Page 363 of 402 FirstFirst ... 263313353361362363364365373 ... LastLast
Results 3,621 to 3,630 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3621
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இது வேறு உலகம்!!
    --------------------------------
    பொதுவில் அனைவருக்குமே மகிழ்ச்சி தரும் பதிவுகளை இட்டாலும்--
    அடியேன் டேஸ்ட்டுக்கும் அவ்வப்போது பதிவுகள் இடுவேன்.
    அந்த வகையில் இன்று--
    மரணம் தந்த மயான அதிர்ச்சியை எம்.ஜி.ஆருக்கு இணையாக என் இதயத்தில் அப்பியது கண்ணதாசன்!!
    எந்தவிதமான பிற ஈடுபாடுகளும் அவனுக்கு இல்லாதிருந்தால் அவன் உலகின் ஒப்பற்றக் கவியாய் மிளிர்ந்திருப்பான் என்ற பலரின் வாதத்தை நான் பலமாக மறுப்பேன்!!
    நண்பர்கள்,,கட்சி ,,ஜாமீன் கையெழுத்து இப்படி ஏதும் இல்லாதிருந்தால் இந்தக் கவியிடமிருந்து உன்னதக் கவிதைகளே உருவாகியிருக்காது என்பதே என உரத்துச் சொல்வேன்!
    ஒருவேளை இவன் மேலை நாட்டில் பிறந்திருந்தால் உலகக் கவியாக உலா வந்திருக்கக் கூடும்!!
    குறைந்த பட்சம் வட இந்தியாவில் மலர்ந்திருந்தாலாவது,,காளிதாசனை இவன் வடிவில் நாம் கண்டிருக்கலாம்!!
    இவனது சிறப்பா--நமது விருந்தா என்னும் பட்டி மன்றத்தில் நம் ஆசையே வெல்வதால்-
    சிறுகூடற்பட்டியில் இவன் சிரித்து எழுந்ததே நமக்குப் போதும்?
    மக்கள் திலகம் என்ற அடைமொழி எம்.ஜி.ஆருக்கும்-
    கவியரசு என்றக் கட்டளை இவனுக்கும் கொடுக்காத சிறப்பையா வேறு விருதுகள் இவர்களுக்குக் கொடுக்கப் போகிறது??
    கண்ணதாசனைத் தம் கருத்தில்,,தம் கடைசிப் பயணம் வரை வைத்து மகிழ்ந்தவர்--
    எனது எழுத்துலக பிரமிப்பு சோ!!!
    சோ கண்ணதாசனை நேசித்த அளவு,,கவிஞரை அவர் குடுப்பத்தாரேக் கொண்டாடியிருப்பார்களா என்பது சந்தேகமே??
    இத்தனைக்கும்---
    இரண்டு பேரும் காட்டுத் தனமாக தாக்கிக் கொண்டவர்கள்!!
    திராவிட அரசியலை கவிஞர் கொண்டிருந்தபோது-
    திராவக அரசியல் அது என்று சொன்னவர் சோ?
    தேசியக் கட்சியில் பயணித்தபோதோ--
    கர்மவீரரைக் கருத்துல் கொண்டார் சோ என்றால்--
    காமராஜர் காலத்திலேயே,,அவருடன் பயணித்த கவிஞர் இந்திராவை ஏற்றுக் கொண்டார்?
    மாறுபட்ட கருத்துடைய இருவரையும்
    கூறுபட்ட விரோதம் எந்த காலத்திலும் அணைத்ததே இல்லை!! சொல்லப் போனால்--
    இக்கட்டான சமயங்களில் எல்லாம் சோவிடம் கருத்து கேட்டு,,அதன்படி நடப்பார் கவிஞர்?
    தமிழ் நாடு அரசு,,கவிஞருக்குக் கலைமாமணி விருதை வழங்கியபோது-
    சோவின் ஆலோசனையின் பேரில் அதை வாங்க மறுத்துவிட்டாராம் கண்ணதாசன்?
    பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் கொடுக்க வேண்டியதை இப்போதுக் கொடுப்பது விருதுக்குப் பெருமை. ஆனால் உங்களுக்கு அவமானம் என்று தடுத்தாராம் சோ??
    சோவும்,,கவிஞரும் குமுதம் வார இதழுக்காக சந்தித்துக் கொண்டபோது,,கவிஞரின் அரசியல் நையாண்டி சோவையே வியக்க வைத்திருக்கிறது?
    சாம்பிளுக்கு ஒன்றிரண்டு--
    சன்னியாசி,,சன்னியாசினியுடன் கூடியதால் பிறந்த குழந்தை---ஜன நாயகம்?
    தனிப்பட்ட தகுதிகள் தேவையில்லாத துறைகள்--சினிமா,,அரசியல்!! காரணம் இந்த இரண்டிலும் நான் இருந்திருக்கிறேன் என்று கவிஞர் சொல்ல--
    பத்திரிகையை விட்டுவிட்டீர்களே என்று தன்னையேக் குறிப்பிட்டு சோ கேட்க--
    அதைக் குறிப்பிடுவாய் இருந்தால் அதிலும் உங்களுக்கு முன்னர் நான் இருந்திருக்கிறேனே என்றாராம் கவிஞர்!!
    தங்கள் குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் இருவருக்கும் இடையே எத்தனை போட்டி?
    கவிஞர் சொன்னது--
    திருடனை போலீஸ் பிடித்தால்--சட்டம்!
    போலீசை திருடன் பிடித்தால்--ஜன நாயகம்???
    எண்ணங்கள் ஆயிரம் என்ற தலைப்பில் துக்ளக்கில் கவிஞரை தொடர்ந்து எழுத வைத்த சோ--
    கவிஞர் மீதான தம் அன்பை இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்--
    சோ எழுதிய அந்த நாலுவரிப் பாட்டு--
    வீடு வரை விஸ்கி
    வீதி வரை பஞ்சு!
    காடு வரை அரசியல்-
    கடைசி வரை சோ???
    என் சிறப்புக்களை உங்களுக்கு வைப்பதில் எவ்விதப் பயனும் இல்லை. முதற்கண் சிறப்பான விஷயமே என்னிடம் இல்லை?
    நான் எதில் அழிந்தேன் என்று சோ குறிப்பிட்டிருக்கும் இந்த நாலுவரியை உங்களுக்கு என் சொத்தாக நான் வைக்கிறேன் என்றாராம் கவிஞர்??
    வெள்ளை9 அறிக்கையென வாழ்ந்த இரு மேதைகளின் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று நான் பெருமைப் படுவேன். நீங்கள்???... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3622
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றைய தினமலரில் 25/4/2020
    உலகம் சுற்றும் வாலிபன் (1973) திரைப்பட விமர்சனம்......மறைந்தே 33 வருசமாச்சு...இன்னும் இவ்வளவு ஈர்ப்பா.....O god..... Thanks...

  4. #3623
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் பத்திரிக்கை
    பழையப்படத்திற்கு
    விமர்சனம் போடும்
    புதுமையும் புரட்சித்
    தலைவர் செத்தும்
    கொடுக்கும் சீதக்காதி யாக விளங்கும்
    அதிசயமும் நான்
    என் வாழ்நாளில்
    எப்போதும் கண்டது
    இல்லை. TRP ரேட்டுக்காக சன் டிவி
    தலைவர் படத்தைப்
    போட்டு தன்னை தக்க வைத்துகொள்ளும்ஆச்சரியமும்
    இப்போது நடக்கின்றது.......... Thanks...

  5. #3624
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "உலகம் சுற்றும் வாலிபன்" சாதனை படைத்த திரைக் காவியம் ! கொழும்பில் இரண்டு தியேட்டரில் 225 நாள் கடந்து ஓடியது !...Zia Abdul Razak... Thanks...

  6. #3625
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பார்க்காதவர்கள் புதுமையாக பார்த்தவர்கள். பார்த்தவர்கள் மீண்டும் பார்த்து பரவசமடைந்தார்கள். புதிய தலைமுறைக்கு பார்க்கின்ற வாய்ப்பு வரப்பிரசாதம். Night Show பார்க்கின்ற அனுபவம்.... Thanks...

  7. #3626
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Unbelievable editing
    Brilliant direction
    With evergreen songs...
    He utilised the actors properly.......... His directorial touch was great in this movie. Photography was too good. Especially in Thanga thoniyile song you will find an aeroplane will pass through thalivar's legs...... Thanks...

  8. #3627
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மிகவும் அற்புதமான பதிவு இதய தெய்வத்தை பற்றி. அவர் தொடர முடியாத கல்வியை அனைவரும் படித்து பயன் பெற வேண்டும் என்ற ஒரு உன்னதமான நோக்கோடு அவர் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப் பட்டவை தான் தொழில் கல்விக் கல்லூரிகள் என்பதை சேர்த்திருந்தால் இக்கால தலைமுறைக்கும் சென்றடைந்திருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. அருமை. வாழ்த்துக்கள் சகோ...... Thanks....

  9. #3628
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Filmography Film 47 (1961) Poster

    1960ஆம் ஆண்டு வெளியான எம்ஜியாரின் மூன்று படங்களில் இரண்டு ஆவரேஜாகத்தான் போனது; மூன்றாவது படமான மன்னாதி மன்னன் பிக்அப் செய்து கொண்டது. ஆனால், அதை நூறு நாள் வெற்றிப்படமாக்காது விதி சதி செய்து விட்டது!
    நெடுங்காலம் அண்டர் ப்ரொடக்ஷனில் இருந்த அரசிளங்குமரி 1961ஆம் ஆண்டு பொங்கலன்று திரைக்கு வருவது உறுதியானதும், 1960 தீபாவளியில் ரிலீஸாகி இன்னமும் ஓடிக்கொண்டிருந்த மன்னாதி மன்னன் இந்தப் புதுப்படத்திற்கு பலியாக்கப்பட்டு தூக்கப்பட்டது! ஆனால், விதியின் விளையாட்டுதான் என்னே!
    ம.மன்னனையே தொடர்ந்து ஓட விட்டிருக்கலாம் என்பதைப் போல புதிதாக வெளியான அரசிளங்குமரி .எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை
    கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் உருவான இந்தப் படத்தில் பத்மினி எம்ஜியாரின் சகோதரியாக நம்பியாருக்கு ஜோடியாகத் தோன்றியது பெரும்பாலாரோல் ரசிக்கப்படவில்லை.
    இப்படத்தின் இசையை ஜி.ராமநாதன் அமைத்திருந்தார். மொத்தம் 11 பாடல்களில் ஐந்தினை எழுதியவர் இடதுசாரி கருத்துகளுக்குப் பெயர் பெற்றிருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். பின்னாளில் இயக்குனர் திலகமாகிய கேஎஸ் கோபாலகிருஷ்ணன் ஒரு பாடல் வரைந்தார்.
    ஸ்காராமுஷ் என்னும் ஆங்கிலப்படத்தின் தழுவலான இப்படத்தின் சேவிங் கிரேஸ் என்றால் பட்டுக்கோட்டையின் பாடலான டிஎம்எஸ் பாடிய எவர்க்ரீன் ஹிட்டான சின்னப்பயலே பாடலை மட்டுமேதான் கூற இயலும். ASA. சாமி இயக்கத்தில் தொடங்கபட்ட படம் காசிலிங்கம் பின்பு இயக்கினார்
    கதை .
    தளபதி நம்பியார் தான் ஒரு சாதாரண வீரன் என்று பொய் சொல்லி எம்ஜிஆரின் தங்கை பத்மினியை மணந்துகொள்கிறார். உழவர் மகனான எம்ஜிஆர் தன் பரம்பரை வாளை கொண்டுபோய்விட்ட நம்பியாரின் அப்பாவிடம் இருந்து அந்த வாளை மீட்டு வர செல்கிறார்.வழியில் ஆபத்தில் இருக்கும் இளவரசி ராஜசுலோசனாவையும் பிரமுகர் அசோகனையும் காப்பாற்றுகிறார். ராஜ சுலோ.வும் எம்ஜிஆரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். நம்பியார் ராஜாவாக ஆசைப்பட்டு பத்மினியை கழற்றிவிட்டுவிட்டு சுலோ பின்னால் ஸ்லோவாக போக ஆரம்பிக்கிறார். எம்ஜிஆர் ஒரு மல்லனை தோற்கடித்து தன் வீரத்தை நிரூபித்து நம்பியாரின் அப்பாவிடம் இருந்து தன் பரம்பரை வாளை மீட்கிறார். ஆனால் கிராமத்துக்கு போனால் பத்மினியும் நம்பியாரும் இல்லை. அவர்களை தேடிக்கொண்டு அரண்மனைக்கு வந்து நம்பியாரை கண்டு அதிர்ச்சி அடைகிறார். வீரம் இருந்தும் வாள் பயிற்சி இல்லாத எம்ஜிஆரை சுலோ முன்னால் சுலபமாக தோற்கடிக்கிறார். நடுவில் தன் தங்கை மகனை தூக்கிக்கொண்டு “சின்னப் பயலே சின்னப்பயலே” என்று புத்தி எல்லாம் சொல்கிறார். கணவன் சொல்லை தட்டாத பத்மினி நம்பியாரின் அப்பாவிடமே சேர்கிறார். எம்ஜிஆரும் நம்பியாரின் அப்பாவிடமே வாள்பயிற்சி பெறுகிறார். கடைசியில் நம்பியாரிடம் பெரிய சண்டை போட்டு, நம்பியார் திருந்தி, சுபம்!

    எம்ஜிஆரும் நம்பியாரும் போடும் க்ளைமாக்ஸ் சண்டை பிரமாதம். எம்ஜிஆர் இரும்பு கையுறைகளோடு போடும் மல்யுத்தமும் அபாரம்.
    ஆனால், எம்ஜியார் ரசிகர்கள் கலங்கத் தேவையின்றி அவரது நட்சத்திர அந்தஸ்தை மீண்டும் உறுதி செய்வதாக அடுத்த படம் அமைந்தது!..... Thanks...

  10. #3629
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம் ஜி ஆரின் தனிப் பெரும் கொடை பண்பு.

    அவர் கேட்டாலும் கொடுப்பார், கேட்காவிட்டாலும் கொடுப்பார், கேட்க விடாமலும் கொடுப்பார்.

    கொடுப்பதில் எத்தனை வழி உண்டோ அத்தனை வழியிலும் கொடுப்பார். கொடுத்துக்கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருக்க மாட்டார்.

    அவன் கொடுத்தது எத்தனை கோடி _அந்த
    கோமகன் திருமுகம்
    வாழி வாழி....... Thanks Prof. RC...

  11. #3630
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை (26/04/2020) காலை 11 மணிக்கு சன் லைஃப் சானலில் எம்.ஜி.ஆர்.கதை எழுதிய "கணவன்" திரைப்படம் ஒளிபரப்பாகிறது... Thanks..........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •