Page 342 of 402 FirstFirst ... 242292332340341342343344352392 ... LastLast
Results 3,411 to 3,420 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3411
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைத்து எம்ஜிஆர் நெஞ்சங்களுக்கும் வணக்கம்...

    முந்திய பதிவின் தொடர்ச்சியாக தலைவரின் நண்பர் மறைந்த அசோகன் அவர்களுடைய புதல்வர் வின்சென்ட் அசோகன் அவர்களின் தொடர் பதிவு.

    என் தந்தை முதலில் சினிமாவில் வாய்ப்பு கேட்டு நடிக்க போன இடம் ஜெமினி அவர்களின் வாசன் ஸ்டூடியோ...அப்போது அவர்கள் நடித்து காண்பிக்க சொல்ல அப்பா நடித்து காட்டிய காட்சிகள் மருதநாட்டு இளவரசி படத்தில் இருந்து சில காட்சிகள்.

    அப்பாவும் தலைவரும் இணைந்து பல வெற்றி படங்களில் பின் நடிக்க அப்பா ஒரு படம் தயாரிக்க விரும்பி அதில் அப்போது மிக பெரிய ஸ்டார் ஆன எம்ஜிஆர் அவர்களை வைத்து ஆரம்பிக்க பட்ட படம் நேற்று இன்று நாளை.

    1969..70..களில் துவக்க பட்ட இந்த படம் அருமையாக வந்து கொண்டு இருக்க சட்டென அரசியல் சூழ்நிலைகள் மாறிவிட படம் தாமதம் ஆனது.

    72 இல் எம்ஜிஆர் அவர்கள் தனிக்கட்சி துவங்க படத்தில் சில மாற்றங்கள் செய்யவேண்டிய சூழல்.

    கதை, பாடல்கள், வசனம் எல்லாம் சிறந்து வர முதலில் அதிமுக கட்சி கொடி எம்ஜியார் படத்தில் வந்தது இதே படத்தில் மட்டுமே.

    கட்சி வேலைகளில் எம்ஜிஆர் அவர்கள் மூழ்கி போக படம் தாமதம் ஆக வதந்திகள் பரவ தொடங்கின.

    ஒரு கட்டத்தில் அப்பா அவர்களே மனம் சோர்ந்து போகும் அளவுக்கு செய்திகள் பரவின....ஆனால் புரட்சிதலைவருக்கும் அப்பாவுக்கும் ஆன நட்பில் ஒரு சின்ன கீறல் கூட இல்லை...

    இந்த விஷயம் அவர்கள் இருவர் சம்பந்தப்பட்டது....இந்த படம் வர கூடாது என்று ஒருசிலர் முயற்சிக்க

    ஒரு நாள் என் அப்பாவை கூப்பிட்டு நீங்கள் இந்த படத்தை எடுத்தவரை போதும் எங்களிடம் விற்று விடுங்கள்...நீங்கள் செலவு செய்தது போக ஒரு மிகப்பெரிய தொகையை உங்கள் பட நிறுவனத்துக்கு நாங்கள் தருகிறோம் என்று சொல்ல

    என் அண்ணன் அமல் ராஜ் பெயரில் அப்பா இந்த நிறுவனைத்தை ஆரம்பித்து இருந்தார்.
    அவர்கள் சொன்ன வற்றுக்கு ஒப்பு கொள்ளாத அப்பா படம் வந்தால் வரட்டும் யாருக்கும் உரிமையை விற்பதில்லை என்று சட்டுனு கிளம்பி வெளியே வருகிறார்.

    அனைத்து நிகழ்வுகளையும் தெரிந்து கொண்ட எம்ஜிஆர் அவர்கள் அப்பாவை அழைத்து நடப்பது நம் இருவருக்கு மட்டுமே தெரியும்.. படம் தொடரும் என்று சொல்லி ஒரு அடுத்து வர இருந்த ஒரு கனவு காட்சி பாடலை அடுத்து வர விருந்த வாங்கி இந்த படத்தில் இணைத்து. ( அந்த பாடல் நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்.)

    அத்துணை தடைகள் தாண்டி 12.07.74.இல் இந்த படம் வெளியானது...வியாபார ரீதியாக இந்த பெரும் வெற்றி பெற்றது...இந்த படத்தினால் அப்பாவுக்கு ஒரு நட்டமும் இல்லை..படம் தாமதம் ஆனது ஒன்றே தவிர வேறு ஒரு குறை இல்லை .

    நான் எங்கு போனாலும் இந்த கேள்வி கேட்காதவர் இல்லை.. அப்பாவுக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் என்ன பிரச்சனை என்று.

    அவர்கள் இருவரும் இன்று நம்மிடையே இல்லை...ஆனாலும் இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது என் கடமை ஆகும்.

    கோவையில் என்ஜினீயர் பட்ட படிப்பில் நான் சேரும் போது ஒரு வருடம் மட்டுமே அங்கு படிப்பேன்...பின் சென்னையில் படிப்பை தொடருவேன் என்று சொல்ல...முதல் வருடத்தில் நான் ஒரு பாடத்தில் தோற்க படிப்பை சென்னையில் தொடரமுடியவில்லை.

    அப்பா பின் சில நாட்களில் அம்மா இருவரும் மறைய என் அப்பாவின் அக்கா அத்தை தான் எல்லாம் எங்களுக்கு.

    என்னை சென்னையில் படிக்க தொடர முடியாமல் போனதில் வருத்தம் எனக்கு...முதல்வர் எம்ஜிஆர் நினைத்து இருந்தால் எல்லாம் நடக்கும் என்று நினைத்த புரியாத வயது அது.

    என் தாய், என் அத்தை, நான் எல்லோரும் என் சிறுவயதில் தலைவர் வீட்டுக்கு செல்ல எனக்கு விளையாட்டு பருவம்..பல முறை அங்கு சென்று விளையாடி மகிழ்ந்து உள்ளேன்.

    நான் என்ஜினீயர் ஆகி ஒரு நாள் அவரிடம் நான் ஆசி வாங்க என் அத்தை ஜானகி அம்மாவிடம் கேட்டு அனுமதி வாங்க.

    அனுமதி கிடைத்த அன்று காலையில் நான் தூங்கி விழிக்க 9 மணி ஆக...என் அத்தை புறப்படு இன்று நாம் முதல்வர் எம்ஜிஆர் வர்களிடம் சென்று நீ ஆசி வாங்க வேண்டும் என்று சொல்ல.

    அன்று பார்த்து எங்கள் வீட்டு கார் ஓட்டுநர் வரவில்லை.... எனக்கும் புரியவில்லை...சரி விடுங்கள்...இன்னும் ஒரு முறை போகலாம் என்று நான் சொல்ல.

    அன்று காலை 10 மணி அளவில் கோட்டைக்கு கிளம்பிய முதல்வர் அத்தை எங்கள் குடும்பம் வருவதாக சொல்ல சரி என்று.

    ஒரு 10 நிமிடம் காத்து இருந்து சரி விடு ஜானு நம்ம வீட்டு பிள்ளை தானே இன்னும் ஒரு முறை பார்த்துக்கொள்வோம் என்று கிளம்பிவிட.

    எனக்கு மீண்டும் ஒரு நாள் அந்த மனித புனிதரை பார்க்க தேதி கொடுக்க பட்டது.

    அந்த தேதி 1987 டிசம்பர் மாதம் 25 கிருத்துமஸ் அன்று காலை..

    அப்போது தான் நான் என்ன ஒரு விளையாட்டு தனம் நான் படிப்பில் ஒரு பாடத்தில் தோற்க அதனால் சட்டம் மீறி அவர் எனக்கு உதவி செய்ய முடியாத நிலையில்...ஒரு முதல்வர் காத்து இருந்தும் முன்பு நான் அவரை சந்திக்க

    என்று பேசி கண் கலங்குகிறார் வின்சென்ட் அசோகன் அவர்கள்.

    இதுதான் விதி என்பதா எம்ஜிஆர் நெஞ்சங்களே...நேற்று இன்று நாளை படம் வர கூடாது...அந்த பாடல் தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று என்று அன்று திரை அரங்குகளில் ஒலிக்க கூடாது என்று திரை போட்டவர்கள் சதியே மேற்படி நிகழ்வுகளுக்கு காரணம் என்று நமக்கு தெரியும்...நாட்டுக்கும் தெரியும்.

    பொருளாதார ரீதியாக மாபெரும் வெற்றி படமே அது...இன்றும் ஆங்கிலத்தில் yesterday today tomorrow... என்று அடிக்க பட்ட போஸ்டர்கள் கண் முன் வர.

    நன்றி வின்சென்ட் அசோகன் சார்....என்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் நெஞ்சில் உங்கள் குடும்பத்துக்கு என்று ஒரு நிரந்தர இடம் உண்டு.

    உங்கள் திரைத்துறை பயணம் வெற்றி பெற வாழ்த்தும் அனைத்து உலக எம்ஜிஆர் ரசிகர்கள்...நன்றி.

    வாழ்க எம்ஜிஆர் புகழ்.. தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி ..நன்றி......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3412
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    என் நண்பனை தேடி அவன் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவன் குடும்பம் ஒரு பிராமின் குடும்பம். அவன் தாயாரை பார்த்து ஏம்மா கிச்சா வீட்டிலே இல்லையா என்று கேட்டேன். இல்லடா பக்கத்தில் தான் போயிருக்கான் இப்போ வந்துடுவான் என்றார்கள். இல்லம்மா அவன் எங்கேன்னு சொல்லுங்க நான் போய் கூட்டிட்டு வர்ரேனு சொன்னேன். ஆத்துக்கு பின்னால் ஏதோ எம்ஜிஆர் படம் வருகிறது வால் போஸ்டர் ஒட்டியிருக்கான். அதை எல்லோரும் கூட்டமா நின்னு பாத்துண்டிருக்கா இவனும் அதை பார்க்கத்தான் அங்கே போயிருக்கிறான் நீ சித்த இரு இப்போ வந்துடுவான் என்றதும் இருங்கம்மா நானும் பார்த்துட்டு வாரேன் என்று கிளம்பி விட்டேன் போஸ்டரை பார்ப்பதற்கு. 1969 ம் வருடம் நவம்பர்
    2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று நினைக்கிறேன் ஒரு பெருங்கூட்டம் நின்று நம்நாடு வால்போஸ்டரை பார்த்துக் கொண்டிருந்தது. என் நண்பன் நடுநாயகமாக நின்று போஸ்டரைப்பற்றி பேசிக்கொண்டிருந்தான். எம்ஜிஆர் வாங்கையா வாத்தியாரய்யா பாட்டில் இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு போஸ் கொடுத்திருப்பார். வருகிறது என்று மேல் பகுதியிலும் தூத்துக்குடி சார்லஸில் என்ற சிலிப்புடனும் ஒட்டியிருந்தார்கள். அனைவரும் சிவந்த மண் கூட வருகிறது எது ஜெயிக்கும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். (நம்நாடு நவம்பர் 7ம்தேதியும் சிவந்த மண் நவம்பர் 9ம்தேதியும் வெளியானது. ஆனால் தீபாவளி நவம்பர் 8ம்தேதி கொண்டாடப்பட்டது) என் நண்பன் எல்லோரிடமும் நம்நாடு தான் ஜெயிக்கும் என்று சொல்லி கொண்டு இருக்கும் போது நான் அங்கே வந்ததும் வால்போஸ்டர் பிரமாதம்டா உங்க ஏரியாவில் ஒட்டிட்டானா என்று கேட்டான். நானும் அதை பார்த்து விட்டுத்தான் உன்னை பார்க்க வருகிறேன் என்றேன் தயாரிப்பு யார் தெரியுமா எங்க வீட்டு பிள்ளை,மாயாபஜார்,மிஸ்ஸியம்மா
    தயாரித்த விஜயா வாகினி நாகிரெட்டி சக்கரபாணி தான் அது. படம் நிச்சயம் சில்வர் ஜூப்லிதான்.
    வந்த அன்றைக்கே பாக்கணும். எங்க அப்பாகிட்டே சொல்லி காசு வாங்கணும் என்றான். அவன் அப்பா அந்த காலத்திலேயே 4 டிஜிட் சம்பளம் வாங்க கூடிய ஒரு பேங்க் ஆபிஸர். அவன் அப்பா டேய் அம்பி 2வது வாரத்தில் போகலாம்.முதல் வாரத்தில் கூட்டம் கன்னா பின்னான்னு. இருக்கும்னு சொல்லிட்டார். முதல் நாள் படம் பார்த்தவர்களிடம் படம் எப்படினு நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தான். படம் பிரமாதம்னு அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று ஒவ்வொரு காட்சியையும் படம் பார்க்காமலே எல்லோரிடமும் விவரித்தான். அப்படி அந்த சின்ன வயதிலேயே நாங்கள் எம்ஜிஆர் மீது மிகவும் அதிகமான பற்று வைத்திருந்தோம். இவ்வளவுக்கும் அவன்SSLCயில் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேறி முதல் பரிசு வாங்கினான். நான் கல்லூரியில் முதல் மாணவனாக வென்று முதல் பரிசை பெற்றேன். ஏன் சொல்கிறேன் என்றால் எம்ஜிஆர் ரசிகர்கள் என்றவுடன் படிப்பு வராது என்று நினைப்பவர்கள் அந்தக்காலத்தில் அதிகம். அவனும் தேசிய வங்கியில் மிக உயரதிகாரியாக வேலை செய்து ரிடையர் ஆகி விட்டான். நானும் தேசிய வங்கியில் வேலை செய்து VRSல் வந்து விட்டேன். அவனுடைய தாயார் தற்போது நினைவு இழந்து கொண்டு வருகிறார்கள். சென்ற வாரம்KTV யில் நம்நாடு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த போது அவர்கள் படத்தை பார்த்தவுடன் என்னை நினைத்து டேய் உன் பிரண்டுக்கு போன் பண்ணி சொல்லுடா அவனும் படம் பார்க்கட்டும் அந்தக் காலத்தில் நம்நாடு வால்போஸ்டரை பார்ப்பதற்கு என்ன அலைச்சல் அலைந்தீர்கள் என்றார்களாம். அவர்களுக்கு 85 வயதுக்கு மேல் ஆகி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நினைவை இழந்து கொண்டு வந்தாலும் நம்நாடு போஸ்டர் நினைவை இழக்காததை என் நண்பன் சொல்லும் போது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
    என் நண்பனும் நானும் போனில் பேசினால் குறைந்தது 1மணி நேரம் பேசுவோம். கடந்த கால எம்ஜிஆர் நினைவுகளை பகிர்ந்து கொள்வோம். மற்ற நினைவுகளை இழந்தாலும் தன் மகன் எம்ஜிஆர் மீது கொண்ட பற்றினை இன்னமும் ஞாபகம் வைத்திருக்கும் அந்த தாயின் தாய்மை உள்ளம் என்னை நெகிழ்ச்சி அடைய வைத்தது..... Thanks...

  4. #3413
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #நண்பர்கள்_அனைவரும்
    #இனிய_மதியவேளை_வணக்கம்

    கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டான் அந்த மாணவன்.

    கொஞ்சம் பெரிய படிப்புதான்.
    எனவே அதற்கு பெரிய தொகை நன்கொடையாக தேவைப்பட்டது.

    1000 ரூபாய் என்பது 1968 ல் பெரிய தொகைதானே !

    யாரிடமும் போய் உதவி கேட்டுப் பழக்கமில்லை. என்ன செய்வது?

    #ஒரே_ஒருவர்_நினைவுதான்_அவனுக்கு #உடனே_வந்தது.

    தயக்கத்துடன் போனான். தடுமாற்றத்துடன் தன் நிலையை எடுத்துச் சொன்னான்.

    அமைதியாக அமர்ந்து அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர் அடுத்த நாள் அவனை வரச் சொன்னார். பணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை ஓரளவு அவனுக்கு வந்தது. நிம்மதியுடன் புறப்பட்டு வீடு சென்றான்.

    #மறுநாள்_பணத்தை_எதிர்பார்த்து #சென்ற_அந்த_மாணவன்_கையில்
    #ஒரு_காகிதத்தை_கொடுத்தார்_அந்த #மனிதர்_புரியாமல்_அந்த_காகிதத்தை #புரட்டிப்_பார்த்தான்.
    #அது_ஒரு_ரசீது_1000_ரூபாயை
    #அந்த_கல்லூரியில்_தன்_பெயரிலேயே #செலுத்தி_அதற்கு_ரசீது_வாங்கி #வைத்திருந்தார்_அந்த_மனிதர்.

    ஆனந்தக் கண்ணீர் ஆறாக பொங்கி வழிய நன்றி சொல்ல வார்த்தை எதுவும் இன்றி தவித்தான் அந்த மாணவன்.

    கல்லூரி வாழ்க்கை தொடங்கியது.

    சரி. அந்த கட்டண ரசீது என்ன ஆனது ? புத்தகங்களுக்கு நடுவே புகுந்து கொண்டதா ?
    அல்லது பூஜை அறை சாமி பக்கத்தில் சயனம் கொண்டதா ?

    இல்லை. அப்படி எல்லாம் அந்த மாணவன் செய்யவில்லை. அந்த ரசீதை அழகாக லாமினேட் செய்து பத்திரமாக தன்னுடனே வைத்துக் கொண்டான் அந்த மாணவன்.

    காலத்தாற் உதவி செய்த அந்த மனிதர், சில ஆண்டுகளுக்குப் பின் காலமாகி விட்டார்.

    அந்த மாணவன் படித்து முடித்து, உத்தியோகத்திலும் அமர்ந்து ஓய்வும் பெற்று விட்டார்.

    ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய பணத்தை எடுக்க, பக்கத்திலுள்ள ATM போகிறார். அங்கே மெஷினிலுள்ள பட்டன்களை அழுத்துகிறார்.
    கட கடவென்ற ஓசைக்குப் பின்...

    #பணத்தை_கொடுப்பது_எல்லோரின் #கண்களுக்கும்_எந்திரமாக_தெரிகிறது.
    #சம்பந்தப்பட்ட_இந்த_மனிதருக்கு
    #மட்டும்_அது_எம்ஜிஆராக_தெரிகிறது.

    ஆம். 1967-68 ல் இவர் கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டபோது உடனடியாக நிதி உதவி செய்த அந்த மாமனிதர் எம்ஜிஆர்.

    எம்ஜிஆர் தன் பெயரில் பணம் செலுத்தி படிக்க வைத்த அந்த மாணவர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மகன் Nallathambi Nsk.

    #இதோ_நல்லதம்பி_அவர்களே
    #சொல்லும்_அந்த_நன்றிக்_கதை..

    "1967 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியாவில் Engineering படிக்க சேர்ந்தபோது, மக்கள் திலகம் எனக்காக கட்டிய Capitation Fees Receipt.
    அதை Laminate செய்து வைத்துள்ளேன்.

    கல்லூரியில் சேரும்போது தலைவர் என்னை கூப்பிட்டு "
    #கலைவாணர்_பல #கோடிகள்_சம்பாதித்தார்_ஆனால் #அதையெல்லம்_தர்மம்_செய்துவிட்டு #அழியாத_புகழை_விட்டு_சென்றுள்ளார்.
    #எனவே_செல்வம்_அழிந்து_போகும்.
    ஆனால் நான் உனக்கு கொடுக்கப்போகும் கல்வி அழியாது. நன்றாக படி"என்று ஊக்கமும் கொடுத்தார் எம்ஜிஆர்.

    #படித்து_வேலை_செய்து_ஓய்வு
    #பெற்றுவிட்டேன்_இன்றும்_ATM_சென்று #ஓய்வூதியம்_பெறும்போது_அரசாங்கம்
    #கொடுப்பதாக_எனது_கண்களுக்கு
    #தெரியவில்லை
    #தலைவர்எனக்கு_கொடுப்பதாக #நன்றியோடு_நினைத்துக் #கொள்கிறேன்."

    நன்றி நல்லதம்பி அவர்களே !

    உங்கள்
    நல்ல மனம் வாழ்க !
    நன்றி மறவாத
    அந்த தெய்வ குணம்
    வாழ்க !

    #நன்றி_மறவாத_நல்ல_மனம்_போதும்
    #என்றும்_அதுவே_என்_மூலதனம்_ஆகும்
    #எனப்_பாடிய_வரிகளுக்கும்
    #அது_போல_வாழ்ந்து_காட்டிய
    #மன்னாதி_மன்னன்
    #பொன்மனச்செம்மல்_எம்ஜிஆர்_புகழ்...
    #என்றென்றும்
    #வாழ்க_வாழ்க... !

    அண்ணன் நல்லதம்பி அவர்கள் கல்லூரியில் சேர்ந்துவிட்டு,
    #மக்கள்திலகம் அவர்களை சந்தித்து செய்தி சொல்கிறார்...

    கல்லூரியில் சேர்ந்துவிட்டாய் மாத செலவுக்கு என்ன செய்வாய் என்று கேட்கிறார் நம் #வள்ளல் அதை எதிர்பார்த்து செல்லாத அண்ணன் நல்லதம்பிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

    #நம்_இறைவன்_சொன்னார்_மாதா #மாதம்_செலவுக்கு_இங்கு_வந்து_பணம் #பெற்றுக்கொள்_என்கிறார்.

    அடுத்த மாதம் தோட்டத்திற்கு செல்கிறார். அப்போது #தலைவர் வெளியே புறப்பட்டுக் கொண்டிருகிறார். என்ன செய்வது என்று அண்ணன் நல்லதம்பி யோசிக்க...
    இவரை பார்த்த #பொன்மனச்செம்மல் #ஜானகி_அம்மையாரை காணச் சொல்லிவிட்டு புறப்பட்டுவிடுகிறார். ஜானகி அம்மையாரை சந்தித்தால், அந்த மாத செலவுக்கு பணம் கொடுத்து, ஒவ்வொரு மாதமும் வாங்கிக் கொள்ள சொல்கிறார். அண்ணன் நல்லதம்பி தன் கல்லூரி படிப்பு முடியும் வரை அந்த தொகையை பெற்றுக் கொண்டார்.

    அன்புடன்
    படப்பை
    ஆர்.டி.பாபு........ Thanks...

  5. #3414
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெயா மூவிசி ல் தினசரி காலை 7 மணிக்கு
    ஒளிபரப்பாகும் படங்கள்
    ----------------------------------------
    21/04/20- ஊருக்கு உழைப்பவன்

    22/04/20- ஒரு தாய் மக்கள்

    23/04/20- குமரிக் கோட்டம்
    தொடரும் சாதனைகள் !
    _________________________
    கொரோனா காலகட்டத்திலும் மக்கள் திலகத்தின் சாதனைகள் தொடர்வது
    வியப்பின் விளிம்பிற்கே நம்மை அழைத்து செல்கிறது சன் தொலை காட்சியில் இன்று இரவு 9-30 மணிக்கு அன்பேவா
    நாளை இரவு 9-30 மணிக்கு எங்க வீட்டுப் பிள்ளை இது இல்லாமல் மற்ற தொலைகாட்சியிலும் நம் மக்கள் திலகத்தின் படங்கள் அனைத்து தொலைகாட்சியினருக்கும் நன்றி ! நன்றி ! நன்றி !

    ஹயாத் !....... Thanks...

  6. #3415
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி: மதுரை ராமகிருஷ்ணன்....From 20.3.2020 to 20.4.2020
    Sunlfe
    Murasu
    Jaya
    Mega
    Vasanth TV channels.
    MGR's 62. MOVIES TELECASTED.
    1. Adimaipenn
    2. Namnadu
    3. Mattukkaravelan
    4. En Annan
    5. Thedi vantha mappillai
    6. Engal thangam
    7. Kumarikottam.
    8. Rikshakaran
    9. Neerum neruppum.
    10.oru thai makkal.
    11.sange muzhanku.
    12.Nalla neram
    13.Raman thediya seethai
    14.Naan yen PIRANTHEN.
    15.Idhaya veenai
    16.ulagam sutrum valiban
    17.pattikattu ponniah
    18.urimai kural
    19.Ninaiththai mudippavan
    20.Naalai namadhe.
    21.Idhayakani
    22.Pallandu VAZHGA.
    23.Neethikku thalai vananku.
    24.uzhaikkum karangal
    25.oorukku uzhaippavan.
    26.Navarathinam.
    27.kadhal vaganam
    28.kanavan
    29.Puthiya bhoomi
    30.kannan en kadhalan
    31.Ther tiruvizha
    32.kudiyiruntha koil
    33.Ragasiya police 115
    34.vivasayi
    35.kavalkaran
    36.Arasakattalai
    37.Thaikku thalaimagan
    38.Petralthan pillaya
    39.Thanipiravi
    40.Chandrothayam
    41. Mugarasi
    42. Naan anayittal
    43.Anbe vaa
    44.Enga veettu pillai
    45.Ayirathil oruvan
    46. Kalangarai vilakkam
    47. Kannithai
    48. Thazhampoo
    49. Thayin madiyil
    50. Padakoti
    51.Thozhilali
    52.Deiva thai
    53.panakkara kudumbam
    54.vettaikaran
    55.Dharmam thalai kakkum
    56.Periya idathu penn
    57.Neethikku pinpasam
    58.Thayaikathathanayan
    59.Tirudathe
    60.Thai solla thattathe
    61. NALLAVAN VAZHVAN
    62.qulebagavali
    Plus 7 movies
    Aanantha jothi
    Koduthu vaithaval
    Vikkiramathithan
    Mannadhi mannan
    Alibabavum 40 tirudargalum
    Nadodimannan
    Mahadevi Total 70 movies.
    கொரோனா ஊரடங்கு காலத்தில் தொலைக்காட்சிகளில் கடந்த ஒரு மாதத்தில் எம்ஜிஆரின் 70 திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன.......... Thanks.........

  7. #3416
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அய்யா ......

    காங்கிரஸ் ஆட்சியிலே .. கடுமையான அரிசிப் பஞ்சம் ஏற்பட்டது.

    அரசி பஞ்சத்தை நீக்குவதற்கு காங்கிரஸ் அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. அதனால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

    அண்ணா ஆட்சி அமைத்தார். ஓராண்டு காலமே உயிர் வாழ்ந்தார். இதில் அண்ணாவை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    திரு, கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். அரசி பஞ்சத்தை நீக்கினாரா..? இல்லை.. அவருடைய பஞ்சத்தை நீக்குவதற்கே அவருக்கு நேரம் போதவில்லை.... இதில் மக்களுடைய அரிசி பஞ்சத்தை எப்படி போக்குவார்...? அதனால் அவரும் ஆட்சியை இழந்தார்.

    நாங்கள், இட்லியை சாப்பிட விரும்பினால்... எங்கள் வீட்டில் தீபாவளிக்கு அல்லது பொங்கலுக்கு தான் இட்லியை தருவார்கள். இதுதான் அன்றைய நிலை.

    புரட்சித் தலைவர் ஆட்சிக்கு வந்தவுடன் தான்... அரிசிப் பஞ்சம் போனது.

    ஏழைகள் வயிறார அரிசி உணவுவை அருந்தினார்கள்.

    எங்களுக்கும் வாரத்திற்கு இரண்டு நாள் அல்லது மூன்று நாள் இட்லி கிடைத்தது.
    நாங்களும் மனமகிழ்ந்து இட்லி சாப்பிட்டோம்.

    இப்படி எங்களை வாழ வைத்த தலைவரை நாங்கள் மறக்க முடியுமா ...?

    ������������������������������........ Thanks...

  8. #3417
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [வரலாற்றில் 15 நவம்பர் 1983 முதல்வர் #எம்ஜிஆர். சட்டமன்ற விவாத்தில் அளித்த பதில்..

    பழ.நெடுமாறன் 1000 பேருடன் யாழ்ப்பாணம் செல்லும் போராட்டம் அறிவித்த நிலையில் உரிய நாள் வந்ததும், ராமேஸ்வரத்தில் இருந்து அனைத்து படகுகளும் அப்புறப்படுத்தப்பட்டன.

    இதுகுறித்து எழுந்த விமர்சனத்துக்குச் சட்டப்பேரவையில் 15 நவம்பர் 1983 அன்று முதல்வர் எம்.ஜி.ஆர். அளித்த பதிலில்..

    "நெடுமாறன் படகில் அங்கே போய், இடையில் யாராவது சுட்டால் அவரிடம் துப்பாக்கி இருக்கிறதா? தடுப்புக் கருவிதான் இருக்கிறதா?

    ஒன்றும் இல்லை; மனத்துணிவுதான் இருக்கிறது.

    அங்கே போய் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது?

    அதனால்தான் படகுகள் இல்லாமல் செய்தோம்... நான் போய் பிரசாரம் செய்யமுடியாது; நெடுமாறன் செய்கிறார்;

    ஆட்கள் வருகிறார்கள்; பத்திரிகைகளில் செய்தி வருகிறது;

    வரட்டும். அது, அந்த நாட்டுக்கு நல்லதாக அமையட்டும்.

    உணர்வுகள் பெருகுமானால் பெருகட்டும் என்பதற்காகவே அவரைக் கைது செய்யாமல் விட்டோம்"
    ]........ Thanks...

  9. #3418
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [கஷ்டப்பட்டதை மறக்காதவர்! (பாகம் 1)

    அரச அவையில் சில திட்டங்களை மன்னனாக இருந்து நாடோடி வீராங்கன் அறிவிக்கின்றான். அதில் தொலைநோக்கு பார்வை கொண்ட வசனம் :–

    “ஐந்து வயது ஆனவுடனே குழந்தைகளைக் கட்டாயமாகப் பள்ளியில் சேர்க்க வேண்டும். தவறினால் பெற்றோருக்குத் தண்டனை உண்டு, பள்ளிப் படிப்பு முடிந்து தொழிலில் ஈடுபடும் வரையில் மாணவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது.”

    எம்.ஜி.ஆர். மூன்றாவதுக்கு மேல் படிக்க முடியாத வறுமைச் சூழலில் இருப்பது போன்ற பிள்ளை செல்வங்கள் படித்து நாளைய உலகை உருவாக்கும் நல்லவர்களாக உயர்வதற்கான திட்டமிடல் இந்த வசனங்களில் புதைந்திருப்பதை அறியலாம்.

    ”தான் நடித்த காட்சி மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்காமல் படம் முழுவதும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்.

    குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும்படியாக படம் எடுக்க வேண்டும், பொழுதுபோக்குப் படத்திலும் நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும்’ என்பார். இந்த கருத்து சின்னவருடைய மனதில் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சின்னவர் நடித்த ’வீரஜெகதீஷ்’ என்ற பழைய படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் வந்த அந்த படத்தில் ஒரு காட்சியில் புகை பிடிப்பவனுக்கு சின்னவர் அறிவுரை சொல்வதுபோல வசனம் இருக்கும். ஏழ்மையில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, ஏழ்மையை சந்தித்து வாழ்ந்தவர். காலில் செருப்பு கூட இல்லாமல் பல இடங்களுக்குச் சென்று பல கஷ்டங்களை அனுபவித்தவர், அந்த வறுமை தந்த பாடமே வாழ்க்கைத் தத்துவத்தை அவருக்கு உணர்த்தியது எனலாம். புகழும் பெருமையும் வந்த காலத்தில், இளைமையில் வறுமையில் தான் பட்ட கஷ்டங்களை மறந்து இருக்க முடியும். ஆனால், அவர் கடைசி வரையிலும் அதை மறக்கவில்லை. அது அவரது சிறப்பு” என்பது இயக்குநர் கே. சங்கரின் அனுபவம்.

    எம்.ஜி.ஆர். பாடல்கள் பேசப்படக் காரணம்?

    சின்னவரின் படங்களில் பாடல்கள் புகழ்பெற, வாழ்க்கையில் அவர் அனுபவித்து அறிந்ததை பாடல்களில் சொன்னதும் ஒரு காரணம்.

    பாடல் பதிவின் போது ஒரு பாடலை அவர் ஓ.கே. செய்தால் இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் அப்பாடா மறு ஜென்மம் என்று சொல்வார்கள். (அந்த அளவுக்கு பாடலில் கவனம் செலுத்தி வேலை வாங்குவார்) சின்னவருக்காக ஒரு பாடலுக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் 25 டியூன்களைப் போட்டுக் காட்டியிருக்கிறார்.

    ’இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தில் வரும் ‘அன்புக்கு நான் அடிமை’ பாடல் காட்சியை இரவு ஒன்பது மணிக்கு ஷூட் பண்ண ஏற்பாடு, அதற்கு ஒரு வாரமாகவே முயற்சித்தும் பாடல் சரியாக அமையவில்லை.

    அந்தக் காட்சியை படமாக்க இரண்டு மணி நேரத்திற்கு முன் மாலை 7 மணிக்கு கவிஞர் முத்துலிங்கம் எழுத பாடல் ஓ.கே. ஆனது” என்கிறார் இயக்குநர் கே. சங்கர்

    'நினைத்ததை முடிப்பவன்' படத்திற்காக கவிஞர் மருதகாசியை ஒரு பாடல் எழுத வைத்தார்.

    “கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என்ற பாடலின் சரணத்தை
    “பொன் பொருளை கண்டவுடன்
    வந்த வழி மறந்துவிட்டு
    தன்வழியே போகிறவர் போகட்டுமே!”
    என்று கவிஞர் எழுதி காட்டினார்.

    “தன் வழியே என்று சொல்கிறீர்களே… அது ஏன் ஒரு நல்ல வழியாக இருக்கக்கூடாது? நல்ல வழியாக இருந்தால் ஒருவன் ஏன் தன் வழியில் போகக்கூடாது? அதைத் தவறு என்று எப்படிச் சொல்லமுடியும்?” என்று புரட்சித்தலைவர் சொல்ல, ’தாங்கள் விரும்புவது என்ன? இந்த இடத்தில் எப்படியிருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றீர்கள்?” என்று கவிஞர் கேட்கிறார்.

    Cont...]....... Thanks....

  10. #3419
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    “ (பாகம் 2) தீய வழி என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் இருக்க வேண்டும்” என்கிறார் மக்கள் திலகம்.
    ‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’
    என்ற வரிக்குப் பதிலாக
    ‘கண்மூடிப் போகிறவர் போகட்டுமே’
    என்று எழுதி கவிஞர் சொல்ல,
    “ஆகா… பொருத்தமான வரி! அற்புதம்” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் எம்.ஜி.ஆர். “ஒவ்வொரு வார்த்தையையும் எவ்வளவு நுட்பமாக எம்.ஜி.ஆர். கூர்ந்து கவனிக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய அறிவாற்றல் மிக்கவர்களோடு பணிபுரிவது பெரும் பாக்கியம்” என்று தன்னிடம் கவிஞர் மருதகாசி மொழிந்ததை வழிமொழிகிறார் பத்திரிகையாளர் நாகை தருமன்.
    “எந்தக் காட்சியும் படமாக்குவதற்கு முன்னதாக ரசிகர்கள் மத்தியில் எந்தளவிற்கு வரவேற்பு பெறும், எந்த விதத்தில் படமாக்கினால் நன்றாக அமையும் என்றெல்லாம் விவாதித்த பிறகுதான் ஒப்புக் கொள்வார். அவருககுத் தெரியாத எந்தப் பிரிவுமே இந்தத் துறையில் கிடையாது” என்று அழுத்தமாகச் சொல்கிறார் தேங்காய் சீனிவாசன்.......... Thanks...

  11. #3420
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Con-1
    சிவாஜிக்கு 60 படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதி அவரின் பாராட்டுக்களைப் பெற்றார்.
    கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் நிழற்படங்களிலும் ஒலித்தன. நிஜவாழ்க்கையிலும் அவை பிரதிபலித்தன.
    எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்...' ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்ததை எதிரொலித்தது. அதன்பிறகு அவர் வெளியே வந்த பிறகும் அவரது மூன்றெழுத்து பெயரும் இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்...' இந்தப் பாடல் வரிகளும் நிஜமாகின. சினிமாவில் நடிக்க வந்த எம்.ஜி.ஆரை முதலமைச்சராக மாற்றியது. அவரும் தனது ஆட்சியில் ஏழை எளியோரை வேதனைப்படாமல் பார்த்துக் கொண்டார்.
    ஜெமினியின் ‘ஒளிவிளக்கு' படத்தில் கதைப்படி தீ விபத்துக்குள்ளான எம்.ஜி.ஆரை காப்பாற்ற வேண்டி ஊர்மக்கள் பிரார்த்தனை செய்து பாடுவதுபோல் ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார் வாலி.
    ‘இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு
    தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு'
    இந்தப்பாடல் படத்தில் ஒலித்து பாராட்டுக்களை பெற்றது.
    இதேப் போன்று எம்.ஜி.ஆர் நிஜமாகவே உடல்நலம் சரியில்லாத போது அவர் நலம் பெற வேண்டி உலகம் முழுவதும் மக்கள் இந்தப்பாடலைப் பாடித்தான் பிரார்த்தனை செய்தார்கள்.
    எம்.ஜி.ஆர் நடித்த ‘தலைவன்' என்றொரு படம். நீண்ட காலமாகவே முடிக்கப்படாமல் கிடப்பிலிருந்த படம். எதனால் இந்தப்படம் எடுத்து முடிக்க தாமதமாகிறது என்று யோசித்த எம்.ஜி.ஆர்., கவிஞர் வாலியை அழைத்து, 'இந்தப்படம் தாமதமாவதற்கு நீங்கள்தான் காரணம்,' என்று கூறினார். வாலியும் 'நான் எப்படி காரணமாவேன்?' என்று கேட்டார்.
    அதற்கு எம்.ஜி.ஆர். நீங்கள் எழுதி கொடுத்த பாடல் வரிகளை திரும்பவும் சொல்லிப்பாருங்கள் என்றார் எம்.ஜி.ஆர்.
    ‘நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருக்க...' இப்படி பாடல்வரிகளை எழுதி கொடுத்தால் எப்படி படம் முடியும் வெளியே வரும் என்றார் சிரித்துக் கொண்டே எம்.ஜி.ஆர்........ Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •