Page 293 of 402 FirstFirst ... 193243283291292293294295303343393 ... LastLast
Results 2,921 to 2,930 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2921
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மஹா பெரியவாள் - மகான் - முதல்வர்
    எம். ஜி .ஆர். சந்திப்பில்

    திரு.பிச்சாண்டி I.A.S., அவர்கள் சொல்லகேட்டு ரா . வேங்கடசாமி.

    காஞ்சி மகானின் சங்கர மடத்தில் அவ்வப்போது அபூர்வ நிகழ்சிகள் நடப்பதுண்டு திரு. எம். ஜி .ஆர்.முதல்வராக இருந்தபோது அவருடைய நேர் முக உதவியாளராக திரு. பிச்சாண்டி இருந்தார்.

    முதல்வருக்கு உடலில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக அவரால் சரியாக பேச முடியவில்லை . திரு.எம் ஜி. ஆருக்கு ஆன்மீக விஷயங்களில் உறுதுணையாக இருந்தவர் "இதயம் பேசுகிறது " திரு. மணியன் அவர்கள் . முதல்வர் மகானை தரிசிக்க விருப்பம் கொண்டவுடன் ,
    திரு.மணியன் அவர்கள் அதற்க்கு செயல் வடிவம் கொடுத்தார் .

    முதல்வர் அவரது துணைவியார் மணியன் மூவரும் புறப்பட ஆயத்தமானார்கள் ஆன்மீக விஷயமானதால் திரு.பிச்சாண்டி அவர்கள் முதல்வருடன் செல்ல தயங்கினார் ஆனால் முதல்வர் விடவில்லை தனது உதவியாளர் எந்த சந்தர்பத்திலும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்து அவரையும் உடன் அழைத்து சென்றார் .

    ஸ்ரீ மடத்திற்கு முதல்வரின் வருகை முன்னதாக அறிவிக்கப்பட்டது மகானுக்கு சற்றே உடல் நலம் பாதிப்பு இருந்த போதிலும் முதல்வரை பார்க்க அனுமதி அளித்தார் , முதல்வரும் மகானுக்கு உடல்
    நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டுத்தான் இந்த சந்திப்புக்கு திட்டமிட்டார் .மகான் அமர்ந்திருக்க அவருக்கு சற்று எதிரே முதல்வர் தன் துணைவியாருடன் அமர்ந்திருந்தார்

    செயலாளர் பிச்சாண்டியோ சற்று தள்ளி போலீஸ் வளையத்திற்கு அப்பால் நின்றிருந்தார் , இதை கவனித்த முதல்வர் அவரை சைகை கட்டி அருகே வருமாறு அழைத்தார் , காவலர்கள் உள்ளே விட மறுத்ததும் முதல்வர் அழைத்ததால் தான் செல்கின்றேன் என்று கூறி முதல்வர் அருகே சென்று அமர்ந்தார் .

    மகான் பிச்சாண்டியை பார்த்து இவர் உங்கள்
    பி.ஏ வா என்று கேட்க , முதல்வர் ஆமாம் என்றதும் அங்கிருந்த படியே பிச்சாண்டி தன் வணக்கத்தை தெரிவிக்க , மகானும் அவரை தனது திருக்கரத்தை உயர்த்தி ஆசிர்வதித்தார். பிறகு முதல்வர் மகானை பார்த்து "உங்கள் தேகம் எப்படி இருக்கிறது?" என்று கேட்டார்.

    "தேகம்" என்று அவர் கேட்டது , "தேசம்" என்று மகான் செவிகளில் ஒலிக்க
    தேசத்திற்கு என்ன நன்றாகத் தானே இருக்கிறது என்றார் மகான்

    முதல்வர் பிச்சாண்டியை திரும்பி பார்க்க , அவர் மகானிடம் விளக்கினார்
    "தங்களது தேகம் எப்படி இருக்கின்றது" என்று முதல்வர் கேட்கிறார்
    அதற்கென்ன நன்றாகத் தான் இருகின்றது என்றார் மகான் லேசாக புன்முறுவல் செய்தபடி , இடையில் மடத்து சிப்பந்திகள் பெரியவாளுக்கு உடம்பு ரொம்ப முடியல மருந்தே சாப்பிட மாட்டேன்கரா , முதல் மந்திரிதான் சொல்லணும் என்றார்.

    உடனே முதல்வர் சொல்லுங்கள் நான் என்ன செய்யவேண்டும்? மகானிடம் கேட்கிறார் . அப்போதும் மகான் தன் உடம்பை பற்றி அவரிடம் பேசவில்லை

    "எனக்கு நீங்கள் மூன்று காரியங்களை செய்வதாக வாக்குறுதி தரவேண்டும்" என்றார்

    "சொல்லுங்கள் செய்கிறேன் " முதல்வர் உணர்ச்சிவசப்பட்டு பதில் சொல்கிறார்

    "முதல் விஷயம் - தமிழ் நாட்டிலே பல கோவில்களில் விளக்கே எரியறது இல்லை . விளக்கு எரிய நீங்கள் ஏற்பாடு பண்ணனும் , முதல்வர் தலையாட்டுகிறார்

    இரண்டாவதாக , பல கோயில்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கு அதெல்லாம் ஒழுங்கு படுத்தி கும்பாபிஷேகம் நடத்தனும்".

    "செய்துவிடுகிறேன் "

    மூன்றாவது விஷயம் என்ன என்பதை சொல்ல மகான் சற்றே தயங்குகிறார்

    முதல்வரும் மகானின் முகத்தை உற்று பார்த்த வண்ணம் இருக்கிறார்
    "நாகசாமியை மன்னிச்சுருங்கோ " என்கிறார் ,

    (நாகசாமி யார் என்பதை பற்றி சொல்லியாக வேண்டும்) .
    பழங்கால கோவில்கள் , சின்னங்கள் போன்றவைகளைப் பற்றி ஆராய்ந்து புதிய புதிய தகவல்களை சேகரித்து வந்த தொல்பொருள் ஆராய்ச்சித்துறையை சேர்ந்தவர் . அவர் கண்டுபிடிக்கும் பல பழமையான விஷயங்களை , நேரடியாக பத்திரிகைகளுக்கு தொகுத்து கொடுத்து விடுவார் . பத்திரிகைகளை பார்த்துத் தான் முதல்வரே அவைகளைப் பற்றி அறிந்து கொள்வார் .
    முதல்வருக்கு இது தம்மை உதாசீனப்படுத்தும் செயல் என்கிற எண்ணம் . அரசுக்கு சொல்லிவிட்டு தானே அதை வெளியில் சொல்லவேண்டும் , இதனால் முதல்வர் நாகசாமியை தற்காலிக பதவி நீக்கம் செய்துவிட்டார் , அதை நாகசாமி மகானிடம் சொல்லவும் இல்லை , முதல்வரிடம் கேட்கவும் இல்லை . முதல்வர் ஒரு நிமிடம் மௌனம் சாதிப்பதைக் கவனித்த மகான் பேசினார்

    " நாகசாமி பல கோவில்களைப் பத்தி விவரமாக ஆராய்ச்சி செய்து எவ்வளவோ விஷயங்களை நாட்டுக்காக தெரியப்படுத்தி இருக்கார் , அவர் ஆராய்ச்சி பண்ணலேன்னா பல விஷயங்கள் வெளியில தெரியாமலேயே போய் இருக்கும் "மன்னித்து விடுகின்றேன் " என்பது போல் முதல்வர் தலையை ஆட்டினார்.

    மிகவும் சிறப்பு வாய்ந்த இந்தச் சந்திப்பில் தமிழ் நாட்டுக் கோயில்களுக்கு நிறைய நன்மைகள் ஏற்பட்டன , தனது உடல் நிலையை பற்றி கவலைப்படாமல் வேறு விஷயங்களை பற்றி எவ்வளவு கவலைப் படுகின்றார் என்று வியந்தார் முதல்வர்.......... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2922
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜியார் நினைத்து இருந்தால் !! தன் வாழ்நாள் கடைசிவரை சிவாஜி போல அக்கடா துக்கடா வேடங்களில் நடித்து காலத்தை தள்ளி இருக்கலாம் !!! இந்த நேரத்தில் கருணாநிதிக்கு நன்றி சொல்லவேண்டும் !! தலைவரை சீண்டிபார்க்க கொம்புசீவி முக முத்துவை கலமிறக்கியமைகாக !! திட்டம்போட்டு தலைவரை மட்டம் தட்டிய கருணாநிதிக்கு நன்றிதான் சொல்லவேண்டும் !! இல்லையென்றால் ஒரு புரட்சிதலைவர் , முதலமைச்சர் நமக்கு கிடைத்து இருக்கமாட்டார் !! ஊழலை எதிர்த்து திருகழுகுன்றம் கூடத்தில் சிம்மகர்ஜனை புரிந்தார் தலைவர் !! தூக்கி எறிந்தார் கண்ணில்லாத கபோதி கருணாநிதி !! தலைவரின் வாழ்க்கையே மாறிவிட்டது !! ஊழல் கருணாநிதி கூட்டத்தை வேரோடும் !! வேரடி மண்ணோடும் சாய்த்துவிட்டார் நம்தலைவர் !!! அதன் பின் தலைவர் உயிருடன் இருக்கும் வரை கருணாநிதியால் தலைதூக்க முடியவில்லை !!
    அதற்கு அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம் !! அவமானங்கள் சொல்லி முடியாது !! அப்படிப்பட்டவரின் தொண்டர்கள் எப்படி இருக்கவேண்டும் ?????? ஊழலுக்கு வெண்சாமரம் வீசுவதா ?? வாழ்த்து சொல்வதா ?? அப்படி ஊழலை சிவப்புக்கம்பளம் போட்டு வரவேற்கும் !! நபர்கள் என் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ள லாயக்கு அற்றவர்கள் !! தயவுசெய்து அப்படி பட்டவர்கள் நட்பு வட்டதில் இருந்து நான் விலகிகொள்கிறேன் !! நண்பர்களே ?????

    இதில் நான் யாரையும் tag செய்யவில்லை !!!.... தலைவர் பக்தர் ஒருவர் ஆதங்க பதிவு...

  4. #2923
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., கதாநாயகனாக நடித்த முதல் படம்" ராஜகுமாரி" வெளியான நாள் 11-04-1947.
    ராஜகுமாரி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] உடுமலை நாராயணகவியின் பாடல்களுக்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார்... Thanks......

  5. #2924
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜகுமாரி எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதலாவது திரைப்படமும்,[2] மு. கருணாநிதி முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படமும், ஏ. எஸ். ஏ. சாமி முதன் முதலில் இயக்கிய திரைப்படமும் ஆகும்.[1] இத்திரைப்படத்திலேயே முதன் முதலில் பின்னணிக் குரல் பயன்படுத்தப்பட்டது. ‘காசினிமேல் நாங்கள்’ என்ற எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்து திருச்சி லோகநாதன் பாடிய பாடலுக்கு எம். என். நம்பியார் வாயசைத்தார்.[3] இப்படத்துக்கு உரையாடலை மு. கருணாநிதி எழுதியபோதும் உரியமுறையில் அவர் பெயர் படத்தில் இடம்பெறவில்லை.[4] படத்தின் பாட்டுப் புத்தகத்தின் பழைய பிரதியில், ‘கதை, வசனம், டைரக்*ஷன்’ ஏ.எஸ்.ஏ.சாமி பி.ஏ., ஹானர்ஸ் என்றும் ‘உதவி ஆசிரியர்’ – மு.கருணாநிதி என்றும் அச்சிடப்பட்டிருக்கிறது.[5]
    இயக்கம்
    ஏ. எஸ். ஏ. சாமி
    தயாரிப்பு
    எம். சோமசுந்தரம்
    ஜூபிட்டர்
    எஸ். கே. மொக்தீன்
    இசை
    எஸ். எம். சுப்பையா நாயுடு
    நடிப்பு
    எம். ஜி. ஆர், கே. மாலதி, எம். என். நம்பியார், எம். ஆர். சுவாமிநாதன், டி. எஸ். பாலையா, புளிமூட்டை ராமசாமி, கே. தவமணி தேவி, எம். எம். ஏ. சின்னப்பா தேவர், எஸ். வி. சுப்பையா, நாராயண பிள்ளை, டி. கே. சரஸ்வதி, எம். எம். ராதாபாய்
    ஒளிப்பதிவு
    டபிள்யூ. ஆர். சுப்பாராவ், வி. கிருஷ்ணன்
    படத்தொகுப்பு
    டி. துரைராஜ்
    வெளியீடு
    ஏப்ரல் 11, 1947
    நீளம்
    14805 அடி
    நாடு
    இந்தியா.......... Thanks...

  6. #2925
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Directed by
    A. S. A. Sami
    Produced by
    Jupiter Pictures
    Written by
    A. S. A. Sami
    Screenplay by
    A. S. A. Sami
    Story by
    A. S. A. Sami
    Starring
    M. G. Ramachandran
    K. Malathi
    M. R. Saminathan
    T. S. Balaiah
    K. Thavamani Devi
    M. N. Nambiar
    Music by
    S. M. Subbaiah Naidu
    Cinematography
    W. R. Subba Rao
    U. Krishnan
    Edited by
    D. Durairaj
    Production
    company
    Jupiter Pictures
    Distributed by
    Jupiter Pictures
    Release date
    11 April 1947[1]
    Running time
    134 mins
    Country
    India Male cast
    M. G. Ramachandran as Sukumar
    T. S. Balaiah as Aalahalan
    M. R. Swaminathan as Evil Sorcerer
    S. V. Subbaiah as King
    M. N. Nambiar as Bahu
    Pulimoottai Ramasami as Sorcerer's Diciple
    M. E. Madhavan as Boat sailor
    Narayana Pillai
    Female cast
    K. Malathi as Princess Mallika
    K. Thavamani Devi as Visha, Queen of an island
    M. Sivabhagyam as Bahani
    M. M. Radha Bai as Queen
    C. K. Saraswathi as Anjalai
    R. Malathi
    Vaazhvom Vaazhvom 02:12
    2 Kannara Kaanpadhenro M. M. Mariyappa 02:09
    3 Maaran Avadhaaram 03:15
    4 Maamayilena Nadamaaduraal 03:06
    5 Neyramithe Nalla .. Sukumaaran 02:13
    6 Paampaatti Chiththanaye 02:59
    7 Paattil Enna Solven Paangi 03:27
    8 Thirumuga Ezhilai Thirudi Kondathu M. M. Mariyappa & .. 02;53....... Thanks...

  7. #2926
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Jupiter Pictures partner Somu asked A. S. A. Sami to create a screenplay that he himself could direct with artistes on the payroll of the company. However, when he read Sami's screenplay, he suggested that P. U. Chinnappa and T. R. Rajakumari, who were in the forefront at that time, play the lead roles. But Sami requested Somu to stick to the original decision. M. G. Ramachandran was on Jupiter's payroll. His looks were handsome and he had an athletic body. Also, the Siva-Parvathi dance he performed with K. Malathi in Jupiter's 1946 production Sri Murugan was impressive. MGR and Malathi were asked to play the lead roles. After more than half the film was shot, the company's other partner S. K. Mohideen felt the project be abandoned. Somu weighed the consequences in the light of future career of Sami and MGR. He told his partner that a decision could be taken on completion of the film.[2...... Thanks.........

  8. #2927
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Rajakumari" was MGR's 15th film and first film as leading actor. Director of this film, ASA Samy arranged a wrestler called Kamaludeen to participate in a fight sequence for the film. But MGR insisted to have Sandow M. M. A. Chinnappa Thevar who had been acting in small roles to do the role. At first director was not interested to have him in the film, but later agreed.[3] K. Thavamani Devi who was a talented dancer and singer played the role of a vamp. At one point she came for shooting wearing a dress with a plunging neckline (something unseen those days). It caused ripples on the set.[2]....... Thanks...

  9. #2928
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "Rajakumari" turned out to be a commercial success with huge profits. In 2008, film historian Randor Guy said it would be "Remembered for: the debut of M. G. Ramachandran as hero and A. S. A. Sami as director.[2]... Thanks.........

  10. #2929
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "ராஜகுமாரி", சென்னை ஸ்டார் கிரௌன் மற்றும் ஒரு அரங்கு மதுரை சிந்தாமணி திருச்சி வெலிங்டன் சேலம் ஓரியண்டல் கோவை ராஜா ஆகிய திரையரங்குகளில் 100நாட்களை கடந்து ஓடியது.......... Thanks.........

  11. #2930
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நேர்மையே உன் பெயர்தான் மொரார்ஜியோ!:::

    இன்றைக்கு மொரார்ஜி தேசாயின் நினைவு நாள்!

    ஒரு மாமனிதரை நினைவு கூர வாய்ப்பளித்த கொரோனாவுக்கு நன்றி!

    தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஆளுமை என்பதுதான் ஆராய்ச்சியாளர்கள் தேசாய்க்கு தரும் அடைமொழி!

    தேசாயையெல்லாம் அரசியல்வாதி என்று அரசியல்வாதிகளே ஒப்புக்கொள்வதில்லை!

    இம்மியும் பிசகாத நேர்மை, வெறி பிடித்த தேசப்பற்று, லஞ்சம்ஊழல் என்றால் கொலைவெறி, வாரிசு அரசியலில் உடன்பாடின்மை என இலக்கணமாக வாழ்ந்த மனிதர்!

    வழக்கம் போல் தனிமனித துவேசத்தையே ஆயுதமாக்கி, தங்களை வளர்த்துக்கொண்ட தமிழக தலைவர்கள் மொரார்ஜியையும் விட்டு வைக்கவில்லை!

    மொரார்ஜி இந்தி வெறியர், மொரார்ஜி வட மாநிலங்கள் ஆதரவாளர் என்பதாக சொல்லி சொல்லி தமிழக மக்களிடம் மொரார்ஜியை வில்லனாக்கி விட்டார்கள்!

    மொரார்ஜி இந்தியாவுக்கு ஒரு பொது மொழி தேவை, அது இந்தியாக இருக்கலாம் என்றவர்!
    மொரரார்ஜி பிரதமராகயிருந்த போதுதான் எம்ஜிஆர் முதல்வர்!
    மொரார்ஜியின் காலத்தில்தான் அதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் எப்போதும் ஒதுக்கியிராத நிதி ஒதுக்கீடு தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டது என்பது வரலாறு!

    மொரார்ஜியின் காலத்தில் மத்தியில் சிவில் சப்ளைசில் செக்ரடரியாகயிருந்த ராகவன் I.A.S தனது "நேரு முதல் இந்திரா வரை"சுயசரிதத்தில் இப்படி எழுதுகிறார்!
    "எம்ஜிஆர் முதல்வராகயிருந்த போது அவரே உணவு அமைச்சர் ராம்நாயக் கேபினுக்கு வருவார்! பொதுவாக அமைச்சர்களும் செக்ரட்டரிகளும்தான் வருவார்கள்! எம்ஜிஆர் ஈகோ பார்க்காமல் அவரே வருவார்! ரேசன் மாதக்கோட்டாவை மூன்று மடங்காக உயர்த்திக்கேட்பார்! தமிழகத்தில் ஐயாயிரமாக இருந்த ரேசன் கடைகளை அவர்தான் இருபதாயிரம் ஆக்கியிருந்தார்! முதலில் மறுக்கும் உணவு அமைச்சர் பிறகு ஒப்புதல் தந்து விடுவார்! எம்ஜிஆர் போனதும் எங்களிடம் "என்ன செய்வது? அவர் பிரதமரின் செல்லப்பிள்ளை" என்பார்! தமிழக செக்டார் என்ற முறையில் எனக்கு பெருமையாக இருக்கும்"

    எம்ஜிஆருமே மொரார்ஜியுடனான தன் சந்திப்பை இப்படி எழுதுகிறார் "முதல்வரானதும் மரியாதை நிமித்தமாக பிரதமரை பார்க்கப்போனேன்! அதற்கு முன் ஓரிரு முறை பார்த்திருந்தாலும் பேசியதில்லை! மொரார்ஜி வட இந்திய ஆதரவாளர், சினிமாவை வெறுப்பவர், திமுக கூட்டணியில் இருப்பவர் என்ற அச்சம் என்னுள் இருந்தது! எப்படி நடத்துவாரோ என பயந்தேன்! மாறாக பிரதமர் என் கரங்களை இறுக பிடித்தபடி "ராமச்சந்திரன் நீங்கள் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் மது குடிக்க மாட்டீர்களாமே? தமிழ்நாட்டில் தீவிரமாக மது விலக்கை அமுல்படுத்த சட்டம் போட்டிருக்கிறீர்களாமே? பாராட்டுகள்" என்பதாக மகிழ்வோடு பேச ஆரம்பித்து விட்டார்! அவர் பிரதமராகயிருந்த வரை எந்த அப்பாயின்ட்மென்டுமே இல்லாமல் அவரை சந்திக்க அனுமதி அளித்தார்!"

    மொரார்ஜி ஒன்றுபட்ட மஹராஷ்டிரத்தின் முதல்வராகயிருந்த போது நடந்த சம்பவம் சோகத்தின், நேர்மையின் உச்சம்!

    தாயில்லாத மொரார்ஜியின் மகள் பியூசி தேர்வு எழுதியிருந்தார்! மெடிக்கல் சீட்டுக்கு இரண்டு மதிப்பெண் குறைந்து ரிசல்ட் வந்தது!

    மகள் மதிப்பெண்ணில் ஏதோ தவறிருக்கிறது, மறு கூட்டலுக்கு பணம் கட்டுகிறேன் அனுமதி தாருங்கள் அப்பா என்று மொரார்ஜியிடம் கேட்டார்!

    வாஞ்சையாக மகளின் தலையை நீவி விட்டு மொரார்ஜி "அம்மா நீ இப்போது முதல்வரின் மகள்! மறு கூட்டலில் நியாயமாகவே உனக்கு மதிப்பெண்கள் கிடைத்தாலும் முதல் அமைச்சராக நான் மிரட்டியே வாங்கியதாக ஊர் உலகம் சொல்லும்! சிரமம் பார்க்காமல் இன்னொரு வருடம் படித்து மெடிக்கலுக்கு தேர்வாகிக்கொள்!"

    மனமுடைந்தப்பெண் தூக்கமாத்திரைகளை அதிகமாகக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதும், கதறித்துடித்த மொரார்ஜி "இது என் நேர்மைக்கு கிடைத்த பரிசு" என்றதும் சரித்திரம்!

    அப்படிப்பட்ட மொரார்ஜி பிரதமராகயிருந்த போது அவரது மகன் பணி புரிந்த இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு சலுகைக்காட்டினார் என காங்கிரசும் அவரது கட்சியிலேயே இருந்த சரண்சிங் ஆதரவாளர்களும் பாராளுமன்றத்திலேயே அபாண்டமாக குற்றம் சுமத்தினார்கள்!

    மொரார்ஜி பாராளுமன்றத்தை விட்டு வெளியே போய் பேசுங்கள், அப்போதுதான் வழக்கு போட முடியும், பேசுங்கள் என்று சொல்லிப்பார்த்தார்!

    சட்டசபையிலும் பார்லியுலும் எதை வேண்டுமானாலும் பேசலாம்!

    இருந்தும் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு புகார் அனுப்பப்பட்டது, கோர்ட்டில் பொது நல வழக்கும் நடந்தது!

    உண்மை இருந்தால்தானே நிரூபிக்க!

    அதிருப்தியாளர்களுக்கு மந்திரிப்பதவியும், எம்பிக்களுக்கு நன்கொடையும் கொடுக்க மறுத்ததால் நேர்மையாளர் மொரார்ஜி பிரதமர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்!

    இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருதும், பாகிஸ்தானின் உயரிய விருதான நிசான்- இ - பாகிஸ்தான் விருதும் வழங்கப்பட்ட ஒரே இந்தியர் மொரார்ஜிதான்!

    முன்னாள் பிரதமர் என்ற முறையில் அரசு வழங்கிய குடியிருப்பு, சலுகைகள் அத்தனையும் மறுத்தவர் மொரார்ஜி!

    அவர் சொன்ன காரணம்தான் மெய்சிலிர்க்க வைக்கும்! "நான் தேசத்தின் குடிமகனாக என் கடமைகளை செய்தேன்! அந்திமக்காலத்தில் அதற்கான சலுகைகளைக்கொடுத்து என்னையும் கையூட்டு பெற்றவனாக சாகடித்து விடாதீர்கள்!"

    மும்பையில், ஒரு வாடகை அடுக்குமாடி குடியிருப்பில், மிகச்சிறிதான அறையில் அவரது அந்திமக்காலமும், சாவும் நடந்தது!

    ஜெய் ஹிந்த்!!!......... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •