Page 373 of 402 FirstFirst ... 273323363371372373374375383 ... LastLast
Results 3,721 to 3,730 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3721
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஆம்.சார்.மேற் சொன்ன பதிவில் நான் கூறியது 100% முற்றிலும் உண்மை.எங்குமே என் கற்பனை கிடையாது.அக்காலத்தை இப்போது நினைத்துப் பார்த்தால், என் மனதில் ஒரு நோஸ்டால்ஜியா(சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை) உணர்வு தோன்றுகிறது.தலைவர் படங்களை ரசித்தது, தலைவர் உயிருடன் இருந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தது, ரேடியோவில் ஞாயிறு மதியம் ' நீங்கள் கேட்டவை' நிகழ்ச்சியில் முதல் பாடலாக 'ஆடலுடன் பாடலைக் கேட்டு, அழகிய தமிழ் மகள் இவள், போன்ற பாடல்கள் வருமா என ஏங்கியது போன்றவை...... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3722
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் ரசிகர்கள் பெயரைக்குறிப்பிடுவார்கள்.எல்லோரும் தலைவர் பாட்டை விரும்பி கேட்டவர் எண்ணிக்கையை கேட்டுக் கொண்டு பகிர்ந்து கொள்வார்கள்... Thanks...

  4. #3723
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மனிதாபிமானம், தாய்ப்பற்று, தேசப்பற்று, கண்ணியம், இவையெல்லாம் யாரிடம் இருக்கிறதோ, அவர்களெல்லாம் எம்ஜிஆர் ரசிகர்களே..... Thanks...

  5. #3724
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பானவரே! எனக்கும் இதேப்போல் நிகழ்வு ஒன்று என் வாழ்க்கையில் நடந்து.எனக்கு அப்போது 22வயது,என் எதிர் வீட்டில் 62 வயது நிறைந்த B& C மில்லில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்,குடும்பமே காங்கிரஸ் குடும்பம். எம்.ஜி. ஆர் படங்கள் ஒன்றுகூட பார்க்காதவர்கள். அவரை முதல் முறையாக பல்லாண்டு வாழ்க M.G.R.படத்துக்கு அழைத்துச்சென்றேன். அதைப்பார்த்த அவர், M.G.R.ரின்,அழகையும்,சுறுசுறுப்பையும்,பாடல் காட்சிகளையும்,சண்டைக் காட்சிகளையும்,பார்த்துவிட்டு
    அன்றிலிருந்து 36M.G.R. படங்களைப்பார்த்தார்.M.G.R.வெறியராகவே மாறிவிட்டார்....... Thanks...

  6. #3725
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எனக்கு தெரிந்து மற்றொரு நடிகரின் ரசிகராக இருந்து எம்.ஜி.ஆரின் ரசிகராக பிற்பாடு மாறியவர்கள் ஏராளம்.ஆனால் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தன் உயிர் உள்ளவரை தலைவரின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள்.இதுதான் நிதர்சனமான உண்மை....... Thanks.........

  7. #3726
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கோடி கொடுத்தாலும் இடம் மாறமாட்டார்கள், இறக்கும்வரை.... Thanks...

  8. #3727
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டாடிய ஒரே பண்டிகை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை. அன்றைய தினம், கட்டுக் கட்டாக பணத்தை வைத்துக் கொண்டு, தன்னைக் காண வரும் அனைவருக்கும் தன் கைக்கு வரும் பணத்தைக் கொடுத்து மகிழ்வார்.

    ஒருமுறை பொங்கல் நாளில் ஏராளமான நரிக்குறவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களை காண, அவரது ராமாவரம் தோட்டத்துக்கு வந்தனர். எம்.ஜி.ஆர் அவர்களை கண்டதும் உற்சாகக் கூச்சலிட்டனர். அவர் களை அருகே வருமாறு அழைத்த எம்.ஜி.ஆர்., அவர்கள் கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் பணம் கொடுத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள், அவர் எவ்வளவோ தடுத்தும் அவரது காலில் விழுந்து வணங்கினர்.

    நரிக்குறவர் இன மக்களை எந்தவித பேதமும் இல்லாமல் எம்.ஜி.ஆர். அவர்கள் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களது குழந்தைகளை வாங்கிக் கொஞ்சினார். சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் தங்கள் மீது அவர் காட்டிய பாசத்தையும் அன்பையும் பார்த்து வந்தவர்கள் கண்கலங்கினர்.

    வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆர் அவர்களை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்துவிட் டது. இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரண மாகக் கூறினார். இதன் தொடர்ச்சி யாக மறுநாள் நடந்ததுதான் வேடிக்கை.

    முதல்நாள் எம்.ஜி.ஆர் அவர்களை பார்த்துவிட்டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். படப்பிடிப்புக்கு கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல்நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், ‘‘உங்க தயவால என் சபதம் நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார். ‘‘என்ன சபதம்?’’ என்று எம்.ஜி.ஆர். அவர்கள் கேட்டதற்கு, ‘‘உங்களை யாரும் தொடமுடியாதுன்னு எங்க கூட்டத்தினர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.

    அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., அவர்கள் ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு புறப்பட்டார்...... Thanks...

  9. #3728
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இசை வந்த திசை நோக்கி !

    திருச்செந்தூர் ,பெரியதாழை, பகுதியில் வசிக்கக்கூடிய, அருமைச்சகோதரர்,
    ஆர் எஸ் கணேச பாண்டியன் அவர்கள், கடந்த 2 நாட்களுக்கு முன்பாக, திருச்செந்தூரில் இருந்து, தன்னுடைய மனைவிக்கு , சிகிச்சை பெற்றிட அரசு அனுமதி பெற்று, காரில் பயணித்து,
    மதுரை நகருக்கு வந்தார்கள்

    ஓரிடத்தில், சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு, காலைச் சிற்றுண்டி
    அருந்தி கொண்டிருந்த வேளையிலே, அருகிலிருந்த தோப்பில் இருந்து, தொடர்ந்து எம்ஜிஆர் பாடல்கள், ஒலித்துக் கொண்டே, இருக்கின்றன. ஆனால் , ஆளரவம் எதுவும் தட்டுப்படவில்லை .

    எனவே, எம்ஜிஆர் பக்தனான அண்ணன் அவர்களும், அந்த திசையை நோக்கி, நடந்து சென்று பார்த்த பொழுது,
    மிகவும் வயதான நபர் ஒருவர்,
    எம்ஜிஆர் பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

    அந்த நபரிடம், இவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, மருத்துவமனைக்குச் செல்லும் அவசரத்திலும், அவருடைய எம்ஜிஆர் பற்றினை, வியந்து போற்றி, ஒரு சிறு பேட்டி எடுத்திருக்கிறார்.
    அந்த பேட்டி தான் இது....... Thanks...

  10. #3729
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மற்றவர் துயர் கண்டு இரங்குபவன் மனிதன்

    மற்றவர் துயர் கண்டு உதவநினைப்பன் வள்ளல்

    மற்றவர் துயர் நீக்குபவன் கடவுள்

    இந்த மூன்றும் இணைந்தது M G R என்ற மூன்று எழுத்தில்

    வாழ்க எம்ஜிஆர் புகழ்... Thanks...

  11. #3730
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    97 வயது ரசிகர். தலைவர் தான் என் தெய்வம் என்கிறார். இவரைப் போல் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் நம் தலைவர்........ Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •