-
15th June 2019, 06:04 PM
#81
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th June 2019 06:04 PM
# ADS
Circuit advertisement
-
15th June 2019, 08:49 PM
#82
Junior Member
Diamond Hubber
தற்போது முரசு தொலைக்காட்சியில் கலையுலக காவலர் புரட்சி நடிகர் அளிக்கும் "தாயின் மடியில்" காவியம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.........
-
15th June 2019, 08:52 PM
#83
Junior Member
Diamond Hubber
சங்கம் வைத்து தமிழினை வளர்த்து வாழ்ந்த தமிழ் நெஞ்சகளே !!! ஒவ்வொருவர் மனதிலும் இதயதேய்வம் இறைவன் எம்.ஜி.ஆர் கென கோயில் கட்டி வாழ்ந்திருக்கும் இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்களே!!! அனைவருக்கும் இந்த சூலூர் வாசுதேவனின் மனமார்ந்த வணக்கங்கள்..............
நானும் நீங்களும் வாழும் இந்த வாழ்க்கையானது நிலையானது அன்று.... என்று வேண்டுமானாலும நாம் மாயும் காலம் நேரிடும்.... ஆனால் இறைவன் எம்.ஜி.ஆர் புகழ் மாயத ஒன்று...
அவரது புகழ் மாயாதிருக்க இறைவன்
எம்.ஜி.ஆர்., ஆலயம் நிறுவி அழகு பார்த்து,அனனவரையும்
வழிபட செய்து சாதனை புரிந்தவர் *K. சாந்தி* அவர்கள்......
அவர்களது 2'ஆம் ஆண்டு நினைவு நாளான வரும் ஆங்கில மாதம் ஜூன் இருபதாம் நாளன்று
அனைவரையும் அருள்மிகு இறைவன் எம்.ஜி.ஆர் ஆலயதிர்க்கு வருமாறு
கேட்டு கொள்கிறேன்
............. Thanks wa.,
-
15th June 2019, 08:54 PM
#84
Junior Member
Diamond Hubber
உண்மையான இரத்தத்தின் இரத்தம் நம்மை விட்டு பிரிந்தது தலைவர் பக்தர்கள் அனைவருக்கும் பேரிழப்பு. வெறித்தனமான தலைவர் இரசிகர், தலைவர் மீது கொண்டிருந்த தீராத பற்றினால் அவரது ஒவ்வொரு அணுவிலும் தீயசக்தியின் மீதான வெறுப்பும் கோபமும் நிரம்பி வழிந்ததை அவருடன் உரையாடிய பல நேரங்களில் உணர்ந்து அகமகிழ்ந்த காலங்கள் என்றுமே மறக்க முடியாதவை. தலைவரைத் தெய்வமாக போற்றிய மேலும் ஒரு தூய பக்தரை நாம் இழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ......... Courtesy : wa.,
-
15th June 2019, 09:42 PM
#85
Junior Member
Platinum Hubber
மக்கள் குரல் -15/06/19
-
15th June 2019, 09:48 PM
#86
Junior Member
Platinum Hubber
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான "நான் ஏன் பிறந்தேன் " வெளியான நாள் 09/06/1972. வெளியாகி 47ஆண்டுகள் நிறைவு .
குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிறப்பாக ,இயல்பாக பல காட்சிகளில் நடித்து வெற்றி பெற்ற படம் . கே.ஆர்.விஜயாவின் சொந்த தயாரிப்பு . காஞ்சனா, மேஜர் சுந்தரராஜன், தேங்காய் சீனிவாசன் , ஐசரிவேலன், ஜி.சகுந்தலா, எஸ்.என் லட்சுமி, நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன் , எம்.என்.நம்பியார் , குட்டி பத்மினி, பேபி இந்திரா மற்றும் பலர் நடித்தது .
இசை அமைப்பு.:சங்கர் கணேஷ் . கணேஷின் மாமனார் திரு.ஜி.என்.வேலுமணி
மறுப்பு தெரிவிக்கவே, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தலையீடு மற்றும் சம்மதத்தின் பேரில் இசையமைக்க ஒப்பந்தம் ஆனார்கள் .டைட்டில் இசை, பாடல்கள், பின்னணி இசை அனைத்தும் அருமை .
1.நான் ஏன் பிறந்தேன் - சமூக விழிப்புணர்ச்சி பாடல் .
2..தம்பிக்கு ஒரு பாட்டு -சிறுவர்/சிறுமியர்க்கான கதை /தத்துவ பாடல் .
3. உனது விழியில் எனது பார்வை - அருமையான காதல் பாடல் .
4.என்னம்மா சின்னப்பொண்ணு -நடனத்துடன் கூடிய காதல் பாடல் .
5.தம்பிக்கு ஒரு பாட்டு - சிறுவர்/சிறுமியர் பாடும் உணர்ச்சிகரமான பாடல் .
6. நான் பாடும் பாடல் - நாயகன் 2ம் கதாநாயகி நலம் விரும்பி பாடும் பாடல் .
7.சித்திர சோலைகளே- பாரதிதாசனின் தொழிலாளர் நலம் பற்றிய பாடல் .
வசனம் :வியட்நாம் வீடு சுந்தரம் சண்டை பயிற்சி : மாடக்குளம் அழகிரிசாமி
இயக்கம் : ரிக்ஷாக்காரன் புகழ் எம்.கிருஷ்ணன் .
நம்பியார் மக்கள் திலகத்தை பற்றி ஸ்டண்ட் நடிகர்களிடம் கூறும்போது அவன் ஒத்தாலே பத்தாளை அடிப்பான் , ஜாக்கிரதை .
கிளைமாக்சில் தேங்காய் ஸ்ரீநிவாசன் காஞ்சனாவுக்கு திருட்டு தாலி கட்டும்போது காஞ்சனா , மக்கள் திலகத்தை நினைத்து கண்ணா காப்பாற்று என்று புலம்புவார் .
அப்போது நம்பியார், மகாபாரதத்தில்தான் கண்ணன் வந்து காப்பாற்றுவான் .
உன்னுடைய கண்ணன் உன்னை காப்பாற்ற மாட்டான் .என்று கூறும்போது
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உடனே தோன்றி, பெண்களை காப்பாற்றுவதில் இந்த கண்ணன் , மகாபாரத கண்ணனைவிட வேகமாக வருவார் என்று கூறும்போதும்
(இந்த இரண்டு காட்சிகளுக்கும் ) அரங்கம் அதிரும் அளவிற்கு கைதட்டல்கள்
ஆரவாரம் அபாரமாக இருக்கும் .
மேஜர் சுந்தரராஜன் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் உங்கள் குறிக்கோள் /லட்சியம் என்ன என்று கேட்கும்போது அழுபவர்களை சிரிக்க வைப்பது,
சிரிப்பவர்களை சிந்திக்க வைப்பது என்கிற வசனம் ,
மனதறிந்து மற்றவர்களை கெடுப்பது தவிர வேறு எந்த வேலையும் செய்யலாம் .
என்கிற வசனம் எனக்கு பிடித்தவை .இன்னும் பல வசனங்கள் உள்ளன
இப்போதைக்கு நினைவுக்கு வரவில்லை .
சென்னை குளோப், ஸ்ரீகிருஷ்ணா, சரவணா , பழனியப்பா அரங்குகளில் 50 நாட்களை கடந்து ஓடியது .ஸ்ரீகிருஷ்ணாவில் ராமன் தேடிய சீதை ஓடி கொண்டிருந்தபோது வெளியானதால் சுமார் இரண்டு வார காலத்திற்கு தினசரி காலை 7 மணி, 10 மணி (2 காட்சிகள் ) நடைபெற்றது .ராமன் தேடிய சீதை 64 நாட்கள் ஆனதும் , நான் ஏன் பிறந்தேன் தினசரி 3 காட்சிகள் நடைபெற்றது .
குளோப், ஸ்ரீகிருஷ்ணாவில் 67 நாட்கள் ஓடியது .குடும்ப பாங்கான படம் 100நாள்
எட்டவில்லை என்பது ஏமாற்றமே . அப்போது நல்லநேரம் சித்ரா, மகாராணி,
மேகலா, ராம் அரங்குகளில் அபார வசூலுடன் 100நாட்கள் நிறைவு செய்து
போட்டியாக இருந்தது குறிப்பிட தக்கது .நான் ஸ்ரீகிருஷ்ணாவில் முதல் நாள்
காலை 10மணி காட்சி பார்த்து ரசித்தது பசுமையான நினைவு .
-
15th June 2019, 10:19 PM
#87
Junior Member
Platinum Hubber
-
15th June 2019, 10:23 PM
#88
Junior Member
Platinum Hubber
-
15th June 2019, 10:27 PM
#89
Junior Member
Platinum Hubber
-
15th June 2019, 10:40 PM
#90
Junior Member
Platinum Hubber
Bookmarks