-
21st June 2019, 07:53 PM
#211
Junior Member
Diamond Hubber
எப்பொழுதும் கலையுலக வசூல் சக்கரவர்த்தி, புரட்சி நடிகர் வழங்கும் " பெரிய இடத்துப் பெண்" தினசரி 4 காட்சிகள் சென்னை - ஒட்டெரி ஸ்ரீ பாலாஜி dts திரையரங்கில் வெற்றி உலா.........
-
21st June 2019 07:53 PM
# ADS
Circuit advertisement
-
22nd June 2019, 10:22 AM
#212
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகத்தின்" நினைத்ததை முடிப்பவன் ",திரைப்படம் சென்னை அகஸ்தியா 70 MM திரையரங்கில் நடைபெறுகிறது.ஆகவே 23.06.2019 ஞாயிறு மாலை காட்சியில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய பூமியில் வாழ்ந்த பொழுது தமிழக மக்களுக்கு திடசெல்வத்தை பூ மாரி பொழிந்த வாழும் தெய்வம் புரட்சி தலைவர் அவர்களையும் - புரட்சி தலைவி அவர்களையும் விண்ணுலகில் இருக்கும் இவ்வேளையில் தமிழக மக்களுக்கு ( நீரை) பூ மாரி மழை பொழிய வேண்டி புரட்சி தலைவர் பக்தர்கள் சார்பாக பிராத்தனை செய்ய உள்ளதால் மண்மேடு சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நம் மகானுக்கு பூ மழை பொழிய கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக வேண்டுகிறோம்*.......... Thanks wa.,
-
22nd June 2019, 10:33 AM
#213
Junior Member
Diamond Hubber
கலையுலக காவலரின்..."அடிமைப்பெண்" காவியம் திருப்பூர்- மனீஸ் A/C dts திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் ... நடைபெறுகிறது என்கிற தகவல் கோவை நண்பர் தெரிவித்தார்.........
-
22nd June 2019, 01:50 PM
#214
Junior Member
Diamond Hubber
நாளை கோவையில் இதயதெய்வம் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் அன்பான இரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளை மரியாதை நிமிர்த்தமாக சந்திக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. நமது தலைவரின் புகழை பரப்பும் நல் உள்ளங்கள் எப்பொழுதும் தனித்தன்மையுடன் செயல்படுங்கள் உங்கள் உரிமையை வேறு ஒருவர் முன்னேற வழி வகுத்துக் கொடுக்காதீர்கள். என்றும் நாம் தலைவரின் உண்மை யானவர்களாக பயணிப்போம். அது தான் கடைசி வரை நிலைக்கும். என்றும் நானும் உங்களில் ஒருவனாக இருக்கும் புரட்சித்தலைவரின் பக்தன் உரிமைக்குரல் ராஜு. -.நாளை ......(23.06.2019. ஞாயிறு) சந்திப்போம். ஒன்றுபடுவோம். தலைவர் புகழ் காப்போம். நன்றி!........... Thanks wa.,
-
22nd June 2019, 01:52 PM
#215
Junior Member
Diamond Hubber
தென் இந்தியாவில் செயல்படும் புரட்சித்தலைவரின் அன்பு இதயங்களாகிய நல் உள்ளம் படைத்தவர்களே! இதயதெய்வம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழை மேலும் மேலும் விரிவுபடுத்த தொலைநோக்கு பார்வைக்கு கொண்டு செல்ல நாம் ஒன்றுபட. வருங்காலம் உண்மையான தலைவரின் உள்ளங்கள் மூலம் நிலை பெற..... தென்னக எம்.ஜி.ஆர். புகழ்பரப்பும் குழு அமைக்க பயணம் மேற்க்கொள்ள போகிறோம். இடை தரகர்கள் ,போலிகள் உள்ளே நுழையாத படி ஒற்றுமையை நிலை நிறுத்த சென்னை முதல் கன்னியகுமாரி வரை தலைவரின் அபிமானிகளை சந்திக்கும் பணி ஜுலை மாதம் முதல் தொடங்கப்படுகிறது. மற்றும் புதுச்சேரி கர்நாடகா(பெங்களுர்) .கேரளா (திருவனந்தபுரம்) ஆந்திரா ( சித்தூர்) என எங்கெல்லாம் தலைவர் அபிமானிகள் இருக்கின்றார்களே அங்கெல்லாம் ஒற்றுமையை வளர்த்து ஒன்றுபட பாடுபடுவோம். அனைவருக்கும் நன்றி! உரிமைக்குரல் ராஜு.......... Thanks wa...
-
23rd June 2019, 06:48 PM
#216
Junior Member
Diamond Hubber
#கடைக்கண் #பட்டால் #போதுமே
சங்கரய்யா பெரியாரின் குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். 74 வயதில் இருபதாண்டுகளுக்கும் மேலாக முரசொலி பத்திரிகையில் சீனியர் கட்டுரையாளராக வெறும் 300 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றி வந்தார்.
எம்ஜிஆர் முதல்வரான புதிது. ஒருநாள் மதியம் சங்கரய்யாவின் மனைவி ரத்தவாந்தி எடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக 10,000 தேவை. தன் தலைமையை தேடி ஓடுகிறார். சந்திக்கவே விடவில்லை. பணம் கட்டவில்லையென்றால், ஆபரேசன் செய்ய இயலாமல் மணைவி உயிர் பாேய்விடும். அழுது புலம்பும் சங்கரய்யாவை நண்பர்கள் அடுத்தநாள் காலை8மணிக்கு ராமாவரம் தாேட்டத்தில் பாெதுமக்களிடம் மனுக்கள் பெறும் முதல்வரை சந்திக்க சொல்கிறார்கள்.
சங்கரய்யாவிற்கு உயிர் பாேகும் தேவையிருப்பினும், தன்மானமும், யாரை கடந்த ஆறு ஆண்டுகளாக கடுமையாக தாக்கி எழுதுகிறாமாே அவரை சந்தித்து உதவி கேட்பதா எண்ணும் வெட்கமும் தடுக்கிறது.
அப்படியே சந்தித்தாலும், உறுதியாக எதிரிக்கு உதவ மாட்டார் என்று நண்பர்களிடம் சாெல்கிறார். ஆபத்துக்கு பாவமில்லை என்று நண்பர்கள் அடுத்த நாள் காலை 7 மணிக்கே தோட்டத்திற்கு அழைத்துப்போகிறார்கள்.
காலை 8.30மணி. தாேட்டம் பரபரப்பாகிறது. வெளி வந்த சாெக்கத்தங்கம் மனுக்கள் வாங்குகிறது.(இந்த மனுக்கள் மீது 48 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வர் உத்தரவு) கூனிக்குறுகி சங்கரய்யா வரிசையை விட்டு தள்ளி பார்வையாளர்களோடு நின்று காெள்கிறார்.
மனுக்கள் பெற்று முடித்த முதல்வரின் கண்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு செல்கிறது. அழுக்கு ஜிப்பா அணிந்து, நான்கடி உயரமே இருந்த சங்கரய்யாவின் நல்லநேரம் தலைவர் கண்களில் பட்டு விடுகிறார்.
தலைவருக்கு ஆச்சரியம்...!
இவர் முரசாெலியில் வேலை செய்பவராயிற்றே, இங்கே எதற்கு வந்திருக்கிறார்? வினாவாேடு "சங்கரய்யா, என்ன இங்கே?" அசந்து பாேகிறார் சங்கரய்யா. எத்தனை ஆண்டுகள் ஆகிறது? பெயர் ஞாபகம் வைத்து அழைக்கிறாரே! அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. நண்பர்கள்தான் தலைவரிடம் சங்கரய்யா நிலையை சொல்கிறார்கள்.
உடனே உதவியாளரை அழைத்த எம்ஜிஆர் ரூ50,000 யை சங்கரய்யாவிடம் தருகிறார், ஆஸ்பத்திரி செலவு போக மீதியை வங்கியில் டெபாசிட் செய்ய சொல்கிறார்.
மனைவி உயிர் பிழைத்து வந்ததும் சங்கரய்யா செய்த முதல் வேலை முரசாெலியை விட்டு நின்றது, இரண்டாவது எம்ஜிஆரின் சிபாரிசால், கட்சி அலுவலகத்தில் தாெலைபேசி பொறுப்பாளரானது.
300ரூபாய் சம்பளத்துக்கு முக்கிக்காெண்டிருந்த சங்கரய்யாவிற்கு தலைவர் தந்த மாதசம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூபாய்15,000.
#குசேலன் #கூட #கண்ணனுக்கு #அவல் #தந்து, #அதை #அவன் #தின்றதற்கு #பின்னாலேதான் #கஷ்டம் #நீங்கினான். #ஆனால் #என் #இதயதெய்வத்தின் #கடைக்கண்பார்வை #பட்டதுமே, #சங்கரய்யா #சங்கடம் #போய் #சந்தாேஷஅய்யா #ஆகிவிட்டார்.......... Thanks wa.,
-
23rd June 2019, 06:53 PM
#217
Junior Member
Diamond Hubber
என்றும், எப்பொழுதும் கலையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அவர்தம் லட்சிய படைப்புகள் " அன்பேவா"," நம்நாடு" டிஜிட்டல் பரிமாணத்தில் அருமையாக வந்திருக்கிறது எனும் மகிழ்ச்சியான தகவல் இனிய தோழர்களே.........
-
23rd June 2019, 10:18 PM
#218
Junior Member
Diamond Hubber
திமுகவின் சொத்தாக கருதப்படும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கூட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் சொத்துதானே.ஆம் புரட்சி தலைவர் தான் அவரை சட்டக்கல்லூரியில் படிக்க வைத்து ஆளாக்கினார்.ஆனால் எம்.ஜி.ஆர் அஇஅதிமுக வை ஆரம்பித்த போதிலும் துரைமுருகன் தொடர்ந்து திமுகவிலேயே இருந்து வருகிறார்.1977லே புரட்சி தலைவர் முதல்வராக இருந்த போது மு.க.ஸ்டாலின் அப்போது சட்டமன்ற உறுப்பினர் இல்லை சட்டமன்ற திமுக வரிசையில் கலைஞர் மற்றும் பேராசிரியருக்கு அடுத்ததாக நட்சத்திர பேச்சாளர்களாக துரைமுருகன், ரகுமான்கான்,க.சுப்பு ஆகியோர் திகழ்ந்த வேளையில் ஒரு நாள் அவையில் அதிமுக அரசை பற்றி காரசாரமாக பேசி கொண்டே அவையை விட்டு வெளிநடப்பு செய்ய துரைமுருகன் முயன்ற போது மயங்கி கீழே விழுந்தார் உடனே பதட்டத்துடன் ஓடி வந்த புரட்சி தலைவர் துரைமுருகனை தாயுள்ளத்துடன் தனது மடிமீது சாய்த்து வைத்து அவரது உள்ளங்கை மற்றும் உள்ளங்காலினை பரபரப்புடன் தேய்த்து மயக்கம் தெளிவித்து துரைமுருகனை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பினார் புரட்சி தலைவர்.இதை நாடே அறியும் அன்றைய தினம் இதை பாராட்டி வெளியிடாத பத்திரிகைகளே இல்லை.தன்னை பற்றி விமரிசித்த ஒருவர் இன்னலுற்ற போது ஓடோடி சென்று உதவி செய்திட்ட புரட்சி தலைவரின் மனிதநேய மாண்பே காலத்தாலும் அழிக்க முடியாத சொத்து என்பதை தெரிந்து கொள்க......... Thanks wa.,
-
24th June 2019, 06:46 AM
#219
Junior Member
Diamond Hubber
காலத்தை வென்ற நாயகன் எம்.ஜி.ஆர்.
நாடோடியாக தமிழ்நாட்டிற்கு வந்தேன். உயிர் வாழ்வதற்காக ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்தேன். சிறிய அளவில் தமிழ்மொழியைக் கற்றேன். இன்று மக்களின் அன்பைப் பெறக்கூடிய அளவு தகுதி பெற்றுள்ளேன். வாழ வழியின்றி தவித்த எனக்குத் தமிழ்நாடும், தமிழ்மொழியும் வாழ்வளித்தன. அந்த நாட்டை என்றும் மறக்க மாட்டேன். என்னை வாழ வைத்த தமிழ் மொழி என்றும் வாழ வேண்டும். அதற்காகவே நான் நன்கொடையளிக்கிறேன்.
தமிழ் மொழி என்றும் அழியாதது. அழியக் கூடாது. அந்த மொழியின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்யத் தயங்க மாட்டேன். ஏழையாக இருக்கும்போது உள்ள குணம் சிறிது நிதி கிடைத்தவுடனே மாறிவிடக் கூடிய தன்மையில் பலர் இருப்பதை கண்டிருக்கிறேன். அந்த அளவு நானும் மாறிவிடக்கூடாது. துன்பத்திலேயே வளர்ந்து வந்தவன் நான். ஆகையால் துயர்படுவோரின் நிலையை நேரடியாக அறிந்த நான் எனக்கு கிடைக்கும் பணத்தைத் துயர்படுவோரின் நல்வாழ்வுக்காக பலியிடத் தயங்க மாட்டேன். நாடோடியாக வந்த என்னை வாழ வைத்த தமிழ்நாடும், தமிழ் மொழியும் தான். அந்த நாட்டிற்கு என்றும் நான் கடமைப் பட்டவனாக இருப்பேன்.
புரட்சி நடிகர் பேச்சு 27.10.1959........... Thanks wa .,
-
24th June 2019, 02:34 PM
#220
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆரின் 'அன்பே வா' (1966) - திரை விமர்சனம்
ஒரு நாள் இயக்குனர் A.C. திருலோகசந்தர் அவர்கள், Rock Hudson நடித்த Come September படத்தை பார்த்தார். அந்த படம் ஒரு Romantic Comedy வகைப் படம். இந்த படத்தின் மையக் கருவை மட்டும் எடுத்து தமிழிற்கு ஏற்றாற்போல் மாற்றி நாம் ஒரு படத்தை இயக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, அதை தன் ஆஸ்தான கம்பெனியின்
முதலாளி திரு. A.V. மெய்யப்ப செட்டியாரிடம் தெரிவித்தாராம். செட்டியாரும், 'சரி, பண்ணலாம். யாரை ஹீரோவா போடலாம்னு இருக்க?' என்று அவர் கேட்க, அவர் ஒரு வித தயக்கத்தோடு 'எம்.ஜி.ஆரை போட்டு படம் பண்ணலாம்னு இருக்கேன்' என்று சொன்னாராம். செட்டியாரோ 'எம்.ஜி.ஆரா? அவர் நமக்கு தோது பட மாட்டாரே? அதுவுமில்லாம இது காதல் & காமெடி கலந்த படம். அவர் இதுக்கு ஒத்துக்குவாருன்னு நினைக்கிறியா?' என்று கேட்க, அதற்க்கு A.C. திருலோக்கோ 'நீங்க அனுமதி மட்டும் கொடுங்க. நான் போய் பேசி பார்கிறேன்' என்று சொன்னார். A.V. மெய்யப்ப செட்டியாரும் அனுமதி கொடுக்க, எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு பறந்தது A.C. திருலோகசந்தரின் கார்.
ராமாவரம் தோட்டத்து வீட்டு ஹாலில் ஏற்கனவே பல தயாரிப்பு கம்பெனி மேனேஜர்களும், இயக்குனர்களும் எம்.ஜி.ஆரை தங்களின் அடுத்த படத்தில் புக் செய்ய காத்துக்கொண்டிருந்தார்கள். A.C.திருலோகசந்தரும் தான் வந்திருப்பதாக எம்.ஜி.ஆரிடம் தெரியப்படுத்த சொல்லிவிட்டு, அவரும் தலைவரின் வருகைக்காக காத்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர் 'அவர் எங்க இந்தப்பக்கம்? அட்ரஸ் மாறி வந்துட்டாரா?' என்று சொன்னாராம். காரணம், A.V. மெய்யப்ப செட்டியாருக்கு மிகவும் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன். அதனால் தான் எம்.ஜி.ஆர் அப்படி கேட்டார். சிறிது நேரம் கழித்து ஹாலுக்கு வந்த எம்.ஜி.ஆர், 'உள்ளே வாங்க' என்று திருலோக்கை அழைத்து கதை கேட்க ஆரம்பித்தார். முழு கதையை கேட்ட எம்.ஜி.ஆர் 'கதை நல்லா இருக்கு. ஆனா என் ஆடியன்ஸுக்கு பைட்டு சீன்ஸ் இருந்தா தான் பிடிக்கும். இதுல ஒரு ரெண்டு இடத்துல மட்டும் பைட்டு வைக்கிற மாதிரி திரைக்கதை வைங்க. நாம இந்த படத்தை பண்ணலாம்' என்று சொன்னாராம். அந்த படம் தான் இந்த 'அன்பே வா'.
படத்தின் கதை ரொம்ப சிம்பிள். பெரும் தொழிலதிபரான ஜே.பி, விடுமுறைக்காக சிம்லாவில் இருக்கும் தன் கெஸ்ட் ஹவுஸ்க்கு செல்கிறார். ஆனால் அந்த மாளிகையை நிர்வகிக்கும் வேலைக்காரன், வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருப்பதை அறிந்து கொள்ளும் ஜே.பி, அங்கே தன்னை பாலுவாக அறிமுகப்படுத்திக்கொண்டு சொந்த வீட்டிற்க்கே வாடகை கொடுத்துக்கொண்டு தங்க ஆரம்பிக்கிறார். ஏற்கனவே அந்த மாளிகையில் தங்கி வரும் கீதா என்ற பெண்ணுடன் சின்னத் சின்ன மோதல்கள் ஏற்பட்டு அதுவே காதலாக மாறுகிறது அவருக்கு. இருவரும் எப்படி இணைந்தார்கள் என்பதை மிகவும் பொழுது போக்காக காட்டியிருக்கும் படம் தான் இந்த 'அன்பே வா'.
ஜே.பி என்கிற பாலுவாக எம்.ஜி.ஆர். எனக்கு தெரிந்து தலைவர் நடித்த படங்களில், ரொமாண்டிக் காமெடி Genre வகை திரைப்படம் இது ஒன்று தான். இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்தாலும், அதுவும் சிறப்பான படமாக அமைந்தது எம்.ஜி.ஆரின் சிறப்பு. இந்த படத்தில் தலைவர் காமெடியில் கலக்கியிருக்கிறார். அதுவும் புரட்சித் தலைவரின் குறும்புத்தனங்கள் இந்த படத்தில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. சரோஜா தேவியை செல்லமாக 'சின்ன பாப்பா' என்று கிண்டலாக அழைக்கும்போதும் சரி, ஒவ்வொரு முறையும் கண்டத்து பைங்கிளியை ஏமாற்றும் போதும் சரி, ஒவ்வொரு இடத்திலும் சிக்சர் அடிக்கிறார் தலைவர். 'நாடோடி' பாடலில் தலைவரின் வேகத்தை நடனத்தில் கலந்து கட்டி அடிக்கிறார். அதே போலத் தான் சண்டை காட்சிகளும். குறிப்பாக Sitting Bull 'ஆந்திரா' குண்டுராவை அசால்டாக தூக்கி தோளில் நிறுத்தும் காட்சி இருக்கே, கலக்கிட்டிங்க தலைவரே (இந்த படத்தில் நடிக்கும்போது தலைவருக்கு வயது 49 என்பதை நினைவில் கொள்ளவேண்டும்). தலைவர் பொதுவாகவே அழகு தான் என்றாலும், இந்த படத்தில் பலவிதமான உடைகளில் இன்னும் அழகாக தெரிகிறார் மக்கள் திலகம்.
கீதா என்கிற 'சின்ன பாப்பாவாக' கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி. அன்றைய காதல் கதாநாயகிக்கே உரிய நடையில் நளினம், காதல் சொட்டும் பார்வை என்று நடிப்பில் பல பரிமாணங்களை காட்டுகிறார். அதுவும் அவரின் குரல், நிஜக் குயிலே தோற்று விடும் போங்கள். சமையற்காரன் ராமையாவாக நாகேஷ் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் வெடிச் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள். 'உங்க கிட்ட நிறைய பணம் இருக்கு. என் கிட்ட கொஞ்சம்... கூட பணம் இல்ல' என்று நாகேஷ் வசனம் பேசும் போது செய்யும் ஏற்ற இறக்கம், நாகேஷால் மட்டுமே செய்ய முடிகிற விஷயம். சரோஜா தேவியின் அப்பாவாக வரும் T.R. ராமச்சந்திரன், மனோரமா, S.A. அசோகன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவு, மாருதி ராவ். ஈஸ்டர் மேன் கலரில், சிம்லாவை மிகவும் அழகாக தன் கேமராவில் படம் பிடித்திருக்கிறார். பாடலாசிரியர் வாலி & M.S. விஸ்வநாதனின் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மயக்கும் ரகம். புதிய வானம், நான் பார்த்ததிலே, ராஜாவின் பார்வை, நாடோடி மற்றும் அன்பே வா போன்ற பாடல்கள் அனைத்தும் அருமை. எனக்கு இந்த படத்தில் மிகவும் பிடித்த பாடல்கள் புதிய வானம் & நாடோடி. வசனம், ஆரூர் தாஸ். 'ஒருத்தன் ஏழையா கூட இருக்கலாம், ஆனா எந்திரமா மட்டும் இருக்கவே கூடாது', ஒருத்தன் நொண்டியா கூட இருக்கலாம், ஆனா ஒண்டியா மாத்திரம் இருக்கவே கூடாது' என்று மிகவும் யதார்த்தமான வசனங்கள் மூலம் நம்மை கவர்கிறார். கதை & இயக்கம், A.C. திருலோகசந்தர். படத்தின் எந்த இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாமல் படத்தை கொண்டு சென்ற விதம், மிகவும் அருமை. எந்த ஒரு இடத்திலும் 'Come September' படத்தின் ஒரு காட்சியைக் கூட காப்பியடிக்காமல், வெறும் மூலக்கதையை வைத்து அற்புதமான திரைக்கதையை இயற்றி படம் எடுத்தது Simply Super. படத்தை தயாரித்தது, AVM Productions.
'அன்பே வா' திரைப்படம், 1966 அன்று வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. அந்த வருடத்தில் எம்.ஜி.ஆர் நடித்த 9 படங்களில், இந்த படம் தான் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனத்திற்கு ஆன தொகை, 30 லட்சம். ஆனால் வசூல் ஆன தொகையோ 62 லட்சம். ஏ.வி.எம் நிறுவனம், எம்.ஜி.ஆருக்கு தந்த சம்பளம் 3 லட்சம். இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும், ராமாவரம் தோட்டத்தில் நன்றாக ரிகர்சல் பார்க்கப்பட்ட பின், படமாக்கப்பட்டது. காரணம், எம்.ஜி.ஆரின் தொழில் பக்தி மற்றும் ஸ்டன்ட் ஆட்களுக்கு எந்த காயமும் ஏற்படக்கூடாது என்ற அக்கறை. இந்த படம் வெள்ளிவிழாவை நோக்கிக் ஓடிக்கொண்டிருந்த போது, திடீரென்று அன்பே வா படம் அனைத்து திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. காரணம், ஏ.வி.எம்மின் மற்றொரு படம் திரைக்கு புதிதாக வந்திருந்தது. எம்.ஜி.ஆர் செட்டியாரிடம், 'படம் வெள்ளிவிழா நாள் வரைக்கும் இருக்கட்டும். அப்போ தான் படத்துக்கு ஒரு Record கிடைக்கும்' என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதனால் தான் எம்.ஜி.ஆருக்கு 'அன்பே வா' திரைப்படம் ஏ.வி.எம் நிறுவனத்தோடு முதலும், கடைசியுமான படமாக போய் விட்டது............... Thanks wa.,
Bookmarks