Page 125 of 402 FirstFirst ... 2575115123124125126127135175225 ... LastLast
Results 1,241 to 1,250 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1241
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வரும் 20.09.2019 வெள்ளிக்கிழமை முதல் தினசரி.4.காட்சிகளாக மதுரை சென்ட்ரல் சினிமா DTS., பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் இருவேடத்தில் தூள்கிளப்பிய "நினைத்ததை முடிப்பவன் " வெற்றிப்பவனி வருகின்றார் ...... மகிழ்ச்சியில் ரசிகர்கள் நன்றி... மதுரை.எஸ் குமார்............ Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1242
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #கள்வர்களுக்கு #அருளிய #நன்னெஞ்சே

    1964 ஆம் ஆண்டு வாத்தியார், ஒரு நாடகத்திற்குத் தலைமை தாங்க காரில் மதுரைக்குச் சென்று கொண்டிருக்கிறார்...உடன் நடிகர் திருப்பதிசாமி, புத்தூர் நடராசன், கட்டரத்தினம், எம்ஜிஆர் அண்ணன் மகன் சுரேந்திரன் மற்றும் டிரைவர் சாகுல் அமீது...இரவு நேரம்...கார் விரைவாகச் சென்று கொண்டிருக்கையில், ஒரு சாலையின் நடுவே ஒரு கூஜா...கார் ஹெட்லைட் வெளிச்சத்தில் பார்க்கையில் அது 'வெள்ளிக்கூஜா' என்று தெரிந்தது...

    பாவம் ...! நமக்கு முன்னர் வந்த யாரோ ஒருவர் இந்த கூஜாவைத் தவறவிட்டிருக்கவேண்டும், போய் அதை எடுத்து வா...! அதை வரும்வழியிலுள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிடலாம்...!!! என டிரைவரிடம் கூறித் தானும் இறங்குகிறார்...நல்ல கும்மிருட்டு ஒருவர் முகம் மற்றொருவருக்குத் தெரியாத அளவிற்கு...

    அப்போது திடீரென 10 பேர் கம்புகளுடன் சூழ்ந்துகொண்டு, 'மரியாதையா கார்ல உள்ள பொருட்களை எடுத்து எங்ககிட்ட கொடுத்துட்டு கெளம்பிடுங்க...! உங்கள ஒன்றும் செய்யமாட்டோம் என்று கூறினர்...

    அவர்கள் திருடர்கள் என அறிந்த வாத்தியார், 'இப்ப தரமுடியாதுன்னா என்ன பண்ணுவீங்க' அப்படின்னதும் கூட்டத்திலிருந்த ஒருவன், 'உங்க எல்லாரையும் அடிச்சுப்போட்டுட்டு எடுத்துட்டுப்போவோம்' ன்னு சொன்னான்..

    அதைக்கேட்ட வாத்தியார் தனது டிரைவரிடம், 'சாகுல், கார்ல இருக்கிற கம்பை எடு' ன்னு சொல்லி கம்பை கையில் வாங்குகிறார்...
    'நா எந்தப்பொருளையும் தரமாதிரி இல்ல...சண்டைக்கு நா ரெடி...ஒவ்வொருவரா வர்றீஙகளா அல்லது மொத்தமா வர்றீங்களான்னு' கேட்டு தனது கையிலுள்ள கம்பைச் சுழற்றி தாக்குதலை ஆரம்பிக்க...

    அதிர்ச்சியடைந்த திருடர்கள், 'இத்தனை தைரியசாலி யாருடா, அந்த ஆள் முகத்தைப் பாக்கணும்னு' சொல்லி ஒருவன் தீக்குச்சியைக் கொளுத்தி முகத்தைப் பார்க்க, அதிர்ச்சியுற்று டேய்! நம்ம வாத்தியாருடா'ன்னு சொல்ல, அனைவரும் உற்சாகமடைந்தனர்...
    'எங்கள மன்னிச்சுடுங்க வாத்தியாரே!' எனக் கோரஸாக அனைவரும் மன்னிப்பு கேட்டனர்...

    'ஏம்பா! உங்களுக்கெல்லாம் உடம்பு நல்லாத்தானே இருக்கு...இப்படி திருடறீங்களே, உங்களுக்கே கேவலாமல்ல...இந்த ரோட்ல எத்தனை பேர் அவசர வேலையா வருவாங்க, நோயாளிகள், கர்ப்பிணிகள், இப்படி...அவங்களெல்லாம் உங்களால எந்தளவு பாதிக்கப்படுவாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா? எத்தகைய பாவச்செயல் நீங்க செய்யறது? அப்படீன்னு வாத்தியார் சொல்ல...

    அனைவரும் "இனிமே நாங்க திருடவே மாட்டோம்னு" சொல்ல..
    'நீங்களனைவரும் சத்தியம் செஞ்சாதான் நம்புவேன்னு' வாத்தியார் சொல்ல...அவரின் கையில் அடித்து சத்தியம் செய்தனர்...

    வாத்தியார், அந்த பத்து பேருக்கும் தலா ரூ.1000/- வழங்க (1964 ம் வருடம் 1000 ரூபாய் என்பது இன்றைய தேதியில் குறைந்தது ஒரு லட்சம்) அதை அவர்கள் வாங்க மறுத்தனர்...உடனே வாத்தியார், ' இந்தப் பணம் நீங்க உழைச்சுப் பிழைப்பதற்காக, ஏதாவது கடை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள்...'ன்னு சொன்னபிறகு அவர்கள் வாங்கிக்கொண்டு சென்றனர்...

    இப்படி வாத்தியாரின் வாழ்வில் வரும் ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு திருவிளையாடல் தான்... முகநூலில் பாலு சார்.......... Thanks.........

  4. #1243
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழக மன்னன் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு, இன்று டாக்டர் எம்.ஜி.ஆர் உலக ஆராய்ச்சி மையமும் என்னுடைய NCWDC & MNDMK அமைப்பும் இணைந்து மனநலம் குன்றிய பெண்களுக்கு சென்னையில் உள்ள அன்பகம் காப்பகத்தில் அன்னதானம் வழங்க உள்ளது. இந்த சிறப்பு நிகழ்வினை புரட்சி தலைவரை மகானாக வழிபாடும் நமது புரட்சி மைந்தன் சிங்கப்பூர் எம்.ஜி.ஆர் அவர்கள் தலைமையில் நடைபெறும். இதற்க்கு முக்கிய ஆதரவாக டாக்டர் எம் ஜி ஆர் உலக ஆராய்ச்சி மையம்
    உறுப்பினர்களான துணை தலைவி எம்.ஜி.ஆர் கலைமகள் டாக்டர் பூங்கொடி, பொன்மன செல்வர் டாக்டர் ராமன், நல்ல நேரம் மாத இதழ் பத்திரிக்கை நிறுவனர் அய்யா தேவராஜ் ஆண்ட்ருஸ் ஆதரவில் இந்த சிறப்பு அன்னதானம் நிகழ்வுபெற உள்ளது என்பதனை பெரும் மகிழ்வுடன் தெருவித்து கொள்கின்றோம்!

    Dr.AYAN HARI NCWDC NATIONAL
    SECRETARY & MNDMK
    TAMILNADU CHENNAI........... Thanks.........

  5. #1244
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு சாதாரண கடைக்கோடி எம்ஜியார் ரசிகனின் அடிமைப்பெண் அதிசியங்கள்.

    1..உன்னை பார்த்து இந்த உலகம் பாடல் மனித இனத்தின் உணர்வை தூண்டும் பாடல்.

    2.. அம்மா என்றால் அன்பு பாடலில் தலைவன் குழந்தை போல கால்களை அசைக்கும் நிகழ்வு அட

    3...ஆயிரம் நிலவே பாடல் உண்மையான மன்னர்கள் எப்படி இருப்பார்கள் என்று நம் கண்ணின் முன்னே நிறுத்திய விதம்.

    4....ஒக்கேணிக்கல் நீர் வீழ்ச்சியில் இது வரை எவரும் காட்ட முடியாத அற்புத பட பிடிப்பு.

    5... தாயில்லாமல் நான் இல்லை பாடலில் 4 கேமராக்கள் கொண்டு படம் பிடித்த விதம்.....அதில் அந்த பறவைகள் கூட்டில்...என்ன ஒரு அற்புதம்...பின் வரும் விதம் விதமான எம்ஜியார்.

    5...உதகயில். வேங்கையன் ஜீவா வில்லன்களால் துரத்த படும் காட்சிகள் ஆங்கில படங்களுக்கு அன்றே சவால்.....சிகப்பு நிற ஆடைகளும், பச்சை நிற புல்வெளிகளும், நீல நிற ஆகாயமும் வெள்ளை நிற மேகங்கள் சூழ்ந்து நிற்கும் அழகு அந்த காலத்தில் முதல் முதலாக ஹெலிகாப்டர் மேல் இருந்து படம் எடுக்க பட்ட வரலாறு.

    6....ராஜஸ்தான் அரண்மனைகள்... வனப்பு மிகு காடுகளில் ஓடும் வீரர்கள் அட

    7... கொளுத்தும் வெயிலில் பாலை வனத்தில் கூடாரங்கள் அடிக்க பட்டு மேலே இருந்து எடுக்க பட்ட காட்சிகள்....வேங்கையனை பிரிந்த ஜீவா மணலில் நடக்கும் கால் தடங்கள்.... அணிவகுக்கும் ஒட்டகங்கள். இந்திய திரை உலக வரலாற்றில் எவரும் எடுக்க முடியாத காட்சிகள்.

    8....கட்டிய வலையில் கீழே தொங்கும் ஈட்டிகள் மத்தியில் ஒத்தை காலை கட்டிக்கொண்டு வாத்தியாரே உமக்கு நிகர் நீர் தான்..உம்மை சமன் செய்ய ஒருவனும் பிறக்கவில்லை இந்த இந்திய திரையுலகில்

    9 மகுடப்பதியின் வாள் உங்களை தாக்கும் போது நீங்கள் கேடயம் கொண்டு தடுக்கும் போது நெஞ்சங்கள் பதறியது உண்மையோ உண்மை..

    10...செங்கோடன் சிறையில் இருந்து அந்த நீரிவீழ்ச்சியில் நீங்கள் குதித்து தப்பிக்கும் காட்சி

    11 அந்த ராஜா சிங்கத்துடன் உண்மையாக மோதிய வேங்கையன்... ரத்தம் சொட்ட சொட்ட....உங்கள் தாயை கட்டி தொங்க விட்டு அவரை காப்பாற்ற....நீங்கள் மட்டும் வெளிநாட்டில் பிறந்து இருந்தால்...

    என்னவென்று சொல்வது வேங்கையா.. நீங்கள் ஒரு தனிப்பிறவி...தனி நடிகர்....தனி காப்பியம்...

    உலக எம்ஜியார் ரசிகர்கள் சார்பாக எங்கள் உண்மை ரசிகர்கள்...வாழ்க எம்ஜியார் புகழ் தொடரும் .
    ✌........... Thanks..........

  6. #1245
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய காலை வ*ணக்கம்

    ‘நாடோடி மன்னன்’ படம் ப*ட*ப்பிடிப்பு முடிந்து தணிக்கைக் குழுவிற்கு அனுப்பப் ப*ட்ட*து.

    அப்போதிருந்த தணிக்கைக்குழு அதிகாரி ஜி.டி.சாஸ்திரி கண்டிப்புக்குப் பெயர் போனவர். விதிமுறைகளைக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காதவர்.

    அவர் எவ்வளவு கண்டிப்பானவர், அவரைக் கண்டால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் எப்படிப் பயப்படுவார்கள் என்பதற்கு, பின்னாளில் சத்யா மூவிஸ் என்ற தன்னுடைய சொந்தப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் எடுத்த முதல் படமான “தெய்வத் தாய்” படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியை ஆர்.எம்.வீரப்பன் இங்கே நினைவு கூர்கிறார்.

    “நான் தயாரித்த முதல் படமான ‘தெய்வத்தாய்’ படத்தில் கவிஞர் வாலி எழுதிய ‘வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ’ என்ற பாடலில் ‘அத்திபழக் கன்னத்திலே முத்தமிடவா?’ என்று ஒரு வரி வரும்.

    அதைப் படமாக்குவதற்கு எனக்குப் பயம். பின்னால் சென்ஸாரின் போது சாஸ்திரி ஏதாவது வெட்டுவாரா என்ற பயம்.

    எனவே படமாக்குவதற்கு முன்பாகவே அந்தப் பாடலை எழுதிக் கொண்டு அவரிடம் போய்க்காட்டினேன்.

    “இதை ஏன் என்னிடம் காட்டுகிறீர்கள்?” என்று கேட்டார் சாஸ்திரி.

    “இல்லை.. இது என் முதல் படத்துக்காக எழுதப்பட்ட பாடல். ஏதாவது அப்ஜெக்ஷன் இருக்குமான்னு இப்பவே கேட்டுடலாம்னு…”

    “உங்களுக்கு என்ன சந்தேகம்?”

    “ஒரு இடத்தில் கன்னத்தில் முத்தமிடவா என்று வருகிறது. அதான்…”

    “அதில் என்ன?”

    “இல்லை.. முத்தமிடவா என்ற வார்த்தை இருக்கலாமா என்ற சந்தேகம்”

    “எப்போது உங்களுக்கே அந்தச் சந்தேகம் வந்துவிட்டதோ, அப்புறமென்ன, அந்த வார்த்தையை எடுத்துவிட வேண்டியது தானே?” என்றார் சாஸ்திரி. பின்ன*ர் அத்திப்ப*ழ*க் க*ன்ன*த்திலே கிள்ளிவிட*வா..என்று மாற்ற*ப்ப*ட்ட*து.

    அது தான் சாஸ்திரி!

    அப்படிப்பட்ட கண்டிப்புக்கார அதிகாரியான சாஸ்திரிக்கு, ‘நாடோடி மன்னன்’ பற்றிப் பல புகார்களை பலர் முன்னதாகவே எழுதியிருந்தார்கள்.

    ஒவ்வொரு கட்டத்திலும் தணிக்கை விதிகளை மனதில் கொண்டு ஆர்.எம்.வீ அணுகியதால், சென்ஸார் போர்டு அதிகாரி சாஸ்திரி படத்தைப் பார்த்ததும் வெளியே வந்து சொன்ன இரண்டு வார்த்தைகள்: “நோ கமெண்ட்ஸ்”.

    பொதுவாக அப்படி ஒரு சென்ஸார் ஆபீஸர் சொன்னால் அதற்குப் பொருள்:

    “நோ கட்ஸ்” இதுதான் மக்கள் திலகத்தின் நாடோடி மன்ன*ன் ப*ட*த்தின் த*ணிக்கையின் பரிசு.......... Thanks..........

  7. #1246
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வருகின்ற 20-09-2019 வெள்ளிக்கிழமை முதல் மகத்தான ஆரம்பம்... கோவை - Delite dts., திரையுலக ஏக சக்கரவர்த்தி மக்கள் திலகம் காவியம் "சிரித்து வாழ வேண்டும்" வெற்றி பவனி வரவிருப்பதாக நண்பர்கள் தகவல்...

  8. #1247
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரைப்பட விநியோகஸ்தர்கள் நண்பர்கள் வழியே கேள்விப்பட்ட சிறப்பு தகவல்... மக்கள் திலகம் Evergreen காவியங்களில் ஒன்றான " படகோட்டி" காவியமானது ஏரியா விநியோக உரிமைகளுக்கு 5 வருடங்களுக்கு ஐம்பது லட்சங்கள் பேசப்பட்டு வருகிறதாம்... மேலும் சில ஆண்டுகளுக்கு எனில்
    சில கோடி ரூபாய்கள் தாண்டுமாம்... பலர் முயற்சி செய்வதாக தகவல்கள்...

  9. #1248
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் ஆட்சியில் தூத்துக்குடியில் இரண்டுஜாதிகளுக்கிடையே பெரியகலவரம் நடந்தது,உடனே முதல்வர்எம்.ஜி.ஆர் சம்பவ இடம்செல்லபுறப்பட்டார், காவல்துறை உயர்அதிகாரிகள் இப்போது அங்குநீங்கள்செல்லக்கூடாது விபரீதம் நடக்கும் பாதுகாப்புக் கொடுக்கமுடியாமல் போய்விடும்என்றனர்,தலைவரோ அங்கு துப்பாக்கிச்சூடுநடந்துள்ளது நான்சென்றேதீருவேன் என்று புறப்பட்டார் அநேகமாக வாகைக்குளம் என்று நினைவு அங்கேபோர்க்களம்போல் இரண்டுஜாதியினரும்,எதிர்எதிரேகொந்தளிப்போடுஇருந்தனர் , முதல்வர்எம்.ஜி.ஆர்இரண்டுதரப்பிற்கும்இடையில் காரில் இருந்து இறங்கினார் ,அப்ப்ப்பா அங்குநடந்த அதிசயத்தை இப்போதுசொன்னால் கதைஎன்பர் ஆம் அந்தத் தங்கமேனியைக்கண்டதும் அங்கே ஓரே கோஷம் தான்கேட்டது இரண்டுதரப்பினருமே எம்.ஜி.ஆர் வாழ்க எங்கள் முதல்வர் வாழ்க கோஷம்தான்அது, தங்கள்பகைமறந்தனர் தலைவரின் பூமுகம்கண்டதும், ஆம்5நிமிடத்தில்அத்தனையும்விட்டு ஒன்றுபட்டனர்,இதைபதிவிடும்போது என்கண்கள் கண்ணீர்சொறிகிறது,எப்படிப்பட்ட காட்சியைக்காணும் பாக்கியம் கிடைத்தது, தலைவன்என்றால் நீமட்டுமே சம்பவம்நடந்த உடனேஅந்த இடத்திற்கு தைரியமாகச்சென்றதுஏன் தெரியுமா, தன்நாட்டுமக்கள்மீதுதலைவருக்கு இருந்த நம்பிக்கை,அதனால்தான் இந்தமக்களும் தலைவர்மறையும்வரை,ஏன் இன்றுவரைதலைவரை உயிராய் நினைக்கிறார்கள்........... Thanks...

  10. #1249
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1250
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆரை புகழ்ந்து தள்ளிய ஹிந்தி நடிகர்..!!


    சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த
    பிரபல ஹிந்தி நடிகர் தர்மேந்திரா அவர்களை
    சினிமா பொக்கிஷம் டாட் காம் சார்பில் சந்தித்தோம்.அப்போது அவரிடம் ” நீரும் நெருப்பும்’ படப்பிடிப்பின் போது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை தர்மேந்திரா சந்தித்த போது இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும்,தர்மேந்திராவின் மனைவி பிரபல நடிகை ஹேமமாலினியும் எம்ஜிஆர் அவர்களோடு இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் மிகப் பெரிய சைசில் பிரிண்ட் செய்து அவைகளை லேமினேஷன் செய்து அவரிடம்”சினிமா பொக்கிஷம். டாட்காம்”
    சார்பில் அன்பளிப்பாக வழங்கினோம்.மனிதர் பிரமித்துப் போய்விட்டார்
    இந்தப் படம் அவரிடம் இல்லவேயில்லையாம்.உடனே அவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டார்.அவர் பேசிய வீடியோ பதிவு மிக விரைவில் வெளியிடப் படும்........... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •