Page 313 of 402 FirstFirst ... 213263303311312313314315323363 ... LastLast
Results 3,121 to 3,130 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3121
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 44

    கைராசி முகராசிக்கும் பேர் ராசிக்கும் பேர் போனவர் நம்ம வாத்தியார். .அவர் கால்கள் பட்ட இடமெல்லாம் வரலாற்று சுவடுகளாக பதிக்கப்பட்டது. .அவர் கரங்களால் துவக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் புதுபொலிவுப்பெற்றது. .அவர் முகத்தை காட்டி ஓட்டு பெற்றவர்கள் உண்டு. அவர் பெயரை சொல்லி பிழைத்தவர்கள் உண்டு அவரால் வாழ்ந்தவர்கள் உண்டு இன்றும் அவர் பெயர் கூறி வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள் அதிகம். இன்னும் சொல்லனும் என்றால் அவர் பெயர் சொன்னால்தான் அவர் சின்னத்துக்குதான் ஓட்டு என்கிற வரைமுறை கொண்டு வந்தவர் வாத்தியார் ஒருவரே இது வேறு எந்த தலைவர்களிடமும் காண முடியாத ஒர் அதியம் ஆகும். . அதனால் தான் கடையெழு வள்ளல்கள் வரிசையில் எட்டாவது வள்ளலாக திகழ்கிறார். புகழ வேண்டும் என்பதற்காக நான் புகழவில்லை. புகழுக்குரியவர் புகழுக்கு தகுதியுடையவர் என்பதால் புகழ்கிறேன். .விவசாயி படத்தில் ஒரு காட்சியில் நாகேஷ் கூறுவார் அடடா போதும் அண்ணனைப்பற்றி புகழ ஆரம்பித்தால் அப்புறம் அதுக்கு ஏது எல்லை அடுத்த வேலை பார்ப்போம் என்பார். அதைப் போல் நானும் எனது அடுத்த பதிவுக்கு வருகிறேன். ..தெய்வம் செயல். என்ற படம் நடிகர் சுந்தர்ராஜனை கதாநாயகனாக வைத்து சாண்டோ சின்னப்பர் தேவர் எடுத்த படம். பெரும் நஷ்டம் ஏற்பட்டு படுத்தோல்வி அடைந்தது பல பத்திரிகைகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை. கூறி விமர்சனம் எழுதினார்கள் கதை திரைக்கதை சரியில்லை என எழுதினார்கள்.பத்திரிக்கையாளர்களுக்கு சின்னப்பர் தேவர் கூறியதாவது படத்தின் கதை திரைக்கதை சரியில்லை என எழுதினார்கள் இதே கதையை நான் எனது ஆண்டவனை வைத்து வெற்றி பெற்று காட்டுகிறேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்ட கதாநாயகன் அமையவில்லை தவிர கதை திரைக்கதை சரியில்லை என்று கூறியதை தவறு என்பதை நிருப்பிக்கிறேன் என்று சவாலாக கூறினார். .

    23 -06 -1967 ம் ஆண்டு "தெய்வசெயல் " படம் வெளிவந்தது. .அப்போது தேர்தல் நேரம் ஒரு புறம் குண்டடிபட்ட சம்பவம் ஒரு புறம் ஏற்கனவே பல படங்கள் புக்கிங் ஒரு புறம் இப்படி பல தரப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டதால் வாத்தியாரால் அந்த கதையில் நடிக்க முடியவில்லை என்றாலும் வாத்தியார் உடல் நலம் விசாரிக்க வந்த இந்தி நடிகர் ராஜேஷ்கண்ணா அவர்களிடம் சின்னப்பர் தேவரை அறிமுகம் செய்து வைத்தார். .சின்னப்பர் தேவர் பற்றியும் அவரது திறமையையும் ராஜேஷ் கன்னாவிடம் கூறினார் சின்னப்பர் தேவரை கட்டித்தழுவி தனது அன்பை பறிமாறிக்கொண்டார் அதே நேரத்தில் சின்னப்பர் தேவர் கூறிய கதையை வாத்தியார் ராஜேஷ் கன்னாவிடம் கூறினார். ராஜேஷ் கன்னா சின்னப்பர் தேவரிடம் இப்படி கூறினார். .எனக்கு இந்திய திரையுலகில் பல ரசிகர்கள் இருந்தாலும். இந்திய திரையுலகில் உள்ள நடிகர்கள் அனைவருக்கும் பிடித்த நடிகர் ரசிக்கும் நடிகர் உங்கள் எம்ஜிஆர் தான். அப்படிப்பட்ட நடிகர் நடிக்கும் கதையில் நான் நடிக்கிறேன் என்றால் அதைவிட எனக்கு என்ன பெருமை வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியில் கால்பதித்தார் சின்னப்பர் தேவர் அப்படி வெளிவந்த படம்தான் ஹாத்தி மேரா ஷாத்தி என்ற இந்தி படம் 1971. ம் ஆண்டு வெளிவந்தது மாபெரும் வெற்றி பெற்றது. . அதன் பிறகு வாத்தியார் வைத்து எடுக்கப்பட்ட மெகா ஹிட் படமான "நல்ல நேரம்" 10. 03. 1972. ம் ஆண்டு வெளிவந்தது. .இனி நல்லநேரம் படத்தின் சாதனையை அடுத்த பதிவில் சந்திப்போம் தொடரும் தொடரும் தொடரும்..... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3122
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 45

    கஷ்டத்தை போல மனிதனுக்கு படிப்பு சொல்லித்தரும் கண்டிப்பான வாத்தியார் யாரும் இல்லை. ...
    கொடுக்கறவங்களும் வாங்கறவங்களும் எஎன்றைக்குமே நாணயம் தவறக்கூடாது என்பதற்காகத்தான் காசுக்கே நாணயம் என்று பெயர் வந்தது. .
    வஞ்சகர்கள் மத்தியில் வசதியாக வாழ்வதை விட நெஞ்சம் நிறைய கஷ்டப்பட்டு ஏழையாக வாழ்ந்திடலாம். .
    இதயத்தை விட வயிறு பெரிசுதான் அதற்க்காக வயிற்றை நிரப்பனும் என்பதற்காக இதயத்தை விலை பேசக்கூடாது. .
    தகுதி என்பது பணத்துல இல்ல வாழற வாழ்க்கையிலே இருக்கு.

    நல்ல நேரம் படத்தில் வாத்தியார் கூறும் கருத்துக்கள் ஆகும். மேலும் வரும். . எந்த படத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு அம்சம் இந்த படத்துக்கு உண்டு. இவை பல பேர் அறியாத தகவல் ஆகும். 10. 3. 1972. ம் ஆண்டு வெளிவந்த பிறகு கட்டப்பட்ட சினிமா தியேட்டர்கள் அனைத்திலும் திறப்பு விழா அன்று முதல் காட்சியாக இலவசமாக நல்ல நேரம் படம்தான் காண்பிக்கப்பட்டது. .இந்த தகவல் சினிமா எக்ஸ்பிரஸ் புத்தகத்தில் வந்தது. . எனக்கு தெரிந்து எங்கள் பகுதியில் உள்ள பல தியேட்டர்களில் காண்பிக்கப்பட்டது நானும் பார்த்துள்ளேன். .குறிப்பிட்ட சில தியேட்டர்கள் ஸ்ரீ பிருந்தா ஆல்பர்ட் மூலகடை ஐயப்பா M M தியேட்டரில் போன்ற தியேட்டரில் பார்த்து உள்ளேன். .அதுமட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இப்படம் இலவசமாக காண்பிக்கப்பட்டது. .

    தேவர் பிலிம்ஸ் எடுத்த முதல் கலர் படம் இது தான். அதேசமயம் வாத்தியார் நடித்த கடைசிப் படம் இது தான். . இந்தியில் சில தியேட்டரில் மட்டுமே 100. நாட்கள் ஒடியது ஆனால் தமிழில் பல ஊர்களில் பல தியேட்டர்களில் 100. நாட்கள் மேல் ஒடியது. .சென்னையில் சித்ரா மேகலா பிராட்வே ராம் நான்கு தியேட்டரிலும் 100. நாட்கள் மேல் ஒடியது ..இந்தி படத்தின் வசூலை விட ஐந்து மடங்கு அதிகமாக வசூலில் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. . 1972 ம் ஆண்டு வந்த படங்களில் அதிக வசூல் சாதனையை படைத்தது நல்ல நேரம் படமே.

    கவியரசு கண்ணதாசன் எமுதிய ஒரு பாடலில் வரும் வரிகள். .
    நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே என் மேனி என்னாகுமோ. ..
    அதாவது வாத்தியார் உடலும் உள்ளமும் பொன்னானது. அப்படிப்பட்ட உடலும் உள்ளமும் பெற என் மேனி தகுதியற்றது. என்ற கவிஞரின் வரிகள் வாத்தியார் புகழுக்கு மேலும் புகழ் மணக்க செய்தது. ...படத்தில் நான்கு பாடல்கள். ..இரண்டு பாடல் கவியரசு கண்ணதாசன் ஒரு பாடல் அவினாசிமணி எழுதியிருப்பார் கள்
    இதையெல்லாம் மிஞ்சி புலமைப்பித்தன் எமுதிய பாடல் தான் உலகமெங்கும் ஒலிக்க செய்தது மெகாஹிட் சூப்பர் ஹிட் டாப் டக்கர் என்று புகழாரம் சூட்டினார்கள் தமிழக மக்கள் அந்த பாடல் எது என்று நீங்கள் அறிவீர்கள் அடுத்த பதிவில் அப்பாடலின் சாதனையும் வரலாறும் காணலாம் தொடரும் தொடரும் தொடரும் .... Thanks.........

  4. #3123
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீ MGR வாழ்க.........

    சித்திரை 4. வியாழன்

    எம்ஜிஆர் பக்தர்களே

    1974 ஆம் ஆண்டு நடந்த அற்புதம்

    அண்ணன் சிவாஜி அவர்களின் அதிகபடங்களுக்கு கதைவசனம் எழுதிய வர்
    A.L.நாராயணன்

    இவர் MGR அவர்கள் நடித்த அலிபாபாவும் 40 திருடர்கள் படத்தில்

    உதவி வசனகர்த்தாவாக அறிமுகமானவர்

    A.L. நாராயணன் எழுதி வெளியிட்ட

    அவர்வாழ்க்கை வரலாறு புஸ்தகத்தில்

    இந்த செய்தி வந்துள்ளது

    இந்த செய்தியை நம்பாதவர்கள்

    இப்போது உயிரோடு உள்ள

    A.L.நாராயணனிடம் கேட்டுக்கொள்ளவும்

    /////////////////////////////////////////////$$$$/////

    நான் வசனம் எழுதியபடம் ஒன்று சத்தியாஸ்டுடியோவில் படம்எடுத்துக்கொண்டுஇருந்தனர்

    ஆகவேநான் அங்கு சென்றுஇருந்தேன் .

    MGR அவர்கள் கட்சி ஆரம்பித்த புதிது
    வெளியூர் சென்று கூட்டத்தில் பேசிவிட்டு
    அன்று சத்தியா ஸ்டுடியோ வந்திருந்தார்

    இதையறிந்த நான்

    MGR அவர்களைசந்திக்க. அவருடைய அறைக்குசென்று அவருடன் பேசிக்கொண்டுஇருந்தேன்

    அப்போது வெளியூரில் இருந்து வந்த தந்தையும் மகனும்

    MGR அவர்களை சந்தித்தார்கள்
    தந்தைஅவர்கள் எம்ஜிஆர் அவர்களிடம் என்னுடைய மகன் அதிகமார்க் எடுத்துள்ளான்

    மெடிக்கல் காலேஜில் இவனுக்கு இடம்தரமறுக்கிறார்கள் /

    ஆகவே நீங்கள் என்மகனுக்கு டாக்டர் சீட் வாங்கித்தரவும்
    என்று கூறினார்/

    அதற்கு MGR அவர்கள் மெடிக்கல்காலேஜில்
    சீட்கிடைத்தாலும் 5 வருடம் ஹாஸ்டலில்
    தங்கி படிக்க வேண்டும் அதற்கு சில லட்சம்
    செலவு ஆகும் பணத்திற்க்கு என்ன. செய்வீர்கள்என்றுகேட்டார் அதற்கு அந்த தந்தை எங்களுக்கு ஒருவீடுஉள்ளது
    அதைவிற்றும் கடனை வாங்கியும்படிக்க வைக்கிறேன் என்று கூறினார்

    பிறகு MGR அவர்கள் அந்த மாணவனின்
    மார்க்லிஸ்டைப்பார்த்தார் பிறகு பல மெடிக்கல்கல்லூரிக்கு போண்செய்தார்
    கடைசியில் அந்த மாணவனுக்கு சீட்
    கிடைத்துவிட்டது இதை அறிந்த மாணவனும் / தந்தையும் MGR அவர்களுக்கு
    நன்றி சொல்லிவிட்டு அறையைவிட்டுவெளியேரினார்கள்

    உடனே MGR அவர்கள் சத்யாஸ்டுடியோ முன் கேட்டில் உள்ள காவலாளியை

    இண்டர்காம்போண் மூலம் அழைத்து
    தந்தையும் மகனும் வெளியே வருகிறார்கள்

    அவர்களிடம் நான் சொல்லுகின்ற செய்தியைசொல்லிவிடுங்கள்

    இந்த மாணவனின் 5 வருட மெடிக்கல் காலேஜின் / புஸ்தக சிலவு சாப்பாட்டு சிலவு
    ஹாஸ்டல்பீஸ் அனைத்தையும்

    MGR அவர்கள்

    ஏற்றுக்கொண்டார்என்று சொல்லிவிடுங்கள் இதைகேட்டவுடன்
    என்னைசந்தித்து நன்றிசொல்ல என்னிடம் அவர்கள் வருவார்கள்

    அவர்களை என்னிடம் வர விட வேண்டாம்

    அவர்களிடம் உங்கள் மகன்
    டாக்டரானவுடன் வந்து MGR பார்க்க சொன்னார் ஆகவே நீங்கள் உங்கள் ஊருக்கு
    செல்லுங்கள் என்று சொல்லிவிடவும் எண்று

    MGR கூறினார்

    இதைக்கேட்டவுடன் நான்
    அசந்துவிட்டேன்

    இதனால்தான் தமிழ்

    நாட்டுமக்கள்இவரை தெய்வமாக நினைத்து

    முதலமைச்சர்பதவியில் அமர்த்தினார்கள்

    இவ்வாறு AL நாராயணன் எழுதிஉள்ளார்

    ×××××××÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷3÷÷÷÷==

    தமிழ் சினிமா உலகில் எத்தனையோ நடிகைகள்

    கதாநாயகிகளாக நடித்து உள்ளார்கள்

    அந்த நடிகைகள் யாராவது சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை எம்ஜிஆரை போல் அள்ளி அள்ளி கொடுத்தவர்கள் யாராவது இருக்கிறார்களா

    அப்படி இருந்தால் அந்த நடிகையின் படத்தை வெளியிட்டு அவர் எந்த காரணத்திற்காக மக்களுக்கு பண உதவி கொடுத்தார் என்பதையும் பதிவிட வேண்டுகிறேன்

    தர்மம் செய்வதில்
    எம்ஜிஆர் கால் தூசுக்கு இணையாக யாரும் வர முடியாது

    இப்படிப்பட்ட வள்ளல் எம்ஜிஆர் அவர்களை

    முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்குவதற்கு

    ஒரு துரோகி முயற்சி செய்தார்

    அந்த துரோகியை நீதிதேவன் எமலோகத்தில்

    கழுமரத்தில் ஏற்றிதண்டனைகொடுத்துக்கொண்டு உள்ளார்

    அந்த துரோகியை கொதிக்கும் எண்ணெயில் போட்டு அப்பளத்தை போல் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார் எமதர்மராஜா

    அந்த துரோகியை எண்ணெய் ஆட்டும் செக்கில் இட்டு எமதர்மராஜா எமலோகத்தில் ஆட்டிக்கொண்டு இருக்கிறார்....... Thanks mr.PM.,

  5. #3124
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவர் அ.தி.மு.க வை ஆரம்பிப்பதற்கு முதல் நாள், அவருக்கும், தி.மு.கழகத் தலைமைக்கும் இடையில் கடைசி நேர சமரச முயற்சி ஒன்று நடந்தது. முரசொலி மாறனும் நாஞ்சில் மனோகரனும் அது சம்பந்தமாக சத்யா ஸ்டுடியோவில் புரட்சித் தலைவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது எம்.ஜி. ஆர் மன்றத் தலைவர் முசிறிப்புத்தன், தனது தலைவரைப் பார்ப்பதற்காக காரில் வந்துகொண்டிருந்தனர். அவரைக்கடற்கரைச் சாலையில் வழிமறித்துச் சைக்கிள் செயினால் தாக்கினார்கள்.
    முசிறிப்புத்தன், அவர்களிடமிருந்து உயிர் தப்பி புரட்சித் தலைவரிடம் வந்து செய்தியைச் சொன்னார். ஒரு கால் சற்றே ஊனமான அவரைக் கொலை வெறியோடு தாக்கி, உடல்முழுக்க இரத்தம் சொட்டச் சொட்ட விரட்டி விரட்டி அடித்திருக்கிறார்களே! என்று புரட்சித் தலைவர் மிகுந்த வேதனையடைந்தார்.
    அந்த நிமிடம் வரை தி.மு.க. வோடு சமாதானத்திற்கு இசைந்து விடலாம் என்றுதான் புரட்சித் தலைவரும் கருதிக் கொண்டிருந்தார். ஆனால், ரத்தக் கடாகத்தில் மூழ்கி எழுந்தவர் போல தன் முன்னால் ரத்தம் வழிய வழிய வந்து நின்ற முசிறிப்புத்தனைப் பார்த்ததும், புரட்சித் தலைவரின் உள்ளம் துடித்தது.
    சமாதானம் பேச வந்தவர்களைப் பார்த்து, ” ஒரு பக்கம் சமாதானம் பேசுகிறீர்கள்; இன்னொருபக்கம் என் ஆதரவாளர்கள் மீது கொலை வெறித் தாக்ககுதல்களை ஏவி விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்! இது என்ன நாடகம்? இனி மேல் உங்களோடு சமரசத்திற்கே இடமில்லை!” என்று கூறினார்.
    அதற்குப் பின்னர்தான் சமரச முயற்சி தோற்றது. இவ்வாறு அ.தி.மு.க. தோன்றுவதற்கு முன்னும் பின்னும் நடந்த, கட்டவிழ்த்து விடப்பட்ட கொலை வெறித்தாக்குதல்கள் கணக்கில் அடங்காதவை ஆகும். இத்தகைய வெறித்தாக்ககுதலுக்குப் பலியாகி உயிர் துறந்த கழகத் தோழர்களின் தொகை மட்டும் 20 ஆகும். ஆனால் இந்தத் தாக்குதல்களுக்கும் தி.மு.கழகத் தலைமைக்கும் சம்பந்தமில்லை என்றும், ஆங்காங்கே உள்ள உணர்ச்சிவசப்பட்ட சிலர் தாமாகவே அவற்றில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தி.மு.க. விளக்கம் அளித்தது.
    அ.தி.மு.க. மீது தி.மு.க. வினர் தாக்குதல் தொடுத்தது ஒருபுறமிருக்க மறுபுறம் அண்ணா தி.மு.க. தொண்டர்களின், மீதும் முன்னணி வீரர்களின் மீதும் தி.மு.க. அரசு தொடுத்த கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் பல ஆயிரம் ஆகும். இது மிகைப்படுத்தப்பட்ட தகவலோ, கற்பனையோ அல்ல. அது மட்டுமா? புரட்சித் தலைவர் மீது அரசு தொடுத்த வழக்குகள் மட்டும் 19 ஆகும்.
    இப்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முளையிலேயே கிள்ளி எறிந்திட ஆட்சியாளர்கள் ஏவிவிட்ட அடக்குமுறைகள், தொடர்ந்த பொய்வழக்குகள், தொடுத்த தாக்குதல்கள் ஆகியவை ஏராளம் ஆகும்! இவ்வளவையும் மீறித் தான் கட்சியைக் கட்டி வளர்த்தார், புரட்சித் தலைவர்!
    அ.தி.மு.க. வைத் தொடங்கிய நேரத்தில், புரட்சித்தலைவர் தாமே நடித்து, இயக்கி, தயாரித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளியிடப்படவேண்டிய நிலையில் இருந்தது. உடனே அந்தப் படத்தை வெளியிட விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டனர்.
    அதிகார வலிமை பெற்ற சிலர், அந்தப் படத்திற்கு விநியோக உரிமை பெற்றிருந்த விநியோகஸ்தர்களையெல்லாம் சந்தித்து மிரட்டினார்கள். ”படம் வேண்டாம். கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்” என கேட்கும்படி விநியோகஸதர்களை வற்புறுத்தினார்கள். ஆனால் காலம் காலமாய்த் திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர். படங்களை வாங்கி விநியோகித்ததன் மூலமே பெரும் பணம் சம்பாதித்தவர்கள், அந்த விநியோகஸ்தர்கள்,அந்த உருட்டல் மிரட்டலுக்குப் பயந்து புரட்சித் தலைவரை நெருக்கடிக்குள்ளாக்க மறுத்துவிட்டனர்.
    படவிநியோகஸ்தர்களை மிரட்டிப் பணியவைக்க முடியவில்லை என்றதும் அவர்களது கவனம், திரையரங்குகளின் மேல் திரும்பியது. திரையரங்குளின் உரிமையாளர்களை அழைத்து, சட்டம், ஒழுங்கு மற்றும் திரையரங்குப் பாதுகாப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டிப் புரட்சித் தலைவரின் படத்தைத் திரையிட மறுக்கும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், லட்சம் லட்சமாய் வசூலை வாரித்தரும் எம்.ஜி.ஆர். படத்தைத் திரையிடாதிருக்க முடியாது எனத் திரையரங்க உரிமயாளர்கள் மறுத்துவிட்டனர். சில திரையரங்க உரிமையாளர்கள் மட்டுமே அந்த வற்புறுத்தலுக்கு செவி சாய்த்தனர். அவர்களுள் பலர் அதிகாரத்திற்கு அஞ்சித் தாங்கள் செய்த காரியத்தைச்சொல்லி புரட்சித் தலைவரிடமும் மன்னிப்புக் கோரினார்கள்!

    பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்களும் எம்.ஜி.ஆர். படத்தைப் புறக்கணிக்கச் சம்மதிக்கவில்லை என்றதும் அவர்களை வேறு வகையில் மிரட்டத் தொடங்கினார்கள்.”எம்.ஜி.ஆர் படம் திரையிடப்பட்டால் தியேட்டரைக் கொளுத்துவோம்! திரையைக் கிழிப்போம்! படச்சுருளைப் பஸ்பமாக்குவோம்!” என்றெல்லாம் மிரட்டினார்கள்; கடிதம் எழுதினார்கள்; சிலர் அறிக்கை விடும் அளவுக்குத் துணிந்தார்கள்!
    திரையரங்க உரிமையாளர்களுள் பலர் இந்த இரண்டாவது வகை மிரட்டலைக்கண்டு உண்மையிலேயே அஞ்சி நடுங்கினார்கள். பல லட்சம் ரூபாயைக் கடன் வாங்கிக் கட்டப்பட்ட திரையரங்குகள் கொளுத்தப்படும் என்னும் மிரட்டல் அவர்களுக்குக் குலை நடுக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், முன்னணித் திரையரங்க உரிமையாளர் பலர் ஏற்கெனவே வாக்களித்தபடி ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைத் திரையிடத் தயங்கினார்கள்., பின் வாங்கினார்கள்.
    ஆனால், புரட்சித் தலைவர் இந்த உருட்டல் மிரட்டல்களுக்கோ, திரையரங்க உரிமையாளர்களின் பின் வாங்களுக்கோ சற்றும் அஞ்சவில்லை. துணிந்து தம்முடைய படத்தை வெளியிட்டார். தமிழகம் முழுவதிலும் ஒரே நாளில் வெளியிட்டார். அந்தப் படம் திரையிடப்பட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட திரையரங்குகளிலும் வெற்றிகரமாய் ஓடியது! எந்த விதமான பெரிய விளம்பரமும் இல்லாமலே தாய்மார்களின் கூட்டம் படத்தைக் காண அலைமோதியது; இளைஞர்கள் கூட்டமோ மீண்டும் மீண்டும் அதே படத்தைப் பல முறை கண்டுகளித்தது. எனவே பல்வேறு திரையரங்குகளில் 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது! மேலும் சில திரையரங்குகளில் 31 வாரம் ஓடி வசூலை அள்ளிக் குவித்தது!!!......... Thanks.........

  6. #3125
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நமது தங்க தலைவரின் ஆசியுடன் இனிய "காலை வணக்கம்"

    தலைவரை பற்றிய ஒரு தகவல்:

    இன்று 17-ம் தியதி
    தலைவர் நடிப்பில் வெளிவந்த 136 படங்களில் ஜெனோவா ( மலையாளம் ) மட்டுமே 17-ம் தியதி வெளிவந்த ஒரே ஒரு திரைப்படம்.

    ஜெனோவா ( மலையாளம்)
    17-04-1953

    ஜெனோவா மலையாளம்
    மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது, மலையாள படம் வெளியாகி 6 வாரங்களுக்கு பிறகு தான் தமிழில் 01--06-1953-ம் தியதி வெளியிடப்பட்டது.

    மலையாளத்தில் தயாரான ஒரே எம்.ஜி.ஆர் படம்
    இதன் மலையாள பதிப்பில் பி.எஸ்.வீரப்பா நடித்த வில்லன் கேரக்டரில் மலையாள வில்லன் நடிகர் ஆலப்பி வின்செண்ட் நடித்தார்.
    இதன் மலையாள பதிப்பில் எம்.ஜி.ஆருக்கு பதில் வேறொருவர் டப்பிங் பேசினார். எம்.ஜி.ஆருக்கு சரியாக மலையாளம் பேச வரவில்லை என்று அதன் தயாரிப்பாளர் அப்படிச் செய்தார். இதை எதிர்த்து எம்.ஜி.ஆர் வழக்கு தொடர்ந்தார். பின்னர் வழக்கை வாபஸ் பெற்றார்.
    MGR நடித்த ஒரே ஒரு மலையாள படம் இது தான். 1953 -ம் ஆண்டு ஈஸ்டர் அன்று இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. எனினும், இது ஈஸ்டருக்கு 13 நாட்களுக்கு பின்னர் 17-04-1953-ம் தியதி தான் திரையரங்குக்கு வந்தது. ஈஸ்டருக்கு பின்னர் வெளியான போதிலும், ஜெனோவா பெரிய வெற்றி பெற்றது.

    ஜெனாவா -
    "ஜானோவா நாடகம்" மற்றும் "ஜானோவா பர்வம்" ஆகியவற்றின் கீழ் கேரளாவில் பிரபல நாடக குழுவால் நடத்தப்பட்ட ஒரு இசை நாடகம் (சங்கீகா நாடகம்) தழுவலாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் - 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மலையாள இசை நாடகங்களில் ஒன்றான டி.சி.அச்சுத மேனனின் வேடங்களில் ஒன்றான இந்த இசை நாடகம் மிகவும் பிரபலமானது.

    இயக்கம் :- ஈச்சப்பன்
    தயாரிப்பு :- ஈச்சப்பன்
    கதை :- சுவாமி பிரம்ம வரதன்
    இளங்கோவன் (உரையாடல்)இசை :- விஸ்வநாதன்
    ஞானமணி கல்யாணம்
    ஒளிப்பதிவு :- G.விட்டல்ராவ்
    நடிப்பு :- எம். ஜி. இராமச்சந்திரன்
    பி. எஸ். வீரப்பா
    எம். ஜி. சக்ரபாணி
    டி. எஸ். துரைராஜ்
    பி. எஸ். சரோஜா , கண்ணம்பா,
    ராஜமணி

    @ வெளியிடூ : 17th April, 1953
    ( மலையாளம்)

    @ வெளியீடு : 1st June, 1953
    ( தமிழில் )

    நன்றி ...
    என்.வேலாயுதன் , திருவனந்தபுரம்........ Thanks...

  7. #3126
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
    "நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு) இன்றைய தொடர்ச்சி திரு டாக்டர் புரட்சித் தலைவரின் எண்ணங்களை கண்ணீர் மல்க அவரை எதிர்நோக்கி தொடர்கிறோம். 12/04/2020

    "இந்தப் பெண்ணையே கதாநாயகியாப் போடலாம்! நானும்
    'நாடோடி மன்ன'னில் ஒரு வேஷம் கொடுக்கப் போறேன்"
    என்றேன்.
    “நாடோடி மன்னனில் நீங்க போடறதா இருந்தா, நானும் என்
    படத்தில் ஒப்பந்தம் செய்யறேன்'' என்றார் ஏ.எல்.எஸ். அவர்கள்.
    "நான் எந்தத் தேதியில் கால்ஷீட் கொடுத்தாலும் அவங்க வந்து
    நடிக்கணும். அதை மறக்காமல் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்து
    கொள்ளுங்கள் என்று மீண்டும் நான் நினைவு படுத்தினேன்.
    முதலில் நான் சொன்னது யோசனை.
    ஆனால், அதுவே 'நிபந்தனை' ஆயிற்று.
    பிறகு அது ‘கட்டளை'யாகி விட்டது.
    "காரியத்தை இந்த வகையில் செய்தால் நல்லதாச்சே" என்று
    கூறுவது யோசனை. "அப்படிச் செய்தால்தான் நான் உங்களோடு
    இருக்க முடியும்” என்று சொல்வது நிபந்தனை.
    "நீங்க இப்படித்தான் செய்ய வேண்டும்; செய்து விடுங்கள்"
    என்று அவர்களைக் கட்டுப்படுத்துகிற அளவுக்கு நிலையை
    உண்டாக்குவது கட்டளை...!
    ஆனால், ஏ.எல்.எஸ். அவர்கள் நான் கட்டளையிட்டதாக
    நினைத்தார் என்று சொல்ல முடியாது.
    “நான் கொடுக்கும் கால்ஷீட்டுகளிலெல்லாம் அந்தப் புதுமுக
    நடிகை வந்து நடிக்கணும்” என்று நான் சொன்னேனே, அது
    கட்டளையில்லாமல் வேறென்ன?
    இப்படிக் கட்டளையிடத் தூண்டியது எது? அறிவுதானே!
    அதன் விளைவு என்ன என்பதையும் தெரிந்து கொள்ள
    வேண்டாமா?
    ஏனென்றால் நான்தான் தெரிந்து, அனுபவித்து கண்ணீர்
    வடித்துத் திருந்தியவனாயிற்றே!
    எனது அகம்பாவத்திற்குக் கிடைத்த அடையாளச் சின்னத்தை
    அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியுமா?
    மறக்கத்தான் கூடுமா?

    "அகந்தைக்குக் கிடைத்த அறிவுரை"

    "வெற்றியும் தோல்வியும்"

    அறிவுதான் ஒரு மனிதனுக்கு
    வழிகாட்டியாக அமைகிறது.
    அனுபவந்தான் தெளிவைத் தருகிறது.
    ஒருவன் தனது முயற்சியில் வெற்றி
    அடையும்போது 'அறிவாளி' ஆகிறான்;
    தோல்வி அடையும் போது 'முட்டாள்'
    ஆகிறான்.
    இவை புறத் தோற்றத்திற்கு.
    ஒரு கலைஞன் தன்னுடைய செயலிலே,
    நடிப்புத் தொழிலிலே தோல்வி அடைந்து
    விடுகிறான். அதாவது மற்றவர்கள்
    அவனைத் தோல்வி அடையச் செய்து
    விட்டார்கள் என்பதே அதன் பொருள்.
    ஆனால், அனுபவ அறிவுத் தெளிவுள்ள
    கலைஞன் அதைத் தோல்வியாக எடுத்துக்
    கொள்ளமாட்டான்.
    வேறொரு சமயம் அதே கலைஞன்
    பிறரால் வெற்றி மகுடம் சூட்டப்படு
    கிறான். ஆனாலும் அப்போது, அவனது
    லட்சியம் நிறைவேறவில்லை என்று அவன்
    உணருவதால் அவனுடைய உள்ளம்
    வருந்துகிறது. “நான் தோல்வி அடைந்து
    விட்டேன்'' என்று.
    பாவம்! மக்களுக்கு எப்படித் தெரிய முடியும், அந்தக்
    கலைஞனுக்கு ஏற்பட்ட தலைகுனிவும், உண்டாக்கப்பட்ட
    சோதனையும், அவன் அடைந்த வேதனையும்?
    இதே நிலையில்தான் நானிருந்தேன், ‘திருடாதே' என்ற அந்தச்
    சமூகப்படம் வெளிவந்து வெற்றி பெற்று, மக்களால் நான்
    பாராட்டப்பட்ட அந்த நேரத்தில்!
    அதற்கு என்ன காரணம்?
    நான் அடைந்த வெற்றியையும் பாராட்டுகளையும்விடப்
    பன்மடங்கு பலமுடையதாக, என் அகம்பாவத்திற்குக் கிடைத்த
    தண்டனை அல்லவா என் நெஞ்சைத் துளைத்துக்கொண்டிருந்தது!
    நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்று புகழ் மாலை சூட்டப்
    பட்ட அந்த நேரத்தில், அந்த வெற்றியின் பின்னணியில் அணு
    அணுவாக என்னைச் சித்திரவதை செய்து கொண்டிருந்த
    வேதனையில் அல்லவா நான் சோர்ந்து துவண்டு போயிருந்தேன்.

    "தலையை முட்டிக்கொண்ட பிறகு..."

    திரு.ஏ.எல்.எஸ். சீனிவாசன் அவர்கள் 'திருடாதே' படத்தில்
    நான் நடிக்க வேண்டுமென்று என்னிடம் கேட்டுக்கொண்ட
    போது, அவருக்கு நல்லது செய்வதாக எண்ணி என் கருத்னை
    வெளியிட்டதற்கு, இப்பேர்ப்பட்ட தண்டனையா கிடைக்
    வேண்டும்!
    நான் அவரிடம் சொன்னது இருக்கட்டும். அவ்வாறு நான்
    சொன்னதற்கு அடிப்படையாக, என் உள்ளத்தில் தோன்றிய அந்த
    எண்ணம் என்ன?
    "அவரது படம் ஒழுங்காக நடைபெற்று முடிய வேண்டும்!"
    என்பது ஒன்று.
    மேலும், "பரபரப்பான சூழ்நிலையில் என்னைப் போலவே
    கதாநாயகி வேடம் ஏற்பவரும் இருந்தால், நான் கொடுக்கும்
    நேரத்தில் அவரும் அவர் கொடுக்கும் நேரத்தில் நானும் 'கால்ஷீட்,
    கொடுக்க முடியாமல் போக நேர்ந்து, படப்பிடிப்பு தடைப்
    படக்கூடுமே” என்ற எண்ணமும் உண்டாகவே புது முகமாகவும்,
    என் கால்ஷீட்டை அனுசரித்து நடிக்க வருபவராகவும் உள்ள
    ஒருவரைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கச் சொன்னேன்! ஒருவகையில்
    அந்த எண்ணம் சரிதான் அல்லவா? ஆயினும் எனது நல்ல ஆசை
    அதை வெளிப்படுத்தும்போது நிபந்தனையாகவும் கட்டளையாகவும்
    அல்லவா அது மாறிவிட்டது!
    ஆனால், அப்போது எனக்கு அது ஒரு நிபந்தனை என்றோ ,
    கட்டளை என்றோ புலப்படவில்லை! தலையை முட்டிக்கொண்ட
    பிறகு குனிந்து போவது போல் அல்லவா என் நிலைமை
    ஆகிவிட்டது! முன்னதாகவே புலப்பட்டிருந்தால் அப்படிச்
    சொல்லியிருக்கவே மாட்டேனே! ஆயினும் ஒன்றைத் தெரியாமல்
    செய்தாலும் தெரிந்து செய்தாலும், செய்து விட்ட குற்றத்திற்குத்
    தண்டனையை ஏற்கத்தானே வேண்டும்?
    நண்பர்களா? நயவஞ்சகர்களா?
    "திருடாதே' என்ற அந்தப் படத்தில் நான் நடிக்க விரும்பிய
    தற்கும் அது விரைவில் வரவேண்டும் என்று எண்ணியதற்கும்

    திரு டாக்டர் புரட்சித்தலைவரின்
    "நான் ஏன் பிறந்தேன்" ( பாகம் 1 ) புத்தகத்திலிருந்து நாம் சில பதிவுகளை பதிவிட்டு வருகிறோம் இப்பதிவுகள் அனைவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் இருக்கும் அன்பர்கள் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் முழுமையாக இப்பதிவை உங்கள் கண் முன்னே நிறுத்த முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகையால் திரு டாக்டர் புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறான "நான் ஏன் பிறந்தேன்" என்ற புத்தகத்தை திரு டாக்டர் புரட்சித் தலைவரின் ஆசையோடு வாங்கி பயனடையுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்......... Thanks.........

  8. #3127
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "அன்பே வா" படத்தில் ருசிகரமான ஒரு காட்சியில் சரோஜாதேவி அப்பாவை வாங்கப்பா சிம்லாவை சுற்றிப் பார்க்கலாம் என்று அழைத்தவுடன் நீங்க போயிட்டு வாங்கம்மானு சொல்லிட்டு எனக்கு இந்த குளிர் ஒத்துக்காது என்பார்.
    இருவரும் சென்றவுடன் "மசாலா கோழியை விட்டுட்டு மலையாவது கிலையாவது இன்னைக்கு ஒரு பிடி பிடிக்கலாம்" னு சாப்பிட ஆரம்பிப்பார். சற்று நேரத்தில் டேபிளுக்கு கீழே சாப்பிட்டு முடித்து விட்டு தட்டை தூக்கும் போது வெறும் கோழி எலும்பு மட்டும் தட்டில் இருப்பதாக சீன அமைக்கப்பட்டிருக்கும்.

    இந்த காட்சியில் நடிக்க T R ராமச்சந்திரன்
    முதலில் மறுத்து விட்டார். நான் ப்யூர் வெஜிடேரியன் என்னை போய் கோழி சாப்பிட வைத்தால் எனக்கு வாந்தியே வந்திரும்னு சொல்லிட்டார். உடனே அவருக்காக கோழி மாதிரி வடிவில் கேக் ஆர்டர் பண்ணி ( தலைவர் யோசனைப்படி) பின்னர் அவர் சாப்பிடுவது போல காட்சி எடுக்கப்பட்டது ஒரு ருசிகரமான தகவல் இல்லையா.?!........ Thanks.........

  9. #3128
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜியாருக்கு நடிப்பு வராதா? ஹ்ஹ..ஹா... ஹா...
    ---------------------------------------------------------
    (ஷாலின் மரியா லாரன்ஸ் குமுதத்தில் எழுதிய அலசல். Sska Rabeek Rajaa உபயத்தில் வாசித்து மகிழ்ந்த மதிப்புரை)

    நிலவைப் போலே.. பளபளங்குது
    நினைக்க நினைக்க.. கிறுகிறுங்குது

    மலரை போலே.. குளுகுளுங்குது
    மனசுக்குள்ளே.. ஜிலு ஜிலுங்குது

    பளபளங்குது கிறுகிறுங்குது
    குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது
    ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
    அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்....

    ஆமாம். எம்ஜியாரை பார்த்தால் இப்படித்தான் ஒரு மயக்கம் வந்து தொற்றி கொள்கிறது.

    எனக்கு வயது 33. எனது நாலரை வயதில் எம்ஜியார் மறைந்துவிட்டார். நான் அவரை நேரில் கண்டதுகூட கிடையாது. ஆனால் அன்பே வா 32 தடவையும், அவரின் மற்ற படங்களை குறைந்தது மூன்று தடவையும் பார்த்த எம்ஜியார் பைத்தியம் நான்.

    எம்ஜியார் மறைந்தாலும் அவர் பெயர் மறையவில்லை. அவரை பற்றி எப்பொழுதுமே யாரோ ஒருவர் பேசி கொண்டிருக்கிறார். பத்திரிகைகளில் அவரை பற்றிய கட்டுரைகள், தொடர்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

    ஆனால்... எம்ஜியார் நல்ல தலைவர், நல்ல ஆட்சி செய்தார், நண்பர்களுடன் இப்படி பழகினார், ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்பாக நடந்து கொண்டார், தோட்டத்திற்கு வரும் அனைவரையும் சிறப்பாக உபசரிப்பார் என்கிற விஷயங்களை தாண்டி எம்ஜியார் நடிப்பை பற்றி பேச தயங்குகிறார்கள்.

    135 படங்களில் நடித்து 45 ஆண்டு காலம் சினிமாவில் வெற்றிகரமாக இயங்கிய எம் ஜி ராமசந்திரன் என்கிற நடிகரின் நடிப்பை இந்த சமூகம் பேச தயங்குகிறது என்பதே உறுத்தலான விஷயம். சொல்ல போனால் தற்போதைய தலைமுறையால் அதிகம் கிண்டலடிக்கப்பட்ட மாபெரும் நட்சத்திரம் அவர்தான்.

    எம்ஜியார் நடிப்பில் ஒன்றுமில்லை என்று சொல்பவர்கள் அவரின் ஐந்து படத்துக்கு மேல் பார்க்காமலே பேசுபவர்கள். சதி லீலாவதி துவங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அவரின் மொத்த படங்களை பார்த்தவர்கள் மட்டுமே சரியாய் புரிந்து கொண்ட சகாப்தம் அவர்.

    எம்ஜியார் என்றால் துள்ளல், எம்ஜியார் என்றால் சுறுசுறுப்பு, எம்ஜியார் ஒரு பட்டாசு.

    எனக்கு எம்ஜியாரிடம் மிகவும் பிடித்த விஷயம் அவர் தன் ஜோடிகளை கையாண்ட விதம். படங்களில் அவர் காதலித்த அழகு.

    ஜெமினி கணேசன் காதல் கொண்டு மையலில் திளைத்து நின்ற இடத்திலேயே பார்வையால் தூது விட்டுக்கொண்டிருப்பார். சிவாஜி கணேசன் காதலின் அதனை ரசங்களிலும் நீந்திக் கொண்டு காதலிகளை மறந்து பாடல் வரிகளில் லயித்திருப்பார். ஆனால் எம்ஜியாரோ தன் காதலிகளுடன் ஆடி, பாடி, ஓடி 'dynamic ' காதலராக இருப்பார்.

    அத்தனை உற்சாகம் அவர் உடம்பில் இருக்கும். அவர் தன் ஜோடியை ஒரு பரிசுக் கோப்பையையை போல் இறுகப் பிடித்து ரசித்துக்கொண்டிருப்பார். ஒரு ரசிகைக்கு இதை விட என்ன வேண்டும்?

    'acting' காதலனைவிட 'active' காதலன்தான் எப்பொழுதுமே பெண்களின் சாய்ஸ். இதை எல்லாம் நாங்கள் வெளியே சொல்வதில்லை, அவ்வளவுதான். 50 வயதை தாண்டி நடித்த படங்களில்கூட அதே வேகத்துடன் ,அதே இளமை துடிப்புடன் டூயட் பாடிக்கொண்டிருந்தது எம்ஜியாரின் ஸ்பெஷாலிட்டி.

    எம்ஜியார் அதிகமாக விமர்சிக்கப்பட்டது அவரின் உடைகளுக்காக. "என்னய்யா, மஞ்ச சட்ட, பிரவுன் பேன்ட், மெரூன் ஷூ எல்லாம் ஒரு டிரஸ்ஸா?" என்று கிண்டலடிக்கும் அறிவுஜீவிகளுக்கு ஒரு விஷயம் தெரியாது.

    அறுபதுகளின் பின் பாதியில் வந்த படங்களில்தான் அவர் இந்த அடர் நிறங்களை அணிய ஆரம்பித்தார். அதற்கு இரண்டு காரணங்கள். 1964 ஆம் ஆண்டு ஈஸ்ட்மேன் கலர் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறது. அந்த கலரில் எடுக்கப்படும் படங்களில் அடர் நிறங்கள் மட்டுமே துல்லியமாக தெரியும். எம்ஜியார் அதற்கேற்ப உடை அணிய ஆரம்பித்தார். இரண்டாவது காரணம் அப்போது ஹாலிவுட் படங்களில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த கேரி க்ரான்ட், கிரகரி பெக், பால் நியுமன் போன்ற ஹீரோக்களின் உடையலங்காரம் இப்படித்தான் இருந்தது. ஹாலிவுட் ஆடை ட்ரெண்டைதான் எம்ஜியார் கடைபிடித்தார்.

    முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். எம்ஜியார் ஒரு fashion icon என்று நான் சொன்னால் இங்கே பலரும் சிரிப்பார்கள். நான் அதற்கு கோபப்பட மாட்டேன். மாறாக எம்ஜியாரை போல அழகான ஒரு நமுட்டு சிரிப்புடன் உண்மைகளை தெளிய வைப்பேன். அன்றைய ஹாலிவுட் நடிகர்கள் ஏழையாக நடிக்கும்போதுகூட சட்டையை tuck in செய்து ஷூ அணிந்திருப்பார்கள். அதுதான் அன்று ஸ்டைல். அதை எம்ஜியார் பின்பற்றினார். அவர் ஷூ அணிந்து வராத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

    V கட் கழுத்து வைத்த குர்தா, slim-fit பேன்ட், வலது கையில் பிராண்டட் வாட்ச், சில சமயம் உடைக்கு ஏற்றாற்போல் கையில் காப்பு, பாடல் காட்சிகளில் நடன அமைப்பிற்கு ஏற்ற தொப்பி, ஸ்கார்ப் என்று அனைத்திலும் தனி கவனம் எடுத்துக் கொண்டது எம்ஜியார் மட்டுமே.

    இன்றுகூட ஆண்டிபட்டியில் இருக்கும் ஒரு மூதாட்டியிடம் எம்ஜியார் பெயரை சொன்னால் முகத்தில் வெட்கம் வருகிறது என்றால் அதற்கு காரணம்? ஜிப்பா வேட்டியுடன் சுற்றிய பாகவதர் போன்ற ஹீரோக்களை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு பேன்ட் ஷூ சகிதமாக வந்த எம்ஜியார் நிச்சயம் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருப்பார்தானே?

    52 வயதில் ரோமானிய மன்னர் பாணியில் முட்டிக்கு மேலே உடையணிந்து 'ஆயிரம் நிலவே வா’ என்று பாடி வருவார். அடித்து சொல்கிறேன், எம்ஜியாரை தவிர வேறு யார் அந்த உடை அணிந்தாலும் முகம் சுளிய வைத்திருக்கும். ஆனால் எம்ஜியாரோ அத்தனை வசீகரமாக இருப்பார்.

    இது ஒன்று போதும் அவரின் அடையாலங்கார நேர்த்தியை பறைசாற்ற.

    அடுத்து மிகவும் நக்கலடிக்கப்பட்டது எம்ஜியாரின் நடனம். அவரது நடனம் பெரும்பாலும் Broadway Musicals பாணியில் இருக்கும்.அந்த வகை நடனத்தில் நடிகர்கள் மேடையை முற்றிலுமாக ஆக்கிரமிப்பார்கள். நடனமும் கூடவே சேர்ந்து ஓட்டமுமாக இருக்கும். அதேபோல் எம்ஜியார் பாடல்களில் சர்வதேச நடன அமைப்புகள் தெரியும். குறிப்பாக மிகவும் கடினம் என்று கருதப்படும் லத்தீன் அமெரிக்க நடன அமைப்புகள் இருக்கும்.

    'துள்ளுவதோ இளமை'யில் வரும் paso-doble 'என்னை தெரியுமா’வில் வரும் rock and roll, 'அன்று வந்ததும் இதே நிலா’வில் வரும் ballroom dancing என்று வகை வகையான நடனங்களை பின்னி பெடலெடுத்திருப்பார்.

    ஆடும்போது கை மற்றும் காலை எந்த கோணத்தில் உயர்த்த வேண்டும் என்று அளவெடுத்தாற்போல் செய்வார். நடனம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த விஷயம் புரியும்.

    சிவாஜி தன் இயல்பான முகபாவத்தை வைத்து பல நடனங்களை நேர்த்தியாக கடந்து விடுவார். எம்ஜியார் அப்படி இல்லை. எந்த நடனமானாலும் அதை முழுதாய் கற்று தேர்ந்து ஆட வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். அதை சிறப்பாக செய்தார்.

    ’ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டில் வரும் பாங்க்ரா நடனத்திற்கு மட்டுமே ஒரு மாதம் பயிற்சி எடுத்தார். இன்னும் கூட அப்படி ஒரு பாங்க்ரா நடனத்தை அந்த ளவிற்கு தமிழ் சினிமாவில் யாரும் முயற்சிகூட செய்யவில்லை என்பதே நிதர்சனம்.

    நடனம் மட்டுமா? சண்டை காட்சிகளிலும் அப்படி ஒரு நேர்த்தி. ஆஜானுபாகு இல்லை என்றால் மலை போல் உடம்பு வைத்திருப்பவர்களுடன்தான் மோதுவார். தன்னைவிட பலம் குறைந்தவனை அடிப்பதில் என்ன ஸ்பெஷல் இருந்துவிட போகிறது?

    சிவாஜி நடிப்பின் உச்சம்; அவர்போல் எம்ஜியார் நடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. நமக்கு இரண்டு சிவாஜி தேவையா? ஒருபக்கம் சிவாஜி அணுகுண்டாய் வெடித்துக் கொண்டிருந்தார். இந்த பக்கம் எம்ஜியார் underplay செய்து இயல்பாக வலம் வந்தார். இந்த வித்தியாசம் ரசிகர்களுக்கு தேவைப்பட்டது.

    கட்டபொம்மன் போல் கர்ஜிக்க வில்லைதான். ஆனால் மதுரை வீரனின் எழுச்சி அவன் குரலிலும் பார்வையிலும் தெறித்தது. நாடோடி மன்னனின் கம்பீரம், அன்பே வா ஜேபியின் குறும்புத்தனம், எங்க வீட்டுப்பிள்ளையின் சாமர்த்தியம் என்று எம்ஜியாருக்கு அநேக முகங்கள் இருக்கிறது.

    எம்ஜியார் சாக மாட்டார். எப்படியாவது உயிரோடு வருவார். மக்களை பொறுத்தவரை எம்ஜியார் ஒரு சூப்பர் ஹீரோ. இப்பொழுது பேட்மேன் ,மார்வெல் சூப்பர் ஹீரோக்களை ரசிக்கும் இளைஞர் பட்டாளங்களுக்கு தெரியாது, அந்த காலத்தில் எம்ஜியார்தான் பேட்மேன், சூப்பர்மேன் எல்லாமே என்று.

    நண்பர் ஒருவர் இருக்கிறார். பல சமயம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர். .ஆனால் சொல்லுவார் "எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்னுதான் போவேன். வழியில எங்கேயோ ஒரு எம்ஜியார் பாட்டு கேக்கும். அவ்வளவுதான். அட போடா நான் ஏன் சாவணும், நான் போராடுவேன் அப்படினு உள்ள ஒரு வெறி வரும் பாரு" என்று.

    அந்த பாடல்களை எம்ஜியார் எழுதினாரா? இல்லை. ஆனால் இந்த வரிகள்தான் வேண்டும் என்று பாடலாசிரியர்களை கேட்டு பெற்றுக் கொண்டார். ஆக யாராவது "எம்ஜியார் எப்படி பாடி இருக்காரு பாரேன்" என்று கூறினால் அது தவறே இல்லை. எம்ஜியார்தான் எழுதினார், பாடினார்.

    எதிரிகளை அடிப்பார். கொல்ல மாட்டார். கடைசியில் மன்னித்து விடுவார். இது ஒரு கடவுள் மனப்பான்மை. விளிம்பு நிலை ரசிகனுக்கு அது பிடித்தது. மோசமான வாழ்வு நிலையில் இருந்த அவனுக்கு திரையில் ஒரு கடவுள் தேவைப்பட்டார். எம்ஜியார் அதுவாய் இருந்தார். அவர் ஒரு திரை கடவுள்.

    அவரும் பிரிந்து சென்ற காதலிக்காக அழுது, குடித்து, சாவது போல் நடித்திருக்க முடியும். நிஜ வாழ்வில் பலர் அப்படிதான் செய்கிறார்கள். ஆனால் எம்ஜியாரோ காதலிகளை வசீகரத்தால் கட்டி போடும் வித்தையை அவர்களுக்கு கற்று கொடுத்தார். அப்படியும் 'பாசம்' படத்தில் எம்ஜியார் கடைசியில் இறந்து போவார். என்னால் அந்த படத்தை இன்னொரு முறை பார்க்க முடியவில்லை. இறக்கும் கடவுளை யாருக்கும் பிடிப்பதில்லை.

    எம்ஜியார் ஒரு ரசிகனின் நடிகர். அந்த காலத்தில் ரசிகர்களுக்கு எது தேவை பட்டதோ அதை கொடுத்தார். ரசிகனின் எதிர்பார்ப்பை தாண்டி அவர் தன்னை நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை.

    படங்களில் அரசியலை திணித்தார் என்று குற்றம் சாட்டினால், அறுபதுகளில் சினிமாவில் திராவிடம் பேச வேண்டிய அவசியம் இருந்தது. அது தமிழ்நாட்டுக்கு தேவையாய் இருந்தது. அல்லாமல் எந்த நடிகர் அரசியல் பேசவில்லை? தமிழ் சினிமாவில் ஏதோ ஒரு விதத்தில் யாரோ ஒரு நடிகர் அரசியல் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.

    உடையலங்காரம், பாடல்கள் மற்றும் நடனங்களில் முழு ஈடுபாடு, சண்டை பயிற்சி துல்லியம், வேறுபட்ட நடிப்பு திறன் என்று எம்ஜியார் ஒரு தேர்ந்த நடிகர் மட்டுமில்லாது அதையும் தாண்டி ஒரு முழுமையான சினிமா கலைஞர் என்பதை எந்த தலைமுறையும் மறுக்க முடியாது.

    அவருடைய கடைசி படம் வெளிவந்து 40 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த 2017 ல் ஒரு பெண் அவர் நடிப்பை பற்றி எழுதி கொண்டிருக்கிறாள் என்பதே எம்ஜியார் என்கிற நடிகரின் மாபெரும் வெற்றிதான்.

    இவ்வளவு நான் எழுத தேவை இல்லை. இதற்கும் சேர்த்து எம்ஜியார் ஒரு பாடலை பாடிவிட்டுதான் சென்றிருக்கிறார்.

    நான் புதுமையானவன்
    உலகை புரிந்து கொண்டவன்
    நல்ல அழகை தெரிந்து
    மனதை கொடுத்து
    அன்பில் வாழ்பவன்
    ஆடலாம் பாடலாம்
    அனைவரும் கூடலாம்
    வாழ்வை சோலை ஆக்கலாம்

    இந்த காலம் உதவி செய்ய
    இங்கு யாரும் உறவு கொள்ள
    அந்த உறவை கொண்டு
    மனித இனத்தை அளந்து பார்க்கலாம்

    இசையிலே மிதக்கலாம்
    எதையுமே மறக்கலாம்
    இசையிலே மிதக்கலாம்
    எதையுமே மறக்கலாம்

    என்னை தெரியுமோ
    நான் சிரித்து பழகி
    கருத்தை கவரும்
    ரசிகன் என்னை தெரியுமோ

    உங்கள் கவலை மறக்க
    கவிதை பாடும் கவிஞன்
    என்னை தெரியுமா

    ஆகா ரசிகன் ஆகா ரசிகன்
    நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
    உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்...(மீள் பதிவு)... Thanks.........

  10. #3129
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் மானசீக குருவாக ஏற்றுகொண்ட நம் தலைவர் >>>> ரீமோட்டுடன் டிவியில் உலா வந்தேன் HBO -வில் police story -2 , 1988 இல் வெளிவந்த படம் !! டிபன் சாபிட்டுகொண்டு இருந்த நான் கைகழுவ மறந்து பிரமிப்பில் ஆழ்ந்துவிட்டேன் > ஜாக்கி சான் கதநாயகன் உடலில் மனித வெடிகுண்டும் அதை கழட்டிவிடும் லாவகமும் > இவருக்கெல்லாம் தலைவர்தான் முன்னோடி > இந்த சண்டைகாட்சி யில் வில்லன் உடலில் தீபிடித்து அலறுவான் தலைவரைபோலவே மனிதாபத்துடன் கதாநாயகன் தீயை ஆணைப்பார் > வில்லன் உடனே தன் நம்பியார் புத்தியை காண்பித்து கதாநாயகன் மேல் சீரிபாய்வான் < > இந்த காட்சியிலும் தலைவர்தான் முன்னோடி <> படத்தின் முடிவில் படபிடிப்பு காட்சிகளை காட்டுவார்கள் <> கதாநாயகனும் கதாநாயகியும் மிகவும் ஆபத்தை கையில் எடுத்து நடித்து இருப்பார்கள் << இதெல்லாம் வெறும் காசுக்கா ?? புகழுக்கா ??...... Thanks.........

  11. #3130
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #பெற்றால்தான்பிள்ளையா
    [ 09 - 12 - 1966 ]

    தலைவரின் அற்புதமான நடிப்பில் வெளி வந்த மெகா ஹிட் காவியம்...

    தமிழ் இருக்கும் இடமெல்லாம் தலைவரின் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்...

    சின்னஞ்சிறு கைகளை நம்பி என்ற காட்சியில் தலைவரின் Steps...
    வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது...
    தலைவருக்கு நிகர் தலைவரே...

    இதே மாதிரி ஸ்டைலில் சத்யராஜ், ராமராஜன் உட்பட ஏன் விஜய் உட்பட முன்னணி நடிகர்கள் கூட முயன்று பார்க்கிறார்கள்...முடியவில்லை...

    எனினும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    தலைவர் முதல்வராக இருந்த போது நடைபெற்ற ஒரு விழாவில்...
    சென்சார் போர்டு ஒரு தீராத நோய் என்பார்கள்.

    இப்பாடலில் வரும் மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் என்ற வரிகளில் அறிஞர் அண்ணா என்று வரக்கூடாது என்று சென்சார் போர்டு தடை செய்து விட்டதால் படத்தில் திருவிக போல் என்றே இருந்தது.

    ஆனால் தலைவர் வாய் அசைவு அறிஞர் அண்ணா என்றே இருக்கும்...

    ஒலி நாடாவிலும் அறிஞர் அண்ணா என்றே இன்றளவும் ஒலிக்கிறது...

    மெல்லிசை மன்னர் M.S.V. இசையில்...
    T.M.S. அவர்களின் கணீர் குரலில்...

    வாலிப கவிஞர் வாலியின் அற்புத வரிகளுக்கு தலைவர் உயிர் கொடுத்ததால் பாடல் சாகா வரம் பெற்று விட்டது.

    ★ வளர்க புரட்சித்தலைவர் புகழ் ★

    ��#இதயதெய்வம்��.......... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •