-
23rd April 2020, 08:30 AM
#3441
Junior Member
Diamond Hubber
[MGR-கவிஞர் வாலி
கவியரசர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர் பாடலாசிரியர்களாகக கொடிகட்டிப் பறந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் கவிஞர் வாலி பாடல் எழுத திரைப்படத்துறைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அதற்கு முன்பு பக்திப் பாடல்களை (கற்பனை என்றாலும்) எழுதிக் கொண்டிருந்தார். அந்தப் பாடல்களைப் பாட வந்த திரைப்பட புகழ் டி.எம். சௌந்தர்ராஜன் கவிஞர் வாலியை சென்னைக்கு வரச்சென்னார். அங்கு வந்து சினிமாவுக்கு பாடல் எழுத முயற்சி செய்யுங்கள் என்றார். அவர் அழைத்ததை திரையுலகமே அழைத்தாக எண்ணி சென்னைக்கு வந்தார் கவிஞர் வாலி.
சென்னையில் நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நட்பு கிடைத்தது. வி.கோபாலகிருஷ்ணன் மூலம் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு பல கம்பெனிகளில் ஏறி இறங்கினார். எதுவும் பலன் தராததால் துவண்டு போய் மறுபடியும் தனது சொந்த ஊரான ஸ்ரீரங்கத்துக்கே பயணமாக முடிவு செய்தார். அப்பொழுதுதான் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடலொன்று காற்றினிலே கலந்து வந்து கவிஞர் வாலியின் காதில் நுழைந்தது மனதில் தெம்பையும் உற்சாகத்தையும் கொடுத்து மீண்டும் போராடுவதற்கான நம்பிக்கையை வாலிக்கு கொடுத்தது.
அந்தப் பாடல் ‘மயக்கமாக கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் ஒடுவதில்லை, உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு...'
சென்னையிலேயே நண்பர் வி.கோபாலகிருஷ்ணன் மூலம் போராடி 1959ஆம் ஆண்டு ‘அழகர் மலைக் கள்வன்' படத்தில் பாட்டெழுத வாய்ப்பு கிடைத்தது.
‘நிலவும் தாரையும் நீயம்மா, உலகம் ஒரு நாள் உனதம்மா' என்று பாடல் எழுதிக் கொடுத்தார். இந்தப்பாடலை ப.சுசிலா தனது இனிமையான குரலில் பாடி கொடுத்தார்.
எந்த கண்ணதாசன் பாடல் கேட்டு நம்பிக்கை பெற்று மறுபடியும் திரையுலகில் போராடி நுழைந்தாரோ அதே கண்ணதாசனுக்குப் போட்டியாக பாடல்கள் எழுத ஆரம்பித்தார் வாலி. அதன்பிறகும் போராட்டம் தொடர்ந்தது.
முக்தா சீனிவாசன் தனது ‘இதயத்தில் நீ' படத்தில் பாடல் எழுத அழைத்தார். கவிஞர் வாலியை எம்.எஸ். விஸ்வநாதனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் பாடல் எழுதும் ஆற்றலைப் பார்த்துவிட்டு எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டார். ‘இத்தனை நாள் நீ எங்கிருந்தாய்' என்று.
டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தனது ‘கற்பகம்' படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களையும் எழுதச் சொன்னார். அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. படமும் வெற்றிப் பெற்றது. ‘கற்பகம்' பெயரிலேயே ஸ்டுடியோவை வாங்கி நடத்தத் தொடங்கினார் கோபாலகிருஷ்ணன். இந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களையும் பி.சுசிலாவே பாடினார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘நல்லவன் வாழ்வான்' படத்தில் பாடல் எழுத கவிஞர் வாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை டைரக்டர் ப.நீலகண்டன்தான் பெற்றுத் தந்தார். கவிஞர் வாலியை எம்.ஜி.ஆரிடம அறிமுகப்படுத்தியதும் ப.நீலகண்டன்தான்.
எம்.ஜி.ஆரின் ‘படகோட்டி' படத்திலும் அனைத்துப் பாடல்களையும் சரவண பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி எழுதச் சொன்னார். ‘படகோட்டி' படத்தின் முழு கதையை வாலி கேட்டதால் அவரையே அந்தப் படத்திற்கு ஒரு பெயரை சூட்டச் சொன்னார்கள். அவரும ‘படகோட்டி' என்று பெயர் வைத்தார்.
இப்படி எம்.ஜி.ஆருக்கு 61 படங்களில் தொடர்ந்து பாடல்களை எழுதி எம்.ஜி.ஆரின் பாராட்டுக்களை பெற்றார் கவிஞர் வாலி.
அதே போல் சிவாஜிகணேசன் நடித்த ‘அன்புக் கரங்கள்' படம் மூலம் தொடர்ந்து பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது.
Cont...]......... Thanks...
-
23rd April 2020 08:30 AM
# ADS
Circuit advertisement
-
23rd April 2020, 08:31 AM
#3442
Junior Member
Diamond Hubber
[கலைவாணர் அவர்களுக்கும் நம்ம தலைவருக்கும் இருந்த நட்பு நாம் அறிந்ததே.
கொடுக்கும் குணம் அவரிடம் இருந்து நான் கற்று கொண்ட பாடம் என்று பலமுறை சொல்லி இருக்கிறார் நம் வாத்தியார்.
1977 இல் நம் நாடோடிமன்னன் நாடாள புறப்படுகிறார். நிருபர்கள் கூட்டம் கேள்வி மேல் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லி அன்று தன் கூட இருந்த அரசியல், மற்றும் திரைத்துறையினரை நினைவு கூர்ந்து பதில் சொல்லுகிறார் பொன்மனம்.
ஒரு நிருபர் இப்போது உங்கள் நண்பர் கலைவாணர் அவர்கள் இருந்து உங்கள் இயக்கத்தில் இணைந்து வெற்றி பெற்று இருந்தால் அவருக்கு என்ன இலாகாவை ஒதுக்கி அவரை மந்திரி ஆக்கி இருப்பீர்கள் என்று கேட்க.
ஒரு நிமிடம் யோசித்த நம் தலைவன் சுற்றும் முற்றும் பார்க்க அனைத்து நிருபர்களும் திகைக்க நல்ல கேள்வி இது...
இன்று அவர் இருந்து இருந்தால் அவர்தான் முதல்வர் நான் அவருக்கு கீழே ஒரு அமைச்சர் ஆக இருந்து பணியாற்றி இருப்பேன் என்கிறார் எம்ஜியார்.
எப்படிப்பட்ட எம்ஜியார் நமக்கு நாட்டுக்கு தலைவர்.
முதல்வராக ஒரு நாள் கலைவாணர் சிலைக்கு ஒரு சிறப்பான மலர் மாலையை அவரே வடிவமைக்க சொல்லி அந்த மாலையை அவருக்கு அணிவித்து விட்டு மரியாதை செய்து அடுத்த நிகழ்ச்சிக்கு போய் திரும்பும் போது அந்த மாலை அவர் கழுத்தில் இல்லை.
உடனே காரை விட்டு இறங்கி இப்போ ஒரு 20 நிமிடம் கூட ஆகவில்லை எங்கே போச்சு அந்த மாலை எனக்கு உடனே தகவல் வேண்டும் என்று சொல்ல.
சுற்றி இருந்த அதிகாரிகள், காவல்துறையினர் விரைவாக செயல் பட்டு அந்த மாலையை ஒரு மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த ஒருவர் கழற்றி சென்றதை அருகில் இருந்தவர்கள் சொன்னத்தின் படி அந்த நபரை அவர்கள் சொன்ன வழியில் தேடி போய் பார்க்க.
அந்த தெருவில் ஒரு வீட்டு வாசலில் வயதான ஒரு அம்மாவின் உடலுக்கு அந்த மாலை போட பட்டு இருந்தது.
தகவல் தலைவருக்கு தெரிந்து அவரே நடந்து அந்த தெருவுக்குள் போய் பார்க்க இறந்தவர் மகன் ஐயா என்னை மன்னித்து விடுங்கள்...என் தாயாரின் உடலுக்கு மாலை போட கூட இப்போது என்னிடம் பணம் இல்லை.. உறவினர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று கதறி அழ அங்கேயே ஒரு நாற்காலியில் அமர்ந்து உடனே தன் ஜிப்பாவுக்குள் கை விட்டு இருந்த பணத்தை அள்ளி கொடுத்து அவர் தோள்களில் தட்டி கொடுத்து ஆக வேண்டிய வேலைகளை பார் என்று சொல்லிவிட்டு திரும்ப
உடன் இருந்த அரசு அதிகாரிகள், காவல் துறையினர், கட்சிக்காரர்கள் அனைவரிடமும் இருந்தும் கொடுத்தார் இப்போது இறந்தும் கொடுக்கிறார்....அந்த மாலையை எடுத்து கொண்டு போனவரை ஒன்றும் செய்ய வேண்டாம்..இது அவர் எனக்கு சொல்லும் செய்தி. என்கிறார் புரட்சிதலைவர்........... Thanks...
-
23rd April 2020, 08:34 AM
#3443
Junior Member
Diamond Hubber
நம்
தெய்வம்
புரட்சி
மக்களின் தலைவர்
எம்ஜிஆர்...
அவருடைய
பொன்மொழிகள்
கூறுவது....
நாடு என்ன செய்தது நமக்கு என்ற கேள்வி
கேட்பது எதற்கு.
நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை
""உனக்கு...உனக்கு...""""
"""" உனக்கு....""""......... Thanks...
-
23rd April 2020, 08:40 AM
#3444
Junior Member
Diamond Hubber
10,000 எதிர்பார்த்து வந்தவருக்கு 50,000 கொடுத்து, 15,000 சம்பளத்தில் வேலையும் கொடுத்த #பாரிவள்ளல் #எம்ஜியார்
//சங்கரய்யா பெரியாரின் #குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். 74 வயதில் இருபதாண்டுகளுக்கும் மேலாக முரசொலி பத்திரிகையில் சீனியர் கட்டுரையாளராக வெறும் 300 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றி வந்தார்.
#எம்ஜிஆர் முதல்வரான புதிது. ஒருநாள் மதியம் சங்கரய்யாவின் மனைவி ரத்தவாந்தி எடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக 10,000 தேவை.
தன் தலைமையை தேடி ஓடுகிறார். சந்திக்கவே விடவில்லை. பணம் கட்டவில்லையென்றால், ஆபரேசன் செய்ய இயலாமல் மணைவி உயிர் பாேய்விடும்.
அழுது புலம்பும் சங்கரய்யாவை நண்பர்கள் அடுத்தநாள் காலை8மணிக்கு ராமாவரம் தாேட்டத்தில் பாெதுமக்களிடம் மனுக்கள் பெறும் முதல்வரை சந்திக்க சொல்கிறார்கள்.
சங்கரய்யாவிற்கு உயிர் பாேகும் தேவையிருப்பினும், தன்மானமும், யாரை கடந்த ஆறு ஆண்டுகளாக கடுமையாக தாக்கி எழுதுகிறாமாே? அவரை சந்தித்து உதவி கேட்பதா? எண்ணும் வெட்கமும் தடுக்கிறது.
அப்படியே சந்தித்தாலும், உறுதியாக எதிரிக்கு உதவ மாட்டார் என்று நண்பர்களிடம் சாெல்கிறார். ஆபத்துக்கு பாவமில்லை என்று நண்பர்கள் அடுத்த நாள் காலை 7 மணிக்கே தோட்டத்திற்கு அழைத்துப்போகிறார்கள்.
காலை 8.30மணி. தாேட்டம் பரபரப்பாகிறது. வெளி வந்த சாெக்கத்தங்கம் மனுக்கள் வாங்குகிறது.(இந்த மனுக்கள் மீது 48 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வர் உத்தரவு) கூனிக்குறுகி சங்கரய்யா வரிசையை விட்டு தள்ளி பார்வையாளர்களோடு நின்று காெள்கிறார்.
மனுக்கள் பெற்று முடித்த முதல்வரின் கண்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு செல்கிறது. அழுக்கு ஜிப்பா அணிந்து, நான்கடி உயரமே இருந்த சங்கரய்யாவின் நல்லநேரம் தலைவர் கண்களில் பட்டு விடுகிறார்.
தலைவருக்கு ஆச்சரியம்...!
இவர் முரசாெலியில் வேலை செய்பவராயிற்றே, இங்கே எதற்கு வந்திருக்கிறார்? வினாவாேடு "சங்கரய்யா, என்ன இங்கே?"
அசந்து பாேகிறார் சங்கரய்யா. எத்தனை ஆண்டுகள் ஆகிறது? பெயர் ஞாபகம் வைத்து அழைக்கிறாரே! அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. நண்பர்கள்தான் தலைவரிடம் சங்கரய்யா நிலையை சொல்கிறார்கள்.
உடனே உதவியாளரை அழைத்த எம்ஜிஆர் ரூ.50,000 ஐ சங்கரய்யாவிடம் தருகிறார், ஆஸ்பத்திரி செலவு போக மீதியை வங்கியில் டெபாசிட் செய்ய சொல்கிறார்.
மனைவி உயிர் பிழைத்து வந்ததும் சங்கரய்யா செய்த முதல் வேலை முரசாெலியை விட்டு நின்றது, இரண்டாவது எம்ஜிஆரின் சிபாரிசால், கட்சி அலுவலகத்தில் தாெலைபேசி பொறுப்பாளரானது......... Thanks...
-
23rd April 2020, 01:11 PM
#3445
Junior Member
Diamond Hubber
உலகம் சுற்றும் வாலிபன் !
____________________
மக்கள் திலகத்தின் இந்த சண்டை காட்சியை நன்கு உற்றுபாருங்கள் இப் படம் வெளியான காலகட்டத்தில் கராத்தே என்ற ஒன்று இல்லை !
இதில் ரெஸ்லிங்கில் பயன் படுத்தபடும் லாக்குகள் , கராத்தேயில் மாவாசி கிக் ஒன்று உண்டு இது மிகவும் கடினமான கிக் இதில் மக்கள் திலகம் என்ன அநாயசமாக மாவாசி கிக் ,சைட் மாவாசி கிக் ,பிளையிங் கிக் அனைத்தையும் கையாள்கிறார் பாருங்களேன்
ஹயாத் !......... Thanks..........
..
-
23rd April 2020, 01:22 PM
#3446
Junior Member
Diamond Hubber
#இரத்தத்தின் #இரத்தமான #உடன் #பிறப்புகளுக்கு #ஓர் #அறிவுரை
1971 மேடையில் பேசிய பேச்சில்...!
என் ரத்தத்தின் ரத்தமான
உடன் பிறப்புகளே ... !
இன்று எனக்கு மன்றங்கள் இருப்பதில் எனக்கு பெருமை இல்லை. நான் மறைந்த பின்பும் இந்த மன்றங்கள் இந்த நாட்டுக்கு சொந்தமாக இருக்க வேண்டும். மக்களுக்கு மக்களின் எண்ணங்களுக்கும், துணையாக இருக்க வேண்டும். என் கொள்கைகளுக்கு லட்சிய பொருளாக இருக்க வேண்டும். அப்போதுதான் மன்றங்களுக்கும் பெருமையே தரும்...
மேலும்...
ஒருவர் உயிரோடு இருக்கும் போது, மன்றங்கள் இருக்குமே தவிர அது நிரந்தரமான பரிகாரம் ஆகாது. என்பதே என் கருத்து. இது 1971ல் மக்கள் திலகம் பேசியது.
அப்போது எல்லாம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்போது எம்.ஜி.ஆர். பக்தர்களாகி விட்டார்கள். ஆக, இந்த ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் எப்போதுமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தன் இதயத்தில் வைத்து பூசிப்பார்கள். அவர் தூங்கம் இடத்தில் கற்பூரம் ஏற்றுகிறார்கள். அவர் வாழ்ந்த இடத்தில் உள்ள அவருடைய உருவசிலைக்கு மாலை போட்டு வணங்குகிறார்கள்.
#வாரிவாரிக் #கொடுத்த #இந்த #வள்ளலை #யார் #தான் #மறக்கமுடியும் !!!
♥♥........... Thanks.........
-
23rd April 2020, 01:25 PM
#3447
Junior Member
Diamond Hubber
இன்று டிவியில் (23/04/20) ஒளபரப்பாகும் தலைவர் படங்கள்..........
...
----------------------------------------
காலை 7 மணி ஜெயா மூவிஸ்- குமரிக் கோட்டம்
காலை 10 மணி- ஜெயா டிவி- குலே பகா வலி
பிற்பகல் 2 மணி- முரசு டிவியில் - கொடுத்து வைத்தவள்
இரவு 9.30 மணி- சன் டிவி- எங்க வீட்டு பிள்ளை........ Thanks..........
-
23rd April 2020, 01:37 PM
#3448
Junior Member
Diamond Hubber
1947-இல் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெற தமிழ்திரைப்படங்கள் மக்களிடையே காலனிய ஆதிக்க எதிர்ப்பு உணர்வுகளை தூண்டின. 1931 ஆம் ஆண்டு வெளிவந்த முழுநீள பேசும் படமான காளிதாஸில் தேசிய தலைவர் காந்தி பெயரும் தேசிய முழக்கம் வந்தே மாதரமும் பயன்படுத்தப்பட்டன.
1937 ஆம் ஆண்டு வெளியான “சதி அனுசுயா” வில் அனுசுயா கைராட்டையோடு திரையில் தோன்றினார். 1936 ஆன் ஆண்டு வெளிவந்த “நவீன சாரங்க தாரா’ திரைப்படத்தில் கொடுங்கோல் மன்னனுக்கு எதிராக போராடும் மக்கள் காந்தி குல்லா அணிந்திருந்தனர்.
திரை அரங்குகள் நகர்புறங்களிலேயே இருந்ததனால், ஊரக மக்கள் திரைப்படங்களின் தாக்கத்துக்கு ஆட்படவில்லை. இந்திய விடுதலைக்குப்பின் ஊரக பகுதிகள் மின்மயமாக்கப்பட்டவுடன், திரைப்படம் மக்களுக்கு சென்று சேர ஆரம்பித்தது. இச்சூழலில் திமுக திரைப்படங்களை அரசியல் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொண்டது.
திரைப்பட ரீதியிலான அரசியல் பரப்புரைகள் மூன்று வழிகளில் நிகழ்ந்தது எனலாம்.
நேரடியாக திரைப்பட வசனங்கள் வாயிலாக அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள்...
நேரடி அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள் முதல்வகை. தி.மு.கவின் வெளிப்படையான பரப்புரை படங்களான நல்லதம்பி(1949), வேலைக்காரி( 1949) மந்திரிகுமாரி(1950), மர்மயோகி (1951), சர்வாதிகாரி (1951) பராசக்தி(1952) சொர்க்கவாசல், (1954) நாடோடி மன்னன் (1958) மற்றும் தாய் மகளுக்குக் கட்டிய தாலி (1959) ஆகியன.
திரைப்படங்களின் வெற்றிவிழா கூட்டங்களில் அரசியல் பிரச்சார உத்தி பின்பற்றப்பட்ட திரைப்படங்கள்...
எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த நாடோடிமன்னன் திரைப்படம் 100 நாட்களை தொட்ட பொழுது தி.மு.க அந்நிகழ்வை கொண்டாட வண்ணமயமான பிரமாண்டமான ஊர்வலத்தை நடத்தியது. அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை முதலிய தி.மு.க தலைவர்கள் உரையாற்றினார்கள். கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர் நாடோடிமன்னன் திரைப்படம் மக்களுக்கு சேவை செய்யும் கட்சி தி.மு.க என காட்டவே தயாரிக்கப்பட்டது என்றார்.
1947-இல் வெளியான “ராஜகுமாரி” படத்தில் நாயகன் கருப்புச் சட்டையில் தோன்றியது தி.க தொண்டர்களை பரவசப்படுத்தியது. 1957-இல் வெளியான சக்கரவர்த்தி திருமகன் படத்தில் “உதயசூரியன்” என பெயர் தாங்கி நடித்தார்.
1963-இல் வெளியான “எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்கு “காஞ்சித்தலைவன் “ என பெயரிடப்பட்டது. இது காஞ்சியில் தோன்றிய அண்ணாவை குறிக்கும் வகையில் இத்தலைப்புச் சூட்டப்பட்டது.
1968-இல் வெளியான “புதியபூமியில்” கதிரவன் என சூரியன் பெயரைத் தாங்கி நடித்தார்.
பாடல்கள் வழியாக மட்டும் அரசியல் பிரச்சாரம் செய்த திரைப்படங்கள்...
பாடல் வரிகளிலும் எம்.ஜி.ஆர் அண்ணா புகழ் பாடினார். இதயக்கனி படத்தில் வரும் பாடல் வரிகள்;
“உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
“படியரிசி கிடைக்கிற காலத்திலே – நாங்க
படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே.
குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே – நாங்க
தெருவோரம் குடியேறத் தேவையில்லே.
சர்க்காரு ஏழைப் பக்கமிருக்கையிலே – நாங்க
சட்டத்திட்டம் மீறியிங்கே நடப்பதில்லே..”
என்ற ‘ஒளிவிளக்கு ‘ (1968). அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா கொண்டு வந்த ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி (4.8 கிலோ) அரிசி திட்டம் மற்றும் குடிசைகளை கட்டட வீடுகளாக மாற்றும் திட்டம் ஆகியவற்றிற்கு தான் இப்படி பப்ளிசிட்டி.
” வாங்கைய்யா வாத்தியாரய்யா
அண்ணனின் தம்பி; உண்மையின் தோழன்
ஏழைக்குத் தலைவன் நீங்களய்யா
சமயம் வந்தது; தருமம் வென்றது
நல்லதை நினைத்தோம் நடந்ததையா!
”பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு
பிழைச்சவரெல்லாம் போனாங்க.
மூலைக்கு மூலை தூக்கியெறிஞ்சும்
தலை குனிவாக ஆனாங்க.”
”கடமைக் கண்ணியம் கட்டுப்பாடு
காலத்தினாலே அழியாது.
சூரியன் உதிச்சதுங்க – இங்கே
காரிருள் மறைஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க -இனிமே
சரியாப் போகுமுங்க…” ( நம்நாடு – 1969)
இந்த ‘நம்நாடு’ படம் மாமூல் எம்.ஜி.ஆர். •பார்முலா படமானாலும் இதில் முனிசிபல் தேர்தல் முக்கிய இடம் பிடித்திருக்கும். நடந்து முடிந்த 1967 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் உருவகமாக இந்த முனிசிபல் தேர்தல் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதாவது படத்தில் முனிசிபால் தலைவராக ஜெயிக்கும் எம்.ஜி.ஆர். சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஜெயித்த அண்ணாதுரையை குறித்தார்.. இந்த படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தின் பெயரும் ‘துரை’ என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் சில ‘சுருக்’ வசனங்களும் உண்டு
” பசியை தீர்க்கறவங்களா பார்த்து ஓட்டு போடுங்க.”
” யாருக்கு ஓட்டுப் போடணும்னு சமயம் வரும்போது அய்யாவே (எம்ஜிஆர்) உங்களுக்கெல்லாம் சொல்லுவாரு. ”
” குழாய் தண்ணீ வசதி கேட்டா கவுன்சிலரு ‘ஆகட்டும் பார்க்கலாம்’னு சொல்லிட்டு
போயிடறாரு ” (‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்பது காமராஜர் அடிக்கடி சொல்வாராம்)
முதலமைச்சராக இருந்த அண்ணா, நோய்வாய்பட்டு 1969 பிப்ரவரி 3ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து ‘ பதவி நாற்காலிக்காக திமுகவில் அடிபிடி நடக்கும். குழப்பம் வரும். தலைவனை பறிகொடுத்தக் கட்சி காணாமல் போய் விடும் ‘ என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமூகமாக கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக 10-2-1969ல் பதவியேற்றார். இந்த விஷயத்தில் எதிரிகளுக்கு மூக்குடைப்பு ஏற்பட்டு தனது ஆருயிர் நண்பர் மு.க. முதலமைச்சரான மகிழ்ச்சியை எம்.ஜி.ஆர். 1970ல் வெளியான ‘எங்கள் தங்கம்’ படத்தில் ஒரு பாடலில் வெளிப்படுத்தியிருப்பார்.
எம்.ஜி.ஆர். 1967ல், தான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர் பிழைத்ததை சுட்டிக் காட்டி தனது ரசிகர்களை குஷிப்படுத்தியபடி தொடங்கும் ” நான் செத்து பொழச்சவன்டா. எமனைப் பார்த்து சிரிச்சவன்டா…” என்ற பாடல் தான் அது.
“ வாழை போல வெட்ட வெட்ட முளைச்சி
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா;
வந்தால் தெரியும் சேதியடா
சந்தனப் பெட்டியில் உறங்கிறார் அண்ணா
சரித்திரப் புகழுடன் விளங்கிறார்.
எதையும் தாங்கும் இதயம் கொண்டு – அண்ணன்
எங்களை வாழ்ந்திடச் சொன்னதுண்டு.
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்தை
அழகுத் தமிழில் சொல்லிச் சொல்லிக் கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா; அதனால் தோல்வியில்லையடா”
ஓடும் ரயிலை வழிமறிச்சு
அதன் பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரைக் காத்த கூட்டமிது ”
அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி முதலமைச்சரானதன் பின்னணியில் எம்.ஜி.ஆருக்கு முக்கிய பங்கிருந்ததாம். முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்ட நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் போன்றோரை ஓரம்கட்டி மு.கருணாநிதி ஜெயிக்க எம்.ஜி.ஆர். பெரிதும் உதவி செய்தாரென தகவல் உண்டு. 1970ல் எம்.ஜி.ஆரை கட்சியின் பொருளாளராக்கி அழகு பார்த்தார் கலைஞர்.
” சூரியன் உதிச்சதுங்க…”
இங்கே காரிருள் மறஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க
இனி சரியா பொகுமுங்க
என்ற எம்.ஜி.ஆர் பாடல் 1967 பிப்ரவரியில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டதும் அரசியல் களம் பரபரப்பானது. அப்போது ஆட்சிப் பீடத்தில் இருந்த பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப திமுக வரிந்துக் கட்டியது.
காங்கிரசுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு எதிராகவும் பெரியாரே களம் இறங்கிய போதும் திமுக கவலைப்படவில்லை.
முக்கியமான இந்நிலையில், தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன், அதாவது ஜனவரி 12ம் தேதி கட்சியின் முக்கியப் பிரச்சார பீரங்கியான எம்.ஜி.ஆர்., தனது சென்னை ராமாவரம் வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
(எம்.ஜி.ஆரை சுட்டதாக நடிகர் எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டு சிறை தண்டனையும் பெற்றார். இந்த சம்பவத்துக்கு சினிமாத் தொழில் தகராறு என்று ஒரு பக்கமும்; இல்லையில்லை உண்மையில் அரசியல் பின்னணி இதில் மறைந்திருக்கிறதென்று இன்னொரு பக்கமும் காரசார வதந்திகள், ஊகங்கள் கிளம்பி ஒரு கட்டத்தில் அடங்கியது என்பது வேறு விஷயம்)
ஆனாலும், துப்பாக்கி குண்டுகளை தொண்டையில் தாங்கி எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். ஏழைகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த தர்மம், எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றி விட்டதென்ற இமேஜ் வலுப்பெற்று, ‘மக்கள் திலகமாக’ அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தியது. குண்டு காயம்பட்ட கழுத்தில் , பெரிய பேண்டேஜ் கட்டுடன் கைகூப்பி வணங்கியபடி எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் இருக்கும் •போட்டோவை போஸ்டர்களாக அச்சிட்டு தமிழகம் முழுவதும் ஒட்டி பிரச்சாரம் செய்தது திமுக.இத்தேர்தலில் திமுக அமோகமாக வென்று ஆட்சியை பிடித்ததற்கு எம்.ஜி.ஆரின் இந்த போஸ்டரும் ஒரு முக்கிய காரணம் என்பார்கள்.
அப்போதைய, பரங்கிமலைத் தொகுதியில் (பல்லாவரம்) போட்டியிட்ட எம்.ஜி.ஆர், ஆஸ்பத்திரியில் இருந்தபடி தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போகாமலேயே சுமார் 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று, முதன்முறையாக எம்.எல்.ஏ., ஆனார்.
இத்தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 138 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 49 இடங்கள் தான். ‘படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்’ என்று சொன்ன பெருந்தலைவர் காமராஜரே தனது சொந்த விருதுநகர் தொகுதியிலேயே தோற்று போகுமளவுக்கு திமுக அலை வீசியது 1967 தேர்தலில்.
சாமானியர்கள் சிலர் சேர்ந்து 1949-ல் துவக்கிய ஒரு சாதாரண பிராந்தியக் கட்சி, சுமார் 18 ஆண்டுகளில் பாரம்பரியம்மிக்க ஒரு தேசிய கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது.அண்ணாதுரை தலைமையில் 6-3-1967ல் திமுக அரசு அமைந்ததற்கு எம்.ஜி.ஆரின் முக்கிய உழைப்பும் உண்டு.......... Thanks.........
-
23rd April 2020, 01:44 PM
#3449
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் , "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மலேசியா நாட்டின் "சுபாங்" (Subhang Airport - Malaysia) விமான நிலையத்திற்கு வந்த போது ,
நமது திரையுலகச் சக்கரவர்த்தி... என்றும் திரையுலகை ஆளும் ஈடு இணையில்லா வசூல் சக்கரவர்த்தி , புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை ,
நேரில் வரவேற்க "சுபாங்" விமான நிலையத்திற்கு .... வருகை புரிந்தார் மலேசியா நாட்டின் புகழ்பெற்ற , மலாய் நடிகர் திரு. P. ரமலி அவர்கள்.
அந்த கண்கொள்ளா காட்சியின் போது , மலேசிய நகர மக்கள் அனைவருமே... விமான நிலையத்தை மூச்சடைக்க வைத்தார்கள் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.
ஆம் ,
புரட்சி நடிகராக "உலகம் சுற்றும் வாலிபன் " படப்பிடிப்பை நடத்த வந்தவர்... எவ்வளவோ முயன்றும் முண்டியடித்த மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், தான் நினைத்தபடி படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறாத சூழலில் ஒருவழியாக ,
"லில்லி மலருக்கு கொண்டாட்டம்" பாடலில் விமானம் விட்டு இறங்குவதிலிருந்து , டாடாடா... டா..டா..ட..டா என்று ஒலிக்கும் குரலோசை மற்றும் அதன் BGM முடியும் வரை மட்டும் ,படப்பிடிப்பை முடித்து கொண்டு.... அந்நாட்டின் புழ்பெற்ற நடிகர் p.ரமலி அவர்கள் கொடுத்த விருந்து உபச்சாரங்களில் கலந்து கொண்டு பிரியாவிடை பெற்று தாய்நாடு திரும்பினார் நமது இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்கள்.
இல்லையென்றால் ஆராய்ச்சி குறிப்பின் ஒரு பகுதி மலேசியாவில் எடுக்கப்பட இருந்ததாக ,
கடந்த 2018 டிசம்பர் மாதம் நான் மலேசியா சென்ற போது , மலேசியா நாட்டின் பிரபல தொழிலதிபரும் , சமூக தொண்டருமான திரு. சன் - வே சுகுமாறன் ஐயா அவர்கள் , சுபாங் விமான நிலையத்திற்கு எதிரில் உள்ள சீனர்களின் , "கடல் உணவு " ரெஸ்ட்ராண்டில் கொடுத்த விருந்தின் போது தகவல் அறிந்தேன்.
இந்த வாய்ப்பை எனக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் , மலேசிய நாட்டின் பொன்மனச்செம்மல் கலைக்குழுத் தலைவர் ஐயா மேகநாதன் அவர்கள்.
இத்தகவலை தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமை.
நன்றியுடன்...
எம்ஜிஆரின் காலடி நிழல்
க.பழனி (அட்மீன்)
மலேசியா நாட்டில் எடுக்கப்பட்ட "உலகம் சுற்றும் வாலிபன்" படப்பிடிப்பின் போது , மக்கள் வெள்ளம் சூழ்ந்த அரிய புகைப்படத்துடன்....
அந்நாட்டின் புகழ்பெற்ற நடிகர் திரு. P. ரமலி அவர்களுடன் நமது பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் அன்றைய அரியப் படம் நமது
"உழைக்கும் குரல்" தளத்தில்.......... Thanks.........
-
23rd April 2020, 02:02 PM
#3450
Junior Member
Diamond Hubber
' ' அடேயப்பா...இத்தனை எம்ஜிஆர் புத்தகங்களா?' ' ஆமா காசையெல்லாம் எம்ஜிஆர் புத்தகம் வாங்குறதிலேயே கரைச்சிடுவாய் போலிருக்கே?' ' இதென்ன பெட்டி நிறைய எம்ஜிஆர் பட சிடிக்களா ( குறுந்தகடு) இருக்கு?' ' எம்ஜிஆர் மீது பைத்தியமா இருக்கானே!' ' எம்ஜிஆரை ஒரு தடவையாவது பார்த்திருக்கிறாயா?' ' நீ வரைந்ததிலேயே எம்ஜிஆரைத்தான் அதிகமாக வரைந்திருப்பாய் போலிருக்கு?' ' சிறுவயசிலேருந்து இவன்கிட்ட எம்ஜிஆரைப் பற்றி யார் தப்பா பேசினாலும் ரொம்ப கோபப்படுவான்' ' ஏம்பா எம்ஜிஆர் மேல இப்படி பைத்தியமா இருக்கியே, எம்ஜிஆர் உனக்கு என்ன செய்தார்?' ' எம்ஜிஆர்னா போதும், இவனுக்கு சாப்பாடே வேண்டாம்' ' ஏம்பா ஏழு நாளா தினமும் எம்ஜிஆர் நடித்த நாடோடி மன்னன் படத்தை பார்க்கணுமா?, தினமும் நாலைஞ்சு பேரை இந்தப் படத்துக்கு அழைச்சிட்டுப் போறியாமே?' ( கேட்டவருக்குத் தெரியாது 14 நாட்கள் தொடர்ந்து பார்த்தேன்- 1998 ல் ) ' எதற்கெடுத்தாலும் கோபப்படுறியே எம்ஜிஆரு இதைத்தான் உனக்கு சொல்லிக் கொடுத்தாரா?' 'எம்ஜிஆர் செத்துப் போயிட்டாருன்னு ( 1984 ல்) ஊரு புல்லா பேசிக்கிட்டாலும் இவன் நம்பவே மாட்டேங்கிறானே?' ' இந்த எம்ஜிஆர் போட்டோ, எம்ஜிஆர் கேசட், சிடி( குறுந்தகடுகள்), எம்ஜிஆர் புத்தகங்கள் எல்லாம்தான் உனக்கு சோறு போடுதா?' 'எலேய்... இப்படி கதவு பூராவும் எம்ஜிஆர் படத்தை ஒட்டி வெச்சிருக்கியே ஏன்?' ' எலேய்...சுவருல ஒரு இடம் பாக்கி இல்லாம எம்ஜிஆர் உருவத்தை கரித்துண்டால வரைந்து கிறுக்கி வெச்சிருக்கியே ஏன்?' ' எலேய்... ஊருல எப்ப பாரு எம்ஜிஆரை தப்பா பேசினான்னு யாரிடமாவது சண்டை போட்டுட்டு வந்து நிக்கிறியேடா, எம்ஜிஆரை குறை சொன்னா உனக்கென்ன?, எம்ஜிஆரை தப்பா பேசினா நீ கோபப்படுவேனு தெரிஞ்சுகிட்டு உன்னை கிண்டல் பண்ணியிருப்பாய்ங்க, அதுதெரியாம டென்சனாயிட்டியா?' ' தம்பி எம்ஜிஆர் இறந்துட்டதால( 1987 டிசம்பர் 24) இவனை( சாமுவேலை) கவனமா பாத்துக்க, நேற்றிலேருந்து சாப்பிடாம இருக்கான், இவன் எங்கே போறான் என்ன பண்ணுறான்னு கண்காணிச்சிக்க' ' அடேயப்பா...எம்ஜிஆர் படம் பார்க்க மெட்ராஸ் வரைக்கும் போகணுமா?( ஒளிவிளக்கு- நடராஜ் தியேட்டர்) அந்தப் படத்தை இங்க ( கோயம்புத்தூர்) உள்ள தியேட்டர்ல பார்த்தா போதாதா?' 'எம்ஜிஆர் படம்னா நல்லாத்தான் இருக்கும், அதற்காக ஐம்பது தடவையா பார்க்கணும்?' 'பத்து வார்த்தை பேசினாலும் எட்டு வார்த்தை எம்ஜிஆரைப் பற்றியே பேசுறாம்பா' ' ஆமா வீட்டிலேயும் எம்ஜிஆர் ...எம்ஜிஆர்தானா? எப்படி உன்னையெல்லாம் சகித்துக் கொள்கிறார்கள்?' ' ஏம்பா நீதான் எம்ஜிஆர் மீது பைத்தியம், அந்தப் புள்ளய ( என் மனைவி) கல்யாணம் முடிந்த உடனே முதல் படமா நாடோடி மன்னன் படம் பார்க்க( 2001ல்) தியேட்டருக்கு அழைச்சிட்டுப் போயிருக்கே, பழைய படத்தைப் பார்க்க வெச்சு கொடுமைபடுத்திருக்கியே?'( இன்றுவரை என் மனைவிக்கு பிடித்த ஒரே படம் நாடோடி மன்னன்) 'எல்லா எம்ஜிஆர் ரசிகர்களிடமும் நல்லா பழகிட்டு அவன் சரியில்ல... இவன் சரியில்லனுட்டு பலபேரிடம் இப்ப பேசுறதில்லையாமே, ஏன்?' ' நீதான் பெரிய உண்மையான எம்ஜிஆர் ரசிகனா?, எம்ஜிஆர் ரசிகரா இருக்க தகுதி இல்லாதவன், எம்ஜிஆர் பெயரைச் சொல்லி புகழ் அடையப் பார்க்கிறாய்' 'எம்ஜிஆர் பக்தன்னு சொல்ல உனக்கு என்ன அருகதை இருக்கு?' ' ஏம்பா சாமுவேலைத் தெரியுமா?' ' எந்த சாமுவேல்?' ' அதான் எம்ஜிஆர் எம்ஜிஆர்னு ...' ' ஓ..அவரா?... அய்யோ கொஞ்ச நேரம் பேசிட்டா போதும் நம்மை எம்ஜிஆர் ரசிகரா மாத்திடுவார்'' 'எம்ஜிஆரை மட்டுமேதான் புடிக்குமா? அரசியல் கட்சி, வேற அரசியல் தலைவர்களை பிடிக்காதா? ஆச்சரியமா இருக்கே?' ' நீங்க எம்ஜிஆர் ரசிகரா? நடை, உடை பாவனை எல்லாத்தையும் பார்த்தாலே தெரியுதே!' ....'என்னடா இது? நான்ஸ்டாப்பா போயிட்டே இருக்கு?' என உங்கள் மனதில் கேள்வி எழுவதை உணருகிறேன். 'எனக்கும் உன்னைப் போன்ற இதே அனுபவம் இருக்கு' என நீங்கள் சொல்வதும் புரிகிறது. மேலே நான் குறிப்பிட்டுள்ள அத்தனையும் என் அம்மா, மனைவி, மகன்கள், உறவினர்கள், நண்பர்கள், பகைவர்கள் என்மீது அன்பாக, வேடிக்கையாக, கோபத்துடன் உதிர்த்த வார்த்தைகள்! ( சரி அப்படியே வீடியோ- புகைப்படத் தொகுப்பையும் பாருங்க)........ Thanks...
Bookmarks