Page 132 of 402 FirstFirst ... 3282122130131132133134142182232 ... LastLast
Results 1,311 to 1,320 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1311
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இதுபோன்ற காட்சிக்கு காட்சி பஞ்ச்சுக்கு பஞ்சமே இல்லாத, இன்றுவரை யாருமே எட்டமுடியாத உயரத்திலிருக்கும் உன்னத திரைக்காவியம், "உலகம் சுற்றும் வாலிபன் " கூடிய விரைவில் உங்கள் இருப்பிடத்திற்கே வர இருக்கிறது. அது வரை இடைவேளை ������������.......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1312
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உலகினில் ஒரே எம்ஜிஆர் தமிழகத்தின் சொத்து நமது தானைத்தலைவன்
    ஆமாம்... ஆந்திரா எம்.ஜி.ஆர்., ntr, கன்னட எம்.ஜி.ஆர்., ராஜ்குமார், கேரள எம்.ஜி.ஆர்., பிரேம் நசீர், வடநாட்டு எம்.ஜி.ஆர்., தர்மேந்திரா, இலங்கை எம்.ஜி.ஆர்., காமினி பொன்சேகா, மலேசிய எம்.ஜி.ஆர்., ராம்லி, அப்புறம் அமெரிக்க எம்.ஜி.ஆர்., ரொனால்ட் ரீகன்...இவ்வளவு பெரும் சிறப்புகள் நமது MGR., க்கு........... Thanks wa., Groups...

  4. #1313
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ‘நாடோடி மன்னன்’ திரைப்படம் எப்போது திரையிடப்பட்டாலும் அரங்கு நிறையும். அந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்காக ஏழை ரசிகர்கள் தங்கள் ரத்தத்தை ஆஸ்பத்திரியில் கொடுத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வாங்கி படம் பார்ப்பதாகவும் அடிக்கடி ரத்தம் கொடுப்பது அவர்களுக்கே ஆபத்தாகி விடும் என்றும் போடிநாயக்கனூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், எம்.ஜி.ஆரின் குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியத் துக்கு கடிதம் எழுதினார். இதைத் தடுக்க எம்.ஜி.ஆரிடம் சொல்லி ஏதாவது செய்யுமாறும் கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

    பி.ஆர்.சுப்பிரமணியம் மூலம் இதை அறிந்த எம்.ஜி.ஆர். மிகவும் வேதனைப் பட்டார். போடிநாயக்கனூரில் ரசிகர் மன்ற கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. சென்னையில் இருந்து இதற் காகவே போடிநாயக்கனூருக்கு எம்.ஜி.ஆர். சென்றார். ரசிகர் மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் என் படத்தை பார்ப்பது மகிழ்ச்சி. ஆனாலும் உங்களை உடன் பிறப்புகளாக நினைக்கும் நான், உங்களுக்கு பாதிப்பு ஏற்பட விடமாட்டேன். என் படங்களை பார்ப்பதற்காக உடலை வருத்திக் கொள்ளக் கூடாது’’ என்றார்.

    கூட்டத்தில் இருந்த பலர், ‘‘உங் கள் படத்தை தினமும் பார்க்கத் தோன்றுகிறது. ஆனால், எங்களிடம் பணம் இல்லை. அதனால்தான் இப்படி செய்கிறோம்’’ என்றனர்

    அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘பணம் இருக் கும்போது பாருங்கள். என்னை நேசிப் பது உண்மையாக இருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த செயலையும் செய்யாதீர்கள். பணம் தேவை என்றால் எனக்கு கடிதம் எழு துங்கள். நான் மணியார்டரில் பணம் அனுப்பி வைக்கிறேன்’’ என்றார். கூட்டம் நடந்த மண்டபமே இடிந்துவிழும் அளவுக்கு ரசிகர்கள் கரகோஷம் செய்தனர்.

    பின்னர், ஏராளமான ரசிகர்கள் பணம் தேவை என்று எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதி, அவர்களுக்கெல்லாம் உதவியாளர்களை விட்டு மணியார்டர் மூலம் எம்.ஜி.ஆர் பணம் அனுப்பச் சொன்னார்.

    ஒருமுறை ஒரு பத்திரிகையில் ரசிகர் களின் கேள்விக்கு எம்.ஜி.ஆர். பதிலளித் தார். அதில் ஒரு ரசிகர், ‘‘நான் மீண்டும் மீண்டும் உங்கள் படங்களைப் பார்க் கிறேன். எனக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டிருந்தார். ‘மிக்க மகிழ்ச்சி. எவ்வளவு முடியமோ அவ்வளவு முறை பாருங்கள்’ என்று எம்.ஜி.ஆர். பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்விக்கு பதிலளித்த எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் வருமானம் எவ்வளவு?’’ என்று நறுக்கென மூன்றே வார்த்தைகளில் பொருள் பொதிந்த கேள்வியையே பதிலாக அளித்தார்.

    தனது படங்களைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் வரவுக்கு அதிகமாக செலவு செய்வதையோ, உடலை வருத்திக் கொள்வதையோ எம்.ஜி.ஆர். விரும்பிய தில்லை. தங்களுக்கு பிடித்தமான நடிகர் என்பதைத் தாண்டி, தங்கள் மீது எம்.ஜி.ஆர். காட்டிய இந்த அக்கறையும் அன்பும்தான், அவர் மீது ரசிகர்களுக்கு மேலும் பற்றை ஏற்படுத்தின.......... Thanks.........

  5. #1314
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒருமுறை, முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக சென்னையைச் சேர்ந்த அதிமுக வினர் கூட்டமாக ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றனர். அவர்களிடம் எம்.ஜி.ஆர். ‘‘என்ன விஷயம்?’’ என்று விசாரித்தார்.

    ‘‘தலைவரே, எங்க ஏரியாவுக்கு புது போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு. அவருக்கு நம்ப கட்சிக்காரங்களைக் கண்டாலே வெறுப்பு. அதிமுக வினர் என்று தெரிந்தாலே அடிக்கிறாரு. வேண்டு மென்றே எங்கள் மீது பொய் வழக்குகள் போடறாரு’’ என்று கோரஸாக குற்றப்பட்டியல் வாசித்தனர்.

    ‘‘ஏன்? நீங்க என்ன பண்ணிணீங்க?’’ என்று அவர்களை ஆழம் பார்த்தார் எம்.ஜி.ஆர்.!

    ‘‘நாங்க ஒண்ணுமே பண்ணலை தலைவரே’’... பம்மியது கூட்டம்.

    ‘‘அப்படியா? ’’ என்று கேட்டு சில விநாடிகள் நிறுத்திய எம்.ஜி.ஆர்., ‘‘ ஆமா, உங்க ஏரியா ஸ்டே ஷன்லே ஹெட் கான்ஸ்டபிளை அடிச்சது யாரு? ’’ என்று கூட்டத்தினரை கூர்மையாக பார்த்தவாறே கேட்டார்.

    கூட்டத்தில் இருந்த ஒருவருக்கும் பேச்சு மட்டுமல்ல; சில விநாடிகள் மூச்சும் வரவில்லை. பதில் சொல்ல முடியாத மவுனமே அவர்களின் தவறை வெளிக்காட்டியதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் முகத்தில் கோபக் கனல் வீசியது.

    ‘‘நான் ஒரு முதல் அமைச்சர். எனக்கு எல்லா தகவல்களும் செய்திகளும் உட னுக்குடன் வந்துவிடும். நீங்க தப்பு பண் ணிட்டு போலீஸ் மீது பழியைப் போடறீங்க. போலீஸ்காரங்களும் மனுஷங்கதானே? போலீஸைக் கடமையை செய்ய விடாம நீங்க போய் தொந்தரவு கொடுக்கிறீங்க. அப்புறம் போலீஸ்காரங்க நம்ம கட்சியினரை பழிவாங் கறாங்கன்னு எங்கிட்டயே வந்து சொல்றீங்க.

    நாம ஆளும் கட்சியா இருக்கலாம். நிர்வாகம் எல்லோருக்கும் பொதுவானது. அரசு அதிகாரி களை அவங்க எந்த துறையை சேர்ந்தவங்களா இருந்தாலும் மதிக்கணும். அவங்க பணிகளில் நாம குறுக்கிடக் கூடாது. தப்பு பண்ணிட்டு யாரா வது எங்கிட்ட சிபாரிசுக்கு வந்தீங்கண்ணா, நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். ஜாக் கிரதையா இருங்க’’ என்று வந்திருந்தவர்களை வார்த்தைகளால் புரட்டி எடுத்தார்.

    அரண்டுபோன கட்சியினர், எம்.ஜி.ஆரைப் பார்த்து பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு நான்கு அடிகள் பின்வாங்கி பதிலேதும் பேசாமல் திரும்பி நடந்தனர்.

    ‘‘நில்லுங்க’’… எம்.ஜி.ஆரிடம் இருந்து அதட்ட லாய் உத்தரவு பிறந்தது. எதற்கு என்று புரியாமல் மந்திரத்துக்கு கட்டுப்பட்டதுபோல கூட்டத்தினர் நின்றனர்.

    தந்தை பெரியாரின் கண்டிப்பும் பேரறிஞர் அண்ணாவின் கனிவும் கலந்து ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல் …

    ‘‘எல்லோரும் சாப்பிட்டுட்டு போங்க!’’

    -................ Thanks.............

  6. #1315
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *தமிழர்களின் ஒளிவிளக்கு**

    �������������������������������������������� ����

    வருகிற 23/11/2019 அன்று மலேசியா நாட்டில் பினாங்கு மாநிலத்தில் ப்யூகிட் மெர்டஜாம் பகுதியில் உள்ள" ஆயிரத்தில் ஒருவன் " "இதயக்கனி "எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 102 வது மனிதநேய பிறந்த நாள் விழாவும், மன்றத்தின் 10 ம் ஆண்டு விழாவும் மாலை 4.00 மணி முதல் இரவு 11.30 வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. ��������������

    இதில் அறியப்படுகிற உண்மை யாதெனில், உலகெங்கும் வாழ்கின்ற பெரும்பான்மை தமிழர்களை ஒன்று சேர்த்து விழாக்கோலம் பூனவும், அவர்கள் வேறுபாடுகளைக் களைந்து குடும்பத்துடன் ஆடிப்பாடி மகிழ்கின்ற நிகழ்வின் பொருளாகவும் இன்றுவரை எம்.ஜி.ஆர்., மட்டுமே இருந்து வருகிறார். ............

    நீரில் அமிழ்த்தப்படுகின்ற காற்றடித்த பந்து எப்படி சீறி மேலெழுப்புகின்றதோ அதுபோலவே, அவரது புகழை மறைக்கவும் மறக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்துமே தோல்வியுற்றுள்ளன. இன்றும் ஒரு சாதாரண உழைக்கும் தமிழ் வர்க்கத்தின் அசைக்க முடியாத நம்பிக்கையாக அவர் ஒருவர் மட்டுமே விளங்கிக் கொண்டிருப்பது விந்தையல்ல, வாழ்ந்த காலத்தில் அவர் விதைத்து விட்டு சென்ற நற்பண்புகளான கொடையுள்ளம், கருணை, அனைவரையும் ஏற்றத்தாழ்வின்றி அன்பு செலுத்தியது மற்றும் சத்தியம் என்கிற விதை தான். அது, இன்று விருட்சமாக வளர்ந்து தமிழ் கூறும் நல்லுலகம் தோறும் தழைத்தோங்கி இருக்கின்றது.

    மலேசியா மட்டுமின்றி தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்கப்பூர், இலண்டன், அமெரிக்கா ஏனைய நாடுகளில் வாழும் தமிழர்கள் நெஞ்சங்களில் அவருக்கென்று அமைந்துவிட்ட நிரந்தரமான தனியிடத்தை யாராலும் மாற்ற இயலாது. உலகெங்கும் அவருக்காக இதுபோன்ற விழாக்கள் ப்ரதிபலன் ஏதும் எதிர்பார்க்காத ஒரு கூட்டத்தினரால் உண்மை அன்பின் வெளிப்பாடாக மட்டுமே அனைத்து தரப்பினராலும் (இதில் ஏழை, பணக்காரன் மேல்சாதி கீழ்சாதி எல்லாமும் அடக்கம்) ஆண்டு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இதை எம்ஜிஆர் விழாவாக மட்டும் பார்க்காமல் தமிழர்கள் ஒன்று கூடும் விழாவாகவும் கருதவேண்டும். ஏனெனில், அந்தந்த ப்ராந்தியங்களில் வாழ்கின்ற தமிழர்கள் குடும்பத்துடன் ஒன்றுபட்டு செயல்படுவதால் அவர்களுக்குள்ளே உள்ள நட்பையும், உறவையும் பலப்படுத்தி செம்மையாக்குகின்றது.

    இதுபோன்ற விழாக்களில் பொதுவாகவே பிறமொழி கலப்பு முற்றிலும் தவிர்க்கப்பட்டு தமிழிலேயே நடத்தப்படுவதால் அவர்களின் ஒற்றுமையுடன் சேர்ந்து தமிழும் வளர்ச்சி அடைகிறது. விழாவில் நடத்தப்படுகின்ற பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் இளம் தலைமுறையினர் பங்கேற்க ஊக்குவிக்கப் படுகின்றனர். விவாத மேடை மற்றும் பட்டிமன்றங்களில் மட்டுமே சீனியர்கள் பங்கேற்கின்றனர். எம்ஜிஆரின் திரைப்பட பாடல்கள் மற்றும் கருத்துச் செறிந்த வசனங்கள் விழாவில் முக்கிய பங்கு வகித்தாலும் அதன் மூலம் தமிழ் வளர்கிறது, தமிழர்கள் பயனடைகின்றனர். இளம் தலைமுறையினர் ஒருவருக்கொருவர் இது போன்ற விழாக்களின் மூலம் அறிமுகமாகி தங்களுக்குள்ளே நட்பை வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவி புரிகின்றது.

    புலம் பெயர்ந்து வாழ்கின்ற ஒட்டு மொத்த தமிழ்ச்சமுதாயமும் எள்ளளவும் காழ்ப்புணர்ச்சியே கொள்ளாமல் அவர் ஒருவரை மட்டுமே பொதுத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளது உண்மைக்கு என்றுமே தோல்வி கிடையாது என்ற கூற்றை உறுதிப்படுத்துகிறது. தமிழர்கள் காவல் தெய்வம் எம்ஜிஆரென்றால் அது மிகையல்ல.
    மனிதனாகப் பிறந்து மஹானாக உருவெடுத்து இன்று காக்கும் தெய்வமாக விளங்கும் எம்ஜிஆரின்உண்மை பக்தனாக இருப்பதில் பெருமையும் பேருவகையும் அடைகின்றேன்.

    இவண் எம்ஜிஆர் பக்தன் க சந்திரசேகர்.

    ������✌��✌��✌������............ Thanks.........

  7. #1316
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை - சென்ட்ரல் சினிமா DTS., புரட்சித்தலைவர் நடித்த " நினைத்ததை முடிப்பவன் "
    இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை காட்சியில் அரங்கம் நிறைந்தது ... மகிழ்ச்சியில் ... ரசிகர்கள் ...........நன்றி ...மதுரை.எஸ் குமார்............. Thanks.........

  8. #1317
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1318
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  10. #1319
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1320
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •