-
3rd October 2019, 12:48 AM
#1421
Junior Member
Diamond Hubber
தொடர்ந்து மும்முறை முதல்வர்
-
3rd October 2019 12:48 AM
# ADS
Circuit advertisement
-
3rd October 2019, 12:55 AM
#1422
Junior Member
Diamond Hubber
-
3rd October 2019, 01:00 AM
#1423
Junior Member
Diamond Hubber
-
3rd October 2019, 01:04 AM
#1424
Junior Member
Diamond Hubber
-
3rd October 2019, 01:07 AM
#1425
Junior Member
Diamond Hubber
-
3rd October 2019, 01:07 AM
#1426
Junior Member
Diamond Hubber
-
3rd October 2019, 01:09 AM
#1427
Junior Member
Diamond Hubber
நன்றி - திரு சாமுவேல்
-
3rd October 2019, 01:10 AM
#1428
Junior Member
Diamond Hubber
#உயர்ந்தகுணம்
பி.ஆர்.பந்துலு தாயாரித்து இயக்கிக் கொண்டிருந்த படமான “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” துவக்க நாளின்போது நடைபெற்ற ஒரு உருக்கமான நிகழ்வு...
எம்ஜிஆரிடம் காணப்பட்ட மனிதாபிமானத்தையும், அவர் எத்தகைய தாராள மனம் படைத்தவர், கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர் என்பதையும் நிரூபணமாக்கும் சம்பவம் இது.
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒப்பனை அறையில் இருந்தபோது பந்துலு உள்ளே வருகிறார். பொதுவாகவே பந்துலு வந்தாலே எம்.ஜி.ஆர் எழுந்து நின்று மரியாதை அளிப்பது வழக்கம். காரணம் எம்ஜிஆரை விட அவர் ஏழு வயது மூத்தவர். அன்றும் அவ்வாறே அவர் எழுந்து நிற்க, பந்துலு அவரை அமரச்சொல்லி சைகை காட்டுகிறார். “தம்பி, உங்களை வைச்சு இப்ப படம் எடுக்கிறேன். இதுவரை நஷ்டமேதும் இல்லாம மூணு, நாலு படம் எடுத்துட்டேன். இது என் இலட்சியப் படம். இந்த படத்தோட வெற்றியையும் நான் பார்த்துட்டேன்னா நிம்மதியா கண்ணை மூடிடுவேன். அதுக்கு நீங்க தான் ஒத்துழைப்புத் தரணும்” என்று உருக்கமாகக் கூறினார்.
உணர்ச்சி வசப்பட்ட மக்கள் திலகம், ஒப்பனை நாற்காலியிலிருந்து இறங்கி வந்து பந்துலுவை அப்படியே அணைத்துக் கட்டிப் பிடித்துக்கொண்டார். “அண்ணே இந்த மாதிரி அவச்சொல் எல்லாம் உங்க வாயாலே வரவேக்கூடாது..." “என்னமோ தம்பி. நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்னு என் உள்மனசு சொல்லுது” என்றார் பந்துலு
“அப்படிச் சொல்லாதீங்கண்ணே... நீங்க நீண்டகாலம் வாழணும் , எத்தனை படம் வேணும்னாலும் எடுங்க . என்னால முடிஞ்ச உதவியை செய்றேன். இந்தப் படத்துக்கு எத்தனை நாள் கால்ஷீட் தேவைப்படும்? எப்பப்ப வேணும்னு சொல்லிட்டா நான் மத்த எல்லா படத்தையும் இப்ப இருக்குற கட்சி வேலைகளையும் நிறுத்திட்டு இத மொதல்ல முடிச்சுத் தர்றேன்” என்கிறார் மக்கள் திலகம் “இது என் கடைசி படமாக இருந்தாலும் இருக்கும். இது நல்லா பிரமாண்டமா இருக்கணும்.” ‘யாருக்கு இது கடைசிப் படம்னு அவனல்ல தீர்மானிக்கணும். நீங்க போய் ஷாட் வைங்க , இதோ வந்துட்டேன் ” என்று அவரைத் தேற்றுகிறார் மக்கள் திலகம். (இருவருக்கும் அதுதான் கடைசிப் படம் என காலம் நிர்ணயத்திருந்ததை அவர்கள் அறிந்திருக்கவில்லை)
பந்துலு சொன்னது போலவே அவர் வாக்கும் பலித்தும் போகிறது. ஆம். படத்தை முடிக்க பணம் புரட்டப் போன பந்துலு பெங்களூரிலேயே காலமாகிப் போகிறார். அவரது மறைவுக்கு பின்னர் சித்ரா கிருஷ்ணசாமியை அழைத்த மக்கள் திலகம் ”பந்துலு சாருக்கு நீங்க நெருங்கிய நண்பர் , இந்தப் படத்தை நான் எப்படியாவது முடித்தே ஆகணும் , அவர் எப்படி எல்லாம் எடுக்க நினைத்தாரோ அப்படி எடுக்க நினைக்கறேன்... அதை முடிக்க ஒரு தயாரிப்பாளரை நீங்களே கொண்டு வாங்க” என்கிறார்.
“அந்தப் படத்துக்கு மட்டுமல்ல, பந்துலு சாருக்கும் என் காணிக்கையை அவுங்க பேசிய சம்பளத்தில் பாதி. பந்துலு சார் டைரக்ட் செய்ய இருந்தாங்க. இப்ப அவர் இல்லே . அதனாலே டைரக்ஷன் வேலையை நானே பார்த்துக்கறேன். எனக்கு ஒண்ணும் வேணாம்” என்றும் சொல்கிறார் மக்கள் திலகம் . படத்தை செலவில்லாமல் சென்னையிலேயே எடுக்கலாம் என்று சொன்ன போது “வேணாங்க , ஜெய்ப்பூர் பந்துலு சார் தாய் வீடு . அந்த ஊரை நம்ம நாட்டுக்கு தெரிய வைச்சவங்க அவுங்க . அங்கேயே போய் எடுக்கலாம் ” என்கிறார் மக்கள் திலகம். அங்கேயே காட்சிகளும் படமாக்கப் பட்டது.
இத்தனைக்கும் அப்பொழுது 1976 தேர்தல் களம். அரசியல் பரபரப்பு வேற. அதற்கிடையிலும் ஓய்வேயில்லாமல் பெரியவர் பந்துலு அவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற இடையுறாது உழைத்து தன் நன்றிக்கடனை பூர்த்தி செய்கிறார் மக்கள் திலகம்.
படமும் முடிந்தது... தேர்தலும் முடிந்தது... டப்பிங் வேலை மட்டும் முடியாமல் இருந்தது. கட்சியின் வெற்றிக்கு பிறகு மக்கள் திலகம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்க வேண்டும் , நாடே எதிர்பார்த்து இருந்த சூழலில், பதவியேற்பை சில நாட்கள் தள்ளிப் போட்டார் மக்கள் திலகம் . “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” உட்பட மூன்று படங்களின் டப்பிங் வேலையை முடித்துக் கொடுத்தார் … பதவியேற்புக்கு ஒரு நாள் முன்னர்... “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” டப்பிங் வேலை முடிந்தது... மைக்கை தொட்டு முத்தமிட்டார் மக்கள் திலகம். இரவு 11 மணிக்கு வாகினி டப்பிங் தியேட்டருக்கு வெளியே வந்து நிலத்தை தொட்டு முத்தமிட்டார். பணியை முடித்த பெருமிதத்தில் நிம்மதியடைந்தார்.
எம்ஜிஆர் என்ற உன்னத மனிதரின் உயர்ந்த குணத்திற்கு இதை விடச் சிறப்பாக எந்த சம்பவத்தைக் கூறமுடியும்???......... Thanks.........
-
3rd October 2019, 01:10 AM
#1429
Junior Member
Diamond Hubber
-
3rd October 2019, 01:27 AM
#1430
Junior Member
Diamond Hubber
நண்பர் திரு சுந்தரபாண்டியன், நம் திரியில் ஏன் தேவையில்லாத நாளிதழ் விளம்பரங்களை இங்கே போடுகிறீர்?!... நமது தலைவருக்கு எதிரே
கூட ஒப்பிட கொஞ்சமும் தகுதியில்லாத மாற்று முகாம் ...... செய்தி தேவையா? என்ன... அதான் ஊரே நாறி கிடக்குது! காசு கொடுத்து ஓட்டுறது எல்லாருக்கும் தெரிச்சிருக்கே... அதை பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாமல் ஓட்டுறங்க... அது மட்டுமல்ல, இன்னும் 2 மாதம் கழித்து ஒரு நாள் ஒரு காட்சியாவது கெஞ்சி கூத்தாடி போட்டு 25 வாரம் கொண்டாடுவர். பாருங்க நாங்க சொல்றது நடக்குத்தானு........ Thanks...
Bookmarks