Page 254 of 402 FirstFirst ... 154204244252253254255256264304354 ... LastLast
Results 2,531 to 2,540 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2531
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *MGR* வியக்க வைக்கும் நினைவாற்றல் கொண்டவர். அவரது நினைவாற்றலையும், செல்வாக்கையும், பிறர் நலனில் கொண்டிருந்த அக்கறையையும் பார்த்து வியந்தவர்களில் நடிகரும் பத்திரிகையாளருமான ‘சோ’ ராமசாமியும் ஒருவர்.

    எம்.ஜி.ஆரை கடுமையாக சோ எதிர்த்த காலங்களும் உண்டு. மிகத் தீவிரமாக ஆதரித்த சமயங்களும் உண்டு. 1980ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்ட பின் நடந்த தேர்த லில், எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் சோ தீவிரமாக இருந்தார். இப்போதும் கூட ‘சோ ஒரு அதிமுக ஆதரவாளர்’ என்று சில விமர்சனங்கள் இருந்தாலும், அந்தந்த சூழ் நிலைக்கு ஏற்ப, தன் மனதுக்கு நியாயம் என்று பட்டதை பட்டவர்த்தனமாக சொல்பவர் அவர். மக்கள் நலனுக்காக இலவச திட்டங்களை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தபோது கிண்டல் செய்தா லும் சில ஆண்டுகளுக்கு முன், ‘‘நமது நாடு இருக்கும் சூழலில் இலவச திட்டங்கள் தேவை என்பதை உணர்கிறேன்’’ என்று சோ கூறினார்.

    ‘அடிமைப் பெண்’, ‘ஒளிவிளக்கு’, ‘என் அண்ணன்’ உட்பட எம்.ஜி.ஆருடன் பல படங்களில் சோ நடித்துள்ளார். நாடகம் நடத்துவதற்காக ஒருமுறை வெளியூருக்கு சோ சென்றார். வழியில் ஒரு மூதாட்டி சோவைப் பார்த்து, ‘‘தம்பி, உன்னை எம்.ஜி.ஆர். படங்களில் பார்த் திருக்கிறேன். எம்.ஜி.ஆர். கிட்ட நான் விசாரிச்சேன் என்று சொல்லு’’ என்று கூறிச் சென்றுவிட்டார். அவர் தனது பெயர் என்ன? முகவரி என்ன? என்று எதையும் சொல்லவில்லை. எம்.ஜி.ஆருக்கு இருந்த ஈர்ப்பு சக்தியைப் பார்த்து வியந்துபோனார் சோ.

    எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்த சில தயாரிப்பாளர்கள் அவரது ‘கால்ஷீட்’ தாமதமாக கிடைக்கிறது என்றும் தொல்லைப்படுவதாகவும் சோவிடம் குறைபட்டுள்ளனர். ஆனால், ‘‘அப்படி என்னிடம் குறைபட்டவர்களே பின்னர் அடுத்த படத்தை எம்.ஜி.ஆரை வைத்தே தயாரித்தனர்’ என்று கூறும் சோ, அதற்கு சொல்லும் காரணம், ‘‘ எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது கஷ்டமானது. ஆனால், வேறு எந்த நடிகரையும் வைத்து படம் எடுப்பதை விட எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது லாபகரமானது.’’

    ‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவி செய்கிறார்’ என்ற விமர்சனங்களை சோ கடுமையாக மறுத்திருக்கிறார். ‘‘விளம்பர நோக்கம் இல்லாமல் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவு வதை பார்த்திருக்கிறேன். திரைப்படத் துறையில் அவருக்கு எதிராக
    இயங்கியவர்களுக்கு கூட அவர் உதவியிருக் கிறார்’’ என்று கூறும் சோ, ஒருமுறை கேட்ட கேள்வி பொருள் பொதிந்தது. சோவின் கேள்வி இது...‘‘அப்படியே விளம்பரத்துக்கு என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை பேருக்கு விளம்பரத்துக்காகவாவது பிறருக்கு உதவும் மனம் இருக்கிறது?’’

    எம்.ஜி.ஆரின் கருணை உள்ளத்துக்கு உதாரணமாக சோ ஒரு சம்பவத்தை குறிப்பிடுவார். சட்டாம்பிள்ளை
    வெங்கட்ராமன் என்பவர் பழம்பெரும் நடிகர். பல படங்களில் நடித்துள்ளார். அவரது தாயார் மறைந்தபோது கையில் பணம் இல்லாத நிலையில், எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரை அடையாளம் கண்டு விசாரித்த எம்.ஜி.ஆரிடம் நிலைமையை கூறினார். வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அந்த அவசரத்திலும் வீட்டில் உள்ளவர்களை அழைத்து, ‘‘வெங்கட்ராமனுக்கு ஒரு வேனையும், தேவைப்படும் பணத்தையும் கொடுத்திடுங்க’’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.

    பின்னர், சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் சோவை சந்தித்தபோது, ‘‘வீட்டிலே உலையை வெச்சுட்டு இன்னிக்கு சோறு பொங்கும் என்ற நம்பிக்கையோட ஒருவரின் வீட்டுக்கு போகலாம் என்றால் அது எம்.ஜி.ஆரின் வீடுதான்’’ என்று கூறியிருக்கிறார்.

    இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, ‘‘எத்தனை பேருக்கு இதுபோன்ற சான்றிதழ் கிடைக்கும்? எனக்குத் தெரிந்து பலருக்கு எம்.ஜி.ஆர். உதவி செய்திருக்கிறார். அதெல்லாம் வெளியே தெரிய வந்ததில்லை’’ என்று சோ மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

    ‘அடிமைப் பெண்’ படத்துக்காக ஜெய்ப்பூரில் சோ நடித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு கடுமையான வயிற்று வலி. தனது டாக்டரை விட்டு சோவுக்கு சிகிச்சை அளிக்கச் செய்து ‘‘உடல் நிலை சரியாகும் வரையில் நீங்கள் நடிக்க வேண்டாம்’’என்று எம்.ஜி.ஆர். பரிவுடன் கூறி அவரை கவனித்துக் கொண்டார்.

    சோவின் நெருங்கிய நண்பர் நீலு. நாடகங்களிலும் பல படங்களிலும் நடித்துள்ளார். கொல்கத்தாவில் வேலை பார்த்து வந்த அவர், ஒருமுறை சென்னை வந்தபோது சோவை
    சந்தித்தார். ஒரு ஆண்டு கழித்து அன்றுதான் அவர் சென்னை வந்திருந்தார். நீலு சென்றபோது, எம்.ஜி.ஆருடன் சோ படப்பிடிப்பில் இருந்தார். எம்.ஜி.ஆரிடம் நீலுவை அறிமுகம் செய்த சோ, ‘‘இவர் என்னுடைய நண்பர்’’ என்று கூறினார்.

    ‘‘இவரை எனக்கு தெரியுமே. உங்க நாடகத்தில் பார்த்திருக்கறேன்’’ என்று எம்.ஜி.ஆர் கூறியதும் சோவுக்கும் நீலுவுக்கும் குழப்பம்.

    இரண்டு நாட்கள் முன்புதான் எம்.ஜி.ஆர். தலைமையில் சோவின் நாடகம் நடந்தது. ‘அதில் எப்படி நீலுவை எம்.ஜி.ஆர். பார்த்திருக்க முடியும்? இன்றுதானே அவர் சென்னை வந்தார்’ என்பதுதான் அவர்கள் குழப்பத்துக்கு காரணம். தங்கள் குழப்பத்தை எம்.ஜி.ஆரிடமே சோ தெரிவித்தார்.

    ‘‘இரண்டு நாட்கள் முன்பு நடந்த நாடகத்தில் இவரைப் பார்த்தேன் என்று சொன்னேனா? போன வருஷம் நான் பார்த்த உங்கள் நாடகத்தில் வக்கீல் வேஷம் போட்டவர்தானே இவர்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதும், சோவும் நீலுவும் மயங்கி விழாத குறை. அவ்வளவு
    அபாரமான நினைவாற்றல் எம்.ஜி.ஆருக்கு.

    ‘அடிமைப் பெண்’ படத்தில் ஒரு சுவை யான காட்சி. படத்தில் எம்.ஜி.ஆரின் பெயர் வேங்கையன். வில்லன்
    மனோகரின் அரச பரிவாரங்களுடன் ஒருவராக வரும் சோவை எம்.ஜி.ஆரின் வீரர்கள் பிடித்துவைத்து அவரை துன்புறுத்த முயற்சிப்பார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சோ, ‘‘வேங்கையனிடம் சொல்லிவிடுவேன்’’ என்று மிரட்டுவார். உடனே, சோவை அவர்கள் விட்டுவிட்டு மன்னிப்பு கேட்பார்கள். அப்போது, சோ சொல்லும் வசனத்தை எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். சோ கூறுவார்...

    ‘‘தலைவன் பெயரை சொன்னவுடன் என்ன ஒரு பயம், பக்தி. தலைவன் என்றால் இவரல்லவோ தலைவன்’’.

    த*க*வ*ல் உத*வி: இதயக்கனி எஸ். விஜயன் அவ*ர்க*ள்............ Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2532
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை 21-01-2020 முதல் கலையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் " பாரத்" உயரிய விருது பெற்று தந்த படிப்பினை காவியம் "ரிக்க்ஷாக்காரன்" திருச்சி - பேலஸ் dts., திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் காட்சி தரவிருக்கிறார்.........

  4. #2533
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாகர்கோயில்- தங்கம் 21.01.2020 முதல் தினசரி.4. காட்சிகளாக வெற்றிப்பவனி... தென்காசி புளியங்குடி ;கண்ணா திரையரங்கில் வெற்றிமுரசு கொட்டுகின்றது கலைக்கடலின் "எங்கவீட்டுப்பிள்ளை " தினசரி.2.காட்சிகளாக நன்றி மதுரை எஸ். குமார் எம்ஜிஆர். மன்றம் திருச்சி பேலஸ் ரிக்சாக்காரன் தகவல் நண்பர் திருச்சி. கிருஷ்ணன் அவர்கள் நாகர்கோயில் தகவல் திரு நெல்லை.. ராஜா.அவர்கள் நன்றி
    ......... Thanks.........

  5. #2534
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நம் நாடு -சென்னை அகஸ்தியாவில் வசூல் சாதனை*
    ------------------------------------------------------------------------------------
    கடந்த 15/01/20 முதல் சென்னை அகஸ்தியாவில் வெளியாகி வெற்றிநடை போடும்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "நம் நாடு " முதல் 5 நாட்களில் ரூ.1,25,000/- வசூலித்து அபார சாதனை புரிந்துள்ளது .என்று பட வினியோகஸ்தர்* தகவல் அளித்துள்ளார் .


    இந்த வாரம் மூலக்கடை ஐயப்பாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "குடியிருந்த கோயில் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

    சென்னை பாலாஜியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "நாளை நமதே " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

    17/01/20 மாலை 6 மணி முதல் சென்னை நங்கநல்லூர் ஸ்ரீ சாய்ராம் ஹாலில் யு.கே.முரளியின் எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர். ஹிட்ஸ் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது .

    18/01/20 மாலை 6 மணி முதல் சென்னை நங்கநல்லூர் ஸ்ரீ சாய்ராம் ஹாலில்* தியாகுவின் லோகேஷ் ரிதம்ஸ் இன்னிசை நிகழ்ச்சியில் காலத்தை வென்ற எம்.ஜி.ஆர். பாடல்கள் இசைக்கப்பட்டன .

    19/01/20 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாலை 6 மணிக்கு மேல் அன்பு ஸ்ருதி அவர்களின் இன்னிசை நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள் இசை விருந்து நடைபெற்றது .

    19/01/20* மாலை 6 மணிக்கு மேல் சென்னை தி.நகர், பி.டி.தியாகராயர் அரங்கில்*புதிய நீதி கட்சி தலைவர் திரு.ஏ .சி.சண்முகம் தலைமையில் ,பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பங்கேற்கும், திரு.சௌந்தர்ராமனின் பல்லவி ராகமழையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்கள் இசைக்கப்பட்டன .

    மேற்கண்ட நிகழ்ச்சிகள், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் போட்டி படங்களுக்கு இடையில் சென்னை அகஸ்தியாவில் வசூல் மன்னன் எம்.ஜி.ஆர். அவர்களின் "நம் நாடு " வசூல் சாதனை புரிந்துள்ளது என்பது வியக்கத்தக்கது .

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு போட்டி வேறு எந்த நடிகரின் படமுமல்ல.அவரது படங்களே /நிகழ்ச்சிகளே போட்டி என்பது குறிப்பிடத்தக்கது


    அடுத்த வாரம் முதல் விருகம்பாக்கம் தேவி கருமாரி , காஞ்சி அருணா, மற்றும் செங்குன்றம் அரங்குகளில் வெளியீடு .

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அகஸ்தியாவில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன்* ஒரு வார வசூலாக*" ரூ.1,90,000/- வசூலித்து சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது*
    Last edited by puratchi nadigar mgr; 20th January 2020 at 11:12 PM.

  6. #2535
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    விரைவில்

    திருப்பூர்

    அனுப்பர்பாளையம்

    மணீஸ்

    திரையரங்கில்

    எங்க வீட்டுப்பிள்ளை

  7. #2536
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பெங்களூர்- அருணா DTS தியேட்டரில். 21- 01- 2020
    முதல்
    ''உலகம் சுற்றும் வாலிபன் " காவியத்தின்
    டிரைலர்
    திரையிடபடுகிறது............ Thanks.........

  8. #2537
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ........... Thanks...

  9. #2538
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உலக மஹா, மெகா சாதனையின் உச்சம் என்றால்... ஒரு நடிகர் மறைந்து 32 வருடங்கள் கடந்தும்... திரையுலகை விட்டு விலகி 42 ஆண்டுகள் தாண்டியும்... அவர் நடித்த பழைய, பற்பல முறைகள் மறு வெளியீடுகள் கண்டு சிறப்பை பெற்றும்... இன்றைய 2020 தை பொங்கல் திருநாளில்...15 இடங்கள் அளவில் புத்தம் புதிய படங்களுக்கு போட்டியாக திரையிடப்பட்டுள்ள அதிசயத்தை, பேரற்புத நிகழ்வினை கலையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., தவிர இந்த உலகத்தில் வேறு யார் நடத்தி காட்ட இயலும்?!...இதுதான் சாதனை...சரித்திரம்... சகாப்தம்...

  10. #2539
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் நெருங்கிய நண்பர் நடிகர் அசோகன் அவர்களின் சொந்த ஊர் திருச்சி....இயற்பெயர் அந்தோணி. கல்லூரி நாடங்கங்களில் பிரபலம் ஆனார் .

    மணப்பந்தல் படத்தில் பெயர் மாற்றம் அசோகன் என்று ஆனார்...இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் அவர்களை நம் தலைவருக்கு அறிமுகம் செய்து பின் அன்பேவா படம் உருவானது.

    தலைவர் வீட்டு சாப்பாட்டை மிகவும் விரும்புபவர் அசோகன் அவர்கள்... மற்ற படங்களில் நடித்து கொண்டு இருந்தாலும் உணவு அருந்த தலைவர் செட் தேடி வருவது வழக்கம்.

    தலைவருடன் அதிக படங்களில் நடித்த பெருமை இவருக்கு மட்டுமே சொந்தம்.

    புகழ் சேர கோவையில் ஒரு பெரிய குடும்பம் சேர்ந்த சரஸ்வதி என்பவருடன் காதல் மலர பெண் வீட்டார் எதிர்ப்பில் பின் தங்க.

    ஒரு நாள் திரைப்படங்களில் வருவது போல சரஸ்வதி அவர்கள் அசோகன் அவர்களை தேடி ஓடி வர...தலைவருக்கு விஷயம் அசோகன் அவர்கள் சொல்ல.

    சரஸ்வதி மனதில் உள்ளதை உள்வாங்கி சரி.. இனி என் பொறுப்பு என்று சொல்லி....

    செல்வந்தர் சரஸ்வதி குடும்பம் திருமண நிகழ்வுகளை தடுப்பது அறிந்து கோடம்பாக்கம் பாத்திமா சர்ச்சில் வாத்தியார், இயக்குனர் ஏ.சி. திருலோகச்சந்தர், மற்றும் ஏ. வி.எம்.சகோதர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.

    ஒருகட்டத்தில் பெண்ணை பெற்றவர்கள் இதற்குமேல் ஒன்றும் இல்லை என்று இருக்க.

    அந்த அசோகன் தம்பதிக்கு இரு பிள்ளைகள்... பெரியபிள்ளை அமல் ராஜ்... நன்கு இருந்து 2002 இல் மறைய.

    அடுத்த மகன் வின்சென்ட் அசோகன் திரைத்துறையில் வளர்ந்து வருவது தெரியுமே.

    நேற்று இன்று நாளை படம் அசோகன் அவர்கள் தயாரிப்பில் வர விருக்க படத்தின் பினான்சியர் டிமாண்டி அவர்கள் அரசியல் மாற்றம் கண்டு தீயசக்தி பேச்சை கேட்டு கொண்டு படத்தை தாமதம் ஆக்க.

    நிலைமை அறிந்த வாத்தியார் அசோகனை அழைத்து ஒரே இரவில் படத்தில் நடித்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகை முழுவதும் தன் கையால் கொடுக்க.

    அன்று இரவே சார்ந்தவர்கள் தேடி அசோகன் பாக்கி பணத்தை செட்டில் பண்ணி படம் முடிந்து வெளியே வந்து வசூலை வாரி குவிக்க.

    தலைவருக்கு கொடுக்க வேண்டிய பாக்கி சம்பளத்தை பெருந்தன்மையுடன் அவர் மறுக்க.

    இதுவே உண்மை வரலாறு...இனி எவனும் அந்த நல்ல இருவர் நட்பை விமர்ச்சித்து பேசினால்...

    வாழ்க எம்ஜியார் புகழ்.தொடரும்...நன்றி உங்களில் ஒருவன் நெல்லை மணி.......... Thanks.........

  11. #2540
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை சண்முகாவில் வரும் வெள்ளி முதல் (24//01/20) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "தர்மம் தலை காக்கும் " தினசரி 4 காட்சிகளில் திரைக்கு வருகிறது .

    தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •