Page 398 of 402 FirstFirst ... 298348388396397398399400 ... LastLast
Results 3,971 to 3,980 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3971
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அருமை சகோ
    M Sivanatarajan Poonmanam
    அவர்களே தாங்களின் கருத்து அருமை
    புரட்சித்தலைவர் தான் அஇஅதிமுக & இரட்டை இலை என்பதை எல்லாம் மறந்து விட்டார்கள்
    அவரின் பாடல்களை பயன்படுத்தினால் தான் ஒட்டே
    புரட்சித்தலைவர் அவரின் "குரு அண்ணா" அவர்களை கடைசிவரை மறக்கமால் கொடியிலும் அவரின் (புரட்சித்தலைவரின்) கையிலும் என்னை போன்ற உண்மை விசுவாசிகள் கையிலும் அண்ணா கொடியை பச்சைக்குத்தி விட்டார் அனால்
    தற்போது எல்லாம் நம்முடைய குரு புரட்சித்தலைவர் படத்தை போடுவதில்லை போட்டாலும் Stamp அளவுக்கு தான் போடுக்கிறர்கள்
    நானும் டெல்லியில் பாரளுமன்றத்தில் துனை சபாநாயகர் திரு தம்பித்துரை அலுவலகத்தில் அவர் உட்காரும் டேபிளில் தலைவர் அம்மா படத்தை
    பார்த்து மகிழ்ச்சி கொண்டேன் .
    ஆனால் தமிழக அமைச்சர்கள் டேபிளில் அம்மா படம் மட்டும் தான் உள்ளது. இது நியாயமா ?
    இனிமேலாவது புரட்சித்தலைவரின் புகைப்படத்தை பெரியதாக போட வோண்டுக்கிறேன
    நானும் மதுரைக்கு போய் இருக்கிறேன்
    சின்ன சின்ன ஒட்டலில் கூட சாமி படம் பக்கத்தில் புரட்சித்தலைவர் படம் இருக்கும் பூஜை செய்வதையும் பார்த்து உள்ளேன்
    புரட்சித்தலைவரின் இரட்டை இலையை மறக்கமால் தேனி தொகுதியில் இரட்டை இலையை யாரும் அசைக்கமுடியவில்லை
    தயவுச்செய்து புரட்சித்தலைவரை மறக்கவோண்டாம்...
    இனி தலைவர் அம்மா ஆட்சி என்று சொல்ல வேண்டுகிறேன்...
    வாழ்க புரட்சித்தலைவர் புகழ்....... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3972
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நமக்கெலாம் தலைவர்
    அரசுதான்! அதை தொடர்ந்து அவர் பெயரைச்சொன்னதால் அம்மாவின்அரசு அதைமறைத்து அம்மாவின் அரசு என்றால்தான் பிழைக்கமுடியும் என்றகூட்டம் எல்லோருக்கும் தெரியும் அது வேறு ஒரு கூட்டம் அதனால்தான் அவரையும் இழந்து!!!!!!!... எப்பொழுதும் தலைவர் அரசு என்று சொல்லி கொண்டே இருப்பார்கள் எனில் எந்த பிரச்சினையும் பறந்தோடும்...... Thanks...

  4. #3973
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கல்கி வார இதழ் -03/05/20
    -------------------------------------------

    கேள்வி*: மற்ற நாடுகளிலும்*நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உண்டா*?
    * * * * * * * * * பிரதீபா*ஈஸ்வரன், சேலம்*

    தராசு பதில்கள்*:* ஹீரோக்களுக்கு ரசிகர் மன்றங்கள் என்ற கலாச்சாரத்தை உலகத்திற்கே* அறிமுகப்படுத்திய*வர்கள்* தமிழர்கள்தான் .* எம்.ஜி.ஆர்.* சிவாஜி*கணேசன் தொழிற்போட்டி உச்சமடைந்து காலத்தில்தான் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் இவர்களுக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன .*

    கடல்*கடந்து*ரசிகர் மன்றங்களை வென்றவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான் .அந்தமான்*தீவில்*பணத்தோட்டம்*எம்.ஜி.ஆர். மன்றத்தை*திறந்து வைத்தவர்*அன்றைய இந்திய*பிரதமர் லால்*பகதூர்*சாஸ்திரி*.இது வரலாறு .இன்று ஹாலிவுட்*நடிகர்களுக்கு முகநூல்*பக்கமிருக்கிறது .* ஆனால் மன்றங்கள் கிடையாது . அதுபோல்*கட் அவுட், பால் அபிஷேகம் கிடையாது .

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #3974
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    முகநூல் நண்பர்கள் அனைவருக்கும்
    வணக்கம் .
    நமது ஒளிவிளக்கின் குலவிளக்கு ஜானகி அம்மையாரின் நனைவு நாளான அன்று(19.05.2019)ஆனந்த விகடனில் நடிகை விஜயகுமாரியின் கருத்து.....


    எம்.ஜி.ஆர் சினிமாவிலும் அரசியலிலும் ஜொலித்த காலங்களில், அவருக்கு நிழலாக இருந்து கவனித்துக்கொண்டவர், அவரின் துணைவியார் வி.என்.ஜானகி. அரசியலில் நாட்டமில்லாதவர் ஜானகி. ஆனால், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, சிலகாலம் முதல்வர் பதவியை வகித்தார் ஜானகி. எனவே, தமிழக அரசியல் வரலாற்றில் இவரின் பெயரும் நிலைத்துவிட்டது. வி.என்.ஜானகியின் நினைவு தினமான இன்று (மே 19), அவருடன் பழகிய நினைவுகளைப் பகிர்கிறார் நடிகை விஜயகுமாரி.

    ``எம்.ஜி.ஆர் என் உடன்பிறவா அண்ணன் என்பது பலருக்கும் தெரியும். அவர் துணைவியார் ஜானகியை நான் அக்கானுதான் கூப்பிடுவேன். எம்.ஜி.ஆர் உச்ச நடிகராகவும் முதல்வராகவும் ஜொலித்த காலங்களில் மிக எளிமையாகவே வாழ்ந்தார் ஜானகி அக்கா. வீட்டு வேலைக்குப் பணியாளர்கள் இருந்தாலும், அக்காவும் நிறைய வேலைகளைச் செய்வாங்க. எம்.ஜி.ஆரின் சினிமா, அரசியல் பணிகள்ல அக்கா தலையிடவே மாட்டாங்க. அவங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம், எம்.ஜி.ஆர் மற்றும் குடும்பம் மட்டுமே!

    ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின்போதும் என் கணவரும் நானும் எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போவோம். அவர் எங்களுக்கு 100 ரூபாய் கொடுப்பார். ஜானகி அக்கா எனக்கு ஒரு புடவை கொடுப்பார். நானும் அக்காவுக்குப் புடவை கொடுப்பேன். எம்.ஜி.ஆர் குடும்பத்தில் நானும் ஓர் அங்கமா இருந்தேன். ஒருநாள் அதிகாலையில 5 மணிக்கு எனக்குப் போன் பண்ணினார் எம்.ஜி.ஆர். வழக்கத்துக்கு மாறாக, `சம்பந்தி... என்ன பண்றீங்க? மீதி விஷயத்தை அக்கா சொல்வாங்க'னு சொல்லிட்டு போனை ஜானகி அக்காகிட்ட கொடுத்திட்டார். எனக்கு ஒண்ணுமே புரியலை. அப்புறம் பேசிய ஜானகி அக்கா, `உன் பையனுக்கு எங்க பேத்தியைக் கல்யாணம் பண்ணிக்கொடுக்கலாம்னு ஆசைப்படறோம்'னு சொன்னார். அது சரிவராதுனு நான் சொன்னதும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி இருவருமே என் சூழ்நிலையைக் கனிவோடு புரிஞ்சுகிட்டாங்க.

    எம்.ஜி.ஆர் சுடப்பட்டபோதும், பல வருடங்களுக்குப் பிறகு அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோதும். தினமும் ஜானகி அக்காவுக்குச் சாப்பாடு கொண்டுபோய் கொடுத்துட்டு, சிகிச்சையில் இருந்த எம்.ஜி.ஆர் அண்ணனைப் பார்த்துட்டு வருவேன். ஜானகி அக்காவுக்கு ஆன்மிகத்துல அதிக ஆர்வம். அவங்க என்னை நிறைய கோயில்களுக்குக் கூட்டிப்போவாங்க. அவர் வீட்டுக்கு நான் அடிக்கடிப் போவேன். அவங்க என் வீட்டுக்கும் அடிக்கடி வருவாங்க. நேரம் போவதே தெரியாம, நிறைய விஷயங்களைப் பத்திப் பேசுவோம். ஆனால், எங்க உரையாடலில் சினிமா, அரசியல் விஷயங்கள் அதிகம் இடம்பெறாது.

    நான் எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போனால், `வா! சாப்பிடலாம்'னு சொல்லுவாங்க ஜானகி அக்கா. `அக்கா, கருவாடு சமைச்சிருக்கீங்களா'னு கேட்பேன். `நீயும் உன் அண்ணனும் கருவாடு இல்லைன்னா சாப்பிட மாட்டீங்களா'னு கேட்பாங்க. எனக்காக ஸ்பெஷலா சமைச்சுப் பரிமாறுவாங்க. அக்காவுக்கு அப்போ நடிப்பில் ஆர்வமில்லைனாலும், சினிமா பார்க்க ரொம்ப ஆசைப்படுவாங்க. `நாளைக்குப் புதுப்படம் ரிலீஸாகுது. நீ கண்டிப்பா வரணும்'னு என்னை வலியுறுத்திக் கூப்பிடுவாங்க. என் ஷூட்டிங் பணிகள் பாதிக்காத வகையில், முதல்நாள் முதல் காட்சினு அக்காவும் நானும் நிறைய படங்களுக்குத் தோழிகளுடன் போவோம். சிறப்புச் சலுகைகளைப் பயன்படுத்தாமல், நாங்களே வரிசையில் நிண்ணு டிக்கெட் வாங்கித்தான் சாதாரண மக்கள்போல படம் பார்ப்போம்.

    எந்தப் பாதுகாப்பும் இல்லாம, அக்காவும் நானும் அடிக்கடி கார்ல பயணம் செய்வோம். சினிமா, கட்சிப்பணினு எம்.ஜி.ஆர் அண்ணன் தன் வேலைகளை முடிச்சுட்டு பலநாள்கள் வீட்டுக்குத் தாமதமா வருவார். அப்போ ஜானகி அக்கா, எனக்கு போன் பண்ணுவார். `எனக்குத் தூக்கம் வருது'னு சொன்னாலும், அடம்பிடிச்சு எம்.ஜி.ஆர் வரும்வரை என்கிட்ட மணிக்கணக்கில் கதை பேசுவார். . எம்.ஜி.ஆர் கடைசி காலகட்டத்தில் உடல்நிலை சரியில்லாம இருந்தார். அப்போ குளிப்பாட்டிவிடுறதுல இருந்து அவரைக் குழந்தைபோல கவனிச்சுகிட்டாங்க ஜானகி அக்கா.

    கருத்து வேறுபாடு காரணமாக என் கணவரைப் பிரிஞ்சு வந்த பிறகு, நான் தனிமையில் ரொம்பவே வேதனையிலும் கஷ்டத்திலும் இருந்தேன். அப்போ எனக்குப் பக்கபலமா இருந்தார் ஜானகி அக்கா. எனக்கு வழிகாட்டியாக இருந்து, மீண்டும் நான் நடிக்கிறதுக்கு ஊக்கம் கொடுத்தார். பிறகு, எனக்கு ஒரு தாய்போல அரவணைப்புடன் இருந்தார். எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தபோது, ஒவ்வொரு நாளும் எனக்கு போன் பண்ணிப் பேசுவார் ஜானகி அக்கா. அவரின் கஷ்ட காலத்தில் நானும் ஆறுதலாக இருந்தேன். அக்கா ரொம்ப இரக்கக் குணம் கொண்டவங்க. யார் உதவினு கேட்டாலும், முன்வந்து உதவி செய்வார்" என்கிறார் விஜயகுமாரி.

    வி.என்.ஜானகி வழங்கிய நிலத்தில்தான் தற்போதைய அ.தி.மு.க அலுவகம் செயல்படுகிறதாம். ``என் அண்ணன் அரசியல் இருந்த காலகட்டம். அப்போ தன் சொந்த நிலத்தை, கட்சி அலுவலகம் கட்ட எம்.ஜி.ஆர் கிட்ட இலவசமா கொடுத்தாங்க ஜானகி அக்கா. அந்த இடத்துலதான், இப்போ சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகம் அமைந்திருக்கு. அக்காவுக்கு துளிகூட அரசியலில் ஆர்வமில்லை. ஆனா, சூழ்நிலையால் சில நாள்கள் முதல்வராக இருந்தாங்க. அப்போ அடுத்தடுத்த அரசியல் சூழல்களால், அவங்க கவலைப்பட்டாங்க. அதனால, `ஏன் அக்கா உங்களுக்கு இந்த வேண்டாத வேலை'னு கேட்டேன். `என் தலையெழுத்து. நான் ஒரு சூழ்நிலைக் கைதி'னு சொல்லி வருத்தப்பட்டாங்க. முதல்வரா இருந்தபோதும், வீட்டு வேலைகள் செய்வதை அக்கா வழக்கமா வச்சிருந்தாங்க. `என் வீட்டு வேலையை நான் செஞ்சா என்ன தப்பு'னு கேட்பாங்க. அண்ணனின் மறைவுக்குப் பிறகு, அக்காவுக்கு உடல்நிலை சரியில்லாம போச்சு.

    ஜானகி அக்காவின் தம்பியின் பேத்திக்குப் பிறந்த நாள் நிகழ்ச்சி. மதியம் வீட்டுக்குச் சாப்பிட வரச்சொல்லி என்னைக் கூப்பிடிருந்தார் அக்கா. நான் போறதுக்கு ஒருமணிநேரம் தாமதமாகிடுச்சு. அதுக்குள் நிகழ்ச்சி முடிந்துடுச்சு. அப்போ, சாப்பிட்டு முடிச்ச உடனே அக்காவின் தலை தொங்கி, இறந்துட்டாங்க. நான் அவங்க வீட்டுக்குள் போகும்போது, `அம்மா இறந்துட்டாங்க'னு காவலாளி சொன்னார். பதறிப்போய் வீட்டுக்குள் போனேன். முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அங்க வந்து, அரசு மரியாதையுடன் அக்காவின் உடல் அடக்கத்துக்கு ஏற்பாடு செய்தார்.

    அக்காவின் உடல் அடக்கம் நடந்தபோது. என் விரலில் இருந்த மோதிரம் ஒன்றைக் கழற்றி அக்காவின் உடல்மீது போட்டுட்டு என் வீட்டுக்கு வந்தேன். பிறகு, இதுவரை ராமாவரம் தோட்டத்துக்கு நான் போகவேயில்லை. ஒவ்வொரு நாளும் என் அண்ணனையும் அக்காவையும் நினைச்சுப் பார்ப்பேன். அவங்க என் மனதில் நீங்கா புகழுடன் இருப்பாங்க" என்று உருக்கமாகக் கூறுகிறார் விஜயகுமாரி.
    நன்றி --ஆனந்த விகடன்........ Thanks...

  7. #3975
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உருக்கமான நினைவுகள்... பதிவு மூலம் புது புது விவரங்கள் அறிய முடிகிறது...... நன்றி நண்பரே.... இனிய இரவு வணக்கம்.....
    விஜயகுமாரியை தலைவர் தன் தங்கை போல் நினைத்ததால் அவர்களுடன் ஜோடியாக நடிக்க ஒரு போதும் சம்மதிக்கவில்லை........ Thanks...

  8. #3976
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவரின் "உலகம் சுற்றும் வாலிபன்" வெள்ளித்திரைக்கு வந்த நாள் (11.05.1973).

    உலகம் சுற்றும் வாலிபன் பெரும் நெருப்பாறுகளைக் கடந்து திரையைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன் வேறு எந்த ஒரு மாநிலமொழி படத்துக்கும் இப்படி ஒரு முட்டுக்கட்டை கிடையாது திரும்பிய திசைகளிலெல்லாம் நெருக்கடி பெற்ற படம் .படத்தை திரையிடும் முயற்சியில் இறங்கும் பொழுது டப்பிங் மிக்சிங் ரீ ரிக்கார்டிங் பிரிண்ட் போடுதல் என எந்த பணிகளில் எப்போது எம்ஜிஆர் ஈடுபட்டாலும் மின்சாரம் அறவே இருக்காது எம்ஜிஆருக்கு எப்படி எல்லாம் தொல்லை தரலாம் என்பதில் முழு கவனம் செலுத்தியது கருணாநிதி யின் ஆளுங்கட்சி மேலும் சுவரொட்டிகளின் வரியை உயர்த்தியது.
    படம் வெளியான அன்று சென்னையிலே மின் வினியோகம் இல்லை இனிமேலும் மின்விநியோகம் அறவே வராது என்ற நிலைமையை புரிந்த தேவிபாரடைஸ் சொந்தக்காரர்கள் சக்திமிக்க ஜெனரேட்டரை வைத்து திரையில் உலகம் சுற்றும் வாலிபனை திரையிட்டு காட்டினார்கள்.

    *'மேலே ஆகாயம் கீழே பூமி' இதுதான் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வைத்த முதல் டைட்டில் .

    *அயல்நாட்டு படப்பிடிப்புக்கு அதிகம்பேர் அரசாங்கம் அனுமதிக்கவில்லை. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், விஎன் ஜானகி அம்மையார், ஆர் எம் வீரப்பன், மஞ்சுளா ,சந்திரகலா, லதா ,அசோகன், நாகேஷ், ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி, இயக்குனர் பா .நீலகண்டன் ,வசனகர்த்தா கே.சொர்ணம் நடன இயக்குனர் கோபாலகிருஷ்ணன் போன்ற முக்கியமானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் .

    *உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு முதலில் இசை அமைப்பாளராக நியமிக்கப்பட்டவர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் .பின்னர் எம்.எஸ்.வி இசை அமைப்பாளர் ஆனார்.

    *உலகம் சுற்றும் வாலிபன் வட ஆற்காடு தென் ஆற்காடு செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கான வினியோக ஒப்பந்தம் முதன்முதலாக ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரோடு கையெழுத்தாகியது .

    *பட்டிக்காட்டு பொன்னையா இயக்குனர் பி எஸ் ரங்கா அவர்களின் உதவியாளர் ஹரி அவர்கள் எக்ஸ்போவில் படம் எடுப்பதற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார் .

    *முப்பத்து ஆறாயிரம் பல்புகளில் வெளித்தோற்றத்தில் சுவிஸ் பெவிலியனில் எம்ஜிஆரும் சந்திரகலாவும் ஆடிப்பாடும் நிகழ்ச்சிக்கு விசேஷஅனுமதி வழங்கப்பட்டது.எக்ஸ்போ 70 கண்காட்சியில் மொத்தம் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது .

    *காமபுரா புத்தர் சன்னதி ஜப்பானின் புகழ்பெற்ற புராதான கோவில் அங்கு வீற்றிருக்கும் பிரம்மாண்ட சித்தார்த்தர் சிலைக்கு அருகில் எம்ஜிஆர் புத்தி தெளிந்து அவர் பைத்தியமாக தோன்றும் காட்சியை எடுத்தனர் .

    *லில்லி மலருக்கு கொண்டாட்டம் என்ற பாடலில் எம்ஜிஆர் மஞ்சுளா கப் அண்ட் சாசரில் தோன்றும் காட்சி நாராவில் டரீம் லேண்டில் எடுக்கப்பட்டது
    .
    *அன்னப்பட்சி போன்ற சிறிய கப்பலில் எடுக்கப்பட்ட பன்சாயி பாடல் காட்சி டோக்கியோவில் உள்ள யுமூரிலேண்டில் எடுக்கப்பட்டது .

    *டால்ஃபின் ஷோ மற்றும் தீ வளையத்தில் நாய் மற்றும் புலிகள் தாவும் காட்சியை மக்கள் ரசித்துக் கொண்டிருக்கும்போதே புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நேரடியாக படமாக்கினார்.

    *லதாவின் முதுகில் அசோகன் துப்பாக்கியை நீட்டியவாறு பின்தொடரும் சீன் டோக்கியோவில் பரபரப்பான கின்சா அங்காடித்தெருவில் எடுக்கப்பட்டது .

    *நிலவு ஒரு பெண்ணாகி பாடல் ஹாங்காங்கில் உள்ள பெல்ஸ் கடற்கரை யில்படமாக்கப்பட்டது .

    *குழந்தைகளோடு எம்ஜிஆர் லதா பங்கேற்கும் சிக்குமங்கு பாடல்டைகர் பார்ம் கார்டனில் படமாக்கப்பட்டது .

    *ஹாங்காங்கின் இந்திய வம்சாவளி
    மிஸ்டர் ஹரி லீலாவின் விசைப்படகில் தங்கத் தோணியிலே பாடல் எடுக்கப்பட்டது .
    தங்கத் தோணியிலே பாடல் கே.ஜே.யேசுதாஸ் எம்ஜிஆருக்காக பாடிய முதல் பாடல் .

    *புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் சேர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலில் நடித்த தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ராத் தமிழ் சினிமாவில் இடம் பெற்ற முதல் வெளிநாட்டு நடிகை ஆவார்.அந்த பெருமை எம்.ஜி.ஆரையே சாரும்.

    *அவள் ஒரு நவரச நாடகம் பாடல் காட்சி சில மேட்சிங் ஷாட்டுகளை சத்யா ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான நீச்சல் தொட்டியில் எடுக்கப்பட்டது.

    *சென்னை தேவிபாரடைஸில்
    தொடர்ந்து 225 காட்சிகள்
    மதுரை மீனாட்சியில்
    தொடர்ந்து சுமார் 300 காட்சிகள்
    அரங்கு நிறைந்த காட்சிகளாக, திரையரங்கில் ஓடியது... உலக திரைப்படத் துறையில் இனியும் யாரும், எவரும் நெருங்க முடியாத, நினைத்து பார்க்க முடியாத பிரம்மாண்டமான சரித்திரம் படைத்த, சகாப்தம் உருவாக்கிய சாதனையின் உச்சம் பெற்ற வெற்றி எது தெரியுமா???!!! சென்னை நகரில் சுவரொட்டிகள் (Wall Posters) ஒட்டப்படாமலேயே வெள்ளிவிழா கொண்டாடிய அபூர்வமான, பேரற்புதமான, ஆச்சரியமான, விசித்திரமான இணையே இல்லாத அட்டகாச வெற்றி பெற்றது மிகவும் குறிப்பிட தக்கதாகும்....... Thanks.........

  9. #3977
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அடிமைப் பெண் - பொன் விழா
    50 -வது ஆண்டு. 01-05-1969 to 01-05-2019

    அடிமைப் பெண் 1969 ஆம்
    ஆண்டு இதே தொழிலாளர் தினத்தில் ( மே 1 -ஆம் ) வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் எம். ஜி. இராமச்சந்திரன் தானே தயாரித்த இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாஇருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியும் இருக்கிறார்.

    அடிமைப் பெண்:-
    இயக்குனர் : கே.சங்கர்
    தயாரிப்பு : எம் ஜி ஆர் பிக்சர்ஸ்
    கதை : எம் ஜி ஆர் பிக்சர்ஸ்
    நடிப்பு : எம். ஜி. இராமச்சந்திரன்,
    ஜெயலலிதா, சோ , சந்திரபாபு
    S.A. அசோகன் , R.S. மனோகர் ,
    ஜோதிலட்சுமி , பண்டரிபாய் ,
    ஜஸ்டின் , பேபிராணி , ராஜசிரி
    ஒளிப்பதிவு : ராமமூர்த்தி
    வசனம் : சொர்ணம்
    இசை : K.V.மகாதேவன்
    பாடல் : வாலி, சோமூ, புலமைப்பித்தன்
    வெளியீடு : 01.05.1969

    கதைச்சுருக்கம் :-

    வேங்கைமலை ராணியின் மீது தவறுதலாக நடக்க முயன்ற பொழுது கால்கள் வெட்டப்படும் செங்கோடன் சூரக்கோட்டை ராஜா ஆவான். இவன் தன் மனைவி மீது தவறுதலாக நடக்க முயற்சித்தான் என்ற கூற்றினால் அவனுடன் போர் புரிய வருகின்றான் போரில் வெற்றியும் பெறுகின்றான் வேங்கைமலை ராஜா (எம்.ஜி.ஆர்). ஆனால் நயவஞ்சக முறையில் அவனைக் கொலை செய்யும் செங்கோடன் பின்னர் அவன் நாட்டில் வாழும் பெண்கள் அனைவரையும் அடிமைப் படுத்த உத்தரவு பிறப்பிக்கின்றான். இச்செய்தியைக் கேட்டு அறியும் வேங்கையன்,தாயார்தனது மகனை செங்கோடன் கையில் பறிகொடுத்து தலைமறைவான இடத்தில் வாழ்ந்து வருகின்றார். வேங்கையனும் சிறுவயது முதல் சிறையில் அடைக்கப்பட்டு உலகமறியாது வாழ்கின்றான். காட்டுவாசி போலவே மாறிவும் வேங்கையனை வேங்கைமலையினைச் சேர்ந்தவனால் காப்பாற்றப்படுகின்றான். பின்னர் ஜீவா (ஜெயலலிதா) என்ற பெண்ணால் வளர்க்கப்படுகின்றான் வேங்கையன். அவளிடன் பேச, போர் செய்ய மற்றும் பல விடயங்களைக் கற்றுக் கொள்ளும் வேங்கையன் தனது தாயாரையும் சந்திக்கின்றான். தன் மகனை முதலில் சந்திக்க மறுக்கும் வேங்கையனின் தாயார் பின்னர் வேங்கையன் அடிமையாகவிருந்த பெண்களை விடுவித்தபின்னர் அவனைச் சந்திக்கின்றார். இச்சமயம் ஜீவா போன்றொரு பெண் வேறொரு பகுதிக்கு ராணியாகவிருப்பதைக் காணும் வேங்கையன் திகைப்படைகின்றான். அவளும் இவன் மீது காதல் கொள்கின்றாள். ஆனால் ஜீவாவையே காதலிக்கும் வேங்கையன் அப்பெண்ணை ஏமாற்றி தன் நாடுதிரும்புகின்றான். அச்சமயம் பார்த்து செங்கோடனுக்கு உதவி புரியும் அந்த ராணி தன்னை ஏமாற்றியதற்காக வேங்கையனை பழிவாங்குவதற்கு முயற்சி செய்யும் சமயம் ஜீவா தனது தோழி என்பதனைத் தெரிந்து கொள்கின்றாள். இச்சமயம் பார்த்து வேங்கையனின் தாயாரைக் கடத்திச் செல்லும் செங்கோடனிடமிருந்து தன் தாயை மீட்டெடுத்து செங்கோடனைக் கொலை செய்கின்றான் வேங்கையன். அதே சமயம் ஜீவாவைக் கொலை செய்ய முயலும் பெண்ணான வேங்கையனை அடைய விரும்பிய ராணி தவறுதலாகத் தாக்கப்பட்டு கொலையும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

    புகழ்பெற்ற பாடல் : -
    @ . ஆயிரம் நிலவே வா -
    @. தாயில்லாமல் நானில்லை
    @. காலத்தை வென்றவன் நீ
    @. ஏமாற்றதே.. ஏமாற்றதே..
    @. உன்னை பார்த்து இந்த
    @. அம்மா என்றால் அன்பு

    சிறப்பு :
    @. வெளியானது தொழிலாளர் தினத்தில்
    @ புரட்சி நடிகர் நடித்த 102 வது படம்
    @. புரட்சி நடிகர் கதாநாயகனாக வலம் வந்த 82-வது படம்.
    @. புரட்சி நடிகர் 2 வேடத்தில் பங்கு கொண்ட 7-வது படைப்பு
    @. மக்கள் திலகத்துடன் ஜெயலலிதா நடித்த 17-வது படம்
    @. தலைவரின் 11-வது வண்ண படம்
    @. மக்கள் திலகத்துடன் ராஜசிரி நடித்த 4-வது படம்.
    @. மக்கள் திலகத்துடன் K.V.மகாதோவன் இசை அமைத்த 22-வது படம்
    @. அதிகமான இடங்களில் வெளிப்புற படப்பிடிப்பு நடத்த பட்ட படம்
    @. K.சங்கர் தலைவருக்க இயக்கிய 5-வது படம்.
    @ வெள்ளி விழா படம் 25-வாரம் - மதுரை சிந்தாமணி
    @. அதிகமான பொருட்செலவில் உருவானது

    இந்த பதிவை எனக்கு தந்து உதவிய
    என்.வேலாயுதன்
    திருவனந்தபுரம் அவர்களுக்கு நன்றி........ Thanks...

  10. #3978
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Filmography Film 53 ( Poster )

    1962ஆம் ஆண்டின் முதல் திங்களில் வெளியான காஸ்ட்யூம் ட்ராமா ராணி சம்யுக்தாவைப் போலவே அடுத்த மாதம் வெளியான சோஷியல் ட்ராமா மாடப்புறாவும் எம்ஜியாருக்கு சராசரி வெற்றியைத் தந்து

    தன் சகோதரனைக் காப்பாற்றக் கொலைப்பழியை தான் சுமந்து, போலிசிடமிருந்து தப்பித்து உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் எம்ஜியாரின் வழக்கமான த்ரில்லர் + செண்டிமெண்ட் கதையை எஸ்.ஏ சுப்பராமன் இயக்கினார். இந்தக் காலகட்டத்தில் எம்ஜியாரின் நிரந்தர திரைஜோடியாக நிலைத்துவிட்ட சரோஜாதேவியுடன் வசந்தியும் நடிக்க, நல்லவன் ரோலில் எம்ஆர் ராதாவும் வில்லனாக நம்பியாரும் தோன்றினர். கேவி மகாதேவனின் இசையில் மருதகாசியின் சிரிக்கத் தெரிந்தால் போதும், ஊருக்கும் தெரியாது, மனதில் கொண்ட ஆசைகளை ஆகிய பாடல்கள் பிரபலமாயின.

    கட்டுக்கோப்பில்லாத திரைக்கதை இந்தப் படத்தின் தோல்விக்குப் பிரதான காரணமாக அமைந்திருக்கலாம். எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் க்ரிஸ்ப்பான கதை அவசியம் என்பதை உணர்த்தும் வகையில், ஆவரேஜ் எம்ஜியார் படங்களுடன் இதுவும் இணைந்து விட்டது.

    இந்தப் படத்தின் சுவாரசியம் இருவர் இசைப்பணி புரிந்தனர் என்பதே; பாடல்களுக்கு கேவி மகாதேவன் இசையமைக்க, வயலின் மகாதேவன் பின்னணி இசைக்குப் பொறுப்பேற்றார்.அ.மருதகாசி அனைத்து பாடல்களையும் எழுதினார்...... Thanks......

  11. #3979
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாணல் போல வளைவது தான் சட்டமாகுமா அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேனுமா நான் ஒரு கை பார்க்கிறேன்.....இல்லாதவர்கள் குறைவது நன்மை... இருப்பவர்கள் நிறைவது தீமை... என்று ஒரு திரைப்படத்தில் இதய தெய்வம் வசனம் பேசி நடித்திருப்பார். இது "படகோட்டி" படத்தில் வரும் பாய். அருமை நல்வாழ்த்துக்கள்...... Thanks...

  12. #3980
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரைவீரன் படத்தில் தலைவர் இறந்து போனாலும்,படம் இமாலய வெற்றி....Paul Raj அண்ணா, மதுரை வீரன் படம் தான் தலைவர் அவர்களின் முகவரியை உலகத்திற்க்கு வெளிப்படுத்தியது ...Paul Raj அண்ணா மதுரைவீரனில் முடிவில் மதுரைவீரன் சாமியாக தலைவரை காட்டுவார்கள்...... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •