Page 328 of 402 FirstFirst ... 228278318326327328329330338378 ... LastLast
Results 3,271 to 3,280 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3271
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவா மறைந்து 33 ஆண்டுகள் ஆன பின்பும் இன்றும் உங்களுடைய பழைய திரைப்படங்கள் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது இன்றும் உங்களை பற்றி நிறைய புத்தகங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது தினசரி நாளிதழ்களிலும் வார புத்தகங்களிலும் உங்களை பற்றிய செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது இன்றும் நீங்கள் ஆரம்பித்த கட்சிதான் ஆட்சி நடத்துகிறது இவ்வளவு சிறப்புகள் பெற்ற உங்ளுடைய புகழை பெற ஒரு நடிகர் அல்ல ஓராயிரம் நடிகர்கள் வந்தாலும் உங்கள் நிழலை கூட தொட முடியாது....... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3272
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புர*ட்சித்த*லைவ*ர் த*ன*து ஆட்சிகால*மான 1977 ஜூன் 30 முத*ல் 1987 டிச*ம்ப*ர் 24 வ*ரை த*மிழ*க*த்தின் முத*ல்வ*ராக இருந்த*வ*ரை பிர*புதாஸ் ப*ட்வாரி, மு.மு.இஸ்மாயில் (த*ற்காலிக*ம்), சாதிக் அலி, எஸ்.எல்.குரானா ஆகிய நான்கு ஆளுந*ர்க*ள் க*வ*ர்ன*ராக* இருந்த*ன*ர்.

    அவ்வாறே மொர்ராஜி தேசாய், ச*ர*ண்சிங், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய நான்கு பிர*த*ம*ர்க*ள் ப*த*வி வ*கித்த*ன*ர்.

    மேலும் முத*ல்முறை 962 நாட்க*ளும், இர*ண்டாம் முறை 1620 நாட்க*ளும், மூன்றாம் முறை 1042 நாட்க*ளும் முத*ல்வ*ராக ப*த*வி வ*கித்துள்ளார் புர*ட்சித்த*லைவ*ர். மொத்த*ம் 3624 நாட்க*ள் ப*த*வி வ*கித்தார்.

    குறிப்பிட*த்த*க்க சாத*னைக*ளில் சில..

    * ச*த்துண*வு திட்ட*ம்
    * பொது விநியோக* ரேஷ*ன் க*டைக*ளை அதிக*ப்ப*டுத்தி பொருட்க*ள் த*டையின்றி கிடைக்க*ச் செய்தார்.
    * தெலுங்கு க*ங்கை திட்ட*த்தின் மூலம் கிருஷ்ணா நீரை சென்னைக்கு கொண்டுவ*ர* ஒப்ப*ந்த*ம் போட்டு இரு த*வ*ணைக*ள் ப*ணமும் அளித்தார்.
    *மகளிர் காவ*ல் நிலைய*ம் முத*லில் அமைத்தார்.
    * இல*வ*ச* ஆம்புல*ன்ஸ் சேவையை அறிமுக*ப்ப*டுத்தினார்.
    *மாண*வ*ர்க*ள் இடை நிற்ற*லை குறைக்கும் பொருட்டு பி.யூ.சி.யை ர*த்து செய்து 10+2 முறையை கொண்டுவ*ந்தார்.
    * அர*சு ஊழிய*ர், ஆசிரிய*ர்க*ள் ச*ம்ப*ள*த்தை க*ணிச*மாக* உய*ர்த்தினார்.
    *மதுவில*க்கை மூன்ற*ரை ஆண்டுக*ள் அம*ல்ப*டுத்தினார். பின்ன*ர் க*ள்ளச்சாராய*, விஷ*ச்சாராய சாவுக*ளை த*டுக்க வேறுவ*ழியின்றி மதுக்க*டைக*ளுக்கு குறைந்த* அள*வில் அனும*தி அளித்தார்.
    *முல்லைப்பெரியார் அணையை ப*ல*ப்ப*டுத்தி சீரமைத்தார்.
    *கிராம*ங்க*ளில் ப*ர*ம்ப*ரை க*ர்ண*ம் முறையை ஒழித்து கிராம* நிர்வாக* அலுவ*ல*ர் ப*த*வியை இந்தியாவிலேயே முத*ன்முத*லில் த*மிழ*க*த்தில் உருவாக்கினார்..
    *அன்னை தெர*சா மக*ளிர் ப*ல்க*லைக்க*ழ*க*த்தை உருவாக்கினார்.
    * இன்றைக்கு இருக்கின்ற* 133 அடி உய*ர* வ*ள்ளுவ*ர் சிலை, கோய*ம்பேடு புர*ட்சித்தலைவ*ர் பேருந்து நிலைய*த்திற்கு அடிக்க*ல் நாட்டினார்.
    *த*னியார் பாலிடெக்னிக், பொறியிய*ற் க*ல்லூரிக*ளை மாவ*ட்ட*ந்தோறும் திற*க்க*ச் செய்தார். அத*னால் க*ல்விப்புர*ட்சியை உருவாக்கினார்.
    * மினி பேருந்து முறையை அறிமுக*ப்ப*டுத்தினார்.
    *விலைவாசியை க*ட்டுக்குள் வைத்தார். குறிப்பாக* அரிசி விலை க*ட்டுக்குள் இருந்த*து
    *த*மிழ்நாடு காகித* ஆலையை புக*ழூரில் ஏற்ப*டுத்தினார்.
    *வித*வைக*ளுக்கும், ஏழைத்தாய்மார்க*ளுக்கும், ப*டித்து வேலையில்லாத* இளைஞ*ர்க*ளுக்கு உத*வித்தொகை அளித்தார்.
    *த*ஞ்சையில் த*மிழ்ப*ல்க*லைக் கழ*க*ம் உருவாக்கினார்.
    * த*மிழ் ஆசிரிய*ர்க*ளும் த*லைமை ஆசிரிய*ர் ஆக*லாம் என உத்த*ர*விட்டார்.
    * அர*சு ம*ருத்துவ* ம*னைக*ளில் சிறுநீர*க* மாற்று அருவை சிகிச்சை, இலவ*ச* ட*யாலிசீஸ் வ*ச*தியை ஏற்ப*டுத்தினார்.
    * புதிய மாவட்ட*ங்க*ளை உருவாக்கினார்.
    *காவ*ல*ர்க*ளுக்கு அரைக்கால் ச*ட்டை முறையை மாற்றினார். கூம்பு போன்ற* தொப்பியையும் மாற்றி ந*வீன*ப்ப*டுத்தினார்.
    *ம*த*க்க*ல*வ*ர*ம், வ*குப்பு க*ல*வ*ர*ம் இல்லாமை, ர*வுடியிச*ம் ஒழிப்பு
    *ப*ராம*ரிப்பு இல்லாம*ல் இருந்த* அனைத்து கோயில்க*ளிலும் ஒரு நேர* பூஜையை அமல்படுத்தினார்.
    * விவ*சாயிக*ளுக்கு இல*வ*ச* மின்சார*ம், மின்சார*ம் இல்லாத* வீடுக*ளுக்கு ஒரு விள*க்கு இலவ*ச* மின்சார* திட்ட*த்தை அமல்ப*டுத்தினார்.
    *இல*ங்கை அக*திக*ளுக்கு புக*லிட*ம், விடுத*லைப்புலிக*ளுக்கு நிதியுத*வி அளித்தார்.

    இன்ன*மும் சொல்லிக்கொண்டே போக*லாம்...

    இனிய மதிய வ*ணக்கத்துட*ன்........ Thanks...

  4. #3273
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #இதுவன்றோ #பக்தி !!!

    எங்க அப்பாவுக்கு ஹார்ட்ல ஓட்டை...எவ்வளவோ மருத்துவமனைகளுக்குச் சென்று பார்த்தும் பயனில்லை...கடைசி முயற்சியாக சி.எம்.சி.மருத்துவமனை போகச்சொல்லி எங்க சர்ச் பாதிரியார் ஒரு லெட்டர் கொடுத்தனுப்பினாரு. அங்கே போனா, ஒரு லட்சம் ஃபீஸ் கட்டணும் ...இந்த சிகிச்சைக்கு இலவச மருத்துவம் இல்லைன்னு உறுதியாச் சொல்லிட்டாங்க...

    எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல... அப்ப எங்க நண்பர் ஒருவர், 'நீ புரட்சித்தலைவரிடம் உதவிகேட்டு சி.எம். செல்லுக்கு கடிதம் போடு...கண்டிப்பாக உதவி புரிவார்'னு சொல்ல, நானும் எங்க மாவட்ட செயலாளர் மூலம் கடிதம் அனுப்பினேன்...

    வெறும் மூன்றே நாளில் ரூ.150000/- அப்ரூவ் ஆகி புரட்சித்தலைவரிடமிருந்து ஆணை வந்தது. அதாவது ஒரு லட்ச ரூபாய் மருத்துவமனைக்கும் ரூபாய் ஐம்பதாயிரம் எங்களின் குடும்பத்திற்கும் வழங்கச்சொல்லி அந்த உத்தரவில் இருந்தது...

    வாரி வழங்கி என் தந்தையார் உயிரைக் காப்பாற்றி எங்களின் குடும்பத்தையே வாழவைத்த தெய்வம் புரட்சித்தலைவர்....

    சில ஆண்டுகள் கழிந்தன...டிசம்பர் ஆண்டு...கிறிஸ்துமஸ் கொண்டாட எங்கள் வீட்டில் எல்லோரும் ஆயத்தமாக...

    ஒரு செய்தி 'இடி போல' எங்களனைவரின் இதயங்களில் இறங்கியது...
    அது, 'புரட்சித்தலைவர் மறைந்துவிட்டார்' என்ற செய்தி...

    இதைக் கேள்விப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் எனது தந்தையார் இறந்துவிட்டார்...

    எப்பேர்ப்பட்ட பக்தி...!

    புரட்சித்தலைவர் இல்லாத உலகில் எனது தந்தையாருக்கு வாழ விருப்பமில்லை...அவருடனேயே சென்றுவிட்டார்...

    எங்களைப் போல எத்தனையோ பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை வாழவைத்த தெய்வம் அவர்...! அதெல்லாம் வெளிய தெரியாது...!!!

    #நகைச்சுவை #நடிகர் #பெஞ்சமின் அவர்களின்
    கண்ணீர் மல்கிய பேட்டி....... Thanks...

  5. #3274
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின் நடிப்பிற்கும் மற்ற நடிகர்களின் நடிப்பிற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு ...காரணம் மற்ற நடிகர்களுக்கு உடல் மட்டும் தான் நடித்தது ஆனால் புரட்சித் தலைவர் ஒருவருக்கு மட்டும் தான் உடலோடு சேர்த்து உள்ளமும் நடித்தது ...தன் படத்தை கான வரும் ரசிகர்கள் எக்காரணத்தை கொண்டும் தீய வழியில் செல்ல கூடாது என்ற காரணத்தால் தான் தன் படங்களில் தாய்மையையும் நீதி நேர்மை தர்ம சிந்தனை குடி பழக்கம் போதை சிகரெட் என தன் படங்களில் காட்சி தொகுப்போடு அனைத்தும் ஒருங்கினைந்து கொள்கை பிடிப்புடன் செயல் பட்ட காரணத்தால் தான் முதன் முதலில் முதலமைச்சர் என்ற தங்க , வைர, நவரத்தினங்கள் அடங்கிய கீரிடத்தை தமிழக மக்கள் புரட்சித் தலைவருக்கு வழங்கினார்கள் வாழ்க தமிழ் வளர்க MGR புகழ் அன்பே சிவம்...... Thanks...

  6. #3275
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வணக்கம் நண்பர்களே .....

    நேற்று சென்னையில் நடந்த ஒரு
    கலை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன் ....
    புரட்சித்தலைவரை தவிர்த்து
    அனைத்து நடிகர்களை ஆகா ஓகோ
    என்று புகழ்ந்து தள்ளியதை கண்டேன்...

    சிவாஜி கணேசனை அண்ட புளுகு
    ஆகாச புளுகு என்று வாய்க்கு வந்தபடி
    தள்ளு தள்ளு என்று தள்ளுவதை
    பார்த்தேன் ....

    இந்த பதிவு சிவாஜியை மட்டம்
    தட்டுவதற்கான பதிவு இல்லை.....

    ஆனால் இரண்டு மணிநேரமாக
    அப்படி பாடினார் இப்படி ஆடினார்
    இரத்த வாந்தி எடுத்தார்...
    நொண்டி ஆகி நடந்தார்....
    சுடுகாட்டில் அழுதார்....
    ஆண்டியாக கோயில் கோயிலாக
    அலைந்தார்....... இப்படியே
    சென்றது நிகழ்ச்சி....

    ஆனால் .....
    தலைமை
    அரசியல்
    கட்சி
    தொகுதி
    தேர்தல்
    சின்னம்
    மக்கள்
    செல்வாக்கு
    வெற்றி
    பதவி
    அரசாங்கம்
    ஆட்சி
    தர்மம்
    வள்ளல் தன்மை
    வாரி கொடுப்பது
    மக்களை நேசித்தது
    மக்கள் நலம்
    நல திட்டம்
    மக்கள் பணி
    நல்ல எண்ணம்
    பாராளுமன்றம்
    நாடாளுமன்றம்
    சட்டசபை
    மேல்சபை
    பிரதமர்
    ஜனாதிபதி
    அமைச்சர்கள்
    முப்படை தளபதிகள்
    ஐஏஎஸ்
    ஐபிஎஸ்
    கலெக்டர்கள்
    அதிகாரிகள்
    சாதனை திரைப்படம்
    இன்றும் வசூலை குவிக்கும் படம்
    இன்றும் கைத்தட்டல் விழுவது
    இன்றும் அழுவது
    நினைவிடம் .........

    இதில் ஒன்றையாவது இணைத்து
    பேசுவார்கள் என்று நினைத்தால்
    நான் முட்டாளவதை யாராலும்
    தடுக்க முடியாது ......

    ஆனால் நான் மேற்கோள்
    காட்டிய அனைத்துக்கும்
    சொந்தக்காரர் .....உரியவர்
    யாரென்று நான் சொல்லித்தான்
    தெரிய வேண்டுமா
    நண்பர்களே.........( 2018 நடந்த நிகழ்ச்சியில்... இப்போது Share செய்த நண்பர்) ... Thanks to mr.SK

  7. #3276
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *"அணுவளவும் கவலைப்படல் வேண்டாம் அன்புக்கினிய தம்பி *SK.,"*!!! *"அனைத்துலகமுமே அறிந்துதெளிந்த அரும்பெரும் மாமனிதமேதையாம், **புரட்சிக் கலைஞானி**
    மேதகு **எம்.ஜி.ஆர்**அவர்களை, இத்தகைய "அறிவிலிகள்" கண்டுகொண்டாலெ
    ன்ன?? கண்டுகொள்ளாவிட்டாலென்ன?? *"எம்.ஜி.இராமச்சந்திரச் *சூரியனை"* இத்தகைய "அற்ப முகில் கும்பலா" மறைத்துவிடும்?!? ஆனால் ஒன்று:- *"உலகமகா நடிப்புக்கலை நாயகன்"*சிவாஜி கணேசன்** எனும் *"நடிகர் திலகமும்"* *"நம் புரட்சிக் கலைஞானி"* **மேதகு மாமனித மேதை"** **எம்.ஜி.ஆர்"** எனும் *"மக்கள் திலகமும்"* தங்களின் *வாழ்வியல்நிறைவுக் காலம்*வரையிலும், எப்பேர்ப்பட்டதொரு **பாசப் பெரும்பிணைப்போடும்** **தோழமை உணர்வுரிமையோடும்** **உண்மைஉறுதிமிகு அண்ணன்+தம்பி உறவுப்பிணைப்
    போடும்** வாழ்ந்தனர் என்பதை, "இத்தகையோர்" அறிவாரோ??? அவ்வண்ணமாக அறிந்துதெளிந்திரு
    ப்பின், "இவ்வண்ணமாக" *"மேதகு புரட்சிக் கலைஞானி எம்.ஜி.ஆர்"*அவர்களைப் புறந்தள்ளி ஒதுக்கி இருப்பார்களா "அறிவிலிகள்"?!?....... Thanks to mr. Jaya rajasingam, SriLanka...

  8. #3277
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *"நாடோடி மன்னன்"*!!! இதோ!! இப்போதுதான் பத்தாவதோ, பதினோராவதோ முறையாகப் *பார்த்துச் சுவைத்துக் களிவெறி*கொண்டேன்!!! அடடா!!! அடடா!!! எப்பேர்ப்பட்டதோர் ஈடிணையேஇல்லாத் திரைப்படக்காவிய ஓவியம்இது"*!!! *"வெண்திரையிலே செதுக்கப்படும் சினிமாச் சிற்பம்"*ஆக அல்லவா, *"*நாடோடி மன்னன்*"*ஐ *"புரட்சிக் கலைஞானி"* எம்.ஜி.ஆர் அவர்கள் தன் *"நெறியாளுகை உளி"*யால் அருமையாகச் செதுக்கிவைத்துள்ளார்!!! இவ் *"அரும்பெருந் திரைப்படச் சிற்போவியத்தை"* இன்றைய இளந்தலைமுறையினருக்குத் தெரியப்படுத்தும்வண்ணமாக, *இலவசமாகவே* திரைக்காட்சிப்படுத்தலாமே!!! அப்போது தெரியும், *"எம்.ஜி.ஆர்"* யார்?!? எத்தகைய *"பேராற்றலாளன்"*?!? *"அம் மாபெருங் கலைஞானச் சக்கரவர்த்திக்கு"* ஈடிணை எவருமே இலர்!!! *"எம்.ஜி.ஆருக்கு"* நிகர், *"எம்.ஜி.ஆர்"*மட்டுமே என்பது!!!....... Thanks...

  9. #3278
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சோவின் ரசிகர்
    எம்.ஜி.ஆர். நடித்த “என்
    அண்ணன்” படத்தை இயக்கிய ப.நீலகண்டன், சோவிடம் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தார்.

    பேச்சுவாக்கில் “உங்களுடைய துக்ளக் பத்திரிகை எப்படிப் போகிறது..?” என்று கேட்டார் நீலகண்டன்.

    அதற்கு சோவும், “நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு...” என்றார்.

    நீலகண்டன் தொடர்ந்து கேட்டார், “கலைமகள் பத்திரிகை எப்படிப் போகிறது..?” என்று.
    [ கலைமகள் ஒரு தரமான இதழ் ]

    சோவும், “அது சுமாராகத்தான் போகிறது” என்று சொல்ல.... நீலகண்டன் நீண்ட பெருமூச்சுடன் கேட்டாராம்...“துக்ளக்கைப் போன்ற பத்திரிகையெல்லாம் நல்லாப் போகுது...! ஆனால் தரமான கலைமகள் போன்ற பத்திரிகையெல்லாம் சுமாராகத்தான் போகுது... இது எப்படி..?” என்று.

    பட்டென்று சோ சொன்னபதில்: “ பாருங்க சார்... எத்தனையோ நல்ல படங்கள் வந்து ஓடாமல் போகுது! ஆனா ‘என் அண்ணன்' எப்படி நல்லா ஓடுது பாருங்க! அதைப் போலத்தான்னு வச்சுக்குங்களேன்.”

    அதிர்ந்து போனாராம் நீலகண்டன்...ஏனென்றால், சோ இப்படிச் சொல்லும்போது அருகில் இருந்தவர் யார் தெரியுமா..?

    எம்.ஜி.ஆர்.!

    பக்கத்தில் இருந்த எம்.ஜி.ஆர். என்ன செய்தார்..?
    விலா நோக விழுந்து விழுந்து சிரித்தாராம்....

    சிரித்துக் கொண்டே நீலகண்டனிடம் எம்.ஜி.ஆர். கேட்டாராம்..
    “சோ கிட்ட ஏன் வாயைக் கொடுக்கறீங்க..?”

    என்ன ஒரு தைரியம் சோவுக்கு!
    அதை எளிதாக ஏற்றுக் கொள்ள என்ன ஒரு தெளிவான பக்குவம் எம்.ஜி.ஆருக்கு!....... Thanks...

  10. #3279
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் உண்ணவில்லை??
    --------------------------------------------------
    எம்.ஜி.ஆரின் மாம்பலம் அலுவலகம் அன்று ஏக பரப்பில்??
    மதியம் இரண்டு மணிக்கு மேல் ஆகியும்,,எம்.ஜி.ஆர் மதிய உணவுக்கு வர மறுத்ததால் எழுந்த பதட்டம்??
    உதவியாளர் முத்துவுக்கோ,,எம்.ஜி.ஆர் அறைக்குச் சென்று அவரை வற்புறுத்தும் துணிவு இல்லை??
    அப்போது அலுவலகம் வருகிறார் திரு சோலை!!
    அப்போது வந்து கொண்டிருந்த --அண்ணா--பத்திரிகை பொறுப்பாசிரியர்!!
    அவரிடம் விபரம் சொல்கிறார் முத்து!
    எம்.ஜி.ஆரின் அறைக்குள்,,சோலை நுழைய--எம்.ஜி.ஆரோ மும்முரமாக தொலைபேசியில் யாருடனோ பேசியபடி??
    தயங்கியபடியே எம்.ஜி.ஆரை உணவுக்கு அழைத்த சோலையிடம் இப்படி பதில் சொல்கிறார் எம்.ஜி.ஆர்??
    அப்போது எதிர்க்கட்சித் தலைவர் கருணா நிதி--
    திருச்செந்தூர் முருகன் கோயிலில் களவு போன வேலுக்காக நீதி கேட்டு பாத யாத்திரை என்ற பம்மாத்து வேலையை தொடங்கியிருந்த நேரம்??-அதாவது
    எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற வகையில்-
    இத்தை செய்தாலாவது விளம்பரம் கிட்டுமா என்று
    சொத்தை விஷயத்தில் விஷமத்தைக் கலந்த தருணம்??
    சோலையிடம்,,எம்.ஜி.ஆர் விளக்குகிறார்?
    பாத யாத்திரை சென்ற கருணா நிதிக்கு காலில் ரத்தம் வழிகிறதாம்?? மருத்துவர் குழுவை அனுப்பட்டுமா என்று,,அவரைப் பலவிதங்களில் முயற்சி செய்து தொடர்பு கொண்டு கேட்டேன்!! இல்லை,,என்னுடைய மருத்துவர் குழுவே போதும் என்று கூறிவிட்டார். அவரைப் பரிசோதித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களிடம் இருந்து பதிலை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்??
    மற்றவர்கள்,,பசி தாங்க மாட்டார்கள் என்று நான் தான் அவர்களை உண்ணச் சொல்லி விட்டேனே???
    தமக்குக் கெட்ட பெயர் வாங்கித்தர,,தமக்கு எதிராக ஒருவர் செய்யும் போராட்டத்தில் கூட,,அவருக்கு துன்பம் ஏற்பட்டதுடன் துடித்துப் போன முதல்வரை நான் இது வரைக் கேள்வியுற்றதில்லை!! நீங்கள்???

    அன்றைய சட்டமன்றக் கூட்டம் முடிந்த நிலையில் லிஃப்ட் மூலம் கருணா இறங்க வேண்டிக் காத்திருக்க--
    எம்.ஜி.ஆரோ லிஃப்டில் ஏறி வந்தபடி??
    அது சரி!! 1973 இல் இருந்து,,அவருக்கு இறங்கும் வேலையையும்,,எம்.ஜி.ஆருக்கு ஏறும் வேலையையும் தானே மக்கள் கொடுத்த வண்ணம் இருந்தார்கள்??
    எம்.ஜி.ஆர்,,ஏறி வந்த லிஃப்ட் மேலே நிற்கவும்,,படிக்கட்டு மூலம் கருணா இறங்க முற்படவும் சரியாக இருக்கிறது??
    ஓடிச் சென்ற எம்.ஜி.ஆர்,,கருணாவிடம்,,குடும்ப நலன் பற்றிப் பேசி--குறிப்பாக,,அவரது மகளின் மகப்பேறு பற்றி அறிந்து அவரை லிஃப்டிலேயே இறங்கும்படிச் செய்தாராம்???
    எம்.ஜி.ஆரின் இந்த மாண்புக்கும்--
    1985இல் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது,,எம்.ஜி.ஆரைப் பற்றி கருணா உதிர்த்த முத்துக்களுக்கும்--இடையில்-நம் நினைவில் வருவது--மலையும்--மடுவும் தான்?? உங்களுக்கு????....... Thanks...

  11. #3280
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மன செம்மல் புரட்சி தலைவர் எம்ஜிஆரின் பக்தர்கள் அணைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் .

    எனது பெயர் வ.ராஜவேல். திருவண்ணாமலை மாவட்டம். சாணானந்தல் கிராமம்.
    நான் ஒரு எம்ஜிஆர் பக்தன்.
    எனது பாட்டனார் முதல் எனது தந்தை வரை புரட்சி தலைவர் மீது தீராது அன்பும் பக்தியும் கொண்டவர்கள். அந்த வழியில் வந்த மூன்றாம் தலைமுறையில் பிறந்தவன் நான்.

    எனது தந்தைக்கு புரட்சி தலைவரின் துணைவியார் திருமதி ஜானகி அம்மையார் அவர்கள் தலைமையில் எங்கள் தாத்தா ஏற்பாட்டில் ராமவர தோட்டத்தில்தான் திருமணம் நடைபெற்றது.
    எனது தாதா அவர்கள் எம்ஜிஆரின் ரசிகனகாக மட்டுமல்லாமல் பக்தியும் இருந்த காரணத்தால் ராமவர தோட்டத்தில் கிடையாய் கிடந்தார்.

    எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுக திருமதி ஜானகி அம்மையாருக்குதான் சொந்தம் என்றுசொந்தம் கொண்டாடிய சமயத்தில் அம்மையார் கோஷ்டியில் இருந்தார்.

    பிறகு 1989ஆம் ஆண்டு திருமதி ஜானகி எம்ஜிஆர் அவர்களை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எங்கள் கிராமத்திற்க்கு அழைத்து வந்து எம்ஜிஆர் நினைவாகவும் அவரது புகழை வளர்க்க எம்ஜிஆர் பெயர் பொறித்த பெயர் பலகையை அம்மையார் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
    அந்த இடத்தில் கடந்த 30 ஆண்டுகாலமாக எம்ஜிஆர் பிறந்த நாள் விழா இறந்த நாள் அஞ்சலி மற்றும் அம்மையாரின் மறைவுக்கு பிறகு அவர்களின் இறந்த நாள் அஞ்சலி செலுத்தி வந்தோம்.

    தற்போது என்ன பிரச்சனை என்றால்.

    தற்போது எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் அரசியல் ஆதாயத்திற்காக புரட்சி தலைவர் பெயர் பொறித்த பலகையை அகற்றிவிட்டு புதிதாக ஆளும் கட்சியினர் பெயர்களை பொறித்து வரும் 28 ம் தேதி அன்று திறப்பு விழா நடத்த உள்ளனர்.

    திருமதி ஜானகி எம்ஜிஆர் அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட கல்வெட்டை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மற்றொரு கல்வெட்டை திறந்து வைக்க மாவட்ட அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
    அவர்களும் கல்வெட்டை திறந்து வைக்க வரவுள்ளனர்.

    எனது ஆதங்கம் என்ன வென்றால் அதே இடத்தில் மீண்டும் புரட்சி தலைவர் மற்றும் ஜானகி அம்மையார் அவர்களின் பெயர் மட்டுமல்லாமல் புரட்சி தலைவரின் வெண்கல சிலை அமைக்க வேண்டும் என அந்த பெயர் பலகை நீக்கப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு நொடியும் என் மனம் குமுறி கொண்டு இருக்கிறது.

    புரட்சிதலைவர் வெறும் அரசியல்வாதி மட்டும்மல்ல கொடுத்து கொடுத்து சிவந்த கரம் என்று நான்காம் தலைமுறைக்கு உணர்த்த கடைமைப்பட்டுள்ளேன்.

    இதனை பற்றி சில கருத்துகள் மற்றும் உதவிகள் தேவைகப்படுகிறது ஐயா.
    நன்றி.
    எனது தொடர்பு எண். 9884165867
    எம்ஜிஆர் புகழ் வாழ்க வளர்க...... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •