Page 117 of 402 FirstFirst ... 1767107115116117118119127167217 ... LastLast
Results 1,161 to 1,170 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1161
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks orodizli thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1162
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #1163
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    M.G.R. பெண்களை தெய்வமாக மதிப்பவர். பொதுக்கூட்டங்களில் பேசும்போது, ‘‘என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தாய்மார்களே…’ என்று குறிப்பிட்டுவிட்டுத்தான் பேசத் தொடங்குவார். கூட்டங்களில் அவரை நாடி உதவி கோரும் பெண்களுக்கு உதவிகள் செய்வதுடன், பெண்களின் பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை செலுத்துவார்.

    நாகை மாவட்டம் மாயவரத்தில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட ஒரு பொதுக்கூட்டம். அவரது ஆட்சியில்தான் 1982ம் ஆண்டு மாயவரத்தின் பெயர் மயிலாடுதுறை என்று மாற்றப்பட்டது. இந்த சம்பவம் நடக்கும்போது அந்த ஊர் மாயவரம் என்றுதான் அழைக்கப்பட்டது. எம்.ஜி.ஆரைப் பார்த்து உதவி கோர, இரண்டு இளம் பெண்கள் மிகுந்த சிரமத்துடன் மேடை அருகே வந்து காத்திருந்தனர். அவர்கள் இரட்டையர்கள். ஒரே மாதிரி தோற்றம் கொண்டவர்கள். இதில் கொடுமை என்னவென்றால், இருவரும் ஒரே மாதிரி குறை உடைய மாற்றுத் திறனாளிகள்.

    இரு பெண்களுக்கும் கால் ஊனம். கைகளை ஊன்றி தவழ்ந்தபடியே, மேடை அருகே வந்துவிட்டனர். மக்களின் வாழ்த்துக்களை ஏற்றவாறு, கையசைத்த படியே மேடைக்கு எம்.ஜி.ஆர். வந்தார். கூட்டம் முண்டியடித்து மேடை அருகே வர முயற்சித்தது. அந்த நெரிசலில் இரு பெண்களும் சிக்கிக் கொண்டனர். இதை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். உதவியாளர்களிடம் சொல்லி அவர்களை அழைத்துவரச் சொன்னார். அந்தப் பெண்கள் இருவரும் எம்.ஜி.ஆரிடம், ‘‘ஐயா, உங்களிடம் உதவி கோர வந்திருக்கிறோம்’’ என்றனர். அவர்களை மேடையின் ஓரத்தில் காத்திருக்கச் சொன்னார்.

    கூட்டத்தில் பேசி முடித்ததும் அந்த சகோதரிகளை எம்.ஜி.ஆர். அழைத்தார். அவர்களது நிலைகண்டு பரிதாபப்பட்டு, ‘‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? சொல்லுங்கள்’’ என்றார். அந்தப் பெண்கள், ‘‘ஐயா, வறுமையால் கஷ்டப்படுகிறோம். எங்களுக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தால் நாங்க தொழில் செஞ்சு பிழைச்சுக்குவோம். அதுக்கு உதவி பண்ணுங்க’’ என்று கெஞ்சும் குரலில் கேட்டனர். உடனே, இரண்டு தையல் மெஷின்களை எம்.ஜி.ஆர். வாங்கி வரச் சொன்னார்.

    தன்னிடம் உதவி கோருபவர்கள் தெளிவாகச் சொல்லாவிட்டாலும் அவர்களது தேவை என்ன என்பதை சரியாகப் புரிந்துகொண்டு உதவுபவர் எம்.ஜி.ஆர்.! தையல் மெஷின்கள் வாங்கி வருமாறு சொன்ன மறுவிநாடி ஓடோடிச் சென்ற உதவியாளர்களை அழைத்து, ‘‘காலில் தைக்கும் மெஷின் இல்லை. கையில் தைக்கும் மெஷின்’’ என்று தெளிவாகச் சொல்லி அனுப்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டு புது தையல் மெஷின்கள் காரில் வந்து இறங்கின. அதுவரை காத்திருந்து தன் கையாலேயே அந்தப் பெண்களுக்கு தையல் மெஷின்களை எம்.ஜி.ஆர். வழங்கினார்.

    அதைப் பெற்றுக்கொண்ட சகோதரி கள் இருவரும் கண்ணீருடன், ‘‘ஐயா, நீங்க தெய்வம்யா’’ என்றனர். அவர்களது கண்ணீரைத் துடைத்த எம்.ஜி.ஆர்., ‘‘நான் மனுஷன்தாம்மா; தெய்வம் இல்லே. இந்த நிலைமையிலும் உழைச்சுப் பிழைக்கணும்னு நினைக்கிற நீங்க நல்லா இருக்கணும்!’’ என்று சொல்லி வாழ்த்திவிட்டு, அவர்களுக்கு தலா ரூ.2,000 அன்பளிப்பாகக் கொடுத்தார்!......... Thanks...

  7. #1164
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அருமை !! கழக !! மன்ற !!தொழிற்சங்கம் !! மகளிர் !! மாணவ !!மாணவிகளே !!
    இளஞர்களே !! அனைவருக்கும் !! நமது வாழும் கண்கண்ட தெய்வம் அவர்களும் !! அன்னை ஜானகி ராமசந்திரன் !! அவர்களின் நல்லாசிகளோடு !! அனைவருக்கும் !! பணிவான வணக்கங்கள் பல !! நண்பர்களே !! கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் அதாவது 06-9-1984ல் எனது திருமண நாள் நமது மக்கள் திலகம் !! பொன்மனச்செம்மல் !! கண்கண்ட தெய்வம் !!பாரதரத்தினா !! மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் !! வடசென்னை மாவட்தில் வசிக்கும் !! நினைத்ததை முடிப்பவன் திரு. எம். ஜி. ஆர். மன்ற செயளாளர் !! ஒம்பொடி ,சி.பிரசாத் சிங் ஆகியஎனக்கும் !! வடஆற்காடு மாவட்டம் !! !! வாலாஜாபேட்டை கழக ஆரம்பகாலம் !! 1972ல் கழக நகர அமைப்பாளர் காலம் சென்ற தெய்வதிரு.J.லோகநாதன் சிங் அவர்களின் இளைய தங்கை செல்வி J. ஜோதி பாய்க்கும்!! நமது கண்கண்ட தெய்வம் அவர்களும் !! பெரியோகளின் ஒப்புதலோடும் !! நடைபெற்ற எனது திருமணம் பற்றிய சில சுயரசமான பசுமையான!! பொண்ணான !!நிகழ்வுகள் உங்கலோடு !! கலந்துக்கொள்ள விரும்பி !! என் நினைவுகளின் இந்த பதிவு !!

    அருமை கழக மன்ற மறவர்களே !!
    எனது வாழ்கையின் வழிகாட்டியும்!!
    அன்னையும் !! அண்ணியாரும் !! மான ஜானகி ராமசந்திரன் அவர்களின் !! உடன் பிறந்த தம்பியும்மான !! தற்பொழுது காலம் சென்ற அண்ணன் !! தெய்வதிரு .P. நாராயணன் ( எ ) மணி அவர்களுடன்தான் !! பெரும்பாலமும் !! இருந்து கழகபணிகள் !! மிக !! மிக !! மிக !! சுறுசுறுப்பாக !! நான் செயல்படுவதை !! நேரில் பல முறைகள் !! பல இடங்களில் !! கழக பணிகள் ஆற்றுவதை பார்த்து !! 1973 முதல் !!ஒம்பொடி சி, பிரசாத் சிங் ஆகிய என்னை !! திரு.அண்ணன் அவர்கள் !!என்னை அவர்களுடன் இணைத்துக்கொண்டார் ,!! அன்றுமுதல் இன்றுவரை !! திரு . அண்ணன் அவர்களின் குடும்பத்தில் !! உள்ள அனைவருடனும் !! நல்லபெயர் பெற்று !! விஸ்வாசியாகவே இருந்து வருகின்றேன் !! திரு. மணிசார் அவர்கள் !! நமது கண்கண்கண்ட தெய்வம் அவர்கள் !! செல்லும் அனைத்து மாவட்டங்களுக்கும் !! என்னையும் அழைத்து செல்வார் !! மேலும் என்னை !! கேரளாவில் உள்ள !! நமதுகண்கண்ட தெய்வம் அவர்களின் முதல் மனைவி !! அண்ணியார் இல்லத்திற்கு !! என்னை அழைத்து சென்றார் !! மேலும் அன்னை ஜானகி ராமசந்திரன் அவர்களின் இல்லத்திற்கும் !! அடியேனை அழைத்து சென்றார் !! தந்தை பெரியார் அவர்கள் !!வைக்கத்தில் முதல் போராட்டம் நடைபெற்ற இடம் !! மிக பெரிய நாலுமூலைகள் கார்னர் சந்திக்கும் இடமாகும் !! இந்த நாலு கார்னர்கள் இடமும் அன்னை ஜானகி ராமசந்திரன் அவர்களுடையது !! அந்த இடத்தில் தந்தை பெரியார் அவர்களின் !! கம்பிரமான முழுஉருவ சிலை வைக்க !! இந்த இடத்தை அன்னை ஜானகி ராமசந்திரன் அவர்கள் !! அந்த நாளிலில் இலவசமாக !! கொடுத்தார் நண்பர்களே !!

    நண்பர்களே !! எனது திருமண விழா
    வை பற்றிய !! . நிகந்த செய்திகள் !! வாழ்கையில் மறக்கமுடியாத நிகழ்வுகளை !! உங்களோடு நானும் கலந்துக்கொள்ள விரும்புகின்றேன் !!

    நண்பர்களே !! முதன் முதலில் திரு.மணிசார் முலம் !! அன்னை ஜானக்கி ராமசந்திரன் அவர்களிடம் !!எனது திருமணம் செய்தி தெரிவித்தேன் !! அன்னை ஜானகி ராமசந்திரன் அவர்கள் மிகவும் சந்தோஷ பட்டு !! ( செச்சா ) என்றால் நமது கண்கண்ட தெய்வம் அவர்களிடம் !! கூறி 06-9-1984 திருமணதேதியை தெய்வம் அவர்களிடம் தெரிவித்தேன் !! உடனே திருமணத்தை நடத்து !! நான் வருகின்றேன் !! என எனது கண்கண்ட தெய்வம் ஒப்புதல் தந்துவிட்டார் !! எனக்கு அணையை உடைத்துக்கொண்டு வரும் !!வெள்ளம் போல் !! மனதில் ஒரே குஷிதான் !!. உடனே என் விட்டிற்கு வந்து எனது தாயாரிடமும் !! ,அண்ணன்களிடமும் !! எனது அக்காவிடமும் !! நடந்த விஷ்யத்தை தெரிவித்தேன் !! எனது விட்டில் யாருமே முதலில் நம்பவில்லை !! எனது தாயார் மட்டும் நம்பினார் !!மறுநாள் மிண்டும் திரு,மணிசார் இல்லம்சென்றேன் அவர்மனைவி திருமதி சாந்திஅம்மா என்னசந்தோஷாமா என என்னை கேட்டார்கள் !! எனக்கு ஆனந்த கண்ணிர் வந்துவிட்டது !! அவர்களின் இல்லத்தில் காலை டிபின் !!,பகல் சாப்பாடும் !!சாப்பிட்டேன் !! அன்று மாலையில் !! "தோட்டத்தம்மா " இங்கு வருவார்கள் !! அந்தசமயம் வரும்படி திருமதி சாந்தி நாராயணன் அவர்கள் கூறினார்கள் !! அவர்கள் கூறியபடியே மாலையில் !! நூங்கம்பாக்கத்தில் உள்ள திரு,நாராயணன் சார் அவர்களின் இல்லம் சென்றேன் !! சிறிது நேரத்தில் !! அன்னை ஜானகிராமசந்திரன் அவர்கள் அங்கு வந்தார்கள் !! நான் ஒய்வுஅறையில் அமர்ந்திருந்தேன் !! 1/2 மணி நேரம் கழித்து !! என்னை அழைத்து திருமணம் என்ன ஏற்பாடுகள் செய்தாய் !! என " தோட்டத்தம்மா " கேட்டார்கள் !! எனக்கு யார் இருக்காங்க அம்மா என்று தயங்கியவாறு கூறினேன் !! நான் ( செச்சா ) அவர்களிடம் கூறுகின்றேன் என்றுகூறியவாறே காரில் புறப்பட்டார் !!

    மறுநாள் என்னை திரு. மணிசார் அவர்கள் !! ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து சென்றார் !! முக்கிய மத்திய மாண்புமிகு அமைச்சர் ராமாவரம் தோட்டத்திற்கு வந்ததால் !! தெய்வதரிசினம் அன்றுகிடைக்க வில்லை !! திருமதி.அன்னை ஜானகிராமசந்திரன் அம்மா அவர்களை பார்த்து பேசிவிட்டு திரு,மணிசார் அவர்களின் இல்லம் வந்தோம் !! திரு,மணிசார் அவர்கள் நமது கண்கண்ட தெய்வம் அவர்களும் தோட்டத்ம்மா அவர்களும் !! இருவரும் உள்ள கருப்பு வெள்ளை புகைப்படம் வழங்கினார் !!

    உடனே நான் சினிமா போஸ்டர்கள் டிசைன்கள் செய்பவர் !! Dr,உபால்டு அவர்களிடம் T நகர் அவரது அலுவலகத்தில் சந்ந்தித்து எனது திருமணத்திற்கு முதலமைச்சர் வருவதால் உடனே டிசைனை செய்து அப்புரூல்க்கு ( அனுமதிக்காக ) செய்துகொடுக்கும்படி தெரிவித்த இதோ இப்பவே என்ற வாறு " கண்கண்ட தெய்வங்கள் தலைமையில் மணவிழா அழைப்பிதழ் " என மிக சிறப்பாக டிசைன் செய்து கொடுத்தார் !!

    அந்த திருமணம் பத்திரிகையின் முகப்பு அட்டையை !! நான் நூங்கம்பாகத்தில் உள்ள திரு,மாணிசார் இல்லம் சென்று எனது திருமணம்பத்திரிகையின் முகப்பை காட்டினேன் !! அவரின் மகள்கள் திருமதி.லதாராஜேந்திரன் அவர்களும் !! திருமதி,கீதா மதுமோகன் அவர்களும் !! திருமதி ,சுதா விஜெயகுமார் அவர்களும் !! ராமசந்திரன் என்கின்ற நடிகர் திபன் அவர்களும் !! செல்விபானு அவர்களும்!! திருமதி சாந்திநாராயணன் அவர்களும் !! திருமண பத்திரிகையின் டிசைனை பார்த்து !! அச்சரியபட்டு !! ஆனந்தபட்டு !! சந்தோஷாபட்டார்கள் !!

    அன்று மாலையில் மைலாபூர் உட்லண்ஸ் HOTEL ல் !! நடைபெறும்!! நடிகர் திரு ராமராஜன் நடிகை நளினி அகியோரின் !!
    திருமணவரவேற்ப்பில் !! கலந்துக்கொண்ட !! நமது கண்கண்ட தெய்வம் அவர்களிடம் !! என்னை திரு,மணிசார் அவர்கள் அழைத்துசென்றார் !! நமது தெய்வய் அவர்கள் என்னை பார்த்த வினாடியே !! அங்கு இருந்தபுல்தரையில் !! திரு, தெய்வம் அவர்களிடம் !! திருமண முகப்பு டிசைனை முதலில் காட்டினேன் !!திரு,தெய்வம் அவர்கள் அந்த டிசைனை பார்த்து என்னைபார்த்து என்னது இது என என்னிடம் கேட்டார் !! தாமதம் செய்யாமல் உடனே !! நான் பதராமல் தைரியமாக அண்ணே இது எனது திருமணபத்திரிகை வாழ்நாள் முழுவதும் நிங்கள் இருவரும் எனக்கு கண்கண்ட தெய்வங்கள் !! ஆகவே இதற்கு அண்ணன் அவர்கள் ஒப்புதல் தரவேண்டும் என வேண்டினேன் அதர்கு திரு, தெய்வம் அவர்கள் என்னை பார்த்து இது அவசியம் தேவையா ?? என கேட்டார் உஎனக்கு உள்ளத்தில் உதறல் ஏற்பட்டு விட்டது அதைகண்ட திரு,தெய்வம் அவர்கள் !! எனது தோல் பட்டையில் கைவைத்து சர் போட்டுக்கொள் என்றார் !! உடனே பதற்றத்துடன் நன்றி கூறி நானும் திரு,மணிசாரும் திரு,தெய்வம் அவர்கள் கிளம்பியபின் !!
    நாங்களும் சென்றோம் !!

    மறுநாள் திரு,தெய்வம் அவர்கள் !!காலையில் கோட்டைக்கு செல்லும் முன்பே !! ராமாலரம் தோட்டத்திற்கு என்னை திரு,மணிசார் அவர்கள் அழைத்து சென்றார்கள் !! தோட்டத்தம்மா அவர்களை சந்தித்து திருமணமண்டபத்தை பற்றி பேசினோம் !!உடனே திரு,தெய்வத்திடம் !!தோட்டத்தம்மா திருமணமண்டபம் பற்றி தெரிவித்தார் !! திரு, R M V அவர்களை பார்க்க ச்சொன்னார் நமது திரு,தெய்வம் அவர்கள் !!

    அன்றுமாலையில் !! நான் மட்டும் !! அண்ணன் மாண்புமிகு R M V அவர்களை !! சந்தித்து !! நமது திரு,தெய்வம் அவர்கள் கூறியதை !! திருமணமண்டம் பற்றி !! திரு,தெய்வம் அவர்கள் !! ஐயா அவர்களை பார்க்க சொன்னார் என்றேன் !! தலைவர் என்னிடம் பேசினாராய்யா !! நான் திரு. A V M சரவணன் அவர்களிடம் பேசியபிறகு !! தலைவர் அவர்களிடம் கூறுகின்றேன் !! என்றார் மாண்புமிகு அண்ணன் R M V அவர்கள் !! சரிஎன்று திரு,மாணிசார் அவர்களிடம் கூறிவிட்டு எனது இல்லம் சென்றேன் !!

    இதற்கிடையில் நடந்த சம்பவங்களை !! எனது உறவினர்களிடமும் !! நண்பர்களிடமும் !! தெரிவித்தேன் !! எனது உறவினர்களும் நண்பர்களும் !! நம்ம ஏரியாவுக்கு வந்தால் !! சிறப்பாக இருக்கும் !! என என்னை உசுபேற்றி விட்டார்கள் !! மாறுநாள் மாலையில் மாண்புமிகு அண்ணன் R M V அவர்களை சந்தித்தேன் !! அப்போழுது மாண்புமிகு அண்ணன் R M V அவர்கள், மைலாபூரில் உள்ள A V M ராஜேஸ்வரி திருமணமண்டபம் ஒதிக்கியதாகவும் நான் மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் தெரிவித்தேன் என என்னிடம் அண்ணன் ஆர் எம் வி அவர்கள் கூறினார் !! இந்த விஷ்யத்தை திரு.மாணிசார் அவர்களிடம் கூற நூங்கம்பாகம் சென்றேன் !! அதற்குள் திரு,மணிசார் அவர்களுக்கு தோட்டத்த்மா முலம் விஷ்யம் தெரிந்துகொண்டார் அதை என்னிடம் கூறினார் !! எனக்கு எது தேவை என்றாலும் !! முதலில் திரு,மணிசார் அவர்களிடம்தான் கூறுவேன் !!

    நான் முதலில் எனது உறவினர்களும் !! நண்பர்களும் !! கூறிய விஷ்யத்தை திரு, மணிசார் அவர்களிடம் தெரிவித்தேன் !! மேலும் அண்ணன் அவர்களிடம் நான் கூறியது !! நான் வசிக்கும் வார்டில் உள்ள !! ஸ்ரீதாதாவாடி என்கின்ற !! மார்வாடிகளின் கோயில் உள்ள இடத்தில் !! மிக பெரிய திருமணமண்டபம் உள்ளது என்றேன் !! அந்த திருமணமண்டபம் எனக்கு கிடைத்தால் !! நமது திரு, தெய்வம் அவர்கள் வந்தால் !! எனக்கும் பெறுமையாக இருக்கும் என்றும் !! நான் வசிக்கும் பகுதியில் உள்ள பாமரபொதுமக்களும் !! நமது திரு, தெய்வம் அவர்களை கண்குளிர பார்பார்கள் எனகூறினேன் !! அதற்கு திரு,மணிசார் அவர்கள் நான் இந்த விஷ்யத்தை தோட்டத்தும்மா அவர்களிடம் கூறுகின்றேன் என்றார் !!

    மறுநாள் காலையில் திரு, மணிசார் அவர்களை பார்த்தேன் !! மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு C.பொன்னையன் அவர்களைபார்க்கும்படி ராமவரம் தோட்டத்திலிருந்து திரு மணிசார் அவர்கள் முலம் தகவல் அறிந்த நான் மாண்புமிகு அண்ணன் C,பொன்னையன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன்!! அப்பொழுது தனது இலாக லேட்டர்பேடில் !! சென்னை மானகர காவல்த்துறை திரு,ஆணையாளர் அவர்களுக்கு !! ஒரு சிபாரிசு கடிதம் என்னிடம் கொடுத்து அனுப்பிவைத்து !! தொலைபேசியிலும் !! பேசியதால் மூன்றுநாள் கழித்து !! எனக்குநான் வசிக்கும்பகுதியில் உள்ள !! ஸ்ரீதாதாவடி கோயில் திருமணமண்டபத்தில் !! எனது திருமணம் செய்ய அனுமதிபெற்றுத்தந்தார் !! எனகோ மிகவும் சந்தோஷம் !! எனக்கு தகவல் கிடைத்த உடன் நான் திரு,மணிசார் முலம் ராமாவரம் தோட்டத்திற்கு சென்று நன்றிகள்பல தெரிவித்தேன் !!

    பிறகு தாமதம் செய்யாமல் !! கண்கண்ட தெய்வங்கள் தலைமையில் மணவிழா அழைப்பிதழ்கள் முதன் முதலாக பலவர்ணங்களில் மல்டிகலரில் அச்சிட்டு முதல் ( Profe ) பிரதியை ராமாவரம் தோட்டத்தில் திரு,தெய்வம் அவர்களிடம் காட்டி ஒப்புதல் வாங்கினேன் !!

    திருமண பாதிரிகைகள் அனைவருக்கும் முறைபடி நேரில் கொடுத்தேன் !! முதல் திருமணபத்திரிகையை எனது கண்கண்ட தெய்வம் அவர்களிடம் முறைபடி கொடுத்தேன் !! திரு,தெய்வம் அவர்கள் பார்த்து திருப்தியடைந்து சிறித்தவாறே தலையை அசைத்தார் !! என கைகால் !! நடுக்கம் !! கலந்த !! எதோ ஒரு விதமான !! பயம் கலந்த பக்தி!! என்றே சொல்லலாம் !!

    06-9-1984 ல் எனது திருமணத்திற்குஅமைச்சர்கள் மாண்புமிகு அண்ணன் திரு K A K அவர்களும் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் Dr, H. V . ஹாண்டே அவர்களும் திரு.அனகாபுத்துர் ராமலிங்கம் அவர்களும் திரு.நடிகர் S,S,R.அவர்களும் திருமதி சுலோச்சனா சம்பத் அவர்களும் !! திரு. A.C.சண்முகம் அவர்களும் திரு.ஜேப்பியார் அவர்களும்............ Thanks...

  8. #1165
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *MGR பற்றி இதுவரை வெளியான நூல்கள் பற்றிய தொகுப்பு இங்கே...*

    தமிழ் நூல்கள்:
    ****************
    1. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977)

    2. புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980)

    3. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் புலவர். கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980)

    4. அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978)

    5. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985)

    6. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983)

    7. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979)

    8. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978)

    9. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985)

    10.எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984)

    11. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981)

    12. அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986)

    13. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983)

    14. சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984)

    15. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985)

    16. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986)

    17. எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987)

    18.அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975)

    19. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984)

    20. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983)

    21. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986)

    22. நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986)

    23. எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985)

    24. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985)

    25. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985)

    26. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984)

    27. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987)

    28. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988)

    29. அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985)

    30. சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984)

    31. இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987)

    32. நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988)

    33. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984)

    34. நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985)

    35. எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988)

    36. முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985)

    37. சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985)

    38. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985)

    39. எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988)

    40. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981)

    41. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986)

    42. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988)

    43. முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985)

    44. செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988)

    45. புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987)

    46. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988)

    47. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983)

    48. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981)

    49. உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984)

    50. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985)

    51. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987)

    52. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985)

    53. வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988)

    54. எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987)

    55. ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988)

    56. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985)

    57. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985)

    58. வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987)

    59. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987)

    60. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984)

    61. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961)

    62. தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987)

    63. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989)

    64. மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னிப் பதிப்பகம், சென்னை (1985)

    65. சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988)

    66. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978)

    67. சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987)

    68. இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985)

    69. பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985)

    70. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991)

    71. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982)

    72. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986)

    73. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988)

    74. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993)

    75. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993)

    76. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991)

    77. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991)

    78. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993)

    79. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992)

    80. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)

    81. தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978)

    82. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985)

    83. அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)

    84. வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991)

    85. அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986)

    86. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982)

    87. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010)

    88.வேதநாயகன் (ஆசிரியர் – ரவீந்திரன், வெளியீடு - சென்னை (1993)

    89.தர்மதேவன் எம்.ஜி.ஆர் வீரவரலாறு காவியம், வெற்றிச் செல்வர் எம்.ஜி.ஆர் வீர வரலாறு (வெளியீடு - ஸ்ரீ தனலட்சுமி பதிப்பகம், சென்னை)

    90.குண்டுக்கும் அஞ்சாத எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கலைமணி, வெளியீடு – தமிழ் நிலையம், சென்னை (1967)

    91.ஆயுள் பரிசு (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு - கவிப்பிரியா பதிப்பகம், சென்னை)

    92.இதயத்தில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மா.செங்குட்டுவன், வெளியீடு – வண்ணக் களஞ்சியம், சென்னை (1967)

    93.தமிழக முதல்வர் (ஆசிரியர் – சிவாஜி, வெளியீடு - அசோகன் பதிப்பகம், சென்னை)

    94.எம்.ஜி.ஆர் இதழியல் நோக்கு (வெளியீடு - சேகர் பதிப்பகம், சென்னை)

    95.அண்ணாவின் அரசு (வெளியீடு - அன்பு நிலையம், சென்னை)

    96.அண்ணாவின் பாதை (வெளியீடு – ராஜா பதிப்பகம், அருப்புக்கோட்டை)

    97.அண்ணா வழியில் எம்.ஜி.ஆர் (வெளியீடு – ஜெயா பப்ளிகேசன்ஸ், சென்னை)

    98.எதிர்ப்பில் வளர்ந்த எம்.ஜி.ஆர் (வெளியீடு – எம்.ஆர்.வி. பப்ளிகேசன்ஸ், சென்னை)

    99.எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அண்ணா அறிவாலயத்திற்குத் தடையா?

    100.வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆர்.(ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்)

    101.வரலாற்று நாயகன் (ஆசிரியர் – கரு.கருப்பையா)

    102.புரட்சித்தலைவர் (ஆசிரியர் – தேவிப்பிரியன்)

    103.யுக வள்ளல் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – சக்கரைப்புலவர்)

    104.தலைவா உன்னை யாசிக்கிறேன் (ஆசிரியர் – அடியார்)

    105. இதயதெய்வம் எம்.ஜி.ஆர்

    106.எம்.ஜி.ஆர். பதில்களின் தொகுப்பு-கண்ணதாசன் பதிப்பகம்

    107.எம்.ஜி.ஆர். திரைப்படக்கருவூலம்-இதயக்கனி வெளியீடு

    108.எம்.ஜிஆரின் வசன முத்துக்கள்-இதயக்கனி வெளியீடு

    109.எம்.ஜி.ஆர்.ஒரு சகாப்தம்-தொகுப்பாசிரியர் ஆர்.பி.சங்கரன்

    110.கோட்டையும் கோடம்பாக்கமும்-ஆரூர் தாஸ்

    111.எம்.ஜி.ஆர். 100-சபீதா ஜோசப்

    112.வாத்யார்-ஆர்.முத்துக்குமார்

    113.எம்.ஜி.ஆர்-நடிகர் முதல்வரானது எப்படி--அருணன்

    114.நான் ஆணையிட்டால்--எஸ்.கிருபாகரன்.

    115.இருவரின் கதை-எஸ்.திருநாவுக்கரசு

    116.இதய ஒலி-பழனி ஜி.பெரியசாமி

    117.எம்.ஜி.ஆர் 100-காலத்தை வென்ற தலைவர்-இந்து வெளியீடு

    118.விழாநாயகன் எம்.ஜி.ஆர். -கே.ரவீந்தர்

    119.மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்-மதுரை எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

    120.அதிர்ந்தது பூமி -எம்.பி.உதயசூரியன்

    121.என் நினைவுத்திரையில்-பி.நாகிரெட்டி

    122.வள்ளல் எம்ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு-எம்.ஜி.ஆர்.முத்து

    123.எல்லாம் அறிந்த எம்.ஜி.ர்.-எஸ.விஜயன்

    124.மறக்க முடியாத மக்கள் திலகம்--என்.சங்கர்.

    125.மக்கள் திலகமும் மனித நேயமும்-எம்.ஜி.ஆர்.முத்து

    126.மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்-ரங்க வாசன்

    127.எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்-மணவை பொன்.மாணிக்கம்

    128.மறக்க முடியாத மாமனிதர்-மணவை பொன்.மாணிக்கம்

    129..சுட்டாச்சு சுட்டாச்சு-சுதாங்கன்

    130.எம்.ஜி.ஆர். பேட்டிகள்--எஸ்.கிருபாகரன்

    131.மனிதப் புனிதர்-எம்.ஜி.ஆர்-கே.பி.ராமகிருஷ்ணன்

    132.மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்-எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

    133.சொக்கத்தங்கம் எம்.ஜி.ஆர்--பா.அங்கமுத்து

    134.தரணி கண்ட தனிப்பிறவி எ.

    135..மக்கள் திலகம் சினிமாவில் என்னை விதைத்தவர்-இயக்குநர் மகேந்திரன்

    136.எனக்குள் எம்.ஜி.ஆர். -கவிஞர் வாலி

    ஆங்கில நூல்கள் (English Books)
    ***********************************
    1.Dr.M.G.R.A.Phenomenon (Author- Dr.Jagathrakshakan, Publisher- Appolo Publications, Chennai (1984)

    2.All India Anna Diravida Munnetra Kazhagam (Author- Dr.R.Thandavan, Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984)

    3.Poems- I Call M.G.R an Angel (Author- S.Yesupatham, Publisher- Packiam Publications, Chennai (1984)

    4.Impact M.G.R.Films (Author- V.Kesavalu, Publisher- Movie Appreciation Society, Chennai (1990)

    5.The Dynamic M.G.R (Author- A.P.Janarthanam M.P., Publisher- Chennai (1978)

    6.M.G.R.-The Man and Myth (Author- K.Mohndass, Publisher- Panther Publishers, Chennai (1992)

    7.The Image Trap (M.G.R Film & Politics) (Author- M.S.S.Pandian, Publisher- Sage Publications India, New Delhi (

    8.Dr. M.G.R in Indian News Papers(Author- Dr. Mohanrajan)

    9.C.M. Speech's

    *வாழ்க புரட்சி தலைவர்*........... Thanks...........

  9. #1166
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    6.09.2019. இரவு வசந்த் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பப்பட்ட நல்லவன்வாழ்வான் திரை காவியத்தில் புரட்சிமாமன்னர் எம்.ஜி.ஆர்.அவர்களின் அலட்டல்.ஆர்பாட்டம் ...ஓங்கி கத்துதல் எதுவுமில்லாத காட்சிக்குத் தேவையானதும் , ஒருஉண்மையான மனிதன் நிலையையும், இயற்கையாக செய்த நடிகபேரசர் நமதுதலைவர் எம்ஜிஆர் அவர்களின் புகழில் அனைவருக்கும் இன்றைய நாள் நல்லதாக அமையட்டும்.......... மதுரை.எஸ் குமார்........ Thanks...

  10. #1167
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் .கண்ணதாசன்..தொடர்ச்சி...
    இல்லாத இதயங்களுக்காக இரக்கமோடு கொடுப்பவனே மேல்ஜாதி! இருப்பதை இருட்டறையில் வைத்துக்கொண்டு ஈயாதவனே கீழ்ஜாதி!

    சரி! ஜாதியை இரு பிரிவாக வகுத்துக் கொண்டோம்! பாழாய்ப் போன பூமியைப் பண்படுத்த வழி…! இதோ….! புரட்சி நடிகர் செப்பும் புரட்சி கீதம்… கவியரசர் வழி வருவதைப் பார்ப்போமே….!

    “நடப்பது யாவும் விதிப்படி என்றால்,
    வேதனை எப்படித் தீரும்?
    உடைப்பதை உடைத்து, வளர்ப்பதை வளர்த்தால்
    உலகம் உருப்படி யாகும்!”

    பார்த்தீர்களா?

    ‘பாரில் நடப்பதெல்லாம் பகவான் விதித்த விதிப்படி என்றால், இப்பாரிலுள்ள பலகோடி ஏழை மக்களின் வேதனைகள் எப்போது, எப்படித்தான் தீரும்? பொறுமை கொண்டோரே! பொறுத்தது போதும்! இனி உடைத்தெறிய வேண்டிய பத்தாம்பசலித்தனமான பழைமைகளை உடைத்தெறிந்து விட்டு, வளர்க்க வேண்டிய புதுமைகளையும், பழைமைகளையும் பாதுகாத்து வளர்த்தால் உலகமே உருப்படியான புத்துலகமாக மாறும்!’

    சரிதானா? டி.எம். சௌந்தரராஜன் உணர்ச்சிப் பெருக்கோடு பாடி, புரட்சி மனத்துள்ளலோடு புரட்சி நடிகராம் எம்.ஜி.ஆர் பாடல் காட்சியில் தோன்றி நடித்த, கண்ணதாசனின் இப்பாடல் கருத்துகளை இன்றும் காண்போர், கேட்போர் மெய்சிலிர்த்து, தம்மை மறந்து உணர்ச்சிப் பெருக்கோடு நிற்பர் என்பது உண்மையன்றோ!
    நாடு! அதை நாடு!

    ‘நாடோடி’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பி.ஆர். பந்துலு மிகச்சிறந்த தேசியவாதி.

    போர்மேகங்கள் பெரிதும் சூழ்ந்து நின்ற 1965 ஆம் ஆண்டில் தயாரிக்கப் பெற்ற படமே ‘நாடோடி’.

    எனவே இப்படத்தில் தேசிய உணர்வு பெருக்கெடுத்து ஓடும் கவியரசர் பாடல் இடம்பெற்றதில் வியப்பேதுமில்லை. புரட்சி நடிகரும் தேசிய உணர்வும், தேசப்பற்றும் மிகுந்தவர் என்பதை யாரும் மறுத்திட இயலாது.

    1962 ஆம் ஆண்டு சீனப் படையெடுப்பின் போது, இந்தியாவிலேயே யுத்த நிவாரண நிதியாக அதிகத்தொகையாம் ஒரு இலட்ச ரூபாயையும்; 110 சவரன் தங்க வாளினையும், எம்.எல்.சி. பதவிக்குக் கிட்டிய சம்பளத்தையும் தந்த தங்கமனம் படைத்த தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவரே.

    இவை தவிர தாம் நடித்த சொந்தப் படங்களை ‘எம்.ஜி.ஆர். வாரம்’ எனத் திரையிட்டு ரூபாய் 17500-ஐயும் 1962-ஆம் ஆண்டு பாதுகாப்பு நிதிக்கு ஈந்த தேசபக்தச் செம்மலே எம்.ஜி.ஆர்.

    இதுவுமின்றி முதலிலே கூறிய நன்கொடைப் பட்டியல்படி பண்டிதல் ஜவகர்லால் நேரு நினைவு நிதிக்கு 1964 – ஆம் ஆண்டு ரூபாய் இருபத்தைந்தாயிரத்தை வாரித் தந்த வள்ளலே எம்.ஜி.ஆர்.

    பட்டியல் நீளும் வண்ணம் பல மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதி, புயல் நிவாரண நிதி, வறட்சி நிவாரண நிதியெனத் தேசபக்தியுடன், கருணையுள்ளத்தோடு பல இலட்சங்களைப் பாங்குடன் ஈந்த பாரிவள்ளலே எம்.ஜி.ஆர்......

    வாழ்க தலைவரின் புகழ் என்றுமே.......... Thanks.........

  11. #1168
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ்நாடு வரலாறு தெரியாதவர்கள் பல செய்திகளை சொல்கிறார்கள். திராவிடம், திராவிட கொள்கை, திராவிடத்தை வளர்த்தவர் யார்? என்பதை எடுத்துக் கூறுவது என் கடமை. 1952-ம் ஆண்டு MGR தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் இணைந்த பிறகுதான், தி.மு.க. வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்தது.

    1952-ம் ஆண்டு MGR தி.மு.க.வில் இணையும் வரை தேர்தலில் போட்டியிடவில்லை. 1957-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலின் போது MGR குறிப்பிட்ட தலைவர்களுக்காக பிரசாரம் செய்தார். அப்போது 15 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது.

    தி.மு.க. என்ற கொடி பாமர மக்களிடம் சென்றடைவதற்கு காரணம், ‘நாடோடி மன்னன்’ திரைப்படம் தான்.MGR படத்தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கிய போது, அந்த நிறுவனத்தின் ‘லோகோ’வில் தி.மு.க.வின் இருவர்ண கொடியை இடம்பெற செய்தார். அந்த லோகோவை வெளியிட தணிக்கைத்துறை தடைசெய்தது. அந்த தடையை MGR தகர்த்து எறிந்தார்.

    60 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வின் இருவர்ண கொடியை அடையாளப்படுத்தி பட்டித்தொட்டி எங்கும் MGR கொடி என்று அறிமுகப்படுத்தப்பட்டதுஅந்த இருவர்ணத்திலான 1¼ அடி துண்டை அப்போது கழுத்தில் போடுவதில் பெருமை அடைந்தோம். MGR ரின் திரைப்பட பாடலில் இருவர்ண கொடி, உதயசூரியன் பற்றி எழுதப்பட்டது.

    1962-ம் ஆண்டு தேர்தலில் 50 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 1967-ம் ஆண்டில் ஆட்சி கட்டிலில் ஏறியது. 1967-ல் ஆட்சி பிடித்ததும் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை அணிவிக்க எல்லோரும் சென்றனர். அப்போது பேரறிஞர் அண்ணா அந்த மாலையை வாங்க மறுத்துவிட்டார். இந்த வெற்றிக்கு காரணமானவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு சென்று மாலை அணிவியுங்கள் என்று அண்ணா சொன்னார்.

    அண்ணாவே 1967-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு காரணமானவர் MGR தான் என்று சொன்னதற்கு அடிப்படை காரணம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட கட்டுடல் போடப்பட்ட படம்தான் நாட்டு மக்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்று வெற்றிக்கு வித்திட்டது. பெரும்பான்மையை பெறுவதற்கு மூலக்காரணமாக MGR இருந்தார்.

    பேரறிஞர்அண்ணா தான் MGRரை சரியான முறையில் அடையாளம் கண்டவர். MGRரை இதயக்கனி என்று அழைத்தார். ஒருமுறை தேர்தலுக்காக MGR நிதி கொடுக்க வந்த போது, உன்னுடைய நிதி வேண்டாம், உன் முகத்தை மட்டும் காட்டு, 30 லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.

    பேரறிஞர் அண்ணா பொதுக்கூட்டங்களுக்கு சென்றுவரும் நேரங்களில், அவருடைய காரில் இருக்கும் கொடியை அங்குள்ள பாமர மக்கள் பார்த்து, பேரறிஞர் அண்ணாவிடம், MGR கட்சியா? என்று கேட்கும் அளவுக்கு MGR மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். அதை பேரறிஞர் அண்ணா பெருமையாகவே கருதினார்.

    படித்தவர்கள் மத்தியில் என் எழுத்தும், பேச்சும், கருத்தும் சென்றடைகிறது என்றால், படிக்காத பாமர மக்களிடம் என்னுடைய கருத்தை, சிந்தனையை கொண்டு சென்றவர் என்னுடைய தம்பி MGR என்று பேரறிஞர் அண்ணா சொல்வார். தி.மு.க. வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகிறவர் MGR என்றும் பேரறிஞர் அண்ணா சொல்வார். அவரால் திராவிட இயக்கம் வளர்ந்தது என்று அண்ணா மிகத் தெளிவாக பதிவு செய்தார்.

    1971-ல் கருணாநிதி தலைமையில் ஆட்சி நடந்தபோது, அப்போது தேர்தல் வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக பட்டித்தொட்டி எங்கும் பிரசாரம் செய்தார். இந்த ஆட்சிக்கு உத்தரவாதம் தருகிறேன், தவறு நடந்திருந்தால் அதை திருத்தியமைக்க போராடுவேன் என்று சொன்னார். என்னை நம்பி வாக்களியுங்கள் என்றும் கேட்டார். அதை தமிழக மக்கள் ஏற்றார்கள் என்பதற்கு வெளிப்பாடு, 183 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது. அதன்பின்னர், தி.மு.க.வை விட்டு MGR வெளியேறி, 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார்.

    அதன்பிறகு, 1972-ம் ஆண்டு முதல் 1987 வரை MGRரை யாராலும் வெற்றிபெற முடியவில்லை. எத்தனை சூழ்ச்சிகள், சதிகள் செய்தாலும் MGR உயிரோடு இருக்கும் வரை தமிழக மக்கள் தலைவர் MGR தான் என்று நாட்டு மக்கள் நிரூபித்தனர். திராவிட இயக்கத்தை வளர்த்தவர் MGR தான்.

    பேரறிஞர் அண்ணா நாட்டின் முதலமைச்சர் ஆக உட்காருவதற்கு காரணமாக இருந்தார். அதன்பிறகு கருணாநிதி, ஜெயலலிதாவும் ஆட்சியில் அமருவதற்கு காரணம் MGR தான். இப்போது எடப்பாடி.K.பழனிச்சாமி தமிழ்நாடு முதலமைச்சர் ஆக இருப்பதற்கும் MGR தான் காரணம். MGR இல்லை என்றால் திராவிடம் என்ற பேச்சு தமிழகத்தில் இருந்திருக்காது.......... Thanks...

  12. #1169
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மேற்கல்வி கடவுள் எம் ஜி ஆர்
    எந்த முதல்வரும் சாதிக்காத கல்வி புரட்சி புரட்சி தலைவரின் சாதனை ஆதாரம் இதோ
    1 பசி இன்றி கல்வி கற்க்க சத்துணவு திட்டம்
    2 புத்தகம் வாங்க முடியாதவர்க்கு புத்தகம்
    3 மண்ணால் பல் துலக்கிய குழந்தைகளுக்கு பல்பொடி
    4 தெருவில் காலணியை கையில் தூக்கிய ஜாதி கொடுமைய நீக்க இளமையில் செருப்பு
    5 இலவச பஸ் பயணம் மாணவ மாணவிகளுக்கு
    6 கிராமத்தாரும் அனைத்து தரபினரும் மேற்கல்வி கற்க்க பள்ளியிலே ப்ளஸ் டூ
    7 மாவட்டம் தோறும் தொழிற்கல்வி
    8 உலகதர அண்ணா பல்கலை கழகம் அமைத்தார் எம் ஜி ஆர்
    9 பாரதி தாசன்பாரதியார் அன்னை தெரசா தமிழ் போன்ற அரசு பல்கலைகழகங்களை ஏற்ப்படுத்தினார் எம் ஜி ஆர்
    10 கோடிகணக்கில் இஞ்சினீர்களை உருவாக்கி உலகம் முழுவதும் தமிழ் இஞ்சினீகளை பரப்ப தனியார் பல்கலைகழகங்கள்
    11 கணணியில் தமிழ் வர பெரியார் எழுத்தை அதிகார மொழி ஆக்கினார் எம் ஜி ஆர்
    12 மெரிட் முறையில் மருத்துவம் படிக்க வைத்தார்
    13 கல்வியை பாமரர்களும் பயிலும் வகையில் எளிமை ஆக்கினார் எம் ஜி ஆர்

    மேற்கல்வி எம் ஜி ஆரால் மேன்மை அடைந்தது இன்று இந்தியாவில் அதிகம் இஞ்சினீயர்கள் மற்றும் பட்டதாரிகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்

    மேற்கல்வி கடவுள் எம் ஜி ஆர்
    எம் ஜி ஆர் புகழ் வாழ்க........ Thanks...

  13. #1170
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Tv programme *MGR Movies*
    Raj Tv 1.30 Pm *Adimaippen*
    Mega Tv 12.00 pm *Panathottam*
    Guys Enjoy your movies ! ��......... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •