-
3rd April 2020, 07:09 PM
#2871
Junior Member
Diamond Hubber
-
3rd April 2020 07:09 PM
# ADS
Circuit advertisement
-
3rd April 2020, 07:12 PM
#2872
Junior Member
Diamond Hubber
அண்ணாவுக்கும் எம்ஜிஆருக்கும் உள்ள ஒற்றுமைகள் சில...
1. அண்ணா எம்ஜிஆர் இருவரும் பிறப்பில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள்.
2. நோயின் காரணமாக இருவரும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றவர்கள்.
3. அண்ணா இறக்கும் முன் என் எஸ் கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார். எம்ஜிஆர் இறக்கும் முன் ஜவஹர்லால் நேரு சிலையைதிறந்து வைத்தார்.
4. இருவரும் முதலமை*ச்ச*ராக இருக்கும் போதே மறைந்தவர்கள்.
5. இருவரது உடலையும் அருகருகே மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
6. அண்ணா எம்ஜிஆரை எனது இதயக்கனி என்றார் .எம்ஜிஆர் அண்ணாவை எனது இதயதெய்வம் என்றார்.
7. இருவரும் மக்களை ஈர்ப்பதில் தனித்துவம் பெற்றனர். அதில் வெற்றியும் பெற்றனர்.
8. இருவரும் நள்ளிரவிலே மறைந்தனர்.
9. அண்ணா என்பது மூன்று எழுத்து தமிழில் எம்ஜிஆர் என்பது மூன்று எழுத்து ஆங்கிலத்தில்.
10. திமுகவை தோற்றுவித்தவர் அண்ணா அதிமுகவை தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர்.,......... Thanks.........
-
3rd April 2020, 08:41 PM
#2873
Junior Member
Diamond Hubber
*🍁🌺🍂 மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1969 ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அடிமைப்பெண்’. 🌾🌸🌹*
*🍀🌷 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தனர்... 🌸💐*
*➡இவர்களுடன் அசோகன், ஆர்.எஸ்.மனோகர், சோ, பண்டரிபாய், ராஜஸ்ரீ, ஜோதிலட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு, கே.சங்கர் இயக்கி இருந்தார். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸூம், இயக்குநர் கே.சங்கரும் அப்போதிருந்த தொழில்நுட்பத்தைக் கொண்டே, பிரம்மாண்டமான முறையில் படத்தை உருவாக்கியிருந்தனர்...🌷💐💐🍁*
*🌹🍃🍁 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், அடிமைப்பெண் படத்திற்கு முன், பல படங்களில் ராஜா வேடம் ஏற்று நடித்திருந்தாலும், இந்த படத்தில் தான் முதன்முறையாக ஐரோப்பிய பாணியில் உடை அணிந்து நடித்தார். பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் மூலம் தான் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார்...🌷🌸💐*
*🌺💐🌸 கே.வி.மகாதேவன், ஜெயலலிதாவை ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலை பாடவைத்தார். ஜெயலலிதா பாடிய முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது...💚💓💜*
*🔥🔥🔥இந்த படத்தில் டி.எம்.எஸ் பாடிய ‘தாய் இல்லாமல் நானில்லை’ என்ற பாடல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது...♥️♥️♥️*
*🌟⭐✨ திருப்புமுனைகள் நிறைந்த திரைக்கதையுடனும் உருவான இந்த படம் பிரம்மாண்டமான வெற்றிப் படமாக அமைந்து, வெள்ளி விழா கொண்டாடியது.... 💐🌸🌷*
-
3rd April 2020, 09:11 PM
#2874
Junior Member
Platinum Hubber
தனியார் தொலைக்காட்சிகளில் வாத்தியார் எம்.ஜி.ஆர். படங்கள்*ஒளிபரப்பு*
-------------------------------------------------------------------------------------------------------------------------
29/03/20* *மெகா 24 டிவி - இரவு 8.30* மணி -* காதல் வாகனம்*
31/03/20* - சன் லைப் - காலை 11 மணி - கொடுத்து வைத்தவள்*
01/04/20* - சன் லைப்* - காலை 11 மணி - ஒரு தாய் மக்கள்*
* * * * * * * * -புதுயுகம்* *- இரவு 7 மணி - அரச கட்டளை*
02/4/20* *- மெகா 24 டிவி - காலை 8.30 மணி - குடும்ப தலைவன்*
02/04/20* -சன் லைப்* - காலை 11 மணி - நவரத்தினம்*
03/04/20* - முரசு டிவி* - காலை 11 மணி - பெற்றால்தான் பிள்ளையா*
* * * * * * * * * முரசு டிவி* - இரவு* 7 மணி* *-* பெற்றால்தான் பிள்ளையா*
04/04/20* * சன் லைப்* - காலை 11 மணி* - தெய்வத்தாய்*
* * * * * * * * * முரசு டிவி* - பிற்பகல் 2 மணி _ தொழிலாளி*
-
4th April 2020, 08:10 AM
#2875
Junior Member
Diamond Hubber
* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1969 ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அடிமைப்பெண்’. *
* புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தனர்... *
*➡இவர்களுடன் அசோகன், ஆர்.எஸ்.மனோகர், சோ, பண்டரிபாய், ராஜஸ்ரீ, ஜோதிலட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு, கே.சங்கர் இயக்கி இருந்தார். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸூம், இயக்குநர் கே.சங்கரும் அப்போதிருந்த தொழில்நுட்பத்தைக் கொண்டே, பிரம்மாண்டமான முறையில் படத்தை உருவாக்கியிருந்தனர்...*
* புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், அடிமைப்பெண் படத்திற்கு முன், பல படங்களில் ராஜா வேடம் ஏற்று நடித்திருந்தாலும், இந்த படத்தில் தான் முதன்முறையாக ஐரோப்பிய பாணியில் உடை அணிந்து நடித்தார். பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் மூலம் தான் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார்...*
* கே.வி.மகாதேவன், ஜெயலலிதாவை ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலை பாடவைத்தார். ஜெயலலிதா பாடிய முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது...*
*இந்த படத்தில் டி.எம்.எஸ் பாடிய ‘தாய் இல்லாமல் நானில்லை’ என்ற பாடல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது...♥♥♥*
*⭐✨ திருப்புமுனைகள் நிறைந்த திரைக்கதையுடனும் உருவான இந்த படம் பிரம்மாண்டமான வெற்றிப் படமாக அமைந்து, வெள்ளி விழா கொண்டாடியது.... *............ Thanks.........
-
4th April 2020, 08:16 AM
#2876
Junior Member
Diamond Hubber
தலைவர் நடித்து
வெளிவராதபடங்களின்
தொகுப்பு பார்ப்போம்.
மொத்தம் 30 படங்கள்.
அரசியலில் ஈடுபட்டதாலும்
ஆஸ்பத்திரியில் சில
மாதங்கள் கால் அடிபட்டதும் துப்பாக்கி சூடுபட்டாதலும்
மற்றும் சில காரணங்களால் தடைபட்டது 1.ஸ்ரீதரின் அன்று சிந்திய இரத்தம்.
2.ஸ்ரீதரின் நானும் ஒரு
தொழிலாளி
3.1970ல் இயேசுநாதர்
4. பரமபிதா
5.இன்பநிலா
6.நாடோடியின் மகன்
7.கேரளகன்னி
8.கேப்டன்ராஜ்
9.உன்னைவிட மாட்டேன் இதில் ஒரு சிறப்பு.வாலி எழுதி
இளையராஜா இசை
பாடல்
நான் படிக்கிறேன்
இன்னும் படிக்கிறேன்
உலகமென்னும் பள்ளியிலே
உண்மை என்னும்
கல்வியினை
ஓய்வில்லாமல் படிக்கிறேன்
ஒவ்வொரு நாளும்
படிக்கிறேன்
டி.எம்.எஸ்.பாடியது
தலைவருக்காக.
விவசாய பிரச்சினை தீர்க்கும் படம10.புரட்சிப்பித்தன்
ஜோடி லதா.தங்கை
ஸ்ரீதேவி.
11.தியாகத்தின் வெற்றி
இதில் 20 அம்சதிட்டம்
பற்றி எடுக்கப்பட்டது.
12.இன்பகனவு
இதன் இயக்குனராக எம்ஜிஆர13.சிலம்புக்குகை 1956ல்
14.மலை நாட்டு இளவரசன்
15.சிரிக்கும் சிலை.......... Thanks mr.SR.,
-
4th April 2020, 08:21 AM
#2877
Junior Member
Diamond Hubber
04.04.2020 இன்று தலைவர் நடித்து வெளிவராதபடங்களின் தொகுப்பு பார்ப்போம்
நேற்றைய தொடர்ச்சி.......
16.தேவர் பிலிம்ஸ் தலைவரின் நடிக்க இருந்த படம் மறுபிறவி.
19.ராமண்ணா இயக்கத்தில் பாகன்மகள் என்ற படம்
வளர்ந்து பின் நின்றது.
இதில் ஜோடி தேவிகா.
மேலும் நாகேஷ் எம்.ஆர்.ராதா உண்டு 17.அடுத்து தந்தையும்
மகனும் தேவர் பூஜையோடு நின்றது.
18.எம்ஜிஆர் ரசிக மன்ற
தலைவர் முசிறிபுத்தனும் என்.எஸ்.மணியனும்
1974 ல் மக்கள் என்பக்கம் எனும் படம்
நின்றது.
20.1956ல் ஈ.எம்.சி.கார்பரேஷனில்
குமார தேவன் படம்
பாதியில் நின்றது.
இதில் ஜமுனா ஜோடி
தலைவருக்கு.மற்றும்
கண்ணம்பா பி.எஸ்.வீரப்பா சூர்ய கலா நடித்து பின் நின்றது.
21.1957ல் தலைவர்
கே.ஆர்.ராமசாமி
நடித்த வாழப்பிறந்தவன்.
22.1941ல் இழந்தகாதல்
படம் வெளிவந்தது.அந்த படத்தின் பாட்டுபுத்தகத்தில் கடைசி அட்டையில்
சாயா என்ற படம்
வருகிறது எனவும்
நடிகர் பட்டியலில்
எம்ஜிஆர் முதல்இடத்தில் வந்தது
அதுதான் பாடல் முதல் தடவ 23.மேலும் சமூகமே நான் உனகக்கே சொந்தம்
24.ஊரே உன் உறவு
25.அண்ணா பிறந்த நாடு
26.வெள்ளிக்கிழமை
27. இதுதான் என் பதில்
28.தியாகத்தின் வெற்றி
29.கொடை வள்ளல்.
30.கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ
தற்போது ஐசரிவேலன்
மகன் ஐசரிகணேஷ்
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ
படத்தை அனிமேஷனில் தயாரிக்க உள்ளார்.
வாழ்த்துக்கள். மகிழ்ச்சி.
: 31
எல்லைக்காவலன் படம்
ஆரம்பித்த நிலையில்
நின்றது......... Thanks...
-
4th April 2020, 02:14 PM
#2878
Junior Member
Diamond Hubber
தொண்டனின் குரலை ஓங்கி ஒலிக்கச்செய்வதில் ஒரு புரட்சி !
*தலைவர் எம்ஜிஆர் திமுகவில் இருந்த காலத்தில் தான் ரசிகர் மன்றங்கள் உருவாகின.. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த ரசிகர் மன்றங்கள் தன்னெழுச்சியாக உருவாகி மாபெரும் சக்தியாக உருவெடுத்தன.*
*தமிழகத்திற்கு அடுத்தபடியாக இலங்கையில் அதிக படியான மன்றங்கள் உருவாகின...*
*இந்தியாவில் தமிழ் பேசும் மக்கள் உள்ள மாநிலங்களில் எம்ஜிஆர் மன்றங்கள் பெருமளவில் உருவாகின.*
*அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு புரட்சி நடிகர் எம்ஜிஆரை விட எம்ஜிஆர் மன்றங்களின் வளர்ச்சி பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.*
*அவர் தன் மகன் மு.க.முத்துவை திரைப்படத்துறையில் இறக்கினார்.*
*எம்ஜிஆர் நடிக்கும் படங்களின் கதை அமைப்புகள் கொண்ட கதைகளில் நடிக்க வைத்ததுடன், தலைவர் எம்ஜிஆர் போல தோற்றமளிக்கும் வகையில் சிகை அலங்காரம், நடை உடை பாவனைகளையும் தன் மகன் மு.க.முத்துவுக்கு அமையுமாறு கவனித்து வந்தார் கருணாநிதி அவர்கள்.*
*மு.க.முத்து படங்கள் வெளியானவுடன் திமுகவினரை கொண்டு எம்ஜிஆர் மன்றங்களுக்கு எதிராக மு.க.முத்து மன்றங்களை கருணாநிதி உருவாக்கினார்.*
*தனக்கு எதிராக கருணாநிதி எடுக்கும் செயல்பாடுகளை அறிந்திருந்தும் தன்னம்பிக்கை கொண்ட தலைவர் எம்ஜிஆர் மு.க.முத்துவின் திரையுலக பயணத்திற்கு ஒரு உடன்பிறந்த சகோதரனை போல் பெருந்தன்மையுடன் உதவினார்.*
*தலைவர் எம்ஜிஆரை திமுகவிலிருந்து வெளியேற்றியவுடன் தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்தவர்கள் எம்ஜிஆர் மன்றத்தினர் தான்.*
*சரி விஷயத்திற்கு வருவோம்..*
*அதன் பின்னர் தலைவர் எம்ஜிஆர் கட்சியை தொடங்கினார், ஆட்சியைப் பிடித்தார்.. இதன் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் எம்ஜிஆர் மன்றத்தினர் தான் என்பது உலகறிந்த விஷயமே.*
*ஆட்சிக்கு வந்த பின் நடந்த எம்ஜிஆர் மன்ற கூட்டத்தில் முதலமைச்சர் எம்ஜிஆர் பேசும்போது:-*
*நாம் இப்போது அஇஅதிமுக என்ற கட்சியை ஆரம்பித்து ஆட்சியையும் பிடித்து விட்டோம். இனி அக்கட்சியை மட்டும் வளர்க்கும் பணிகளை மேற்கொள்வோம், எம்ஜிஆர் மன்றங்களை கலைத்து விடலாம் என்று உத்தேசித்துள்ளேன்" என பேசினார்.*
*அப்போது ஆவேசமடைந்த குமரி மாவட்ட முதல் எம்ஜிஆர் மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் எம்ஜிஆரை பார்த்து*
*"தலைவரே அதிமுகவை உருவாக்கியது யார்??" என்று கேட்டார்*
*அதற்கு எம்ஜிஆர் "நான் தான்" என்றார்..*
*அடுத்த கேள்வியாக தமிழ்மகன் உசேன், "எம்ஜிஆர் மன்றத்தை உருவாக்கியது யார்?" என்று எம்ஜிஆரிடம் கேட்டார்*
*அதற்கு எம்ஜிஆர் "நீங்கள் தான்" என்றார்*
*"அதிமுகவை நீங்கள் உருவாக்கலாம் கலைக்கலாம். அதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் அதிகாரமும் உள்ளது.*
*ஆனால் எம்ஜிஆர் மன்றங்களை உருவாக்கியது நாங்கள்.*
*அதை கலைக்க உங்களுக்கு எந்த அதிகாரமோ உரிமையோ இல்லை" என்றார் மறுமுனையில் குமரி மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகி அ.தமிழ்மகன் உசேன்.*
*தலைவர் எம்ஜிஆர் பதிலளிக்க முடியாமல் அமர்ந்து விட்டார்*
*அதனை தொடர்ந்து எழுந்த மதுரை எம்ஜிஆர் மன்ற நிர்வாகி தலைவர் எம்ஜிஆரை பார்த்து*
*"தலைவரே.. எங்கள் மன்றத்தின் உழைப்பு தான் உங்கள் கட்சியும் ஆட்சியும்.. ஆனால் அதை மறந்து உங்கள் அமைச்சர்கள், நாங்கள் பொது பிரச்சனையின் மனு கொடுத்தாலும் அவர்கள் அதை கண்டுக் கொள்வதில்லை" என புகார் கூறினார்.*
*அதற்கு எம்ஜிஆர், "எந்த அமைச்சர் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை? இங்கு அனைத்து அமைச்சர்களும் வந்துள்ளார்கள். பெயரை மட்டும் சொல்லுங்கள் உங்கள் முன்னிலையில் கேட்கிறேன்" என்று பதிலளித்தார்.*
*அதற்கு அந்த மதுரை நிர்வாகி.. "தலைவரே உங்களிடமே பொது பிரச்சனைக்காக மூன்று மனுக்கள் அளித்தேன், நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று எதிர் கேள்வி கேட்டார் தலைவரை நோக்கி.*
*தலைவர் எம்ஜிஆர் பதிலளிக்க முடியாமல் திகைத்துப் போய் நின்றார்.*
*இதெல்லாம் அந்த காலம்..*
*தலைவனை தொண்டன் கேள்வி கேட்க முடிந்தது.*
*தான் நேசிக்கும்.. ரசிக்கும் நடிகரைப் பார்த்து கேள்வி கேட்க முடிந்தது.*
*தலைவர் எம்ஜிஆர் இருந்த வரை எம்ஜிஆர் மன்ற நிர்வாகம் கட்சிக்கு அப்பாற்பட்டு சுதந்திரமாக செயல்பட்டது.*
*கூட்டங்களை மாநாடுகளை எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகளே முடிவு செய்து தலைவருக்கு தெரிவிப்பார்கள்.. அழைப்பார்கள்..*
*எம்ஜிஆர் மன்றத்திற்கு மட்டும் தான் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொதுச் செயலாளர் என்ற பதவி உள்ளது.*
*தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மறைவுக்குப் பின் எம்ஜிஆர் மன்றம் அஇஅதிமுகவின் ஒரு அணியாக மாற்றப்பட்டது.*
*இப்போது எம்ஜிஆர் மன்றத்தின் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொதுச் செயலாளராக தலைவரின் நிழலில் வளர்ந்த மூத்த நிர்வாகி
திரு அ. தமிழ் மகன் உசேன் உள்ளார்.
*காகிதம் ராஜன்*
திருத்தப்பட்ட பகிர்ந்த பதிவு !
படம் : தலைவர் எம்.ஜி.ஆருடன் தொண்டர் தமிழ் மகன் உசேன்.
-#இதயக்கனி எஸ். விஜயன்........... Thanks.........
-
4th April 2020, 02:24 PM
#2879
Junior Member
Diamond Hubber
-
4th April 2020, 05:56 PM
#2880
Junior Member
Diamond Hubber
இதயதெய்வம் பொன்மனச்செம்மல் , கழக நிறுவனர்
புரட்சிதலைவரின் இதயக்கனி ,
" புரட்சித்தலைவியின் ஆங்கில புலமையும் , பன்மொழிபுலமையும்
தமிழகத்திற்கு தெரிந்தால் மட்டும் போதாது ,
இந்தியாவிற்கே , ஏன் உலகத்திற்கே தெரியவேண்டும் என்பதற்காக பாராளுமன்ற ( ராஜ்யசபா ) உறுப்பினராக ,
உருவாக்கியது மட்டுமல்லாமல் , பேரறிஞர் அண்ணா உட்கார்ந்த இருக்கையில் ( 185 ) அமரவைத்து அழகு பார்த்த நாள் இன்று !
M. அமரநாதன் B.Sc, .......... Thanks...
Bookmarks