Page 292 of 402 FirstFirst ... 192242282290291292293294302342392 ... LastLast
Results 2,911 to 2,920 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2911
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கையெழுத்தே போடத்தெரியாதவர்கள்,படிக்காதவர்கள்,அவர்களுடைய குழந்தைகள்தான் அந்தக் குடும்பத்தில் படித்தவர்கள்... அதுவுமில்லாமல் வசதிக்குறைவானவர்களாகவும் இருக்க வாய்ப்பு உண்டு,அதை மனதில் கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவினார்,இது தனது முதல்வர் கோட்டாவில் இருக்கும் சீட்டுகளுக்குத் தலைவர் கடைப்பிடித்த சூத்திரம்......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2912
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் நடிக*மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    06/04/20* *- மெகா 24 டிவி - இரவு 10 மணி - தாயை காத்த தனயன்*

    07/04/20* -ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் -காலை 10 மணி -ரகசிய போலீஸ் 115

    * * * * * * * *-சன் லைப் - காலை 11 மணி* - பல்லாண்டு வாழ்க*

    08/04/20- ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - தர்மம் தலை காக்கும்*

    * * * * * * * * *மெகா 24 டிவி* - காலை 8.30 மணி -தர்மம் தலை காக்கும்*

    * * * * * * * * * சன்* லைப்* * * - காலை 11 மணி* - தேடி வந்த மாப்பிள்ளை*

    * * * * * * * * * புதுயுகம்* * - இரவு* 7மணி* - வேட்டைக்காரன்*

    * * * * * * * * ஷாலினி டிவி - இரவு 8 மணி - ஆயிரத்தில் ஒருவன்*

    09/04/20 - சன் லைப் -* * காலை 11 மணி - நீதிக்கு தலை வணங்கு*

  4. #2913
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நெல்லை மணி என்பவரின் பதிவில் இருந்து ...

    1977 இல் மக்கள் துணையுடன் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்று முதல்வர் ஆகிறார் நம் தலைவர்.

    அந்த நேரத்தில் அவர் வீட்டில் தினம் தினம் வாழ்த்து சொல்ல அனைத்து தரப்பினரும் குவிந்து வந்தனர்.

    ஒரு நாள் காலை வந்தவர்களில் நடிகர் வீ.கே.ராமசாமியும் இருந்தார்...அவர் வாழ்த்து சொல்லி புறப்படும் போது அண்ணே இருங்க என் கூட வாங்க ஒரு வேலை இருக்கு என்று சொல்ல.

    வீ.கே.ஆர்...திகைத்து நம்மகிட்ட என்ன வேலை முதல்வர் ஆகிவிட்டார் இனி அவருக்கு தானே வேலை என்று யோசிக்க.

    கோட்டைக்கு புறப்பட்ட முதல்வர் தன் காரில் வீ.கே.ஆர்... அவர்களையும் ஏற்றி கொண்டு வழி நெடுக மக்களை கை கூப்பி வணங்கி கொண்டு கார் கோட்டையை அடைகிறது.

    அங்கு கார் நிற்கும் இடத்தில் தயார் ஆக இருந்த இருவரிடமும் வீ.கே.ஆர் ஐ காட்டி இவரை கோட்டை முழுவதும் நன்கு சுற்றி காட்டிவிட்டு என் அறைக்கு அழைத்து வாருங்கள் என்று சொல்ல.

    அதன் படி ஒரு மணி நேரம் கழித்து நடிகர் வீ.கே.ஆர்...திரும்பி வந்து அடா அடா என்ன ஒரு இடம் என்று வெடி சிரிப்புடன் சொல்ல.

    அது சரி ஏன் இந்த திடீர் ஏற்பாடு என்று கேட்க....

    தலைவர் சிரித்து கொண்டே அண்ணே நீங்க 1948 இல் வால்டாஸ் சாலையில் நீங்கள் நடிக்கும் நாடகங்கள் போடுவீர்கள்... நான் தினமும் வந்து பார்ப்பேன்.

    ஒரு பொங்கல் அன்று நீங்கள் நாடகத்துக்கு வரவில்லை... மறுநாள் நேற்று எங்கே போனீர்கள் என்று நான் கேட்க.

    அதற்கு நீங்கள் தினமும் நாடகம் என்னென்று வெறுத்து அப்பிடியே காலாற பீச் பக்கம் போய் நடந்தே சுற்றி பார்த்து கொண்டு வீட்டை பற்றி சிந்தனை செய்து கொண்டு அப்படியே நடந்து கோட்டை பக்கம் போய் உள்ளே போகலாம் என்று நினைத்த போது.

    அட இப்ப நியாபகம் வந்து விட்டது...என்னை உள்ளே விடாமல் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் துரத்திவிட அதை நான் உங்களிடம் சொன்னேனே அது.

    ஆமாம் அண்ணே அன்று உங்கள் ஆசை இன்று நீங்கள் காலையில் வீட்டுக்கு வந்த உடன் நினைவுக்கு வந்தது.
    சரி இன்றைக்கு உங்கள் ஆசையை ராஜ மரியாதை உடன் நிறைவேற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்துவிட்டது என்று சொல்ல.

    கண்ணீர் மல்கிய கண்கள் உடன் கரம் கூப்பி விடை பெற்ற வீ கே.ஆர்...தலைவர் முதல்வர் அனுப்பிய காரில் வீடு திரும்பும் போது என்ன மனுஷன் இவரு....ஒவ்வொருவர் ஆசையையும் எப்ப நிறைவேற்ற முடியும் என்று எதிர்பார்த்து காத்து இருப்பார் போல எனக்கே மறந்து போச்சு என்று வியந்து சிந்தித்து திரும்ப.

    அதுதான் எம்ஜியார்.
    பல ஆண்டுகள் கழித்தாலும் ஒருவர் சொல்வது அது சாமானியன் அல்லது புகழ் பெற்றவர்கள் ஆக இருந்தாலும் அவர்கள் எண்ணங்களை அதை நிறைவேற்ற துடிக்கும் ஈடு இணையற்ற ஒரு மாமனிதர் நம் தலைவர்.......... Thanks.........

  5. #2914
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை ராஜாவில் "தேர்த்திருவிழா" திரை படம் வெளியான அதே நாளில் தான் (23-02-1968) இருதயாவில் "பணமா பாசமா" வெளியானது...!
    இதே கால கட்டத்தில் பொங்கலுக்கு வெளி வந்த ''ரகசிய போலிஸ் 115'' கர்னாடிக்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது...! ராயலில் திருமால் பெருமை வெளியானது...!

    மார்ச் 15 ல் "குடியிருந்த கோயில்" வந்ததால் ராஜாவில் வசூலுடன் ஓடிக்கொண்டிருந்த "தேர்திருவிழா"
    நிறுத்தப்பட்டது...!......... Thanks mr.Shajahan...

  6. #2915
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆர் #எங்களின் #குலதெய்வம்..

    #நாமக்கல் #கவிஞர் வெ. ராமலிங்கம் அவர்களின் #பேரன் திரு.H.நடராசன் தமது நினைவுகளைப் பகிர்கிறார்...!

    #மலைக்கள்ளன்...
    மக்கள்திலகத்தின் திரைவாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம்...

    நாமக்கல் கவிஞரின் கதை கிட்டத்தட்ட ஆறு மொழிகளில் வெளியாகி அனைத்திலும் வசூலை அள்ளிக்குவித்த திரைப்படம்...

    இதன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பட்சிராஜா ஸ்டூடியோ திரு ஸ்ரீராமுலு நாயுடு அவர்கள்... எனது தாத்தாவிற்கு கொடுப்பதாக உறுதியளித்த தொகையைத் தராமல் ஏமாற்றிவிட்டதால், வருத்தமடைந்து தயாரிப்பாளர் மீது வக்கீல் நோட்டீசு அனுப்புகிறார்..!

    சில நாட்கள் கடந்து, சென்னை லாயிட்ஸ் ரோடு பகுதியில் வசிக்கும் தாத்தாவின் இல்லத்திற்கு ஒரு கார் வந்து நிற்கிறது...!

    அதில் எம்ஜிஆர் ...! எனது தாத்தாவை நோக்கி விறுவிறுவென்று வந்தவர் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து, 'தயாரிப்பாளர் தங்களை ஏமாற்றியது குறித்து வருந்தவேண்டாம்... எனக்கு மலைக்கள்ளன் பேரும் புகழையும் ஈட்டித்தந்தது...அதனால் மறுக்காமல், இதை மறுக்காமல் வாங்கிக்கொள்ளவும் என்று சொல்லி நாங்கள் யாருமே எதிர்பாராத ஒரு பெரும்தொகையை எனது தாத்தாவிடம் அளிக்கிறார்... இப்படி ஒரு கொடைவள்ளல் யாருமுண்டா?

    எனது தாத்தா வசித்த வீடு ஒண்டுக்குடித்தனம்... இதையறிந்த எம்ஜிஆர் அரசு சார்பில் ராயப்பேட்டையில் ஒரு வீடு வாங்கி அளித்து கௌரவித்தார்...! இந்தக்காலத்தில் இப்படியுமா???

    மற்றுமோர் முக்கிய நினைவு...1965 ல் நடந்த AVM இல்லத்திருமணத்திற்கு என் தாத்தாவும் நானும் சென்றிருந்தோம்... தாத்தா சரியாக நடக்கமுடியாத காரணத்தினால் செல்லப்பேரனான என்னை வெளியிடங்களுக்கு அழைத்துச்செல்வார், எனது தோளில் கையைப் போட்டு தான் நடப்பார்...

    அந்த திருமணத்தில் எம்ஜிஆர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்...எனது தாத்தாவைப் பார்த்ததும் அப்படியே எழுந்தவர், கையைக் கழுவிட்டு பலர் முன்னிலையில் நெடுஞ்சாண்கிடையாக தாத்தா காலில் விழுந்தார்... நெகிழ்ந்து போன தாத்தாவின் ஜிப்பாவில் பணக்கட்டை யாரும் அறியாவண்ணம் போட்டார்...!

    எம்ஜிஆர் மற்றவர்களுக்கு வேண்டுமானால் நடிகர்...ஆனால் எங்களுக்கு கடவுள்...!

    நாமக்கல் கவிஞரின் பேரன் தனது உற்ற நண்பராகிய என் அண்ணன் சுந்தர்ராஜன் அவர்களுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் ஆடியோ...!

    இந்த அரிய தகவலை எனக்கு அனுப்பிய #அண்ணன் #சுந்தர்ராஜன் அவர்களுக்கு என் அனந்தகோடி அநேக நமஸ்காரங்கள் 🙏🏻🙏🏻🙏🏻......... Thanks.........

  7. #2916
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *���� 1965-ல் வெளியான ‘எங்கள் வீட்டுப்பிள்ளை' தமிழ்நாட்டுப் பிள்ளையாக தலைவரை ஆக்கியது... ������*

    *➡ சென்னை பிராட்வே, மேகலா, மதுரை - சென்ட்ரல், கோவை ராயல், தஞ்சை யாகப்பா ஆகிய ஐந்து ஊர்களிலும் 175 நாட்கள் ஓடியது இந்தப் படம்... ��❤��*

    *������ சென்னை காசினோவில் 211 நாட்கள் ஓடியது. திருச்சி ஜூபிடரில் 236 நாட்கள் ஓடியது... ✨⭐��*

    *������ ‘‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் ஏழைகள் வேதனைப் படமாட்டார்'’ என்ற கனவு நாயகனாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை கொண்டு போய் நிறுத்தியது இந்தப் படம்... ♥♥♥*......... Thanks.........

  8. #2917
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே கொள்கை பிடிப்புடன் இருந்தார். தனக்கென்று ஒரு பாணி, அதற்கென்று ஒரு கொள்கை அதற்கென்று ஒரு தலைவன் என்று வாழ்ந்தார். யாருக்காகவும் தன் கொள்கையை
    விட்டுக் கொடுக்க மாட்டார். இவர் தனக்கெதிராக செயல்படுகிறார் என்று தெரிந்தாலும் அவரை அழிக்க நினைக்க மாட்டார். மேலும் அவர்களுக்கு பல உதவிகளை செய்து அவர்களை தன் வசப்படுத்தி விடுவார்.

    ஒரு சிலரைப்போல 40ஆண்டு கால நட்பு என்று சொல்லி சமயம் கிடைக்கின்ற போது எதிரியை அழிப்பதற்கு ஆலகால விஷத்தை கூட பயன்படுத்த தயங்காதவர் கிடையாது. ஆனால் நாட்டில் நல்லவர்களும் நயவஞ்சகர்களும் கலந்தே இருப்பதால் மக்கள் திலகத்தின் மீது வெறுப்புடன் இருப்பவர்கள் இன்று வரை இருப்பதை நாம் பார்க்கிறோம்.
    என்ன இவருக்கு இவ்வளவு செல்வாக்கு, புகழ் என்று மனம் வெதும்பி திரிபவர்கள் நமது களத்திலேயே புகுந்து சினிமா பைத்தியம்,நாட்டுக்கு இது முக்கியமா, என்றெல்லாம் கேள்வி எழுப்புவது வயத்தெரிச்சல் இன்னும் குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.

    பூ மார்க்கெட்டில் பூ விற்காமல் கருவாட்டையா விற்பார்கள்.மக்கள் திலகத்தின் களத்தில் நுழைந்து கொண்டு நாட்டுக்கு இது முக்கியமா என கேட்டால் என்ன சொல்வது?!. உனக்கு தேவையான களம் வேறிடத்தில் இருந்தால் அங்கு போய் கேட்க வேண்டியதுதானே? நாங்கள் யாரும் வர மாட்டோம். நரி இடமா போனால் என்ன வலமா போனால் என்ன. நம்மை கடிக்காமல் போனால் சரி என்று பேசாமல் நாங்க பாட்டுக்கு இருப்போம். மேலும் ஒருவர் தமிழ் கலாச்சாரத்தை கெடுத்தது எம்ஜிஆரும் K R விஜயா வும் என்று கமெண்ட் கொடுத்த அவர் பெயரை பார்த்தவுடன் தான் தெரிகிறது அவர் பெயரிலேயே அழுகிய வெங்காய வாடை வீசுவதை உணர முடிந்தது. அவர்கள் தலைவர். தமிழ் கலாச்சாரத்தை மட்டுமல்ல தனது சிஷ்யர்களின் மானத்தையும் கப்பலேற்றியவர் என்று. தனது கொள்கையை விட பொருந்தா திருமணமே பெரிது, உபதேசம் ஊருக்கு தங்களுக்கல்ல என்று வாழ்ந்ததனால் அவர்கள் மீது வீசிய அழுகிய வெங்காய வாடையில் கூட இருந்த கட்சி முக்கியஸ்தர்கள் அலறிப்புடைத்து. அதை கழுவ வேறு பாதையில் திரும்பி நல்ல கதி அடைந்ததை நாடறியும்.

    இன்னொரு சிவாஜி ரசிகர் அடிமைப்பெண் வெளியாகி 6 மாதங்கள் எம்ஜிஆர் படமே வெளியாகாததால் படம் வெள்ளி விழா கொண்டாடியது என்று குற்றம் சுமத்தியிருந்தார். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்வேன். அப்படி பார்த்தால் தேவர் பிலிம்ஸின் காதல் வாகனம் 193 நாட்கள் ஓடி சாதனை செய்திருக்க வேண்டுமே. காதல் வாகனம் வெளியாகி 193 நாட்கள் மக்கள் திலகத்தின் வேறு எந்த படமும் வெளியாகவில்லை. இதையெல்லாம் என்னவென்று அழைப்பது என்று தெரியவில்லை.
    படத்தில் விஷயம் இல்லை யென்றால் ஒவ்வொரு பிறந்தநாளையும் கலரில் எடுத்து ஓடாத படத்துடன் சேர்த்தாலும் மேலும் ஒன்றிரண்டு வாரங்கள் கை கொடுக்குமே தவிர படத்தை சூப்பர்ஹிட் ஆக்க முடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் பேசுகின்ற பேச்சா இது. மேலும் தங்களுடைய படங்கள் சொந்த தியேட்டரிலும், வாடகை தியேட்டரையும் தவிர வேறு எங்கும் வெற்றி கொடி நாட்டி ஓட்ட இயலாது என்று தெரிந்தவர்களின் வயித்தெரிச்சலை வாங்க வேண்டாம்
    என்று இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். நல்ல கமெண்ட்ஸை கொடுங்கள், அனைவரும் நலம் பெற்று வாழ புரட்சி தலைவரின் நாமம் வாழ்க என்று கூறி மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்க விரும்பும் K.சங்கர்.......... Thanks........

  9. #2918
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஆமாம் சார், நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. சிலரது முகநூல், whatapp தளங்களில் வயிதெரிச்சல், முக்கல், முனகல், வேறு யாரும் வந்து அங்கு பதில் பதிவு போட முடியாது என நினைத்து அவர்களுக்குள்ளேயே ஆறுதலாக, சாதகமாக பதிவுகள் போட்டு கொண்டு இப்படியும் ஒரு அருவெறுக்க தனமான சாந்தியடைகிறார்கள் 'மூடர் கூடங்கள்'...

  10. #2919
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *�� உலகம் சுற்றும் வாலிபன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்...*

    *�� புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் எம்.ஜி.ஆரும், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர். அதிக பொருட்செலவில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது... ₹₹₹ ������*

    *இயக்கம் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்*
    *தயாரிப்பு - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஆர்.எம்.வீரப்பன்*
    *கதை - சொர்ணம்*
    *இசை - சு.விசுவநாதன்*
    *நடிப்பு - எம்.ஜி.ஆர், நாகேஷ், லதா, சந்திரலேகா, மெட்டா ரூன்கிரேட் (தாய் நடிகை), மஞ்சுளா, எஸ். ஏ. அசோகன், இரா.சு.மனோகர், எம். என். நம்பியார்*
    *ஒளிப்பதிவுவி -ராமமூர்த்தி*
    *படத்தொகுப்பு - எம். உமாநாத்*
    *கலையகம் - எம்ஜிஆர் பிச்சர்ஸ் லிமிடட்விநியோகம்*
    *வெளியீடு - 11 மே 1973*
    *ஓட்டம் - 178 நிமிடங்கள்*
    *நீளம் - 4305 மீட்டர்*
    *மொத்த வருவாய் - ₹4.2 கோடி*

    *உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவரும் காலத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் திமுகவினை விட்டு விலகி, அதிமுக என்ற புதுக் கட்சியை தொடங்கியிருந்தார்...*

    *அதனால் ஆளும் கட்சியாக இருந்த திமுக தரப்பு உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவருவதை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டது...*

    *திரைப்படத்தின் விளம்பரத்திற்கு பிரதானமாக சுவரொட்டிகளை மட்டுமே நம்பியிருந்த காலத்தில் சுவரொட்டிகளின் மீதான வரியை தமிழக அரசு ஏற்றியது...*

    *நிதி நெருக்கடி காரணமாக சுவரொட்டிகள் விளம்பரத்தினை எம்.ஜி.ஆர் தவிர்த்தார்...*

    *இருப்பினும், மெகா ஹிட் படமாக அமைந்தது... ������������*......... Thanks.........

  11. #2920
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *எங்க வீட்டு பிள்ளையின் பக்தர்களுக்கு உதவி புரிய கோரிக்கை. எங்களை காப்பாற்ற யாரும் இல்லையா என்று கூக்குரல் வரும் போது தலைவர் நான் இருக்கின்றேன் என்று திரையில் எழுச்சியோடு வருவார். அந்த வாழும் தெய்வத்திற்காக எத்தனையோ உருவத்தில் பல வழிமுறைகளில் தன் உழைப்பையும் தன் குடும்ப எல்லைக்கு அப்பாற்பட்டு நன்கொடைகளையும் வாரிவழங்கிய தினகூலிகளாகிய சாதாரண பக்தன் இன்று சில வாரங்களாக வருமானம் இன்றி தவிக்கின்றார்கள்.அவர்களுக்கு உதவி புரிய ஒரு அமைப்பும் இல்லையே என்பதில் இருந்து நாம் எந்த கோணத்தில் உள்ளோம் என்பதை உணரும் பொழுது வருத்தமாக உள்ளது.தியேட்டரில் விழா கொண்டாட, அரங்கத்தில் விழா கொண்டாட தலைவர் புகழ் பரப்ப யார் யார் கைகள் நீண்டு வந்தனவோ அந்த 90% கைகள் வருமானம் இன்றி பூட்டப்பட்டு இருக்கின்றது.அடுத்து தலைவருக்காக எதையும் செய்ய துணியும் 10% வசதி படைத்த கைகள் எங்கே என்று தேடும் போது கண்கள் வலிக்கின்றது. அதே சமயத்தில் குறிப்பாக இந்த நேரத்திலும் இந்த மௌனம் ஏன் என்பது மட்டும் புரிகிறது.சரியான உள்கட்டமைப்பு இல்லை.ஒற்றுமை இல்லை.யார் கொடுத்து யார் பெயர் வாங்குவது என்று மனதிற்குள் நெருடல்.யார் யாருக்கு கொடுப்பது யார் சொல்லி கொடுப்பது யார் தலைவர் யார் ஒருங்கிணைப்பாளர் யார் செயளலாளர் யார் பொருளாளர் என்று நமக்குள் எழுப்பப்படும் இவை அனைத்தும் அந்த வசதி படைத்த 10% கைகளை கட்டி போட்டு இருக்கின்றது சரிதானே. ஆகவே இந்த சமயத்தில் யார் யார் தாராளமாக உதவுகிறார்களோ அவர்களை ஒருசில பதவிகளில் ஒளிரவைக்க கூடிய விரைவில் எல்லோரும் சேர்ந்து முடிவெடுப்போம். அதற்கு முன் நமக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வசதி படைத்த பண்பாளரை ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்மூலமாக எல்லா நன்கொடைகளையும் வழங்கி அந்த நபர் மூலமாக தனி தனி குழுக்களாக பிரித்து அவரவர் மூலமாக மற்ற உண்மையான தலைவர் பக்தர்கள் இடத்தில் சேர்த்து சுனாமி அல்ல கண்ணுக்கே தெரியாத வைரஸ் வந்து வாழ்வாதாரத்தை சிதைத்தாலும் எங்களை அணைக்க பல கைகள் இருக்கின்றது என்று மகிழ வாட்ஸ்அப் பேஸ்புக் தொலைபேசி மூலமாக ஒவ்வொரு குழுவின் பொறுப்பாளர்களும் ஏற்பாடு செய்யுங்கள்.இதைவிட்டால் பொன்னான நேரம் அமையாது.இவன் ஷிவபெருமாள். கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை செயலாளர்.......... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •