Page 2 of 402 FirstFirst 12341252102 ... LastLast
Results 11 to 20 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மிகப்பெரிய சோதனையான காலகட்டத்தில் இரட்டைத் தலைமையின் கீழ், இரட்டை இலையின் செல்வாக்கில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களைக் கைப்பற்றி தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
    இடைத்தேர்தல் நடந்த 13 பேரவைத் தொகுதிகளில் தொடக்கத்தில் முன்னணியில் இருந்த ஆளும் அதிமுக, மிகக் குறைவான வித்தியாசத்தில்தான் 4 தொகுதிகளை திமுகவிடம் இழந்து, 9 தொகுதிகளில் வெற்றி பெற்று தனது ஆட்சியை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.
    அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய 1972 முதல் ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, அதைத் தொடர்ந்து எடப்பாடி கே.பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கும் இன்றைய காலகட்டம் வரை, அதிமுக தனது தொண்டர்களையும், வாக்காளர்களையும் தக்க வைத்துக் கொண்டிருப்பதற்கு இரட்டை இலைச் சின்னம்தான் மிக முக்கியமான காரணம் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
    அந்தக் கட்சியின் எழுச்சிக்கு அடிநாதமாக இருப்பது இரட்டை இலை. கட்சிக்குள் எத்தனை கோஷ்டி பூசல்கள் இருந்தாலும் தேர்தலைச் சந்திக்கும்போது ஒருங்கிணைந்து, எம்ஜிஆரின் சின்னமான இரட்டை இலை தோற்றுவிடக்கூடாது என்கிற வெறித்தனமான ஈடுபாட்டுடன் களப்பணியாற்றி, வெற்றியை வசப்படுத்தும் மாபெரும் தொண்டர்கள் கூட்டம்தான் அதிமுகவின் மிகப்பெரிய பலம்.
    6 மாதங்களில் மாபெரும் வெற்றி: கட்சி தொடங்கிய 6 மாதங்களிலேயே திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. எம்ஜிஆர் என்ற ஒற்றைத் தலைமையில் 1977, 1980, 1985 ஆகிய மூன்று தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து ஆட்சி அமைத்தது. திமுக தலைவர் கருணாநிதியால்கூட அசைக்க முடியாத ஆளுமையாக எம்ஜிஆர் இருந்த நிலையிலும், அவரது தலைமைக்கு எதிராக எஸ்.டி.சோமசுந்தரம் உள்பட சிலர் அவ்வப்போது போர்க்கொடி தூக்கினர். ஆனால், தனது அரசியல் சாதுர்யத்தால் அவர்களை எல்லாம் எளிதாக எதிர்கொண்டார் எம்ஜிஆர். அந்த வெற்றிகள் கட்சியின் சின்னமான இரட்டை இலையைத் தொண்டர்கள் மத்தியில் மேலும் அழுத்தமாகப் பதிவு செய்தன.
    ஜெ.-ஜா. அணி: 1987-இல் எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் ஓர் அணியும், ஜெயலலிதா தலைமையில் மற்றோர் அணியும் உருவாகி இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இரட்டை இலைச் சின்னம் இல்லாத நிலையில், 1989 பேரவைத் தேர்தலில் இரட்டை புறா சின்னத்தில் போட்டியிட்ட ஜானகி தலைமையிலான அணிக்கு மாநிலம் முழுவதும் 9 .19 சதவீத வாக்குகளே கிடைத்தன. ஆனால், சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு 22.37 சதவீத வாக்குகள் கிடைத்தன.
    மீண்டும் ஒற்றைத் தலைமை: இதைத் தொடர்ந்து, தனக்கான செல்வாக்கு குறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு அரசியலில் இருந்து ஜானகி விலகியதால், ஜெயலலிதா எனும் ஒற்றைத் தலைமையின் கீழ் மீண்டும் அதிமுக செயலாற்றத் தொடங்கியது. இதையடுத்து நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்களில் இரட்டை இலை மீண்டும் வெற்றிச் சின்னமாக மாறியது.
    தொடர்ந்து, ஜெயலலிதா தலைமையின் கீழ் அதிமுக 1991-இல் 59.79 சதவீத வாக்குகளுடன் ஆட்சியைப் பிடித்தாலும், 1996 பேரவைத் தேர்தலில் 26.10 சதவீதமாக வாக்கு வங்கி சரிந்ததால் ஆட்சியை இழந்தது. அப்போதும், ஜெயலலிதாவுக்கு எதிராக சு.திருநாவுக்கரசர் போன்றவர்கள் போர்க்கொடி தூக்கினர். ஆனால், ஜெயலலிதாவின் வசீகரத் தலைமைக்கு முன்னால் போர்க்கொடி தூக்கியவர்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை. ஜெயலலிதாவுக்கும் இரட்டை இலை மிகப்பெரிய பலமாக இருந்தது.
    வரலாற்றுச் சாதனை: இதையடுத்து, 2001-இல் 50.09 சதவீத வாக்கு வங்கியுடன் மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. 2006-இல் ஜெயலலிதாவால் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியாவிட்டாலும், 39.91 சதவீத வாக்குகளை அதிமுக பெற்றதால், திமுகவால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை பலத்துடன் கூடிய ஆட்சியையே அமைக்க முடிந்தது. ஆனால், 2011-இல் 51.93 சதவீத வாக்குகளுடனும், 2016-இல் 41 சதவீத வாக்குகளுடனும் அதிமுக ஆட்சியைத் தொடர்ந்து இரண்டு முறை பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது.
    ஜெயலலிதா தலைமையிலான ஒற்றைத் தலைமைக்கு கடைசியாக கிடைத்த வாக்கு விகிதம் 41%. இப்போது எடப்பாடி பழனிசாமி-பன்னீர் செல்வம் தலைமையிலான இரட்டைத் தலைமையின் கீழ் இயங்கும் அதிமுகவுக்கு, அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 38.2% வாக்குகள் கிடைத்திருக்கின்றன என்பதிலிருந்து, அதிமுக மிகப்பெரிய செல்வாக்குச் சரிவை அடைந்துவிடவில்லை என்பது தெரிகிறது.
    மவுசு குறையாத இரட்டை இலை: எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இதுவரை இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருந்ததால், மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்த அனுபவம் குறைவுதான். ஆனால், கட்சித் தலைமைக்கு வந்த ஓராண்டுக்குள் சந்தித்த தேர்தலில், 38.2% வாக்குகளைத் தக்கவைப்பது என்பது குறிப்பிடத்தக்க சாதனை. தலைமுறைகள் தாண்டினாலும் எம்ஜிஆரின் இரட்டை இலைச் சின்னத்துக்கு இன்னமும் மக்கள் மத்தியில் ஆதரவு குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.
    அதேவேளையில், மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 18 சதவீதமாக குறைந்துள்ளதே என்ற விமர்சனம் எழாமல் இல்லை. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கும் முறையில் மிகப்பெரிய வேறுபாடு எப்போதும் இருப்பதைக் காண முடியும். நடந்து முடிந்த பேரவை இடைத்தேர்தல் முடிவுகளும் இதைத்தான் உணர்த்துகின்றன.
    வாக்குகள் சொல்லும் செய்தி: பேரவைத் தொகுதி இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தலில் (அடைப்புக்குறிக்குள்) அதிமுக பெற்ற வாக்குகள் விவரம்: சோளிங்கர்-1,03,545 (87,274), பாப்பிரெட்டிப்பட்டி-1,03,981 (94,029), அரூர்-88,632 (65,072), நிலக்கோட்டை-90,982 (62,701), மானாமதுரை-85,228 (60,059), சாத்தூர்-76,820 (63,411), விளாத்திக்குளம்-70,139 (56,312), பரமக்குடி-82,438 (81,676), சூலூர்-1,00,782 (74,883). (இந்த 9 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது).
    திருப்போரூர்-82,335 (76,540), ஒட்டப்பிடாரம்-53,584 (27,373), திருப்பரங்குன்றம்-83,038 (59,538), அரவக்குறிச்சி-59,843 (37,518), தஞ்சாவூர்-54,000 (35,787), பெரம்பூர் -38,371 (26,759) ஆகிய 6 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் சட்டப் பேரவை தொகுதிகளில் அதிக வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது.
    பேரவை இடைத்தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற 45.1%-விட, 7% குறைவாக அதிமுக 38.2 சதவீதத்தைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், ஜெயலலிதா தலைமைக்கு கிடைத்த 41% வாக்கு வங்கியில் இருந்து 3% மட்டுமே குறைந்துள்ளது. அமமுகவால் பிரிந்த 5.5% வாக்கு வங்கிச் சரிவையும் ஈடுகட்டி, திமுகவுக்குப் போட்டியாகக் களத்தில் நின்று 9 பேரவைத் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதே மிகப்பெரிய சாதனைதான்.
    நம்பிக்கை தரும் இரட்டைத் தலைமை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவை 3-ஆவது இடத்துக்கு தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடித்ததும், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக தலைமைக்குப் போட்டியாக கருதப்பட்ட தினகரனின் வாக்குகளை 5%-ஆகக் குறைத்ததுடன் அதிமுக தனது ஆட்சியைத் தக்கவைக்க உதவியதும் எம்ஜிஆரின் இரட்டை இலைச் சின்னம்தான்.
    ஒற்றைத் தலைமையோ, இரட்டைத் தலைமையோ, அதிமுகவின் பலம் "இரட்டை இலை' சின்னம்தான். அமமுகவின் தோல்வி "இரட்டை இலை' சின்னத்தை மேலும் வலுப்படுத்தக் கூடும், யார் கண்டது?.............. நன்றி... 11-06-2019 தினமணி நாளிதழ் கட்டுரை...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இலங்கை கண்டியில் 16.09.2018 அன்று நடைபெற்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட திரு. சைதை துரைசாமி அவர்களுக்கு, இலங்கை குடியரசின் மாண்புமிகு சபாநாயகர் திரு.ஜயசூரியா அவர்களும், இலங்கையின் மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களும் எம்.ஜி.ஆர் விருதை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்களும் கலந்து கொண்டார்........... Thanks wa,

  4. #13
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    சூப்பர் ஹீரோ மாத இதழ் -ஜூன் 2019
    01/09/19 அன்று நடைபெற இருந்த நிகழ்ச்சி தவிர்க்க முடியாத சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . நடைபெறும் தேதி பின்னர் பின்னர் அறிவிக்கப்படும்
    Last edited by puratchi nadigar mgr; 12th June 2019 at 11:21 PM.

  5. #14
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகமும் சரோஜாதேவியும் நடித்த 26 படங்களின் பெயரில் ஒரு சிறு தொகுப்பு




    திருடாதே என்று அறிவுரை கூறியவரும் , பெற்றால்தான் பிள்ளையா - என பாசமுடன் கேள்வி கேட்டவரின்
    நான் ஆணையிட்டால் என்ற நாடோடி மன்னன் கண்டெடுத்த பறக்கும் பாவை .எங்கவீட்டு பிள்ளை எம்ஜிஆரின் ஆசைமுகம் கண்டு தாலிபாக்கியம் பெற்று அன்பே வா என்று பாசம் கொண்ட பெரிய இடத்து பெண் .நீதிக்கு பின் பாசம் - தாய் சொல்லைதட்டாதே என்று கலங்கரை விளக்காக வாழ்ந்த படகோட்டியின் பணக்கார குடும்பம்

    அரசகட்டளை ஏற்று என்கடமை என்று வாழ்ந்த தெய்வத்தாய் பெற்றெடுத்த குடும்பத்தலைவன் தாயை காத்த தனயன். தாயின் மடியில் தவழ்ந்த நாடோடியின் மாடப்புறா கண்ட பணத் தோட்டததில் என்றென்றும் தர்மம் தலைகாக்கும் ............ Thanks wa.,

  6. #15
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    'உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்... நீ வேலை தருவியா மாட்டியா?' - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை. அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், 'போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க... பேசலாம்' என்கிறார். ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், 'இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?''போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்' என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர்... அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்! அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்... கூடவே அரசாங்க சம்பள கவர். புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. ............ Thanks wa.,

  7. #16
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    குடியிருந்த கோயில்
    ______________________
    மக்கள் திலகத்தின் எழத்துகளை படித்தவர்களுக்கு தான் தெரியும் அவர் ஒரு சிறந்த எழத்தாளர் சினிமாதுறையில் அவருடன் பணியாற்றியவர்களுக்கு தெரியும் அவர் சிறந்த இயக்குனர் எடிடட்ர் பாலாசியர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்கேமரா நுணுக்கம் அறிந்தவர் ஸ்டன்ட் மாஸ்டர்களுக்கு தெரியும் அனைத்து வகை சண்டையிலும் தேர்ச்சி பெற்றவர் சிறந்த தயாரிப்பாளருங்கூட

    மனிதநேயர் , வள்ளல் தலைவர் இசை ஞானம் உள்ளவர் இப்படி பலதுறைகளில் ஈடுபட்டு முத்திரை பதித்தவர் உலகிலேயே மக்கள் திலகம் ஒருவர் தான்
    நடிப்பிலும் முத்திரை பதிக்காமலா இருப்பார்
    நான் யார் ? நான் யார் ? நீ யார் ? இந்த பாடல் காட்சியை பாருங்கள் உண்மை புரியும் !

    சில வருடங்களுக்கு முன் இலங்கையில் இருந்து வந்த பத்திரிகையில் கேள்வி பதில்
    பாடல் காட்சிகளில் அசத்துபவர் யார் ?
    பதில் : அன்றும் இன்றும் எம் ஜி ஆர் !

    ஹயாத் !............ Thanks wa.,

  8. #17
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திராவிட ஆட்சி வந்த பின் சாதாரண மக்களின் வாழ்வு உயர்வு கண்டது
    67 க்கு முன் காங்கிரஸ் காமராஜ் ஆட்சியில் மக்கள் மிகவும் கஷ்ட நிலையில் இருர்தார்கள் மேல் ஆதிக்க சக்தியின் தாக்கம் பெரும் பணக்காரர்களே பதவிகளில் வர முடிந்தது
    பஞ்சம் பசி ஏழ்மை இதுவே சில அடிப்படை தேவைகள் நடை முறை படுத்த பட்டதை இன்று பெரிய சாதனையாக கொண்டாடுவதும் திராவிட இயக்கத்தை குறை கூறுவதும் வேடிக்கை சில தலைவர்களால் திராவிட ஆட்சியில் தவறு நடந்தாலும் தமிழ் நாடு வளர்ச்சி நல்ல நிலையே மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாடு
    எம் ஜி ஆரால் ஆட்சியில் அமர்ந்த திராவிட இன ஆட்சி என்றும் தமிழரின் அடையாளமாக திகழும்

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்............ Thanks wa.,

  9. #18
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்..ஜி ஆரை நோக்கி--
    ---------------------------------------------
    எம்.ஜி.ஆர் பற்றிய இந்தப் பதிவு--
    அறிந்தவர்களுக்கு ஆனந்தமாகவும்--
    அறியாதவர்களுக்கு பேரானந்தமாகவும் இருக்கும்!
    அது இதயக்கனி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி நடை பெறும் நேரம்!
    சிதம்பரம் அருகில் பிச்சாவரம் என்ற அடர்ந்த காடு வழியே ஒரு காட்டாற்றின் மறு பகுதியில் ஷூட்டிங்!!
    அந்த ஆற்றில் போட்டில் மட்டுமே பயணம் செய்ய இயலும் என்ற நிலை!-காரணம்??
    அந்தக் காட்டு ஆற்றில் முதலைகள் அதிகம்.
    மீனவர்களே மீன் பிடிக்க அஞ்சுவார்கள்.
    ஆபத்து நிறைந்த இந்த ஆற்றில் யாரும் நீந்தவோ மீன் பிடிக்கவோ கூடாது என்று அரசே எச்சரிக்கைப் பலகை மூலம் உச்சரித்திருந்த சூழல்!!
    ஆபத்து சூழல் மிகுந்த--
    அபாய சுழல் நிறைந்த அந்த ஆற்றில்-
    திடீர் என்று இருவர்--
    உடலை எச்சமாகவும்,,உயிரை துச்சமாகவும் நினைத்து நீந்த ஆரம்பிக்கிறார்கள்??
    அக்--கரையில் எம்.ஜி.ஆரைப் பார்க்கும்-
    அக்கறை ஒன்றே அவர்கள் சிந்தையில் இருக்கிறது?
    இப்படி உயிரையும் பணயம் வைத்து நீந்தி வந்திருக்கும் அந்த இரு ரசிகர்களை திகைப்புடன் பார்க்கிறார் எம்.ஜி.ஆர்
    அண்ணே!! உங்களைப் பார்க்கும் ஆசையில் எங்க உயிரைப் பத்தி நாங்க கவலைப்பட என்ன இருக்கு??--அவர்களின் வெள்ளை மனதின் கொள்ளை ஆசையைக் கண்டு பிள்ளை மனதோடு எம்.ஜி.ஆரே கலங்குகிறார்!
    அதில் ஒரு ரசிகரோ,,ஆர்வ மிகுதியில் ஒப்பனையில் இருந்த எம்.ஜி.ஆரை---
    ஈரம் சொட்டச் சொட்ட அணைத்துக் கொள்கிறார்??
    தன் மேக்கப் பாழானது பற்றி துளியும் கவலைப்படாமல் அவர்களோடு மகிழ்ச்சியோடு உரையாடி,,அவர்களை போட்டின் மூலம் வழி அனுப்புகிறார் எம்.ஜி.ஆர்!!
    நினைத்துப்பாருங்கள்!
    இன்று ஓரிரு படங்கள் நடித்துவிட்டாலே ஓவர் பந்தா காட்டும் நடிகர்கர்கள்,,செல்ஃபி எடுத்துக் கொள்ளக் கூட ரசிகர்களை அனுமதிக்கிறார்களா??--இல்லை--
    உயிரையும் மதிக்காது இப்படி துணிந்து எம்.ஜி.ஆரைப் பார்க்கும் ரசிகர்கள் உலகத்தில் வேறு எந்த நடிகர்களுக்காவது இருந்திருக்கிறார்களா??
    கொடுப்பினை அவரைப் பார்ப்பது என்று ஆவலாக வரும் ரசிகர்களைத் தனது--
    ஒப்பனை கலைகிறதே என்ற கோபத்தில்-
    தடுப்பணை போடாது அவர்களது அன்பை ஏற்ற எம்.ஜி.ஆரைப் போல வேறு எவராது செயல்பட்டு இருக்கிறார்களா???!!!!!............ Thanks wa.,

  10. #19
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ‘அன்பே வா’ படத்தின் வேலைகள் தொடங்கும்போதே இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக வரும் என்பது தெரிந்தது. இயக்குநர் திருலோகசந்தர் எல்லா வேலைகளையும் நேர்த்தியாக திட்டமிட்டார். குமரன் சார் முன்னிலையில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் வித்தியாசமான மெட்டுகளை அமைக்க, அதற்கு கவிஞர் வாலி புதுமையான வார்த்தைகளை புரட்சி தலைவருக்காகவே எழுதினார்.

    படப்பிடிப்புக்காக எல்லோரும் ஊட்டிக்குப் புறப்பட்டோம். அங்கே போனதும், எம்.ஜி.ஆர் என்னை அழைத் தார். ‘‘நம்ம யூனிட்ல எத்தனை பேர் இருக்கிறோம் என்ற லிஸ்ட் கொடுங்க’’ என்றார். எதற்காக என்று தெரியாததால், ஒரு வார்த்தை சரவணன் சாரிடமும், திருலோகசந்தர் சாரிடமும் கேட்டுவிட லாம் என்று அவர்களிடம் கேட்டேன். ‘‘எங்களோட பெயர்களை விட்டுட்டு மத்தவங்க பெயர்களைக் கொடுங்க’’ என்றார்கள். அது மாதிரியே எம்.ஜி.ஆர் அவர்களிடம் லிஸ்ட் கொடுத்தேன். அந்த லிஸ்ட்டை வாங்கி பார்த்த எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலாளி, இயக்குநர் பெயர்கள் இல்லையே. இது எப்படி முழு லிஸ்ட்?’’ என்றார். முதலாளி, இயக்குநர் உட்பட யூனிட்டில் இருந்த அத்தனை பேருக்கும் ஸ்வெட்டர், மப்ளர் வாங்கி அன்புடன் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

    அதை நான் அணிந்து உட்கார்ந்துகொண்டு இருக்கும்கா ட்சியை இங்கே புகைப்படத்தில் பார்க்கலாம். உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எம்.ஜி.ஆர் மனதில் இயல்பாகவே ஊறிப்போன ஒன்று என்பதற்கு இது ஓர் உதாரணம்.

    ஊட்டியில் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் பெரும் கூட்டம் கூடியது. அப்போது முருகன் சார், ‘‘ஊட்டியில் இருந்து மைசூர் போகும் வழியில் ஒரு லொக்கேஷன் மஞ்சள் பூக்களோடு வண்ணமயமாக இருக்கிறது. மக்கள் நடமாட்டமே இல்லை. அந்த இடத்தில் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் நமட்டுச் சிரிப்போடு ‘‘ஓ.கே. போகலாம்’’ என்று சொல்லி புறப்பட்டார். அங்கு போய் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். நடமாட் டமே இல்லாத இடத்தில் முதலில் ஒரு தலை தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் நான்கு தலைகள் தெரிந்தன. அடுத்த நிமிடங்களில் அதுவே பத்தாகி, நூறாகி பின்னர் ஆயிரத்துக்கும் மேல் தலைகளாகிவிட்டன.

    முருகன் சாரை எம்.ஜி.ஆர் திரும்பிப் பார்க்க, அவர் ஓடியே போய்ட்டார். அந்த அடர்ந்த காட்டுப் பகுதியிலும் எம்.ஜி.ஆருக்கு அப்படி ஒரு செல்வாக்கு. நாங்கள் கூட்டத்தை ஒதுக்கி அவரை வெளியில் கொண்டுவர முயற்சிக்க… எம்.ஜி.ஆர் எங்களிடம், ‘‘நீங்கள் கஷ்டப்பட்டுவிடுவீர்கள். ரசிகர்களை என்னிடம் விட்டுவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று ரசிகர்கள் தன்னை நெருங்காமலும், தள்ளாமலும், தழுவாமலும் சாதூர்யமாக மக்களை சமாளித்து வெளியே வந்து காரில் ஏறி பறந்தார்.

    - எஸ்.பி.முத்துராமன் ( தி இந்து ).......... Thanks wa.,

  11. #20
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "எம்.ஜி.யார். பெயரில் மன்றம் அமைத்து சேவை செய்து வந்தால் ஒரு சிறைச்சாலையை மூடுவதற்கு சமம்". கி.ஆ.பெ.விஸ்வநாதன்.

    * தந்தை பெரியார்:
    எம்.ஜி.ஆருக்கு ரொம்ப பெரிய மனசு.ஏழைகளுக்கு உதவும் கருணை உள்ளம் கொண்டவர்.

    *பேரறிஞர் அண்ணா:
    எனது அருமைத் தம்பி எம்.ஜி.ஆரின் உருவம் சிறியது. ஆனால் உள்ளம் பெரியது. அவர் கழகத்தின் கண்மணி. கலை உலகின் நன்மணி. குணத்தில் தங்கம். கொதித்தால் சிங்கம்.

    *டாக்டர் மு.வரதராசனார்:
    கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் வேலிகளை மூன்று பக்கமும் வைத்து நான்காவது பக்கம் பொது நலம் என்ற அரண் கட்டி வாழும் நல்லவர்தான் எம்.ஜி.ஆர்.

    *அன்னை தெரசா:
    மக்கள் ஒவ்வொருவரும் மனிதநேய உணர்வுடன் அன்புடன் உதவ வேண்டும் என்று ஏசு கிறிஸ்து கூறினார். அவர் வழியில் திரு.எம்.ஜி.ஆர். செயல்படுகிறார்.

    *முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்:
    மனிதத் தங்கம் ராமச்சந்திரன். நல் வழியில் சம்பாதித்த பணத்தை நல்ல வழியில் செலவிடுகிறார். அவர் பெயரில் மன்றம் அமைத்து சேவை செய்து வந்தால் ஒரு சிறைச்சாலையை மூடுவதற்கு சமம்.

    *திரு. ஜான் மெக்காலம், ஆஸ்திரேலிய படத் தயாரிப்பாளர், நடிகர்:
    இந்தியத் திரை உலகில் நிரந்தரமான ஓரிடத்தை எம்.ஜி.ஆர்.பிடித்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவருடைய இயற்கையான நடிப்பு............ Thanks wa.,

Page 2 of 402 FirstFirst 12341252102 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •