், தனது கருத்தை செயல்படுத்துவதில் தானே முதலில் நிற்பார்.

    திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட பிறகு, அதிமுக கொடியிலேயே தனது தலைவரான அண்ணாவின் உருவத்தை பொறித்தார். 1976-ம் ஆண்டு கட்சியினருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை எம்.ஜி.ஆர். வெளி யிட்டார். அதிமுகவின் ‘தென்னகம்’ நாளிதழில் அந்த அறிவிப்பு வெளி யானது. ‘எனது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்கள் அண்ணா உருவம் பொறித்த நமது கட்சியின் கொடியை பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. ‘பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்று கட்சியினருக்கு எம்.ஜி.ஆர். கூறியிருந்தாரே தவிர, அது கட்டாயம் என்று அதில் சொல்லவில்லை.

    ‘‘ஒருவரை ஒருவர் முன்பின் தெரியா விட்டாலும், கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொள்வதன் மூலம் அதைப் பார்த்ததும் ‘இவர் நம்ம ஆள்’ என்று அடையாளம் கண்டுகொண்டு கட்சியினரிடையே ஒற்றுமை மனப் பான்மை ஏற்படும், ஒருங்கிணைந்து செயல்பட உதவும்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். இதை ஏற்று லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொண்டனர்.

    எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்புக்கு கட்சியிலேயே எதிர்ப்பும் எழுந்தது. படத் தயாரிப்பாளரான கோவை செழியன், விருதுநகர் சீனிவாசன் போன்றவர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், ‘‘கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். இதை ஏற்பவர்கள் செய்யலாம். பச்சை குத்திக் கொள் ளாதவர்கள் அண்ணாவின் கொள் கையை விரும்பாதவர்கள் என்றோ, கட்சியில் இருக்க தகுதியில்லாதவர்கள் என்றோ கூற முடியாது’’ என்று எம்.ஜி.ஆர். விளக்கம் அளித்தார்.

    இப்படி, மாற்றுக் கருத்துக்களுக்கும் ஜனநாயகரீதியில் எம்.ஜி.ஆர். மதிப்பு அளித்தார் என்பது மட்டுமல்ல; கட்சியையும் தன்னையும் கடுமையாக விமர்சித்ததால் நீக்கப்பட்ட கோவை செழியன் போன்றவர்கள் வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார். தனது வழக்கமான இயல்புப்படி, தன்னை விமர்சித்தவர்களுக்கும் பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் பதவிகள் கொடுத்தார்.

    எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம். ‘ஊருக்குத்தான் உபதேசம் எனக்கோ, என் குடும்பத்துக்கோ அல்ல’ என்று எம்.ஜி.ஆர். எப்போதுமே செயல்பட்டதில்லை. கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியான உடனே அதை செயல்படுத்திய முதல் நபர் எம்.ஜி.ஆரேதான். சென்னை மாம்பலம் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்துக்கு (இப்போது அந்த இடம்தான் நினைவு இல்லமாக உள்ளது) பச்சை குத்துபவரை வரவழைத்து தனது கையில் பச்சை குத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

    இதில் சுவாரசியமான ஒரு விஷயம், அதிமுகவில் சேர்ந்து பிறகு கட்சி மாறிய நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் கையில் கடைசி வரை பச்சை குத்தப்பட்ட அதிமுக கொடி இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் பா.ஜ.க-வில் சேர்ந்த நடிகர் விஜயகுமார் கையிலும் அந்தப் பச்சை உள்ளது.

    எம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ திரைப்படத்தின் பல காட்சிகள் கர்நாடக மாநிலம் கலசபுரா என்ற இடத் தில் படமாக்கப்பட்டன. அங்கு கதைக்கு ஏற்றபடி பாழடைந்த கட்டிடம் போல ‘செட்’ போட வேண்டும். இரண்டு, மூன்று முறை அமைத்தும் பலத்த காற்று அடித்து ‘செட்’ வீணாகிவிட்டது. காற்று சுழன்றடிக்காத இடமாக பார்த்து ‘செட் ’அமைக்குபடி எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார். காற்று அடிக்காத பகுதியாக பார்த்த இடம் ஒரு குன்று பகுதி. அந்த இடத்தில் ‘செட்’ போட வேண்டும் என்றால் அங்கு பொருட்கள் வந்து சேர ஆகும் செலவும் அதிகமாகும். எம்.ஜி.ஆர். ஆலோசித்தார்.

    அந்த ஊர் மக்களின் பிரதான தொழில் கல் உடைப்பது. அங்குள்ள மக்களையும் படப்பிடிப்புக்கு வந்த தொழிலாளர்களையும் கொண்டே சிறு குன்றை உடைக்கச் செய்து, பெருங் கற்களை கொண்டு பலமான காற்றடித்தா லும் அசைக்க முடியாதபடி, பாழடைந்த வீடு போன்ற கட்டிடம் கட்டப்பட்டது. இதில் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துவிட்டார் எம்.ஜி.ஆர்.!

    படப்பிடிப்புக்குக் குறைந்த செலவில் ‘செட்’ தயாரானது. குன்று உடைக்கப்பட்டதால் குன்றை சுற்றி ஊருக்கு வராமல் நேர்வழியில் செல்ல மக்களுக்கு பாதை கிடைத்தது. முக்கியமாக, கல் உடைப்பதன் மூலம் ஊர் மக்களுக்கு ஒரு மாதத்துக்கு வேலை கிடைத்தது.

    அப்போது, நெகிழச் செய்யும் ஒரு சம்பவம். குன்றை உடைக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்., வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. பலர் தடுத்தும், ‘‘விரைவில் வேலை ஆக வேண்டும், எல்லாரும் சேர்ந்து செய்தால்தான் முடியும்’’ என்று கூறி மக்களுடன் சேர்ந்து தானும் கல் உடைத்தார்.

    தான் சொன்னதற்கு, தானே முன்னுதாரணமாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

    கூட்டங்களில் எம்.ஜி.ஆர். பேசும்போது ‘‘என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே’’ என்று கூறி மக்களின் ஆரவாரத்துக் கிடையேதான் பேச்சைத் தொடங்குவார். இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத் தால் சிகிச்சை பெற்றபோது, எம்.ஜி.ஆருக்கு ஏராளமான ரத்தம் செலுத்தப்பட்டது.

    ‘‘எனக்கு ரத்தம் அளித் தவர்கள் யார் என்று தெரி யாது; ரத்தம் கொடுத்தவர் களுக்கே கூட அது எனக்குத் தான் அளிக்கப்பட்டது என்று தெரிந்திருக்காது. யார், யார் ரத்தம் என் உடலில் கலந்திருக்கிறதோ? அதனால்தான் ‘ரத்தத்தின் ரத்த மான’ என்று குறிப்பிடு கிறேன்’’ என்று விளக்கம் அளித்தார் எம்.ஜி.ஆர்..... Thanks...

  8. #3747
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சிநடிகர் எம்ஜியார் திமுகவில் இருந்து நீக்க பட்ட உடன் எம்ஜியார் ரசிகர்கள் ,பொதுமக்கள் தவிர சில திமுக நல்ல உள்ளங்களும் அந்த செயலை கண்டித்தன.

    தென்னகம் என்ற பத்திரிகையை திரு. கே.ஏ.கே. அவர்கள் நடத்தி வந்தார்

    தலைவர் நீக்க பட்டதும் அந்த பத்திரிகையில் கண்டனம் தெரிவித்து எழுதினார். அப்போது அவர் திமுக மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆகவும் இருந்தார்.

    இவர் மறைந்த கே.ஏ. மதியழகன் சகோதரர் ஆவார். எம்ஜியார் இல்லாத திமுக மணமக்கள் இல்லாத திருமணவீடு என்று எழுதினார்.

    தீயசக்தி கோவம் கொண்டு இவரையும் கட்சியில் இருந்து நீக்கியது. கவலை கொள்ளாத இவர் நம் தலைவர் உடன் இணைந்து செயல் பட தொடங்கினார்.

    அக்டோபர் புரட்சி 1972 இல் ஏற்பட்ட போது தலைவர் அதிமுகவின் முதல் உறுப்பினர் ஆக இவர் இரண்டாம் உறுப்பினர் ஆனார்.

    ஆர்.எம்.வீ போன்றவர்கள் அப்போது கட்சியில் இணையவில்லை. அக்டோபர் மாதம் 72 இல் 29 ஆம் தேதி அன்று சென்னை சீரணி அரங்கில் அதாவது மெரினா கடற்கரையில் மாபெரும் அதிமுக பொது கூட்டம்.

    மறைந்த சிகப்பு கொடி தோழர்கள் கல்யாண சுந்தரம், ராமமூர்த்தி, மற்றும் கே.டி.கே. தங்கமணி இந்த பொது கூட்டத்தில் கலந்து கொள்ள.

    அப்போது ஆவேசமாக பேசிய திரு கே.ஏ. கே. அவர்கள் நம் மக்கள் திலகம் எம்ஜியார் அவர்களுக்கு அந்த தீய சக்தி கொடுத்த புரட்சிநடிகர் என்ற பட்டம் இனி தேவை இல்லை.

    இனி நம் தலைவர் இன்று முதல் புரட்சிதலைவர் என்று அழைக்க படுவார் என்று அறிவிக்க அப்போது எழுந்த கரகோஷம் கடல் அலைகள் சத்தத்தை விட அதிகமாக எழுந்தது வரலாறு.

    இதுதான் புரட்சிநடிகர், புரட்சிதலைவர் ஆன வரலாறு.

    நன்றி...தொடரும்..உங்களில் ஒருவன் நெல்லை மணி...வாழ்க எம்ஜியார் புகழ்....... Thanks...

  9. #3748
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    .... Thanks...

  10. #3749
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புர*ட்சித்த*லைவ*ர் 1977ல் திரையுலகை விட்டு விலகி முத*ல்வ*ரானார். அப்போதும் அவ*ர்தான் நெ.1. அதிகப*ட்ச ஊதிய*மும் பெற்றார். அப்போது மட்டும் அவ*ர் கைவ*ச*ம் இருந்த ப*ட*ங்க*ள் எந்த ந*டிக*ருக்கும் இருந்ததில்லை. அதன் ப*ட்டிய*ல் இதோ!
    1. அண்ணா நீ என் தெய்வ*ம்
    2. ந*ல்லதை நாடு கேட்கும்
    3. நானும் ஒரு தொழிலாளி
    4. மக்கள் என் ப*க்க*ம்
    5. தியாக*த்தின் வெற்றி
    6. இதுதான் ப*தில்
    7. ச*மூக*மே நான் உனக்கே
    சொந்த*ம்
    8. உன்னை விடமாட்டேன்
    9. இமய*த்தின் உச்சியிலே
    10. கேப்ட*ன் ராஜா
    11. உங்க*ளுக்காக நான்
    12. அண்ணா பிற*ந்த நாடு
    13. ஊரே என் உற*வு
    14. கிழ*க்கு ஆப்பிரிக்காவில் ராஜு
    15. எல்லைக்காவ*லன்
    16. மீண்டும் வ*ருவேன்.
    17. புர*ட்சிப்பித்த*ன்
    இவ*ற்றில் ந*ல்லதை நாடுகேட்கும் மற்றும் அண்ணா நீ என் தெய்வ*ம் ஆகிய ப*ட*ங்க*ளின் காட்சிக*ள் வேறு இயக்குனர்க*ளின் ப*ட*ங்க*ளில் இட*ம்பெற்று வெளிவ*ந்த*து.

    இவை த*விர எம்ஜிஆர் மறைந்த* பிற*கு அவ*ர*து வாழ்க்கை வ*ர*லாற்றை ப*திவு செய்யும் வ*கையில் காலத்தை வென்ற*வ*ன், ந*மது தெய்வ*ம், த*ர்ம தேவ*ன் ஆகிய ப*ட*ங்க*ள் வெளியாகி உள்ளன.
    இன்னமும் அவ*ர் ப*ழைய ப*ட*ங்க*ளில் 80 ச*த*வீத*ம் தியேட்ட*ர்க*ளில் வெளியிட*ப்ப*ட்டு வ*சூலை வாரி கொடுக்கின்ற*ன.

    புர*ட்சித்த*லைவ*ர் ச*ரித்திர நாய*க*ர் மட்டுமல்ல! சாத*னை நாய*கரும் ஆவார்!..... Thanks...

  11. #3750
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    M G R
    வீரம் திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் நடத்தி காட்டியவர் எம்ஜிஆர்
    ரயில் போராட்ட கைதான பின் வந்து இறங்கிய கருணாநிதி கூட்டத்தில் திணற எம்ஜிஆர் அலேக்கா தோள் மீது கருணாநிதியை தூக்கி வெளியே கொண்டு வந்தார் இதில் எம்ஜிஆரின் விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்சு தொலைந்து விட்டது
    வெளியூர் சென்று விட்டு காரில் திரும்பி கொண்டிருந்த எம்ஜிஆர் கார் வழி பறி கும்பலால் மறிக்க படுகிறது கூச்சலோடு காரை நெருங்க எம்ஜிஆர் இறங்கி முறைப்போடு நோக்க கும்பல் மொத்தமும் கார் வெளிச்சத்தில் எம்ஜிஆரை கண்டு வாத்தியாரே உங்களயைா மறித்தோம் மன்னித்து விடுங்கள் என காலில் விழ அவர்களை எழப்பி வழி பறி செய்வது தவறு ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைங்கள் என ஒரு கணிசமான தொகையை கொடுக்கிறார் எம்ஜிஆர்

    எந்த வகையிலும் எவராலும் எம்ஜிஆரை வெல்ல முடியாது என்ற நிஜ வீரனாக எம்ஜிஆர் இருந்ததால் இன்றும் எம்ஜிஆர்புகழ் கொடிகட்டி பறக்கிறது

    வாழ்க எம்ஜிஆர்புகழ்... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •