Page 301 of 402 FirstFirst ... 201251291299300301302303311351401 ... LastLast
Results 3,001 to 3,010 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3001
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு சமயம் தலைவர் பொம்மை என்று அந்த நாளில் வந்த ஒரு சினிமா இதழில்.

    ஒரு ரசிகை ஒரு கேள்வி கேட்டு இருந்தார்..

    நான் படித்துக்கொண்டு இருக்கிறேன்...உங்கள் படத்தில் உங்களுடன் நடிக்க ஆசை முடியுமா என்று.

    அதற்கு தலைவர் பதில்.
    படிக்கும் போது அதில் கவனம் செலுத்தி நன்கு படித்து வெளியே வாருங்கள் ..நடிப்பது பற்றி அப்புறம் யோசிக்கலாம் என்று.

    ஆனால் நம் வள்ளல் வாக்கு பின் ஒரு நாள் பலித்து விட்டது...அந்த பெண் நடிகை ஆனார்.

    தலைவருக்கே ஜோடி ஆக பின்னால் நடித்தார்.

    யார் அவர் என்றால்

    அவர் பெயர் பாரதி...தலைவருடன் அவர் நடித்த படம் நாடோடி.

    நல்லவர்கள் வாக்கு என்றும் பலிக்கும் இல்லையா நண்பர்களே....நன்றி.

    வாழ்க எம்ஜியார் புகழ்...உங்களில் ஒருவன் நெல்லை மணி...நன்றி......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3002
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீ mgr வாழ்க

    சித்திரை 1 செவ்வாய்

    எம்ஜிஆர் பக்தர்களே

    உங்கள் முன்பாக மேடையில் பேசிக் கொண்டிருப்பவர்

    ராஜ விசுவாசி

    கோவை மாவட்டம்

    கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர்

    நெகமம் கந்தசாமி அவர்கள்

    எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து

    இவர் கட்சி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்

    கோவை மாவட்டத்தில் திமுக அமைச்சராக இருந்தவர் கண்ணப்பன்

    கோவை மாவட்டத்தில்திமுக அமைச்சர் கண்ணப்பன் அவர்களை எதிர்த்து யாரும் அரசியல் செய்ய மாட்டார்கள்

    ஆனால் அந்தஅமைச்சர் கண்ணப்பனின் கண்ணில் விரலை விட்டு இவர்ஆட்டிய காரணத்தினால்

    இவருக்கு ஒரு பட்டப் பெயர் வந்துவிட்டது

    இவரை நெகமம் நெப்போலியன் என்று அழைப்பார்கள்

    எம்ஜிஆர் அவர்கள் மரணம் அடைந்த பிறகு

    உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்

    உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு

    துரோகம் செய்யாதவர்

    எம்ஜிஆர் அவர்களின் மனைவி ஜானகி அம்மையாரை முதல்வராக கொண்டு வந்த எம்எல்ஏக்களில்இவரும் ஒருவர்

    உறவைக்காத்த கிளி என்ற படத்தின் தயாரிப்பாளர் பொள்ளாச்சி ரத்தினம் அவர்களுக்கும்

    டைரக்டர் டி ராஜேந்திரன் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது

    நெகமம் கந்தசாமி அவர்களிடம் பஞ்சாயத்துக்கு வந்தார்கள்

    அப்பொழுது நெகமம் கந்தசாமி அவர்கள்

    டி ராஜேந்திரன் அவர்களைப் பார்த்து

    தயாரிப்பாளர் சொல்வதை போல் நீங்கள் படத்தை எடுத்து முடித்து கொடுங்கள் என்று கூறியுள்ளார்

    பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை

    பத்திரிகைகளில் வந்த செய்தியை இப்பொழுது நான் பதிவிடுகிறேன்
    நெகமம்ம்கந்தசாமி அவர்கள்

    டி ராஜேந்திரன் அவர்களைப் பார்த்து

    கையை வெட்டுவேன் காலைவெட்டுவேன் என்று கூறினாராம்

    இப்படித்தான் திமுக மேடையில் பேசினார்கள்

    இந்த நிகழ்ச்சி நடந்து நான்கு நாட்களில்

    டி ராஜேந்திரன் அவர்கள்

    கருணாநிதி முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார்

    நெகமம் கந்தசாமி அவர்களைப் போன்றவர்கள் கட்சி வளர்த்தி வைத்த காரணத்தினால்தான்

    ஜெயலலிதா எடப்பாடி போன்றவர்கள் முதலமைச்சராக வர முடிந்தது

    நெகமம் கந்தசாமி போன்றவர்கள் கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான்

    இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.........நன்றி... முகநூல்.........

  4. #3003
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    M G R
    வீரம் திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் நடத்தி காட்டியவர் எம்ஜிஆர்
    ரயில் போராட்ட கைதான பின் வந்து இறங்கிய கருணாநிதி கூட்டத்தில் திணற எம்ஜிஆர் அலேக்கா தோள் மீது கருணாநிதியை தூக்கி வெளியே கொண்டு வந்தார் இதில் எம்ஜிஆரின் விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்சு தொலைந்து விட்டது
    வெளியூர் சென்று விட்டு காரில் திரும்பி கொண்டிருந்த எம்ஜிஆர் கார் வழி பறி கும்பலால் மறிக்க படுகிறது கூச்சலோடு காரை நெருங்க எம்ஜிஆர் இறங்கி முறைப்போடு நோக்க கும்பல் மொத்தமும் கார் வெளிச்சத்தில் எம்ஜிஆரை கண்டு வாத்தியாரே உங்களயைா மறித்தோம் மன்னித்து விடுங்கள் என காலில் விழ அவர்களை எழப்பி வழி பறி செய்வது தவறு ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைங்கள் என ஒரு கணிசமான தொகையை கொடுக்கிறார் எம்ஜிஆர்

    எந்த வகையிலும் எவராலும் எம்ஜிஆரை வெல்ல முடியாது என்ற நிஜ வீரனாக எம்ஜிஆர் இருந்ததால் இன்றும் எம்ஜிஆர்புகழ் கொடிகட்டி பறக்கிறது

    வாழ்க எம்ஜிஆர்புகழ்........ Thanks.........

  5. #3004
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தெரியாதது #கடலளவு

    சென்னை சத்யா ஸ்டூடியோவில் உரிமைக்குரல் படப்பிடிப்பில் வாத்தியாரைக் காண, தேனி மாவட்டத்திலிருந்து சண்முகவேலு என்ற தீவிர ரசிகர் காணச் சென்ற போது, ""என் கூட நடிக்கிறீயா...'' எனக்கேட்டார்.

    "உங்க பக்கத்தில் நிற்கும்போதே, எனக்கு கை, கால் உதறுது; உங்க அன்பே போதும்,' என, அந்த ரசிகர் கூறியதும், அவரைக் கட்டிப்பிடித்து, போட்டோ எடுக்கச் சொன்னார் வாத்தியார்...

    பின்னர்,

    அருப்புக்கோட்டை வறட்சி நிதி வசூலுக்கு வந்த அவர், மதுரை தமிழ்நாடு ஓட்டலில் தங்கியிருந்த போது, வாத்தியாரைச் சந்திக்க, அந்த ரசிகர் மனைவி குழந்தைகளுடன் காத்திருந்தார்...நிறைய பார்வையாளர்கள் இருந்தபோதும், சண்முகவேலுவை அடையாளம் கண்டு, உதவியாளரிடம் அழைத்து வரச்செய்தார்.

    அந்த ரசிகரின் இரு மகள்களுக்கு சத்யா, ராணி என பெயரிட்டு, "சத்யா, எனது தாய், ராணி எனது அண்ணியார்,' எனக் கூறி, அவர் மனைவியிடம் நலம் விசாரித்து, 'என்ன உதவி வேண்டுமானாலும், இந்த அண்ணனிடம் தயக்கமில்லாமல் கேளுங்கள்...' என்றார். வெளியே வந்த சண்முகவேலுவின் மனைவி மிகவும் நெகிழ்ந்து, "கட்சிக்காக, சொத்துக்களை நீங்கள் விற்ற போது, எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது... ஆனால் இந்த கூட்டத்தில், உங்களை அடையாளம் கண்டு பேசி நமக்கு உதவியும் செய்கிறேன்... என்றால்,

    #அவருக்காக #நம் #சொத்துக்களை #இழந்தாலும், #பரவாயில்லை,' என்று கண்ணீருடன் கூறினார்...

    வெளியே தெரியாத இப்பேர்ப்பட்ட பகட்டில்லா பக்தர்கள் இன்னும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்...

    படித்ததைப் பகிர்கிறேன்...

    வாத்தியாரின் மனிதநேயம் 'நமக்குத் தெரிந்தது கையளவு, தெரியாதது கடலளவு'........ Thanks...

  6. #3005
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *எம்ஜிஆரும்*
    *பத்திரிகையாளருக்கு நடந்த ‘கவனிப்பும்’!*
    ---------------------------------------
    https://m.facebook.com/story.php?sto...00000064280192
    ---------------
    அவர் முற்போக்கு *கட்சியின் #பத்திரிகையாளர்.*

    எம்ஜிஆரின் பல திட்டங்களை கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருந்தவர்.
    அமைச்சர்களின் பல ஊழல்களை எழுதியவர்.
    எப்போதும் எதிர் விமர்சனம்தான்.

    #செய்தியாளர் சந்திப்பின் போதும்கூட நேருக்கு நேராக, முதல்வர் என்றும் பாராமல் விமர்சனங்களை முன்வைப்பார்.

    அப்படியானவருக்கு குடிப்பழக்கம் எப்படியோ தொற்றிக்கொண்டது. பணி நேரம் போக அதில் மூழ்கிவிடுவார். (நிறைய எழுதுவதை தவிர்க்கின்றேன்).

    ஒரு நாள் ராமாவரம் தோட்டத்திலிலுந்து புறப்பட்ட #எம்ஜிஆரின் கார், அடையாறு பாலம் தாண்டினதும் உள்ள சத்யா ஸ்டுடியோ அருகே வந்து கொண்டிருந்தபோது, சட்டென்று வாகனத்தை நிறத்தச் சொல்கிறார். உடனிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

    ரோட்டோரமா ஒரு ஆள் சாய்ந்து கிடக்கிறார். நம் ------மாதிரி தெரிகிறது. போய் அவரா என்று பாருங்கள் என்கிறார். இறங்கி ஓடிச்சென்ற பாதுகாப்பு அதிகாரி, திரும்ப வந்து, ‘அது அவர்தான் ஐயா’ என்கிறார்.

    அப்படியா, தூக்கி வண்டியில் போடுங்கள் என்கிறார்.

    அதன்படி அவரைத் தூக்கி பின்னால் வந்த பாதுகாப்பு வாகனத்தில் கிடத்திக் கொள்கிறார்கள். அவர் மிதமீறிய குடியால் அவர் மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.

    உடனிருந்தவர்களுக்கு ஒரு அச்சம். அவ்வளவுதான், இன்னைக்கு அந்த ஆளுக்கு #ராமாவரம் தோட்டத்தில் பூஜைதான் என்ற நினைப்புக்கு வர, எம்ஜிஆரோ, பத்திரிகையாளரின் வீடு எங்க இருக்கு? அங்க வண்டிய ஓட்டு என்கிறார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. நல்லவேளையாக உடனிருந்த ஒரு உதவியாளருக்கு அவர் குடியிருக்கும் வீடு தெரிந்திருந்தது.

    அதன்படி வாகனம் தியாகராயர் நகர் பகுதி குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. எல்லோருக்கும் ஆச்சரியம். கும்பல் கூடிவிட்டது. செய்தியாளின் வீட்டம்மாவிடம், ‘ஏன் இப்படி இருக்கின்றார். இப்படியே ஏன் விட்டு வைத்துள்ளீர்கள்’ என அக்கறையோடு விசாரிக்கின்றார்.

    அவர்களோ, ‘கல்லீரல் முழுதும் கெட்டுப்போய்விட்டது. இதற்குமேலும் அவரை காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள் என்ற கதையைச் சொல்லி, நாங்களும் முடிந்த மட்டும் எச்சரிக்கையாக பார்த்துக் கொண்டாலும், இப்படி வெளியேறி விடுகின்றார் எனக்கூறி வருந்தினார்கள்.

    நிலையை புரிந்துகொண்ட #எம்ஜிஆர், வாகனத்தை #கல்யாணி #மருத்துவமனைக்கு ஓட்டச் சொன்னார். சென்றதும் அவரை அட்மிட் செய்து சீனியர் #மருத்துவர்களை அழைத்து, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இவருக்கு கொடுக்க வேண்டிய மருத்துவத்தைக் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டு, கோட்டைக்கு கிளம்பிச் சென்றார்.

    அடுத்த சில மணி நேரத்தில், எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி அவர்கள் மருத்துவமனைக்கு வந்து, வேண்டிய பணத்தைக் கட்டினார். சில நாட்களில் அவருக்கான அறுவைச் சிகிச்சையும் நடந்தேறியது. தினமும் #மருத்துவமனைக்கு சென்றுவந்த எம்.ஜி.சக்ரபாணி, கடைசி நாளில் அவரை பொறுப்போடு வண்டியில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பியும் வைத்தார். எல்லாமும் எம்ஜிஅர் சொன்னதின் பேரில் நடந்து கொண்டிருந்தது-

    எம்.ஜி.ஆரும் இடையில் ஓரிரு முறை நேரில் சென்று நலம் விசாரித்துவிட்டு போயிருக்கிறார்.

    ஓரிரு மாதங்கள் ஓடியது. அந்த பத்திரிகையாளரின் #உடல்நிலை நன்றாக தேறி, மீண்டு #நாளேட்டில் எழுதத் தொடங்கினார். மக்களின் நலனுக்காக வேண்டி, எம்ஜிஆரின் சில செயல்களை, திட்டங்களை எல்லாம் முன்பைவிட கடுமையாகவே விமர்சித்து எழுதி வந்தார்.

    #கோட்டையில் எப்போதாவது நேரெதிர் பார்த்துக்கொண்டால், அவரை சிரித்தபடி நலன் விசாரிப்பார் எம்ஜிஆ. பத்திரிகையாளரும் சிரித்தபடி பதிலளிப்பார். அவ்வளவுதான். மற்றபடி எந்த #சமரசமும் இருக்காது.

    தொடக்கத்தில் முழுக்கைச் சட்டையை நன்றாக சுருட்டி மேலேற்றி விட்டுக்கொண்டிருந்த பழக்கத்தில் இருந்த பத்திரிகையாளர், (அப்போது அது ஒரு பேஷன்) மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு முழுக்கை சட்டையோடவே இருப்பார். மடித்து சுருட்டிக் கொள்வதுமில்லை. பேச்சிலும், செயலிலும் ஒரு நிதானம் மிக்கவராக இருந்தார்.

    காலம் ஓடியது.

    ஒரு நாள் அந்த பத்திரிகையாளர் இறந்து போகிறார். இறுதி சடங்கிற்காக அவரது சட்டையை கழட்டும்போதுதான் அவரது இடக்கையை பார்க்கிறார்கள்.

    ‘இது எம்ஜிஆர் கொடுத்த உயிர்’ என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. பார்த்தவர்களுக்கு வார்த்தைகள் எழவில்லை.

    எம்.ஜி.ஆர். அவர்களுடன் இருந்த ‘#தென்னகம்’ மு.கோ. வசந்தன் அண்ணன் அவர்கள் இதை சொன்னபோது உடைந்து அழுதுவிட்டார். நானும்தான்.

    மனிதர்கள் எப்படியெல்லாம் இருந்துள்ளார்கள்?

    ஒத்த ரூபாய்க்கு உதவி செய்துவிட்டு, பத்து ரூபாய் கொடுத்து விளம்பரம் தேடிக்கொண்டிருந்த தலைவர்கள் மத்தியில்தான், தான் செய்த உதவிகளை சொல்லாமல் வாழ்ந்தார் எம்ஜிஆர்.

    அந்த பத்திரிகையாளருக்கு, இப்படியாக செய்தேன் என்று எம்ஜிஆரும் சொல்லிக் கொண்டதில்லை. அதைச் சொல்லிக்காட்டி, ‘என்னை இப்படியெல்லாம் விமர்சிக்கின்றாயா”? என்று கேட்டதுகூட இல்லை. மருத்துவமனையில் சேர்த்ததோடு அந்த சம்பவத்தை மறந்து போனார் எம்ஜிஆர். சிலருக்கு மட்டுமே அது தெரிந்திருந்தது. அவ்வளவுதான்!

    அந்த பத்திரிகையாளரும், எம்ஜிஆர் செய்த உதவிக்காக வேண்டி, தன் #எழுத்தை விற்றுவிடவில்லை. தன் நோக்கத்தில், மக்கள் நலனுக்காக வேண்டி தன் #விமர்சனத்தை சமரசம் இன்றியே எதிர்த்து எழுதி வந்தார்.

    இப்படியும் வாழ்ந்திருக்கிறார்கள்.

    குறிப்பு- நான் #குமுதத்தில் எழுதியது. சில காரணங்களுக்காக பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி சம்பவம் உண்மை........ Thanks Enkalai van...

  7. #3006
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தேவை #என்பதே #இல்லை

    வாத்தியாரோட பக்தர்கள் பெரும்பாலும் ஏழை எளியவர்களாகவும், மீதமுள்ளவர்கள் நடுத்தர வர்க்கத்தினராகவும் தான் இருக்கிறார்கள்...

    ஏன்? அவர்களால் வாழ்வில் முன்னேற முடியாதா? எம்ஜிஆர் பக்தர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை...?????

    எம்ஜிஆர் பக்தர்கள் போதுமென்ற மனம் படைத்தவர்கள். அவர்களுக்கு சதா வாத்தியாரை நினைப்பதைத் தவிர வேறு எண்ணமில்லை.

    வாத்தியாரின் முகத்தை திரையில் பார்த்தால் போதும், சோறும் தண்ணீரும் அவர்களுக்குத் தேவைப்படாது... குறைந்த சம்பளத்தில் தான் சேமிக்கும் சிறிது பணத்தைக்கூட வாத்தியாருக்காகத் தான் செலவு செய்வார்கள்.

    வாத்தியாரின் பக்தர்கள் பணத்தால் வசதி படைத்தவர்களல்ல...
    மனத்தால் வசதி படைத்தவர்கள்...

    ஏங்க! நம்ம பொண்ணு படிப்புக்கு, திருமணத்திற்கு இன்னும் சேர்த்து வைக்காமல் இருக்கீங்களே? உங்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? ....!

    #எல்லாத்தையும் #எங்க #வாத்தியார் #பாத்துப்பாரு...

    இதுதான் எம்ஜிஆர் பக்தனின் பதில்...
    எவ்வளவு அசாத்திய நம்பிக்கை பாருங்க...

    வாத்தியாரின் பக்தர்களுக்குத் தேவை என்பதே இருப்பதில்லை............. Thanks.........

  8. #3007
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் மாண்பு
    'எங்க வீட்டுப் பிள்ளை' நூறாவது நாள் வெற்றி விழா மதுரை சென்ட்ரல் சினிமா தியேட்டரில் நடந்தது.

    அந்த விழாவிற்கு எம்.ஜி.ஆர். மேடையை நோக்கி வந்து கொண்டிருந்த போது ஒரு ஏழை சிறுவன் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு ஆர்வத்தில் எம்.ஜி.
    ஆரின் கையை பிடித்து விட்டான்.

    எம்.ஜி.ஆரின் பாதுகாப்புக்காக பக்கத்தில் நின்று கொண்டு இருந்த ஸ்டண்ட் நடிகர் ஒருவர் அந்த பையனின் கையைத் தட்டி விட்டார். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர். அவரை முறைத்து பார்த்து விட்டு, அந்த சிறுவனை அருகில் அழைத்து அவனுடைய கையைப் பிடித்து குலுக்கி விட்டு திரும்பினார்.

    அந்த பையன் தன் கையை பார்த்த போது அதில் ஒரு நூறு ரூபாய் நோட்டு இருந்தது.சுற்றியிருந்த மக்களுக்கு எம்.ஜி.ஆர் அப்பையனின் கையை குலுக்கியது மட்டும் தான் தெரிந்தது.அருகில் நின்று கொண்டு இருந்த எங்களைப் போன்றவர்களுக்குத்தான் எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை புரிந்தது.
    ('இரு பெரும் திலகங்கள்' என்ற நூலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் வி.என்.சிதம்பரம் எழுதியது.)......... Thanks.........

  9. #3008
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் பாடல்களும் கலைஞருடனான பிரிவும்! ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100

    முன் குறிப்பு- இந்த கட்டுரை திருமதி ராஜேஸ்வரி செல்லையா அவர்கள் விகடன்.காம் வலைதள பக்கத்தில் எழுதியது. அவர்களுக்கு என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

    எம்.ஜி.ஆர் பாடல்களில் பிரசார உத்தி :

    MGR

    எம்.ஜி.ஆர் சிறு வயது முதல் நாடக மேடையில் நடித்துப் பழகியவர் என்பதால் பாடல்களின் செல்வாக்கு குறித்து அவர் நன்கு அறிந்திருந்தார்.

    பாடல்கள் சுதந்திரப் போராட்டத்துக்குப் பயன்பட்ட விதத்தை அறிந்திருந்ததால் தேச விடுதலை போல சமூக விடுதலைக்கும் அவை நல்ல பிரசார உத்தியாகத் திகழும் என்று அவர் நம்பினார். இத்துடன் தன் சுய விளம்பரத்துக்கும் திரை இசைப் பாடல்களைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். இந்த முன்னறிவுடன் அவர் பாடல் ஆசிரியர்களிடம் பாடல்களைக் கேட்டு எழுதி வாங்கினார். அவருக்கு உடன்பாடில்லாத எந்த ஒரு விஷயமும் அவர் பாடலில் இல்லாதபடி பார்த்துக்கொண்டார்.

    எவ்வளவு பெரிய கவிஞராக இருந்தாலும் தன் விருப்பத்துக்கேற்றபடி பாடல் அமையாதவரை அவர் விடுவதேயில்லை. படித்தவர்களிடமும் பண்புள்ளவர்களிடமும் தன் பாதையில் குறுக்கிடாதவரை அவர் எப்போதும் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தார். இருப்பினும் காதல் பாடல்களில் அவர்களின் விருப்பத்துக்கு இடம் அளித்த எம்.ஜி.ஆர், தத்துவப் பாடல் என்று ரசிகர்களாலும் வேறு பலராலும் அழைக்கப்படும் தனிப் பாடல்களில் அவர் பாடல் ஆசிரியரோடு எந்த சமரசமும் செய்துகொள்வதில்லை

    எம்.ஜி.ஆரின் திரைப்பட வரலாறு 1936-ல் தொடங்கி 1977-ல் நிறைவு பெற்றது.

    இந்த முப்பது ஆண்டுகளில் 1954-ல் வெளியான 'மலைக்கள்ளன்' படத்துக்குப் பிறகே அவர் படப்பாடல்கள் தீவிரமாக சமூக அக்கறை உள்ளனவாகப் படைக்கப்பட்டன. இந்த 22 வருட காலத்தில் எம்.ஜி.ஆர் படங்களில் ஒரிரு தனிப் பாடலாவது அவரது பிரசார பீரங்கியாகச் செயல்பட்டது.

    எம்.ஜி.ஆர் படப் பாடல்கள் குறித்து சான்றுகள் காட்டி எழுதினால் முந்நூறு பக்க அளவில் புத்தகமே எழுதலாம் என்றாலும், அதன் விரிவு அஞ்சி 'அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறேன் அரங்க மாநகருளானே' என்பது போல இப்போதைக்குச் சுருக்கமாக சிலவற்றை மட்டும் காண்போம்.


    MGR-Karunanedhi

    மூன்று காலகட்டம் - மூன்று கருத்தாக்கம் :

    எம்.ஜி.ஆர் திமுக கட்சிக்கு வந்த பிறகு அவர் பாடல்களில் மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கினார். அப்போது காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்ததால் அந்த ஆட்சி அக்கட்சி பெரியவர்கள் சிலரின் ஏமாற்றுத்தனம் போன்றவற்றை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் கடமை தனக்கிருப்பதாகக் கூறிய எம்.ஜி.ஆர் தன் தனிப்பாடல்களில் இந்த கருத்துக்களைப் புகுத்தினார்.

    இவை சமூகச் சாடல், சமூக அக்கறை, இளைய சமுதாயத்தின் நியாயமான கோபம் கொப்பளிக்கும் பாடல்களாக அமைந்தன. பின்பு திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடப்பது போன்ற பாடல்களையும், திமுக-வின் வரலாறு மற்றும் பெருமை பேசும் பாடல்களையும் தனிப்பாடல்களாக அமைத்தார். இவை மகிழ்ச்சி ததும்பும் பாடல்களாக ஒலித்தன.

    அடுத்து அதிமுக கட்சி உருவானதும் மீண்டும் பாடலின் கருத்தாக்கம் மாற்றம் அடைந்தது. திமுக அரசு ஊழல் மலிந்த அரசு என்னும் கருத்து வலுவாக பரப்பப்பட்டது. 'புதிய சமூகம் தோன்ற வேண்டும்', 'புதிய ஆட்சி மலர வேண்டும்', 'ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என்ற கருத்துக்கள் எம்.ஜி.ஆரின் படங்களிலும் பாடல்களிலும் மையக் கருத்தாக மாறின.

    ஆரம்பகட்ட காங்கிரஸ் எதிர்ப்பு பாடல்கள் :

    1952-ல் திமுக அரசியலில் தலைதூக்கிய காலத்தில் அக்கட்சியில் எஸ்.எஸ்.ஆர், எம்.கே.ராதா, நாரயணசாமி போன்ற நடிகர்கள் இருந்தாலும், எம்.ஜி.ஆர் அளவுக்குக் கட்சியால் தானும் தன்னால் கட்சியும் வளர உழைத்தவர்கள் எவரும் இல்லை.

    கட்சிக்காக உழைத்த கலைஞர்கள் பலர் இருந்தனர். அவர்கள் மேடையில் பிரகாசித்த அளவுக்குத் திரையில் ஜொலிக்கவில்லை. அந்த வருடம்தான் நாராயணசாமி மூலமாக எம்.ஜி.ஆருக்கு அண்ணாவின் அறிமுகம் கிடைத்தது. அவரது கருத்துரைகளுக்கு இளைஞர் கூட்டம் மயங்கிக் கிடந்ததை அறிந்த எம்.ஜி.ஆர், திமுக-வுக்கு தமிழக அரசியலில் நல்ல வாய்ப்பு இருப்பதை யூகித்தார்.

    இந்த முன்னறிவு அவரை திமுக-வின் பக்கம் ஈர்த்தது. காங்கிரஸ் கட்சியின் வேகமும் விவேகமும் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நமத்துவிட்டதைப்போல எம்.ஜி.ஆருக்குத் தோன்றியது. எனவே இளைஞர்களைக் கவர்ந்த திமுக-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

    இக்கட்சிக்குத் தன் பங்களிப்பாக தன் படங்களிலும் பாடல்களிலும் கட்சி கருத்துகளைப் புகுத்தினார். 1954-ல் கலைஞர் கருணாநிதி கதை, வசனம் எழுதி பட்ஷி ராஜா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த 'மலைக்கள்ளன்' படத்தில் நேரடியாக தனது காங்கிரஸ் தாக்குதலைத் தொடங்கினார்.

    டி.எம்.சவுந்தரராஜன் குரலில் 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' என்ற பாடலைச் சேர்த்தார். இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அடுத்த ஆண்டு வெளிவந்த 'குலேபகாவலி' படத்தில் 'நியாயமில்லே இது நியாயமில்லே...' என்ற பாடலும், 1956-ல் வெளிவந்த 'மதுரை வீர'னில் 'ஏய்ச்சு பிழைக்கும் பிழைப்பே சரிதானா எண்ணிப்பாருங்க நீங்க எண்ணிப்பாருங்க...’ என்ற பாடலும் எம்.ஜி.ஆர் ரசிகர்களின் எண்ணிக்கையை ஏற்றிவிட்டது.

    அதே ஆண்டு வெளிவந்த 'தாய்க்குப்பின் தாரம்' படத்தில் அவர் பாடிய 'மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே...' பாடல் இளைஞர்களைடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

    களத்தில் இறங்கிய எம்.ஜி.ஆர் :

    திமுககாரர் என்ற முத்திரை கிடைத்ததில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் அடுத்த ஆண்டு [1957] முதல் திமுக-வின் தேர்தல் பணிகளுக்கு நிதி உதவி அளிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அண்ணாவே 'தம்பி நீ தரும் தொகையைவிட உன் முகம் எனக்கு ஆயிரக்கணக்கான ஓட்டுகளை அள்ளித்தரும். எனவே தேர்தல் பிரசாரத்துக்கு வா' என்று எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தார்.

    இந்த நல்வாய்ப்புக்காகக் காத்திருந்த எம்.ஜி.ஆர், தேர்தல் நிதி அளிப்பதுடன் களத்தில் இறங்கிப் பொது மக்களை, குறிப்பாகத் தன் ரசிகர்களை நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு இவருக்கு தன்னைப் பற்றி மக்கள் நேரடியாக அறிந்துகொள்ள உதவியாக இருந்தது. தன் இமேஜை உயர்த்திக்கொள்ள இந்தத் தேர்தல் மேடைகளையும், பயணத்தையும் மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.

    திமுக அரசியல் கூட்டங்களுக்குப் பெண்கள் அதிகமாக வருவதில்லை என்ற நிலை மாறியது. எம்.ஜி.ஆரைப் பார்க்க பெண்கள் கூட்டம் அலைமோதியது. அவர் வரும் வழியெங்கும் பெண்கள் தம் குழந்தைகளுடன் மணிக்கணக்கில் கால்கடுக்க நின்றனர். இந்த நல்வாய்ப்பு இவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத்தந்தது. செல்லும் இடங்களில் எல்லாம் எம்.ஜி.ஆர் படப்பாடல்கள் ஒலித்தன

    எம்.ஜி.ஆர் திமுகவின் முக்கிய பிரசார பீரங்கியாக மாறினார். சிறந்த மேடை பேச்சாளர்களும், மற்ற திரைக்கலைஞர்களும் செல்வாக்கை இழக்கத் தொடங்கினர். எம்.ஜி.ஆர் அண்ணாவிடம் பெற்ற செல்வாக்கைப்போல, கலைஞரையும் தன் அன்புப் பிடிக்குள் வைத்துக்கொண்டார்.

    ஆனால், அதே சமயம் 'மலைக்கள்ள'னோடு அவரைத் தன் படங்களுக்கு வசனம் எழுத வைப்பதையும் நிறுத்திக்கொண்டார். ஆருர்தாஸ், சொர்ணம் [கலைஞரின் மைத்துனர்], ஆர்.கே.சண்முகம் போன்றோரையும், பிற்காலத்தில் கா.காளிமுத்து, நாஞ்சில் மனோகரன், கே.எஸ் கோபாலகிருஷ்ணன் ஆகியோரையும் தமக்கு வசனம் எழுத அமர்த்திக்கொண்டார்.

    தன் நன்மையைக் கருதியும், கட்சியின் நன்மையைக் கருதியும் அண்ணாவின் மறைவுக்கு பிறகு கலைஞரை முதலமைச்சராக முன்மொழிந்தார்.

    MGR-Karunanedhi

    எம்.ஜி.ஆர் திரையுலகிலும் அரசியலிலும் எது செய்தாலும் அதில் ஒரு பொதுநலமும், சுயநலமும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். இதில் அவரது கொடைத்தன்மைக்கு விலக்கு அளிக்கலாம். ஏனென்றால் கொடுப்பதற்கு அவர் தேடிக்கொண்ட விளம்பரத்தைவிட அவர் கொடுத்தது ஏராளம். இதை அவர் விளம்பரத்துக்காக மட்டும் செய்யவில்லை.

    அவருக்கு இயல்பாகவே அந்தக் குணம் அமைந்திருந்தது. முகம் தெரியாத நபர்கள் பலருக்கு அவர் மாதந்தோறும் வருடக்கணக்கில் மணி ஆர்டரில் பணம் அனுப்பியிருக்கிறார். துன்பப்படுவோரைப் பார்த்தால் அவர்கள் கேட்காமலேயே கொடுத்து உதவும் குணம் எம்.ஜி.ஆருக்கு இயற்கையிலேயே அமைந்திருந்தது. உதவி என்று நாடி வந்தவர் எதிரியாக இருந்தாலும், அவருக்கு உதவும் குணம் அவருக்கு இருந்தது.

    இதுபோக 'தர்மம் தலைகாக்கும்' என்று படத்தலைப்பும் பாடலும் அமைத்து அதில் நடித்தார். குண்டு சுட்டு பிழைத்தபோதும், சிறுநீரகம் மாற்றிப் பிழைத்தபோதும், இந்தப்பாடல் அவர் தர்மம் அவரது தலையை காத்ததை ஊருக்குப் பறை சாற்றியது. எம்.ஜி.ஆரின் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை ஆரத்தி எடுக்கும் பெண்களுக்குப் பளபளப்பான நோட்டுகளைக் காணிக்கையாகக் கொடுத்தார். எம்.ஜி.ஆரை மனதாரப் பாராட்டிய பெண்கள், அரசியலுக்கு வரவும் இச்செயல் ஒருவகையில் காரணமாக இருந்தது.

    ‘நாடோடி மன்னன்' படப்பாடல்கள் :

    1958-ல் எம்.ஜி.ஆர் சொந்தப்படம் எடுத்தார். திமுக கட்சிக் கொடி ஏந்திய ஆணும் பெண்ணும் நிற்பது போல சின்னம் அமைத்தார். 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' என்று பெயரிட்டார். முதல் பாடலே கொள்கை விளக்கப் பாடலாகவே ஒலித்தது. இன்றைக்கும் இது மதிமுக வின் கடவுள் வணக்க பாடலாக அங்கீகரிக்கபட்டுள்ளது.

    'செந்தமிழே வணக்கம் நம் திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும் செந்தமிழே வணக்கம்’ என்ற இப்பாடல் வைகோவின் மனங்கவர்ந்த பாடலும் ஆகும். அடுத்து இப்பாடலில் இன்னொரு பாடலை அமைத்தார். இப்பாடலுக்கு பெரிய காட்சியமைப்பு சிறப்பு கிடையாது.

    எம்.ஜி.ஆரும் அமைச்சர் ஒருவரும் ஆளுக்கொரு குதிரையில் அமர்ந்து போவார்கள். அப்போது எம்ஜிஆர் 'உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா’ என்று கேட்பார். அமைச்சர் பதில் எதுவும் சொல்லமாட்டார். எம்.ஜி.ஆர் பதிலும் சொல்வார்.

    ‘உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா' என்பதுதான் அந்தப் பதில். இப்படிக் கேள்வி பதிலாக அமைந்த இப்பாடலுக்கு அமைச்சர் தலை அசைத்தபடி வருவார்.

    இதுதவிர 'காடுவெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்' என பானுமதி கேட்க எம்.ஜி.ஆர் 'காடு வெளையட்டும் பெண்ணே நமக்கு காலம் இருக்குது பின்னே' என்று பதில் அளிக்கும் பாடல் 'திமுக ஆட்சி வரட்டும்' என்ற நம்பிக்கையூட்டும் முன்னறிவிப்புப் பாடலாக அமைந்தது.

    இந்தப்பாடலில் தான் ‘நாளை போடப்போறேன் சட்டம் மிக நன்மை புரிந்திடும் சட்டம் நாடு நலம் பெறும் திட்டம்’ என்ற வரிகள் வரும். இந்த வரிகளே அவர் முதலமைச்சரானபோது அனைவரும் பாராட்டிய தீர்க்கதரிசன வரிகள் ஆகும். இந்தப்படல்கள் எம்.ஜி.ஆர் மீது மக்களுக்கு அதிக அன்பையும் நம்பிக்கையையும் ஊட்டின.

    எம்.ஜி.ஆர்

    தீவிர காங்கிரஸ் எதிர்ப்பு :

    1960-க்குப் பிறகு திமுக அரசு ஏற்கும் வரை எம்.ஜி.ஆர் படங்களில் காங்கிரஸ் எதிர்ப்புப் பாடல்கள் வலுப்பெற்றன.

    1963-ல் வெளிவந்த 'தாய் சொல்லைத் தட்டாதே' படத்தில் 'போயும் போயும் மனிதருக்கு இந்தப் புத்தியைக் கொடுத்தானே... அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் சேர்த்து பூமியைக் கெடுத்தானே’ என்ற பாடல், 'படகோட்டி (1964)'யில் 'கொடுத்ததெல்லாம் கொடுத்தான்' பாடலில் 'இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லயென்பார் - மடிநிறைய பொருளிருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும்' என்ற வரிகள்

    'ஆசைமுகம் (1965)' படத்தில் 'எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய குணமிருக்கு' என்ற பாடலும் 'பணம் படைத்தவன் (1965)' படத்தில் 'கண்போன போக்கிலே கால் போகலாமா' பாட்டில் 'மனிதன் போன பாதையை மறந்தும் போகலாமா' என்ற வரி வரும்போது காந்திஜி படத்தைக் காட்டி காங்கிரஸார் காந்திய வழியைப் பின்பற்றத் தவறிவிட்டனர் என்பதை சிம்பாலிக்காகக் காட்டியிருந்தார்.

    அதே வருடம் வெளிவந்த 'எங்க வீட்டுப்பிள்ளை' படத்தில் கறுப்புச் சட்டை அணிந்து எம்.ஜி.ஆர் பாடும் 'நான் ஆணையிட்டால்' பாட்டில் 'இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்' என்று காங்கிரஸ்காரர்களைக் குறித்து பாடியிருப்பார். இந்தப் பாடல் வரிகள் சென்சாரில் அனுமதி பெறாததால் 'கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்' என்று மாற்றப்பட்டது.

    ஆனாலும், இலங்கை வானொலியில் பழைய வெர்ஷனைக் கேட்க முடிந்தது. பின்பு அங்கும் விடுதலை புலி அமைப்பு தடை செய்யப்பட்டபோது இந்தப்பாட்டு ஒலிபரப்புவது நிறுத்தப்பட்டது.

    1966-ல் வெளிவந்த 'நாடோடி' படத்தில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த, ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போன பாடல் ஒன்று. கண்தெரியாமல் பிச்சையெடுக்கும் சரோஜாதேவி பாடும் விரசமான பாடலை மாற்றி ‘நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு - பாடும்பொழுதெல்லாம் அதையே பாடு' என்ற பாடலைச் சொல்லித்தந்து பாடச்செய்வார்.

    அதே ஆண்டு வெளியான 'நான் ஆணையிட்டால்' படத்தில் 'தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை குருடர்கள் கண்ணை திறந்துவைப்பேன் - தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்' பாடல் திருடர்களைத் திருத்தும் பாடலாக அமைந்தாலும், சமூகத்தில் அது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பொதுமக்கள் பணத்தைக் கொள்ளயடிக்கும் திருடர்களைத்தான் குறித்தது. பாடல் கருத்து திரைக்கதைக்கு ஏற்றதாகவும் அதேசமயம் பொது அரசியலுக்கு ஏற்றதாகவும் அமைத்துத் தரச்சொல்லி அதைத் தன் படங்களில் பயன்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

    1967-ல் வெளிவந்த 'அரசகட்டளை' படம் காங்கிரஸ் காலத்தில் தயாரிக்கப்பட்டதால், 'ஆடி வா...' பாடலில் 'முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ அதன் முறையற்ற செயலை நம் வரவேற்பதோ' என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். இதில் முயல் கூட்டம் என்பது காங்கிரஸையும் சிங்கம் என்பது திமுகவையும் குறித்தது.

    திமுக புகழ் பாடும் பாடல்கள் :

    1967-ல் அண்ணா அரசு பொறுப்பேற்றதும் எம்.ஜி.ஆரின் படப்பாடல்களின் உள்ளடக்கமும் மாறியது. அண்ணா அவர்கள் போலீஸ் என்ற பெயரைக் காவல் துறை என்று மாற்றினார். எம்.ஜி.ஆர் 'காவல்காரன்' எனப் படம் எடுத்தார். அது எம்.ஜி.ஆரின் கணக்குப்பிள்ளை ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்.

    இவருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம். ஜெயலலிதா கொஞ்சம் ஷார்ப்பாக இருந்தது அவரைச் சுற்றியிருந்த சிலருக்கு பிடிக்கவில்லை. ஆனால் எம்.ஜி.ஆருக்கோ ஜெயலலிதாவின் படிப்பும் சுறுசுறுப்பும் துணிச்சலாகத் தன் கருத்தை எடுத்துரைக்கும் பாங்கும் மிகவும் பிடித்துப்போயிற்று.

    ஜெயலலிதாவை காவல்காரன்' படத்தில் வரும் 'ங்கொப்புறாண சத்தியமா நான்' பாடலில் ‘என் இல்லம் புகுந்தாலும் உள்ளம் கவர்ந்தாலும் நான்தான் காவலடி’ என்ற வரிகள் அர்த்தத்துடன் எழுதப்பட்டது. தன் உள்ளம் கவர்ந்த கதாநாயகியான ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் கடைசி வரை காவல் காத்தார். ஜெயலலிதா மீறி நடந்த போதும்கூட எம்.ஜி.ஆர் அவர் பாதுகாப்பில் ஒரு கண் வைத்திருந்தார்.

    எம்.ஜி.ஆர் சுடப்பட்ட பின்பு வந்த முதல் படம் என்பதால் இதில் இடம்பெற்ற 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது' என்ற பாடல் எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்டது போல இருந்தது. ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

    'காவல்காரன்' என்பது திமுக அரசை சிம்பாலிக்காகக் குறித்தது. எம்.ஜி.ஆரும் அதில் காவல்துறையை சேர்ந்த ரகசிய போலீஸாக நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் .

    வெற்றிவிழாவில் எம்.ஜி.ஆர் உயரத்துக்கு வெள்ளித் தகட்டினால் அவர் உருவம் செய்து அவருக்கு வழங்கினர். அது இன்றும் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் இருக்கிறது. இதில் அரசை சாடியோ கண்டித்தோ எந்தப்பாடலும் இல்லை.

    மாறாக மூன்று டூயட் பாட்டு. மேலும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை சீர்திருத்தத் திருமணம் செய்வதாகவும், குழந்தை பிறப்பதாகவும் அவர்களின் கனவு கற்பனைகளாகப் படம் எடுக்கப்பட்டிருந்தது. அப்போது சீர்திருத்தத் திருமணத்திற்கு அண்ணாவின் அரசினால் சட்ட அங்கீகாரம் கிடைத்த சமயம். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதுபோல படம் எடுக்கப்பட்டிருந்தது.

    1968-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் நூறாவது படமான 'ஒளிவிளக்கு' படத்தில் எம்.ஜி.ஆர் தன் தீவிர ரசிகர்களான குறவர்களை போல மாறுவேடம் அணிந்து ஜெயலலிதாவுடன் ஒரு பாட்டு பாடுவார்.

    அந்தப்பாட்டில் திமுக-வின் படியரிசி திட்டம் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை பாடலில் வெளிப்பட்டது. திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்பதாகவும் இப்பாட்டும், காட்சியும், நடனமும் அமைக்கப்பட்டிருந்தது.

    திமுக மற்றும் எம்.ஜி.ஆர் புகழ் பாடல்கள் :

    சமூகச் சாடல் குறைந்ததால் எம்.ஜி.ஆரை மையப்படுத்திய பாடல்கள் அவர் படத்தில் தோன்றின. 'நான் யார் நான் யார் நீ யார்' மற்றும் 'என்னைத் தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா', 'நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை' போன்ற திமுகவின் பிரதிபலிப்பாக எம்.ஜி.ஆரைக் காட்டும் பாடல்கள் எழுதப்பட்டன.

    அதாவது எம்.ஜி.ஆர் என்றால் திமுக, திமுக என்றால் எம்.ஜி.ஆர் என்ற பிம்பத்தை அவர் உருவாக்கினார். இது திமுக மூத்த உறுப்பினர்களுக்குச் சற்று காட்டமாக இருந்தாலும், இளைஞர்கள் எம்.ஜி.ஆர் மீது வெறியாக இருந்ததாலும், எம்.ஜி.ஆரின் செல்வாக்கு உச்சத்தில் இருந்ததாலும் எவரும் ஒன்றும் சொல்ல இயலவில்லை.

    கலைஞர் முதல்வர் ஆக்கப்பட்டார் :

    1969-ன் தொடக்கத்திலேயே அண்ணா காலமாகிவிட்டார். கலைஞர் எம்.ஜி.ஆரை அடிக்கடி சந்திக்கிறார். கட்சியின் அடுத்த தலைவர் குறித்து இருவரும் விவாதிக்கின்றனர். 'தம்பீ வா... தலைமை ஏற்க வா...' என்று அண்ணாவால் அன்போடு அழைக்கப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் தன் ஆதரவாளர்களோடு 'தான் தன் அடுத்த முதல்வர்' என்ற நம்பிக்கையில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்.

    இச்சூழலில் எம்.ஜி.ஆர் தன் சத்யா ஸ்டூடியோவில் கட்சியின் முக்கிய பிரமுகர்களைக் கூட்டி காங்கிரஸின் செல்வாக்கு இன்னும் முற்றிலுமாக ஒடுக்கப்படவில்லை, இந்நிலையில் படித்தவரைவிட காங்கிரஸை சமாளிக்கக் கூடியவரே கட்சிக்கும் ஆட்சிக்கும் பொறுப்பேற்பது நல்லது என்று சொல்லி அனைவரையும் கலைஞருக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் சம்மதிக்க வைத்து கலைஞருக்கு பிடித்தமான வால்நட் கேக்கை அவர் டிரைவரை விட்டு வாங்கிவரச் சொல்லி அவர் வாயில் ஊட்டினார்.

    ஏமாற்றிய ஆட்சி :

    1969-ல் கலைஞர் முதல்வரானதும், எம்.ஜி.ஆர் நினைத்தபடி ஆட்சி நடக்கவில்லை. திமுகவினர் தறிகெட்டுத் திரிகின்றனர். ஊழலும் வன்முறையும் எம்.ஜி.ஆரை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவர் இதை எதிர்பார்க்கவில்லை. கலைஞரும் எதையும் கண்டிக்கவில்லை. உள்ளூர் தாதாக்கள் கட்சிப் பொறுப்பேற்று கட்டிட ஒப்பந்ததாரர்கள் ஆகின்றனர்.

    பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. கலைஞரின் ஆட்சி அவர் நினைத்ததற்கு மாறாக இருப்பதைக் கண்ட எம்.ஜி.ஆர் அவசரப்படாமல் அமைதியாக ஒரு காரியம் செய்கிறார். அப்போது தமிழ்த் திரையுலகின் உச்சத்தில் அவர் கொடி கட்டி பறக்கிறார். அவரிடம் ஜெயலலிதா முழு செல்வாக்கு பெற்றிருக்கிறார். ஆழம் பார்க்க நினைக்கும் போதெல்லாம் எம்.ஜி.ஆர் அதை மற்றவர் காசில் பார்ப்பது கிடையாது. தன் பணத்தை போட்டு சொந்தப் படம் எடுக்கிறார்.

    அந்தப்பட்த்தில் ஒர் கொடுங்கோலனைக் காட்டுகிறார். தாயை தாய்நாடாகவும் அதை ஒரு கொடுங்கோலனின் அடிமைப்பிடியில் இருந்து மீட்பதாகவும் கதை உருவாக்கிப் படமாக எடுக்கிறார். அந்தப் படம் 'அடிமைப்பெண்' என்ற பெயரில் வெளிவந்து வெற்றிவிழா கொண்டாடியது.

    ஏமாற்றாதே ஏமாறாதே :

    'அடிமைப்பெண்' படத்தில் மீண்டும் அரசை எதிர்க்கும் பாடல் காட்சிகளை அமைக்கிறார். கொடுங்கோலனுக்கு எதிராக ஒரு க்ளைமாக்ஸ் பாடல் ‘உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது உன் செயலை பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது’ பாடல் ஹிட் ஆனது.

    படத்தின் நடுவில் கலைஞருக்கு நேரடியாக எச்சரிக்கை செய்வது போல ‘ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே' என்ற இந்தப்பாடலும் ஹிட் ஆனது. தன் செல்வாக்கு அவருக்கு தைரியத்தை அளித்தது இந்தப் படத்தின் வெற்றி அவருடைய எண்ணத்துக்கு பச்சைக் கொடி காட்டினாலும் அவர் அவசரப்படவில்லை.

    இதனை அடுத்து, தான் அரசியலுக்கு வரலாமா என்பதை அறிய நேரடியாக ஒரு படம் எடுத்து மக்களின் நாடி பிடித்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். அதிக செலவில்லாமல் 'அடிமைப்பெண்' படம் போன்ற ஆடம்பரங்கள் இல்லாமல் பத்தே நாட்களில் விஜயா வாஹினி முதலாளி நாகிரெட்டியிடம் சொல்லி அவரது தயாரிப்பில் 'நம் நாடு' படத்தில் நடித்து முடிக்கிறார். அந்தப் படத்தின் வெற்றி இவருக்கு அரசியலில் ஈடுபடலாம் என்ற முழு நம்பிக்கையைக் கொடுத்தது.

    நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் :

    'நம் நாடு' படமும் 'அடிமைப்பெண்' போல எம்.ஜி.ஆர் வில்லன்களைத் தோற்கடிக்க ஜெயலலிதாவே அவருக்கு முற்றிலும் உதவுவது போன்ற கதையம்சம் உள்ள படம். இதில் அவர் கோடீஸ்வரராக மாறு வேடத்தில் ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் - துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நான் நான் நான்’ என்று பாடி ஆடும் பாடல் அவரது மனத் திட்டத்தை எடுத்துரைத்தது. இதில் வில்லன்களைக் காங்கிரஸ்காரர்கள் போலவும் உயர்ந்த பக்திமான் போலவும் காட்டியிருந்ததால், திமுகவினருக்கோ சாதாரண மக்களுக்கோ சந்தேகம் வரவில்லை.

    இதற்கிடையே பல வெற்றிப்படங்கள் வந்தன. 'விவசாயி', 'மாட்டுக்கார வேலன்', 'குடியிருந்த கோயில்', 'தேடிவந்த மாப்பிள்ளை' எனப் பல படங்கள் வந்து எம்.ஜி.ஆரை உச்சத்துக்குக் கொண்டு போயின. எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுப்பவர்கள் எல்லாம் நல்ல லாபம் பெறுகின்றனறே, நாம் ஏன் சும்மா இருக்க வேண்டும் என்று கலைஞரும் அவரது மருமகன் முரசொலி மாறனும் எம்.ஜி.ஆரை அணுகி தாங்கள் கடனில் தவிப்பதாகவும், ஒரு படம் இலவசமாக நடித்துக் கொடுத்தால் கடனில் இருந்து கரையேறிவிடுவோம் என்றனர்.

    எம்.ஜி.ஆர் எதிரி என்றாலும் உதவி என்று கேட்டுவிட்டால் செய்துவிடுவார் அல்லவா... அவர், தான் மட்டுமல்லாது ஜெயலலிதாவும் பணம் வாங்காமல் நடித்துக் கொடுப்பார் என்றார். 'எங்கள் தங்கம்' உருவாயிற்று. எம்.ஜி.ஆர் மற்றும் திமுக புகழ் பாடும் பாடலாக 'நான் செத்துப் பிழச்சவன்டா எமனைப் பார்த்து சிரிச்சவன்டா' என்ற பாடலில் கலைஞரை பற்றிய வரிகளாக ‘ஓடும் ரயிலை இடை மறிச்சு அதன் பாதையில் தனது தலை வச்சு - உயிரையும் துரும்பா தான் மதிச்சு - தமிழ் பெயரை காத்த கூட்டம் இது’ என்பவை அமைந்தன. இன்னொரு டூயட் பாடலுக்கு, 'நான் அளவோடு ரசிப்பவன்' என்ற வரியை எழுதிவிட்டு கவிஞர் வாலி அடுத்த வரிக்குத் தடுமாறிய போது கலைஞரோ, 'எதையும் அளவின்றிக் கொடுப்பவன்' என்று அடியெடுத்துக் கொடுத்தாராம்.

    பாரத் விருது பெற்ற எம்.ஜி.ஆர் :

    எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே, இருவரும் பிரிந்துவிட்டனர். உடல்நலத்தைப் பேணுவதில் சிறிதும் அக்கறை இல்லாத ஜெயலலிதா ரொம்பவும் குண்டாகிவிட்டார். 'பட்டிக்காட்டுப் பொன்னையா', 'அன்னமிட்ட கை' படங்களில் எம்.ஜி.ஆருக்குப் பெரியம்மா போலத் தோற்றமளித்தார்.

    மேலும் எம்.ஜி.ஆரிடம் இருந்து இவரைப் பிரித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த கும்பல் இந்நேரம் பார்த்து மஞ்சுளாவை அறிமுகம் செய்தது. சத்யா மூவிஸ் முலமாக 'ரிக்க்ஷாக்காரன்' படம் ஆர்.எம்.வீ அவர்களால் எடுக்கப்பட்டது. இதில் பணக்காரர்களின் அக்கிரமங்களுக்குத் துணை போகும் நீதித்துறையை எம்.ஜி.ஆர் சாடியிருந்தார். இதில் ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு' என்ற பாடலில் 'நாணல் போல வளைவதுதான் சட்டம் ஆகுமா - அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா’ என்று கேட்டிருந்தார்.

    எம்.ஜி.ஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகரான 'பாரத்' விருது கிடைத்தது. பின்பு அது கலைஞர் சிபாரிசால் கிடைத்தது என்று திமுகவினர் குற்றஞ்சாட்டியதும், எம்.ஜி.ஆர் அதைத் திருப்பிக் கொடுத்தார். இத்துடன் எம்.ஜி.ஆர் - கலைஞர் நட்பு முடிவுக்கு வந்தது. அடுத்த ஆண்டே (1971) கலைஞர் தன் மகன் மு.க.முத்துவை எம்.ஜி.ஆருக்கு அமைந்தது போன்ற கதைகள் கேட்டு, தோற்றம், பாட்டு, டான்ஸ் எம்.ஜி.ஆர் போலவே உருமாற்றி திரைக்குக் கொண்டுவந்தார். ஆனால் வெற்றி பெறவில்லை.

    'சினிமாவுக்கு அதிகம் பேர் போகிறார்களே அவர்களை மடை மாற்றுவோம்' என்று கருதி அரசுக்கு வருமான தரக்கூடிய மதுக்கடைகளைத் திறந்தார்.

    எம்.ஜி.ஆரையும் கட்சியை விட்டு நீக்கினார். அதற்குப் பிறகான தனது படங்களில் எம்.ஜி.ஆர் நேரடியாக திமுக எதிர்ப்பை வெளியிட்டார். அதை அடுத்த கட்டுரையில் காண்போம்........ Courtesy by: mr.Vaithianathan.........

  10. #3009
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    That day report from 'The Times of India' news paper:

    As the optics of crowds became synonymous with the popularity of the leader, it became essential to keep up the show. Now money is key to bringing in people. The audience is, therefore 'assembled' by luring men, women and college students with incentives like money, food and liquor.

    This was not the case in 1970s and 1980s, when announcements used to be made on 'cone' speakers about '#Puratchi #Thalaivar' #MGR being on his way and crowds would instantly gather and wait patiently for a glimpse of the matinee idol. MGR would finally arrive well past midnight. But it didn't matter to the crowd which would go into raptures on seeing MGR's convoy........ Thanks...

  11. #3010
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Why Edappadi Palaniswami can’t claim MGR’s legacy

    As late as in the early 2000s, I’ve met men and women in the hinterlands of Tamil Nadu who said MGR was alive. Maybe some of them were lying, but all of them wanted to believe what they said.

    Sunday’s grand finale of the MGR centenary celebrations in Chennai marked the end of a year-long attempt by chief minister Edappadi K Palaniswami to claim the legacy of a man whose charisma no other politician in the state could match even more than 30 years after his death on the Christmas eve of 1987.

    Has it helped EPS gain popularity? Yes.
    Has it helped him claim MGR’s legacy?
    No.

    Political legacy is mostly perception, but no amount of public relations or publicity can ensure legacy. It comes with association or action. In the case of J Jayalalithaa, it happened mostly because of the former (by being his heroine) and partly because of the latter (through welfare measures). EPS has neither-and he knows it.

    MGR was a phenomenon of his own making. A heart in the right place helped, but he also systematically worked to be the king of hearts. It wasn’t just M Karunanidhi’s scripts that helped MGR become the hero that he was; he chose and played his roles to be the epitome of goodness. He never smoked or drank on screen, he was gentle with his women, he was fair.

    And when the time came, he so effortlessly moved from the silver screen to the rough and tumble of Tamil politics, and became Ponmanachemmal (the one with the golden heart). Such was his image of Puratchi Thalaivar (revolutionary leader), the school noon meal scheme introduced by Kamaraj (some argue such a scheme was introduced in Madras during the British rule) was attributed to MGR.

    It wasn’t easy for Jayalalithaa to inherit the political legacy of MGR. She fought a bitter battle with MGR’s widow Janaki, first to stay near MGR’s hearse during his funeral procession and later to take over the AIADMK mantle. Once she achieved it she strenuously worked on it, rolling out welfare measures. Always in the background were images of her with her mentor, prominent among them the one showing MGR handing over a silver sceptre to her in 1982 when she became the propaganda secretary.

    Taking MGR’s welfare measures to a new level, Jayalalithaa gave away free bicycles and gold rings, goats and computers. At one point, Jayalalithaa, who so fiercely wanted to leave her original mark in politics, appeared to be trying to grow out of the image of being MGR’s successor. She catalysed a new industrial climate that attracted investments in manufacturing. But when she finally left her footprint, it was still in her mentor’s shadow.

    The Jayalalithaa model that combined freebies with overall development was a natural progression from the MGR times. If he wants to take forward that progress, EPS should focus more on ensuring ease of doing business while remaining true to long-term commitments on health and education.

    Jayalalithaa had the knack of keeping corruption and business on parallel tracks, with neither derailing the other. Today corruption stands in the way of business. If EPS shows the courage to minimise, if not remove, corruption, he may be remembered as someone who tried, not just survived.

    Forget about winning hearts. MGR' legacy is alive though he is physically dead.

    forwarded message

    DISCLAIMER : Views expressed above are the author's own.
    AUTHOR
    Arun Ram Resident Editor
    Times of India,Tamilnadu....... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •