-
25th June 2019, 05:36 AM
#231
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
25th June 2019 05:36 AM
# ADS
Circuit advertisement
-
25th June 2019, 05:37 AM
#232
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
25th June 2019, 05:38 AM
#233
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
25th June 2019, 05:39 AM
#234
Junior Member
Diamond Hubber
-
25th June 2019, 09:22 AM
#235
Junior Member
Diamond Hubber
தன்னுடைய திரைப்படங்களால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார். அதனால்தான் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் குறைந்த பட்சம் 3 மாத இடைவெளியை அமைத்து வெளியிடச் செய்தார்.
இடைவெளி அதிகரித்து ரசிகனும் ஏமாந்துவிடக் கூடாது, இடைவெளி குறைவதால், தயாரிப்பாளரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்று சரியான தெளிவான திட்டமிட்டுத் தன் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தார்.
வீரம் பாசம் விவேகம் மட்டுமின்றி நகைச்சுவையிலும் எம்ஜிஆர் அவர்கள் குறை வைத்ததில்லை. அலிபாபாவும் 40 திருடர்களும், சபாஷ் மாப்பிளே, மாட்டுக்கார வேலன், பெரிய இடத்துப் பெண், குடியிருந்த கோயில் என்று பல படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை.
உருக்கமான நடிப்புக்கு உதாரணங்களாய் பெற்றால்தான் பிள்ளையா, பணம் படைத்தவன், எங்க வீட்டுப் பிள்ளை என்றும், வீரத்துக்கு அடிமைப்பெண், அரச கட்டளை, மதுரை வீரன், மன்னாதி மன்னன், மகாதேவி என்றும் ஏராளமாய்! இப்படி நவரசங்களையும் வெளிப்படுத்தும் நயமான கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, ரிக்சாக்காரன் திரைப்படத்துக்காக இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதும் பெற்றார்.
திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்
தமிழ் சினிமா வரலாற்றில் அவர் ஒரு முக்கியமான பகுதி. அவர் வழியில்தான் ரஜினி, விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் செல்கிறார்கள். #அவரது #பாதிப்பு #இல்லாத #ஹீரோ #தமிழ்சினிமாவில் #இல்லை. #ஏன் #சிவாஜி #கூட #அவரது #பாணியில் #நடிக்க #முயன்றிருக்கிறார்.......... Thanks wa.,
Last edited by suharaam63783; 25th June 2019 at 09:25 AM.
-
25th June 2019, 03:25 PM
#236
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர் புரட்சி மன்றம் சென்னை அலுவலகத் திறப்பு விழா. 07/07/2019.a இடம் :73/86. மூர் தெரு மண்ணடி ,சென்னை- 600001. Contact MGR BOSSCOR. 9840367225 GURUNATHAN 09176361050 ....... ........ Thanks wa.,
-
26th June 2019, 09:13 AM
#237
Junior Member
Diamond Hubber
அமரர் அண்ணன் எம்ஜிஆர் .எம்.குமார் அவர்கள் அகஸ்தியா திரையரங்கில் 23.6.19. மாலை காட்சியில் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள்( குழுவுடன்) எங்களுடன் தன் உயிருக்கும் மேலாக நேசித்த தங்கத்தைலை வரை.மக்கள்தலகத்தை இதயதெய்வம் புரட்சி தலைவர் அவர்களை அகல்விளக்கும் கற்பூரமும் சுடர்விட்டு எறிய "நினைத்ததை முடிப்பவன்" காவியம் உண்மையில் நினைத்ததை முடித்தவர்......... சிரித்து கொண்டே புகைப்பட உருவில் வந்து ரசித்து அனுபவித்து அற்புத காட்சி..இதுவரை இந்த பாக்கியம் தமிழகத்தில் யாருக்கும் ஸ்ல கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.............. Thanks wa.,
-
26th June 2019, 09:17 AM
#238
Junior Member
Diamond Hubber
எம்ஜிஆருக்கு அமைந்த உயர்வு போல் வேறு எவருக்கும் அமையவில்லை .காரணம் எம்ஜிஆர் குறிக்கோளோடு வாழ்ந்தார் . உழைத்தார். தன்னை நம்பினார் . ரசிகர்களை நம்பினார் . மக்களை நம்பினார் . , வெற்றி கண்டார் . வரலாறு படைத்தார் .
1947ல் கதாநாயகன்
1950ல் சூப்பர் ஸ்டார்
1954ல் வசூல் சக்கரவர்த்தி
1956ல் மதுரை வீரன் - இமாலய வெற்றி
1957ல் திமுக வெற்றிக்கு உதயசூரியன் எம்ஜிஆர் உழைப்பு
1958ல் நாடோடி மன்னன் - வரலாற்று வெற்றி விழாக்கள்
1960ல் மன்னாதி மன்னன் எம்ஜிஆர்
1961ல் சமூக புரட்சி படம் திருடாதே - சீர்திருத்த காவியம்
1962ல் தேர்தலில் திமுக வெற்றிக்கு உழைப்பு
1963ல் 9 படங்களில் நடித்து மாபெரும் புகழ் ஈட்டியவர்
1964ல் ரசிகர்களை தீவிர பக்தர்களாக மாற்றிய எம்ஜிஆர் படங்கள்
1965ல் எங்க வீட்டு பிள்ளை - நாடே வியந்து பாராட்டி ஏற்று கொண்டது
1966ல் மீண்டும் 9 படங்களில் எம்ஜிஆர் ஜொலித்தார் .ரசிகர்கள் பேரானந்தம்
1967ல் மறுபிறவி . தேர்தலில் வெற்றி . நிலைத்து நின்றார் .
1968ல் ஒளிவிளக்கு 100வது படம் , வெற்றி மேல் வெற்றி
1969ல் அடிமைப்பெண் - நம்நாடு தித்திக்கும் விருந்து ரசிகர்களுக்கு .
1970ல் மாட்டுக்கார வேலன் வெள்ளி விழா .புகழ் உச்சக்கட்டம் .
1971ல் தேர்தலில் வெற்றி . ரிக் ஷாக்காரன் இமாலய வெற்றி .
1972ல் பாரத் எம்ஜிஆர் . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் - அதிமுக உதயம் .
1973ல் திண்டுக்கல் வெற்றி வீரர் . உலகம் சுற்றும் வாலிபன் வைர கிரீடம் .
1974ல் புதுவை - கோவை வெற்றி .உரிமைக்குரல் 200 நாட்கள் .
1975ல் இதயக்கனி இமாலய வெற்றி .
1976ல் அரசியல் மற்றும் திரை உலகில் முடி சூடா மன்னன் .
1977 - 1987 வரை முடிசூடிய மன்னன் .
எம்ஜிஆரா ... அவருக்கு நடிப்பே வராது
எம்ஜிஆர் படமா ....நல்லா இருக்காது
என்று கிண்டல் கேலி செய்த புண்ணியவான்கள்
இன்று
எம்ஜிஆர் நடிப்பு பிரமாதம்
எம்ஜிஆர் படங்கள் - மிகவும் அருமை
பாராட்டை அள்ளி குவிக்கிறார்கள் . காலம் கடந்து உண்மையை உணர்ந்த அந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி .
தேசிய இயக்கத்தில் இருந்த எம்ஜிஆர் திராவிட இயக்கத்தில் இணைந்த பிறகு திரை உலகில் கொடி கட்டி பரந்த தேசிய கட்சி தயாரிப்பாளர்களின் படங்களில் மக்கள் திலகம் சிறந்த கதாநாயகனாக நடித்து வெற்றி கொடி நாட்டினார் .
திராவிட இயக்கத்தில் இருந்து கொண்டே தேசிய விருதுகளை பெற்ற பெருமை எம்ஜிஆர் ஒருவருக்கே என்பது சாதனையின் சிகரம் .
பொருளாதாரமும் எம்.ஜி.ஆரும்:
1977ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் மாற்றுக் கட்சித் தலைவர்கள்… “எம்.ஜி.ஆருக்குப் பொருளாதாரம் தெரியுமா?” பொருளாதாரம் தெரியாமல் ஆட்சி நடத்த முடியுமா? என்று கேட்டார்கள். இதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர். “அடுத்த வேலை பசியைப் போக்கத் தெரியும். உழைப்பும் எளிமையும் சேமிப்பும் நேர்மையும் இருந்தால் போதும், யாரும் பிரகாசமான வாழ்வு பெறலாம். இதுதான் எனக்குத் தெரிந்த பொருளாதாரம்” என்று பதிலளித்தார். பசியோடு இருந்தவன் நான். பசியை வென்றேன். திரைத்துறையில் ஈடுபட்டு திருப்தியாக வளர்ந்தேன். அதேபோல் என் ஆட்சியிலும் மக்கள் திருப்தியை அடையச் செய்வேன் என்றார்..... சைதை மூர்த்தி... ........... Thanks wa.,
-
26th June 2019, 11:54 PM
#239
Junior Member
Diamond Hubber
#முத்துக்கள் #மூன்று
வாத்தியாரை, சோ கடுமையாக எதிர்த்த காலங்களும் உண்டு. மிகத் தீவிரமாக ஆதரித்த சமயங்களும் உண்டு. 1980ம் ஆண்டு புரட்சித்தலைவர் ஆட்சி கலைக்கப்பட்ட பின் நடந்த தேர்தலில், நம்ம வாத்தியாரு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் சோ தீவிரமாக இருந்தார்...
ஒரு விஷயம் பார்த்தீங்கன்னா, சோவுக்கு வாத்தியார் மீது அதிகளவு அன்பும் பாசமும் இருந்திருக்கவேண்டும்...!!!
எங்கள் தங்கம் திரைப்படத்தில் கூட மேடையில் அமர்ந்திருக்கும் புரட்சித்தலைவரிடம் 'வாத்தியாரே வாத்தியாரே' என பாசமாக அழைப்பதிலும் சரி...
வாத்தியாரின் கன்னத்தைக் கிள்ளிக் கிள்ளி கொஞ்சுவதிலும் சரி...சோவின் ஆழ்மனதில் வாத்தியார் மீது எந்தளவு அன்பாயிருந்திருக்கிறார் என்பதை உணரலாம்.
இதெல்லாம் தாண்டி சோ, நம்ம வாத்தியாரைப் பற்றி சொன்ன நேர்மையான, காலத்தால் அழிக்கவே முடியாத வரிகளை இன்றளவும் நாம் அனுபவித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம்...
நம்ம வாத்தியாரை 'இறைநிலைக்கே' கொண்டு சென்ற வார்த்தைகள் தான் இவை :
1. விளம்பர நோக்கம் இல்லாமல் எம்ஜிஆர் பிறருக்கு உதவுவதை பார்த்திருக்கிறேன். திரைப்படத்துறையில் அவருக்கு எதிராக இயங்கிய வர்களுக்கு கூட அவர் உதவியிருக் கிறார்’’ என்று கூறும் சோ, ஒருமுறை கேட்ட கேள்வி பொருள் பொதிந்தது. சோவின் கேள்வி இது...‘‘அப்படியே விளம்பரத்துக்கு என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை பேருக்கு விளம்பரத்துக்காகவாவது பிறருக்கு உதவும் மனம் இருக்கிறது?’’
2. வீட்டிலே உலையை வெச்சுட்டு இன்னிக்கு சோறு பொங்கும் என்ற நம்பிக்கையோட ஒருவரின் வீட்டுக்கு போகலாம் என்றால் அது எம்.ஜி.ஆரின் வீடுதான்’’ (சட்டாம்பிள்ளை சோவிடம் சொன்னது)
3. உலகில் எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் உண்டு...
ஆனால் எம்ஜிஆருக்கு மட்டுமே பக்தர்கள் உண்டு...
இது போல நற்சான்றிதழ்கள் உலகில் வேறு எந்த மனிதருக்கோ, நடிகருக்கோ, ஏன் உலகத்தலைவர்களுக்குக்கூட கிடையாது... ............ Thanks wa.,
-
27th June 2019, 06:38 AM
#240
Junior Member
Diamond Hubber
கண்மூடி ஆதரிக்கவில்லை எம். ஜி. ஆரை .,
நூற்றாண்டு கழிந்து விட்டது கூறு எம் ஜி ஆர் போல் ஒரு கருணை மிக்க மகானை ..........
தன் படம் உலக படதரத்திலே இருந்து விலக்கி நல்வழி காட்டும் காவியமாக அமைத்த எம் ஜி ஆர் போல் ஒருவரை காட்டு ...
சேர்த்த சொத்தை தனக்கென வைக்கமல் ஊருக்கு கொடுத்த உத்தமனை காட்டு...
ஒரு மேலாதிக்க காங்கிரஸ் ஆட்சியை தூக்கி வீசி அங்கு திராவிடத்தை அமரவைத்த வீரமிக்க சக்தி கொண்ட எம் ஜி ஆரை போல் ஒருவரை காட்டு...
மக்களை தன்னை வாழவைத்தவர்களை வதைத்த சிங்களத்தை எதிர்த்து போரிட்ட தைரியமிக்க ஒரு தலைவரை காட்டு ...
தமிழகத்தை எம். ஜி. ஆர்., போல் பொற்கால ஆட்சி தந்த ஒரு முதல்வரை காட்டு ...
எம் ஜி ஆரை போல் மக்களை நேசித்த ஒரு தலைவரை காட்டு ...
நாட்டு மக்கள் எம் ஜி ஆரை போல் எவரை நேசித்தார் காட்டு ...
எம் ஜி ஆர் ஒரு சகாப்தம்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்......... Thanks wa.,
Bookmarks