-
2nd March 2020, 06:30 AM
#2731
Junior Member
Diamond Hubber
*வேலூர் மாவட்டம்*
*வேலூர் கோட்டையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி பெற்ற பெண் போலீசார் சந்திப்பு*
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *எம்ஜிஆர் தான் எங்கள் தெய்வம் என உருக்கம்*
*வேலூர் தமிழகத்தில் 1981 ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்அமைச்சராக இருந்த பொழுது 650க்கும் மேற்பட்ட பெண்கள் 2-ம் நிலை காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.வேலூர் கோட்டையில் அமைந்துள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் ஏராளமானோர் பயிற்சி பெற்றனர். *அவர்கள் கோட்டையிலுள்ள திப்பு மஹாலில் தங்கி பயிற்சி பெற்றுள்ளனர்.இவர்களுடைய பயிற்சி நிறைவு விழாவில் அப்போதைய முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் கலந்துகொண்டார்.அப்போது பெண் போலீசாரின் பயிற்சியைக் கண்டு அவர்களை முதல் நிலை காவலராக அறிவித்தார்.அப்போது பயிற்சி பெற்ற போலீசார் பதவி உயர்வு பெற்று பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்தனர். இதில் பெரும்பாலானோர் ஓய்வு பெற்று விட்டனர். தற்போது இவர்கள் வாட்ஸ்-அப் மூலம் ஒருங்கிணைந்துள்ளனர்.திருநெல்வேலியை சேர்ந்த போலீஸ் ஒருவர் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளார். இதனையடுத்து 40 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி பெற்ற அவர்கள் வேலூர் கோட்டையில் அவர்கள் பயிற்சியில் சேர்ந்த நாளான பிப்ரவரி மாதம் 23 ம் தேதி சந்திக்க முடிவு செய்தனர்.அதன்படி ஞாயிற்றுக்கிழமை 1981ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற பெண் போலீசார் 160 பேர் கோட்டையில் உள்ள திப்பு மஹாலில் சந்தித்து பேசினர் அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய குடும்பம் பயிற்சியின்போது நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து உருக்கமாக பேசிக் கொண்டனர். அப்போது *எம்.ஜி.ஆர் தான் எங்களுக்கு தெய்வம் அவர் அளித்த வாய்ப்பால் தான் நாங்கள் மற்றும் எங்கள் குடும்பத்தினர் நல்ல நிலையில் இருக்கிறோம் என உருக்கமாக தெரிவித்தனர். மேலும் பயிற்சிக்கு வந்த முதல் நாளில் திப்பு மஹாலில் நுழைந்தபோது மின்தடை ஏற்பட்டிருந்தது அதே போல இன்றும் அவர்கள் வந்தபோது மின்தடை ஏற்பட்டது இதனையடுத்து அவர்கள் பழைய நினைவுகளை கூறி ஒருவருக்கொருவர் ஆரவாரமாக பேசிக்கொண்டனர். கோட்டையில் உள்ள அனைத்து கட்டிடங்கள் அப்படியே உள்ளன நாங்கள்தான் வயது முடிவடைந்து விட்டோம் என்றனர்.நிகழ்ச்சியில் வேலூர் சரக டி.ஐ.ஜி காமினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர் 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து பேசிய பெண் போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.*......... Thanks.........
-
2nd March 2020 06:30 AM
# ADS
Circuit advertisement
-
3rd March 2020, 06:55 AM
#2732
Junior Member
Diamond Hubber
......... Thanks.........
-
3rd March 2020, 06:56 AM
#2733
Junior Member
Diamond Hubber
-
3rd March 2020, 06:56 AM
#2734
Junior Member
Diamond Hubber
-
3rd March 2020, 06:57 AM
#2735
Junior Member
Diamond Hubber
-
3rd March 2020, 06:58 AM
#2736
Junior Member
Diamond Hubber
-
3rd March 2020, 06:58 AM
#2737
Junior Member
Diamond Hubber
-
3rd March 2020, 06:59 AM
#2738
Junior Member
Diamond Hubber
-
3rd March 2020, 09:42 AM
#2739
Junior Member
Diamond Hubber
அதெல்லாம் சரி...
உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் இருக்க, ஏன் எம்ஜிஆரை மட்டும் ஏன் மதிக்கணும் ?
ஏன் மற்ற தலைவர்கள் கூட தான் எவ்வளவோ நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்காங்க..
ஆனால் எம்ஜிஆர் வித்தியாசம்
யார் கூறிய நற்கருத்துக்கள் படித்ததோடு நில்லாமல், பல்லாயிரக்கணக்கான,லட்சோப லட்சம், கோடான கோடிக்கணக்கான மக்கள் மனதாரத் திருந்த வழிவகுக்கிறதோ...
பூத உடலை நீத்த போதும்,
இன்னமும் எங்கள் தலைவன் வாழ்ந்துகொண்டிருக்கிறான்...
இன்னமும் தன் மக்கள் நன்றாக இருக்கிறார்களா!!! என்று நொடிப்பொழுதும் எண்ணி எண்ணி
கவலைப்படுகிறான் என்ற எண்ணத்தை மக்களின் மனதில் எவரொருவர் ஆழமாக விதைக்கிறாரோ...
எவரொருவர், மக்கள் தன்னை நினைக்கும்போதெல்லாம் நெஞ்சடைத்துக் கண்ணீர் வரச்செய்கிறாரோ.
அவர் தான் மக்களின் மனதில் நிலைத்து நிலைக்கமுடியும்...
இந்த வீடியோவைப் பாருங்க...
இவர்களெல்லாம் யார்? பதவியில் இருப்பவர்களா? பணக்காரர்களா? இல்லை, தங்களின் உன்னத்தலைவனை, நேரிலாவது பார்த்திருப்பவர்களா..? சிலர் பார்த்திருக்கவும் கூடும்
இதுபோன்ற பக்தர்களுக்கெல்லாம், ஏன் நமக்கும் கூட ஒரே ஒரு விருப்பம்...நாம் கேட்கும் ஒரே வரம்...
#வாத்தியாரே #நீ #மறுபடி #பிறக்கணும்......... Thanks.........
-
3rd March 2020, 09:50 AM
#2740
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம்" பிறந்த நாள்", நிகழ்ச்சி 4 நாட்களுக்கு முன்னர் நடைபெற்றபோது திரைப்பட இயக்குனர் திரு சுந்தர்ராஜன் நிகழ்த்திய உரை, கருத்துகள் அருமை... ஆனால் திரு ரஜினிகாந்த் பேசிய ஒரு பேச்சு தவறானது, நாகரிகம் காத்து பேசியிருக்கலாம் என்பது நம் கருத்து...
Bookmarks