Page 276 of 402 FirstFirst ... 176226266274275276277278286326376 ... LastLast
Results 2,751 to 2,760 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2751
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த*வெள்ளியன்று*(06/03/20) சென்னை சாலிகிராமம்*, ஸ்டேட்*பேங்க்*காலனியில்* திரைப்பட*பாடலாசிரியர் , கவிஞர் முத்துலிங்கம்*அவர்களின்*மகள் இல்லத்தின் புதுமனை புகுவிழா சிறப்பாக நடைபெற்றது . சென்னை*பெருநகர*முன்னாள் மேயர்*திரு.சைதை*துரைசாமி, தென்சென்னை மேற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் விருகை*என்.ரவி, திரையுலகை*சார்ந்தவர்கள், பத்திரிகை நிருபர்கள், கவிஞர்கள்* மற்றும் முக்கிய*பிரமுகர்கள்*கலந்து*கொண்டு*சிறப்பித்தன ர்.* உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜு, திரு.பாண்டியராஜு, திரு.ஆர். லோகநாதன் (ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்*குழு ) ஆகியோர்*நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர் .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2752
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தென்னக*ஜேம்ஸபாண்டாக நடித்து புரட்சி செய்த*புரட்சி நடிகர்*எம்.ஜி.ஆரின்*"ரகசிய*போலீஸ் 115" டிஜிட்டல் வடிவில், புதிய தொழில்நுட்பத்தில் சென்னை*பெருநகரில்*கீழ்கண்ட அரங்குகளில் 13/03/20 முதல் வெளியீடு .

    சத்யம்*/எஸ்கேப் / உட்லண்ட்ஸ்/பெரம்பூர்* எஸ்*2/பலாஸோ*/தி.நகர் ஏ.ஜி.எஸ்./கே.கே.நகர் -காசி, /வேளச்சேரி*லக்ஸ்*/பி.வி.ஆர்.-எஸ்.கே.எல்.எஸ்./அண்ணா*நகர் -பி.வி.ஆர்.- வி..ஆர். மால்*/ ஈ .சி.ஆர். -பி.வி.ஆர்./* *ஓ.எம்.ஆர்.-ஏ.ஜி.எஸ்./ஐனாக்ஸ்* நேஷனல் /ஓ.எம்.ஆர். ஐனாக்ஸ் மெரினா*

    தினத்தந்தி*-08/03/20

  4. #2753
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அன்புடன் ரசிகர்களை "அன்பே*வா " என*அழைக்கிறார் .

    டிஜிட்டல் வடிவில்*முற்றிலும் புதிய தொழில்நுட்ப்பத்தில்* மார்ச்*27 முதல்*
    புலியை*பார் நடையிலே*என*முழக்கத்துடன்* ஜே.பி. தமிழகத்திற்கு வருகை .

    தினத்தந்தி*-08/03/20

  5. #2754
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினகரன் - வெள்ளி மலர் -06/03/20
    ----------------------------------------------------------
    எம்.ஜி.ஆர். ஸ்பெஷல் - வீழ்ச்சியும் , எழுச்சியும் .- கோட்டாறு*ஆ. கோலப்பன்*
    ------------------------------------------------------------------------------------------------------------------------

    எம்.ஜி.ஆர். 19 வயதிலேயே சினிமாவுக்கு வந்து விட்டாலும், அவர் ஹீரோவாக நிலைபெற மேலும் பதினைந்து ஆண்டுகள் ஆகின.* இடைப்பட்ட காலத்தில் கிடைத்த வேடங்களை எல்லாம் ஏற்று நடித்தார்.* சினிமாவில் கதாநாயகனாக அவர்* உயர்ந்துக் கொண்டிருந்தபோது, தொடர்ந்து நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார் .* இன்பக்கனவு* என்கிற நாடகத்தில் ஸ்டண்ட் காட்சியில் நடிகர் குண்டுமணியை தூக்கி எறிவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது .* குண்டுமணியின் பாரம் தாளாமல் எம்.ஜி.ஆரின் கால் எலும்பு முறிந்தது* *

    அவ்வளவுதான் எம்.ஜி.ஆரின் கதை என்று எதிரிகள் குதூகலித்தனர் .* கால் முறிவு, எம்.ஜி.ஆரை , மூன்று மாதங்கள் மட்டுமே முடக்கியது . அதன் பின்னர் முன்னிலும் வேகமாக திரைப்படங் களில் நடித்து வெற்றிகளைக் குவித்தார் .* குதூகலித்தவர்கள்* காணாமல் போனார்கள் .**

    பத்து ஆண்டுகள் கழித்து எம்.ஆர். ராதாவால்* எம்.ஜி.ஆர். சுடப்பட்டபோதும் இதே போன்ற நிலை.* *அதே போன்று எம் .ஜி.ஆர். மீண்டெழுந்து* வந்து தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா நாயகனாக நிமிர்ந்து நின்றார் .**

    எப்போதெல்லாம் வீழ்கிறாரோ, அப்போதெல்லாம் முன்னிலும் பலமடங்கு விஸ்வரூபம்* எடுத்து எழுவார் என்பது எம்.ஜி.ஆரின். ஜாதகம்

  6. #2755
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    .தினகரன் - வெள்ளி மலர் -06/03/20
    ----------------------------------------------------------
    எம்.ஜி.ஆர். ஸ்பெஷல் - கோட்டாறு* ஆ. கோலப்பன்*
    ------------------------------------------------------------------------------------
    எம்.ஜி.ஆருக்கு இல்லாத உரிமையா ?
    ------------------------------------------------------------

    இந்தியில் பிரபல இயக்குனரும், நடிகருமான சாந்தாராம் தன்னுடைய படங்களின் ரீமேக் உரிமையை யாருக்கும் வழங்க மாட்டார். 1957ம் ஆண்டு அவர் இயக்கி நடித்து வெளிவந்த " தோ ஆங்கேன் பாரா ஹாத் " இன்று வரையிலும் இந்தியாவின் டாப் 10 இந்தி படங்களின் பட்டியலில் இடம் பெறுகிறது .

    எம்.ஜி.ஆரு க்கும் மிகவும் பிடித்த படம்* இது. சாந்தாராம், ரைட்ஸ் கொடுக்க மாட்டார் என்பதால்தான் நடிக்க விரும்பியும்* முடியாமல் இழுத்துக் கொண்டே போனது .* படம் வெளியாகி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகி கொண்டிருக்கும் நிலையில் , இனியும் பொறுக்க முடியாது என்று சாந்தாராமிடம் ரைட்ஸ் கேட்டார் .**

    அட என்னங்க நீங்க .... நீங்களே நடிக்கப் போறீங்கன்னு கேட்டா நான் உரிமை* தர மறுப்பேனா ?* என்னிடம் உங்களுக்கு இல்லாத உரிமையா ? என்று* செல்லமாக கோபித்துக் கொண்டு, தமிழில் அப்படத்தை எடுக்கும்* உரிமையை கொடுத்தாராம் சாந்தாராம் .

    எம்.ஜி.ஆர். நடிப்பில் புதிய பரிமாணம்* காட்டி, பெரும் வெற்றியை எட்டிய "பல்லாண்டு வாழ்க" தான் அந்த திரைப்படம்.* "பல்லாண்டு வாழ்க" திரைப்படத்தின் தெலுங்கு வடிவத்தில்தான் நடிக்க விரும்பினார் என்.டி.ஆர்.தன் உடன்பிறவா சகோதரனுக்காக சாந்தாராமிடம்* பேசி தெலுங்கு ரீமேக் உரிமையையும் எம்.ஜி.ஆர். வாங்கிக் கொடுத்தார் .

  7. #2756
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினகரன் - வெள்ளி மலர் -06/03/20
    ----------------------------------------------------------
    எம்.ஜி.ஆர். ஸ்பெஷல் - கோட்டாறு* ஆ. கோலப்பன்*
    ------------------------------------------------------------------------------------
    old is gold -ரசிகர் மன்றத்தை திறந்து வைத்த இந்திய பிரதமர்*

    ----------------------------------------------------------------------------------------------------
    ஹீரோக்களுக்கு ரசிகர் மன்றங்கள் என்கிற கலாச்சாரத்தை உலகத்திற்கே அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்கள்தான் . எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் உச்சமடைந்த காலத்தில்தான் , தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் அவருக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன .**

    கடல்கடந்தும் ரசிகர் மன்றங்களை வென்றவர் எம்.ஜி.ஆர். ஒருவரே .

    அந்தமான் - நிக்கோபார் தீவுகளிலும் கூட "பணத்தோட்டம் " எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் செயல்பட்டது .* இந்த மன்றத்திற்கு என்ன சிறப்பென்றால்*, அதை திறந்து வைத்தவர் இந்திய பிரதமராக இருந்த திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் .

    இன்றளவிலும் கூட , வேறெந்த நடிகருக்கும் ,இந்திய பிரதமர் ரசிகர் மன்றம் திறந்து வைத்த வரலாறு இல்லை .

  8. #2757
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினகரன் - வெள்ளி மலர் -06/03/20
    ------------------------------------------------------
    எம்.ஜி.ஆர். ஸ்பெஷல்* - கோட்டாறு ஆ. கோலப்பன்*
    -----------------------------------------------------------------------------------
    எம்.ஜி.ஆரை வியந்த தர்மேந்திரா*
    --------------------------------------------------------

    இந்தி படங்களின் சூப்பர் ஸ்டாரான தர்மேந்திரா எம்.ஜி.ஆரின் பரம ரசிகராக விளங்கியவர் .* ஒருமுறை கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தவர் மும்பை திருப்புவதற்காக சென்னை வந்தார் .* *எம்.ஜி.ஆரின் " நீரும் நெருப்பும் " படத்திற்காக சண்டைக் காட்சி படப்பிடிப்பு நடைபெறுவதை அறிந்தார் .* அதை நேரில் பார்க்க விரும்பி, எம்.ஜி.ஆரிடம் வேண்டுகோள் விடுத்தார் .**

    எம்.ஜி.ஆரின் அழைப்பின் பேரில் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து அன்று முழுக்க படப்பிடிப்பை* விரும்பி பார்த்தார்.* எம்.ஜி.ஆர். வாள் சுழற்றும் வேகத்தை கண்டு அசந்து போனார் .* படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஜி.ஆர். கையில் இருந்த வாளை* தொட்டு பார்த்தவருக்கு அதிர்ச்சி.* என்ன சார், உண்மையான* வாள் கொண்டு சண்டை* போடறீங்க ? என்று தன்* வியப்பை வெளிப்படுத்தினார் .

    தான் முறையாக சண்டைக்கு கலைகளை கற்றுத் தேர்ந்தது குறித்து தர்மேந்திராவுக்கு விளக்கினார் எம்.ஜி.ஆர். அவரிடம் மேலும் சில ஸ்டண்ட் நுணுக்கங்களை கேட்டறிந்த மகிழ்ச்சியுடனேயே ஊருக்கு விமானம் ஏறினார் தர்மேந்திரா

  9. #2758
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    .
    தினகரன் - வெள்ளி மலர் -06/03/20
    ------------------------------------------------------
    எம்.ஜி.ஆர். ஸ்பெஷல்* - கோட்டாறு ஆ. கோலப்பன்*
    -----------------------------------------------------------------------------------
    எம்.ஜி.ஆரை பின் தொடர்ந்த ஏழு*
    ----------------------------------------------------------
    எம்.ஜி.ஆரின் பிறந்த தேதி* ஜனவரி 17, 1917

    மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தபோது எம்.ஜி.ஆரின் வயது 7

    எம்.ஜி.ஆர். முதன்முதலாக கதாநாயகனாக "ராஜகுமாரியில் " நடித்த ஆண்டு 1947

    சொந்த நாடக கம்பெனியான எம்.ஜி.ஆர். நாடக மன்றம் அமைத்தபோது அவரது வயது 37.

    காங்கிரஸ் கட்சியில் எம்.ஜி.ஆர். சேர்ந்த ஆண்டு 1947.
    காங்கிரசில் இருந்து விலகி, தன்னை தி.மு.க. வில் இணைத்துக் கொண்ட ஆண்டு 1953.

    எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் , தானே நடித்து , இயக்கிய நாடோடி மன்னன்*ஆரம்பிக்கப்பட்டது* 1957ல்*

    முதன் முதலாக எம்.ஜி.ஆர். சட்டமன்ற உறுப்பினர் ஆன ஆண்டு* 1967.

    எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஆண்டு 1977.

    எம்.ஜி.ஆர். இப்பூவுலகை விட்டு மறைந்த ஆண்டு* 1987.

  10. #2759
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    .
    தினகரன் - வெள்ளி மலர் -06/03/20
    ------------------------------------------------------
    எம்.ஜி.ஆர். ஸ்பெஷல்* - கோட்டாறு ஆ. கோலப்பன்*
    -----------------------------------------------------------------------------------

    ஈஸ்ட் மென் கலரில்* எம்.ஜி.ஆர்.*
    -------------------------------------------------
    எம்.ஜி.ஆரா , அவர் ரோஸ் கலரா இருப்பாரே ? என்று இன்றும் கூட நம்ம ஊர்க்கிழவிகள் நாணப்படுகிறார்கள் .**

    ரோஸ் கலர் எம்.ஜி.ஆர். வண்ணப் படங்களில் நடித்ததே குறைவு என்பதுதான் ஆச்சரியம் .* மொத்தமாக எம்.ஜி.ஆர்.136 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார் .அவற்றில் கிட்டத்தட்ட 100 படங்கள் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டவையே .

    அலிபாபாவும்* 40 திருடர்களும்* படம்தான் தமிழில் முதல் வண்ணப்படம்*என்பார்கள் .* எனினும்* அது கேவா கலர் என்கிற தொழில் நுட்ப்பத்தில் எடுக்கப்பட்டது.* திரையில் பார்த்தா ல் கலர் மாதிரி* தெரியும் .* ஆனால்,கலரல்ல..பிக்ச்சர் டியூப் போய்விட்ட பழைய டி.வி.யில் படம் பார்ப்பது போல இருக்கும் .**எம்.ஜி.ஆரின் கனவு படமான நாடோடி மன்னன் இடைவேளை வரைக்கும் கருப்பு வெள்ளைதான் . சரோஜாதேவி* அறிமுகமாகும் காட்சியில் இருந்து கலராகும்.

    படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன்* அன்பே வா , பறக்கும் பாவை , ரகசிய போலீஸ் 115 ,குடியிருந்த கோயில், ஒளி விளக்கு, அடிமைப்பெண் , நம்நாடு , மாட்டுக்கார வேலன் , என் அண்ணன் ,தேடி வந்த மாப்பிள்ளை, எங்கள் தங்கம் ,குமரிக்கோட்டம், ரிக்ஷாக்காரன், நீரும் நெருப்பும், சங்கே முழங்கு, நல்ல நேரம் , ராமன் தேடிய சீதை, நான் ஏன் பிறந்தேன், இதய வீணை, உலகம் சுற்றும் வாலிபன் , பட்டிக்காட்டு பொன்னையா , நேற்று இன்று நாளை, உரிமைக்குரல், சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே , இதயக்கனி,* பல்லாண்டு வாழ்க , நீதிக்கு தலை வணங்கு, உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன் , நவரத்தினம் , இன்று போல் என்றும் வாழ்க, மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்* ஆகிய படங்கள் ஈஸ்ட்மென் கலரில் வெளியான படங்கள் .

  11. #2760
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் குரல் - அலிபாபா -08/03/20
    ------------------------------------------------------
    இயக்குனர் நீலகண்டனுக்கு உயிர் கொடுத்த எம்.ஜி.ஆர்.*
    ------------------------------------------------------------------------------------------

    ப. நீலகண்டன் என்கிற இந்த பெயரை* தமிழ் திரையுலகம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது . இன்றைக்கு அவர் இருந்திருந்தால் 104 வயது உடையவராக இருப்பார்.1916ல் விழுப்புரத்தில்* பிறந்த நீலகண்டன்* அவரது மாவட்டத்தில் அன்றைய சூழலில் பி.ஏ. பட்டம் பெற்ற* பட்டதாரிகளில்* ஒருவர்*

    தனது இளம் வயதிலேயே திரைப்பட உலகத்தால் ஈர்க்கப்பட்ட அவர் ஆங்கிலப்படங்களை அதிகம் விரும்பி பார்த்ததால், அவற்றின் திரைக்கதை, வசனங்களை எழுதும் பாணியை ஆர்வத்துடன் கற்று தேர்ந்தார் .* இளைஞர் நீலகண்டனின் திறமையைக் கேள்விப்பட்ட ஏ.வி.எம். அதிபர் மெய்யப்பன் செட்டியார் அவரை அழைத்து, தனது நிறுவனத்தின் சார்பாக " நாம் இருவர் " படத்தை இயக்கம் பொறுப்பை* அளித்தார்.* படம் மாபெரும் வெற்றி .**

    அதன் பிறகு இயக்குனர் நீலகண்டனின் வாழ்வில் வசந்தம் தான் .* தமிழ் திரைப்பட உலகின் முடிசூடா மன்னரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பல படங்களை இயக்கினார் .* எம்.ஜி.ஆரை வைத்து அவர் இயக்கிய " மாட்டுக்கார வேளாண் " வசூலில் வெற்றி பெற்று சாதனை* படைத்தது .* இதை தொடர்ந்து ,எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குனர் ஆனார் நீலகண்டன் .**
    இந்த சூழலில் , ஒரு நாள் எம்.ஜி.ஆரின்* திரைப்படம் ஒன்றை வாகினி ஸ்டுடியோவில் இயக்கி கொண்டிருந்தார் நீலகண்டன் .* காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்பு சுறுசுறுப்பாக நடந்தது .* கதாநாயகன் எம்.ஜி.ஆரும்* மிகவும் உற்சாகமாக அன்றைய காட்சிகளில் நடித்தார் .**

    படப்பிடிப்பு முடிந்ததும் , நேராக ஒப்பனை அறைக்கு சென்று எம்.ஜி.ஆர். சற்று நேரத்தில் மேக்கப் கலைத்துவிட்டு வெளியே வந்தார் . அதே நேரத்தில், இயக்குனர் நீலகண்டனும் தனது பணிகளை முடித்துவிட்டு மறுநாளைய படப்பிடிப்புக்கான காட்சிகளை தனது உதவியாளர்களிடமும் , கேமராமேனிடமும் விவரித்துவிட்டு புறப்பட்டார் .* அப்போது எம்.ஜி.ஆர்.*அவரிடம் கிண்டலாக , என்னய்யா , என்னை நல்லா டிரில் வாங்கறீங்களே , பாத்து பாத்து , என்று சொல்லிவிட்டு உரக்க சிரித்தபடியே வேகமாக நடந்தார் .

    அவருக்கு இணையாக நடக்க முடியாமல் நீலகண்டன் சற்றும் பின்னாடியே நடந்து வந்தார் .* அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. திடீரென்று அடடா, அய்யய்யோ* என்று குரல் எழுந்ததை கேட்ட எம்.ஜி.ஆர். சட்டென்று திரும்பி பார்த்தார் .

    அங்கே தரையில் நீலகண்டன் அப்படியே மயங்கி* சரிந்திருந்ததை எம்.ஜி.ஆர். கண்டு பதறினார் .* உடனே, தண்ணீர், தண்ணீர் என்று கூச்சலிட்ட அவர் ,நீலகண்டனின் முகத்தில் சிறிது தண்ணீரை தெளித்தார் .* அப்போது நீலகண்டனின் உடலில் லேசான அசைவு தென்பட்டது .*
    உடனடியாக தனது ஜிப்பாவின் பாக்கெட்டில் இருந்து ஒரு மாத்திரைக்குப்பியை எடுத்த எம்.ஜி.ஆர். அதன் மேல் பகுதியில் இருந்த பட்டனை அழுத்தினார் .**அதில் இருந்து ஒரு மாத்திரை எம்.ஜி.ஆரின் உள்ளங்கையில் விழுந்தது .

    அப்போது நீலகண்டன், நீலகண்டன், எழுந்திருங்க என்று சத்தமாக சொன்னார் .எம்.ஜி.ஆர். பிறகு நீலகண்டன் வாயில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிவிட்டு அந்த மாத்திரையையும் வாய்க்குள் போட்டார் .

    அடுத்த சில*மணித்துளிகளில் அந்த அதிசயம் நடந்தது. எ*துவுமே*நடக்காதது*போல தரையில் இருந்துஎ ழுந்து*உட்கார்ந்த*நீலகண்டன்*தன்* அருகே கவலையுடன் உட்கார்ந்து*கொண்டிருந்த எம்.ஜி.ஆரையும் சுற்றி நின்று கொண்டிருந்தவர்களை யும்*பார்த்து என்ன நடந்தது*என்று வியப்புடன்*கேட்டார் .* அப்போது எம்.ஜி.ஆர் தன்*உரித்தான புன்னகையுடன் ஒன்றும் இல்லை நீலகண்டன்*, கொஞ்சம்*சொர்க்கம்*வரைக்கும் சென்று வந்திருக்கீங்க , உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.* நான் ஒரு மாத்திரையை*உங்க*வாயில் போட்டேன்*.* அவ்வளவுதான் என்று கூறியபடியே எழுந்தார் .

    அங்கே இருந்த*தயாரிப்பு நிர்வாகியை*பார்த்து இவரை*உடனடியாக ஆஸ்பத்திரியில் அட்மிட்*பண்ணுங்க*.* செலவு என்னுடையது .* என்று உத்தரவு பிறப்பித்தார் .* அப்ப்போது இயக்குனர் நீலகண்டன்* கண்களில் கண்ணீர் வழிய சின்னவரே, என்னை*இன்னைக்கு*காப்பாதிட்டீங்க* இன்னும் எத்தனை நாளோ*, என்றார் கலங்கியபடியே .

    அவரை*மெல்ல தட்டிக் கொடுத்த*எம்.ஜி. ஆர். அய்யா , அது நம்ம*கையிலே இல்லை .* வரும்போது வரட்டும்*.* இன்னும் பத்து நாள் கழித்து ஷூட்டிங்*வைத்துக் கொள்ளலாம் .* முதல்ல*மருத்துவமனைக்கு போங்க* என்றார்*பரிவுடன்*.

    இந்த நிகழ்வைக்*கேள்விப்பட்ட நடிகர்*சோ*, எம்.ஜி.ஆரிடம், அது என்னங்க மாத்திரை* இதெல்லாம் எப்படிங்க என்றார் வியப்புடன்*.

    என்னிடம் இதுமாதிரி*மாத்திரைங்க எப்போதும்*கைவசம் இருக்கும் .* சிங்கப்பூரிலிருந்து வரவழைத்து என்னிடம் பத்திரமாக வைத்திருக்கிறேன் .*இன்னைக்கு*அது நீலகண்டனைக் காப்பாற்றிவிட்டது . என்று சிரித்தபடியே சொன்னார்*எம்.ஜி.ஆர் .

    உடனே, " யு*ஆறே*ரியலி*கிரேட்*சார்*" என்று எம்.ஜி.ஆரை பாராட்டினார் நடிகர் சோ* ,.மக்கள் திலகத்தின் வாழ்வில்* இது போன்ற நிகழ்வுகள் பல உண்டு.*மக்கள் திலகம் என்கிற*பட்டத்திற்கு இன்று வரை பொருத்தமானவர் அவர் மட்டுமே*.

    இந்த நிகழ்விற்கு பிறகு பல ஆண்டுகள் இயக்குனர் நீலகண்டன்*நலமுடன்*வாழ்ந்தார்.* படங்களையும் தொடர்ந்து இயக்கினார்.* தனது இதயத்தில் எம்.ஜி.ஆரை*வணங்கியபடியே*
    =-இளமாறன் .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •