Page 308 of 402 FirstFirst ... 208258298306307308309310318358 ... LastLast
Results 3,071 to 3,080 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3071
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரின் பலகீனம்???
    -----------------------------------------
    இந்தப் பதிவை கவனமாகப் படித்து உள் வாங்குமாறு கேட்டுக் கொள்கிறென்!1
    இன்றைய அரசியல்வாதிகள் இப்படி முழங்குவார்கள்!
    என் உயிரைக் கொடுத்து என் நாட்டைத் தூக்கி நிறுத்துவேன்!!
    நீ உயிரை விட்டா,,உன்னைத் தூக்கவே நாலு பேர் வேணும்? நீ எப்படி நாட்டு மக்களைத் தூக்கி நிறுத்துவே??
    என் வீட்டையே நாடாகவும்,,என் பிள்ளைகளையே மக்களாகவும் நினைச்சு நான் சொன்ன வார்த்தை அது? அரசியல்வாதியின் விளக்கத்துக்கு நம்மிடம் சரியான பதில் இல்லாத காரணத்தால்--
    ஒரு நிகழ்வில் நம் கவனத்தைத் திருப்புவோம்!!
    முன்னாள் அமைச்சர் அரங்க நாயகம்!!
    எம்.ஜி.ஆர் அமைச்சரவையிலேயே காபினட் மந்திரியாக இருந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர்.
    அவர் அடிக்கடி மேடையில் ஒன்றைச் சொல்வார்!
    எம்.ஜி.ஆர்,,,எப்போதுமே மக்களைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்!
    எந்தப் பயனும் எதிர்பார்க்காமல் இவ்வளவு தூரத்துக்கு என்னை ஆளாக்கியிருக்கும் இந்த மக்களுக்கு என்னாலே,,நான் நினைச்ச அளவுக்கு செய்ய முடியலே??
    தனியாக எங்களுடன் உரையாடும்போது கூட இதைச் சொல்லியே புலம்புவார்!
    நாங்கக் கூட சில சமயம் அவரிடம் சொல்வோம்!!
    இப்படி ஓவராக அதையே நினைச்சு உடம்பைக் கெடுத்துக்காதீங்க!!
    அந்த அளவு அவர் மனசுலே மக்களைப் பற்றிய நினைவே மண்டியிட்டுக் கிடந்தது!!
    அந்த மன உளைச்சலே அவரை நம்மிடம் இருந்து சீக்கிரம் பறித்து விட்டது என்று கூட சொல்லலாம்!!
    சரி! ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்!
    அது எம்.ஜி.ஆர் குணமடைந்து தாய் நாடு திரும்பி ராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டிருந்த நேரம்!!
    வக்கீல்கள் அணிகள் பல்வேறு அம்சங்களை வேண்டி போராட்டம் நடத்துகின்றன!
    முதல்வர் எம்.ஜி.ஆர்,,அவர்களின் பிரதி நிதிகளோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்!
    ஊரில் இல்லாத சட்டங்களையும் உதவாத கோரிக்கைகளையும் அடுக்கிக் கொண்டே எம்.ஜி.ஆரை டென்ஷன் செய்து கொண்டிருக்கிறார்கள் பிரதி நிதிகள்!
    பொறுமை இழந்த எம்.ஜி.ஆர் கடுங்கோபத்துடன் வெளியில் விரலை சுட்டிக் காட்டியவாறு வேகமாக வார்த்தைகளை வெளியே அனுப்புகிறார்?
    இதைப் பாருங்க!! உங்க நிலைமையை விட வெயிலில் வெளியே என்னைப் பார்க்கக் காத்துக் கொண்டிருக்கும் இந்த ஏழை மக்களின் நலன் தான் எனக்கு முக்கியம்!!
    இந்த ஆட்சியையே கலைச்சுட்டு அவங்க கூட சேர்ந்துடுவேன்.?
    அவுங்க ஆதரவில் தான் நான் இன்னிக்கு முதல்வரா இருக்கேனே தவிர உங்க தயவுலே இல்லை! அதைப் புரிஞ்சுக்கிடுங்க??
    அந்தப் பிரதி நிதிகளே,, எம்.ஜி.ஆரின் அந்த பதிலில் ஆடிப் போனதுடன்--மக்கள் மேல் அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையையும்--அவர்களைப் பற்றிய நலனிலேயே அவர் கொண்டிருந்த இடைவிடா சிந்தனையையும் கண்டு மனம் நெகிழ்ந்தார்களாம்??
    ஏன்? பதிவைப் படிக்கும் நாமும் தானே????... Thanks........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3072
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வாள் எம் ஜி ஆர் சேர்ந்தால் அங்கு மின்னல்களின் அணிவகுப்பு
    ஒவ்வொரு வீச்சும் ஒரு மின்னல் வேகம்
    நீரும் நெருப்பும் கடைசி சண்டை காட்சி எம் ஜி ஆரின் ஸ்டைல் அத்தனையும் கொண்ட வாள்வீச்சு
    முதலில் கரிகாலனாக முரட்டு தனமான வாள்வீச்சு இடிபோல் இறங்கிய வாள் எதிரின் திகைப்பை அசோகன் நன்றாக பிரதிபலிப்பார் பின் மணிவண்ணனாக எம் ஜி ஆர் இடது கையால் வாள் வலது கை வேகத்தில் சுழற்றுவார் என்னா ஒரு லாகவம் நேரிடையாக இதை பார்த்த இந்தி பிரபல நடிகர் ஒருவர் பிரமித்து உடனே எம் ஜி ஆர் பிரமிப்போடு பாராட்டினார் பின் இரு கரத்தால் வாள் வீசுவார் எம் ஜி ஆர் என்ன ஒரு அழகு இடது கையால் வீசி கொண்டே இடையிடையே வலது கையால் இடிபோல் தாக்குவார் என்ன ஒரு சக்தி அதில் வாள் கொண்டு எதிரியை பந்தாடுவார் அங்கும் இங்கும் எவராலும் செய்ய முடியாத காட்சி இது முடிவில் இடது வலது என எதிரியின் உடலில் வாளால் கோலம் இடும் வேகம் ஸ்டைல் எழுதும் போதே புல்லிரிக்கும் காட்சி
    வில்லுக்கு விஜயன்
    வாளுக்கு எம் ஜி ஆர்

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்....... Thanks...

  4. #3073
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழன் ஏமாளி அல்ல
    சினிமா பைத்தியம் அல்ல

    அரசியல் கட்சிகள் சினிமா நடிகர்களை அவர்கள் ரசிகர்கள் போதும் தமிழகம் ஆள என எண்ணும் அவலம்
    ரஜினிகாந்து விஜய் கமல் இப்போது தேசியகட்சி ஒன்று அஜீத்க்கு வலைவீசியுள்ளது
    எந்த கொள்கையும் இல்லாத இந்த நடிகர்கள் தன் குடும்பத்துக்கு கோடிகணக்கில் சேர்த்து விட்டு பதவி ஆசையில் மக்களை ஏமாளி ஆக்க தயாராகி கொண்டிருக்கிறார்கள்
    இவர்களின் எண்ணத்தை தூள் ஆக்கி கடும் தோல்வி மூலம் ஒரு பாடம் புகட்ட தமிழ் மக்கள் தயார்
    எம் ஜி ஆர் முதலில் மக்கள் சேவை நாட்டு சேவை திராவிடம் மூலம் தமிழ் மக்கள் நலம் காக்க போராடி அரசியல் களம் கண்டவர் காலத்தின் கட்டளை கட்சி நிறுவி பொற்கால ஆட்சி தந்தார்
    நடிகர்கள் எல்லாம் எம் ஜி ஆர் ஆக முடியாது
    வாழ்க எம் ஜி ஆர் புகழ்...... Thanks...

  5. #3074
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம் ஜி ஆர் பிறந்த நாள்
    அன்றும் இன்றும் என்றும் எங்கள் எம் ஜி ஆர் தான் அவருக்கு இணையா எவரும் இல்லை

    ஆண்டுகள் கால் நூற்றாண்டு கழிந்து விட்டது ஆனால் சினிமா அரசியல் எம் ஜி ஆரை சுற்றியே நகர்கிறது
    இது எவராலும் சாதிக்க முடியா சாதனை

    இந்தியா எதிர்த்தபோதும் தமிழனுக்கு உதவிகரம் நீட்டிய மாவீரன் எம் ஜி ஆர்
    இந்தியா பாரதரத்னா அளித்து கௌரவித்தது எம் ஜி ஆரை

    தந்தை பெரியார் மூதறிஞர் ராஜாஜீ
    அறிஞர் அண்ணா கண்ணியத்துக்குயுரிய காயித்தே மில்லத் அன்னை தெரசா போப்பாண்டவர் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உலக குத்து சண்டை வீரர் முகமது அலி முப்படை வைத்து போராடிய பிரபாகரன் இவர்கள் மட்டும் அல்ல எம் ஜி ஆரை எதிர்த்து விமர்சித்த காமராஜ் கருணாநிதி ஜோயவர்த்னா தமிழ்வாணன் சோ கண்ணதாசன் சிவாஜிகணேசன் வைகோ டி ராஜேந்தர் சீமான் கம்மியூனிஸ்ட் பாலசுப்பிரமணியன் வரை எதிரிகளாலும் இன்றுவரை புகழபட்டவர் எம் ஜி ஆர் ஒருவரே

    எல்லோருக்கும் நல்லவர் வல்லவர் எம் ஜி ஆர்
    வாழ்க எம் ஜி ஆர் புகழ்....... Thanks...

  6. #3075
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அதுவரை மக்கள் திலகத்தின் பிறந்தநாள் எது? என்று யாருக்கும் தெரியாத நிலையில் பப்ளிக்காக போட்டுடைத்த தலைவரின் நண்பர்...

    #புரட்சித்தலைவர் முதல்வரான பிறகு 1978 ஜனவரி மாதம் 17–ந்தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் எம்ஜியாரின் நண்பர் ஒரு விளம்பரம் கொடுத்தார்.

    அதில் ‘‘இன்று 61–வது பிறந்த நாள் விழா காணும் எனது ஆரூயிர் குடும்ப நண்பர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பல்லாண்டுகள் நலமுடன் வாழப் பிரார்த்தித்து வாழ்த்தும் வி.எம்.பரமசிவ முதலியார்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    அதைப்பார்த்த #புரட்சித்தலைவர் தன் நண்பரை தொலைபேசி வாயிலாக அழைத்து,

    ‘‘என் பிறந்த நாள் உங்களைத் தவிர யாருக்குமே தெரியாது. இதுவரைக்கும் யார்கிட்டேயும் நான் சொன்னதும் கிடையாது, சொல்றதும் இல்லை. அப்படி இருக்கும்போது இன்னிக்கு நீங்க ஏன் அதை ‘தினத்தந்தி’யில் போட்டிங்க?’’ என்று அன்புடன் கடிந்து கொண்டார்.

    அதற்கு முதலியார், ‘‘இப்போ நீங்க முந்தி மாதிரி சினிமா நடிகர் இல்லே. இந்தத் தமிழ்நாட்டின் முதல்–அமைச்சர். இதுவரைக்கும் இல்லேன்னாலும், இப்போவாவது – இனிமேலாவது உங்க பிறந்த நாள் எதுன்னு எல்லா மக்களுக்கும் தெரியட்டுமேன்னுதான் தினத்தந்தியிலே போட்டேன்’’ என்றார்.

    புரட்சித்தலைவரால் பதில் ஏதும் பேசமுடியவில்லை. அதற்குப் பிறகுதான் புரட்சித்தலைவரின் பிறந்த நாள் ஜனவரி 17 என்பது அவருடைய அத்தனை ரசிகப் பெருமக்களுக்கும் மற்றும் அரசியல், திரை உலக நண்பர்களுக்குமே தெரியவந்தது.

    அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 17 புரட்சித்தலைவர் பிறந்த நாளில் முதலியாரின் வாழ்த்துச்செய்தி தவறாமல் ‘தினத்தந்தி’ நாளிதழில் வந்து கொண்டிருந்தது.

    புரட்சித்தலைவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வென்று முதல்–அமைச்சர் ஆன பிறகும்கூட அவர் இல்லாமல் முதலியாரின் குடும்பத்தில் எந்த ஒரு விசேஷங்களும் நடைபெற்றது இல்லை, நடக்கவும் நடக்காது.

    முதலியாரது பிள்ளைகளின் திருமணச் சடங்குகளை சம்பிரதாயப் பிரகாரம் பிராமணப் புரோகிதர்கள் நடத்துவார்கள்.

    ஆனால் தேங்காய் மீதிருக்கும் திருமாங்கல்யத்தை எடுத்து மணமகனின் கரங்களில் கொடுப்பது மட்டும் ஒரே ஒருவருடைய கரங்கள்தான்.

    அது அள்ளி அள்ளி வழங்கிய மகாபாரதக் கர்ணனுடைய கரங்களுக்குச் சமமான புரட்சித்தலைவரின் கரங்கள்தான்.

    அந்த அளவிற்கு புரட்சித்தலைவரும், பரமசிவ முதலியாரும் ஒருவர் மீது ஒருவர் அன்பையும், நட்பையும் மட்டும் அல்ல, ஆரூயிரையே வைத்திருந்தனர் என்றால் அது சற்றும் மிகை அல்ல.

    எப்படா பிறந்தநாள் வரும். தொண்டர்களை அறிவாலயம் வரச்சொல்லி வசூல் வேட்டை நடத்தலாம் என்றிருந்த தலைவரை போலல்ல நம் தலைவர்.

    கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரரான வாத்தியார் ஒரு போதும் தம் பிறந்தநாளை கொண்டாடியதே இல்லை....... Thanks...

  7. #3076
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திமுக-வுக்கு மறக்க முடியாத மரண அடி கொடுத்த #மக்கள்திலகம்..எம்.ஜி.ஆர்

    தி.மு.கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர் அவர்களை திட்டமிட்டு நீக்கி அவமானப்படுத்திய திரு. கருணாநிதிக்கு தக்க அரசியல் பதிலடி கொடுக்க பொருமையாக தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தார் #புரட்சிதலைவர்.

    அந்த தருணமும் விரைவில் வாய்த்தது பொண்மனசெம்மல் அவர்களுக்கு

    ஆம். அப்போது திண்டுக்கல் மக்களவை உறுப்பினரான இருந்த திமுகவை சேர்ந்த ராஜாங்கம் திடீரென மரணம் அடைந்தார்.

    ஆகவே, திண்டுக்கல் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் மீதான மக்களின் மனவலிமையை எடை போட்டுப் பார்க்கும் தேர்தல் என்பது அரசியல் ரீதியான பொதுவான கருத்து.

    அதிலும், கட்சி பிளவுபட்டிருந்த சூழலில் அந்த இடைத் தேர்தல் முடிவைத் தனக்கான கௌரவ விஷயமாகப் பார்த்தார் கருணாநிதி.

    செல்வாக்கு மிக்க வேட்பாளரைக் களமிறக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக அவர் களமிறக்கிய வேட்பாளர்தான் பொன்.முத்துராமலிங்கம்.

    புதிய கட்சியைத் தொடங்கிய சமயம் என்பதால் இடைத்தேர்தல் சரியான வெள்ளோட்டமாக இருக்கும் என்பது மக்கள் திலகத்தின் கணிப்பு. உடனே மாயத்தேவர் என்ற வழக்கறிஞரை வேட்பாளராக்கினார்.

    சுயேட்சி சின்னமான இரட்டை இலையை தேர்ந்தெடுத்தார் மாயத்தேவர்.

    திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சிக்கும் நல்ல செல்வாக்கு இருந்தது. குறிப்பாக, காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரசுக்கு. அந்தக் கட்சியின் சார்பில் என்.எஸ்.வி. சித்தன் நிறுத்தப்பட்டார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்கரய்யாவை வேட்பாளராக்கியது. இந்திரா காங்கிரஸும் நின்றது. ஆனால் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு கொடுத்துவிட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

    பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகத் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டது.

    கௌரவத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் கருணாநிதி இறங்கினார். புதிய கௌரவத்தை அடையும் நோக்கத்தில் #புரட்சித்தலைவர் களத்தில் இறங்கினார்.

    அப்போது தேர்தலுக்குத் தொடர்பில்லாத புதிய பிரச்னை ஒன்று வந்தது. அது, எம்.ஜி.ஆர் அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம்.

    திமுகவில் இருந்தபோது தொடங்கப்பட்ட படம். வெளியிடும் தருணத்தில் புதிய கட்சியைத் தொடங்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.

    படத்துக்கான சுவரொட்டியைக்கூட ஒட்டமுடியாத சூழல். ஒட்டிய சுவரொட்டிகளை எல்லாம் திமுகவினர் கிழித்தெறிந்ததாகச் செய்திகள் பரவிக்கொண்டிருந்தன.

    இதன் பின்னணியில் இருப்பவர் திமுகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான மதுரை எஸ்.முத்து என்றனர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்.

    'படம் திரையில் ஓடாது; ஓடினால் சேலை கட்டிக்கொள்கிறேன்' என்று முத்து சவால் விட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின

    பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் தமிழகம் முழுவதும் வெளியானது.

    அரசியல் வாடையே வீசாத வகையில் எடுக்கப்பட்ட படம் அது. திடீரென உருவான அரசியல் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்தது. எனினும், படம் பிரம்மாண்டமான வெற்றி.

    உண்மையில் அந்த படத்தின் வெற்றி திமுகவினரை அதிர்ச்சியடையச் செய்தது.

    இந்த நிலையில், திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் பதிவாகின.

    அதிமுகவின் மாயத்தேவர் 2,60,930 வாக்குகளைப் பெற்று அபார வெற்றியைப் பெற்று திமுகவை மண்ணை கவ்வ செய்தார்.

    ஸ்தாபன காங்கிரஸின் என்.எஸ்.வி. சித்தன் 1,19,032 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

    மாறாக, திமுக வேட்பாளர் வெறும் பொன்.முத்துராமலிங்கம் 93,496 வாக்குகளைப் பெற்று, மூக்குடைபட்டு மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தார்.

    கருணாநிதியை கதற அடித்த தேர்தல் என்றால் இதுதான்.

    அறிமுக மேச்சிலேயே டபுள் செஞ்சுரி அடித்த பேட்ஸ் மேன் போல வலம் வந்தார் நமது வாத்தியார்.

    ஜீரணிக்க முடியாத இந்த தோல்வி குறித்து பின்னாளில் கருணாநிதி இப்படித்தான் எழுதினார்.

    "தி.மு.கழகத்தின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த இடம் திண்டுக்கல். இந்தத் திண்டுக்கல்தான் கழகத்தின் பல்வேறு வெற்றிகளுக்கெல்லாம் தடைக்கல்லாகவும் இருந்தது." என்று..

    (படம்: முதல் முறையாக தமிழகத்தில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி வாகை சூடிய மாயத்தேவர் அவர்கள் மக்கள் திலகம் அவர்களுக்கு மலர் மாலையிட்டு கழகத்தின் வெற்றியை சமர்பித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்)

    பதிவு எண்:13, ��
    ��பதிவுகள் பிடித்திருந்தால் லைக், சேர், கமெண்ட் பன்னுங்க, அதிமுக, அன்பர்களே, நண்பர்களே, அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ.ஜெ.அம்மா அவர்களின் குறிப்புகள், புகைப்படங்கள், மேடை பேச்சுக்கள், திரைப்பாடல்கள், காண விரும்பினால் லிங்கை தொடரவும் https://www.facebook.com/groups/237398323372711........... Thanks...

  8. #3077
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ரிக்ஷாக்காரன் படத்தில் ஒரு காட்சியில் புரட்சித்தலைவர் நிரபராதியாக இருந்தும் தண்டனை பெறுவார். அவர்க்கு பதில் நீதிபதியாக இருக்கும் நடிகர் சுந்தர்ராஜன் அபாதாரம் கட்டுவார் அதற்காக சுந்தர்ராஜன் காண வீட்டுக்கு வருவார்.புரட்சித்தலைவர் வரும் போது நீதிபதியான சுந்தர்ராஜன் வேலைக்காரிடம் பேசிக்கொண்டுருப்பார் வேலைக்காரி சென்ற பிறகு தனக்காக கட்டிய பணத்தை சுந்தர்ராஜன் எதிராக உள்ள மேஜை மீது வீசுவார்

    இந்த காட்சியினை உற்று கவனித்தால் அதன் பொருள் அறியலாம்
    புரட்சித்தலைவர் வந்தவுடன் பணத்தை வீசவில்லை. வேலைக்காரி சென்ற பிறகுதான் பணத்தை வீசுவார் அதற்கான காரணம்.

    ஒரு வேலைக்காரிக்கு முன்னால்..நீதிபதியே அவமானம் படுத்தக் கூடாது என்பதற்காகவும் சுந்தர்ராஜன் கெட்டவனாக இருந்ததாலும் அவர் படித்த படிப்புக்காவும் அவர் ஏற்றுள்ள பதவிக்கு மரியாதை கொடுக்கனும் என்பதற்காக
    அக்காட்சி அமைந்திருக்கும். ...மேலும் தொடரும். ......... Thanks....

  9. #3078
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ரிக்ஷாக்காரன் படத்தில் ஒரு காட்சியில் நடிகை மஞ்சுளா அறிமுகம் பாடல் காட்சி முடிந்தவுடன் கல்லூரி முதல்வராக நடித்த நடிகையர் பேசும் போது
    பெண்கள் அழகிகளாக இருக்கலாம். ஆண்மைக்களா இருக்கக்கூடாது.
    என்று பேரறிஞர் அண்ணா சொன்னதாக கூறுவார். அவர் சொன்னவுடன் அனைவரும் கைத்தட்டுவார்கள்.இக்காட்சி சற்று உற்று கவனித்தால் ஒர் உண்மை புலப்படும். கைத்தட்டுப்போது பெண்கள் மட்டுமே கைத்தட்டுவதைக்காட்டுவார்கள்.
    காரணம் இக்கட்சியில் வரும் வசனம் பெண்களுக்கு அறிவுரை கூறுவது போலவும் அதே நேரத்தில் அவர்களிடம் உள்ள தவறை சுற்றிக்காட்டுவதை போலவும் அமைந்திருக்கும். அது போன்ற வசனம் வரும் போது ஆண்களும்.கைத்தட்டுவதுப்போல் காண்பித்தால் .அது பெண்களுக்கு எதிரான கருத்தாக சித்தரிக்கப்பட்டு விடும் என்பதை உணர்ந்து பெண்களே இக் கருத்தை ஏற்றுக்கொள்வதுப்போலவும் பெண்கள் இக் கருத்தை ஆதரிப்பதுப்போலவும் இக் காட்சி அமைந்திருக்கும் இது சமயோகிதனமான அறிவுக்கு வேலைக்கொடுக்கும் காட்சியாகும் சாமானியர்கள் இதைக்கண்டுப்பிடிப்பது கடினம். ..மேலும் தொடரும். ......... Thanks...

  10. #3079
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ரிக்ஷாக்காரன் படத்தில் வாத்தியார் கூறும் அறிவுரைகள்
    வாயாலே வாழ்த்தறாங்களே அதை நம்ப முடியாது வயிறு வாழ்த்தவேண்டும்
    சாமர்த்தியமாக நெருப்பை மூடி மறைக்கலாம் ஆனால் புகையை மறைக்க முடியாது.

    இலக்கணம் தெரிந்தா மட்டும் போதாது அடுத்தவங்களை மதிக்கனும் அதுதான் வாழ்க்கையின் அரிச்சுவடி
    முறைப்படி நடக்கற தொழிலுக்குத்தான் கெளரவம் இருக்கும். .தொழிலுக்கு கெளரவம் இருந்தால்தான் எல்லோரும் ஈடுபட முன் வருவார்கள்

    குடிசைகள் எல்லாம் எப்போ கட்டிடங்களாக மாறுதோ அப்பத்தான் மனுசனின் தரம் கூட உயரும் எல்லோரும் மதிப்பார்கள்
    உண்மைக்கு சாட்சி மனசாட்சி யாருக்கிட்ட என்ன கேட்கறதங்கற வரைமுறை இல்லாததினால்தான் உண்மை தெரிந்திருக்கும் நல்லவஙுககூட சாட்சி சொல்லபயப்படறாங்க

    எல்லோரும் மகாத்மா அளவுக்கு உயராமல் இருக்கலாம். ஆனால் சராசரி மனிதனாக இருக்கலாம் அல்லவா.
    ஒரு பொம்பள நிம்மதியா வாழமுடியும் என்ற நம்பிக்கை எப்போ வருதோ அப்பத்தான் சுதந்திரம் கிடைத்தாக அர்த்தம்.

    கல் உடைந்தால் படியாகும். .வில் உடைந்தா விறாகும்..குடும்பம் உடைந்தால் குப்பைக்கு கூட ஆகாது.
    மனசாட்சியே போல கண்டிப்பான நீதிபதியே பார்க்கவே முடியாது. ..

    உடல் உழைப்பும் அறிவும் சேர்ந்து செயல்பட்டால்தான் எந்த தொழிலுக்கும் மதிப்பும். கூடும். அப்பத்தான் நாடு நாடாக இருக்கும். இல்லையென்றால் நாடு என்று போர்டு போட்டால்தான் தெரியும்
    கண்ணு கெட்டா கூட மருந்து உண்டு ஒரு பொண்ணு கெட்டபோயிட்டா என்று பேர் எடுத்துட்டா மண்ணுக்கு போனாகூட் அந்த பேர் மறையாது

    என்னத்தான் நம்ம பக்கம் நியாயம் இருந்தாலும். மற்றவர்கள் உணரும் படி எடுத்து கூறினால்தான் எந்த நியாயமும் எடுப்படும் உண்மைமைக்கு என்றும் அழிவில்லை
    ஒரு பொண்ணுடைய வாழ்க்கை லட்சியம் ஒன்று நல்ல மனைவியாக இருக்கனும். மற்றொன்று நல்ல தாயா இருக்கனும்
    கெட்டவர்கள் யாரையும். வேண்டாம் திருத்துவோம்........ Thanks...

  11. #3080
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர்.முதல்வராக இருந்தப்போது அவரை தேடி சுமார் பத்து பதினைந்து இளைஞர்கள் வந்திருந்தனர். வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்ட பிறகு என்னை வந்து பார்க்கும் படி கூறினார்.அதேப்போல் அனைவரும் சாப்பிட்டவுடன் புரட்சித்தலைவர்க்காக காத்திருந்தனர்.அவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் எதற்க்காக வந்திருக்கிறார்கள்..என்பதைப் புரட்சித்தலைவர் முன்கூட்டியே அறிந்திருந்தார். இருந்தாலும் அவர்களா கூறவேண்டும் என்பதால் அமைதியாக இருந்தார். தனது அலுவலகம் வந்தவுடன் அவர்களை அழைத்தார். என்ன விஷயம் எதற்க்காக வந்திருகக்கிறீர்கள் என்று கேட்டார். வந்தவர்கள் கூறினார்கள்....

    ஐயா நாங்கள் கேரளாவில் இருந்து வந்துள்ளோம் நாங்கள் எல்லோரும் மலையாளிகள் எங்கள் ஊரில் உங்கள் தாயார் பெயரில் மன்றம் ஒன்று ஆரம்பிக்கப் போகிறோம். அதற்க்காக தாங்களிடம் நிதியுதவி பெறவே வந்துள்ளோம் என்று கூறினர் அவர்கள் கொண்டுவந்த அழைப்பிதழ் குறிப்புகள் யாவும் கொடுத்தனர்.

    அதையெல்லாம் வாங்கிப் பார்த்தார் புரட்சித்தலைவர் ..நீங்கள் எல்லாம் எனது தாயார் பெயரில் நிதி கேட்டது தவறு இல்லை ஆனால் மலையாளி என்று கூறி நிதி கேட்டுருக்ககூடாது நீங்கள் என்னை மலையாளி என்பதால் தமிழகமக்களிடம் இருந்து பிரித்து பார்க்கீர்கள் நான் தமிழன் தமிழ்தான் என்னை வாழவைத்தது .பேர் புகழ் தந்தது இந்த உயிர் மூச்சு எல்லாம் தமிழம் தமிழக மக்கள் தந்தது ... தமிழக மக்களுக்காக எதையும் விட்டு கொடுப்பேன் ஆனால் தமிழை விட்டுக்கொடுக்கப்மாட்டேன் அதுமட்டும் அல்ல நீங்கள் தந்த அழைப்பிதழ் தமிழ் வார்த்தை தமிழ் எமுத்து எதுவும் இல்லை. சாரசரி மனிதனாக வந்து எந்த உதவியும் கேளுங்கள் செய்கிறேன் ஜாதி பெயர் மதத்தின் பெயர் மொழி பெயர் சொல்லி எந்த உதவியும் கேட்டாலும் செய்ய. மாட்டேன்.மீண்டும் இதுப்போல் மலையாளி கேரளா என்று கூறிக்கொண்டு என்னிடம் வராதீர்கள் என்று அறிவுரைக்கூறி அனுப்பி வைத்தார்......... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •