-
17th January 2020, 07:49 PM
#2491
Junior Member
Diamond Hubber
......... Thanks.........
-
17th January 2020 07:49 PM
# ADS
Circuit advertisement
-
17th January 2020, 07:53 PM
#2492
Junior Member
Diamond Hubber
எம் ஜி ஆர்
ஆயிரம்
கைகளால் மறைக்க
முடியாத
சூரியனை
இவன் இரண்டே
இலை கொண்டு
தான் மறையும்வரை மறைத்தவன்
மக்களே என்று சொல்லிக்கொண்டே
தன இன்னுயிரை மரித்தவன்
சூரியனிடமிருந்து
பிரிந்து வந்த
சந்திரன்
எம் ஜி இராமச்சந்திரன்
இவனை அனைத்தது
மரணம்
ஏழைகளை நனைத்தது
மா ரணம்
அவைவரும் பேனாவில்
நீல மை ஊற்றி எழுத
இவன் மட்டும்
ஏழைகளின் நிலைமை
வறுமை வெறுமை ஊற்றி எழுதினான்
அன்று
ஏழை மக்கள்
இறைவா எங்களை
காப்பது யார்
என்று வேண்டியபோது
பிறந்தவர் தான் எம் ஜி ஆர்
அனைவரும்
தாயின் கருவறையில் தோன்ற
இவன்மட்டும்
கோயில் கருவறையில் தோன்றியவன்
மக்கள் பணத்தை
கொள்ளை அடிப்போர்க்கு மத்தியில்
இவன் மக்கள்
மனத்தைக் கொள்ளையடித்தான்
இவன்
சூரிய கூட்டின் பெரிய பகல் அல்ல
வரியோன் வீட்டின் சிறிய அகல்
ஏழையின் அடி வயிற்று நெருப்பை
அணைக்க இவன்
முதலில் வந்ததனால் இவன் முதல்வன்
இவன்
ஏழைப் பிள்ளைகளின் மாமன்
இவனால் தமிழகம்
ஆனது மா மண்
கேட்போர்க்கோ உதவிகள் பண்ணவனே
தமிழகத்தை ஆண்ட மன்னவனே
அண்ணாவிற்குச் சின்னவனே
வடக்கே வியந்து பார்த்த தென்னவனே
ஏழைகளின் கண்ணவனே
மக்கள் பணியே உயிர் எனச் சொன்னவனே
நான் விரும்பும் என்னவனே
நேர்மைக்குமட்டும் தலைவணங்கி நின்னவனே
எங்களைவிட்டு என் ஆனாய் விண்ணவனே
தலைவா
வணங்குகின்றேன் என் தமிழை
வாழ்த்துகின்றேன் உன் புகழை
கவிஞா் புதுவைக் குமார்......... Thanks.........
-
17th January 2020, 07:54 PM
#2493
Junior Member
Diamond Hubber
-
17th January 2020, 10:55 PM
#2494
Junior Member
Diamond Hubber
புரட்சித்தலைவரின் கனவு நனவாகிறது
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடிக்கும் ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ அனிமேஷன் திரைப்படத்தின் பாடல் வெளியீடு.
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர்வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று அவரது கனவை நனவாக்கும் விதையை சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் விதைத்துள்ளது. ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற பெயரில் அனிமேஷன் திரைப்படமாக கல்கியின் புகழ்பெற்ற நாவலை தயாரித்துள்ளது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது. ‘பெரியார் குத்து’ பாடல் மூலம் அனைவரின் கவனத்தைக் கவர்ந்த ரமேஷ் தமிழ்மணி இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். பாகுபலி எந்திரன் போன்ற வெற்றிப்படங்களில் வசனம் பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி இந்தப் படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார். தவச்செல்வனின் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இந்த ஆண்டு பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள் காலத்தை வென்றவை என்பதை நாம் அறிவோம். இத்திரைப்படத்தில், சந்தோஷ் ஜெயகரனின் குரலில், வந்தியத்தேவனின் அறிமுகப் பாடல் ‘உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும்’ என்று தொடங்கி ‘ஒவ்வொரு நொடியும் வைரம் என்றால் காலம் புதையல்தானே; ஒவ்வொரு உள்ளமும் அரியணை என்றால் நிரந்தர அரசன் நானே!’ என்று நிறைவடைகிறது. புரட்சித்தலைவருக்காக எழுதப்பட்ட வரிகள். அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த புரட்சித்தலைவரின் பிறந்தநாள் அன்று இந்தப் பாடலை வெளியிட்டு அவருக்கு மரியாதை செய்து இந்தப் பாடலும் புரட்சித்தலைவரின் தத்துவப் பாடல்களைப் போல் அனைவர் மனதிலும் இடம்பிடிக்கும் என்று நம்புகிறது ‘வந்தியத்தேவன்’ படக்குழு.... Thanks......
-
17th January 2020, 10:56 PM
#2495
Junior Member
Diamond Hubber
-
17th January 2020, 11:00 PM
#2496
Junior Member
Diamond Hubber
-
17th January 2020, 11:21 PM
#2497
Junior Member
Diamond Hubber
இனிய இர*வு வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!
உச்ச*நீதிம*ன்ற* முன்னாள் த*லைமை நீதிப*தி, முன்னாள் கேர*ள க*வ*ர்ன*ர் ஆகிய* பெருமை மிகு ப*த*விக*ளை அலங்க*ரித்த*வ*ர் மாண்புமிகு திரு. ச*தாசிவ*ம் ஐயா அவ*ர்க*ள்.
அவ*ர் வ*ழ*க்குரைஞ*ர் ப*ட்ட*ம் பெற்ற*பின் சென்னை உய*ர்நீதிமன்ற*த்தில் த*ன் பெய*ரை ப*திவு செய்ய* செல்கிறார். அத*ற்குமுன் 25, ஜூலை 1973 அன்று சென்னையில் உள்ள ராமாவ*ர*ம் இல்லத்தில் பொன்மன*ச் செம்மலிட*ம் ஆசி பெற்று செல்லவேண்டும் என தீர்மானித்து காலை 7.30 மணிக்கெல்லாம் சென்றுவிடுகிறார். அப்போது திரு. ச*தாசிவ*த்தின் வ*ய*து 24. அண்ணா திமுகவைச் சேர்ந்த*வ*ரும் அல்ல. ஆனால், த*லைவ*ர் மீது உள்ள அபிமான*த்தால் அவ*ரைக் காண* ராமாவ*ர*ம் இல்ல*ம் செல்கிறார். காலை 8 மணிக்கு எம்ஜிஆரின் உத*வியாள*ர் வ*ந்திருக்கும் 100க்கு மேற்ப*ட்டோரிட*ம் விசிட்டிங் கார்டு அல்லது விவ*ர*ம் எழுதித்த*ர*ச்சொல்கிறார். எல்லோரும் த*ங்க*ள் விசிட்டிங் கார்டை ப*ந்தாவாக* கொடுக்க, திரு.ச*தாசிவ*ம் அவ*ர்க*ளோ ஒரு வெள்ளைத்தாளில் த*ன் பெய*ர், ப*டிப்பு, வ*ழ*க்குரைஞ*ராக* ப*திவு செய்ய* செல்லும் விவ*ர*த்தையும் எழுதி த*ருகிறார்.
காலை 8.15 மணிக்கு முத*ல் ந*ப*ராக* திரு.ச*தாசிவ*ம், புர*ட்சித்த*லைவ*ரால் அழைக்க*ப்ப*டுகிறார். இவ*ருக்கோ ஆன*ந்த*மான அதிர்ச்சி. மற்ற* பிர*முக*ர்க*ளுக்கோ ஆச்ச*ரிய*ம் க*லந்த* அதிர்ச்சி. த*லைவ*ரை ச*ந்தித்து வ*ணக்கம் தெரிவிக்கிறார். த*லைவ*ர் அவ*ர் கையைப்பிடித்துக் கொண்டு போட்டோ கிராப*ரிட*ம் புகைப்ப*ட*ம் எடுக்க*ச் சொல்கிறார். பின் அவ*ர*து விலாச*த்தை கொடுத்துவிட்டு செல்லும்ப*டியும் கூறுகிறார்.
மேலும், எத்த*னையோ க*ட்சிக்கார*ர்க*ள் கீழே என்னைக்காண காத்துக்கொண்டிருக்க உங்க*ளை ஏன் முதலில் அழைத்தேன் தெரியுமா? வ*க்கீல் தொழிலுக்கு நேர*ம் மிக*வும் முக்கிய*ம். ந*மக்காக* க*ட்சிக்கார*ர்க*ளோ, நீதிப*தியோ காத்திருக்க கூடாது. அதுவும் இன்று உய*ர்நீதி மன்ற*த்தில் வ*க்கீலாக* ப*திவு செய்ய*ச் செல்லும் முத*ல்நாளே தாம*த*மாக*ச் செல்லக்கூடாது. என*வே தான் உங்க*ளுக்கு முன்னுரிமை அளித்து ச*ந்தித்தேன். வ*க்கீல் தொழிலில் உண்மைக்காக*வும், நேர்மையாக*வும், மன*சாட்சிக்கு க*ட்டுப்ப*ட்டும் ந*ட*வுங்க*ள். உங்க*ள் எதிர்காலம் சிற*ப்பாக* அமைய வாழ்த்துக்க*ள் என்று திரு. ச*தாசிவ*ம் அவ*ர்க*ளுக்கு வாழ்த்து கூறி அனுப்பினார் மக்கள் திலகம்.
பின்ன*ர் அவ*ர் வாழ்க்கையில் எத்த*னையோ உய*ர்ப*த*விக*ளையும் பெற்றார். த*லைவ*ர், திரு.ச*தாசிவ*ம் அவ*ர்க*ளின் விலாச*த்திற்கு சில தின*ங்க*ளில் அனுப்பி வைத்த புகைப்ப*ட*மே இது. அவ*ர*து வீட்டு வ*ர*வேற்ப*ரையில் இன்றும் அலங்க*ரிக்கிற*து......... Thanks.........
-
18th January 2020, 05:21 AM
#2498
Junior Member
Diamond Hubber
-
18th January 2020, 05:21 AM
#2499
Junior Member
Diamond Hubber
-
18th January 2020, 05:22 AM
#2500
Junior Member
Diamond Hubber
Bookmarks