Page 283 of 402 FirstFirst ... 183233273281282283284285293333383 ... LastLast
Results 2,821 to 2,830 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2821
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2822
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தீர்க்கதரிசி 2:- இன்று கொரோனா வைரஸ் னு உலகம் முழுவதும் கத்துகிறோம் அல்லவா , அன்றே நம் தலைவர் தனது 100 வது படமான ஜெமினியின் ஒளிவிளக்கு படத்திலேயே காட்டியிருப்பார் , அவர் இருக்கும் ஊருக்கு மர்மகாய்ச்சல் ஒன்று பரவும் அந்த ஊர்லேர்ந்து எல்லாரும் வேற ஊருக்கு போய்விடுவாங்க தலைவர் அப்ப தான் சௌகார்ஜானகி வீட்டுக்கு போய்பார்க்கும் அந்த மர்ம காய்ச்சல் வந்து உருக்குலைஞ்சு போயிடுவாங்க , தலைவர் தன்னோட பாதுகாப்புல கண்காணிச்சு வைத்தியம் பார்ப்பார், அதே போல் அக் கிராமத்திலே வயதான பாட்டி அந்த மர்ம காய்ச்சல் வந்து இறந்து விடுவார்கள், தலைவரோ தீ விபத்தில உயிர் பிழைத்து படுத்திருப்பார், நமக்கா படம் பார்க்கும் போது வயிற்றில் ஈரக்குலையை பிசையும், இதயமோ படபடக்கும் ஏனென்றால் படங்களில் கூட அவர் சாக கூடாது என்பது தான் நமது ஆசை அதே போல் அந்த காட்சில சங்கு ஊதும் அப்பா சௌகார் வந்து நமது தெய்வத்து கிட்ட சொல்லுவாங்க அந்த பாட்டி இறந்துட்டாங்க உடனே தலைவர " அம்மா" னு வாய் விட்டு அலறுவார் அப்பப்பா அந்த சீன்ல கண்களே குளமாகிடும். அதனால் இந்த மர்மகாய்ச்சலையும் முன்பே சொன்னவர் எங்க தலைவர் நம்ம தலைவர் தான் தீர்க்கதரிசி ............. Thanks.........

  4. #2823
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றைய நிலைமையை நினைத்து பார்க்கையில், அன்றே சக்கரவர்த்தி மக்கள் திலகம் கனிந்த விஷ ஜுரம் தனது மகத்தான இணையேயில்லா வெற்றி காவியமாம் "ஒளிவிளக்கு" முன்னுதாரணமாக திகழ்கிறது...

  5. #2824
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மாமனிதர் எம் .ஜி .ஆர் .

    நூற்றாண்டு கடந்தும் இன்றும் நினைக்கப்படுகிறார்

    நாடே கொண்டாடி மகிழ்கின்றது எம் .ஜி .ஆரை !

    ஏழ்மையில் பிறந்து வளர்ந்த காரணத்தால்

    ஏழ்மை ஒழிக்க முயற்சிகள் செய்தார் !

    கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள்

    கண்ணால் கண்ட காட்சிகள் ஆனது !

    தோன்றின் புகழோடு தோன்றுக என்று

    திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் !

    மனிதநேயத்தின் சின்னமாக வாழ்ந்து சிறந்தவர்

    மக்கள் மனங்களில் என்றும் வாழ்பவர் !

    நல்லவனாகத் திரைப்படத்தில் நடித்தது மட்டுமன்றி

    நல்லவனாகவே வாழ்க்கையில் வாழ்ந்து காட்டியவர் !

    ஈழத்தமிழரின் விடுதலையை பெரிதும் விரும்பியவர்

    ஈழத்தின் விடுதலைக்கு பெரிதும் உதவியவர் !

    ஏழைப்பங்காளன் காமராசரின் மத்திய உணவுத்திட்டத்தை

    ஏழைமாணவர் அனைவருக்கும் சத்துணவாக விரிவாக்கியவர் !

    வெற்றி மாலைகள் பெற்றுக் குவித்தவர்

    வேதனைகள் நீக்கி மகிழ்வைத் தந்தவர் !

    என்னுடைய முதல்வர் நாற்காலியில் ஒருகால்

    என்பது பட்டுக்கோட்டையின் பாடல்கள் என்றவர் !

    நன்றி மறக்காத உயர்ந்த உள்ளம் பெற்றவர்

    நாடு போற்றும் பொன்மனச் செம்மல் ஆனவர் !

    பொற்காலம் படைத்தது தமிழா வரலாற்றின்

    பொன் எழுத்துக்களில் இடம் பிடித்தவர் !

    விருதுகள் பல பெற்றபோதும் என்றும்

    விவேகமாகச் சிந்தித்து எளிமையாய் வாழ்ந்தவர் !

    ஏழைகளின் கண்ணீர் துடைக்க முதல்வராகி

    எண்ணிலடங்காத திட்டங்களை நிறைவேற்றியவர் !

    திரைப்படத்தில் மிகமிக நன்றாக நடித்தவர்

    தமிழக மக்களிடம் என்றும் நடிக்காதவர் !

    புன்னகை மன்னராக பூவுலகில் வாழ்ந்தவர்

    புரட்சித் தலைவர் எனும் பட்டம் பெற்றவர் !

    இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்வார் எம் .ஜி .ஆர் .

    என்றும் அழிவில்லை எம் .ஜி .ஆர் . புகழுக்கு !

    பொன்மனச் செம்மல் எம் .ஜி .ஆர் ! கவிஞர் இரா .இரவி

    தனித்தமிழ் ஈழத்தை ஆதரித்த

    தனிப்பெரும் தலைவர் எம் .ஜி .ஆர்

    ஈழத்திற்கு நிதி உதவி தந்து வளர்த்தவர்

    ஈழத்தமிழரின் நெஞ்சம் நிறைந்தவர்

    சிங்களக் கொடுமை உணர்ந்தவர்

    சிங்களம் வீழ்ந்திட விரும்பியவர்

    மதிய உணவை சத்துணவாக விரிவாக்கியவர்

    மாணவர்கள் பள்ளி வரக் காரணமானவர்

    கோடிகளைக் கொள்ளை அடிக்காதவர்

    குடும்பத்திற்குச் சொத்துச் சேர்க்காதவர்

    திரையில் மட்டுமே நடித்தவர்

    நிஜத்தில் என்றுமே நடிக்காதவர்

    விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்தவர்

    விவேகமாகச் சிந்தித்துச் செயல்படுத்தியவர்

    அவரால் வாழ்ந்தவர்கள் கோடி

    அவரால் வீழ்ந்தவர்கள் மிகச் சிலர்

    உலகம் வியக்கும் வண்ணம் மதுரையில்

    உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர்

    உயிருள்ளவரை முதல்வராய் இருந்தவர்

    உன்னத ஏழைகளின் இதயத்தில் வாழ்பவர்......... Thanks.........

  6. #2825
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #ஒருதாய்மக்கள்நாமென்போம்...

    #உன்னையறிந்தால்நீஉன்னையறிந்தால்.

    #ஏமாற்றாதேஏமாற்றாதேஏமாறாதேஏமாறாதே..

    #இன்னொருவர்வேதனைஇவர்களுக்குவேடிக்கை..

    #தொட்டுவிடதொட்டுவிடதொடரும்..

    #தைரியமாகச்சொல்நீமனிதன்தானா..

    #நான்பாடும்பாடல்நலமாகவேண்டும்..

    மேற்கண்ட தலைவரின் பாடல்கள் இப்போதுள்ள கொரோனா வைரஸ் பரவும் சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்களாக கருதுகிறேன்,

    நண்பர்களே, உறவினர்களே எவ்வளவு முக்கிய காரணமாக இருந்தாலும் மற்றவர்களை சந்திப்பதை தவிர்த்திடுங்கள்,

    உங்களையும், உங்கள் சந்ததிகளையும் காத்திடுங்கள், அனைவரும் அவரவர் இருப்பிடத்திலேயே இருந்துகொள்ளுங்கள்,

    அலட்சியம் வேண்டாம்........... Thanks...

  7. #2826
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று பகல் sunlife சேனலில் புரட்சி நடிகர் வழங்கிய என்றும் எல்லோரும் ரசிக்கும் "நம்நாடு" ஓளி பரப்பப்பட்டது. நாளை காலை "சந்திரோதயம்" ஒளிபரப்பாகிறது.........

  8. #2827
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நக்கீரன் வார இதழ் --18/03/20
    --------------------------------------------------
    அடுத்த கட்டம் -அந்த அடையாளம் கடைசிவரை தேவைப்பட்டது -பழ கருப்பையா*
    ----------------------------------------------------------------------------------------------------------


    அண்ணாவும் , கருணாநிதியும், கண்ணதாசனும், எம்.ஜி.ஆரும்* திரைத்துறை வழியே திராவிட இயக்கத்தை மிக எளிமையாகவும் , வலிமையாகவும் எடுத்துச் சென்றுள்ளனர் என்பது வரலாறு .

    அஞ்சாமை திராவிடர் உடமையடா* என்னும் கண்ணதாசன் வரிகள் , எம்.ஜி.ஆர். நடிப்பில், அடிமட்ட கிராமமான சாலைகளே இல்லாத பட்டி, தொட்டி வரை போய் சேர்ந்தது .**

    அண்ணாவும் , கருணாநிதியும், கண்ணதாசனும், எம்.ஜி.ஆரும்* திரைத்துறை வழியே திராவிட இயக்கத்தை மிக எளிமையாகவும் , வலிமையாகவும் எடுத்துச் சென்றுள்ளனர் என்பது வரலாறு .

    அஞ்சாமை திராவிடர் உடமையடா* என்னும் கண்ணதாசன் வரிகள் , எம்.ஜி.ஆர். நடிப்பில், அடிமட்ட கிராமமான சாலைகளே இல்லாத பட்டி, தொட்டி வரை போய் சேர்ந்தது .**
    வேலூரில் எம்.ஜி.ஆரின் செல்வாக்கோடு மோதி ஈ .வே .கி.சம்பத் நிலைகுலைந்து வெளியேறும் நிலைக்கு உள்ளானார் .* அண்ணா சம்பத்திடம் உருகினார் .**சம்பத்தின் அளப்பரிய தேவையை உணர்ந்திருந்தார் .* கசிந்தார் .* கண்ணீர் மல்கினார் .* ஆனால் நடப்பு அரசியலில் எம்.ஜி.ஆரின் பயன்பாடு (utility)இழப்பதற்குரியது இல்லை என்பதில் அண்ணா திண்ணமாக இருந்தார் .**

    சம்பத் தன தமிழ் தேசிய நிலைப்பாட்டில் அவர் ஊன்றி நின்று இருந்தால் , அண்ணாவுக்கு மாற்று தலைவராக உருவாகி நிலைபெற்றிருப்பார் .* அவர்*கோபதாபங்களில் இந்திய தேசிய அரசியலில் போய்க் கரைந்து தனக்குரிய உயரத்தை இழந்துவிட்டார் .**

    வழவழப்பான நெடுஞ்செழியனோ, தன்னை பெரிதும் வருத்திக் கொள்ளாத*அன்பழகனோ தலைமைக்கான பந்தய மைதானத்தை அடைய போவதில்லை .
    ஆகவே, எஞ்சியவர்கள் இருவர்தாம் .* ஒருவர் கருணாநிதி. இன்னொருவர் எம்.ஜி.ஆர் .* கருணாநிதி முதல்வராவதற்கு பின் வலிமையாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். தான் .* ராமாவரம் தோட்டம்தான் அண்ணாவின் வழித்தோன்றலை தீர்மானித்தது .*

    கருணாநிதி முதல்வராகிவிட்டார்.* கட்சியிலும், ஆட்சியிலும் முதல் நிலைதான் அந்நாள் அது தன்னுடைய வலிமையினால் மட்டுமே அடைந்த இடம் இல்லை என்பதனால் அவருக்குள் ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது .

    மாடு தன்* போக்குக்கு போக முடியாதவாறு அதன் கழுத்தில்* ஒரு கட்டை கட்டி விடப்படுவது போல், எம்.ஜி.ஆர். என்னும் கட்டை கழுத்தை விட்டு அகலாதவரை தன்னுடைய முதலிடம் பெயரளவில்தான் என்பது கருணாநிதிக்குத் தெரிந்து இருந்தது ..* பெயருக்கு முதல்வராக இருக்க எடப்பாடி*அல்லவே*கருணாநிதி .

    அதே நேரத்தில் ராமாவரம் தோட்டத்தின்* தயவினால்* முடிவு செய்யப்பட பதவிதான்*அது .என்கிற எண்ணமும் எம்.ஜி.ஆருக்கு*கொஞ்சமும் குறையாமல் இருந்தது .

    மோதலுக்கு*நாள்* குறிக்கப்படுவது இயற்கைதானே .* எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டார் .* அண்ணா*எதை செய்ய தயங்கினாரோ , அதை கருணாநிதி செய்து முடித்துவிட்டார் .**

    அதனுடைய விளைவு கருணாநிதி 14 ஆண்டுகள் வனவாசம்*செல்ல*நேரிட்டது*.* ஆட்சி வளையத்திற்கு வெளியே, அவர்* அவ்வளவு காலம் தாக்குப்*பிடித்து தன்னுடைய*கட்சியையும், தாக்கு பிடிக்க செய்ததுதான்*கருணாநிதியின் தனித்திறமை .* அவருக்குள்ள நிகரற்ற*தலைமைக்*கூறு .* ஆனால் காலம் சம்பத்திற்கு எதிராக*எம்.ஜி. ஆரைத்தான்* தாங்கியது.* அதுபோல*கருணாநிதிக்கு எதிராகவும் எம்.ஜி.ஆரைத்தான்* தாங்கியது*.**

    திராவிட இயக்க நாட்காட்டி போடுவார்கள் .* அந்த காலத்தில் அந்த ஐம்பெருந்தலைவர்கள் படம் போட்டிருக்கும் .* அதில்*எம்.ஜி.ஆர். படம் இருக்காது .திராவிட இயக்கத்தின் கேள்விக்கு அப்பாற்பட்ட (பெரியாரும்*அப்படிதான்*) தலைவராக*அண்ணா இருந்தார் .**

    கேள்விக்கு உட்பட்டவராக அதே சமயத்தில் சம்பத்தாலும் , கருணாநிதியாலும் வெல்ல முடியாத*தலைவராக*எம்.ஜி.ஆர். இருந்தார் .* என்பது*அறிவியக்கத்தின் வியப்புதானே*.**
    *வெறும் திரைக்கவர்ச்சி* அதற்கு காரணமாக*முடியாது*.அது அவருக்கு*அடித்தளம் அமைத்துத்*தந்திருந்தாலும் , அவரிடமும் இயற்கை யான ஒரு தலைமைத்துவம் இருந்திருக்கிறது என்பது*ஒத்துக்*கொள்ள வேண்டிய விஷயம் அல்லவா .**

  9. #2828
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மூன்று பேர்களின் மறைவு தன்னை*மிகவும் பாதித்ததாக*மெல்லிசை மன்னர்*எம்.எஸ்.விஸ்வநாதன் தான் மறைவதற்கு முன்பு தெரிவித்திருந்தார்*
    ------------------------------------------------------------------------------------------------------------------------------

    *அவர்கள்* பின்வருமாறு :
    1. தனது*தாய் ,* *2.கவிஞர் கண்ணதாசன் .* * 3.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.**

  10. #2829
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குமுதம் வார இதழ் -25/03/2020
    --------------------------------------------------
    நேற்று இன்று நாளை படத்திற்காக எம்.எஸ்.வியை ஒரு பாட்டுக்காக பல மெட்டுகள் போட* வைத்த எம்.ஜி.ஆர்.*
    --------------------------------------------------------------------------------------------------------------------

    நேற்று இன்று நாளை படம் , நடிகர் அசோகன் சொந்தமாக தயாரித்தது . ஒரு குறிப்பிட்ட பாட்டுக்கான மெட்டை மாற்றி மாற்றி போட்டுக் கொண்டேயிருந்தார் எம்.எஸ். வி.* ஒவ்வொரு மெட்டையும் அசோகன் விசுவிடமிருந்து கொண்டுபோய் எம்.ஜி.ஆருக்கு போட்டு காட்டுவார் .* ஓ.கே. ஆகாது . இப்படி பல மெட்டுகள் போட்டாயிற்று .

    ஒரு நாள் மெட்டை வாங்கி கொண்டு வழக்கப்படி தோட்டத்துக்கு போனார் அசோகன் .* திரும்பி வந்து விசுவிடம் தலைவருக்கு மெட்டு பிடிக்கவில்லை என்றதும் விசுவுக்கு கோபம் வந்துவிட்டது .**

    என்னாலே இனிமே இதுக்கு ட்யூன் போட முடியாது .* இந்த பாட்டுக்கு மட்டும் தோட்டத்திலேயே எம்.ஜி.ஆரை வைத்து* ட்யூன் போட சொல்லி, அவர் கிட்டேயே ஓ.கே. வாங்கிடுங்க என்றார் .

    சில மாதங்கள் கழித்து, ஒரு ட்யூனை ஓ.கே. செய்து எம்.ஜி.ஆர். விசுவிடம் ரகசியமாக சொன்னார் .* விசு. உன் திறமை மீது எனக்கு அபார நம்பிக்கை உள்ளது* *ஆகவே ஒவ்வொரு ட்யூனும் நல்லாத்தான் போட்டிருந்தே .* நான் முதல்லேயே ஓ.கே. பண்ணியிருந்தா* உடனே படப்பிடிப்பு நடத்தணும்னு தேதி கேட்டு என்னை நச்சரிப்பாங்க .* எனக்கு கால்ஷீட் தருவதற்கு வேறு தேதியே இல்லை .* இதற்காகத்தான் இந்த தாமதம் .என்று சமாதானம் சொன்னார் .

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. நூலில் இருந்து . *

  11. #2830
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஐி.ஆரும், சரோஐாதேவியும் இணைசோ்ந்து சுமாா் 10 ஆண்டுகளில் 26 படங்களில் நடித்திருக்கின்றனா். இந்த இணை நடிப்பில் வெளிவந்த கடைசி சில படங்களில் ஒன்று பத்மினி பிக்சா்ஸ் சாா்பில் இயக்குநா் பந்தலு தயாாித்த 'நாடோடி'.
    இப்படத்தில்தான் நடிகை பாரதி தமிழ்த் திரை உலகிற்கு அறிமுகமானாா். இப் படத்தில் பல பாடல்கள் நம் காதுகளுக்கு இனிமை சோ்த்தன.
    கவிஞா் வாலி இப்படத்திற்காக ஒரு பாடலை இயற்றி மக்கள் திலகத்திடம் வாிகளை வாசித்து காட்டினாா்.
    புரட்சி தலைவா் "இது என்ன சாித்திரப் பாடலைப் போலிருக்கிறது" எனறு சொல்லி பாடலை நிராகாித்தாா். ஆனால் அழகான அா்த்தமுள்ள அவ்வாிகளை வீணாக்காமல் இசையமைப்பாளா் கே.வி.மகாதேவனிடம் பாடி காட்டினாா் கவிஞா் வாலி.
    இசையமைப்பாளருக்கு பிடித்துப் போக, அப்போது அவா் இசையமைத்துக் கொண்டிருந்த எம்.ஐி.சக்கரபாணியின் சொந்த தயாாிப்பான 'அரச கட்டளை' எனும் சாித்திர படத்தில் சோ்த்து கொண்டாா்.
    'நாடோடி' படத்திற்கு எழுதப்பட்டு 'அரச கட்டறை' யில் சோ்த்துக் கொள்ளப் பட்ட அந்தப் பாடல் "புத்தம் புதிய புத்தகமே"............... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •