-
26th April 2020, 08:49 PM
#3711
Junior Member
Diamond Hubber
அருமை சகோதரர் திரு லோகநாதன் அவர்கள் எம்மை ஊக்கப்படுத்தும் பொருட்டு கொஞ்சம் அதிகமாக பாராட்டு தெரிவிப்பதாக கருதுகிறேன். நீங்கள் படைத்த 27000+ பதிவுகள், மற்றும் சகோதரர் திரு வினோத் அவர்கள் கண்டிருக்கும் பதிவுகள் முன்னால் இது நிரம்ப சாதாரணம். நம் கலைவேந்தன் மக்கள் திலகம் சாதனை, சரித்திரங்களை இயன்ற வரையில் பதிவு செய்ய வேண்டுமென்பதே நம் முக்கிய லட்சியம். சிறு தொண்டு...அதை நோக்கி நாம் பயணிக்கும்பொழுது உங்கள் எல்லோரின் ஆசியும், நமது மற்ற திரி உறுப்பினர்கள் தக்க ஒத்துழைப்பு அளித்து இங்கு பதிவுகள் இட்டால் அதுவே நம் எதிர்பார்ப்பாகும், நன்றி...வணக்கம்...
-
26th April 2020 08:49 PM
# ADS
Circuit advertisement
-
26th April 2020, 08:51 PM
#3712
Junior Member
Diamond Hubber
"தர்மம் ஒருவருடைய இல்லத்திலிருந்து தான் புறப்படுகிறது"
எம்..ஜி.ஆர். சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‘நாடோடி மன்னன்’எடுத்துக் கொண்டிருந்த 1957 காலகட்டம் அது. அந்த சமயத்தில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலிருந்து செல்வராஜ் என்ற ஓர் இளைஞர் – எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் – அவரை நேரில் பார்த்து பேசி மகிழவேண்டும் என்று ஆவல் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டு வந்தார். எம்.ஜி.ஆரின் ‘தாய் வீடு’ இல்லம் அமைந்திருந்த ‘லாயிட்ஸ்’ ரோட்டில் (தற்போதைய அவ்வை சண்முகம் சாலை) அவர் வீட்டின் எதிரே நடைபாதையில், தினமும் நின்று கொண்டு எம்.ஜி.ஆர். முகத்தைக் காண ‘தவம்’ இருந்தார்.
எம்.ஜி.ஆர். வீட்டைவிட்டுப் புறப்படும்போதும், திரும்பி வீட்டிற்கு வரும்போதும் கார் கதவின் கண்ணாடி முழுவதுமாக ஏற்றப்பட்டிக்கும். இதனால் அவர் முகத்தைச் சரியாகப் பார்க்க முடியாமல் செல்வராஜ் தவித்தார். உள்ளே இருந்தபடி தினமும் அவரைக் கவனித்த எம்.ஜி.ஆர்., ஒருநாள் காரை அவர் அருகில் நிறுத்தச் செய்து கதவின் கண்ணாடியை இறக்கி அவரைப் பார்த்துக் கேட்டார்:-
எம்.ஜி.ஆர்:- நீ யாரு? தினமும் ஏன் இங்கேயே நின்னுகிட்டிருக்கே? உனக்கு என்ன வேணும்?
செல்வராஜ்:- (கும்பிட்டு) என் தெய்வமே! நான் உங்கள் பக்தன். உங்களைத் தரிசிக்கிறதுக்காக குமாரபாளையத்தில் இருந்து வந்து தினமும் இங்கே தவம் இருக்கிறேன்.
இன்னிக்குத்தான் உங்களைப் பார்க்கிற பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
எம்.ஜி.ஆர்:- சரி. கார்ல உட்காரு என்று கூறி முன் கதவை திறந்து விட்டார். அவ்வளவுதான். பக்தர் செல்வராஜ் உள்ளே பாய்ந்து உட்கார்ந்து விட்டார்.
எம்.ஜி.ஆரின் கார் கோடம்பாக்கம் வாஹினி ஸ்டூடியோவிற்குள் நுழைந்து, மேக்-அப் அறைகளுக்கு அருகில் நின்றது. எம்.ஜி.ஆரோடு சேர்ந்து செல்வராஜூம் காரிலிருந்து இறங்கி வேரறுந்த மரம் போல ‘தடால்’ என்று நெடுஞ்சாண் கிடையாக, அவர் காலடியில் குப்புற விழுந்தவர் எழுந்திருக்கவே இல்லை. வேறு வழியின்றி எம்.ஜி.ஆர். குனிந்து அவரைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினார். கள்ளங்கபடம் இல்லாத அந்த அப்பாவியின் கண்களிலிருந்து கங்கை கரை புரண்டது! அதைக்கண்ட எம்.ஜி.ஆர். இதயம் இளகிப்போய் தன் அன்புக்கரங்களால் அவர் கண்ணீரைத் துடைத்து விட்டு…
எம்.ஜி.ஆர்:- உன் பேரென்ன?
செல்வராஜ்:- செல்வராஜ்.
எம்.ஜி.ஆர். செல்வராஜின் முகத்தை ஒரு கணம் உற்று நோக்கி அதில் ஒருவித வெகுளித்தனமும், கோமாளித்தனமும் நிறைந்திருப்பதைக் கவனித்து:-
எம்.ஜி.ஆர்:- உனக்கு நடிக்க வருமா?
செல்வராஜ்:- நல்லா நடிப்பேண்ணே. ஊர்ல பள்ளிக்கூட நாடகத்துல நிறைய நடிச்சிருக்கேன்.
எம்.ஜி.ஆர்:- என்ன வேஷம் போடுவே?
செல்வராஜ்:- காமெடி வேஷம் போட்டு கற்பனையா பேசி எல்லோரையும் சிரிக்க வைப்பேன்.
எம்.ஜி.ஆர்:- (புன்னகையுடன்) அப்படியா? சரி. நீ இங்கேயே இரு. தினமும் காலையில் வந்து ஷ¨ட்டிங்ல கலந்துக்க. உன்னை கம்பனியில் கவனிச்சுக்குவாங்க. செல்வராஜ்:- ரொம்ப நன்றிங்கண்ணே. எம்.ஜி.ஆர்:- (உதவித் தயாரிப்பு நிர்வாகியைக் கூப்பிட்டு) இந்தப் பையனுக்கு மேக்-அப் போட்டு நம்ம கம்பெனி நடிகர் குழுவோட சேத்துவச்சிக்க. தினமும் அவனுக்குச் சாப்பாடு மத்த சம்பள விஷயத்தையும் கவனிச்சிக்க. பாவம்! வெளியூர்லேருந்து வந்திருக்கான்.
நிர்வாகி:- சரிங்கண்ணே. நான் பார்த்துக்குறேன்.
எங்கிருந்தோ வந்த இளைஞர் செல்வராஜ் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நடிகர் குழுவில் இடம் பெற்று நாளடைவில் அவருடைய இதயத்திலும் இடம் பெறலானார். ஒருநாள் எம்.ஜி.ஆர். அவரை அழைத்து:-
எம்.ஜி.ஆர்:- நீ தமிழ் நல்லா பிழை இல்லாம எழுதுவியா?
செல்வராஜ்:- எழுதுவேண்ணே.
எம்.ஜி.ஆர்:- எங்கே? ஏதாவது எழுதிக்காட்டு என்று உதவி இயக்குநரிடமிருந்து பேப்பர் பேடை வாங்கிக்கொடுக்க, செல்வராஜ் அதில்,
‘என் தெய்வம் எம்.ஜி.ஆர். வாழ்க’
‘வள்ளல் எம்.ஜி.ஆர். வாழ்க’
‘என்னை ஆதரித்து அன்பு காட்டிய அண்ணன் எம்.ஜி.ஆர். வாழ்க! வாழ்க! நீடூழி வாழ்க!’என்று எழுதிக்காட்ட அதைப்பார்த்த எம்.ஜி.ஆர். வாய்விட்டுச் சிரித்து:-
எம்.ஜி.ஆர்:- ஏம்பா? ஏதாவது எழுதுன்னு சொன்னா எனக்கு வாழ்த்து பாடி இருக்கியே. பரவாயில்லை. குண்டு குண்டா கையெழுத்து அழகா இருக்கு. (உதவி இயக்குநரிடம்) இவனை உன்னோட வச்சிக்கிட்டு, வசனங்களை காப்பி எடுக்கிறது, கிளாப் அடிக்கிறது, கன்டினியூட்டி எழுதுறது, எல்லா வேலையும் கத்துக்கொடு. அதோடகூட சின்னச்சின்ன நகைச்சுவை வேஷங்கள்ளேயும் மேக்கப் போட்டு நடிக்க வைச்சிப்பார்த்துக்க.
உதவி டைரக்டர்:- நல்லதுங்கண்ணே!
அவ்வளவுதான். அடுத்த நாளிலிருந்து குமாரபாளையம் செல்வராஜ் கோடம்பாக்கம் வாஹினி ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ‘நாடோடி மன்னன்’படத்தில் டைரக்டர் எம்.ஜி.ஆரின் குழுவில் இடம் பெற்று மாதச் சம்பளத்தில் ‘அஸிஸ்டெண்ட் டைரக்டர்’ ஆகிவிட்டார். செல்வராஜின் இடுப்பில் கட்டியிருந்த கைத்தறி நாலுமுழ வேஷ்டிக்குப் பதிலாக இப்பொழுது முழுக்கால் ‘பேண்ட்’ சட்டை ஏறிவிட்டது. முகமும் மாறிவிட்டது.
முற்காலத்தில் தமிழில் ‘அடைப்பக்காரன்’ என்ற ஒரு சொல் உண்டு. பெரும் செல்வந்தர்கள், மிட்டா மிராசுதாரர்கள், ஜமீன்தார்களின் பக்கத்தில் வெற்றிலைப் பெட்டி,
கைதுடைக்கும் துணி முதலியவற்றை வைத்துக்கொண்டு நிற்கும் சிப்பந்திக்கு ‘அடைப்பக்காரன்’ என்று பெயர். அதைப்போல இந்த செல்வராஜ் உதவி இயக்குநர் மற்றும் நகைச்சுவை நடிகர் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்ட அந்தஸ்து நிலையில் எம்.ஜி.ஆரின் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாகி, அன்றாடம் ஸ்டூடியோவில், படப்பிடிப்பில் அவருக்கு உண்மையான உள்ளத்துடன் ஊழியம் புரிந்தார். எம்.ஜி.ஆர். தனிப்பட்ட முறையில் தனக்காக வீட்டிலிருந்து கொண்டு வரும் பணம், அவருடைய மூக்குக்கண்ணாடி மற்றும் முக்கிய பொருள்களை செல்வராஜிடம்தான் கொடுத்து வைத்திருப்பார்.
வாழ்க்கையில், உண்மையான அன்பு உள்ள ஒருவரிடத்தில் அதிக நம்பிக்கை இருக்கும். அதைப்போல உண்மையான நம்பிக்கை உள்ள ஒருவரிடத்தில் அதிக அன்பும் இருக்கும். அன்பும், நம்பிக்கையும் உடன் பிறந்தவை! இது அனுபவபூர்வமான உண்மை!
அந்த அளவிற்கு எம்.ஜி.ஆரின் பாசத்திற்குப் பாத்திரமான உதவி இயக்குநர் மற்றும் நகைச்சுவை நடிகர்தான் என் அன்பிற்கினிய அருமைத்தம்பி ‘இடிச்சபுளி’ செல்வராஜ்.
ஒரு படத்தில் ‘இடிச்சபுளி’ என்று பெயர் கொண்ட நகைச்சுவை வேடத்தில் நடித்ததை வைத்து அவருக்கு ‘இடிச்சபுளி’ என்ற ஒட்டுப்பெயர் உண்டானது.
பின்நாட்களில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த தம்பி ‘பாண்டு’, செல்வராஜின் சகோதரர் ஆவார். அன்றைய நாட்களில் எம்.ஜி.ஆருக்கு நான் நிறைய படங்கள் எழுதி அவற்றின் படப்பிடிப்பு சமயத்தில், அவரைப் பார்ப்பதற்காக அடிக்கடி செல்வராஜ் வருவார். அப்பொழுது அவரை எம்.ஜி.ஆர். எனக்கு அறிமுகம் செய்வித்து, நான் எழுதும் படங்களில் வேஷம் கொடுக்கச் சொல்வார். அதிலிருந்துதான் செல்வராஜூக்கு என்னுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. எனது தமிழாக்கப்படங்களில் குரல் கொடுக்கும் குழுவிலும் இடம் பெற்று, என்னிடம் அதிக அன்பு செலுத்தினார்.
எனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் மறக்காமல் நினைவு வைத்திருந்து வாழ்த்துக்கடிதம் அனுப்புவதுடன், தொலைபேசி வாயிலாகவும் என்னை அழைத்து வாழ்த்து தெரிவிப்பார். நேரிலும் வந்து சந்திப்பார். அத்தகைய அன்பும், பண்பும் உள்ளவர் அவர்.
எம்.ஜி.ஆர். 1972-ல் தனியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியபோதும், 1977-ல் தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஆனபோதும் செல்வராஜ் அவருடன் தொடர்பு கொண்டிருந்தார். அதன் மூலம் தியாகராயநகர், சத்தியமூர்த்தி நகரில் வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் செல்வராஜூக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டு, தன் மனைவி மக்களுடன் வாழ்ந்து வந்தார்.
எம்.ஜி.ஆரின் இறுதிக்கால கட்டத்தில் நோய்வாய்ப்பட்டு 1987-ல் சரியாக – தெளிவாகப் பேச முடியாத நிலையில் இருந்தார். அப்பொழுது, தன்னைப்பார்க்க வருவோருக்கெல்லாம் – அவர்கள் கேட்டும், கேட்காமலும், கல்யாணம் முதலிய நல்ல காரியங்களுக்குப் பொருளுதவி செய்து வந்தார். வாழ்க்கையில் வசதி குறைவானவர்களுடன், வசதி நிறைந்திருந்த நடிகர்கள் மற்றும் திரைப்படக்கலைஞர்கள் பலரும் கூட பணமாகவும், மற்றும் தங்க ஆபரணங்களாகவும் பெற்றுப் பயன் அடைந்தனர். 1987 டிசம்பர் மாதம் 23-வாழ்நாள்ல நான் எத்தனையோ பேருக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்கேன். ஆனா உன் ஒருத்தனுக்கு மட்டும் நான் கொடுக்கிறதா சொல்லி கொடுக்காம கடன்பட்டுட்டேன். ஆனா, அது என் தவறு இல்லை. நீதான் வந்து வாங்கிக்காம இருந்திட்டே. பரவாயில்லை. அடுத்த ஜென்மத்துல உனக்கு நான் பட்ட கடனை அடைச்சிடுவேன். கவலைப்படாதே… “
எம்.ஜி.ஆர். தமிழக முதல்-அமைச்சர் ஆன பிறகும் சபாபதி அவரை விட்டுப் பிரியாமல், முன்பு போல அன்றாட வழக்கப்படி அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார். சென்னையை விட்டு எம்.ஜி.ஆர். வெளியூர் முகாம் செல்லும் போதெல்லாம், அவர் கூடவே சென்று அம்மாவின் அறிவுரைப்படி அவரைத் தன் கண் போலக் காத்துக் கவனித்துக்கொள்வார்.
ஒருநாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். வெளியூர் சென்றுவிட்டு தனது காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவருக்கு முன்னாலும், பின்னாலும் உதவியாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் காரில் வந்து கொண்டிருந்தனர். அவர்களை எல்லாம் மிஞ்சிய ஆரம்பகால எம்.ஜி.ஆரின் பாதுகாவலரான அருமைத்தம்பி சபாபதி ஒரு ‘ஜீப்’ வண்டியில் வந்து கொண்டிருந்தார். குறிப்பிட்ட அந்த ஜீப் விதிவசமாக கோயம்புத்தூரில் விபத்துக்குள்ளாகி, அந்த இடத்திலேயே சபாபதி அகால மரணம் அடைய நேரிட்டு விட்டது. இதுநாள் வரையில், இமைகள் கண்களைக் காப்பதுபோல எந்த பிள்ளை தன்னைக் கவனித்துக் காத்து வந்ததோ – அந்த சபாபதி இப்போது இறந்து கண் மூடிக்கிடந்ததைக்கண்டு எம்.ஜி.ஆர். கதறி அழுதார். அந்த அழுகையை அதற்கு முன்பு தன் வாழ்நாளில் அவர் அழுததே இல்லை.
எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை
இந்தக் ‘கொடுக்கும் குணம்’, ‘வள்ளல் தன்மை’ பெயரும், புகழும், வசதிகளும் பெற்று வாழ்ந்த பிற்காலத்தில் மட்டும் வந்தது அல்ல. அதற்கு முற்காலத்திலும் வசதிகள் அதிகம் இல்லாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்த அந்த ஆரம்ப நாட்களிலும், எம்.ஜி.ஆரிடம் அதே வள்ளல் தன்மை இருந்ததை பல பழைய மூத்த கலைஞர்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். 10 ரூபாய் என்பது ஒரு பெரிய தொகையாக மதிக்கப்பட்ட அந்தக்காலத்தில், அவர் சில 10 ரூபாய் நோட்டுகளை மடித்து தனது முழுக்கைச் சட்டையின் கைப்பகுதியைச் சுருட்டி அதற்குள் வைத்திருப்பார். நலிந்தவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே, அவர்கள் கேட்காமலேயே பத்து, இருபது என்று கைக்கு வந்ததை அவர்களுக்குக் கொடுத்து உதவுவதை வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தார்.
* தர்மத்தின் பொருட்டு தன் தலையைக்கூட கொடுக்கத் தயாரான குமணன்.
* வேடனிடமிருந்து அவன் விரட்டி வந்த கள்ளங்கபடம் இல்லாத ஒரு புறாவின் உயிரைக் காப்பதற்காக அதை தராசின் ஒரு தட்டில் வைத்து அதற்குச் சமமாகத் தனது சதையை அறுத்து நிறுத்துக்கொடுத்த சோழப் பெருமன்னன் ‘சிபிச்சக்ரவர்த்தி!’
* படர்வதற்குத் தக்கக் கொம்பு எதுவும் இன்றி தரையில் சுருண்டு கிடந்த முல்லைக் கொடியை எடுத்து தனது தேரில் படரவிட்டு, அதன் அழகைக்கண்டு மகிழ்ந்து கால்நடையாக நடந்து அரண்மனைக்குத் திரும்பிய கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ‘பாரிவேந்தன்!’
* தன் ஆரோக்கியத்திற்கும், ஆயுள் விருத்திக்காகவும் வேடுவர்கள் கொண்டு வந்து கொடுத்த அரிய கருநெல்லிக்கனியை தமிழ் மூதாட்டி அவ்வை பிராட்டிக்கு அளித்து அகம் மகிழ்ந்த வள்ளல் அதியமான்! * மழையிலும், குளிரிலும் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு மயிலைக்கண்டு மனம் இரங்கி, உடனே தனது தங்க இழை வைத்து நெய்யப்பட்ட அங்க வஸ்திரத்தை எடுத்து அந்தக் கோல மயிலின் மீது போர்த்தி அதன் குளிரைத் தவிர்த்த கோமான் ‘பேகன்!’ ‘கவிச்சக்ரவர்த்தி’ கம்பனை ஆதரித்து, அவன் தமிழை வளர்த்த சடையப்ப வள்ளல்! * ஊர்தோறும் அன்னச்சத்திரங்கள் நிறுவிய கருணை வள்ளல் காஞ்சீபுரம் பச்சையப்ப முதலியார்!
* இறந்து அடக்கமான பிறகும்கூட வெளியே தனது விரலை நீட்டி அதில் இருந்த கணையாழியைக் கழற்றிக் கொள்ளச் செய்த செத்தும் கொடை கொடுத்த ‘சீதக்காதி’ போன்ற வள்ளல் பெருமான்களின் இனத்தைச் சார்ந்து, அவர்களின் குணத்தைக் கொண்டிருந்தவர் எம்.ஜி.ஆர். என்பது அனைவராலும் அறியப்பட்ட ஓர் உண்மையே! அதனால்தான் ‘திருமுருக கிருபானந்த வாரியார்’ அவருக்கு ‘பொன்மனச்செம்மல்’ என்று புகழாரம் சூட்டினார்.
‘சேரிட்டி பிகின்ஸ் அட் ஹோம்’ என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. அதற்கு, ‘தர்மம் ஒருவருடைய இல்லத்தில் இருந்துதான் புறப்படுகிறது’ என்று பொருள். அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் – வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர். என்றால் அது சற்றும் மிகை அல்ல என்பேன்.
"படித்ததில் பிடித்தது"
MG.Nagarajan 19 April 2020 10:32 AM
Thanks for: Kalai vithagar Aaroordas
சினிமாவின் மறுபக்கம்........ Thanks.........
-
26th April 2020, 08:52 PM
#3713
Junior Member
Diamond Hubber
MGR-ன் மெய்க்காப்பாளர் கே பி ராமகிருஷ்ணன் பற்றிய ஒரு முன்னோட்டம் - MGR's bodyguard K P Ramakrishnan....
....... Thanks...
-
26th April 2020, 08:53 PM
#3714
Junior Member
Diamond Hubber
-
26th April 2020, 08:55 PM
#3715
Junior Member
Diamond Hubber
-
26th April 2020, 08:56 PM
#3716
Junior Member
Diamond Hubber
புரட்சிதலைவர் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் 300 ரூபாய், 7 ஆவது படத்தில் தான் 1000 சம்பளம் வாங்கினார்.
45 ஆவது படத்தில் 1 லட்சம், கடைசி படத்திற்க்கு 11 லட்சம் பெற்றார்...
அவர் வாங்கிய சம்பளத்தில் தான் அவரது அலுவலகத்தில், தோட்டத்தில் உழைத்த அனைவருக்கும் சாப்பாடு. தினமும் 100 பேருக்கு சமைக்கப்படும்,
அதுவும் அவர் முதல்வர் ஆன பின் அலுவலக்தில் இருந்த காரியதரிசிகள், காவலர்கள் என்று எல்லோருக்கும் சேர்த்தே சமைக்கப்படும்...
அனைவரும் மூன்று வேளை சாப்பாடு, சாப்பாட்டை சுற்றி 7 வகை கறியிருக்கும்..
அவர் என்ன உண்ணுகிறாரோ அதுவே அனைவருக்கும்...
கோடி கோடியாக சம்பாதித்து தன் குடும்பத்திற்க்கு சொத்து மேல் சொத்து குவித்து தொண்டர்களிடம் உண்டியல் ஏந்தி கட்சி நடத்தும் சிலருக்கு முன் புரட்சித்தலைவர் "எட்டாவது வள்ளல்"... Thanks...
-
26th April 2020, 08:57 PM
#3717
Junior Member
Diamond Hubber
#என் #பிள்ளைகள்...!!!
முதல்வர் பதவிக்கு வந்தபின்,
"தன் இல்லம்... ராமாவரம் தோட்டம் தான்... அது போல தனது அலுவலகம் ...
எம்ஜிஆர் புரொடக்ஷன்ஸ் இருந்த அலுவலகம் தான் " என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்...
"தோட்டத்து மேசை நாற்காலிகளெல்லாம் வெள்ளிவிழாவை நெருங்கிக்கொண்டிருந்தன... அவைகளை மாற்றலாமா ? என உதவியாளர் கேட்டதற்கு ... '#இவை #என் #பிள்ளைகள் #போல...#அதனால #இதுவேபோதும்'
என்று சொல்லிவிட்டார்...
அதே போல தனது வீட்டு முன் ஹாலில் உள்ள நாற்காலி மேசையை குண்டடி பட்டபோதே மாற்றப் போனார்கள்...புரட்சித்தலைவர் தடுத்து "#வேணாம் #என்ரத்தம்பட்ட #இந்த #மேசைநாற்காலி #இருக்கட்டும்...#பணம் #நல்லவர்களையும் #எப்படி #மாற்றிவிடுகிறது என்பதற்கு இதெல்லாம் தான் எனக்கு நினைவுபடுத்திக்கொண்டிருக்கும்" என்றார்...
இப்படி ...! உயிரற்ற
பொருட்களிடமும் அன்பு காட்டியவர் பொன்மனச்செம்மல்........... Thanks.........
-
26th April 2020, 09:06 PM
#3718
Junior Member
Diamond Hubber
1978 மார்ச் மாதம் ஒருநாள் பட தயாரிப்பாளர் ஜி.கே.தர்மராஜ் அவருடன் ஒளிப்பதிவாளர் மாருதிராவ் இருவரும் கவி வாலி அவர்கள் வீட்டுக்கு வந்தனர்.
ஒரு முக்கிய புள்ளி படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்துக்கு கதை வசனம் பாடல்கள் நீங்கள் எழுத வேண்டும் இதை அவரே எங்களிடம் சொல்லி உங்களை சந்திக்க சொன்னார் என்று சொல்ல.
யார் அந்த வி.ஐ.பி. என்று வாலி அவர்கள் கேட்க அவர்தான் தமிழக முதல்வர் எம்ஜியார் என்று சொல்ல தூக்கிவாரி போட்டது வாலிக்கு.
என்ன எம்ஜியார் மீண்டும் படத்தில் நடிப்பதா என்று சந்தேகம் கொண்டு மறுநாள் காலை முதல்வரை பார்க்க அவரும் ஆமாம் என்று சொல்ல...
அது எப்படி சாத்தியம் என்று வாலி யோசிக்க படம் பெயர் உன்னை விடமாட்டேன் என்று முடிவாக....ஒரு சில நாட்களில் மாநில முதல்வர் படங்களில் நடிப்பது தவறல்ல என்று பிரதமர் விளக்கம் பத்திரிகையில் வர படம் சூடு பிடித்தது.
கதை 10 நாட்களில் தயார் ஆக தலைவருடன் சென்னையில் இருந்து மதுரை வரை விமானத்தில் போய் கொண்டே வாலி கதை சொல்ல தலைவர் அருமை என்று ஒப்புதல் தர.
ஏப்ரல் 14 அன்று பட துவக்க விழாவில் முதலில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்த கவர்னர் பட்வாரி அவர்கள் பின்னர் வராமல் பட பூஜை பிரசாத் அரங்கில் கோலாகலமாக நடந்தது.
இயக்குனர் ஆக கே.சங்கர், தயாரிப்பு ஜி.கே.தர்மராஜ்....இசை இளையராஜா என்று முடிவாகி விழா முடிந்து வாலி எழுதிய பாடல் டி.எம்.எஸ்.அவர்கள் பாட தலைவர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது..
வழக்கம் போல பாடலில் ஏதோ ஒன்று குறைவதாக தலைவர் சொல்ல மீண்டும் டி.எம்.எஸ்..பாடி அதுவும் சரிவராமல் பின்பு ஒருநாள் பாடகர் மாற்றி மலேசியா வாசுதேவன் பாடி அதை இளையராஜா அவர்கள் தலைவரிடம் போட்டு காட்ட....
அதுவும் திருப்தி அளிக்காமல் கடைசியில் தலைவர் பேசாமல் நீங்களே எனக்கு குரல் கொடுத்து பாடுங்கள் என்று சொல்ல உடனே ராஜா அது சரிவருமா ஐயா என்று கேட்க நீங்கள் எப்படிவேண்டுமானாலும் பாடுங்கள் அதற்கு ஏற்ப நடிப்பது என் பொறுப்பு என்று தலைவர் சொல்ல.
அதன் படி அந்த பாடல் பாட பட்டு ஒலிப்பதிவு செய்ய பட்டது...ஆனால் அன்று தமிழகம் எங்கும் பரபரப்பாக பேச பட்ட அந்த படம் ஒரு சில காரணங்களால் நின்று போனது..
அல்லது இளையராஜா அவர்கள் இசை அமைப்பில் தலைவர் தலைவர் நடித்த படம் வெளிவந்து இருக்கும்
படத்தில் பட துவக்க விழாவில் தலைவர் இளையராஜா மீசை முறுக்கி வைத்து இருப்பவர் தயாரிப்பாளர் தர்மராஜ் நடுவில் இருப்பவர் 1977 பொது தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆக சென்னை மயிலை தொகுதியில் போட்டி இட்ட திரு சித்திரமஹால் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்..
ஒரு தலைவர் படம் போச்சு.... நன்றி..
வாழ்க எம்ஜியார் புகழ்
நன்றி... உங்களில் ஒருவன் நெல்லை மணி ..நன்றி..தொடரும்........ Thanks...
-
26th April 2020, 09:08 PM
#3719
Junior Member
Diamond Hubber
#சிவாஜி #ரசிகனை #எம்ஜிஆர் #ரசிகனாக #மாற்றிய #என் #வரலாறு
பசுபதி பரசுராம் சார் அவர்களின் பதிவைப் பார்த்தவுடன் என் கல்லூரி கால நினைவு ஒன்று என் முன்னால் நிழலாடுகிறது.என்னுடன் கோவையில் கல்லூரியில் ஒரே வகுப்பில் ஒரே டெஸ்க், ஒரே ரூம் அதுமட்டுமின்றி ஊரும் ஒன்றே, அப்படிப்பட்ட நண்பனைப் பற்றிய நிகழ்வு.அப்போது ஹாஸ்டலில் இரு குழுக்கள்.ஆம்.நீங்கள் நினைத்ததுதான்.ஒன்று எம்.ஜி.ஆர் குரூப் மற்றொன்று சிவாஜி குரூப்.நான் எம்.ஜி.ஆர் குழு.நாங்கள் அனைவரும் எப்போதும் குழுவாகவே தலைவர் ரிலீஸ் படங்களுக்கு செல்வோம்.
மேலே சொன்ன என் ஊர் நண்பன் பக்கா சிவாஜி ரசிகன்.எனக்கு தெரிந்து அதுவரை எம்.ஜிஆர் படங்களே பார்த்தது இல்லைஅவனுக்கும் எனக்கும் அடிக்கடி எம்.ஜிிஆர்-சிவாஜி சண்டை வரும்.இங்கே ஒன்றை நேர்மையாக குறிப்பிட வேண்டும்.நான் தலைவர் ரசிகனாக இருந்தாலும் சிவாஜி படங்களையும் பார்ப்பவன். நான் என் நண்பனோடு சிவாஜி படங்களுக்கு செல்வேன்.ஆனால் என் நண்பன் எங்கள் குழுவோடு எம்.ஜி.ஆர் படங்களுக்கு வரமாட்டான்.ஆனால் நான் அவ்வப்போது எம்.ஜி.ஆர் பற்றிய தகவல்களையும் தெரிவிப்பேன்.கல்லூரியில் முதல் வருடம் இவ்வாறே கழிந்தது.இரண்டாம் வருடம் ஆரம்பம். எங்கள் கல்லூரி இருந்த ஊரில் ஒரு தியேட்டர் இருந்தது.அதில் பழைய படங்கள் தான் திரையிடப்படும்.(ரீலீஸ் படங்கள் இல்லை- ரீலிஸாகி ஆறு மாதங்கள் கழித்து) அப்போது அந்த தியேட்டரில் ஆயிரத்தில் ஒருவன் படம் திரையிட்டார்கள்.நான் என் நண்பனிடம் ஒரு பந்தயம் வைத்தேன்.இந்த படத்திற்கு நாம் இருவரும் செல்வோம்.இந்த படம் உனக்கு பிடித்தால், என்னுடன் அடுத்த இரு எம்.ஜி.ஆர் படங்களுக்கு கட்டாயமாக என்னுடன் வரவேண்டும்.என் செலவில் அழைத்து செல்வேன்.அப்படி பிடிக்க வில்லையென்றால் நான் இனி உன்னுடன் சிவாஜி படங்களுக்கு வரமாட்டேன்.இதுதான் பந்தயம்.அவனும் தயக்கத்துடன் ஒத்துக்கொண்டான். என்னுடன் முதல் முதலாக எம்.ஜி.ஆர் படத்துக்கு வந்தான்.படம் ஓடும்போது நான் அவனையே கவனித்துக் கொண்டிருந்தேன்.(நான் ஏற்கனவே 5 தடவைகளுக்கு மேல் படத்தை பார்த்திருந்தேன்.) என் நண்பன் படத்தை நனறாக ரசிப்பது புரிந்தது.இந்த படத்தை எவர்தான் ரசிக்க மாட்டார்? பந்தயத்தின் படி நான் அடுத்த இரு தலைவர் படங்களுக்கு மிக மகிழ்ச்சியுடன் அழைத்துச் சென்றேன்.கல்லூரியின் மூன்றாவது வருடம் முடிவடைவதற்குள் என் நண்பன் எம்.ஜி.ஆர் படங்களை ரிலீஸ் நாளன்றே பார்க்க ஆசைப்படும் அளவுக்கு மாறிவிட்டான்.இதுதான் சிவாஜி ரசிகனை எம்.ஜி.ஆர் ரசிகனாக மாற்றிய வரலாறு.(பரவாயில்லையே தனி பதிவு போடும் அளவுக்கு விபரம் நீண்டு விட்டது.)....... Thanks mr. VN.,
-
26th April 2020, 09:09 PM
#3720
Junior Member
Diamond Hubber
சூப்பர் சார்.எனது வாழ்நாட்களில் பல நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
அக்காலத்தில் சிவாஜி ரசிகர்கள் எம் ஜி ஆர் படம் பார்க்கக்கூடாது என வெறி பிடித்து அலைந்தனர்........ Thanks GK.,
Bookmarks