Page 340 of 402 FirstFirst ... 240290330338339340341342350390 ... LastLast
Results 3,391 to 3,400 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3391
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இது எப்படி இருக்கு??
    -------------------------------
    இன்றையப் பதிவு கொஞ்சம் அபூர்வமானது!
    அனேகமாக பெரும்பாலானவர்கள் கேட்டிருக்க நியாயமில்லை!!
    எம்.ஜி.ஆர் விசுவாசிகள் வெறும் புன்னகையோடும்-ஜெ அபிமானிகள் வாய்க் கொள்ளா சிரிப்போடும் நிச்சயம் இந்தப் பதிவை எதிர்க் கொள்வார்கள்??
    ஆம்! இது செல்வி ஜெ பற்றியதே!!
    புத்தகப் புழு என்று சொல்லப்படும்--
    அண்ணா--நேரு--வரிசையில் இவர் இளைய சகோதரி!!
    அடுத்தவர் தாள் தொடாமல் இருந்திருக்கலாம். ஆனால் தாள் தொடாமல் இருந்ததில்லை!!
    மொத்த -கமும் இவர் விரும்பித் திணிப்பது-
    புத்தகம் ஒன்றில் தான்!!
    இவர் கட்டும் சேலையும்--
    கையில் இருப்பதும்--நூல் தான்!!!
    சரி! சிறிய நிகழ்வு ஒன்றைப் பார்ப்போம்!!
    ராஜா கண்ணப்பன் என்றொருவர்.
    சிவகங்கை அ.தி.மு.க செயலாளராக எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தவர். ஜெ காலத்தில் யூனியன் மினிஸ்டராக நெடுஞ்சாலைத் துறையை கவனித்தவர்.
    இவர் இன்று எந்தக்கட்சியில் இருக்கிறார் என்று எமக்குத் தெரியாது. ஆகையினால் இவரது ரிஷி மூலம் குறித்த வாள் சண்டை தேவையில்லை?
    நமக்குத் தேவை நிகழ்வு மட்டுமே!!
    அவ்ர் ஒரு மானிய கோரிக்கையில் கண்ணப்பன் பெயரைக் குறிப்பிடும்போது--கலைஞர் குறுக்கிட்டு,,-
    அம்மையார் வாய் தவறி என்னப்பன் என்று குறிப்பிடுகிறார் என்று அருகில் ஆற்காடு வீராசாமியிடம் விஷமம் தொனிக்கக் குறிப்[பிட--
    சரேலென்று பதில் சொல்கிறார் ஜெ---
    வயது காரணமாக நான் கண்ணப்பன் என்று குறிப்[பிட்டது உங்கள் காதில் என்னப்பன் என்று விழுந்திருக்கலாம்!
    தஞ்சை மண்ணில் இருந்த உங்களுக்கு என்னப்பன் அருள் தான்--[சிவன்]--கிடைக்க்வில்லை அவர் பெயரையாவது சொல்வோமே என்ற் உங்கள் எண்ணத்தைப் பாராட்டலாம் என்று பதில் கூற--அருகில் இருந்த வீராசாமி--
    கலைஞர் ஆட்சியிலே திருவாரூர் தேர் ஓடியதை சுட்டிக் காட்ட--
    இருக்கும் இடத்தில் இருந்தால் இவர்கள் ஆட்சியில் நம்மைக் கூட இவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள் என்று அந்த தேருக்கே பயம்?? என்று அம்மையார் கொடுத்த மின்னல் வேக பதிலடி???
    ஸ்ரீ முருகன் படத்தில் ருத்ர நடனம் ஆடியதன் மூலம் ஹீரோவாக ஆன எம்.ஜி.ஆரின் அரசியல் மாணவி அல்லவா???....... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3392
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #நெஞ்சம்மறப்பதில்லை

    எம்ஜிஆர்... என் வாழ்வில் மறக்க முடியாத மாமனிதர்! - ஏவிஎம் சரவணன்

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.மீது மிகுந்த மரியாதை கொண்டவர் ஏவிஎம் நிறுவன அதிபர் ஏவி மெய்யப்பன். அதிலும் ஏவிஎம்மின் புதல்வர்களான எம் முருகன், எம் குமரன், எம் சரவணன், எம் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அவரது ரசிகர்கள். எம்ஜிஆர் படங்களை விரும்பிப் பார்ப்பவர்கள். எம்.ஜி.ஆர். அவர்களின் படம் ரிலீஸ் ஆகும் அன்றைக்கு முதல்நாள் முதல் காட்சிக்கே போய் படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள்.

    அப்போதெல்லாம் எம்ஜிஆர் படங்கள் முதலில் தாம்பரத்தில் ரிலீசாகி, பிறகுதான் சென்னை நகரில் ரிலீசாகும். "இங்கே சிட்டியில் ரிலீசாகமாலா போகும்? அப்பபோய் பாருங்களேன்,' என்பார் ஏவிஎம் மெய்யப்பன். ஆனால், "முதல் நாளே அவர் படம் பார்த்தால்தான் எங்களுக்கு திருப்தியா இருக்கும்.

    MGR and AVM
    அதனால்தான் எம்.ஜி.ஆர் தயாரித்து, தானே இயக்கி நாயகனாக நடித்த 'நாடோடி மன்னன்' படம் வெளியானதும் நானும் என் சகோதரர்களும் (முருகன் & குமரன்) தாம்பரம் ஜி.ஆர்.தியேட்டரில் (இப்போது எம்.ஆர். தியேட்டர் என்ற பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) முதல் நாளே படத்தைப் பார்த்தோம். அந்த த்ரில் இன்றும் எங்கள் நினைவிலிருக்கிறது," என்றுஎம்.ஜி.ஆர் பற்றியான பசுமையான நினைவுகளைக் கூறுகிறார் ஏவிஎம் சரவணன்.

    "அவர் கத்தி சண்டை போடும் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும். 'சண்டை போடும்போது ஒரு பறவையை பிடிப்பது போல் லாவகமாக கத்தியைப் பிடிக்க வேண்டும் என்பார்கள். ரொம்ப அழுத்தினால் பறவை காலி. ரொம்பவும் லேசாகப் பிடித்தால் தப்பிப் போய்விடும்.

    அதுபோலத்தான் கத்தியும். ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தம் தந்து பிடித்தால்தான் அதை அழகாகச் சுழற்றி சண்டை போட முடியும்,' என்பார் எம்.ஜி.ஆர்.

    MGR and AVM
    இப்படி சிறிய வயதிலிருந்தே எம்.ஜி.ஆரைஎனக்கு மிகவும் பிடித்துப் போனதாலோ என்னவோ எங்கள் ஏவிஎம் பேனரில் எம்.ஜி.ஆரை வைத்துப் படம் ஒன்று தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள் வளர்ந்து கொண்டே வந்தது.

    எனது நண்பர் நடிகர் எஸ்.ஏ.அசோகன் அவர்களும் அடிக்கடி என்னைச் சந்திக்கும்போதெல்லாம் 'எம்.ஜி.ஆரை வைத்து நீங்கள் ஒரு படம் எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்திக் கொண்டே இருப்பார். எங்கள் விநியோகஸ்தர்களும் இதே கருத்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்கத் தயாரானோம். டைரக்டர் ஏ.சி. திருலோகச்சந்தரிடம் எம்.ஜி.ஆருக்கான ஒரு கதையை தயார் செய்யச் சொன்னோம். இதைஎங்கள் தந்தையிடம் சொல்வற்கு போனோம். எங்களுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயமாகவே இருந்தது. ஏனென்றால் எங்களது நிறுவனத்தில் கதைக்குதான் ஹீரோவைத் தேடுவோம்.

    ஹீரோவுக்காக கதை கிடையாது. முதலில் நல்லகதையை முடிவு செய்தபிறகுதான் ஹீரோ பற்றியே பேசுவோம். அதனால் தான் முதலில் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தரை எம்.ஜி.ஆருக்கு ஒரு கதையை தயார் செய்ய சொன்னோம். எங்களது தந்தையும் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். அடுத்து எம்.ஜி.ஆர்.ஒப்புக்கொள்ள வேண்டுமே.

    நாங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு விரைந்தோம். அவருக்குள்ளும் எங்கள் நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. கேட்டதும் 'ஓ.எஸ்....

    பண்ணிடுவோம்' என்றுமகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.

    ஏ.சி.திருலோகசந்தர் கதை சொன்னார். அப்போது பிரபலமாக ஓடிய 'கம்செப்டம்பர்' என்ற ஆங்கிலப் படத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை அது.

    கதையைச் சொன்னார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துவிட்டது.1965ஆம் ஆண்டு ஜனவரியில் 'எங்க வீட்டு பிள்ளை' ரிலீசாகியது.1966 ஜனவரி பொங்களுக்கு நாங்கள் 'அன்பே வா' என்ற பெயர் சூட்டியிருக்கும் இந்தப் படத்தை வெளியிட ஆசைப்பட்டு எம்.ஜி.ஆரைக் கேட்டோம்.

    அவர், "அது முடியாது வீரப்பாவுக்கு (ஆம்.எம்.வீரப்பன்) 'நான் ஆணையிட்டால்' படத்தை வெளியிட ஒப்புக்கொண்டேன். அதன்பிறகு உங்கள் படம் ரிலீசாகட்டும்.

    எதற்கும் வீரப்பாவிடம் பேசிவிட்டு பதில் சொல்கிறேன்," என்றார்.

    'அன்பே வா' படத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டார். ஒப்புக் கொண்டோம். ஆனால் ஜனவரி பொங்கலுக்கு (1966) 'அன்பேவா' ரிலீசாக 25 ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கேட்டார். இந்தப் படத்திற்காக அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டது மூன்றே கால் லட்சம் ரூபாய்.

    'அன்பே வா' படத்தை நாங்கள் சொன்னப்படி 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலன்று ரிலீஸ் செய்தோம்.

    'அன்பே வா' படத்தின் முக்கிய காட்சிகள் சிம்லாவில் படமாக்கப்பட்டன. சிம்லாவில் பயங்கர குளிர். அங்கே போர்முனையில் காயம் அடைந்த இந்திய படையினருக்கான நிதி திரட்டும் நிகழச்சி அங்கே நடந்துக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் படப்பிடிப்பு முடிந்த மாலை நேரத்தில் போய் கலந்துக் கொண்டார்கள். நீங்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் எவ்வளவு பணம் திரட்டுகிறீர்களோ அதற்கு சமமான தொகையை நான் எனது தனிப்பட்ட அன்பளிப்பாக இந்த நிதிக்கு வழங்குகிறேன் என்ற ஒரு அறிவிப்பை யாரும் எதிர்பார்க்காமல் வெளியிட, அனைவரின் கைதட்டல்களை பெற்றார் எம்.ஜி.ஆர்.

    அந்தத் தொகை எவ்வளவு என்று தெரிந்ததும் தன் சம்பளத்தில் கணக்கு வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு எங்களிடமிருந்து அந்தப் பணத்தை வாங்கி நிதிக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர். அதற்காகத்தான் கூடுதலாக பணம் கேட்டிருந்தார் எம்ஜிஆர்.

    அவ்வளவுதான்... ஒரே இரவில் சிம்லா மக்களின் ஹீரோவாகிப் போனார் எம்.ஜி.ஆர். சிம்லாவில் சோலன் என்ற ஒரு இடம். அங்கே எல்லா வண்டிகளும் நிற்கும். எங்கள் வண்டியும் நின்றது. அங்கிருந்து சற்று மேடான பகுதியில் நல்ல ஹோட்டல் இருந்தது. சுமார் ஐம்பது, அறுபது படிகள் மேலே ஏறிப்போக வேண்டும். எம்.ஜி.ஆர்.உட்பட அனைவரும் மேலே ஏறிப் போனார்கள். நான் மட்டும் கீழே காரிலேயே இருந்து விட்டேன். கடுமையான குளிர் காரணமாக கோட்டைக் கழற்றி போர்த்திக் கொண்டேன். எனக்கு தொண்டை கட்டிக் கொண்டு பயங்கரமான வலி. காரின் கதவை ஏற்றிவிட்டுக் கொண்டு படுத்துவிட்டேன்.

    களைப்பு மிகுதியில் சிறிது நேரத்தல் தூங்கிவிட்டேன். யாரோ காரின் கதவைத் தட்டுவது போலிருந்தது திடுக்கிட்டு எழுந்து திறந்து பார்த்தேன். எம்.ஜி.ஆர் நின்றிருந்தார். கையில் சூடான பால் கோப்பையை ஒரு மஃப்ளரால் சுற்றி வைத்துக் கொண்டிருந்தார். எனக்கு திக்கென்றது. என்ன இது எம்.ஜி.ஆரே, பால் கொண்டு வந்திருக்காரே என்று சங்கடமாகிவிட்டது.

    "இந்தாங்க சரவணன்... சூடா பால் குடிங்க தொண்டைவலிக்கு இதமாக இருக்கும்," என்றார்.

    பதற்றத்துடன், "என்ன சார் நீங்களே கொண்டு வந்திருக்கீங்க' என்றேன். 'என் உதவியாளர் மலையப்பனிடமோ, எஸ்.பி.முத்துராமன், திருலோகசந்தரிடமோ கொடுத்தனுப்பியிருக்கலாமே சார்' என்றேன். அவர்கிட்ட கொடுத்தனுப்பியிருந்தா 'நீங்க குடிச்சிருக்க மாட்டீங்க. ஏதாவது சாக்குபோக்கு சொல்லி வேண்டாம்னு சொல்லியிருப்பீங்க. இந்தப்பாலை இப்பநீங்க குடிக்கிறீங்க காலிகப்பை எடுத்துக் கொண்டுதான் நான் போவேன்," என்று அடம்பிடித்தார். அதேபோல் செய்தார்.

    என் மேல் அவர் கொண்டிருந்த தனிப்பட்ட பாசத்தை உணர்ந்த நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.

    தமிழ்த் திரையுலகம் எம்.ஜி.ஆர் என்ற பெயரை எப்படி எந்த நாளும் மறக்க முடியாதோ அப்படியே என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் என்னால் அவரை மறக்க முடியாது. என்னிடம் தனிப்பாசம் கொண்டிருந்தவர் அவர். 1985ஆம் ஆண்டு எனக்கு சென்னை மாநகர ஷெரீப் பதவியைத் தந்து கௌரவித்தார். நான் சற்றும் எதிர்பார்க்காத வாய்ப்பாக அது அமைந்தது.

    'சம்சாரம் அது மின்சாரம்' வெற்றி விழாவுக்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆரை சிறப்புவிருந்தினராக அழைத்திருந்தேன். வருகிறேன் என்று ஒப்புதல் தந்தார்.

    கலைஞர்கள் ஒவ்வொருக்கும் அவர் கையால் கேடயம் தரவேண்டும் என்று நான் கேட்டேன். அதற்கும் சரி என்றார்.

    இதற்கிடையில் பிற்பகலில் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் ரயில் விபத்து ஒன்று ஏற்பட்டு பரபரப்பானது. முதல்வருக்கு அதை உடனடியாகக் கவனித்து உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டிய கட்டாயம்.

    இதுவிஷயமாக என் மதிப்பிற்குரிய பெரியவர் நாகி ரெட்டியார் என்னை அழைத்து நிலைமையைப் பார்த்தால் எம்.ஜி.ஆர் அநேகமாக இன்று நிகழ்ச்சிக்கு வரமாட்டார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது என்றார்.

    எனக்கு அப்போதும் நம்பிக்கை தளரவில்லை. இல்லை சார் நிச்சயம் வருவார் பாருங்கள் டெக்னிஷீயன்ஸ் லிஸ்ட் கூட கேட்டார். அனுப்பியிருக்கிறேன் என்றேன்.

    அனைவரும் வியக்க சரியான நேரத்தில் எம்.ஜி.ஆர் வந்திறங்கினார். ஒவ்வொரு கேடயமும் கிட்டதட்ட எட்டரை கிலோ அளவில் இருந்தன. அத்தனைக் கேடயங்களையும் அவர் ஒருவரே எல்லோருக்கும் வழங்கினார். ஒரு கேடயத்தின் அடிப்பாகத்தில் இருந்த கூரானபகுதி அவர் கையைக் கிழித்து ரத்தகூடவந்தது.

    நான் 'போதும் சார்' என்று அதிர்ச்சியோடு சொன்னதும் மற்ற டெக்னிஷியன்களுக்கும் ஆசை இருக்காதா என்னிடமிருந்து கேடயம் பெற வேண்டும் என்று சொல்லி அத்தனை பேருக்கும் கேடயம் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

    கே.பாக்யராஜ் இயக்கத்தில் நாங்கள் தயாரித்த 'முந்தானை முடிச்சு' படத்தின் வெள்ளி விழாவிலும் கலந்துக் கொணடு கேடயங்களை வழங்கினார்.

    எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் டைக்ரடர் பாரதிராஜா 'புதுமைப் பெண்' என்றபடத்தை இயக்கினார். அந்தப் படம் நல்ல கதையமைப்புக் கொண்டப்படமாக

    இருந்தாலும் பெரிய வெற்றியை எட்டமுடியாத நிலை. அதனால் முதல்வர் எம்.ஜி.ஆரை ராமாவரம் தோட்டத்தில் சந்தித்துப் பேசினோம். 'புதுமைப் பெண்'

    படத்திற்கு வரிவிலக்கு அளித்தார். படம் பார்க்க மக்கள்கூட்டம் தியேட்டருக்கு வந்தது. 'புதுமைப் பெண்' எம்.ஜி.ஆர் செய்த உதவியால் பெரிய வெற்றிப் படமானது.

    எங்கள் நிறுவனத்துக்கு 'அன்பே வா' என்ற ஒரே ஒரு படம்தான் எம்.ஜி.ஆர் செய்து கொடுத்தார். என்றாலும் என் தந்தையார் காலத்திலிருந்து ஏவிஎம் நிறுவனம் மீது அவர் கொண்டிருந்த அபிமானமும் என் தந்தையார் மீதும் அவரைத் தொடர்ந்து எங்கள் குடும்பத்தின் மீதும் அவர் காட்டி வந்த உண்மையான பாசமும்,

    அன்பும் எந்தக் காலத்திலும் என்னால் மறக்க முடியாதவை. எம்.ஜி.ஆர் என்றும் எனக்குள் இருப்பார்," என்றார் நெகிழ்ச்சியுடன்....... Thanks...

  4. #3393
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அருமையான பதிவு இதில் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும் எம்ஜியார் எப்போதும் பெரிய நிறுவனங்களுக்கு அதிகமாக படம் நடித்து கொடுத்தது இல்லை ஏனெனில் சிறு தயாரிப்பாளர்களை மேல் ஏத்தி விடவேண்டும் என்பதே அவருடைய நோக்கம் அதேபோல் இப்போது நடிகர் அஜித் குமார் அவர்களும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் நடித்து கொடுப்பது இல்லை கஷ்டப்படும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே படம் நடிக்கிறார் எப்போதும் இல்லாதவரை வாழ வைப்பதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது அன்று எம்ஜிஆர் இன்று அஜித். வாழ்க........ Thanks...

  5. #3394
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரே படம் AVM ல் நடித்திருந்தாலும் இன்றைக்கும் பெயர் சொல்லும்படி அமைந்து விட்டது.அது மட்டுமா, கிராமங்களில் AVMபடம் என்று விளம்பரம் வந்தாலே, எம்.ஜி.ஆர்., நடித்த "அன்பே வா "எடுத்தவர்கள் படமா? எனமக்கள் பேசிக்கொண்டு AVM படம் அனைத்தையும் வெற்றி படமாக்கினார்கள்......... Thanks...

  6. #3395
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "மிகச்சரியாக 55-ஆண்டுகளுக்கு முன்பு....

    அன்று தீபாவளி பண்டிகை. 23-ஆம் தேதி அக்டோபர் மாதம் 1965-ஆண்டு.

    கொழும்பு, 'இரத்மலானை' விமான நிலையம் விழா கோலம் பூண்டிருந்தது.

    கட்டுக்கடங்காத திருவிழா கூட்டம்.

    இந்திய வம்சாவளி-மலையகத் தமிழர்கள் ஏராளமான பேர் அங்கு குழுமியிருந்தனர்.

    எல்லோர் பார்வையும் விமான ஓடு பாதையை நோக்கியே இருந்தது.

    சிறிது நேரத்தில்.. வின்னில் மிதக்கும் 'சந்திரனை'-யே அழைத்து வருவது போல் ஒரு அலுமினிய பறவை மெதுவாக தரையிறங்க....

    மக்களிடம் ஆர்வம், பரபரப்பும் தொற்றிக்கொள்ள... அத்தனை கண்களும் விமானத்தின் கதவுகளையே உற்று நோக்க...

    திடீரென மின்னல் கீற்று போல அந்த #சந்திரன் ஆம் நம் #இராமசந்திரன் விடுவிடுவென வேகமாக விமானத்திலிருந்து இறங்கி வருகிறார்.

    பின்னாலே அவரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சரோஜாதேவி...

    அவர் பயணம் மேற்கொண்ட 'கொழும்பு கொள்ளுப்பிட்டி வீதி' மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது...

    அவ்வழியே பாராளுமன்றம் சென்று கொண்டிருந்த அன்றைய இலங்கை பிரதமர் 'டட்லி சேனநாயகா' வாகனமும் அந்த கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டது.

    எம்ஜியாரின் இலங்கை வருகைக்கு முக்கிய காரணம்..

    இலங்கையிலிருந்து வெளியாகும் ஒரு தமிழ் வார இதழ் சார்பில்

    'மலை நாட்டு லட்சுமி' எனும் அழகு ராணிப்போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள தென்னிந்திய பிரபல நடிகரான எம்.ஜி.ஆர். சரோஜாதேவியையும் அழைத்திருந்தனர்.

    காரணங்கள் எதுவாக இருந்தாலும்..

    அவரின் ஆழ் மனதில்... தன்னுடைய பழைய நினைவுகள் மேலோங்க, தான் பிறந்த மண்ணையும், அந்த மக்களையும் காண வேண்டும் என்ற ஆவல் கூட இருந்திருக்கலாம்.

    விழா நடந்த 'நுவரெலியா'-விற்கும் எம்ஜியார் பிறந்த இடமான 'கண்டி-நாவலபிடியா' வுக்குமான தொலைவு வெறும் 66-கி.மீ. தான்.

    அவர் பிறந்த மண்ணிலிருந்து, மக்கள்திலகத்தை காண, தன் மண்ணின் மைந்தனை காண, மாட்டு வண்டிகளில் ஏராளமானோர் வந்து குவிந்திருந்தனர்.

    விழா நடக்கும் குதிரை பந்தய திறந்த வெளி திடல் முழுவதும் மனித தலைகள்.

    அந்நிலப்பரப்பில் அப்படியொரு கூட்டத்தை, இலங்கையில் இதுவரை யாருமே பார்த்ததில்லை, கண்டதில்லை.

    விழா அன்று மாலை 'திவொளி' திரையரங்கில் #எம்ஜிஆர், சரோஜாதேவி இருவரும், மக்களோடு மக்களாக அமர்ந்து #எங்கள்_வீட்டுப்பிள்ளை படம் பார்த்ததை அம்மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

    விழாவில் 'மலை நாட்டு இலட்சுமி' பட்டத்தை வென்ற செல்வி.இராசம்மாவுக்கு ரூ.5,000 பரிசும், கிரிகிடமும், விருதும் வழங்கப்பட்டது.

    அத்தோடு எம்.ஜி.ஆரின் படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமும் செய்யப்பட்டதாக அறியமுடிகிறது. இராசம்மா நடித்தாரா? என்பது தெரியவில்லை.

    அங்கு திரண்டிருந்த கூட்டத்தை பைனாகுலர் மூலமாக பார்த்த #மக்கள்_திலகம்....

    தொலைவில் கால் ஊனமுற்ற ஒரு ரசிகர் தம்மை பார்த்து கையாட்டியதை கண்டு... உடனே அவரை மேடைக்கு அழைத்து வர சொன்னார்.

    மேடையில் ஏற்றப்பட்ட அந்த இளைஞர் திடீரென #எம்ஜிஆர் காலில் விழுந்து
    "ஹனே மகே தெய்யோ" (என் மகா தெய்வமே) என்று கூற..

    அதன் பின்புதான் தெரிந்தது அவர் #சிங்களவர் என்று...

    பின்னர் அவர் தோளில் கைபோட்டு படம் எடுத்ததோடு மட்டுமல்லால் பணமுடிப்பும் கொடுத்தனுப்பினார்.

    "பின்னாளில் அந்த முடமான அந்த சிங்கள சகோதரரை ஒரு முறை 'வட்டகொடை' வந்த போது அடையாளம் கண்டுகொண்ட நானும் எனது நண்பர்களும் உபசரித்தோம்.

    மக்கள் திலகத்திடம் பெற்றதாக கருப்பு நிற துண்டு ஒன்றையும் காட்டினார்"

    - என்கின்றனர் அன்று நடந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்ட, இலங்கை மலையகத்திலிருந்து #SuppaiahRajasegaran கனடாவிலிருந்து #ShanChandrasekar சென்னையிலிருந்து #SukumarShan ஆகியோர்...

    இன்றும் உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் யாரேனும் ஒருவர் அவரின் நினைவுகளை அசை போட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.

    மக்களின் திலகமாக
    #நேற்று மட்டுமல்ல..
    #இன்று-ம்... ஏன்
    #நாளை-யும்...

    அவர் மக்கள் மத்தியில் திலகமாகவே
    #வாழ்ந்தார்...
    #வாழ்கிறார்....
    #வாழ்வார்....

    *முதல் படம் கொழும்பு 'இரத்மலானை' விமான நிலையத்திலிருந்த வெளியே வரும் எம்ஜிஆர்-சரோஜாதேவி

    *இரண்டவது படம் 'நுவரெலியா' விழாவில் எடுத்தது........ Thanks...

  7. #3396
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சன் டிவி பார்க்க கூடாது என நினைச்சாலும் பார்க்க வச்சுறுதானுங்க. ........

    நேற்று இரவு 9.30 க்கு தலைவர் நடித்த "அன்பே வா"

    #இதே போல் நாளை இரவு 9.30 க்கு "எங்க வீட்டு பிள்ளை" என்ன பண்ண? எங்கள் தலைவனின் முகம் காண பார்க்க வேண்டி இருக்கு.......

    # 1965ம் ஆண்டு பொங்கல் அன்று வெளிவந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் வசூலில் நம்பர் ஒன் ஆனது. தலைவர் இரட்டை வேடத்தில் தோன்றி இருப்பார்.

    #எத்தனை தடவைகள் பார்த்தாலும் சலிப்பு தட்டாத திரைப்படம். இந்த படத்தில்
    #நான் ஆணையிட்டால்...

    #நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்..

    #கண்களும் காவடி சிந்தாகட்டும்..

    #பெண் போனாள்...இந்த பெண் போனால்..

    #மலருக்குத் தென்றல் பகையானால்..

    #குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
    போன்று எவர்கிரீன் பாடல்கள் அமைந்துள்ள ஒரு ஒப்பற்ற காவியம்.
    விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். ஆலங்குடி சோமு பாடலாசிரியராக இருந்தார்.

    இந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர், 'சக்தி' டி. கே. கிருஷ்ணசுவாமி ஆவார்.

    #கடந்த, 1958ல் வெளியான நாடோடி மன்னன் படத்தின் வசூலை, 1965ல் வெளியான, எங்க வீட்டுப் பிள்ளை தான் முறியடித்தது........ Thanks...

  8. #3397
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நினைத்ததை முடிப்பவன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா லதா, சாரதா, எம். என். நம்பியார், எஸ். ஏ. அசோகன், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.இதில் காந்திமதி எம்.ஜியாருக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்.

    எம்,ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் வில்லன் நடிகர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஏனென்றால் இதில் எம்ஜியாரே வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

    சாரதா இதில் கால் ஊனமுற்ற தங்கையாக நடித்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய ஆர் கே சண்முகம் அவர்கள் இத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.

    நினைத்தை முடித்தவர் உங்களை தேடி வருகிறார் கண்டு மகிழுங்கள்.

    கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
    நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
    அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
    அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது

    காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
    கண் முன்னே தோணுவது சாத்தியமே
    காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
    கண்ணுக்கு தோணாத சத்தியமே
    போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
    புரியும் அப்போது மெய்யான கோலம் (கண்ணை நம்பாதே)

    ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
    ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
    சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
    ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
    பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
    உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை (கண்ணை நம்பாதே)

    பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
    கண் மூடி போகிறவர் போகட்டுமே
    என் மனதை நான் அறிவேன்
    என் உறவை நான் மறவேன்
    எது ஆன போதிலும் ஆகட்டுமே
    நன்றி மறவாத நல்ல மனம் போதும்
    என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை நம்பாதே)

    குறிப்பு :
    இந்த பாடலைப் பற்றி சுவையான தகவல் ஒன்று உண்டு .
    முதலில் பாடலை இயற்றிய மருதகாசி ‘பொன் பொருளைக் கண்டவுடன் …’என்று வரும் இடத்தில ‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்று முதலில் எழுதினாராம் .மக்கள் திலகம் தன் வழி சரியாக இருந்தால் அதில் போவதில் என்ன தவறு என்று கேட்டவுடன் அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து ‘கண் மூடி போகிறவர் போகட்டுமே ……’என்று மாற்றி எழுதினாராம்.

    தொடரும்......... Thanks...

  9. #3398
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Filmography Film 39(1957) Poster
    "ராஜராஜன்"
    முந்தைய வருடத்தைப் போல, 1957 முழுதுமே ஏறுமுகமாக அமையவில்லை, எம்ஜியாருக்கு. சக்ரவர்த்தித் திருமகளின் வெற்றியைத் தொடர்ந்து வந்த ராஜராஜன் கச்சிதமான திரைக்கதை, இளங்கோவனின் கூரான வசனம், தேர்ந்த நடிகர்களின் பங்களிப்பு, கேவி மகாதேவனின் இனிய பாடல்கள், எம்ஜியாரின் வாள்வீச்சுப் படங்கள் அனைத்திலும் சண்டைக்காட்சிகளை கம்போஸ் செய்த ஆர்என் நம்பியாரின் அற்புதமான வாள்வீச்சு அமைப்புகளும் இருந்தும், சுமாராகவே ஓடியது.
    எம்ஜியாருக்கு ஜோடியாக பத்மினி நடிக்க, அவர் மீது ஒருதலைக் காதலுடன் லலிதா தோன்ற, லலிதா மீது ஒருதலைக் காதலுடன் நம்பியார் தோன்றினார். இந்தப் படக்கதையில் ஒரு சுவாரசியம் 'நீங்க நல்லவரா கெட்டவரா' என்று நம்பியாரைப் பார்த்துக் கேட்கும் அளவு அந்தப் பாத்திரப்படைப்பு சனலங்கள் மிகக் கொண்டதாக அழகாக அமைக்கப்பட்டிருந்தது........ Thanks...

  10. #3399
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Filmography Film 40(1957) Poster
    "புதுமைப்பித்தன்"
    ராஜராஜனைத் தொடர்ந்து, குலேபகாவலியை இயக்கிய ராமண்ணாவின் இயக்கத்தில், அந்தப் படத்தில் நடித்த டி.ஆர்.ராஜகுமாரி, ஈ.வி.சரோஜா பி.எஸ்.சரோஜா ஆகியோரும் பங்களிக்க கருணாநிதியின் வசனத்துடன் உருவான புதுமைப்பித்தன், குலேபகாவலி அளவு வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், ராஜராஜனுக்கு மேலாக பெரிய வெற்றி பெற்று நூறு நாட்களைத் தாண்டினான்.

    பகலில் பைத்தியக்கார இளவரசன், இரவில் ராபின்ஹூட் போன்ற சாகசவீரன் என்று எம்ஜியார் வேடம்தாங்க, அவரது சூழ்ச்சிக்கார சித்தப்பாவாக பாலையா நடித்தார். ஜி.ராமநாதனின் இசையில் பாடல்கள் பல ஹிட் ஆகின (மொத்தம் 14 பாடல்கள்!).

    தந்தையாரின் சடங்கு மரியாதைகளைப் பார்வையிடும் எம்ஜியார் பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டிருக்க, பி.எஸ்.சரோஜா ரகசியமாக ஒரு சிறு காகிதத்துண்டை அதில் திணிக்கையில் எம்ஜியாரின் முகத்தில் ஓடும் ஒரு லேசான அதிர்ச்சி வெகு அழகு; அதைப் போல ஈவி சரோஜாவின் நடனத்தின்பாதியில் பைத்தியக்காரன் போல தான் ஆடிப்பாடத் துவங்கி ஒரு மேஜை மேல் பாய்ந்து ஏறி நடராஜா போஸ் கொடுத்து நிற்பதும் அழகு; வில்லனிடமிருந்து தப்பிக்க பெண் வேடமிட்டுக் கொண்டு நடனமாடத் தெரியாமல் தடுமாறுவதும் ஹிலேரியஸ்.
    எம்ஜியாரின் இதைப் போல நுணுக்கமான நடிப்பு பாராட்டுப் பெறாமல், அவரது வாள்வீச்சும் ரொமான்சுமே பெரிய அளவில் அவரது ரசிகர்களைச் சென்றடைந்தது. ஒரு ஸ்டாராக அவரை உருவாக்கிய அவரது ரசிகர்கள் அவருக்குள் இருந்த படாடோபமில்லாத இயல்பான ஒரு நடிகனை வெளிக்கொணரும் முயற்சிகளுக்கு ஆதரவு தரவில்லை. இதைப் பின்னாளில் இதே ராமண்ணா தயாரிப்பிலான பாசம் படமும் நிரூபித்தது........ Thanks...

  11. #3400
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Filmography Film 41 (Poster)
    "மகாதேவி"
    1957ஆம் ஆண்டின் முதல் படத்தைப் போல, அந்த ஆண்டின் இறுதிப் படமும் எம்ஜியாருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. ஊமைப்படங்களின் காலத்தில் நடிகனாக, இயக்குனராகத் துவங்கிய சுந்தர் ராவ் நட்கர்னியின் இயக்கத்தில் சாவித்ரி எம்ஜியாருக்கு முதல் முறையாக ஜோடியாகச் சேர்ந்தார்.

    மதுரை வீரனுக்குப் பிறகு கண்ணதாசனின் அழகான வசனங்களைத் தாங்கி விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இனிய பாடல்களுடன் வெளியான இப்படம் ஓரு வகையில் ஜெனோவா படத்தின் மற்றொரு பதிப்பு என்றே இதைச் சொல்லலாம்; நண்பனின் மனைவியின் மீது ஆசை கொள்ளும் ஒரு காமுகன் அதை எதிர்த்துப் போராடி வெல்லும் ஒரு கற்புக்கரசி என்பதாகத்தான் இந்தப் படத்தின் கதையும்; ராமண்ணாவின் தயாரிப்பு இயக்கத்தில் தோல்வி அடைந்த கூண்டுக்கிளியின் கதையும் இதுவே! ஆனால், அந்த சோஷியல் தோல்வி அடைந்தாலும் இந்த இரண்டு காஸ்ட்யூம் ட்ராமாக்களும் வெற்றி பெற்றன. அதிலும் மகாதேவி பெரும் வெற்றி பெற்றது. அதற்கு ஒரு காரணம், முதலிரண்டில் இல்லாத ஒரு விஷயம்: சாவித்ரியின் ஹை பவர் பர்ஃபாமன்ஸ்.

    உண்மையில், இந்த படத்தில் சாவித்ரி - பிஎஸ் வீரப்பா நடிப்பு அபாரம் என்று சொல்ல வேண்டும்.சாவித்ரிக்கு ஈடாக கொடுஞ்சிரிப்பு வில்லன் வீரப்பா படம் முழுதும் விரவியிருப்பார். 'அடைந்தால் மகாதேவி! இல்லையேல் மரணதேவி!' என்ற அவரது பஞ்ச் டயலாக் சாகாவரம் பெற்று விட்டது!

    ஆனாலும், தன் பாத்திரத்தை மிக அழகாகத் தெளிவாகச் செய்திருந்தார் எம்ஜியார்.நாகம் தீண்டி மயங்கிக் கிடக்கும் இளவரசனை அதே பாம்பு தீண்டி விஷத்தை உறிஞ்சினால்தான் பிழைப்பான் என்று பாம்பாட்டிகள் முயன்று தோற்று இனிமேல் முடியாது என்று கை விரிக்க, அடிபட்டு கட்டுகளோடு இருக்கும் எம்ஜியார் ஒரு வார்த்தை பேசாது எழுந்து வந்து அந்தப் பாம்பாட்டியின் கையில் இருக்கும் மகுடியை வாங்கித் தான் ஊதத்துவங்குவாரே, அப்போது அந்த நடையிலும், கண்களிலும் வெளிப்படும் உறுதி - certainly a piece of classic acting. யூ ட்யூபில் படம் இருக்கிறது. பாருங்கள்........ Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •