Page 374 of 402 FirstFirst ... 274324364372373374375376384 ... LastLast
Results 3,731 to 3,740 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3731
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இதோ கழகத்தின் அடிமட்ட தொண்டராக இருந்து அமைச்சராக உயர்ந்தவரின் கதை இது..

    பேராவூரணிக்கு அருகில் உள்ள முடச்சிக்காடு என்னும் கிராமத்தில் மிக எளிய குடுப்பத்தில் பிறந்தவர் இவர்.

    சிறுவயதில் வாட்டிய வருமையை போக்க பேராவூரணி பகுதியில் நாளிதழ் விநியோகம் செய்வதில் வாழ்வை தொடங்கியவர்...

    சிறுவயதில் தன்னுடைய அரசியல் செயல்பாட்டினால் பேரறிஞர் அண்ணா அவர்களின் பாராட்டைப் பெற்றவர்.

    'ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய பெருந்தலைவர், சட்ட மன்ற உறுப்பினர்,
    அமைச்சர்' என்று தனது விடா முயர்ச்சியாலும், கடின உழைப்பாலும் வெற்றிகளை குவித்தவர்...

    பேராவூரணியில் மூன்று முறை தொடர்ந்து வென்று #புரட்சித்தலைவர் அவர்களின் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாற்றும் மீன் வளத்துறை என்று இரு துறைகளுக்கு அமைச்சராக இருந்து திறம்பட பணியாற்றியவர்...

    வாடகை கட்டிடத்தில் இயங்கிய பேராவூரணி தாலுகா அலுவலகத்திற்கு புதிய பிரமான்ட கட்டிடம் கட்டி திறந்து வைத்தவர்...

    அரசு மருத்துவமணையை நவீனப்படுத்தி மகப்பேறு பிரிவையும்,எக்ஸ்ரே கருவிகளையும் கொண்டு வந்தவர்..

    பேராவூரணியில் புதிய போக்குவரத்து பணிமணையை கொண்டு வந்து பல்வேறு எதிர்ப்புகளுக்கு முகம் கொடுத்து பல ஊர்களுக்கு புதிய வழித்தடங்களை ஏற்படுத்தி புதிய பேருந்துகளை இயக்க வழிவகை செய்தவர்..

    பேராவூரணியில் புதிதாக தியனைப்பு நிலையத்தை நிறுவியவர்....

    கால்நடை மருத்துவமனைகளை கொண்டு வந்தவர்..

    பேராவூரணி தொகுதியில் பல கிராமங்களை இணைக்கின்ற வாட்டாத்திக்கொள்ளைக்காடு காட்டாற்று பாலம் கட்டிவர்... கட்டயங்கங்காடு பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியவர்.*..

    பேராவூரணியில் பல துவக்கப்பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாகவும், பெருமகளூர் உள்ளிட்ட பல உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி பல புதிய பள்ளி கட்டிடங்களை
    கட்டியவர்...

    பேராவூரணி தொகுதியில் எழுபதுபேருக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலை, நூற்றி ஐம்பது பேருக்கு தலையாரி வேலை. இருநூருக்கு மேற்பட்டோருக்கு சத்துணவு அமைப்பாளர் பணி. பலருக்கு சமையலர் பணி என்று எவரிடத்திலும் ஒரு ரூயாய் பெறாமல் வேலை கிடைக்க வழிவகை செய்தவர்...

    தான் பதவியில் இருந்த காலத்தில் பேராவூரணி பகுதியில் பலருக்கு அரசுவேலை பெற்றுத்தந்தார்...

    பேராவூரணி பகுதியில் அரசியல் அதிகாரமற்று கிடந்தவர்களை "ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய பெருந்தலைவர், தனது கட்சியில் ஒன்றியச் செயலாளர், நகரச்செயலாளர்' என்று வெல்லவைத்து அழகு பார்த்தவர்.

    ஆம் அவர்தான் அந்த கடைக்கோடி தொண்டன் தமிழக முன்னாள் அமைச்சர் பேராவூரணி கோவேந்தன்...

    இப்படிப்பட்ட அடிமட்டத்திலிருந்து கழகத்தின் உயர்ந்த பதவிகளை அலங்கரித்தோர் பலருண்டு...
    அவரில் ஒருவர்தான் இவர்...

    இதுதான் எங்களின் #அஇஅதிமுக.......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3732
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒருமுறை மதுரை அருகே எழுமலை என்ற கிராமத்தில் வேனில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் குறுக்கே வந்து நின்றார். வேனில் இருந்து இறங் கிய எம்.ஜி.ஆர்., ‘‘என்னம்மா, உங் களுக்கு ஏதாவது உதவி தேவையா?’’ என்றார்.

    அந்த மூதாட்டி, ‘‘மகராசா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் விவசாய நிலத் தில் உன் பாதம் படவேண்டும். ஒருமுறை நடந்துவிட்டு வா, அதுபோதும்’’ என்றார். சிரித்தபடியே அவரது கோரிக்கையை ஏற்ற எம்.ஜி.ஆர்., அருகே இருந்த நிலத்துக்குச் சென்று மூதாட்டியின் கரத்தைப் பற்றியபடியே சிறிது தூரம் நடந்தார். அந்த மூதாட்டி கண்களில் நீர்வழிய, ‘‘இதுபோதும் ராசா, இனிமே இந்த நிலத்தில் பொன்னு விளையும்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஜிப்பா பையிலிருந்து பணக் கத்தை அந்தத் தாயின் கரங்களுக்கு இடம் மாறியது!

    தலைவரின் அருமையான பாடல் வரி...
    நீங்க நல்லாயிருக்கணும்
    நாடு முன்னேற
    இந்த நாட்டில் உள்ள
    ஏழைகளின் வாழ்வு
    முன்னேற
    என்றும்
    நல்லவங்க எல்லாரும்
    உங்க பின்னால

    நீங்க
    நினைச்சதெல்லாம்
    நடக்கும் உங்க
    கண்ணு முன்னால.... Thanks...

  4. #3733
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [அமெரிக்காவில் பேசிய புரட்சிதலைவரின் பேச்சு!!!

    புரட்சிதலைவர் ஒருமுறை முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதறகாக அமெரிக்கா சென்றார். அங்கு ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டு இருக்கும்போது வழியில் ஒரு சாலை விபத்தில் கார் சேதகமாகிக் கிடப்பதைப் பார்க்கிறார். உடனே தன் காரை நிறுத்தச்சொல்லி அருகே சென்று பார்க்கையில் உள்ளே ஒருவர் குற்றுயிராகக்கிடப்பதைப் பார்த்து அந்த நபரை தன் காரிலேயே மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் . நிகழ்சசிக்கோ நேரமாகிவிட்டது.

    எம்ஜிஆருடன் இருந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக அடிபட்டவருக்கு உதவி செய்து விட்டுதான் அடுத்த நிகழ்ச்சிக்கு மிகவும் தாமதமாக சென்றார்.
    அந்த நிகழ்ச்சிக்குத் தாமதமாக வந்ததற்கு சபையில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு நடந்த சம்பவத்தை விவரித்து சொல்லி இருக்கின்றார்... அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது .

    தொடர்ந்து பேசிய புரட்சித்தலைவர் ... "ஒரு விபத்து நடந்துவிட்டது... யாரும் உதவிக்கு வரவில்லை... சாலையில் சென்ற கார்கள் எல்லாம் நிற்காமல் விரைகின்றன..."

    ஆனால்...!


    "இப்படி ஒரு விபத்து நடந்தால், தங்கள் உறவினர்களோ நண்பர்களோ அடிபட்டுக் கிடப்பதுபோல் நினைத்து ஓடோடி வந்து உதவி செய்யக்கூடிய #மனிதாபிமானம் #உள்ளவர்கள் #உலகிலேயே #எங்கள் #தமிழ்நாட்டினர்தான்...#என்று #பெருமையோடு #தெரிவித்துகொள்கின்றேன் ..."

    என்று பேசியபொழுது அரங்கமே எழுந்து நின்று எழுப்பிய கரவோசை அடங்க வெகுநேரமானது........ Thanks...

  5. #3734
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தன் கண்முன்னே நடக்கும் எந்த செயலையும் பாா்த்து விட்டால் உடனே ஓடிச்சென்று உதவி புாிவாா் மக்கள்திலகம் அவா் சிறு வயது முதலே இந்த குணம் அவ௫க்கு உண்டு அந்த வகையில் அவா் ஒ௫ தனிப்பிறவி சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் உதவுவதில் இவா் ஒ௫ மன்னா் வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளலாரை போல் துன்படுவரைக் கண்டால் உதவிக்கரம் நீட்டுபவா் இத்தகைய தெய்வத்தை நாம் தினம் தினம் நினைத்து வாழுவோம் வாழ்க மக்கள் திலகம் வளா்க அவரது பண்பு நம்எல்லோ௫க்கும்....... Thanks...

  6. #3735
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ... Thanks...

  7. #3736
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் Hits.- Audio Time- �� 03:25:45

    ���� பாடல்கள் விவரம் ����

    00:00:05 - Kumari Pennin Ullatthile
    00:05:44 - Naan Paarthathile
    00:10:16 - Thottaal Poomalarum
    00:14:48 - Vizhiyae Kathai Ezhuthu
    00:18:25 - Un Vizhiyum
    00:21:37 - Methuva Methuva
    00:25:02 - Neela Niram
    00:29:24 - Nanga Pudusa
    00:32:35 - Aval Oru Navarasa
    00:36:04 - Kalyana Naal Paarkka
    00:40:27 - Mellappo Mellappo
    00:44:42 - Naam Oruvarai Oruvar
    00:48:55 - Kadaloram
    00:52:17 - Poovaitha
    00:55:40 - Androru Naal
    00:58:48 - Endrum Pathinaaru
    01:02:19 - Ponnezhil Poothathu
    01:07:04 - Nethu Poothale
    01:11:30 - Andru Vanthathum
    01:15:44 - Vaanga Machan Vaanga
    01:21:56 - Puttam Puthiya
    01:25:08 - Kattodu Kuzhal Aada
    01:29:50 - Thuliuvatho Ilamai
    01:33:16 - Thedralil Aadum
    01:37:49 - Hallo Hallo
    01:40:51 - Yenna Porutham
    01:44:35 - Ponnandhi Maalai Pozhuthu
    01:50:22 - Katti Thangam
    01:54:02 - Nilladi Nilladi
    01:57:34 - Siriththu Siriththu
    02:01:20 - Pattu Selai Kaatthaada
    02:04:22 - Aanandam
    02:07:48 - Thottuvida Thottuvida
    02:11:35 - Vettaiyaadu Vilaiyadu
    02:17:23 - Yennai Kathalithal
    02:20:37 - Ithuthan Muthal Raaththiri
    02:24:54 - Paartthukondathu
    02:28:01 - Naan Alavodu
    02:31:46 - Maasilaa Unmai Kaathalae
    02:35:00 - Rajaavin Paarvai
    02:39:22 - Azhagiya Tamizh
    02:45:53 - Pani Illaatha
    02:49:21 - Javvadhu Mediayittu
    02:54:10 - Vannakkili
    02:57:47 - Intha Punnagai
    03:02:58 - Aasai Irukku Nenjil
    03:06:35 - Paadinaal Oru Paattu
    03:09:51 - Muthamo Mogamo
    03:15:13 - Konja Neram Ennai
    03:20:46 - Nerungi Nerungi..... Thanks...

  8. #3737
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ..... Thanks...

  9. #3738
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ku_Ida92vQ... Thanks...

  10. #3739
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ... Thanks...

  11. #3740
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
    "நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு) இன்றைய தொடர்ச்சி திரு டாக்டர் புரட்சித் தலைவரின் எண்ணங்களை கண்ணீர் மல்க அவரை எதிர்நோக்கி தொடர்கிறோம். 10/04/2020

    "நல்லதுதான் செய்கின்றோம்; நியாயமாகத்தான் பேசுகின்றோம்"
    என்று நினைக்கவும் நம்பவும் வைக்கும் அந்தச் சந்தர்ப்பம்.
    ஆனால், பேசுகிறவனுக்கு நியாயமாகத் தோன்றக்கூடிய அந்தச்
    செய்தி, கேட்கின்றவனுக்கும் நியாயமாகத் தோன்ற வேண்டுமே!
    அறிவுக்கு மாறுபடாமல், அந்த அறிவின் தூண்டுதலாலேதான்
    பேசுகிறான் என்றாலும், மற்றவர்களின் அறிவுக்கும் கருத்துக்கும்
    அது ஏற்புடையதாயிருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
    ஆகவே, நாம் நமது அறிவின்படி பேசுவது மற்றவருக்கும் நியாயம்
    என்று தோன்றினால்தான் அதன் விளைவு சரியாக இருக்கும்.
    நமக்கு மட்டும் அது நியாயமாக இருந்து, எதிர்த் தரப்புக்கு
    நியாயமாக இராவிட்டால், ஏற்றுக்கொள்ளப்படும் தகுதியை அது
    இழப்பதுடன், அதற்கு ஒரு தண்டனையும் கிடைப்பதுண்டு.
    ஆனால், அந்தத் தண்டனை தன்னுடைய அகந்தைக்குக்
    கிடைத்த அறிவுரை என்று எடுத்துக்கொள்ள எத்தனை பேர்
    தயாராக இருக்கிறார்கள்?
    "சந்தர்ப்பம் பார்த்து நம்மைப் பழிவாங்கி விட்டார்கள்' என்று
    அல்லவா மற்றவர் மீது ஆத்திரப்படுகிறோம்
    யோசனை, நிபந்தனை, கட்டளை!
    நான் என் வாழ்க்கையில் ஒரு நேரத்தில், 'நல்லதையே
    நினைக்கிறேன், நல்லதையே செய்கிறேன்' என்ற நம்பிக்கையுடன்,
    என் அறிவுக்கேற்ற வகையில் பிறருக்கு ஒரு யோசனையை - ஒரு
    நிபந்தனையை - ஒரு கட்டளையை விதித்தேன். ஆனால், அதே
    யோசனை - நிபந்தனை - கட்டளை பின்னர் அவர்களால் எனக்கு
    விதிக்கப்படவும் நான் அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கவும் நேர்ந்த
    போது நான் அடைந்த அனுபவம் இருக்கிறதே அப்பப்பா!
    திரு.ஏ.எல். சீனிவாசன் அவர்கள், 'பாக்கெட் மார்' என்ற
    இந்திப் படத்தை எனக்குக் காட்டினார். அந்தப் படக்கதையைத்
    தழுவித் தமிழில் படமெடுக்க விரும்புவதாகவும், அதில் நான்
    கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
    அவருக்கு அப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்ற
    விருப்பம் இருந்தது போல், எனக்கும் நல்ல கதையுள்ள அந்தப்
    படத்தில் நடிக்கும் விருப்பம் நிறைய இருந்தது.

    "என்னுடைய நிலைமை"

    இதே தயாரிப்பாளரின் 'ரத்னாவளி' என்ற படத்தில் அப்பே
    நான் நடித்துக்கொண்டிருந்தேன். இதில் திருமதி பத்மினி அவர்கள்
    என்னுடன் கதாநாயகியாக நடித்தார். மேலும், திருமதி அன்
    தேவி, திருமதி பானுமதி முதலிய பெரிய நடிகையரோடு லே
    சில படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தேன். அவர்கள்
    படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது உள்ளதைப்
    போல், அப்போது எனக்குப் பல படங்களும் இல்லை .
    இப்போது நான் வாங்குகிற சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கு
    கூட அப்போது நான் வாங்கவும் இல்லை.
    எனக்குப் படங்கள் அதிகம் இல்லை என்றாலும், நாடகங்களில்
    நடித்துக்கொண்டிருந்தேன். அதோடு வேறு பல பொது
    நிகழ்ச்சிகளிலும், பொதுப்பணிகளிலும் எனக்கு ஈடுபாடு இருந்து
    வந்தது.
    இரண்டு மூன்று நாடகங்கள் நடத்த வெளியூர்களுக்குப்
    போகிற நிலை ஏற்பட்டுவிட்டால் போதும், ஐந்தாறு நாட்கள்
    ஓடிவிடும்.
    அதனால் படப்பிடிப்பில் தொடர்புகொள்ள நேரம் இல்லாமல்
    போய்விடும்.
    ஆகையால், அதிகப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்
    மற்றவர்களுக்கு, படப்பிடிப்புக்குக் 'கால் ஷீட்' கொடுப்பதில்
    எவ்வளவு கஷ்டம் இருந்ததோ, அவ்வளவு கஷ்டம் எனக்கும்
    இருந்தது.
    இப்படிப்பட்ட நேரத்தில்தான் திரு.ஏ.எல்.எஸ். அவர்கள்
    புதுப்படத்தில் நடிக்க அழைத்தார்.
    நானும் விரும்பினேன்.
    வெள்ளை மனம் படைத்தவர்
    'திருடாதே' என்பது அப்படத்தின் பெயர். தயாரிப்பாளர்
    திரு.ஏ.எல்.எஸ். அவர்கள் உடனேயே படத்தைத் தொடங்க
    வேண்டும் என்றார்.
    திரு.ஏ.எல்.எஸ். அவர்கள் எப்போதும் சிரித்தபடியே பேசுவார்
    என்ன தொல்லை ஏற்பட்டாலும்
    அவரது சிரிப்புப் பேச்சு ஓயாது.
    அவருடைய இயல்பு. மனத்தில்
    பட்டதைக் கூறிவிடுவது, எதிராளியை
    அவமானப்படுத்த வேண்டு
    மென்றோ, தலைகுனிவுக்கு
    ஆளாக்க வேண்டுமென்றோ
    யாதொரு கெட்ட எண்ணமும்
    அவருடைய உள்ளத்தில் இராது.
    ஆனால், கள்ளமின்றி அவரால்
    விமரிசனம் செய்யப்படுகிற மனிதர்
    அவருக்கு விரோதியாக மாறக்
    கூடிய நிலைகூட ஏற்படலாம்.
    அப்போதும், கோபித்துக்
    கொண்டவரை அவர் விரோதியாக
    நினைக்கமாட்டார்!
    திரு. ஏ.எல். சீனிவாசனுடன்
    'விளையாட்டாகப் பேசினோம்!
    அது ஒரு வேடிக்கை தானே! அதிலென்ன விபரீதம் வந்து விடும்'
    என்ற வெள்ளை மனம் படைத்தவர் அவர். எனக்கு அருமை
    நண்பர்.
    "என்னைக் கதாநாயகனாகப் போட்டு நீங்க இந்தப் படம்
    எடுக்கறதிலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஆனா, படம் வேகமாக
    வளரணும் என்றால், கதாநாயகி, வேடத்திற்கு விளம்பரமான
    பெரிய நடிகையரைப் போட்டால் சரிவராது. கால்ஷீட்
    'ப்ராப்ளம்' வரும். நான் கொடுக்கற கால்ஷீட்டுகளை நீங்க
    வீணாக்காமல் பயன்படுத்திக்கிட்டாதான் படம் வளர முடியும்”
    என்று சொன்னேன்.
    "அப்படியே செய்யறேன். முதல்லே கதாநாயகி வேஷத்துக்கு
    யாரைப் போடலாம்? சொல்லுங்க! புதுமுகமே போடலாம்னாலும்
    போடறேன்" என்றார் அவர்.
    இயக்குநர் சொன்ன புது முகம்!
    அந்தப் படத்தின் இயக்குநரான திரு.ப. நீலகண்டன் அவர்கள்,
    "தாராளமா புதுமுகத்தையே போடலாம்” என்றார்.

    திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
    "நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 ) புத்தகத்திலிருந்து நாம் சில பதிவுகளை பதிவிட்டு வருகிறோம் இப்பதிவுகள் அனைவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் இருக்கும் அன்பர்கள் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் முழுமையாக இப்பதிவை உங்கள் கண் முன்னே நிறுத்த முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகையால் திரு டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறான "நான் ஏன் பிறந்தேன்" என்ற புத்தகத்தை திரு டாக்டர் புரட்சித் தலைவரின் ஆசையோடு வாங்கி பயனடையுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். ...... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •