Page 333 of 402 FirstFirst ... 233283323331332333334335343383 ... LastLast
Results 3,321 to 3,330 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3321
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #கருணையின் #எல்லை...

    துன்பப்படுவோரைப் பார்த்தவுடன், அவர்களுக்கு உடனே உதவுவது பொன்மனச்செம்மலின் சிறந்த பண்பாகும்...
    எம்ஜிஆர், தானே வலியப் போய் உதவிகள் செய்வார் என்பதால், திருமுருக கிருபானந்த வாரியார் இவருக்கு #பொன்மனச்செம்மல் என்று பட்டம் வழங்கினார்.

    பொன்மனச்செம்மல் அவர்களின் கருணை மனிதர்களிடம் மட்டுமல்ல...ஓரறிவு ஜீவன்களிடமும் எந்தளவு இருந்தது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒன்றே சான்று...

    ஒருநாள் தேவர் படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, மேக்கப் அறையிலிருந்து எம்ஜிஆர் வெகு நேரமாக வெளியே வரவில்லை. தேவர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, நேரே எம்ஜிஆரைத் தேடிப்போய்விட்டார்.

    அங்கே, எம்ஜிஆர், பாத்ரூமுக்குள் இருந்தார். வெகு நேரம் காத்திருந்துவிட்டு, பின்பு கதவைத் தட்டிவிட்டார். சிறிது நேரம் கழித்து எம்ஜிஆர் சிரித்தபடி ஏதோ சாதித்துவிட்டதைப் போல வெளியே வந்தார்.

    தேவரைப் பார்த்து, “ஒரு வண்டு தண்ணிக்குள்ள விழுந்துகிடந்தது. எவ்வளவோ முயற்சிபண்ணியும் அதை வெளியே கொண்டுவர முடியல. கடைசியில் கையைவிட்டு எடுத்து வெளியில் விட்டுட்டேன். பாவம்ண்ணே அது. இப்பப் பறந்துபோயிருச்சு என்றார்.

    தேவர் நொந்துகொண்டார். எத்தனை பேர் அங்கே காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர் வண்டைப் பிடித்து வெளியே விட்டேன் என்கிறார்’’ அவர் ஒன்றும் சொல்லவில்லை. போய்விட்டார்.

    இதுதான் #மனிதர்களுக்கும் #பொன்மனச்செம்மலுக்கும் உள்ள உள்ள வேறுபாடு.
    எம்ஜிஆருக்கு அந்த வண்டு சாகக் கூடாது என்பது தான் மிக முக்கியமாக இருந்தது...
    மற்ற விஷயங்களை விட.......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3322
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மொய் #விளக்கம்

    1967 ஆம் ஆண்டு வேலூரில் நடந்த தனது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு மக்கள்திலகம் சென்றிருந்தார். மணமக்களை வாழ்த்திப் பேசும் போது ஒரு கேள்வியைக் கேட்டார்...

    "எல்லோரும் மொய்ப்பணம் எழுதும் போது 11, 21, 51, 101 என்று பக்கத்தில் ஒன்று கூட்டி எழுதுகிறார்கள்..."
    ஏன் தெரியுமா ? என்று கேட்டார்...

    பல பேர் பலவிதமான விளக்கங்களைக் கூறினாலும் யாரும் சரியான விளக்கத்தைக் கூறவில்லை...

    இதனால் மக்கள்திலகமே தொடர்ந்தார்..

    "10, 20, 50, 100 என்று எழுதும் போது கடைசியில் பூஜ்யம் வருகிறது. வாழப்போகும் தம்பதியினர் #வாழ்க்கையும் #பூஜ்யமாக #ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஒன்றைக் கூட்டிக்கொள்கிறோம்...

    திருமணத்திற்கு முன் பூஜ்யமாக இருந்திருந்தால், திருமணம் ஆன பின் ஒன்று கூடி ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதற்காகவே ஒன்று என்ற எண்ணைச் சேர்க்கிறோம்...
    வாழ்க்கை என்பது முடிவு இல்லாமல் தொடர்ச்சியாக வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதற்காகவே 11,21,51,101 என்று நாம் மொய்ப்பணம் எழுதுகிறோம்..." என்றார்.

    சின்ன விஷயமாக இருந்தாலும்...அதை வாத்தியார் சொல்லும் போது...அடடா...! என்ன ஒரு இனிமை...
    அந்த விஷயத்துக்கே தனி அந்தஸ்து வந்துடுதுல்ல...

    #கலக்குற #வாத்தியாரே....... Thanks...

  4. #3323
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தெய்வத்திற்குத் #தெரியாததா

    மகாகவி காளிதாஸ் படப்பிடிப்பு ... சிவாஜி, காளிதேவி சிலையின் முன் அமர்ந்து பாடுவதாகக் காட்சி...பிரம்மாண்ட செட் போடப்பட்டிருந்தது...

    மும்மரமாக ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் வேளையில், எதிர்பாராத மின் கசிவினால் "செட்" தீப்பிடிக்க ஆரம்பித்துவிட்டது. குழுவினர் அனைவரும் போராடி தீயை அணைத்தனர். ஆனால் பரிதாபமாக, அங்கு பணிபுரிந்துகொண்டிருந்த ஐந்து டெக்னீஷியன்கள் தீக்கு பலியாயினர்.

    இறந்தவர்களின் உறவினர்களுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது... அவர்களது மனைவிமார்களும், முக்கிய உறவினர்களும் ஸ்பாட்டுக்கு வந்திருந்தனர்..குடும்பத்திற்காக கஷ்டப்படுபவர் போயிட்டாரேன்னு கதறினர்...சாப்பாட்டுக்கு என்ன செய்வோம்...புள்ள குட்டிங்களை எப்படி கரைசேர்ப்போம்னு புலம்பினர். இதைப் பார்த்து வருத்தமுற்ற உடனிருந்த டெக்னீஷியன்களும், குழுவினரும் தங்களால் முடிந்த தொகையைக் கொடுத்து உதவினர்...

    இந்த ஸ்பாட்டுக்கு சிறிது தூரத்தில் எம்ஜிஆரின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. இதைக் கேள்விப்பட்ட எம்ஜிஆர் உடனே பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று நடந்ததை விசாரித்தார். எல்லோருக்கும் இந்த துக்கத்திலும் சிறிது மகிழ்ச்சி...ஏனெனில் எம்ஜிஆர் வந்துட்டார்...கண்டிப்பாகணிசமான தொகையைக் கொடுத்து உதவுவாரென்று. ஆனால் #எம்ஜிஆர் #ஒரு #பைசா #கூடத்தராமல் கிளம்புகிறார். அனைவருக்கும் அதிர்ச்சி... 'கேட்காமலே உதவி செய்யற வள்ளலாச்சே...' மனிதநேயமிக்க எம்ஜிஆரா இப்படி...
    ஏன் இப்படி நடந்துகொண்டார்..."
    என்று அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த வருத்தம்...

    மறுநாள் காலை, பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து அவர்களின் மனைவிமார்களுக்கும், முக்கிய உறவினர்களுக்கும் ராமாவரம் தோட்டத்திலிருந்து அழைப்புவிடுக்கப்பட்டு...
    என்ன ஏதென்றறியாமல் அங்கு செல்கின்றனர்...

    எம்ஜிஆர் அவர்களை வரவேற்று உபசரித்து, அவர்கள் சிறுதொழில் தொடங்குவதற்காக கருவிகளையும், அதற்கான இடத்தையும், மூலதனத்தையும் அளிக்கிறார்...

    வந்திருந்தவர்கள் உறைந்துபோய், 'அண்ணே! நீங்க நேத்து பணம் தராததுனால உங்கள தப்பா நெனச்சுட்டோம். எங்கள மன்னிச்சுடு சாமி' ன்னு கதறினர்... 'நீங்க நல்லா இருக்கணும் மவராசா' ன்னு வாழ்த்தினர்...

    அப்ப கூட பொன்மனச்செம்மல் வாயைத் திறக்கவில்லை...வழக்கம் போல தன் (பொ)புன்சிரிப்பையே பதிலாக அளித்தார்...

    #நம் #இறைவன் #இதயதெய்வத்துக்குத் #தெரியாதான்ன! #யாருக்கு #என்ன #செய்யணும்னு...?!?!?!........... Thanks...

  5. #3324
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #உலகம் #சுற்றும் #வாலிபன்...������ வெளியான நாள் இன்று...
    46 ஆண்டுகள் ஆகிறது..கிட்டத்தட்ட என் வயது...

    நவீனத் தொழில்நுட்பத்தில்...������
    விரைவில் தமிழகமெங்கும்...������

    #VAATHIYAR #RETURNS

    அதென்னெமோ தெரியல...
    வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யுது...அதையெல்லாம் மீறி,
    அந்தக் கஷ்டங்களின் தீவிரத்தைக் குறைத்து, அதை மறக்கச்செய்ய வாத்தியாரின் படங்களால் மட்டுமே முடியுது...

    எப்படி வெயிலின் உக்கிரத்தை குடை குறைக்கிறதோ அதுபோல...

    உ.சு.வா திரைக்காவியம் வந்து 45 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை நூற்றுக்கணக்கான முறை இதைப் பார்த்தபின்னரும் நமக்கெல்லாம் என்ன ஒரு எதிர்பார்ப்பு...

    தியேட்டர்களில் இந்தப்படம் போடும்போது பாருங்க...
    அமர்க்களத்தை...
    வயதான எம்ஜிஆர் பக்தர்கள் கூட, இன்றைய இளைஞர்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு வேக மாகவும், உற்சாகமாயிருப்பதையும் கண்கூடாகக் காணத்தானே போகிறோம்...

    ஒவ்வொரு பக்தருக்கும் #அந்தளவு #உணர்வுப்பூர்வமான #பக்தி...

    இப்பல்லாம் இதைபோல நெனச்சுக்கூடப் பார்க்கமுடியாது...

    தனது ரத்தத்தின் ரத்தமான பக்தர்களை எந்தளவு சந்தோஷமா வெச்சுருக்காரு பாருங்க...கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் ... காலங்கள் கடந்தாலும் இது போன்ற உணர்வை, இந்த உலகில் வாத்தியாரைத் தவிர யாராலும் கொடுக்கவே முடியாது...

    நெனச்சாலே புல்லரிக்குது...

    STICKERS உபயம் : அதிதீவிர எம்ஜிஆர் பக்தர் திரு Chandrasekar Iyer...Thank u so much sir
    -------------------------------------------------------------------
    இந்த ஸ்டிக்கரை சந்திரசேகரன் சார் எடுத்து வரும் போது நாங்கள் myself and Gopala Krishnan sir அவரை சந்தித்தோம்.
    அதை நாங்கள் கண்டு ரசித்து கொண்டிருந்தபோது
    அருகில் இருந்த ஒரு ஆட்டோ டிரைவர் பார்த்து விட்டார்.
    உடனடியாக அதில் ஒரு ஸ்டிக்கரை வாங்கி சென்று ஆட்டோவில் ஒட்டிச்சென்றார் .
    ஆனால் அப்போது தான் தூறல் போட்டதால் ஆட்டோ கண்ணாடி ஈரமாக இருந்ததால் பிறகு ஒட்டிக்கொள்வதாக கூறிவிட்டார்.
    என்ன அருமையான சந்திப்பு...��
    தலைவருக்கு பக்தர்கள் எங்கும் பரவி உள்ளார்கள்.
    வாத்யாரே உந்தன் புகழை என்னவென்பது...��............ Thanks...

  6. #3325
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் மாண்பு
    'எங்க வீட்டுப் பிள்ளை' நூறாவது நாள் வெற்றி விழா மதுரை சென்ட்ரல் சினிமா தியேட்டரில் நடந்தது.

    அந்த விழாவிற்கு எம்.ஜி.ஆர். மேடையை நோக்கி வந்து கொண்டிருந்த போது ஒரு ஏழை சிறுவன் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு ஆர்வத்தில் எம்.ஜி.
    ஆரின் கையை பிடித்து விட்டான்.

    எம்.ஜி.ஆரின் பாதுகாப்புக்காக பக்கத்தில் நின்று கொண்டு இருந்த ஸ்டண்ட் நடிகர் ஒருவர் அந்த பையனின் கையைத் தட்டி விட்டார். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர். அவரை முறைத்து பார்த்து விட்டு, அந்த சிறுவனை அருகில் அழைத்து அவனுடைய கையைப் பிடித்து குலுக்கி விட்டு திரும்பினார்.

    அந்த பையன் தன் கையை பார்த்த போது அதில் ஒரு நூறு ரூபாய் நோட்டு இருந்தது.சுற்றியிருந்த மக்களுக்கு எம்.ஜி.ஆர் அப்பையனின் கையை குலுக்கியது மட்டும் தான் தெரிந்தது.அருகில் நின்று கொண்டு இருந்த எங்களைப் போன்றவர்களுக்குத்தான் எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை புரிந்தது.
    ('இரு பெரும் திலகங்கள்' என்ற நூலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் வி.என்.சிதம்பரம் எழுதியது.)........ Thanks...

  7. #3326
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அருமையான பதிவு HM Sir. பெண் குழந்தைகள் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தார் என்பது அவர் தத்தெடுத்து வளர்த்து ஆளாக்கி அவர்கள் கல்வித்துறையில் அரசு மானியம் பெரும் பள்ளி கூடம் மற்றும் கல்லூரியை நடத்துவதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். அவர்களுக்கு நீச்சல் தற்காப்பு கலையாக சிலம்பம் ஆகியவற்றை அவரே கற்றுக் கொடுத்திருக்கிறார். இதை இதய தெய்வத்தின் வளர்ப்பு மகள் மதிப்பிற்குரிய திருமதி கீதா மேடம் ராமாவரம் தோட்டத்தில் சந்தித்த போது அவர்களே கூறியது. யாருக்கும் இதுவரை தெரிந்திருக்காத ஒன்றையும் கூறினார். ஷுட்டிங் வெளியூர் செல்லாம் இருந்தாலும் விருந்தாளிகள் யாரும் வரவில்லை என்றால் ஞாயிறு அன்று ராமாவரம் தோட்டத்தில் இதய தெய்வம் சமையல் தானாம். அவர் சமையல் செய்யும் முறையை கேட்டவுடன் நானே அசந்து போனேன் ஏனென்றால் என் அம்மா எனக்கு சமையல் செய்ய கற்றுக் கொடுத்திருக்கிறார். அதற்கேற்ற பதிவு வரும் போது பிறகு கூறுகிறேன்......... Thanks...

  8. #3327
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒவ்வொரு இரசிகர் நிலையில் தன்னை ஆட்படுத்தி அவர் அன்பை உணர்ந்து மகிழ்விக்கும் மகான் தான் எம். ஜி.ஆர் அவர்கள்,,,,.... புகழின் உச்சியில் இருந்த போதும் மற்றும் முதல்வர் ஆக இருந்த போதும் மாறாதவர்.......... Thanks...

  9. #3328
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தாயாகி #நின்றாய்

    பெரியார் நூற்றாண்டு விழா...
    சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நடைபெற்றது...��

    அந்த விழா ஆரம்பிப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னால் ஒரு பெண்மணி தன் குழந்தைக்குப் பெயர் வைக்க எம்ஜிஆர் அருகில் வர அந்த நேரம் பார்த்து தேசியகீதம் ஒலித்தது...குழந்தை 'வீல்' என்று அழ ஆரம்பித்து விட்டது...��

    உடனே எம்ஜிஆர் சமயோசிதமாக அந்தப் பெண்ணிடமிருந்து அவசரமாக குழந்தையை வாங்கி அந்தம்மாவிடமிருந்த பால்புட்டியை குழந்தையின் வாயில் வைத்து தன் கைகளில் ஏந்தியவாறு தேசியகீதம் முடியும் வரை நின்றார்...
    அதுவரை குழந்தையும் அழாமல்
    சமத்தாக இருந்தது...��

    அந்தக் குழந்தையாக நான் இருந்திருக்கக் கூடாதா ...! ��......... Thanks...

  10. #3329
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #வாத்தியார் #பண்ணிய #மெர்சல்

    கலைவாணர் மறைந்தபோது சென்னை தி.நகரில் இருந்த அவரது வீட்டில் ஏராளமான மக்கள் கூடிவிட்டனர்...
    நிமிடத்துக்கு நிமிடம் கூட்டம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது...

    அப்போது அங்கு பொதுவுடமை சிங்கம், இலக்கிய மன்னன் என்று போற்றப்பட்ட ஜீவா என்கிற திரு.ப.ஜீவானந்தம் இறுதி மரியாதை செலுத்தவந்தார்...

    அளவுக்கதிகமான கூட்டம். ஜீவா அவர்களால் உள்ளே வரமுடியவில்லை. என்ன செய்வதென்றறியாமல் தத்தளித்தார்...

    இதைக் கவனித்த, கலைவாணரின் உடலுக்கு அருகே இருந்த #எம்ஜிஆர் #ஓடிப்போய் #காம்பவுண்டு #சுவர் #மேல் #அசால்ட்டா #ஒரு #ஜம்ப்... அப்படியே நின்று ஜீவாவை, தன் ஒரு கையால் சும்மா அலாக்காகத் தூக்கி, உள்பக்கமாக இறக்கிவிட்டார்...

    அதைப்பார்த்த மக்கள் துக்கவீடு என்பதையும் சிலவிநாடிகள் மறந்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்...

    சினிமாவில் மட்டுமல்ல, "நிஜவாழ்விலும் ஹீரோ நம்ம வாத்தியாரு..."
    வாத்தியார்னா சும்மாவா !!!

    #நீ #க்ரேட் #வாத்தியாரே...!!!

    ����������......... Thanks...

  11. #3330
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அதிமுக எம்ஜிஆர் எனும் எஃகுனால் கட்டிய கோட்டை அதனால் தலமைமையில் எவர் என்று பாராமல் ஜெயிக்கிறது அன்று ஜெயலலிதா ஊழல் வழக்கு போல் இல்லாமல் இன்று ஆட்சி நடக்கிறது ஜெயலலிதா தலைமை இலாலாமல் அன்று ஒற்றுமையாக இருந்திந்தால் இன்னும் நல்ல பெயரோடு கட்சி இருந்திருக்கும் ...... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •