Page 119 of 402 FirstFirst ... 1969109117118119120121129169219 ... LastLast
Results 1,181 to 1,190 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1181
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நாடோடி மன்னன்* 2018 முதல் தமிழகத்தில் வெளியான அரங்குகள் விவரம்** *----------------------------------------------------------------------------------------------------------------------
    02/03/18-ஆல்பட் -தினசரி 2 காட்சிகள் -2 வாரம்** * * * * * * * பேபி ஆல்பட் -தினசரி 2 காட்சிகள் -3 வாரம் _ மொத்தம் 5 வாரம் ஓடியது** * * * * * * * *பாரத் -தினசரி* 2 காட்சிகள்** * * * * * * * *வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ். -தினசரி மாலை காட்சி** * * * * * * * * சைதை ராஜ்* -தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * மணலி மீனாட்சி -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * ரெட் ஹில்ஸ் அம்பிகா - தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * *திருவொற்றியூர் ஓடியன்மணி -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * சித்தூர் ஆனந்தா - தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * *23/03/18* * மதுரை -வெற்றி -தினசரி 3 காட்சிகள்*-2 வாரம் ஓடியது** * * * * * * * * *மதுரை தமிழ் ஜெயா & தேவி கலைவாணி -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * *நெல்லை -ரத்னா -தினசரி 4 காட்சிகள் -13 நாட்கள் -ரூ.3லட்சம் வசூல்** * * * * * * * * * கோவை சென்ட்ரல் -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * *நாகர்கோவில் கார்த்திகை -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * அம்பை பாலாஜி,* கோவில்பட்டி சத்யபாமா -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * *ஆலங்குளம் பி.எஸ்.எஸ்., கடையம் - நியூ பாம்பே - 3 காட்சிகள்** * * * * * * * * * *தென்காசி-பி.ஸ்.எஸ். & தூத்துக்குடி -கிளியோபாட்ரா -3காட்சிகள்*
    24/03/18* * * *சென்னை பாரத் -தினசரி 2 காட்சிகள்*
    30/03/18* * * * ஈரோடு தேவி அபிராமி -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * * பொள்ளாச்சி -ஏ.டி.எஸ்.சி.-தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * * திருப்பூர் சினிபார்க் -தினசரி 4காட்சிகள் -2 வாரம் ஓடியது** * * * * * * * * * * *மேட்டுப்பாளையம் அபிராமி -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * சோமனூர் சவீதா, சத்தியமங்கலம் ஜெய்சக்தி , வேலந்தாவலம்** * * * * * * * * * * *தனலட்சுமி,கொழிஞ்சாம்பாறை -விருந்தாவன்* எங்கும் தினசரி 3* * * * * * * * * * * * * * * *காட்சிகள்*31/03/18* * * *வேலூர் ராஜா -தினசரி 3 காட்சிகள்*01/04/18* * * * சென்னை எம்.எம்.தியேட்டர் -தினசரி 3 காட்சிகள்*06/04/18* * * * மூலக்கடை சண்முகா -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * *ஆரணி எம்.சி.தியேட்டர் , ஆற்காடு லட்சுமி ,பாக்கம் சண்முகா** * * * * * * * * * * *தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * * சேலம் கீதாலயா , கௌரி -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * * பொன்னேரி -வெற்றிவேல் முருகன் -தினசரி 3 காட்சிகள்*13/4/18* * * * * * சின்னாளப்பட்டி ஜெ அரங்கு -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * * *கோபிசெட்டிபாளையம் -ஜெயமாருதி -தினசரி 3 காட்சிகள்*** * * * * * * * * * * * தூத்துக்குடி பாலகிருஷ்ணா -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * * * *ஒரு வார வசூல் சுமார் ரூ.2 லட்சம்* * * * * * * ** * * * * * * * * * * * திருச்சி -சோனா, தஞ்சை ராணிபாரடைஸ் ,கரூர் அமுதா ,* * * * * * * * * * * * பெரம்பலூர் ராம், மன்னார்குடி சாந்தி, முசிறி ஸ்ரீராம்** * * * * * * * * * * * எங்கும் தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * * சிவகாசி பழனியாண்டவர் ( மேலூர் கணேஷ் -தினசரி 3காட்சிகள்** * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 2 வாரம் ஓடியது** * * * * * * * * * * * *கம்பம் யுவராஜா, மானாமதுரை , காரைக்குடி அரங்குகளில்** * * * * * * * * * * * தினசரி 4 காட்சிகள்*12/08/18* * * * * -சிவகாசி ராசி -தினசரி 4 காட்சிகள்*31/08/18* * * * * *ஈரோடு சங்கீதா -தினசரி 4 காட்சிகள்**14/09/18-* * * * *நெல்லை கணேஷ் - தினசரி 4 காட்சிகள்*21/09/18* * * * * *காவேரிப்பட்டினம் சரோஜா -தினசரி 4 காட்சிகள்*15/01/19* * * * * *புளியங்குடி கண்ணன் -தினசரி 3 காட்சிகள்*05/07/19* * * * * *தாராபுரம் வசந்தா -தினசரி 3 காட்சிகள்*06/09/19* * * * * *அனுப்பர்பாளையம் (திருப்பூர் )மணீஸ் -தினசரி 3 காட்சிகள்*

    * * * * * * * * * * * * * * * * * * ** * * * * * * * * * * * * *

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1182
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #1183
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  8. #1184
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  9. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  10. #1185
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  11. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  12. #1186
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    .K.Kaliappan has a special place for former Chief Minister M.G.Ramachandran. “I met MGR in the year 1962 and I am grateful to P.S.Veerappa for introducing me to the great man. MGR would always recall his difficult days while traveling with us and used to get sweets and food quite liberally for everyone around. Once I got injured pretty badly while doing a stunt role for the Jaishankar starrer ' Kaalam Vellum ' and was being treated in the Government Hospital. On learning about this MGR visited me in the hospital and helped me by getting me treated at the Sangunni Menon Nursing Home. Ramaswamy and Kadiresan were his main drivers but I used to drive for him regularly. He did not wish to have Government protection in spite of being in office and Gundumani, Ramakrishnan along with myself used to be with him all his life. He never used to ask for details pertaining to money given to us in connection with his expenses and disbursements but he wanted to know the details pertaining to public money later on. Well, that’s a different story altogether.

    " My mind is still fresh with regard to the movie ' Maduraiyai Meetta Sundara Pandian '. The Mysore Palace ' Amba Vilas ' was the location for three months and the movie shoots used to take place during the night hours. I cannot forget the moment when MGR took a picture with me in spite of his busy schedule, “added a nostalgic Kaliappan.......... Thanks...

  13. #1187
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம் திரியின் நெறியாளர் திரு ரவிச்சந்திரன் திரையுலக வசூல் சக்கரவர்த்தி "நாடோடி மன்னன்" புகைப்படங்கள் அருமை... கடந்த சில நாட்களாக திரு லோகநாதன் பதிவுகள் இடாமல் இப்பொழுது சரியான புள்ளி விவரங்களுடன் புரட்சி தலைவர் காவியங்களின் மறு வெளியீட்டு தகவல்களுடன் வருகை புரிந்திருப்பது சூப்பர்...

  14. #1188
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ��சின்னப்பதேவரின் 41 வது நினைவு தினம் இன்று.

    __________________________

    சாதனைகளால் மிரட்டிய மெத்தப்படிக்காத மேதை.

    வளரும்போது ஜூபிடர், மாடர்ன் தியேட்டர்ஸ் போன்ற பெரிய பேனர்களில் நடித்தாலும் வளர்ந்தபிறகு பெரிய தயாரிப்பாளர்களை கூடுமானவரை தவிர்த்தவர் எம்ஜிஆர்.

    ஆனால் அதே மக்கள் திலகம், சாமான்யனான தனது நண்பரை தூக்கிவிட்டு தொடர்ந்து அவருக்கு தனது படங்களை அதிக அளவில் தயாரிக்க வாய்ப்பு கொடுத்தார் என்றால் அது சாண்டோ சின்னப்பா தேவர் மட்டுமே.

    ஏனெனில் சின்னப்பா தேவர் என்கிற மனிதன் எளிமையானவனாகவும் சமான்யனாகவும் இருக்கலாம் ஆனால் வாக்கு சுத்தமுள்ள, அடுத்து கெடுக்க விரும்பாமல் வாழவைப்பதை மட்டுமே செய்யக் கூடிய குழந்தை உள்ளம் கொண்டவர்.

    படத்தை முடிக்க நீண்டகாலம் எடுத்துக்கொள்வார், அனைத்திலும் தலையிடுவார் என்று பீதியோட பேசப்பட்ட எம்ஜிஆர், தயாரிப்பாளர் சின்னப்பா தேவர்முன் அடியோடி மாறி காட்சியளிப்பார்.

    பூஜைபோட்ட அன்றே ரிலீஸ் தேதியை அறிவிக்கும் தேவரிடம் கட்டுப்பட்டு எம்ஜிஆர் வருடத்திற்கு இரண்டு படங்கள் என தொடர்ந்து நடித்து குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுத்தார் என்றால் தேவர் எப்பேர்பட்ட கண்டிப்பான பேர்வழியாக இருக்க வேண்டும். நேர்மை இருந்தால்தானே எவரையுமே கண்டிக்க துணிவு வரும்.

    சின்னப்பா தேவர் பாணியே தனி. தாய்சொல்லை தட்டாதே, தாயைக்காத்த தனயன், குடும்பத்தலைவன், தர்மம் தலைகாக்கும், நீதிக்கு பின்பாசம் என தேவரின் ஐந்து எம்ஜிஆர் படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்த சரோஜாதேவி, திடீரென லைட்டா ஸ்டார் பந்தா காட்ட ஆரம்பித்தார். தேவர் அலட்டிக்கொள்ளவேயில்லை.

    சரோவுக்கு குட்பை சொல்லிவிட்டு, சாவித்திரியை வேட்டைக்காரனில் எம்ஜிஆருக்கு நாயகியாக்கி வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டே போனார். கே-ஆர், விஜயா, ஜெயலலிதா என அடுத்த கட்ட வரவுகளை நோக்கி போய்க்கொண்டே இருந்தார்

    எந்த நேரத்திலும் கலங்காத துணிச்சலான மனதை கொண்டவர் தேவர். முதன் முதலில் தயாரித்த தாய்க்குபின்தாரம் படம் மெகா வெற்றி என்றாலும் தெலுங்கு ரைட்ஸ் விஷயத்தில் எம்ஜிஆருடன் தேவருக்கு மனக்கசப்பு. இத்தனைக்கும்தேவரும் எம்ஜிஆரும் நீண்டகால நண்பர்கள்.

    துணை நடிகராக 45 ரூபாய் சம்பளத்திற்கு ராஜகுமாரி படத்தில் எம்ஜிஆருடன் சண்டை போட்டது முதல் அவ்வளவு நெருக்கமாகிப் போனார்கள், இருவருமே வாழ்க்கையில் மிகவும் அடிபட்டுநொந்து நூலாகி உயர்வை சந்தித்தவர்கள்..

    அதிலும் பாடிபில்டரான தேவர் ஆரம்பத்தில் பால், சோடா, அரிசி வியாபாரம், உள்பட செய்து பார்க்காத தொழில்களே கிடையாது என்று சொல்லலாம்.

    அப்படிப்பட்ட உழைப்பாளியான தேவர், எம்ஜிஆர்இல்லை என்றானவுடன் கலங்கி நிற்காமல் ரஞ்சன், ஜெமினிகணேசன் போன்றவர்களை வைத்து என் வழி தனி வழி என்று போக ஆரம்பித்தவர்.

    தீவிர முருக பக்தரான சின்னப்பா தேவர் எப்போது எந்த கல்லை பிள்ளையாராக்கி பணம் கொட்டவைப்பார் என சொல்லவே முடியாது. அதேபோல அந்த மனுஷனால எப்படி இப்படி தைரியமாக இறங்க முடிந்தது என்றும் வியக்கவைப்பார்.

    தமிழை மட்டுமே தெரிந்த கோவைவாசி சின்னப்பா தேவர். ஜெமினி, ஏவிஎம் போன்ற பெரிய நிறுவனங்கள் மட்டுமே எட்டிப்பார்த்து வெற்றிக்கொடி நாட்டி இந்தித் திரையுலகில் அவர் நுழைவார் என யாருமே நினைக்க வில்லை.

    இந்தியே தெரியாமல் 1970ல் ராஜேஷ் கன்னாவை வைத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தவர் தேவர்.

    ஆராதனா படத்தின் மூலம் ஒவர் நைட்டில் இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுத்த ராஜேஷ்கன்னாவே, ஹாத்தி மேரா சாத்தி என்ற அந்த படத்தின் வசூல் வேகத்தை பார்த்துதான், முதன் முறையாக இந்தி திரையுலக ஜாம்பவான் சக்தி சமந்தாவுடன் சேர்ந்து சக்திராஜ் என்ற சொந்த கம்பெனியை ஆரம்பித்து விநியோகஸ்தர் உரிமையை கைப்பற்றும் வியாபார யுக்தியை ஆரம்பித்தார்..

    இந்த படத்திற்கு லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் இசையமைக்க வேண்டும் என்று தேவர் விரும்பினார். ஆனால் பயங்கர பிசியால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

    மும்பையில் பேச்சுவார்த்தை நடந்த இடத்தில் லக்ஷ்மிகாந்தின் குழந்தைக்கு அன்று இரவு பிறந்த நாள் பார்ட்டி நடக்கப்போகிறது என்பதை தெரிந்துகொண்டார்.

    உடனே ஒரு நகைக்கடைக்கு ஓடிப்போய் தங்ககாசுகளை கை நிறைய வாங்கிக்கொண்டு பார்ட்டி நடந்த இடத்திற்கு அழையா விருந்தாளியாக போனார் தேவர். எல்லாரும் அதிர்ச்சி அடையும் வகையில் தங்ககாசுகளை குழந்தையின் தலையில் கொட்டி வாழ்த்தினார்.

    லக்ஷ்மிகாந்தின் மனைவியிடம் தன் படத்திற்கு இசையமைக்க கணவரை வற்புறுத்துங்கள் என்றார். அவ்வளவுதான், ''இதோ பாருங்கள் இங்கே வந்திருப்பவர்களில் பலரும் பார்ட்டியில் குடிக்க வந்தவர்கள். ஆனால் இவரோ நம் செல்வத்தை தங்கத்தால் அபிஷேகம் செய்து வாழ்த்தியுள்ளார். இவர் படத்திற்கு இசையமைக்காவிட்டால் நடப்பது வேறு என்று கணவரிடம் பொங்கினார் திருமதி.

    அப்புறமென்ன.. தேவர் படத்திற்கு பொங்கிய லக்ஷ்மிகாந்த், பியாரிலால் ஜோடி இசை, இந்தியாவையே சல்..சல்…மேரே ஹாத்தி என தாளம் போடவைத்தது..

    இந்த இசை ஜோடியை புக் செய்யச்சொல்லி முதன் முதலில் ஐடியா தந்த இயக்குநர் ஸ்ரீதரே. தேவரின் இந்த தடாலடியை பார்த்து மிரண்டுபோய்விட்டார்.

    இந்த ஹாத்தி மேரே சாத்திதான் தமிழில் எம்ஜிஆர் நடித்த நல்ல நேரம் படமாக ரீமேக்கானது..

    ராஜேஷ்கன்னாவை வைத்து மெகா ஹிட் கொடுத்த, தேவருக்கு புகழ்பெற்ற தர்மேந்திரா ஹேமாமாலினி ஜோடி உறுத்தவே அவர்களுக்கு ஒரு கதை தயார் செய்தார்.

    ராஜேஷ்கன்னா, ஹாத்தி மேரோ சாத்தி படத்தில் தன்னை குழந்தை பருவத்தில் சிறுத்தையிடம் இருந்து காப்பாற்றிய யானையையும் அதன் கூட்டத்தை வளர்த்தெடுத்து நன்றி காட்டினார் என்றால், தர்மேந்திராவுக்கும் அதே யானை கதையைத்தான் கொடுத்தார் தேவர்,

    ஆனால் இம்முறை தாயிடமிருந்த குட்டியானையை பிரிக்கும் ஒருவனே, கடைசியில் இருவரையும் சேர்ந்துவைக்க கடும்பாடுபடவேண்டியிருந்தது. மா என்ற பெயரில் வெளியான படம் அந்த இந்தியா முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வெற்றிபெற்றது.

    இதே மா படம்தான் தமிழில் ரஜினியை வைத்து தேவர் குடும்பம் பின்னாளில் அன்னை ஓர் ஆலயம் என எடுத்தது.

    பாஷை தெரியாத இந்தியிலே தேவர் இப்படியெல்லாம் சாகசம் செய்தார் என்றால் தமிழில் சும்மா இருப்பாரா?
    .
    1974ல் ஒருயொரு பாம்பை வைத்து சிவகுமார்- ஜெயசித்ரா காம்பினேஷனில் வெள்ளிக்கிழமை விரதம் என்ற படமெடுத்துவிட்டார். ஒட்டு மொத்த தாய்க்குலமும் பாம்பு செண்டிமென்ட்டுக்கு கட்டுப்பட்டு தியேட்டர் பக்கம் திரும்ப திரும்ப வந்து பணத்தை கொட்டிவிட்டுபோனது.

    ஒரு ஆட்டை வைத்து ஆட்டுக்கார அலுமேலு என்று படம் கொடுத்து பணத்தை மூட்டை மூட்டையாக கட்டும் வித்தை தேவருக்கு மட்டும் வசப்பட்ட கலை. அந்த ஆட்டை ஊர் ஊராய் கொண்டுபோய் பார்வையாளர்களிடம் காட்டி இன்னும் வசூலை வாரிக்குவிக்கும் பிரமோட் கலையிலும் அவர் கில்லாடி

    எம்ஜிஆர், ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, ரஜினி,கமல் உள்பட பல டாப் ஸ்டார்கள் யானை, புலி, சிங்கம் பாம்பு, மயில் போன்றவற்றுடன் பேசியே ஆகவேண்டிய கட்டாயத்தை உருவாக்கியவர் தேவர் மட்டுமே.

    இன்று உலகநாயகனாக போற்றப்படும் கமல் இளைஞனாக வளர்ந்து முதன் முதலில் பாடல் காட்சியில் குட்டி பத்மினியுடன் கலாட்டா கம் டூயட் என ஆடிப்பாட வாய்ப்பு பெற்றார் என்றால் அது 1970ல் வெளியான தேவரின் மாணவன் படத்தில்தான்

    1967ல் எம்ஜிஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது அங்கே சென்றவர்களெல்லாம் பீதியோடு இருக்க டிபன்பாக்ஸ் நிறைய பணத்தை எடுத்துபோய் அவரிடம் கொடுத்துவிட்டு சீக்கிரம் எழுந்து வந்து என் படத்தில் நடி தெய்வமே என்று சொன்ன வியப்பின் அடையாளம் சின்னப்பா தேவர்.

    ஐந்தாவது வகுப்புவரை மட்டுமே படித்த சின்னப்பா தேவர், நேர்மையான மனதோடு துணிச்சலாய் சாதித்த சாதனைகளை அவ்வளவு சுலபத்தில் சொல்லிமுடித்து விட முடியாது.

    _____________________

    கட்டுரையாளர் : ஏழுமலை வெங்கடேசன், மூத்த பத்திரிக்கையாளர், காஞ்சிபுரம்.

    செய்திதாள் : ஜெயராமன்.ரெ.......... Thanks...

  15. #1189
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சிதலைவர் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் 300 ரூபாய், 7 ஆவது படத்தில் தான் 1000 சம்பளம் வாங்கினார்.��
    45 ஆவது படத்தில் 1 லட்சம், கடைசி படத்திற்க்கு 11 லட்சம் பெற்றார்...
    அவர் வாங்கிய சம்பளத்தில் தான் அவரது அலுவலகத்தில், தோட்டத்தில் உழைத்த அனைவருக்கும் சாப்பாடு. தினமும் 100 பேருக்கு சமைக்கப்படும்,
    அதுவும் அவர் முதல்வர் ஆன பின் அலுவலக்தில் இருந்த காரியதரிசிகள், காவலர்கள் என்று எல்லோருக்கும் சேர்த்தே சமைக்கப்படும்...
    அனைவரும் மூன்று வேளை சாப்பாடு, சாப்பாட்டை சுற்றி 7 வகை கறியிருக்கும்..
    அவர் என்ன உண்ணுகிறாரோ அதுவே அனைவருக்கும்...
    கோடி கோடியாக சம்பாதித்து தன் குடும்பத்திற்க்கு சொத்து மேல் சொத்து குவித்து தொண்டர்களிடம் உண்டியல் ஏந்தி கட்சி நடத்தும் சிலருக்கு முன் புரட்சித்தலைவர் "எட்டாவது வள்ளல்".......... Thanks...

  16. #1190
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள் – எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் வைரமுத்து
    ---------------------------------------
    ஒரு நாளும் உங்களை நான் தேடி வந்து சந்தித்ததில்லை. ஆனால், அந்த ஒரு கறுப்புப் பகலில் மட்டும் உங்களை ஓடிவந்து பார்க்காமல் என்னால் உட்கார முடியவில்லை.ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க் கிடத்தப்பட்டிருந்தீர்கள்.

    உங்களைத் தொட்டுப் பார்க்க நினைத்து, தொட முடிந்த தூரம் வந்தும் தொட முடியாமல் நின்றேன்.

    எம்.ஜி.ஆருக்கே மரணமா?

    எனக்கு முதலில் மரணப்பயம் வந்தது.

    காற்று – சமுத்திரம் – வானம் – எம்.ஜி.ஆர்

    இவைகளெல்லாம் மரணிக்க முடியாத சமாசாரங்கள் என்று எங்கள் கிராமத்து மக்களைப் போலவே நானும் நம்பிக்கிடந்த நாட்களுண்டு.

    அன்று அந்த நான்காவது நம்பிக்கை நசிந்து விட்டது.

    47 முதல் 87 வரை நாற்பதாண்டு காலம் தமிழர்கள் உச்சரிக்கும் ஐம்பது வார்த்தைகளில் ஒரு வார்த்தையாய் இருந்த பெயரை மரணத்தின் மாயக்கரம் அழித்துவிட்டதா?

    இமைக்காமல் கிடந்த உங்களை இமைக்காமல் பார்த்தேன்.

    நீண்டநேரம் என்னை அங்கே நிற்க அனுமதிக்கவில்லை.

    ஜனத்திரள் என்னைப் பிதுக்கியது.

    சட்டென்று நகர்ந்து ராஜாஜி ஹாலின் ராட்சதத் தூண் ஒன்றை அடைக்கலம் பற்றி, கூட்டத்தை நோட்டமிட்டேன். அங்கங்கே அரசாங்க விதிகளுக்கு உட்பட்டுச் சிலர் அழுது கொண்டிருந்தார்கள். நிஜக்கண்ணீர் வடித்தவர் பலர் ; நீலிக்கண்ணீர் வடித்தவர் சிலர். வருத்தக் கண்ணீர் வடித்தவர் பலர்.

    வாடகைக் கண்ணீர் வடித்தவர் சிலர். உயிரைக் கண்ணீராய் ஒழுக விட்டவர் பலர் ; மிகப் பலர்.

    என்னால் அழ முடியவில்லை.

    அழுகை வரவில்லை.

    மனிதல் மட்டும் சோகப் பனிமுட்டம்.

    “நான் ரசித்துக் காதலித்த ராஜகுமாரா ! உனக்கா மரணம்?”என்று உதட்டுக்குத் தெரியாமல் நாக்கு உச்சரித்துக் கொண்டது.

    அங்கே கூடியிருந்த அரசியல்வாதிகளில் பலர் நாளைகளைப் பற்றியே தர்க்கித்துக் கொண்டிருக்க- நானோ உங்கள் நேற்றுகளை நினைத்தே விக்கித்துக் கொண்டிருந்தேன்.

    கண்டியோ வடவனூரோ எங்ககேயோ பிறந்தீர்கள் ; தமிழ்நாட்டுக்குள் பிழைக்க வந்தீர்கள் ; தமிழ்நாட்டில் பல பேரைப் பிழைக்க வைத்தீர்கள். கும்பகோணம் யானையடிப் பள்ளி வறுமையில் கழிந்த வால்டாக்ஸ் ரோடு முகம் பார்க்க முடியாமல் முதல் மனைவியின் மரணம் – கோடையில் எப்போதாவது படபட வென்று பொழிந்து ஏமாற்றிவிட்டுப்போகும் மேகம் மாதிரி படவுலகில் அவ்வப்போது சின்னச்சின்ன வாய்ப்புகள்.

    ஒரே ஒரு’க்ளோஸ்-அப்’ போடக்கூடாதா என்று மூத்த இயக்குனர்களிடம் முறையீடு – கதருக்குள் இருந்து கொண்டு கலைஞர் மீது காதல் – வந்து சேர்ந்த வாய்ப்புகளைச் சிதறாமல் பயன்படுத்திக் கொண்ட செம்மை – முப்பது வயதுக்கு மேல் வாழ்க்கையில் சந்திரோதயம், நாற்பதுக்கு மேல் சூரியோதயம் – படபடவென்று வளர்ச்சி – மனிதநேயம் என்னும் மாட்சி காட்சியிலிருந்து கட்சி – கட்சியிலிருந்து ஆட்சி – அப்பப்பா என்ன வளர்ச்சி உங்கள் வளர்ச்சி !

    அயல் வீட்டுக்காரருக்கு அறிமுகமில்லாத ஒரு வாழ்க்கையோடு தொடக்கமானீர்கள்; அரசாங்க மரியாதையோடு அடக்கமானீர்கள்.

    அன்று கடைசிப் படுக்கையில் உங்களைக் கண்டபோது – ஒரு சரித்திரம் சரிந்து கிடக்கிறது என்று நினைத்தேன். ஓர் அபூர்வம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன்.

    ஒன்றன் பின் ஒன்றாய் ஞாபக மேகங்கள் …….

    இருபது வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தது காதல் ;

    எட்டு வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள்.

    கதைகளிலும் கனவுகளிலும் நான் கற்பனை செய்து வைத்திருந்த ராஜகுமாரன் நீங்கள் தான் என்று நினைத்தேன்.

    உங்களின் இரட்டை நாடியின் பள்ளத் தாக்கில் குடியிருந்தேன்.

    உங்கள் முகத்தின் மீது மீசைவைத்த நிலா என்று ஆசை வைத்தேன்.

    நீங்கள் புன்னகை சிந்தும் போது நான் வழிந்தேன். வாள் வீச்சில் வசமிழந்தேன். உங்கள் பாடல்களில் நானும் ஒரு வார்த்தையுமாய் ; நானும் ஒரு வாத்தியமாய் ஆனேன்.

    ஒரு தாளம் கட்டுமானத்தில் சிரிக்கும் உங்கள் சங்கீதச் சிரிப்பில் வார்த்தைகளில் பிசிறடிக்காத உங்கள் வசன உச்சரிப்பில் நான் கரைந்து போனேன்.

    பெரியகுளம் ரஹீம் டாக்கீஸில் “நாடோடி மன்னன்”பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுவரில் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கோடுகளை அந்தப் படத்தில் வரும் கயிற்றுப் பாலமாய்க் கற்பனை செய்து கொண்டு விடிய விடிய விழித்திருக்கிறேன்.

    “மன்னனல்ல மார்த்தாண்டன்”என்று உங்களைப் போல் மூக்கில் சைகை செய்யப் போய் சுட்டுவிரல் நகம்பட்டு சில்லி மூக்கு உடைந்திருக்கிறேன்.

    பிரமிக்க மட்டுமே தெரிந்த அந்தப் பிஞ்சு வயதில் எனக்குள் கனவுகளைப் பெருகவிட்டதிலும் கற்பனைகளைத் திருகிவிட்டதிலும் உங்கள் ராஜாராணிக் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நான் ரகசியமாய் வைக்க விரும்பவில்லை.

    நூறு சரித்திரப் புத்தகங்கள் ஏற்படுத்த முடிந்த கிளர்ச்சியை உங்கள் ஒரே ஒரு படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு எனக்கு மட்டும் இல்லை. குடை பிடித்துக் கொண்டவர்களையும் எங்கோ ஓர் ஓரத்தில் நனைந்துவிடுகிற அடைமழை மாதிரி உங்களை விமர்சித்தவர்களைக் கூட ஏதேனும் ஒரு பொழுதில் நாசூக்காக நனைத்தே இருக்கிறீர்கள்.

    என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் மந்திரத்தால் மாங்காயோ தந்திரத்தால் தேங்காயோ தருவித்தவரில்லை. வரலாற்று ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அகழ்ந்து பார்த்தால் மட்டுமே உங்கள் வெற்றியின் வேர்களை விளங்கிக் கொள்ள முடியும்.

    இந்த மண்ணில் எங்கள் மனிதர்கள் சில நூற்றாண்டுகளாக எதை இழந்துவிட்டு நின்றார்களோ அதையே நீங்கள் தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்தீர்கள் ; விறுவிறுப்பாய் விலைபோயிற்று.

    உடலும் உயிரும் மாதிரி காதலும் விரமும் கலந்தே விளைந்த களம் இந்தத் தமிழ் நிலம்.

    காதலை ஒரு கண்ணாகவும் வீரத்தை ஒரு கண்ணாகவும் போற்றிய தமிழன், பொருளாதாரத்தை நெற்றிக் கண்ணாய் நினைக்காமல் போனான் என்பதே அவன் முறிந்து போனதற்கு மூல காரணம்.

    பொருதாரச் சிந்தனைக்கே வராத தமிழன், காதலையும் வீரத்தையும் மட்டும் கோவணத்தில் முடிந்து வைத்த தங்கக் காசுகளைப் போல ரகசியமாய்க் காப்பாற்றியே வந்திருக்கிறான்.

    இடைக்காலத்தில் தமிழன் அடிமைச் சக்தியில் சிக்கவைக்கப்பட்டான்.

    அடிக்கடி எஜமானர்கள் மாறினார்கள் என்பதைத் தவிர அவன் வாழ்க்கையில் மாற்றமே இல்லை.

    அவனது வீரம் காயடிக்கப்பட்டது ; காதல் கருவறுக்கப்பட்டது.

    இழந்து போன ஆனால் இழக்க விரும்பாத அந்தப் பண்புகளை வெள்ளித் திரையில் நீங்கள் வெளிச்சம் போட்ட போது இந்த நாட்டு மக்களின் தேவைகள் கனவுகளில் தீர்த்துவைக்கப்பட்டன.

    நீங்கள் கனவுகளைத்தான் வளர்த்தீர்கள் ; ஆனால் கனவுகள் தேவைப்பட்டன.

    வீராங்கன், உதயசூரியன், கரிகாலன், மணிவண்ணன், மாமல்லன்

    என்றெல்லாம் நீங்கள் பெயர்சூட்டிக் கொண்டபோது தமிழன் தன் இறந்தகால பிம்பங்களைத் தரிசித்தான்.

    நீங்கள் கட்டிப்பிடித்து கானம் படித்துக் காதலித்தபோது தமிழன் புதைந்து போன காதல் பண்பைப் புதுப்படித்துக் கொண்டான்.

    உங்கள் தாய்மொழி மலையாளம் என்பதை மறக்கடிப்பதற்கும் நீங்கள் தமிழ்க் கலாச்சாரத்தில் கரைந்து போனவர் என்று காட்டிக் கொள்வதற்கும் நீங்கள் எடுத்த முயற்சிகள் முழு வெற்றி பெற்றன.

    மலையாள மரபுப்படித் தாயார் பெயரைத் தான் இனிஷியலாகக் கொள்வார்கள். ஆனால் நீங்களோ தமிழ் மரபுப் படி தந்தை பெயரைத்தான் இனிஷிலாகக் கொண்டீர்கள்.

    உங்கள் தமிழ் உச்சரிப்பின் எந்த ஒரு வார்த்தையிலும் மலையாளத்தின் பிசிறு ஒட்டாமல் சுத்தமாய்த் துடைத்தெடுத்தீர்கள்.

    ‘மருதநாட்டு இளவரசி’யின் ஒப்பந்தப் பத்திரத்தின் உச்சியில் ‘முருகன் துண’என்றுதான் எழுதியிருக்கிறீர்கள். (முருகன் அவர்கள் தமிழ்க் கடவுள் என்று கருதப்படுகிறவர் என்பது கவனிக்கத்தக்கது)

    நீங்கள் முதன் முதலாய் இயக்கித் தயாரித்த “நாடோடி மன்னனில்” தொடக்கப் பாடலாக “செந்தமிழே வணக்கம்” என்று தான் ஆரம்பித்தீர்கள். இப்படி…..இப்படியெல்லாம் அந்நியத்தோலை உரித்து உரித்துத் தமிழ்த் தோல் தரித்துக் கொண்டீர்கள்.

    உங்களைப் பற்றி என் செவிகள் சேகரித்திருக்கும் செய்திகள் ருசியானவை.

    ஒரு பாடகர் ஒரு மேடையில் உங்கள் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு மணி நேரம் கரைந்து போன நீங்கள் இப்போது என் கைவசத்தில் இருப்பது இது மட்டும் தான் என்று உங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பாடகருக்குப் பரிசளிக்கிறீர்கள் ; அது உங்கள் ஈகைக்குச் சாட்சி.

    நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்து போன உங்கள் இரண்டாவது மனைவியின் இல்லம் சென்றபோது படுக்கையறையின் கட்டிலைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறீர்கள் ; அது உங்கள் ஈரத்திற்குச் சாட்சி.

    தி.மு.க மாநாடுகளில் மாநாடு முடிந்ததும் பந்தலுக்கடியிலேயே படுத்துக்கிடக்கும் வெளியூர் மக்களுக்கு அவர்களே அறியாமல் அதிகாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போவீர்களே ! அது உங்கள் மனிதாபிமானத்துக்குச் சாட்சி.

    பொதுக் கூட்டங்கள் முடித்துவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வைகை அணைக்கு வந்து பொன்னாங்கண்ணிக் கீரை இருந்தால் சாப்பிடுவேன் என்று நீங்கள் நிபந்தனை விதிக்க, ஆளுக்கொரு திசையில் அதிகாரிகள் பறக்க, பொன்னாங்கண்ணிக் கீரை தயாராகும் வரை சாப்பிடாமல் இருந்தீர்களாமே ! அது உங்கள் உறுதிக்குச் சாட்சி.

    தொலைபேசி இணைப்பகத்திலிருந்த உங்கள் ரசிகர் ஒருவர் உங்கள் குரல் கேட்க ஆசைப்பட்டு இரவு பதினொரு மணிக்கு உங்கள் வீட்டுத் தொலைபேசி சுழற்றப்படுகிற சத்தம் கேட்டு ஆசையாய் எடுத்துக் கேட்க’டொக்’என்ற அந்தச் சின்ன சத்தத்திலேயே தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பது உணர்ந்து கொண்டு “யாராயிருந்தாலும் தயவு செய்து போனை வையுங்கள்” என்று உடனே உத்தரவிட்டீர்களாமே ! அது உங்கள் கூர்மைக்குச் சாட்சி.

    வெளிநாட்டில் கொடுத்த பணத்தை பி.சுசீலா தமிழ்நாட்டில் திருப்பித் தரவந்தபோது “ஏன் என்னுடைய உறவை முறித்துக் கொள்ளப் பார்கிறீர்களா”? என்று உரிமையோடு மறுத்து விட்டீர்களாமே. அது உங்கள் பெருந்தன்மைக்குச் சாட்சி.

    நீங்கள் முதலமைச்சர். அப்போது தான் என் பெயரைத் தமிழ்நாடு மெல்ல மெல்ல எழுத்துக் கூட்டத் தொடங்கியிருக்கிறது.என் நண்பர் க.மூ. அரங்கனின் “வியர்வை முத்துக்கள்”என்ற கவிதை நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நான் முதற்பிரதி பெற்றுக் கொள்கிறேன்.கலைஞரின் எழுத்துக்கள் என்னைக் கவிஞனாக்கின என்று அங்கே பேசுகிறேன். இது நடந்தது 18.5.1982 மாலை. 19.5.82 காலை ஐ.ஜி. அலுவலகம் தூள் பறக்கிறது.

    “வைரமுத்து கலைஞரோடு ஏன் போனார்? எதற்குப் போனார்? எப்படிப் போனார்? என்று அவசர அவசரமாய் திராவகக் கேள்விகள் வீசித் திணற அடிக்கிறீர்கள்.

    என்னைப் பற்றிய கோப்பு ஒன்று உங்கள் பார்வைக்கு வருகிறது. என் ஜாதகம் அறிகிறீர்கள்.

    தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள்.

    இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள்.

    உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன்.

    உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்-

    நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.

    உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம்.

    ஒரு பாடலின் பாடலாசிரியன் காணாமல் போவது பாடலுக்கு வெற்றி ஆகாது என்ற போதிலும், பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான்.

    உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன.

    எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.

    நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.

    ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.

    ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.

    உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை – உங்கள் இறுதி ஊர்வலமான “காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்” தான்.

    உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.

    “உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;

    ஒரே ஒரு சந்திரன் தான் ;
    ஒரே ஒரு சூரியன் தான் ;
    ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான்...
    கரையாத கல்லான உள்ளமும் கரையும்..
    உள்ளம் உருகுதை யா..தலைவா...
    வணக்கம் அன்புள்ளங்களே...........மீள்பதிவு... Thanks............

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •