Page 141 of 402 FirstFirst ... 4191131139140141142143151191241 ... LastLast
Results 1,401 to 1,410 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1401
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    விரைவில் ... திரையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அளிக்கும் "குமரிகோட்டம்" , டிஜிட்டல் உருவாக்கம் செய்து வெளியிட உரிமைகள் வாங்கப்பட்டிருக்கிறது... என்ற சிறப்பு தகவலுடன்.............

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1402
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நூதன திருட்டு, நுணுக்கமான திருட்டு என கேள்வி பட்டிருப்போம்... அந்த வகையிலான 'குபீர்' திருட்டுத்தனமான 100 வது நாள் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதை பார்த்த உள்ளூர் (சென்னை) படித்த அறிவிலிகள்(முட்டாள்கள்), மற்றும் படிக்காத அறிவாளிகள் இதை பார்த்து குளம்பியுள்ளனர்.. ஏன் இந்த கபட நாடகம், சூது வாது.. பணம் பாதாளம் வரைப் பாய்ந்துள்ளது என்று பேச்சு. இப்படியும் ஒரு பொழப்பு☺️......... Thanks.........

  4. #1403
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வரும் வெள்ளி முதல் (04/10/19)* சென்னை அகஸ்தியாவில் ஆயுத பூஜை திருநாளை முன்னிட்டு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய*"நாடோடி மன்னன் " தினசரி 2 காட்சிகளில் வெளியாகிறது .



    இந்த ஆண்டில் சென்னை அகஸ்தியாவில் ,ரிக்ஷாக்காரன் ,* தர்மம் தலை காக்கும், எங்க வீட்டு பிள்ளை, காவல்காரன், நினைத்ததை முடிப்பவன், அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன் , நல்ல நேரம்,குடியிருந்த கோயில்* ஆகிய படங்களை தொடர்ந்து* 10 வது காவியமாக* நாடோடி மன்னன் வெளியாகி வெற்றிநடை காண உள்ளது .
    Last edited by puratchi nadigar mgr; 30th September 2019 at 02:54 AM.

  5. #1404
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Why MG Ramachandran's legacy is alive in Tamil Nadu even 32 years after his death
    By Balakumar KuppuswamyFirst Published 8, Mar 2019, 5:51 PM IST
    HIGHLIGHTS
    'Karunanidhi understood that he cannot do politics by attacking MGR. To this day, the DMK targets Jayalalithaa and others from the AIADMK. But carefully avoids taking potshots at MGR,' veteran journalist Durai says.

    On Tuesday last, Prime Minister Narendra Modi, speaking at a political rally on the outskirts of Chennai, announced the government's decision to name the iconic Chennai Central Railway Station after MGR (MG Ramachandran, the former chief minister of Tamil Nadu.)

    Without a doubt, it was a political decision aimed at appealing to a vote bank built on the name of MGR.

    But is the MGR vote bank still alive, a good 32 years after his death?

    "Yes," political commentator M Bharat Kumar says emphatically. "The emotions that MGR's name still evokes among a large swathe of Tamil Nadu voters is remarkable. Many of the young voters were born after MGR's demise in 1987, but make no mistake his name carries a mystique to this day in this state."

    Despite enormous upheavals in the state and the problems arising out of MGR's contentious political legacy (chiefly J Jayalalithaa), his charisma seems to be undiminished, and you can still go to smaller cities and villages in Tamil Nadu and see people talking about MGR in glowing terms.

    Makkal Thilagam (People's King), the sobriquet given to him during his active film days, still seems to stick firmly.

    Kumar adds: "To be sure, Jayalalithaa had popular appeal, but her political victories were all built on the firm foundation left by MGR. Were it not for the fact that she was seen as a legatee of MGR, people would not have reposed enormous faith in her. What she got were surrogate MGR votes."......... Thanks.........

  6. #1405
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரு ஜெமினிகணேசன் அவர்கள் புரட்சித்தலைவரை பற்றி சொல்லிய மிகுந்த நெகிழ்ச்சியான செய்தி.........

    "அண்ணன் எம்ஜிஆர் அவர்களின் கொடைத்தன்மை குறித்து நான் சொல்லித்தான் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இருப்பினும் இந்த முக்கியமான நிகழ்வு மக்களுக்கு அவசியம் தெரியவேண்டிய ஒன்று... "

    "நல்ல காரியங்களுக்கு உதவி செய்வதில் அண்ணன் எம்ஜிஆர் க்கு ஒப்பாக ஒருவரையும் சொல்ல இயலாது. செய்திருக்கிறார். செய்கிறார். செய்வார். இதை யாரும் மறுக்கவே முடியாது.

    ஒரு முக்கிய நிகழ்ச்சி...!

    " என் அத்தை டாக்டர் முத்துலட்சுமி பொறுப்பில் சென்னை அடையாறில் அவ்வை ஹோம் பள்ளி நடத்திவந்தார். அந்தப்பள்ளிக்கு அண்ணன் எம்ஜிஆர் அவர்களிடம் நிதியுதவி கேட்டிருந்தார். அவரும் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் குறித்த நேரத்திற்கு அவரால் பணம் கொடுக்க இயலவில்லை. ஆனால் தான் வாக்குறுதி கொடுத்துவிட்டோமே என்று சிறிதளவும் கவலைப்படாமல் ஒருவரிடம் கடன் வாங்கித்தான் அந்த நிதியுதவியை செய்தார் என்று என் அத்தை கண்கலங்கியபடி கூறியதைக் கேட்டு நான் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தேன். இப்படி கையில் பணமில்லாமல் கொடுத்த வாக்குறுதிக்காக கடன் வாங்கி ரூபாய் முப்பதாயிரத்தை சர்வசாதாரணமாக நிதியாக கொடுத்த அண்ணன் எம்ஜிஆர் ஐ நான் என்னென்று சொல்ல ".

    ஆம்.....எவ்வளவு உண்மை...!!!

    இப்படியெல்லாம் கூட ஒருவர் தர்மத்தையும் வள்ளல் தன்மையையும் நிலைநாட்ட முடியுமா ? என்று கடவுள் கூட பொறாமை கொள்ளும் அளவிற்கு இருந்தது அன்னாரின் ஒவ்வொரு செயலும்... என்று மிகையாக சொன்னாலும் அது நம் தலைவரைப் பற்றிய மிகக் குறைவான மதிப்பீடாகத் தெரிகிறது............ Thanks..... .......

  7. #1406
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இரத்தத்தின் இரத்தமான அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் நற்காலை வணக்கம் ������������

    நம் தலைவர் திரைப்படத்தில் தனது இனிமையான வெண்கலக் குரலால் முழங்கிய வசனங்கள் சாகாவரம் படைத்தவை என்பது அனைவரும் அறிந்ததே.

    அவர் தனது இலட்சியங்களையும் உயர்ந்த கோட்பாடுகளையும் சமூக சிந்தனையுடன் கூடிய பண்புள்ள வசனங்கள் மூலம் திரைப்படங்கள் வாயிலாக ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களிடம் கொண்டு சென்றவர். அமுதத் தமிழில் அவர் பேசிய போது தமிழுக்கே ஒரு புதுவித இனிமை சேர்ந்ததை யாரேனும் மறுப்பார்களா?

    இன்று பஞ்ச் டைலாக் என்று சொல்லிக் கொள்கிறார்களே அதை முதன்முதலில் தனது மர்மயோகி படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படங்களில் புகுத்தியவர் புரட்சித் தலைவர் தான். ஆனால், மற்றவர்கள் உதட்டளவில் உதிர்த்த வார்த்தைகள் திரையங்கத்தோடே நின்று போயின. தானைத்தலைவர் உள்ளத்திலிருந்து ஆணித்தரமாக வந்த சொற்கள் மக்கள் மனங்களில் பதிந்து இன்று வரை நிலைத்து நிற்கின்றன. அவரது வசனங்கள் கீதையென்றால் அவரது கொள்கைப் பாடல்களே வேதம். அதன்படியே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டது தான் அவரை கடவுள் என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது.

    இராஜகுமாரி தொடங்கி "அவசர போலிஸ் 100" வரை தலைவர் பேசிய பஞ்ச் வசனங்களை அன்பர்கள் திரைப்படத்தை குறிப்பிட்டு எழுத்து வடிவிலோ அல்லது ஒலி ஒளி வடிவிலோ பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். எழுத்து வடிவில் வரும் பதிவுகளை ஒலி ஒளிக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பின்பு அவை தனி ஆவணமாக தலைவரின் அதிதீவிர பற்றாளரால் தொகுக்கப்பட உள்ளது. தலைவரின் மக்களுக்கு படிப்பினை கூறும் வசனங்கள் எண்ணிலடங்கா. அவை தொகுக்கப்பட்டால் வருங்கால சந்ததியினருக்கு அதைவிட பெரிய பொக்கிஷம் வேறெதுவும் இருக்க முடியாது. எனவே தலைவரின் பக்தர்கள் தங்கள் நினைவிலுள்ள வசனங்களையும் தங்களால் இயன்ற மட்டும் தேடிப்பிடித்தும் தங்கள் பெயருடன் விரைவாக பதிவிடும் படி கேட்டுக் கொள்கிறேன். இந்த நற்பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு தலைவர் புகழை மேலும் வளர்ப்போம்.

    புரட்சித் தலைவர் நாமம் வாழ்க ✌��✌��

    பொன்மனச்செம்மல் புகழ் ஓங்குக ����.......By... Guru...

  8. #1407
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1408
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    டிலைட் திரையரங்க வளாகம்

    நன்றி - திரு சாமுவேல்

  10. #1409
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் இன தலைவர் ''மக்கள் திலகம் ''
    " தலைவர் பிரபாகரனும் நானும் யோகி என்கிற யோகரத்தினமும் எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் செல்லப்பட்டோம். முதலமைச்சருடன் தீட்சித்தும் இருந்தார். இந்திய – இலங்கை ஒப்பந்தம் பற்றியும் அதில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபைத் திட்டம் பற்றியும் இம் மாகாண சபைத்திட்டம் மூலம் ஈழத் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளது என்றும் தீட்சித் சொன்னதை நாடியில் கையூன்றியவாறு பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.”
    ""தமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல போராளிக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றன. ஆனால் இவர்கள் மட்டும் இதனை எதிர்க்கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர இவர்கள் எதையுமே ஏற்க மாட்டார்கள் போலத் தெரிகிறது. ஆனால் இந்திய அரசு தனியரசு அமைவதை ஒருபொழுதும் அனுமதிக்கப் போவதில்லை. இவர்கள் இந்தியாவை விரோதித்தால், பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்றார் இந்தியத் தூதுவர்.
    " இந்த மாகாண சபைத் திட்டத்தில் உருப்படியாக ஒன்றுமில்லை. தமிழ் மக்களின் அபிலாஷையை இது பூர்த்தி செய்யவில்லை. அப்படியிருக்க, இத்திட்டத்தை நாம் எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்?” என்றார் யோகி என்கிற யோகரத்தினம். இதைத் தொடர்ந்து யோகிக்கும் தீட்சித்துக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது.
    " சென்றவாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பூரி இந்த ஒப்பந்தம் பற்றியும் மாகாணசபைத் திட்டம் பற்றியும் உமக்கு விவரமாக விளக்கினாராம். அப்போது அதற்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் இப்போது எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?” என்று தீட்சித் கேட்க, ""யாழ்ப்பாணத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே பேசப்படவில்லை” என்றார் யோகி.
    ""என்னை ஒரு பொய்யன் என்று சொல்கின்றீர்களா?” என்று கேட்டார் தீட்சித். ""நீங்கள் உண்மை பேசவில்லை” என்றார் யோகி.
    வாக்குவாதம் சூடுபிடித்தது. முதலமைச்சரைப் பார்த்து, ""பாருங்க சார், என்னைப் பொய்யன் என்று சொல்கிறார்” என்றார் தீட்சித்.
    இந்தியத் தூதுவர் தீட்சித் உணர்ச்சிவசப்படுகிறார் என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர்., ""நீங்கள் சிறிது நேரம் வெளியே இருக்கிறீர்களா? நான் இவர்களுடன் பேச வேண்டும்” என தீட்சித்தை வேண்டிக்கொண்டார். சிறிது தயக்கத்துடன் அங்கிருந்து வெளியேறினார் இந்தியத் தூதுவர்.
    இந்திய – இலங்கை ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகள் பற்றியும் அதனை ஏற்றுக்கொள்ள நாம் மறுப்பதன் காரணங்கள் பற்றியும் எம்.ஜி.ஆர். எம்மிடம் வினவினார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எமது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினோம். ஈழத்து அரசியல் கட்சிகளும், ஆயுதக் குழுக்களும் இந்திய அரசின் நெருக்குதலுக்கும், மிரட்டலுக்கும் பணிந்துவிட்டார்கள் என்றும், இந்திய அச்சுறுத்தல்களுக்குப் பணிந்து நாம் எமது மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றும் சொன்னோம்.
    தமிழரின் இனப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாத நிலையில், சிங்கள ஆயுதப் படைகள் தமிழர் மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சூழ்நிலையில், எமது ஆயுதங்களைக் கையளித்து, எமது போராளிகளைச் சரணடையுமாறு கேட்பது நியாயமற்றது என்பதையும் எடுத்து விளக்கினோம்.
    எமது விளக்கங்களை முதலமைச்சர் பொறுமையுடன் செவிமடுத்தார். எமது நிலைப்பாட்டின் நியாயப்பாடுகளையும் அவர் புரிந்து கொண்டார். இந்திய – இலங்கை ஒப்பந்தமானது இந்தியாவின் கேந்திர – புவியியல் நலனைப் பேணுவதற்காகவே செய்து கொள்ளப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டார். இந்திய – இலங்கை ஒப்பந்த விவகாரத்தில் பிரபாகரன் என்ன முடிவு எடுக்கின்றாரோ, அதற்குத் தனது முழு ஆதரவும் இருக்கும் என்றார் எம்.ஜி.ஆர். அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுக்காது, கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பது குறித்து பிரபாகரனை அவர் பாராட்டவும் தவறவில்லை.
    முதலமைச்சருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். முதலமைச்சரின் சந்திப்பு அறைக்கு வெளியே தீட்சித்தும் ஓர் இந்தியப் புலனாய்வு அதிகாரியும் நின்று கொண்டிருந்தனர். எம்மை வழிமறித்த இந்தியத் தூதுவர், ""ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி முதலமைச்சர் வற்புறுத்தினார் அல்லவா?” என்று கேட்டார். நாம் பதிலளிக்காது மௌனமாக நின்றோம். ""முதலமைச்சர் சொன்னபடியே செய்யுங்கள்” என்றார். ""அப்படியே செய்வோம்” என்று கூறிவிட்டுச் சென்றோம்.
    - விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன்பாலசிங்கம் தான் எழுதிய "விடுதலை’
    நூலிலிருந்து ........... Thanks.........

  11. #1410
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சிதலைவர் தன் நண்பர் சாண்டோ சின்னப்பதேவர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு கோவைக்கு வருகிறார். அலங்கார் ஹோட்டலில் தங்குகிறார். ஸ்டாண்ஸ் மில் திருமண மண்டபத்தில் கல்யாணம்.

    அலங்கார் ஹோட்டல் மற்றும் திருமண நிகழ்வில் வாத்தியாரை காண வரலாறு காணாத கூட்டம் . விழா முடிந்து நம் தலைவர் கூட வந்த மதியழகன் உடன் டாட்ஜ் காரில் சென்னக்கு விரைகிறார்.

    அவிநாசி சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்த நம் காரை தொடர்ந்து ஒரு அம்பாசிடர் கார் வேகமாக வருகிறது. இதை அறிந்து கொண்ட நம் வாத்தியார் கருத்தம்பட்டி அருகே காரை நிறுத்தி சொல்ல கார் ஓட்டி கதிரவன், முத்துஅண்ணன், மாணிக்கம் யாருக்கும் புரியும் அவர் செயல்கள்.

    அம்பாசிடர் கார் அருகில் வந்து நிற்க இறங்கிய மூன்று பேர்கள் நம் மன்னன் கார் நோக்கி வர காரின் கருப்பு நிற கண்ணாடியை தலைவர் இறக்க வந்த மூவரும் வணங்க ஏன் இப்படி உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்க உங்களை காலை முதல் அங்கும் இங்கும் கோவையில் அலைந்து பக்கத்தில் பார்க்க முடியவில்ல அதான் இப்படி என்று சொல்ல உங்க பேர் என்ன தலைவர் கேட்க ஒருவர் வாசுதேவன், அடுத்தவர் ஜெகந்நாதன், மூன்றாம் நபர் சிவகுமார் என்று சொல்ல.

    அந்த சிவகுமார் யார் என்றால் மாதம்பட்டி சிவகுமார் என்று அறிய பட்ட தயாரிப்பாளர் பின்னாட்களில் அவர் நடிகர் சத்தியராஜ் அவர்களில் சகலை என்பது கூடுதல் தகவல் உங்கள் பார்வைக்கு.

    உடன் இருந்த மதியழகன் அப்போ நீ வக்கீல் துரை ராஜ் குடும்பமா என்று கேட்க ஆம் என்று பதில் வந்தது.

    சரி கவனமாக திரும்பி போங்கள் என்று வாத்தியார் சொல்ல அண்ணா உங்கள் கையெழுத்து வேணும் என்று அவர் கேட்க சரி குடு தாளை என்று சொன்னவுடன் தாளை குடுக்கும் சாக்கில் மன்னன் கையை ஒரு காதலி வருடுவது போல சிவகுமார் வருட சும்மா தடவு இது ஒண்ணும் எனக்கு புதுசு இல்லை என்று சொல்லி ஒரே பேப்பரை மூன்றாக கிழித்து கையொப்பம் போட்டு கொடுக்கிறார் பொன்மனம்.

    ஏதோ சொத்து பத்திரம் தன் கைகளுக்கு வந்தது போல மகிழ்வில் மூவரும் புறப்பட பாத்து பத்திரம் என்று தலைவன் வழி அனுப்ப அது தான் எம்ஜியார்

    நிகழ்வின் தொடர்ச்சி.

    1977 மக்கள் திலகம் தனி கட்சி கண்ட பின் கோவை மாவட்ட எம்ஜியார் மன்ற தலைவர் மருதாசலம் தேர்தல் பொறுப்பை கவனிக்க வேட்பாளர் பட்டியலை சிபாரிசு செய்து நம் வாத்தியாருக்கு அனுப்பிய பின் இருநாள் கழித்து மாதம்பட்டி சிவகுமார் இல்ல கதவை இரவு 10 மணிக்கு மருதாசலம் தட்ட அவருக்கு தான் கொண்டு வந்து இருந்த மாலையை அவர் கழுத்தில் இவர் போட என்ன அண்ணா இப்படி என்று சிவகுமார் கேட்க

    தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நீங்க என்று தலைவர் சொல்லி விட்டார் என்று அவர் சொல்ல... ஐய்யோ நான் அவரின் பக்தன் அரசியல் சரிப்பட்டு வருமா தெரியவில்ல என்று சொல்ல

    நல்லவன் வேண்டும் நம் கட்சியில் நிற்க வேண்டும் வெற்றி தோல்வி அப்புறம் என்று தலைவர் சொன்னார் என்று சொல்ல... அண்ணா வேண்டாம் நீங்க தான் அதுக்கு தகுதியானவர் என்று சொல்லி அந்த மன்றம் கண்ட வீரர் மருதாசலம் தேர்தலில் நிற்க வேண்டிய உதவிகளை செய்து வெற்றி பெறுகிறார் மருதாசலம்.

    எப்படி பட்ட உண்மை தொண்டர்கள் அப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறும் நிகழ்வுகள் தொடரும்

    பின்னாளில் அந்த மாதம் பட்டி சிவகுமார் சொல்கிறார்

    என் வீட்டில் பூஜை அறையில் வைக்க பட்டுள்ள நம் வாத்தியார் படத்துக்கு நான் பூவோ போட்டோ வைப்பது இல்லை என என்றால் எம்ஜியார் இறந்து விட்டார் என்று நான் நம்பவில்லை என்கிறார் அவர்............ Thanks...........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •