-
21st April 2020, 05:21 PM
#3351
Junior Member
Diamond Hubber
இனிய பிற்பகல் வணக்கம்..!!
#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.
#புகைப்படம்
எம்.ஜி.ஆர்., ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர் விரும்பிவாங்கும் பொருட்களின் பட்டியலில் கேமரா தவறாமல் இடம்பெறும். வீட்டில் பலவகை கேமராக்களைச் சேர்த்து வைத்திருந்தார். இறுதிநாட்களில் அவற்றை தமக்குப் பிடித்தமானவர்களுக்குப் பரிசாக தந்து மகிழ்ந்தார்.
எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. புகைப்படக்காரர் தன்னை எந்தக் கோணத்தில் எடுக்கிறார். ரிசல்ட் எப்படி வரும் என்பதை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர். அவருக்கு தெரியாமல் யாரும் அவரை புகைப்படம் எடுத்துவிட முடியாது.......... Thanks.........
-
21st April 2020 05:21 PM
# ADS
Circuit advertisement
-
21st April 2020, 05:35 PM
#3352
Junior Member
Diamond Hubber
தன் உடல் நல குறைவையும் பொருட்படுத்தாமல் ஈழதமிழர் மீதான விமான தாக்குலை கண்டித்து உண்ணா நோன்பு இருந்த #மக்கள்திலகம்..
பிரதமர் இராஜீவ்காந்தி வற்புறுத்தலின் பேரில் 1985 ஆகஸ்டில் போராளி இயக்கங்கள் திம்புவில், சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போது இலங்கையில் விமானங்கள் மூலம் தமிழர்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீசி ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றான் ஜெயர்வர்த்தனே.
இலங்கை அரசின் இச்செயலைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக தலையிடக்கோரியும் 1985 செப்டம்பர் 24 -ஆம் நாள் உடல்நிலை மிகவும் பாதிக்கப் பட்டிருந்த நிலையிலும், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் எம்.ஜி.ஆர்........ Thanks.........
-
21st April 2020, 07:10 PM
#3353
Junior Member
Diamond Hubber
இவர் போல யாரென்று--
-----------------------------------------
கோவித்துக் கொண்ட இயற்கை
கோவிட்டாக?
கோவிட்19 என்னும் கொரானா வைரஸ் குறி பார்த்துக் குவலயத்தைக் குதறி எடுக்க--
மனித நேயம் என்னும் மருத்துவத்தால் மல்லுக்கட்டியபடி நம்மவர்கள்?
எதிர்ப்போர் எவராயினும் ---
எதிர்ப் போர் செய்யும் இந்தியர்கள்--
இரக்கத்திலும் உச்சம் தொடுபவர்களே!!
அந்த வகையில் கோபால கிருஷ்ணன் அவர்கள்!!
75 வயது அகவை காணும் இந்த முக நூல் இளைஞரை தம் வசம் கொண்டார் எம்.ஜி.ஆர்!
இவரை மட்டும் அவர்க் குடுப்பத்திலிருந்து பிரித்து எடுக்கவில்லை எம்.ஜி.ஆர்?
தாய்,, தந்தை, மனைவி,அண்ணன் தம்பி என-
குடும்பமே குடியிருந்த கோயிலைக் குத்தகை எடுத்திருக்கிறார்கள்??
அது 1967!
அன்றையக் காலக் கட்டங்களில்-
வடகம்,,வத்தல்,அப்பளம் என்று வீட்டிலேயே தயார் செய்வார்கள் அந்தணர் இல்லங்களில் என்று கேள்விப் பட்டு இருக்கிறோம்!
குடும்பமே வட்டமாக உட்கார்ந்து கொண்டு--
கட்சிக் கொடியை தயாரிப்பதிலும்,,ஒட்டும் பசையைக் காய்ச்சுவதிலும் ஈடுபட்டிருப்பதை அகல விரிந்தக் கண்களுடன் அக்கம் பக்கத்தினர் ஆச்சரியத்தோடு தானே பார்ப்பார்கள்??
அதுவும் பார்ப்பனர்களுக்கு விசேஷமான உதயசூரியன் கொடி??
எங்கள் எம்.ஜி.ஆர் ஒருவரைத் தான் அன்று தி.மு.கவில் பார்த்தோம் என்கிறார் கோபாலகிருஷ்ணன்!!
1980இல் தாம் எப்படி வெற்றி பெறுவோம் என்று எம்.ஜி.ஆரே இவரிடம் கேட்டு,,இவரது பதில் விளக்கத்தால் பரவசம் அடைந்ததை ஏற்கனவே பதிவிட்டிருக்கிறோம்!!
75 வயது இளைஞர் இவர் இப்படியென்றால்--இன்றும் இவரது மூத்த சகோதரரும்--
90 வயதில் இவரது அன்னையும் எம்.ஜி.ஆர் படம் பார்க்கவென்றே டிவி பெட்டியின் முன்பாக??
கோபலகிருஷ்ணனின் மகள் வெளி நாட்டிலிருந்து ஃபோன் செய்வாள்--
அப்பா நாளைக்கு டிவியில ஆயிரத்தில் ஒருவன் படம் போடறான். பெரியப்பா,,பாட்டிக்கும் சொல்லுங்கோ???
இவர்களும் உடனே டிவியை நோக்கி ஓடுவார்கள்?
முதன் முதலாகப் பார்ப்பது போல??
சரி,,எம்.ஜி.ஆரை இதயத்தில் இந்த அளவு வைத்திருக்கும் இவர்கள் எம்.ஜி.ஆரின் மனித நேயத்தை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன?
எல்லோரும் வெளியில் வேலைக்குப் போகும்போது இவர்கள் வீட்டிலேயே இருக்க--
இன்றோ--
எல்லோரும் கொரோனாவால் வீட்டிலேயே இருக்க-
இந்த முதியவர்களோ--
வேலையாக வெளியில்??
ஆம்!1 இதுவரை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளாகத் தேர்வு செய்து,,அந்த மக்களுக்கு உணவும்,,உணவுப் பொருள்களும் வழங்குவதை ஒரு தவமாகவே செய்து வருகிறார்கள் இவர்கள்!!
பல்லாவர மலைக் கல்லுடைப்போர்கள்,,நங்க நல்லூர் ,,அடையாறு சேரிப்பகுதி என்று இதுவரை 12 இடங்களுக்கு மேலே இவர்கள்,,தாமே நேரில் சென்று உதவுவது நிச்சயம் பெரிய விஷயம் தானே?
சுமார் இரண்டரை லட்ச ரூபாய் வரை இதற்காகவே இதுவரை செலவழித்திருக்கும் இவர்களது சேவை இன்னமும் தொடர்ந்த வண்ணம் உள்ளது!!
இதற்காக,,நெருங்கிய உறவுகளிடமும்,,வெளி நாட்டில் இருக்கும் தம் வாரிசுகளிடம் மட்டுமே உதவி வாங்கும் இவர்கள் ,,அக்கம் பக்கத்தினர் எவரையும் தொல்லை நன்கொடைக் கேட்டு நச்சரிப்பதில்லை!!
கோபாலகிருஷ்ணன் அவர்களின் தாயார்,,இறைவன் அளித்துள்ள தேக ஆரோக்கியத்துடன் சென்று,,தம் கையால் உதவி வழங்கி மகிழ்கிறார்!!
மக்கள் திலகத்தை மனதில் வைத்தவர்களால்-
மனித நேயம் மரித்துப் போவதே இல்லை!!
இனி எம்.ஜி.ஆரா இங்கே நேரில் வரணும்?--
இவர்கள் வாயிலாகத் தான் தினமும் நம்முடன் உரையாடுகிறாரே??
அழும் உள்ளங்களை அரவணைத்து ஆற்றும் இவர்களைத்
தொழும் பேறு நம் மனதுக்குக் கிடைத்ததற்காக சந்தோஷப் படுவோமா சொந்தங்களே???........ Thanks..........
-
21st April 2020, 07:22 PM
#3354
Junior Member
Diamond Hubber
1979 ஆம் ஆண்டு நம் தானை தலைவர் முதல்வர் ஆகி நல்லாட்சி நடத்தி கொண்டு இருந்த 2 ஆம் ஆண்டு.
அகில உலக எம்ஜியார் மன்ற தலைவர் உயர்திரு முசிறிப்பித்தன் அவர்களின் மகன் முருகேசன் அவர்கள் திருமணம் சேலத்தில் நடைபெற இருந்தது.
முதல்வர் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள ஏற்காடு விரைவு ரயிலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது... இரவு புறப்படும் ரயில் மறுநாள் காலை சேலம் போய்சேரும்.
வேறு சில அவசர பணிகள் காரணம் ஆக தன் பயணத்தை கடைசி நிமிடத்தில் ரத்து செய்து விடுகிறார் நம் மன்னர்.
அன்று இரவு அவர் செல்ல இருந்த ஏற்காடு விரைவு ரயில் வாணியம்பாடி அருகில் மிக பெரிய விபத்துக்கு உள்ளானது.
வண்டியின் என்ஜின் மற்றும் அதை தொடர்ந்த குளிர் சாதன வசதிகள் செய்யப்பட்ட பெட்டிகளும் நம் முதல்வர் பயணம் செய்ய இருந்த பெட்டியும் தடம் புரண்டு அந்த விபத்தில் பலர் பலி ஆனார்கள்.
கேள்விப்பட்ட அரசு அதிகாரிகள், தலைவரின் குடும்பம் சார்ந்தோர்க்கு மிக பெரிய அதிர்ச்சி ஆக அந்த நிகழ்வு அமைந்தது.
வாணியம்பாடி ரயில் விபத்து என்று அந்த நேரத்தில் பேசப்பட்ட பரபரப்பு நிறைந்த ஒரு சோக நிகழ்வு அது.
நம் தலைவர் மட்டும் அன்று தன் பயணத்தை மாற்றி அமைக்காமல் இருந்து இருந்தால் நினைக்கவே நெஞ்சம் பதறும் நிகழ்ச்சி அது.
இதே போல சென்னையில் இருந்து அலுவல் காரணம் ஆக ஒருமுறை தலைவர் முதல்வர் செல்ல வேண்டிய டெல்லி பயண விமானம் புறப்பட தாமதம் ஆனதால் அவர் சென்னை விமான தளத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பிய பின் புறப்பட்டு சென்ற அந்த விமானம் ஹைதிராபாத் அருகே விபத்துக்கு உள்ளானது.
தர்மம் தலை(வரை) காத்தது என்பதும் நிஜம் ஆனது.
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி...உங்களில் ஒருவன் நெல்லை மணி...தொடரும் நாளை...புதிய செய்திகளுடன்............ Thanks.........
-
21st April 2020, 07:31 PM
#3355
Junior Member
Diamond Hubber
1980-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் ...
" முடிந்தார் எம்ஜிஆர்...
என் ராஜதந்திரத்துக்கு முன்னால்
இந்த எம்ஜிஆர் எம்மாத்திரம்."
என்று கொக்கரித்தார்... திரு. கருணாநிதி அவர்கள்.
நடந்தது என்ன...? திரு. கருணாநிதியின் கனவு பலித்ததா ...?
திமுகவும் காங்கிரசும் கூட்டணி அமைத்து, மொத்த சட்டமன்ற இடங்களில் சரிபாதியாக இடங்களை பகிர்ந்து கொண்டு போட்டியிட்டன.
தேர்தல் நடந்து முடிந்தது. வாக்கு பெட்டிகள் திறக்கப்பட்டன.
தமிழக மக்கள் அளித்த தீர்ப்பு என்ன தெரியுங்களா....?
மீண்டும் புரட்சித் தலைவர் தான், தமிழ் நாட்டை ஆளவேண்டும்... ஆட்சியில் அமரவேண்டும் என்று நல்லதொரு தீர்ப்பை தமிழக மக்கள் வழங்கினார்கள்.
மீண்டும் மக்கள் முதல்வரானார், #புரட்சித்தலைவர்.
திரு.கருணாநிதியின் கூட்டம் கூனிக்குறுகி ஓடி ஒளிந்து கொண்டது.
புரட்சித் தலைவர் உயிரோடு இருக்கும் வரை
திரு.கருணாநிதி செய்த போராட்டங்கள்,
பொய் பிரச்சாரங்கள்,, ராஜதந்திரம் என அனைத்தையும் தமிழக மக்களின் ஆதரவோடு முறியடித்தார்..
" #புரட்சித்தலைவர் "
*******************
........ Thanks...
-
21st April 2020, 09:47 PM
#3356
Junior Member
Diamond Hubber
கருணைமிகு கதிரவா!
காஞ்சித் தலைவா!
உமது
சுடரொளி பட்டு
சுபிட்சம் அடந்தவர்கள்
அகிலத்தில் ஆயிரம் ஆயிரம்!
அந்த!
ஆயிரத்தில் ஒருவர் - இன்றும்
உதய சூரியனோடு உலா வருகிறார்.
நல்லாண்மை நாயகர்,
இலக்கியக் காவலர்,
கலக்கம் காணாத காவிய நடிகர் எம்ஜிஆர்!
இவர்
கண்டியில் பிறந்தார்
கேரளத்தில் வளர்ந்தார்
தமிழகத்தில் வாழ்ந்தார்/ ஆண்டார்.
தன்னை வாழ வைத்த தமிழகத்தை,
தமிழக மக்களை...
வாழ வைத்தும் மகிழ்ந்தார்!
"இருந்தாலும் மறைந்தாலும்,
பேர் சொல்ல வேண்டும்!
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்"
போர்!!!
போற்றிப் பாடும்,
புறநானூற்று வீரர் / 'மதுரை வீரர்' எம்ஜிஆர்.
எப்பொழுதும் என்ன கொடுப்பார்?
ஏது கொடுப்பார்?
எதிர் பார்ப்பார் எங்கும் இருப்பார்!
ஆனால்?
எதையும் கொடுப்பார்! - தனது
இதயமும் கொடுப்பார்!
என்பதை ஏழை எளிய மக்களின்
உள்ளம் மட்டுமே சொல்லும்,
வாழையின் குணம் உடைய
வள்ளலின் அருமையை/ பெருமையை!...... Thanks...........
-
21st April 2020, 10:14 PM
#3357
Junior Member
Diamond Hubber
MGR Filmography - Film 17 Poster
தொடர்ந்து ஜூபிடர் பிக்சர்ஸ் வாய்ப்பளித்தாலும், 1947ஆம் ஆண்டின் இரு படங்களில் இரண்டாவதான இதிலும் எம்ஜியாருக்குச் சிறு வேடம்தான். அர்ஜுனனாக வேடமேற்றிருந்தார். ஒரு அந்தணரைத் தற்கொலையிலிருந்து மீட்கும் காட்சி யூட்யூபில் கிடைக்கிறது. கருணாநிதி இதிலும் உதவி வசனகர்த்தாவாகப் பணியாற்றியிருக்கிறார்....... Thanks...
-
21st April 2020, 10:22 PM
#3358
Junior Member
Diamond Hubber
MGR Filmography Film 23 (1951) Poster
"மர்மயோகி"
எம்ஜியார் ஸோலோ ஹீரோவாக நிலைபெற்று விட்டார்; 1951ஆம் வெளியான இரண்டு படங்களுமே வெற்றியடைந்தன.
இந்தப் படத்தின் சுவாரசியம், இது தமிழ்ப்படங்களில் முதன் முதலாக ஏ சர்ட்டிஃபிகேட் வாங்கியது! பிறகு அது நீக்கிக் கொள்ளப்பட்டு விட்டது. ஏன் ஏ என்றால், செருகளத்தூர் சாமா ஆவியாக நடமாடும் சீக்வன்ஸ்கள் சிறு பிராயத்தினருக்கு அச்சமூட்டும் வகையில் இருந்தனவாம். பஞ்ச் டயலாக் புரட்சி நடிகர் முதன்முதலாக பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராபின் ஹூட் கதாப்பாத்திரம் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்னொரு சுவாரசியம், பல படங்களில் மாதர்குல மாணிக்கமாகவே தோன்றும் அஞ்சலிதேவி இதில் ஏறத்தாழ ஒரு வேம்ப் ரோலில், அரசனை ஒழித்துக்கட்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றும் அவன் இளையராணியாக தோன்றுகிறார்.
தமிழில் முதல் கலர்ப்படம் போல, முதல் ஏ படமும் ஏம்ஜியாருடையதுதான்! A trend setter always! ... Thanks...
-
21st April 2020, 10:23 PM
#3359
Junior Member
Diamond Hubber
MGR filmography Film 24 (1951) Poster
மாடர்ன் தியேட்டர்சின் இந்த வெற்றிப் படம் எம்ஜியாரை கதாநாயக நாற்காலியில் திட்டவட்டமாக அமர்த்தி விட்டது. எம்ஜியாரின் ஆக்ஷன் ஹீரோ ஃபார்முலா ஏறத்தாழ உருவாகி விட்டது.
இந்தப் படத்தைப் பற்றிய சுவாரசியம்: இது வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பின் எம்ஜியார் தனிக்கட்சி உருவாக்கி, எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியை ஆதரித்தபோது, அதாவது கிட்டத்தட்ட 1976ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகி ஒரு பொன்விழா ஆண்டுக்காலம் முடிந்த பிறகு, அப்போது தமிழ்நாட்டில் எமர்ஜென்சியை எதிர்த்த இரண்டு பத்திரிகையாளர்களில் ஒருவராக இருந்த சோ, இந்தப் படத்தில் சர்வாதிகாரிக்கு எதிராக எம்ஜியார் செய்யும் வீர சாகசங்களை எல்லாம் விலாவரியாக எழுதி வரிக்கு வரி, 'சர்வாதிகாரியை எம்ஜியார் படத்தில் இப்படி எதிர்த்துப் போராடுகிறார், படத்தில்தான். புரிந்து கொள்ளுங்கள் வாசகர்களே புரிந்து கொள்ளுங்கள்!' என்று வரிக்கு வரி அடிக்கோடிட்டார். ப்ரெஸ் சென்சார்ஷிப்புக்கு டேக்கா கொடுக்க சோ கண்டுபிடித்த பல வழிகளில் ஒன்றாக அப்போது அது மிகவும் பரபரப்பானது...... Thanks...
-
21st April 2020, 10:25 PM
#3360
Junior Member
Diamond Hubber
MGR filmography Film 25 (1952) Poster
"அந்தமான் கைதி"
1947ஆம் ஆண்டு பைத்தியக்காரனுக்குப் பிறகு ஐந்து வருடம் ராஜா ராணி காஸ்ட்யூம் ட்ராமாக்களில் ஸ்தாபிதம் ஆகிவிட்ட எம்ஜியார் மீண்டும் சோஷியல் ட்ராமாவுக்குத் திரும்பிய படம். ஏறத்தாழ தங்கைக்காக வாழும் பாசமலர் டைப்.
இந்தப் படத்தில் சிஎஸ் ஜெயராமனின் குரலில் காணி நிலம் வேண்டும் என்ற பாரதியாரின் அருமையான பாடல் இடம்பெற்றது, கோவிந்தராஜுலுவின் இசையமைப்பில்.
இந்தப் படம் வெளியான வருடம் சிவாஜியின் திருமணம் நடந்தது. திருமணவிருந்தில் சிவாஜி எம்ஜியாரைப் பார்த்து, 'நீங்க கத்தியச் சுழட்டினா ஆயிரமாயிரம் ரசிகர்கள் உண்டே அண்ணே! எதுக்கு பாண்ட் சொக்கா போட்டு நடிக்கிறீங்க' என்று கேட்டதாக ஒரு செய்தி உண்டு! அவர் விளையாட்டாகத்தான் கேட்டிருப்பார்; ஆனால், எம்ஜியார் 'தம்பி என்ன வார்த்தை சொல்லிருச்சு' என்று தங்கவேலுவிடம் வேதனைப்பட்டுக் கொண்டாராம்!
ஒரு எம்ஜியார் ரசிகரின் ப்ளாகில் இந்தப் படம் 125 நாள் ஓடியதாகக் குறிப்பிடுகிறார். சந்தேகம்தான். எம்ஜியாரை சக்சஸ்ஃபுல் சோஷியல் ஹீரோவாக்கிய படம் 61ஆம் வருடத்துத் திருடாதே......... Thanks...
Bookmarks