Page 129 of 402 FirstFirst ... 2979119127128129130131139179229 ... LastLast
Results 1,281 to 1,290 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1281
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1282
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அந்த கருப்புநாளும் விடிந்தது..நம் மன்னன் ரசிகர்கள் தலையில் இடியாய் அந்த செய்தி விழுந்தது.

    1967 ஜனவரி மாதம் 12 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் நம் தலைவரை ராமாவரம் தோட்டத்தில் சந்திக்க வந்த எம்.ஆர்.ராதா துப்பாக்கி கொண்டு சுட்டு விட்டார் என்ற செய்தி நாடு எங்கும் தீயாய் பரவியது.

    திரையுலகம் அதிர்ந்தது. தலைவர் சிகிச்சைக்கு சேர்க்க பட்ட மருத்துவமனை குலுங்கியது....சில சினிமா நெஞ்சங்கள் குளிர்ந்தன... இதோடு ஒழிந்தார் எம்ஜியார் என்று மகிழ்ந்தனர் மனதுக்குள்.

    திமுக அரசியல் கட்சி இதை பயன் படுத்தி ஆட்சிக்கு வந்தது முதலில்... மீண்டு வருவாரா மீண்டும் திரையில் தோன்றுவாரா நடிக்காவிட்டாலும் பரவாயில்லை நம் வாத்தியார் பிழைத்தால் போதும் என்று உண்மை நெஞ்சங்கள் விரும்பின.

    யாருக்கும் நம்பிக்கை இல்லை...இதை சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை. காலத்தை வென்ற காவிய நாயகர் இதிலும் மீண்டு வந்தார். என்னடா இது மாண்டவன் மீண்ட வரலாறு இது என்று எதிரிகள் திகைத்தனர்.

    அதுதான் வாத்தியார். கழுத்தில் பாய்ந்த குண்டால் குரல்வளம் போனது. வெண்கல குரலில் பேசிய நம் தலைவர் குரல் சிதைந்து போனது.

    அசரவில்லை வாத்தியார் . மீண்டு வந்து தனக்கு சிகிச்சை அளித்த குரல்வள நிபுணர்கள் துணையுடன் சாதித்தார். பாதி ராத்திரி எழுந்து போய் அலைகடலில் நின்று முயற்சித்தார்....கொடி கட்டி பறந்த தன் திரை உலக வாழ்வில் தான் குலைந்த குரலில் பேசுவதை இந்த தமிழ் உலகம் ஏற்குமா என்று யோசித்தார்.

    இடையில் நின்ற சத்தியா மூவீஸ் காவல் காரன் படத்தில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்...குரலுக்கு எடிட்டிங் செய்து கொள்ளலாம் என்பதை ஏற்காமல் தானே மீண்டும் பேசி நடித்தார்.

    பார்த்தேன் சுசீலா பார்த்தேன்....என்று குண்டடி பட்ட பின் அவர் படத்தில் பேசிய முதல் வசனத்துக்கு எழுந்த கரகோஷம் அடங்க பல நிமிடங்கள் ஆயிற்று திரை அரங்குகளில்.

    50 வயதில் தான் திரை உலகில் தான் புறப்பட்ட இடத்துக்கே வந்து விடுவோமா என்ற கவலை இல்லாமல் மீண்டும் மின்ன தொடங்கினார் வாத்தியார்.

    என் ரசிகர்கள் விரும்பினால் தொடர்ந்து நடிப்பேன் என்றார். காவல்காரன் படத்தை தொடர்ந்து வெளிவந்த விவசாயி, ரகசிய போலீஸ் 115, தேர்த்திருவிழா, குடியிருந்த கோவில், கண்ணன் என் காதலன்..... சொல்லிக்கொண்டே போகலாம் எல்லாம் சூப்பர் ஹிட் படங்கள்.

    அதுக்கு அப்புறம் தான் விஸ்வ ரூபம் எடுத்தார் வாத்தியார்...வரலாறு நமக்கு சொந்தம்..

    குண்டு துளைக்க முடியாத நம் இதயக்கனியை வண்டு துளைத்து விட்டது என்று தூக்கி எறிந்த அந்த மண்டு கூட்டதுக்கும் உணர்த்தினார் வாத்தியார்.

    ஏன் என்றால் அவர் எல்லா மதத்துக்கும் ஆன இறைவனின் செல்ல பிள்ளை...மக்கள் அவர் பக்கம் என்றும்.

    வாழ்க எம்ஜியார் புகழ் தொடருவேன்.நன்றி.

    பின் குறிப்பு.

    சம்பவங்களுக்கு பின் எம் .ஆர்.ராதா. அவர்கள் ☺️ நான் தான் சுட்டேன்.�� என்று ஒரு படத்தை தயாரிப்பதாக ஒரு விளம்பரம் அந்த காலத்தில் விட்டார் விரைவில் அந்த விளம்பரத்தோடு சந்திப்போம். நன்றி......... Thanks.........

  4. #1283
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரை 1981 - 1

    புரட்சித் தலைவர் அவர்களின் கருணை உள்ளத்துக்கு மேலும் ஒரு ஆதாரம்.

    ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு வண்ண மலர். மலர் ஒன்று தயாரிப்புச் செலவு ரூ.250/=. அதன் விலை ரூ.55/= மட்டுமே மாநாட்டின்போது விற்றவில்லை ரூ.35/= மட்டுமே!!!

    வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இலவசமாக அனுப்பிவைக்கப்பட்டன.

    என்னிடம் ஒரு பிரதி உள்ளது!!!!������........ Thanks SB., Sir...

  5. #1284
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரை 1981- 2

    மதுரை காமராஜ் பல்கலைக்கழக வளாகத்தில் "தொல்காப்பியர் அரங்கத்தில்" ஜஸ்டிஸ் எஸ்.மகாராஜன் அவர்கள் பிரதிநிதிகள் வரவேற்றார். மேலும் உலக தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் நோக்கங்கள் பற்றி பேசினார்.

    இந்த மாநாட்டில் சுமார் 221 ஆராய்ச்சி கட்டுரைகள் திட்டமிடப்பட்டது, சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டது.

    அப்படி எவ்வளவு சிறப்பு. எல்லா புகழும் தமிழுக்கும், புரட்சி தலைவருக்கும் மட்டுமே.������........ Thanks...

  6. #1285
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரை 1981 - 3

    விழாவில் ஐந்து அரங்குகள் இசைக்கு நாட்டியம் மற்றும் நாடகம் நடைபெற ஏற்படுத்தப்பட்டது.

    புரட்சித் தலைவியின் "மதுர நாயகி", டாக்டர் பத்ம சுப்ரமணியம், விஜயந்திமாலா, சுதாரணி ரகுபதி, ஸ்வர்ணமுகி அவர்களின் நாட்டியம். திரு. ஆர் எஸ்.மனஓர் அவர்களின் ஒட்டக்கூத்தர் நாடகம், கடையெழு வள்ளல்கள் ......

    அதுமட்டுமா எம்.எஸ், பலமுரளிகிருஷ்ணா, லால்குடி ஜெயராமன், சின்னமௌலானா, குன்னக்குடி வைத்தியநாதன், மதுரை சோமு, சீர்காழி, பாடகர் திலகம் டி.எம். கச்சேரி என்று மாநாடு அசத்தலா அசத்தல்!

    சிலம்பாட்டம், களரி, சேவல் சண்டை, கத்தி சண்டை, மான் கொம்பு சண்டை.குத்து சண்டை என்று மாநாடு சிறப்பாக நடந்தது!

    எல்லா புகழும் புரட்சி தலைவருக்கே.������ ......... Thanks...

  7. #1286
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் குமுதம் இதழில்

  8. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  9. #1287
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எதிர்பார்ப்பு தான் எல்லாம் துயரத்துக்கு காரணம் - EXPECTATION IS THE CAUSE OF MISREY...

    நடிகன் என்பவர் என்றுமே "எதிர்பார்த்து" நடிக்கக்கூடாது!!!

    அவர் மற்றும் அவரது ரசிகர்களை பொறுத்தவரையில் அவர் சிறந்த நடிகரா இருக்கலாம். ஆனால் அரசு ஒரு குழு அமைகிறது அவர்கள் மக்கள் மனதில் "இடம் பிடித்தவர்" தான் சிறந்தவர் என்று தேர்தெடுப்பது தவறா?

    1970's இல் ஒரு நடிகர் தமிழக அரசின் "சிறந்த நடிகர்" பரிசை தான் பேரமட்டும் என்று சொன்னாராம். கட்சி கண்ணோட்டத்துடன் நடக்கிறது, பரிசு அவர்கள் கட்சி காரர்களுக்கு கொடுக்கட்டும் என்றும் கண்துடைப்பு தனக்கு ஒத்துவராது என்றும் அவர் பேசியதாக தகவல்.

    இவர் 1993's இல் "சிறந்த துணை நடிகர்" பரிசு மத்திய அரசு கொடுத்தபோது அப்படியே செய்தார்!!!

    எங்கள் நாடோடி மன்னனுக்கு பதிலாக வேறு படம் போனதே அப்போது அரசியல் தானோ? நயாகரா கௌரவ மேயர் அதுவும் அப்படித்தானா???

    எங்கள் புரட்சித் தலைவருக்கு சிறந்து நடிகர் குறித்து "சர்ச்சை" [ சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவர் பின்பு நாங்கள் அப்படி சொல்லவில்லை என்றார்கள்] .........வந்தபோது என்ன எழுதினர் என்ன செய்தார். அதன் பெயர் தான் தன்னம்பிக்கை.

    எதிர்பார்ப்பு தான் எல்லாம் துயரத்துக்கு காரணம். இது எல்லோருக்கும் பொருந்தும்.������......... Thanks.....

  10. #1288
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த வாரம் மதுரை சென்ட்ரல்சினிமா டி.டி.எஸ் புரட்சித்தலைவர் நடித்த "நினைத்ததை முடிப்பவன்" சென்னை அகஸ்தியா.டி.டி.எஸ் ஏ.சி பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் "குடியிருந்த கோயில் " கோவை டிலைட் மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்களின் "சிரித்து வாழ வேண்டும்" நெல்லை ரத்னா கலைக்கடவுள் எம்ஜிஆர் அவர்களின் "அடிமைப்பெண்" திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் கண்டுமகிழும் அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்......... மதுரை.எஸ் குமார்......... Thanks.........

  11. #1289
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்கள் கவனத்திற்க்கு!
    எம்.ஜி.ஆர்., திரைப்படங்களில் நடிக்கும் போது தனக்கென்று தனியாக ஒரு பாணியை வைத்திருந்தார். கொள்கையை கடைப்பிடித்து வந்தார். தாம் நடிக்கும் ஒவ்வொரு படத்திலேயுமே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் தன் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நல்ல நல்ல கருத்துக்களை பாடல்கள் மூலமாவும் வசனங்களின் மூலமாகவும் சொல்லி வந்ததோடு நிற்கவில்லை!.
    தம்முடன் பனியாற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் ஏன்?.....இயக்குனர், தயாரிப்பாளர்களுக்கும் கூட நல்ல அறிவுரைகளை சொல்லி அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஒரு பெரிய மகானாவும், தீர்க்கதரிசியாகவும் இருந்தார். இது எல்லோருக்குமே தெரியும். எந்த காலகட்டத்திலும் கீழ்மட்டமான செயல்களுக்கு இடம் தர மாட்டார். யாரையும் செயல்படவும் விடமாட்டார்! சினிமாக்காரர்களுக்கு கூட " நல்ல தரமான படங்களை எடுக்கச்சொல்லி பல மேடைகளில் வலியுறுத்தி பேசி இருக்கிறார்.

    இப்போது உள்ள புதிய தலைமுறையினர் சினிமாவையும், சின்னத்திரையில் வரும் சீரியல் நாடகங்ளையும் கூட சீரழித்துக்கொண்டிருக்கின்றார்கள்.தமிழ்நாட்டில ் இப்போது எடுத்துகொண்டிருக்கும் சினிமாவிலும் சீரியலிலும் தமிழ் கலாச்சாரத்தையே தேடவேண்டியதாகிவிட்டது. தமிழ் கலாச்சாத்தையும், பண்பாட்டையும் கெடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு பாட்டைக்கூட கேட்க முடியவில்லை! கதாநாயகன் லுங்கியுடனும் தாடிமீசை, பரட்டை தலையுடனுமே அழகான பெண்களுடன் டூயட் பாடல் காட்சியில் நடித்துவிடுகிறான். பார்பதற்க்கே படு கேவலமாக இருக்கின்றது!. ....பழைய படத்திலுள்ள பாடல்களும் சரி, படங்களும் சரி இந்தக்காலக்கட்டத்திலும் மக்களுக்கு பொருத்தமானதாகத்தான் இருக்கின்றது. எம்ஜிஆர் பாடல்களை நீங்கள் பழைய நடிகர்கள் பாடல்களில் ரீமேக் செய்யுங்கள். அதற்க்கு எந்த தடையும் யாரும் சொல்ல மாட்டார்கள்.
    ஆனால் இப்போது உள்ள கீழ்த்தரமான சினிமா பாடல்களுடன் நம் தலைவரை கனவிலும் கூட சேர்த்து பார்க்காதீர்கள்! எம்ஜிஆர் என்கிற பாத்திரம் எப்போதுமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். காலத்திற்க்கு தகுந்த மாதிரி மாற்றிக்கொள்ள அது ஒன்றும் அவ்வளவு சாதாரணமானதல்ல!
    அது நிறைகுடம்! எப்போதும் !! எப்போதுமே தலும்பாது, குலுங்காது, கொட்டவும் கொட்டாது.
    உலகம் உள்ளவரை ...ஒரே எம்ஜிஆர்தான் ...நிகரானவர் எவருமில்லை! இருக்கவும் முடியாது........... Thanks..........

  12. #1290
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நூறாவது (100) காவியம், திரைப்படம்......"ஒளி விளக்கு" அட்டகாசமான படைப்பு ... 20-09-1968 - 20-09-2019 வெளியான திருநாள் இன்று... பிற நடிகர்கள் நடித்த 100 வது படத்திற்கும் மக்கள் திலகம் 100 வது காவியத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு... தலைவர் காவியம் உடலோடும்... உயிரோடும் சம்பந்தப்பட்ட காவியம் என்றால் மிகையாகாது... தலைவர் உடல்நலம் சரியாக இல்லாமல் நேரத்தில் இந்த காவியமும்... இதில் இடம்பெற்ற சாகா வரம் பெற்ற பாடல்களினாலும் தனித்துவமும், அமரத்துவமும் பெற்றது... அப்புறம் மிக முக்கியமான ஒன்று இன்று வரையிலும் முறையான மறு வெளியீடுகள் காண்பதும் வசூல் அள்ளி வழங்கும் நயத்திலும் இதற்கு ஈடு இணையில்லை... மற்றும் இப்பொழுதும் 51 ஆண்டுகள் ஆனாலும் திரையரங்க விநியோக உரிமைகள் "ஒளி விளக்கு" காவியத்தை வாங்கி மீண்டும் வெளியிட போட்டா போட்டி நடை பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதும் சர்வதேச அளவில் வேறு என்னத்வ
    எந்தவொரு நடிகர்கள், நடிகைகள் படத்துக்கும் அமையவில்லை என்பதே புரட்சி நடிகர் அவர்களின் பெருமை... மாண்பை பறைசாற்றும்......... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •