Page 321 of 402 FirstFirst ... 221271311319320321322323331371 ... LastLast
Results 3,201 to 3,210 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3201
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 60. பேரரறிஞர் அண்ணா

    1. பொதுவாக எம் ஜி ஆர் அவர்கள் தன்னிடம் கையெழுத்து வாங்க விரும்பி அணுகும் ரசிகர்களுக்கு அண்ணா நாமம் வாழ்க என்று எழுதித்தான் கையெழுத்து போட்டு தருவார்..
    2, அதேப்போல் கலந்துக்கொண்ட எந்த விழாவிலும் தனது உரையை அண்ணா நாமம் வாழ்க என்று சொல்லியே முடிப்பார்.
    3. 1977 ம் ஆண்டு முதல் அமைச்சராக பதவி ஏற்பதற்கு முன் அண்ணா சிலை அருகில் கூடியிருந்த மக்கள் கடல் மத்தியில் முதல் முதலாக அவர் வாக்குறுதி எடுத்துக் கொண்டார். இந்த ஆட்சி அண்ணாவுக்கு காணிக்கையாக்கிறேன் இது அண்ணாவின் அரசு என்றார்...
    4, கட்சியின் பெயரில் கொடியில் கொள்கையில் இயக்க பத்திரிக்கையில் அண்ணா என்ற முத்திரை பதித்தார். .அவர் எண்ணம் செயல் சொல் அனைத்திலும் அண்ணா வாழ்ந்தார். .அண்ணா நாமம் வாழ்க என்று சொல்லாமல் புரட்சித்தலைவர் பேச்சை முடித்துக்கொள்ளவில்லை. .
    5. அண்ணாவை தாங்கள் வளருவதற்கு மட்டும் சிலர் பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால் புரட்சித்தலைவர் வளர்ந்த பின்பும் அண்ணாவை மறக்க வில்லை. ..
    6. புரட்சித்தலைவரின் அண்ணா பக்தியே யாராலும் கண்களால் பார்க்க முடியாது. காதுகளால் கேட்க முடியாது. இதயத்தால் மட்டுமே உணர முடியும்...
    7. இப்படி தனது வாழ்நாளில் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க போது ஒவ்வொரு வெற்றியும் அண்ணாவால் கிடைத்தது என்று கூறியுள்ளார். காஞ்சித்தலைவரை நினைக்கவும் வணங்கவும் தவறியது இல்லை. .
    8. தனது ஒவ்வொரு படத்திலும் அண்ணாவின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் பாடல் வரிகள் வசனம் வரிகள் அல்லது அவரது கொள்கை மறக்காமல் இடம் பெற செய்வார். .
    9. வள்ளல் எம்ஜிஆர் ரிக்ஷாக்காரர்களுக்கு மழை கோட்டு கொடுத்தார் அந்த பெரிய விழாவையும் அண்ணா அவர்கள் தன் பக்கம் வைத்துக்கொண்டுத்தான் நடத்தினார். .
    10. கலைவாணர் என். எஸ். கே.யின் புதல்விகளுக்கு எம்ஜிஆர் தன் செலவில் திருமணம் நடத்திய போதும் அண்ணாவை தலமை தாங்க வைத்து பெருமைப்பட்டார்.
    11. எங்கவீட்டுபிள்ளை படத்தின் வெள்ளிவிழாவின் போது. அவர் அண்ணாவை மறந்து விடாமல் தலமை ஏற்க சொன்னார். .தனது சொந்த தயாரிப்பான நாடோடிமன்னன் வெற்றிவிழாவினையும் அண்ணாவின் தலைமையில் நடத்தினார். .
    12. அண்ணாவுக்கு சென்னை நீதிமன்றத்தில் ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட போது அங்கேயே எம்ஜிஆர் விக்கி விக்கி சிறு குழந்தை போல் அழுது விட்டார். .இந்த நாட்டிலேயே அண்ணா தண்டனை நினைத்து முதல் சொட்டு கண்ணீர் உருண்டு வந்து விழுந்தது எம்ஜிஆரின் கண்களிலிருந்துதான்.
    13. என்னை பெற்ற அன்னை பெரும் செல்வமாக எனக்கு ஒரு அண்ணனை தந்தார்கள். ஆனால் கலைத்தாய் தமிழ் தாய் எனக்கு இரண்டு அண்ணன்கள் தந்தது. . ஓன்று அண்ணன் கலைவாணர். இரண்டு அரசியலில் அறிவு செல்வமான பேரரறிஞர் அண்ணாவை எனக்கு பெரும் சொத்தாக வழிக்காட்டியாக இணையற்ற தலைவராக எல்லா வடிவமாக ஒரு அண்ணனை தந்தது, ஒரு தாய் வயிற்றில் பிறந்தால்தான் பாசம் இருக்கும் என்பது இல்லை. ........ Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3202
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 61. பேரரறிஞர் அண்ணா

    1969. ம் ஆண்டு எல்லோரும் தாங்கிக்கொள்ளமுடியாத சோதனை ஏற்பட்ட ஆண்டாகும்
    எதையும் தாங்கும் இதயம் இருக்க வேண்டும் என்றும். .தம்பி உன் முகத்தை காட்டினால் போதும்? ...உன்னை என் இதயத்தில் வைத்திருக்கிறான். .என்று மக்கள் திலகத்தை பார்த்து சொன்னவர் அரசியல் ஆசான் அறிஞர் அண்ணா அவர்கள். ..
    அண்ணா அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட பிறகு கடைசி கட்டத்தில் சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருந்த நேரம். அண்ணாவை பார்க்க வெளியூரில் இருந்து வந்து பலபேர் பார்த்தனர். .கட்சி பிரமுகர்கள் பிரபலமான வி ஐ பி க்கள் .அரசு அதிகாரிகள். .தொண்டர்கள் இப்படி பலபேர் அண்ணாவை பார்த்து விட்டு சென்றனர். ..யாருமே செய்யாத ஒரு அற்புதமான காரியத்தை புரட்சித்தலைவர் செய்தார். சத்யாஸ்டியோவில் பெரிய பந்தல் போட்டு பத்து சமையல்காரர்கள் நியமித்து அண்ணாவை பார்த்து விட்டு போகும் அத்தனை பேர்களுக்கும் காலை மதியம் என இரு வேலையும் சாப்பாடு போட்டார். .தொடர்ந்து இரண்டு வாரங்கள் இப்படி வந்த அனைவரும் சாப்பிட்டு விட்டுதான் போனார்கள். .அப்போது எத்தனையோ பேரு அண்ணா மீது பற்று இருந்தாலும் எம்ஜிஆர் போட்ட சாப்பாடு யாரும் போடவும் இல்லை. உடல் நலம் சரியில்லை என்றாலும் இச்செய்தி யாரிந்த பேரரறிஞர் அண்ணா அவர்கள் கூறியது. எம்ஜிஆரை பெற்ற தாய் பாக்கியவதியா இப்படி ஒரு தம்பியை அடைந்த நான் பாக்கியசாலி என்று நினைத்து பெருமைப்படுகிறேன். .

    1969 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி அன்று அண்ணா மறைந்தார். அண்ணா அவர்கள் இறந்த நாளன்று மக்கள் திலகம் அவர்கள் ஒவ்வொரு வருடமும். அன்று காலை அவரது சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி வணங்கி விட்டு பிறகு அன்று முழுவதும் யாரிடமும் பேசமாட்டார். அன்று முழுவதும் மெளனமாக இருந்து சாப்பிடாமல் விரதம் இருப்பார். இது புரட்சித்தலைவர் வரலாற்றில் முக்கியமான விஷயமாகும் நாளாகும். ..

    16. 6. 1984. ம் ஆண்டு அன்று புரட்சித்தலைவர் சட்டசபையில் சொன்னது. ...மக்கள் கொடுக்கும் வரி பணம். மக்களின் நல்வாழ்வுக்காக.பயன்படவேண்டும். .மக்களுடன் கூடியிரு. .மக்களுடன் பழகு. .மக்களுடன்வாழ். .மக்களுக்காக திட்டம் தீட்டி செயல்படு மக்களிடம் நீ போய் செய் என்றெல்லாம் அமரர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதைத்தான் நான் செய்கிறேன். இந்த அரசும் செய்கிறது. .அண்ணா அவர்களின் கொள்கையை நிறைவேற்றி வரிப்பணம் எவ்வளவு கிடைக்கிறதோ அதை மக்களுக்கு செலவு செய்வதுதான் எங்கள் பணி என்றார். ..நான் எனது என்ற வார்த்தையை ஒருநாளும் எங்கும் எதிலும் பயன்படுத்தியதில்லை. இது எந்த தலைவரிடம் காணாத ஒர் அதிசயம் ஆகும். ....... Thanks...

  4. #3203
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர். 2 பாகம் 62 பேரரறிஞர் அண்ணா

    1961 ம் ஆண்டு தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டம். நடந்தது. இந்த போராட்டத்தில் எம்ஜிஆர் கே. ஆர் ராமசாமி எஸ் எஸ் ஆர் போன்றவர்கள் கலந்துக்கொள்ளக்கூடாது. .என்று பேரரறிஞர் அண்ணா அறிவித்தார்.ஏன் கலந்துக்கொள்ளக்கூடாது என்பதற்கு விளக்கமும் அளித்தார். அதன் விளக்கம் இதோ இங்கே.
    கலைதுறையில் புரட்சிநடிகர் எம் ஜி ஆரை ஒழிக்க சதி நடக்கிறது. திமுக கழக கலைஞர்களை கலைத்துறையில் இருந்து அழித்து விடக் கூடிய பயங்கர சக்தி உருவெடுத்து வருகிறது. . . இது எனக்கு நன்றாகத் தெரியும். இந்தி போராட்டத்தில் ஈடுபட முடியவில்லையே என்று அவர்கள் என் மீது வருத்தபடலாம். ஆனால் அவர்கள் ஈடுபட்டால் என்ன விளைவு ஏற்படும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். புரட்சிநடிகர் எம் ஜி ஆரும் மற்ற கலைஞர்களும் இந்தி போராட்டத்தில் கலந்துக்கொண்டால். அவர்கள் கலைத்துறையை இழந்து விட நேரிடும். .அத்தகைய பயங்கரசக்தி எம் ஜி ஆரை ஒழிக்க சதி செய்து வருகிறது. .எம்ஜிஆர் மற்றும் கழக கலைஞர்கள் இந்தி போரில் ககலந்துக்கொண்டு சிறைச்சென்றால் அவர்கள் சிறையில் இருந்து திரும்பி வர ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் கழித்து திரும்பியவுடன். அவர்கள் கலைதுறையை இழந்து விட நேரிடும். அப்படிப்பட்ட பயங்கர சக்தி நம் கழக கலைஞர்களை ஒழித்து கட்ட சதி செய்து வருகிறது. எம்ஜிஆர் போன்றவர்கள் இந்தி போரில் ஈடுபடுவதால் கழகம் கலைதுறையில் பெற்றுள்ள செல்வாக்கு இழந்து விடும். அதனால் திமுக கழகத்துக்கு கலைஞர்கள் இல்லாமல் போய் விடுவார்கள் இதனால் தான் நான்கலைஞர்களை இந்தி போராட்டத்தில் ஈடுபட கூடாது என்று விதிவிலக்களித்திருக்கிறேன்
    புரட்சிநடிகர் எம் ஜி ஆர் அவர்கள் இந்தி போரில் கலந்து கொள்ளாதது. அவருக்கு கைபோய்விடும் கால் போய் விடும் அடிப்பார்கள் என்பதனால் அல்ல. .எம்ஜிஆர் அடிக்கும் கழகத்துக்காக செய்ய வேண்டிய துணிகரச்செயலுக்கும் பயந்தவர் அல்ல. அவரை போலிஸார் அடித்தால் தாங்கிக்கொள்ளக்கூடிய. .மனவலிமை பெற்றவர். . அவரை அடிக்க யாரும் கிட்ட நெருங்கமுடியாது. .எம்ஜிஆரை அடிக்க வரும் காவல்துறையினர் கூட அடிக்காமல் நின்று விட்டு. ஆ....என்று எம் ஜி ஆரை நான் இப்போது பார்த்து விட்டேன். என்று சந்தோஷப்பட்டு துள்ளி குதிப்பார். .அவர் வாழ்வில் அதுவே பெரும் பாக்கியமாக கருதுவார்கள்.தவிர அடிக்க மாட்டார்கள். . ஆகையால் புரட்சிநடிகரால் திரைப்பட உலகிற்கு பெருமைகள் பல பலன்கள் உள்ள இந்த நேரத்தில் அவரை இந்தி எதிர்ப்பு போரில் பங்கு எடுத்துக்கொள்ளவிடமாட்டேன். புரட்சிநடிகரும் மற்ற கலைஞர்களும் இந்தி போரில் ஈடுபட முடியாது. என விதி விளக்கமும் அளித்தார். என்று கூறினார் அறிஞர் அண்ணா அவர்கள். ....... Thanks........

  5. #3204
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டிவர்கள் தொடர் 2, பாகம் 63. பேரரறிஞர் அண்ணா

    நம்முடைய இதயத்தில் நீங்காத நினைவாக வாழ்ந்துக்கொண்டிருப்பவர் பேரரறிஞர் அண்ணா. ..அண்ணாவின் உள்ளம் அரசியல் உளைக்களத்தில் காய்ச்சிய உருக்கல்ல.
    அரசியல் பாலைவனத்தில் அன்பை சொறியும் ஊற்றாகும். அவரது உள்ளம். . அரசியல் தலைவர்களுக்கு இல்லாத பல்வேறு அருங்குணம் பெற்றிருந்தார் அண்ணா. அண்ணா அவர்கள் ஒரு நாடக ஆசிரியர். .சிறந்த எழுத்தாளர். .மிகச்சிறந்த பேச்சாளர். அனுபவமிக்க பத்திரிக்கையாளர். .பண்புமிக்க மாபெரும் அரசியல் அறிஞர். என்பதெல்லாம் இவருடைய சிறப்புகள் என்றாலும். எல்லாவற்றையும் விட தூய்மையான அன்புள்ளம் கொண்ட அண்ணா என்று சொல்வதிலே முழுமையாக காணமுடியும். . அண்ணாவின் உடலை காண முடியாமல் இருக்கலாம். ஆனால் அவருடைய உள்ளத்தை உயர்ந்த ககுணங்களை எப்படி காணமுடியாமல் இருக்க முடியும். ..நம்முடைய இதயத்திலே வாழும் அண்ணாவுக்கு பிறந்த நாள் என்றவுடன் நமக்கு எத்தனை மகிழ்ச்சி ஏற்படுகிறது. எத்தனை பூரிப்போடு அவ்விழாவை கொண்டாடிகிறோம். .அண்ணா பிறந்த நாளில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு அவர் வழியில் நடக்க நாமெல்லாம் உறுதி மொழி எடுத்துக்கொள்வோம். .அண்ணா நாமம் வாழ்க வளர்க அண்ணாவின் புகழ் .
    ( 1970 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15. ந்தேதி பேரரறிஞர் அண்ணாவின் 61. வது பிறந்த நாள் விழாவில் பொன்மனச்செம்மல் பொன் வாழ்த்துக்கள். )
    உழைப்பின் பலனை நல்ல பல நற்பணிகளுக்கு செலவிட்டு வருபவர் தோழர் எம்ஜிஆர். அன்பு காட்டவே பிறந்த இதயம் அவருடையது. எம்ஜிஆர் அவர்களது உள்ளம் பெரியது
    குணத்தில் தங்கம். கொதித்தால் சிங்கம். இரக்கம் இதயம் படைத்தவரை நண்பராக பெற்றிருக்கிறோம். என்று எண்ணி பெருமைப்படுகிறேன். .திமுக கழகத்தின் வளர்ச்சியில் புரட்சிநடிகரின் பங்களிப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. .என்பது ஊரறிந்த உண்மையாகும். .திமுகவில் மக்கள் திலகத்துக்கு இருந்த செல்வாக்குக்கு எதிராக சூழ்ச்சி வலைவீசிய போதும் கழகத்தில் இருந்து புரட்சிநடிகர் விலகுவதோ. கழகம் அவரை துறப்பதோ நான் கனவிலும் கற்பனை செய்திட முடியாது. .என்று கைப்பட கடிதத்தில் தெளிவாக எழுதி இருந்தார் அறிஞர் அண்ணா அவர்கள். .

    அறிஞர் அண்ணா புரட்சிநடிகரை எப்படி சரியாக புரிந்து வைத்திருக்கிறார் அவர் மீது அதிக படியான பாசமும் வைத்து உள்ளது. தெளிவாக தெரிகிறது. அதேப்போல் அறிஞர் அண்ணா மீதும் மக்கள் திலகம் கொண்டியிருந்த அன்பும் பாசமும் மதிப்பும் அளவு கடந்ததாக இருந்தது. தன்னுடைய படங்களில் திமுக கழக கொடி சின்னத்தையும் அண்ணாவின் கருத்துக்களையும் பகிரங்கமாக நுழைத்து கொள்கை பிரசாரம் செய்தவர். .முதல் முதலில் சினிமாவில் அரசியலை கொண்டு வந்தவர் புரட்சித்தலைவர்.
    அரசியல் வசனம். அரசியல் காட்சி. அரசியல் பங்கு இப்படி சினிமாவில் காண்பித்தது பொன்மனச்செம்மல். .அந்த காலகட்டத்திலும் அதன் பின் வந்த காலகட்டத்திலும். அதற்கு முன்னோடியாக வழிகாட்டியாக விளங்கியவர் நமது தெய்வம் புரட்சித்தலைவர்தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ...... Thanks...

  6. #3205
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி அறிஞர் அண்ணா போற்றுவது...*

    *ஒரு முறை தென் மாவட்டங்களில் சிறப்புரை நிகழ்த்திவிட்டு, அறிஞர் அண்ணா காரில் வந்து கொண்டிருக்கிறார். பயணக் களைப்பைப் போக்கிக் கொள்வதற்காகக் காரிலிருந்து இறங்கி சாலையோரத்தில் நிற்கிறார்.*

    *அந்த வழியே வந்து கொண்டிருந்த விவசாயக் கூலிப் பெண்கள் அண்ணாவின் காரைப் பார்க்கிறார்கள். நாடோடி மன்னன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். காட்டிய அதே கொடி அண்ணாவின் காரிலும் பறக்கிறது. அந்தப் பெண்கள் மகிழ்ச்சியுடன் அண்ணாவைப் பார்த்துக் கேட்கிறார்கள்: "நீங்கள் எங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா?” அண்ணா அவர்கள் புன்னகை ததும்பப் பதிலளிக்கிறார்; "ஆம், நான் உங்கள் எம்.ஜி.ஆர். கட்சிதான்!” இந்த நிகழ்ச்சியை விவரித்து ‘தம்பிக்கு' எழுதிய கடிதத்தில் "அந்தப் பெண்கள் நீங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா என்று கேட்டபோது நான் அளவில்லா மகிழ்ச்சியுற்றேன். நாம் செல்லாத ஊர்களுக்கும், நம்மை தெரியாத பாமர மக்களிடத்திலும் எம்.ஜி.ஆர். நமது கொடியைக் கொண்டு சென்றிருக்கிறாரே என்று வியந்து போனேன். உச்சிப் பொழுதிலும், நாம் உறங்கும் வேளையிலும்கூட எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் நமது கருத்துக்களைப் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றன என்பது உண்மையல்லவா....” என்று குறிப்பிட்டிருக்கிறார் அண்ணா .*

    *"திமுக என்றால் எம்.ஜி.ஆர்.; எம்.ஜி.ஆர். என்றால் எங்கள் வீட்டுப் பிள்ளை " இதுதான் கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள் அபிப்பிராயம். இதைப் புரிந்து கொண்டதால்தான், 'யாருக்கும் கிடைக்காத கனியொன்று மரத்தில் பழுத்துத் தொங்கியது. யார் மடியில் விழுமோ என்று எல்லோரும் ஏங்கித் தவித்தபோது, அக்கனி என் மடியில் விழுந்தது. மடியில் விழுந்த கனியை என் இதயத்தில் பத்திரமாக வைத்துக்கொண்டேன்' என்று அண்ணா எம்.ஜி.ஆரை கொண்டாடினார்.*

    *1967ல் நடைபெற்ற பொதுத் தேர்தல் தமிழக வரலாற்றில் முக்கியமான அத்தியாயமாகும். அப்போது தேர்தல் நிதியாக எம்.ஜி.ஆர். ஒரு இலட்சம் ரூபாய் தந்தபோது அண்ணா சொன்னார் : "தம்பீ, இந்த ஒரு இலட்ச ரூபாய் பெருந்தொகைதான், ஆனால் நானோ இதைவிட அதிகமாக எதிர்பார்க்கிறேன். மக்களுக்கு உன் முகத்தைக் காட்டு, அது பல இலட்சம் வாக்குகளைப் பெற்றுத்தரும்!” என்றார். அந்தத் தேர்தலின்போது தான் தமிழகத்தை உலுக்கிய துயரச் சம்பவம் நடந்தது. இளைஞர்கள் கொதித்தார்கள்; தலைவர்கள் திகைத்தார்கள்; பெண்கள் அழுது புலம்பினார்கள்; ஆம், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்.*


    *அண்ணா கேட்டுக்கொண்டபடி எம்.ஜி.ஆர். தனது முகத்தை மக்களுக்குக் காட்ட முடியவில்லை . ஆனால், குண்டடிபட்டு கழுத்தில் கட்டுப்போடப்பட்ட அவருடைய படம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள், தமிழ்நாடு எங்கும் ஒட்டப்பட்டன. பார்த்துப் பதறிய மக்கள் தி.மு.க.விற்கு வாக்குகளை அள்ளிக் குவித்தார்கள். கூட்டணிக் கட்சிகளும் மகத்தான வெற்றி பெற்றன. வெற்றிக்கு மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில், அண்ணாவிற்கு மாலை அணிவிக்கச் சென்ற மக்களிடம் குறிப்பாக கே.ஏ.மதியழகன் ஊரான கணியூர் மற்றும் கோவை நகரக் கழகப் பொறுப்பாளர்களிடம் “இந்த வெற்றிக்கு உரியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. முதலில் அவருக்கு இந்த மாலையை சூட்டுங்கள்" என்று அண்ணா உணர்ச்சிபொங்கப் பேசினார்.*

    *திமுக வளர்ந்தது, வெற்றி பெற்றது, ஆட்சி அமைத்தது எம்.ஜி.ஆரால்தான் என்பதை உணர்வதற்கு அறிஞர் அண்ணாவின் கூற்றே வரலாற்றுச்சான்று...!!!*........ Thanks...

  7. #3206
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மைனாரிட்டி திமுக - ஒரு எளிய விளக்கம்

    1990 க்கு முன்பு தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் இந்து கோவில்களுக்கு வருவதும், இந்துக்கள் மசூதிக்கும், தேவாலயங்களுக்கு போய் வேண்டிக் கொள்வதெல்லாம் சாதாரணம். அம்மை நோய் வந்தால் முஸ்லிம் பெண்கள் மாரியம்மனுக்கு நேர்ந்து கொள்வதும், கோவில் திருவிழா கமிட்டியில் முஸ்லிம்கள் ஒருவராக இருந்து திருவிழாக்களை முன்நின்று நடத்தியதையும் நாற்பது வயதை கடந்தவர்கள் யாரும் மறுக்க முடியாது.

    தொப்புள் கொடி உறவுகளாக இருந்தவர்கள் தாலிபான்களாக எப்போது மாறினார்கள்...? மதத்தை கடந்து இந்துக்களிடமும் மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்கிய பாதிரியார்கள் இன்று எப்படி ஹிந்து விரோதிகளாக மாறினார்கள்? அனைத்தும் திமுகவின் திருவிளையாடல்கள் தான்.

    அண்ணா துரையின் மரணத்திற்க்குப் பின் 1969 ல் முதலமைச்சரான கருணாநிதி லட்சங்களில் ஊழல் செய்து கொண்டிருந்தார். அவருக்கான அறிவு அவ்வளவு தான். 1976 வரை எட்டு ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து தமது அறிவுக்கு எட்டின முறைகளில் ஊழல் செய்தார். அதாவது பெரும்பாலும் அரசு கான்ட்ராக்ட்களில் கமிஷன். லட்சங்களில் மட்டுமே ஊழல் செய்யத் தெரிந்த அப்பாவி கருணாநிதி அவர்.

    இந்த நிலையில் தி.மு.க உடைந்து எம்ஜிஆர் தலைமையில் அ.தி.மு.க உதயமாகிறது. எம்ஜிஆர் என்னும் மக்கள் செல்வாக்கு பெற்ற மனிதர் இருந்த வரையில் கருணாநிதி ஒரு காகிதப்புலியாகத்தான் தமிழக அரசியல் களத்தில் இருந்தார். எம்ஜிஆர் மறைந்த பின் வந்த பொதுத்தேர்தல் வரை அதாவது 1989 வரையிலான 13 ஆண்டுகள் கருணாநிதிக்கு வனவாசம் தான். இந்த வனவாச காலத்தில் கட்சியை நடத்த திமுக வினர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தனர் என்றே சொல்லலாம்.

    வருடத்திற்கு மூன்று முறை முப்பெரும் விழா, ஐம்பெரும் விழா, இந்தி எதிர்ப்பு மாநாடு, டெஸோ மாநாடு, அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் விழா,... இப்படி மக்களையும், தொழில் அதிபர்களையும் ஏமாற்றித்தான் வயிறு வளர்த்து வந்தனர். கருணாநிதியின் மீதான மக்களின் அதிருப்தி மிக அதிகமாக இருந்த காலகட்டம் அது. ரவுடிகளின் கட்சி என்ற மதிப்பீடே அப்போது இருந்தது.

    அதிமுக விற்கும் திமுக விற்கும் இருந்த நிரந்தர ஓட்டு வங்கியில் 10% ற்கும் மேலான வித்தியாசம் இருந்தது. இந்த வித்தியாசம் தான் தி.மு.க வை 13 ஆண்டுகள் வனவாசத்தில் வைத்திருந்தது. எம்ஜிஆரின் மறைவிற்குப் பின் அதிமுக இரண்டாக உடைந்தது. இது தான் கருணாநிதியின் அரசியல் வனவாச வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

    பிளவு பட்ட அதிமுக வை எதிர்த்து தேர்தல் களம் கண்ட திமுக 1989 ல் ஆட்சியை பிடித்தார். இப்போது கருணாநிதியை சுற்றி முரசொலி மாறன் தலைமையிலான ஒரு கில்லாடியான ஒரு கூட்டம் உருவாகியிருந்தது. கில்லாடி கூட்டதும் என்றதும் தமிழக மக்களுக்காக செயல்படும் அறிவார்ந்த கூட்டம் என்று நினைக்க வேண்டாம்.

    பழைய கருணாநிதி அரசு காண்ட்ராக்ட்களில் எப்படி கமிஷன் பார்ப்பது என்ற அறிவிலானவர் என்றால் முரசொலி மாறன் தலைமையிலான கூட்டம் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி எந்த வகையிலெல்லாம் கொள்ளையடிக்கலாம் என மிக துல்லியமாக கணக்கிட்டு சுரண்டியது. அரசு காண்ட்டிராக்ட்களில் கட்டாய கமிஷன் என்பது மாறி பினாமி நிறுவனங்களை துவக்கி அதற்கு ஒப்பந்தங்களை வழங்கினர்.

    அரசு வேலைகளுக்கு ரேட் நிர்ணயிக்கப்பட்டு வசூல், பதவி உயர்வுக்கு ரேட், டிரான்ஸ்பருக்கு ரேட், டிரான்ஸ்பரை ரத்து செய்ய ரேட்... என வசூலை வாரி குவித்தனர். இதில் ஒரு கொடுமையான விசயமும் நடந்தது. லஞ்சம், ஊழல் இல்லாத அரசை அமைப்போம் என வாய் கிழிய பேசும் இவர்கள் மாமூல், கட்டிங், வசூல் கொட்டும் ஏரியாக்களில் உள்ள அரசு பதவிகளுக்கு தனி ரேட்டே நிர்னயம் செய்து வசூலித்தனர். அதாவது ஏலம் விடாத குறை தான்.

    சென்னை பூக்கடை பகுதி காவல் துறை பதவிகள், சேலம் மாவட்ட வனத்துறை பதவிகள், சென்னை கோவை பத்திரப்பதிவு அலுவலர் பதவிகள், சென்னை கோவை விற்பனை வரி அலுவலக பதவிகள்.... இவற்றை போல ஆயிரக்கணக்கான பசையுள்ள இடங்களும், பதவிகளும் அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கு தனி ரேட் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்ட அக்கிரம் எல்லாம் திமுக ஆட்சியில் நடந்தது.

    சரி, கோடி கோடியாக கொள்ளையடிக்க வழி கிடைத்து விட்டது. லட்சங்கள், ஒரு கோடி இரண்டு கோடி எனில் கரன்சியாக பதுக்கி வைக்கலாம். பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கலாம். இதெல்லாம் போக காட்டாறு போல வந்து குவிந்து கொண்டே இருக்கும் ஊழல் பணத்தை என்ன செய்தார்கள்? இந்த பணம் தான் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு வங்கிகளில் ரொக்கமாகவும், பங்குச் சந்தை முதலீடுகளாகவும், அசையா சொத்துக்களாகவும் பதுக்கப்பட்டது.

    வெளிநாட்டிற்கு பணத்தை கொண்டு போக வேண்டும் எனில் முறைப்படி ரிசர்வ் வங்கியில் முறைப்படி அனுமதி பெற்று கொண்டு போக வேண்டும். முறைப்படி ரிசர்வ் வங்கியில் அனுமதி பெற வேண்டும் எனில் அந்த பணம் வந்த வழியை சொல்ல வேண்டும். என்ன சொல்வார்கள் இவர்கள்? ஊழல் செய்து மக்களை கொள்ளையடித்த பணம் என்று சொல்ல முடியுமா? இந்த இடத்தில் இந்தியாவில் மதம்மாற்றி பிழைப்பு நடத்த வந்த கிறித்தவர்களும், முஸ்லீம்களுக்கும் இதே பிரச்சனை தான். ஆனால் அவர்களுக்கு இது தலைகீழ். மதத்தை பரப்ப வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது. அப்படி வரும் பணத்தை என்ன சொல்லி இவர்கள் வாங்குவார்கள்? மதத்தை பரப்ப வாங்குகின்றோம் என சொல்ல முடியுமா? இந்த இடத்தில் தான் மைனாரிட்டிகளும், திமுகவும் கிவ் அன்ட் டேக் (Give and Take) என்ற ஒரு அடிப்படை புரிதலுடன் இணைகின்றனர்.

    திமுக வின் ஊழல் பணம் இந்தியாவில் உள்ள மெஷினரிகளிடமும், மதராசாக்களிடமும் கொடுக்கப்படும். அதற்கு பதிலாக மதமாற்றத்திற்காக வெளிநாடுகளில் தொண்டு நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படும் பணத்தின் மூலம் அங்கேயே திமுக வினரின் பணம் முதலீடு செய்யப்படும். இதனால் ஒரு பக்கம் மதமாற்றத்திற்கான பணம் மைனாரிட்டிகளுக்கு இங்கேயே கிடைத்து விடுகிறது. திமுக வினரின் ஊழல் பணம் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்படுகிறது.

    இது தான் திமுக தலைமைக்கு "மைனாரிட்டி" மதங்களின் மேல் பாசம் ஏற்பட காரணம். வெளிப்படையாக பார்த்தால் திமுக என்பது நாத்திக தலைவர்களால் ஆனது. அது பெரியாரின் இறை மறுப்பு கொள்கையை அடிப்படையாக கொண்டது என்பதால் இந்துக்களை விமர்சனம் செய்கின்றனர் என்று தெரியும். ஆனால் உண்மை காரணம் இது தான்:

    அதிமுக விற்கும் திமுக விற்குமான 10% இடைவெளியை மைனாரிட்டிகளை கொண்டு நிரப்புவது. அடித்த கொள்ளை பணத்தை அவர்கள் மூலம் பாதுகாப்பாக வெளிநாட்டிற்கு கொண்டு சென்று பதுக்குவது. இந்த இரண்டும் தான் திமுக வின் பிரதான கொள்கை.

    திமுகவின் உதவி மதத்தை பரப்ப மைனாரிட்டிகளுக்கு அவசியம். அடித்த கொள்ளை பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று பதுக்க மைனாரிட்டிகளின் உதவி திமுக விற்கு அவசியம். கடவுள் மறுப்பு கொள்கைகளில் ஏசப்பாவிற்கும், அல்லாவிற்கும் திராவிட கொள்கையில் விதிவிலக்கு வழங்கப்பட்டது இந்த காலகட்டத்தில் தான். திமுக வின் எழுதப்படாத பார்ட்னர் ஆன தைரியத்தில் இந்த காலத்தில் தான் ஜிஹாதி கொலைகள் தொடங்கியது.

    80% பெரும்பான்மை சமுதாயமாக இருந்தாலும் கோவில் விழாக்களில் தகராறு, கோவில்களையே உடைப்பது, இந்துக்களை பகிரங்கமாகவே மேடை போட்டு கேவலப்படுத்துவது என கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் கிளம்பினர். இவர்களின் தயவு தேவைப்பட்டதால் திமுக வும் மறைவில் நின்று இவர்களை ஆதரித்து வளர்த்து விட்டது.

    இது படிப்படியாக வளர்ந்து திமுக வின் அனைத்து மேடைகளிலும் "மதச்சார்பற்ற அமைப்புகள்" என்ற பெயரில் மைனாரிட்டிகள் இந்துக்களை கேவலப்படுத்தி பேசுகின்றனர். மதசார்பற்ற மாநாடு என்று திமுக கூட்டம் போடும், ஆனால் அதில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் மத அடையாளத்தோடு கலந்து கொண்டு இந்து மதத்தையும், இந்துக்களையும் விலாசுவார்கள்.

    சரி, இதிலிருந்து தி.மு.க விலகாதா? என அப்பாவி இந்துக்கள் கேட்கலாம். கண்டிப்பாக முடியாது. இப்போது திமுக வின் குடுமி மைனாரிட்டிகளின் கைகளில். இதுவரை சுருட்டிய பல்லாயிரம் கோடிகள் மைனாரிட்டிகளின் ஹவாலா நெட்வொர்க் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தையும், முதலீடு செய்யப்பட்ட சொத்துக்களையும் இதே மைனாரிட்டி கும்பல் முறையாக பராமரித்து வருகிறது.

    இங்கு திமுக தலைவர் ஏதாவது பல்டி அடித்தால் அத்தனை பதுக்கல் பணமும் அவர்களுக்குச் சொந்தமாகிவிடும். அது மட்டுமல்ல திமுக வினரின் சட்ட விரோத கருப்பு பண பரிமாற்றங்களையும், வெளிநாட்டு முதலீடுகளையும் போட்டு கொடுத்தால் ஸ்டாலினின் குடும்பமே சுற்றம் சூழ நீதிமன்றத்திற்கு அலைந்து சிறையில் கம்பி எண்ண வேண்டியது தான். தண்டனை முடிந்து விடுதலையாகி வந்தாலும் பூக்கடை பஸ் ஸ்டாண்டில் மாங்காய் விற்றுத்தான் பிழைக்க வேண்டி வரும்.

    பச்சையாக சொன்னால் திமுக என்கிற கட்சி இன்று மைனாரிட்டிகளின் ஹவாலா மாபியாக்களுக்கு அடிமையாகி முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. மைனாரிட்டிகளுக்கு மண்டி போட்டு சலாம் போடும் நிலை வந்து விட்டது. எஜமானன்களை திருப்தி படுத்த ஒவ்வொரு இடத்திலும் முடிந்தளவு இந்துக்களை பார்த்து குரைத்து எஜமான விசுவாசம் காட்டுவதை தவிர வேறு வழியில்லை. எஜமான விசுவாசத்திற்காக இந்து மத எதிர்ப்பு என்கிற நிலைப்பாடு எடுத்தாகி விட்டது. ஆனால் அரசியலில் வெற்றி நடை போடுவது கட்டாயம். அதற்கு இந்துக்களின் ஓட்டு அவசியம். இதனால் ஒவ்வொரு தேர்தல் முடியும் வரை இந்துமத எதிர்ப்பு மூட்டை கட்டி வைக்கப்படும். தேர்தலில் இந்துக்களின் ஓட்டு வாங்க மைனாரிட்டிகளிடம் அனுமதி பெற்று - விபூதி பூசுதல், குங்குமம் வைத்தல், கோவிலுக்கு சென்று வழிபடுதல், ஐயர்களை கட்டிப்பிடித்தல்... போன்ற காமெடிகள் நடக்கும்.

    இந்து மக்களுக்கு திமுக கட்சி செய்த நன்மைகள் என பைசாவிற்கு உபயோகமில்லா உதவிகளை பட்டியலிடுவார்கள். இந்து மக்களின் காவலன் திமுக என்று கூட பல்டி அடித்து வாக்கு கேட்பார்கள். இந்த பல்டியெல்லாம் ஓட்டுப்பதிவு நாள் வரை தான். வாக்குப்பதிவு முடிந்தவுடன் எஜமான விசுவாசத்தை காட்ட மறுபடியும் துண்டு சீட்டில் எழுதி வைத்து, சதா..சதா.. சந்தானத்தை வேரறுப்போம் என பேச ஸ்டாலின் கிளம்பி விடுவார்.

    இந்துக்கள் வாக்களிக்கும் முன் சற்று யோசிக்கவும். மைனாரிட்டிகளின் அடிமை கூட்டணிக்கு வாக்களித்து நீங்களும் அடிமையாக போகிறீர்களா...? அல்லது சுய மரியாதையுடன் வாழ சிந்தித்து வாக்களிக்க போகின்றீர்களா? மைனாரிட்டிகளின் அடிமையாக மாறி அவர்களிம் மண்டி போட்டு நிற்பதும், மான மரியாதையுடன் நாம் வாழ்வதும் உங்கள் கைகளில் உள்ள வாக்குச் சீட்டில் தான் உள்ளது. சிந்தித்து செயல்படுவீர்.......( WA., நண்பரின் ஆதங்க பதிவு)... Thanks...

  8. #3207
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம். 64. பேரரறிஞர் அண்ணா .

    வாழ்க்கைக்கு அவசியமான பதிவு தவறாமல் படியுங்கள். .
    1966. ம் ஆண்டு இறுதியில் வெளிவந்த பெற்றால் தான் பிள்ளையா படத்தின் வெற்றி விழா 1967. ம் ஆண்டு பேரரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. . அந்த விழாவில் பலபேர் புரட்சித்தலைவரின் நடிப்பை புகழ்ந்து பேசினார்கள். .அதிலே அண்ணாவும் புரட்சித்தலைவரும் பேசியவை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். .
    முதலில் அண்ணா கூறியது பார்ப்போம். .

    எளிமையான இயற்கையான நடிப்பை திரையில் வழங்கி எல்லோருடைய மனதிலும் ஒரு நிலையான இடத்தைப் பிடித்துள்ளார். புரட்சிநடிகர் எம்ஜிஆர்..எத்தனையோ ஆக்ஷன் படங்களில் நடித்தவர். மாபெரும் ஜாம்பவான்கள் படங்களுக்கு மத்தியில் வலம் வந்தவர். அகில உலகமே திரும்பி பார்க்க செய்தவர்.அப்படிப்பட்ட ஒரு நடிகர் இன்று பெற்றால்தான் பிள்ளையா படத்தில் ஒரு குழந்தைதனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். .என்றால் அவர் இமெஜ்க்கும் கெளரவித்துக்கும் இடம் கொடுக்காமல் நடிப்புக்கும் நல்ல கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். .இந்தியாவிலேயே சிறந்த ஆக்ஷன் நடிகர் பிரமாண்டமான .
    திரைப்படங்களில் நடித்தவர் பிரமாண்டமான தயாரிப்பாளர் இதெல்லாம் இல்லாமல். கதையில் பிரமாண்டம் வெற்றியில் பிரமாண்டம் தந்துள்ளார். .ஒரு நல்ல கருத்துள்ள கதையாக இருந்தால். மக்கள் மனம் நாடி செல்லும் கதையாக இருந்தால் அது எம்ஜிஆர் ஒருவரால் தான் நடிக்க முடியும் என்கிற ஆழ்ந்த நம்பிக்கையை இப்படம் மூலம் தந்துள்ளார் நிருப்பித்துள்ளார். அவரது இயற்கை நடிப்பு மேலும் தொடர வாழ்த்துக்கிறேன். என்றார் பேரறிஞர் அண்ணா. ..

    புரட்சித்தலைவர் கூறிய கருத்துள்ள பேச்சு இதோ உங்கள் பார்வைக்கு. .
    பெற்றால் தான் பிள்ளையா என்பது நம்நாட்டில் உள்ள மனிதர்களை மட்டும் குறிப்பிடாது.உயிர் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நம் பிள்ளைகள்தான்..ஒவ்வொரும் வீட்டியிலும் ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளைகள் இருப்பதுபோல் நாம் வளர்க்க வேண்டிய பிள்ளைகள் தென்னம்பிள்ளை வாழைப்பிள்ளை ...வேப்பிலை கருவேப்பிலை .அணில் பிள்ளை கிளிபிள்ளை இவையெல்லாம் நமது பிள்ளைகள் தான். தென்னம்பிள்ளை ஆண்பிள்ளைக்கு சமமானது. தென்னம்பிள்ளை எப்படி வேண்டுமானாலும் வளர்க்கலாம் அதற்கு மண் நீர் பராமரிப்பு இல்லாமல் வளர்ந்து விடும். .நம் பிள்ளைகள் நமது தலைமுறை வரைதான் ஆனால் தென்னம்பிள்ளை பல தலைமுறை தாண்டி வம்சங்களை காக்கும்..அதேப்போல் வாழைப்பிள்ளை பெண் பிள்ளைகளுக்கு சமமானது. அதற்கு முறையான மண்வளம் தேவை. . தேவையான தண்ணீர் தேவை. முறையான பராமரிப்பு தேவை. அதேப்போல் தான் பெண்பிள்ளை பெற்றவர்கள் முறையான பராமரிப்புவுடன் கவனக்குறைவில்லாமல் வளர்க்க வேண்டும்.. வாழை வெட்ட வெட்ட வளர்ந்துக்கொண்டே இருக்கும். அது போல் பெண்பிள்ளையை பெற்றவர்கள் வீடும் தலைமுறை தலைமுறையாக வளர்ச்சி அடைந்துக்கொண்டே போகும். வாழையடி வாழையாக வம்சங்களை குறிப்பிடுவது பெண்பிள்ளைகளைத்தான். அதனால் யாரும் பிள்ளை இல்லை என்று கவலை படாமல் ஒவ்வொரும் வாழைப்பிள்ளை தென்னம்பிள்ளை வளர்த்து தமது பிள்ளைகளாக கருதி வளர்க்க வேண்டும் அதனால் நாட்டுக்கும் நன்மை வீட்டுக்கும் நன்மை. அனைத்து ஜீவராசிகளும் நாம் பெற்ற பிள்ளைகளாக நினைக்க வேண்டும். என்றார் புரட்சித்தலைவர். . எல்லோரும் புரட்சித்தலைவர் பற்றியும் அவரது நடிப்பு பற்றியும் படத்தில் பங்குபெற்றவர்களைப்பற்றியும் கூற புரட்சித்தலைவர் மட்டும் படத்தின் தலைப்பும் அதன் கருத்தையும் கூறியது கேட்டு அனைவரும் ஆச்சரியத்தில் கரவோலி விண்னை பிளந்து நிற்க வெகு நேரமாகிவிட்டது. ....... Thanks...

  9. #3208
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 65. பேரரறிஞர் அண்ணா

    1. பேரரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தி.மு.க ( திராவிட முன்னேற்றக் கழகம் ) . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் அதிமுக ( அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் )
    2, 1967. ம் ஆண்டு முதல் முதலாக திராவிட இயக்கம் தலைவர் பேரரறிஞர் அண்ணா அவர்கள் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றார்.
    1977 ம் ஆண்டு முதல் முதலாக அண்ணா திராவிட இயக்கம் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் புதிய முதலமை*ச்ச*ராக பதவி ஏற்றார்.
    3. 1969 ம் ஆண்டு பேரரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே மறைந்தார். வங்க கடலோரம் துயில் கொண்டார்.
    1987 ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே மறைந்தார். அண்ணாவின் அருகிலேயே வங்க கடலோரம் துயில் கொண்டார். .
    4, தமிழில் அண்ணா என்பது மூன்று எழுத்து ஆங்கிலத்தில் ஐந்து எழுத்து. . ஆங்கிலத்தில் M. G . R. என்பது மூன்று எழுத்து தமிழில் ஐந்து எழுத்து. .
    5. தியாகராய கல்லூரியில் எம் ஜி ஆர் படத்தை திறந்து வைத்தார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். .அண்ணா சாலையில் அண்ணா சிலை நிறுவினார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். .
    6. பேரரறிஞர் அண்ணா அவர்கள் பெயரை உச்சரித்து முதல்வர் ஆனார் எம்ஜிஆர் அவர்கள். எம்ஜிஆர் ஆதரவுடன் முதல்வர் ஆனார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். .
    இவையெல்லாம் அண்ணாவுக்கும் எம்ஜிஆருக்கும் உள்ள ஒற்றுமை ஆகும்.

    புரட்சிநடிகர் என மக்கள் போற்றவும் ..நல்லவர் என நண்பர்கள் வாழ்த்தவும். ..தோழர்களின் தோழர் என கழகத்தார் கூறவும் உரிமை உள்ளவர் எம்ஜிஆர்... அவர் அண்மையில் சென்னை தியாகராய கல்லூரிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் திரட்டி தந்துள்ளார். என்பதை கேள்வி பட்டு மகிழ்ந்தோம் பரவசம் படுகிறோம். அவர் குணம் கண்டு அவரது பண்பை பாராட்டும் வகையில் தியாகராய கல்லூரியினர் சில நாட்களுக்கு முன்பு சட்டமன்ற தலைவர் கிருஷ்ணராவின் தலைமையில் என்னைக் கொண்டு எம்ஜிஆரின் படத்தை திறந்து வைக்க சொன்னார்கள். ..கூத்தாடிகள் நாடகமாடிகள் என்று ஏளனமாகப் பேசப்பட்ட நிலைமாறி அவர்களது திருவுருவங்களை கல்லுரியிகளில் வைக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டு வருவது கண்டு மகிழ்கிறோம். பணம் வருவது கடினம். ஆனால் வருகின்ற பணத்தை வகையறிந்து செலவழிப்பது..மிக மிக கடினம். அதுவும் நடிப்புலகில் இது மிகவும் கடினம். இருந்தும் பணத்தை நல்ல காரியங்களுக்காகவே பயன்படுத்திடும் கண்மணியாக இருந்திடும் எம்ஜிஆர் நம்மவராக இருப்பதில். நமக்கு ஒரு பெருமை இருக்கிறது. .இருக்கின்ற இடத்திற்கும். தனக்கும் பெருமை தேடித் தரும் புரட்சிநடிகர் எம்ஜிஆர் அவர்கள் வாழ்க வளர்க அவர்தம் பணி தொடர்க. . ( என்று எம்ஜிஆர் பற்றி பேரரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். .அந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இல்லை. ஆதாரம் 13. 4, 1958
    திராவிட நாடு பத்திரிகை, )........ Thanks...

  10. #3209
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 66. பேரரறிஞர் அண்ணா. .

    அகமும் புறமும். புரட்சித்தலைவர் பற்றி அண்ணா கூறியது, .
    புரட்சிநடிகர் வேண்டும் அதனால் அவர் புகுந்த அரசியலும் வேண்டும். என்று கட்சியில் சேர்ந்தவர்கள் பலர் உண்டு. .புரட்சிநடிகர் சேர்ந்து விட்டாரே நாமும் சேர்ந்தால் என்ன என்று சேர்ந்தவர்கள் பலர் உண்டு. .புரட்சிநடிகர் நல்லவர் அதனால் அவர் சேர்ந்த கட்சியும் நல்லாத்தான் இருக்கும் என்று சேர்ந்தவர்கள் பலர் உண்டு. பங்கு கொண்டவர் களும் பலர் உண்டு. .புரட்சிநடிகர் தயவு நமக்கு வேண்டும் ஆகவே அவரது கட்சியின் கொள்கையும் நமக்கு வேண்டும் என்று ஒப்புக் கொண்டு சேர்ந்தவர்களும் பலர் உண்டு
    புரட்சிநடிகரை பிடிக்காத காரணத்தால் எம்ஜிஆர் சேர்ந்த கட்சி நமக்கு வேண்டாம் என்று ஒதுங்கியவர்களும் சிலர் உண்டு? . .

    பொதுவாக அகம் புறம் என்று கூறபடுவைகளுக்கு பல வகையான கருத்துக்களை கூறுகின்றனர். . அவற்றில் எது சிறந்தது என்று வாதிடுகின்றனர் . அவற்றுக்கு ரத்தின சுருக்கமாக ஒன்றை கூற வேண்டுமானால். . எண்ணமென்பது அகமென்றும். செயலென்பது புறம் என்றும் கூறலாம். இவற்றில் எது சிறந்தது அகமா? ?புறமா ??.தமிழ் மக்கள் அகத்தையும் புறத்தையும் சமமாக பாவித்து வந்துள்ளனர். .அகத்துக்கு ஐநூறோ புறத்துக்கு முந்நூறோ அல்லது புறத்துக்கோ ஐந்நூறோ அகத்துக்கு முந்நூறோ என்று பாடவில்லை. தமிழன் அகநானூறு புறநானூறு எஎன்றுதானே பாடினான். அகமும் புறமும் தமிழனுக்கு ஒரே எடை இவற்றில் எதாவது ஒன்றை குறிக்கோளாக கொண்டு சிறந்து விளங்கும் நாடு என்றைக்கும் சிறப்பாக வாழ முடியாது. .
    உதாரணமாக அக வாழ்க்கையில் சிறந்த நாடு கிரேக்க நாடு. .புற வாழ்க்கையில் சிறந்த நாடு எகிப்து நாடு. இவ்விரு நாடுகளின் நீடுழி புகழ் அறியாதவர்கள் சிலரே. ஆனால் அந்த நீடுழி புகழ் இன்று எங்கே? .? நமது நாடு அகவாழ்க்கையிலும் புறவாழ்க்கையிலும் ஒழுங்கே சிறந்து விளங்குகிறது. .அந்த சிறப்பு தமிழனுக்கு இல்லையென்றால் தனது வீட்டில் பால் பொங்கியது போதாதென்று பிறரையும் பால் பொங்கிற்றா என்று கேட்டிருக்க முடியுமா. ? அதனால்தான் இத்தனை சிறப்பு கொண்டிருக்கிறது இந்நாடு ஆகவே தமிழனை ஈதல் இசை வாழ்ந்தான். என்கின்றனர்.
    இதனை நம் நடிகர்கள் மேற்கொள்ள வேண்டும். அகம் புறம் இரண்டிலும் சிறந்து விளங்க வேண்டும். நடிகன் நடிகனாக இருந்து விடக்கூடாது. அதேப்போல் கலை கலைக்காகவே இருந்து விடக் கூடாது. நடிகரும் மக்கள் இனமே .அதுபோல் வாழ்வின் வளத்துக்கே கலை உதவ வேண்டும். என்ற சீரிய நோக்கம் கொண்டவர் புரட்சிநடிகர் எம்ஜிஆர். .இந்த நோக்கம் தனக்கு மட்டும் இருந்தால் பயன் இல்லை. ஏனைய கலைஞர்களுக்கும் புக வேண்டும். தான் பெற்ற இன்பத்தை அவர்களும் அடைய வேண்டும். என்று தடுத்தவர் பகைத்தவர் வெறுத்தவர் மத்தியில் அரசியலில் தாவி புகுந்தார். மக்களுக்கு உதவுகிறார் உதவ வேண்டும் என்று துடிக்கிறார். செய்துக்கொண்ட இருக்கிறார். .அகத்தில் நடிப்பிலும் புறத்தில் அரசியலும் ஒழுங்கே சிறப்பை எட்டி பிடிக்கிறார். எம்ஜிஆர். ...... Thanks...

  11. #3210
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 67. பேரரறிஞர் அண்ணா

    அரசியலில் அன்பையும் பண்பையும் விதைத்தவர் அறிவுலக மேதை பேரரறிஞர் அண்ணா. .தேர்தலில் போட்டியிடலாமா? ? வேண்டாமா? ? 1957 .ம் ஆண்டு மக்கள் மாநாட்டில் மக்கள் தீர்ப்பையும் கருத்தையும் அறிந்துக்கொண்டுத்தான் தேர்தல் களத்தில் இறங்கினார். பேரரறிஞர் அண்ணா அவர்கள். .6. 3. 1967. அன்று சென்னை மாநில முதலமை*ச்ச*ராக பொறுப்பேற்றார். இந்த அரசை தந்தை பெரியாருக்கு காணிக்கையாக்கிறேன்.என்றார். . அதன் பின் அண்ணாவின் வழியிலே 1972. ம் ஆண்டு தமிழகம் முழுவதும் புரட்சித்தலைவர் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மன்றத்தில் மக்கள் தீர்ப்பையும் கருத்தையும் அறிந்துக்கொண்டுத்தான் கட்சி தொடங்கினார். அண்ணாவின் அரசை அமைத்தே தீருவேன் என்று ஆளுரைத்தப் புறப்பட்ட புரட்சித்தலைவர் தமிழகம் தன் பக்கம் என்றும் மக்கள் சக்தியெனும் மகத்தான சக்தி மூலம் 56. மாதங்களில் நிருப்பித்தார் தமிழ் நாடு முதலமை*ச்ச*ராக
    30. 6. 1977 ல் புரட்சித்தலைவர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். அதற்கு முன் அண்ணா சிலை அருகில் முதல் முதலாக வாக்குறுதி எடுத்துக் கொண்டார். வாழ்த்துக்கள் பெற்றார் என்பதை அனைவரும் அறிவர். இந்த ஆட்சி அண்ணாவுக்கு காணிக்கையாக்கிறேன் இது அண்ணாவின் அரசு என்றார் பொன்மனச்செம்மல். அவர் எண்ணம் செயல் சொல் அனைத்திலும் அண்ணா வாழ்ந்தார் .பொன்மனச்செம்மல் ஆட்சியில் பேரரறிஞர் அண்ணாவுக்காக அவர் ஆற்றிய பல பணிகள் பல சாதனைகள் இனி பார்ப்போம். .

    1. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா உருவம் பொறித்த கொடி அண்ணா உருவம் கொண்ட கட்சி கொடி. .
    2, அண்ணா பெயரில் அண்ணாயிசம் என்ற கொள்கை பரப்பினார்.
    3. அண்ணா பெயரில் அண்ணா சாலை என்று பெயரிட்டார்.
    4, அண்ணா பெயரில் அண்ணா பல்கலைக்கழகம் அமைத்தார்.
    5. வண்டலூரில் உள்ள பூங்காவுக்கு அண்ணா உயிரியல் பூங்கா என பெயரிட்டார்.
    6. சென்னையில் அண்ணாவுக்கு பவளவிழா நினைவு வளைவு அமைத்தார். .
    7. பல இடங்களில் அண்ணா சிலை அமைத்தார்.
    8. சென்னையில் அண்ணா நகர் என்று பெயரிட்டார்.
    9. சென்னையில் அண்ணா பவளவிழா கட்டிடங்கள் அமைத்தார். .
    10. காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவகம் அமைத்தார். .
    11. சென்னையில் அண்ணா பவளவிழா பிரமாண்டமான மாநாடு நடத்தி அண்ணா பவளவிழா மலர் வெளியிட்டார். .
    12. அண்ணா பெயரில் மாவட்டம் அமைத்தார். .
    13, அண்ணா போக்குவரத்து கழகம் அமைத்தார்.
    14. அண்ணா பெயரில் விருதுகள் வழங்கி கெளரவித்தார்
    15. அண்ணா பெயரில் பொறியல் கல்லுரி கழகம் அமைத்தார். .
    16. அண்ணா பெயரில் அண்ணா அனாதை இல்லம் அண்ணா முதியோர் இல்லம் அண்ணா சமூக நலக்கூடம் அமைத்தார்.
    17. அண்ணா நூலகம் அண்ணா பெயரில் பள்ளி பாடப்புத்தகங்கள் அண்ணா இரவு பாடசாலை அமைத்தார். .
    18. அண்ணா பெயரில் சமூக நல மாணவர் அணி அண்ணா பெயரில் அரசு ஆனைகள் அண்ணா திரையரங்கு திறந்தார்.
    19. அண்ணா பெயரில் பத்திரிகை நாளேடு தொடங்கினார். .
    20. தமிழக அரசு செய்திகுறிப்பில் அண்ணா பொன்மொழி இடம் பெற செய்தார்.
    21. கட்சி பொதுக்கூட்டங்களில் அண்ணா உருவம் அண்ணா பேச்சு அண்ணா பற்றிய அறிவுரைகள் போஸ்டர்களில் அண்ணா உருவத்துக்கு முக்கியத்துவம் இருக்கும்படி செய்தார்.
    22. அண்ணா பேருந்து நிலையம் அண்ணா கவியரங்கம் அண்ணா பெயரில் படமானியம். வழங்கினார்.
    மேலும் அண்ணா பெயரில் சாதனைகள் தொடரும். ........ Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •