Page 113 of 402 FirstFirst ... 1363103111112113114115123163213 ... LastLast
Results 1,121 to 1,130 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1121
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மறு வெளியீடுகளிலும் மாபெரும் பிரம்மாண்ட வெற்றி கண்டு கொண்டே வந்த காவியம் வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் " தேடி வந்த மாப்பிள்ளை"... தயாரிப்பாளர் பி. ஆர். பந்துலு குடும்பத்தினருக்கு அருமையான ராயல்டி வருமானம் தந்தது... " சொர்க்கத்தை தேடுவோம்" பாடல் காட்சிக்கு முன் நடிகை விஜயஸ்ரீ இடம் தலைவர் பேசும் வசனமும், நடிப்பும் அஹ்ஹா... அட்டகாசம்... பின் பாடல் காட்சியில் பாவனையும், ஸ்டைலும் செம சூப்பர்...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1122
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  4. Likes orodizli liked this post
  5. #1123
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அசால்ட் சாதனை படைத்த அந்த காலத்து தல எம்ஜிஆர்... பாக்ஸ் ஆபீசில் பண்ணிய மரணமாஸ் சம்பவம்!!

    By Sathish K

    Chennai, First Published 29, Aug 2019, 4:33 PM IST

    HIGHLIGHTS

    தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், போல் விஜய் - அஜித் ரசிகர்கள் இடையேயும் எப்போதுமே மோதலும், சண்டையும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அதுவும் இன்றைய டிஜிட்டல் உலகில், டிரெண்டிங் சண்டை தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இன்று ட்விட்டரில் வலுக்கும் சண்டை *அப்போதே இருந்துள்ளது அதற்க்கு சாட்சி அந்தக்காலத்து தல எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து வெளியான போஸ்டரிலேயே அப்பட்டமாக தெரிந்தது.

    தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், போல் விஜய் - அஜித் ரசிகர்கள் இடையேயும் எப்போதுமே மோதலும், சண்டையும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அதுவும் இன்றைய டிஜிட்டல் உலகில், டிரெண்டிங் சண்டை தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இன்று ட்விட்டரில் வலுக்கும் சண்டை *அப்போதே இருந்துள்ளது அதற்கு சாட்சி அந்த காலத்து தல எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து வெளியான போஸ்டரிலேயே அப்பட்டமாக தெரிந்தது.

    எம்.ஜி.ஆர் இயக்கி, நடித்த நாடோடி மன்னன் *தமிழ் சினிமாவிற்கும் சரி, எம்.ஜி.ஆருக்கும் சரி மிகப்பெரிய திருப்புமுனை தந்த படம். இது வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், பல நடைமுறை யதார்த்தங்களையும் அரசியல் சித்தாந்தங்களையும் மக்கள் மத்தியில் பேசவைத்த *படம்.

    பல்வேறு சிக்கல்கள் பிய்த்தல்களுக்கு நடுவே ஒருவழியாக 1958ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 22ஆம் நாள் வெளியான நாடோடி மன்னன், படம் ரிலீசான தியேட்டர் முழுக்க கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்தது. படமம் பிரமாண்ட வெற்றி பெற்றது. தமிழ் சினிமா ஹிஸ்ட்ரியில் நாடோடி மன்னன் பெற்ற இடத்தை இதுவரை இன்னொரு படம் இடம் பெறவில்லை என்பதே உண்மை.*

    அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த படமாக பார்க்கப்பட்டது *இந்த படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான். இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி எழுதியிருந்தனர். எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜாதேவி மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள்.*

    தோல்வி அடைந்தால் நாடோடி'- "நாடோடி மன்னன்' *வெளியானபோது எம்.ஜி.ஆர். உதிர்த்த வார்த்தைகள் *தமிழக திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகி, முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர்கள் எம்.ஜி.ஆர். போஸ்டரைப் பார்த்து சொன்ன வார்த்தைகள்: தலைவா நீங்க நாடோடியும் அல்ல. மன்னனும் அல்ல. "மன்னாதி மன்னன்" அப்போது ரசிகர்கள் *வார்த்தைகள் பொய்க்கவில்லை. நாடோடி மன்னன், வெற்றி பெற்று எம்.ஜி.ஆரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

    அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில், *எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் இணைந்து *எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தார்கள். *1 கோடியே 80 லட்சத்தில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபீசில் 11 கோடி வசூலைக் குவித்தது *சம்பவத்தை நிகழ்த்தியது. இந்த வசூல் எம்.ஜி.ஆரின் அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணையாக இருந்தது.*

    நாடோடி மன்னன் படம் வெளியாகி 60 ஆண்டுகளாகிற நிலையிலும் அந்தப் படத்தின் வெற்றிச் சப்தம் மட்டும் இன்னும் ஓயவே இல்லை என்று தான் சொல்லணும், இப்போதும் சமீபத்தில் *தொழில்நுட்பத்தில் நாடோடி மன்னன் தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் மீண்டும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. வெளியான முதல் நாளே ஹவுஸ் புஃல்லாகி பலர் பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்துள்ளனர். பாக்ஸ் ஆபீஸிலும் புதிய படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. தற்போது ரஜினி, அஜித் படங்களை போலவே 60 ஆண்டுகளுக்கு முன் வெளியான போதும், அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த படங்களிலேயே வசூலில் முதல் இடத்தைப் பிடித்ததும் இந்தப் படம்தான். கோடி ரூபாய் வசூலை ஈட்டிய முதல் தமிழ் படம்!*

    தமிழக சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக என பல சுவாரஷ்ய சம்பவங்கள் இடம்பெற்றது. பிரம்மாண்டமான செட்டுகள், கண்ணதாசனின் எழுச்சியூட்டும் வசனங்கள், விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள், சந்திரபாபு உள்ளிட்டோரின் நகைச்சுவைக் காட்சிகள், 'தூங்காதே தம்பி தூங்காதே' போன்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் எந்தக் காலத்திலும் நம்மைத் தூங்க விடாத பாடல்கள்... என பல சிறப்பம்சங்கள் இந்தப் படத்திற்கு உண்டு. *

    நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறீர்கள், நான் மக்களிடம் இருந்து மாளிகையைப் பார்க்கிறேன்' *"என்னை நம்பிக் கெட்டவர்கள் கிடையாது - நம்பாமல் கெட்டவர்கள்தான் உண்டு' *ஒரு எம்.ஜி.ஆர். நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரை மற்றொரு எம்.ஜி.ஆர் சுற்றி வந்தபடியே பேசுகிற வசனம் பயங்கர க்ளாப்ஸ் அள்ளும். தொழில்நுட்பம் அவ்வளவாக வளராத அந்தக் காலத்திலேயே இரட்டை வேடக் காட்சியை அசால்ட்டாக எடுத்திருந்தார் தல எம்ஜிஆர்.

    கடைசியாக க்ளைமேக்ஸ் காட்சி. சூப்பரோ... சூப்பர்... என எத்தனை தடவை சொன்னாலும் தகும். தீவைச் சூழ்ந்திருக்கும் வெள்ளம். அந்த வெள்ளத்தின் மீது கயிற்று நடைப்பாலத்தில் எம்.ஜி.ஆரும், பி.எஸ்.வீரப்பாவும் சண்டை போடுகிறார்கள். இவருக்கு அவர், அவருக்கு இவர் சளைத்தவர் இல்லை என்பது போல விறு விறு சண்டை. திடீரென கயிற்று பாலம் அறுந்துவிடுகிறது. தொங்குகிற கயிற்றை பிடித்துக்கொண்டு எம்.ஜி.ஆரும், சரோஜா தேவியும் தப்பிக்கிறார்கள். அப்பாடா...இக்காட்சியின்போது திரையரங்கில் இருப்பவர்களுக்கு உயிர்போய் உயிர் வருகிறது. இப்படி கண்முன்னே பார்ப்பதைப் போல பயங்கர மாஸாக இருக்கும்.

    டபுள் எம்.ஜி.ஆர், *பல டிவிஸ்ட்டுகள், பல ரொமான்ஸ் சீன்கள், இதற்கு நடுவில் வயிறு குழுங்கச் சிரிக்க வைத்த சந்திரபாபுவின் காமெடிகள், மாஸ் ஃபைட் சீன்கள் எம்ஜி ஆர் வைத்திருக்கும் வாளை விட கூர்மையான வசனங்கள் என கொட்டிக்கிடந்த பிரமாண்டங்களால் 3 மணி நேரம், 20 நிமிஷம், 17 செகண்ட் படம் ஓடியும் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்ற சோகத்தில் சீட்டை விட்டு எழுந்து செல்லும் திருப்தியடையாத ரசிகனின் முணுமுணுப்பே படத்தின் மாஸ் வெற்றியை கொடுத்தது.

    இந்த பிரமாண்ட வெற்றியை அறிவிக்கும் போஸ்டரில் "போலிகளுக்கு புத்தி புகட்டும் புள்ளிவிவரங்கள் இரண்டே வாரங்களில் 15 தியேட்டர்களில் 10,35,665 *பேர் கண்டுகளித்தனர். மொத்தம் வசூலான தொகை ரூபார் 6,295,79.88 "ஓஹோ என்று ஊர் முழுவதும் சொல்கிறார்கள் நல்லவர்களால் பாராட்டப்படும் வெற்றிச் சித்திரம்" என போஸ்டர் வெளியிட்டிருந்தார்கள்.*

    இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன சனிக்கிழமையை தியேட்டரில் ஈ ஓட்டுவார்கள், மூணு நாள் படம் ஓடினாள் வெற்றி விழா, தங்க செயின், காரு, பைக் கிப்ட்டாக கொடுக்கும் இந்த நிலையில்,அப்போதெல்லாம் ரிசர்வேஷன் சிஸ்டம் கிடையாது,முன் கூட்டியே டிக்கெட் வாங்குவதோ இயலாத காரியம், ஏகப்பட்ட தடவை டிக்கெட்
    கிடைக்காமல் திரும்பி, சுமார் ஒன்றரை மாதம், இரண்டு மாதங்கள் கழித்து பார்த்ததாக தாத்தாக்கள் சொல்வார்கள்.*

    அந்த காலத்தில் வசூலில் தாறுமாறு பண்ண நாடோடி மன்னனை, அப்போதைய பிரமாண்டத்தை மிஸ் பண்ண இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு, *60 ஆண்டுகளுக்குப் பிறகு, டிஜிட்டல் தொழிற்நுட்பத்தில் புதுப்பித்து வெளியிட்டனர். *எதிர்பார்த்ததைப் போலவே *ரீ-ரிலீசிலும் எம்.ஜி.ஆர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு 25 நாட்கள் வரை வெற்றிபெற்று சாதனை படைத்தது. *நாடோடி மன்னன்' படத்தில், நாடாள வந்தால் ஏழைகளுக்காக எல்லாம் செய்வேன்' என்று எம்.ஜி.ஆர்., வசனம் பேசினார். அவர் முதல்வர் ஆனதும் படத்தில் சொல்லிய அத்தனையும் மக்களுக்கு செய்தார். ஒரு அரசியல்வாதி எளிதாக முதல்வராகிவிடலாம். ஆனால், ஒரு நடிகர் முதல்வராவது கஷ்டம். எம்.ஜி.ஆர்., தமிழகத்தை ஒரு ஆண்டு அல்ல இரண்டாண்டு அல்ல, பதினொரு ஆண்டுகள் ஆண்டார். மக்களுக்கு எவ்வளவோ உதவிகளை செய்தார்.

    Last Updated 29, Aug 2019, 4:33 PM IST

    MGRNadodi Mannan......... Thanks to Asia Net...

  6. #1124
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று 30-08-2019 முதல் தாராபுரம் - வசந்தா. DTS தினசரி 4 காட்சிகள் மக்கள் திலகம் தயாரித்த பிரம்மாண்ட வசூல் காவியம் "அடிமைப்பெண்" வெற்றி பவனி.......... Thanks...

  7. #1125
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம் ஜி ஆர் குறள்
    எம் ஜி ஆர் வாத்தியாராய் தன் தத்துவபாடல் வழி கூறாத கருத்தே இல்லை எனலாம்

    தெய்வம்
    பெற்று எடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவா அவள் பேசுகின்ற தெய்வம் அல்லவா

    வளர்ப்பு
    எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்பதிலே

    கல்வி
    கற்றவர் சபையில் உனக்காக தனி இடம் தரவேண்டும்
    உன்னை பெற்றதினால் மற்றவராலே போற்றி புகழ வேண்டும்

    உழைப்பு
    உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

    வாழும் முறை
    ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆடிபாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்

    உண்மை
    உண்மை என்பது தெய்வத்தின் மொழி ஆகும்

    நாடு
    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி

    கடவுள்
    ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே கடவுள் என்று கூறுவோம்

    ஜாதி
    ஒரு தாய் மக்கள் நாம் என்போம் ஒன்றே எங்கள் குலம் என்போம்

    தலைவன்
    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டில் நீதி மறையட்டுமே தன்னால வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் கலங்காதே

    திருட்டு
    திருடாதே பாப்பா திருடாதே சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தெரிந்து தெரியாமலும் மீண்டும் வராமல் பார்த்துக்கோ

    பெண்கள்
    இப்படி தான் இருக்கணும் பெண்கள்
    இங்கிலீஸ் படிச்சாலும் இன்ப தமிழ் நாட்டிலே

    தவறான ஆட்சிக்கு
    ஒரு நாள் இந்த நிலைமைக்கு மாறுதல் வரும் அதை மாற்ற தேர்தல் வரும்

    புகழ்
    இருந்தாலும் மறைந்தாலும் இவர்போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

    இன்னும் மனித வாழ்வின் அத்தனை கட்டங்களிலும் வாழ பாமரனின் குறளாக எம் ஜி ஆர் பாட்டு உள்ளது பக்தி பாடலாய் தினம் காலை இல்லங்கள் தோறும் ஒலிக்கட்டும் நல்ல சமூகம் உருவாகட்டும்

    வாழ்க எம் .ஜி .ஆர் ., புகழ்........... Thanks...

  8. #1126
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலையாய அறிவு ஜீவி ஒன்று கண்டு பிடிச்சிருக்கு... என்னன்னு... புரட்சி நடிகர் ஒரு ஸ்டண்டு நடிகர் ன்னு... அட பொறம்போக்குகளா! ஏன் நீங்கல்லாம் வாய்ப்பு வசதிகள் இருந்தும் தேறாம (உருப்படாம) பொன்னேங்கன்னு இப்ப தெரியுது, அட... நடிகர் நடிகை அப்டிங்கிற கூத்தாடிகள் என சொல்லப்பட்ட தொழிலாளர்கள் வம்சத்துக்கே மரியாதை... மதிப்பு... பெருமை...பெருமிதம் உண்டாங்கினது யாரால?!... ஒரு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., அவர்களால் மட்டுமே... அதை தெரிந்து அறிந்து ( இனிமேலாவது) பேசுங்க... எழுதுங்க... Thanks...

  9. #1127
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் நம்மை விட்டு பிரிந்து 31 ஆண்டுகள் கடந்து விட்டாலும் 1988 முதல் 2019 இன்று வரை அவர் புகழ் தினமும் வளர்ந்து கொண்டே செல்லுகிறது . உலக வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை எம்ஜிஆர் ஒருவருக்கே கிடைத்துள்ளது

    1988 முதல் 2019 எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்த பெருமைகள் - சாதனைகளின் சிகரம் .

    1988ல் மத்திய அரசின் ''பாரத ரத்னா '' விருது .
    மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடம்.
    மெரினாவில் எம்ஜிஆர் அருங்காட்சியகம் .
    மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு தூண்.
    அண்ணா சாலையில் எம்ஜிஆர் சிலை
    எம்ஜிஆர் நினைவு இல்லம் .
    ராமாவரம் எம்ஜிஆர் தோட்டம்
    சென்னை - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்ட்ரல் ஸ்டேஷன்
    சென்னை - கோயம்பேடு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் .
    சென்னை தரமணி எம்ஜிஆர் பிலிம் சிட்டி
    சென்னை - எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழகம்
    சென்னை - மாதவரம் எம்ஜிஆர் நிகர் பல்கலை கழகம் .
    சென்னை போரூர்- பூந்தமல்லி எம்ஜிஆர் சாலை .
    எம்ஜிஆர் ஸ்டாம்ப் வெளியீடு
    எம்ஜிஆர் உருவம் பதித்த நாணயம் .
    1989ல் ஒன்று பட்ட அதிமுக - இடைத்தேர்தலில் வெற்றி
    1989ல் அதிமுக பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி
    1991ல் அதிமுக ஆட்சி .
    2001ல் அதிமுக ஆட்சி.
    2011ல் அதிமுக ஆட்சி .
    2016ல் அதிமுக ஆட்சி .
    2019ல் அதிமுக ஆட்சி தக்க வைத்தது .
    2000ல் ராஜ் டிவி நடத்திய 2000ல் ஒருவன் - எம்ஜிஆர் நிகழ்ச்சி
    2016ல் விஜய் டிவி நடத்திய மன்னாதி மன்னன் எம்ஜிஆர் நிகழ்சி
    பாராளுமன்றத்தில் எம்ஜிஆர் சிலை .
    எம்ஜிஆர் புகழ் பாடும் உரிமைக்குரல் - இதயக்கனி மாத இதழ்கள்
    எம்ஜிஆர் புகழ் பாடும் எம்ஜிஆர் தொடர் விழாக்கள்
    ஆல்பட் அரங்கில் நடந்த நாடோடிமன்னன் விழாவில் பங்கு பெற்ற முன்னணி அந்த கால நடிகர்கள் - நடிகைகள் .
    கலைஞர் டிவி நடத்திய மறக்க முடியுமா ? எம்ஜிஆர் சிறப்பு ஒளி பரப்பு .
    டிஜிட்டல் - ஆயிரத்தில் ஒருவன் சென்னையில் வெள்ளிவிழா .
    டிஜிட்டல் - அடிமைப்பெண் 300 அரங்கில் வெற்றி பவனி .
    டிஜிட்டல் - ரிக்ஷக்காரன்
    டிஜிட்டல் - நினைத்ததை முடிப்பவன்
    டிஜிட்டல் - எங்கவீட்டுப்பிள்ளை
    எம்ஜிஆர் படங்கள் மறு வெளியீடுகளில் முதலிடம் - கோவை
    எம்ஜிஆர் படங்கள் மறு வெளியீடுகளில் 2வது இடம் - மதுரை .3வது இடம் - சென்னை
    எம்ஜிஆரின் 73 பழைய படங்கள் மறு வெளியீடுகளில் வெற்றி பவனி தொடர்ந்தது .இனி தொடரும் .
    புதிய தமிழ் படஙக்ளில் எம்ஜிஆர் பாடல்கள் - எம்ஜிஆர் காட்சிகள் இடம் பெற்றது .
    திரை உலக பிரமுகர்கள் எம்ஜிஆரை நினைவு கூர்ந்து வருகிறார்கள் .
    ஜெயா டிவியில் தினமும் எம்ஜிஆர் பாடல்கள் 1 மணி நேரம் ஒளிபரப்புகிறார்கள் .
    உலகம் முழுவதும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது .
    திராவிடர் கழகம் - எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது .
    மதிமுக வைகோ - காமராஜர் அரங்கில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடினார் .
    வேலூர் வி ஐ டி கல்லூரி வளாகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது .
    எம்ஜிஆர் உலக பேரவை மாநாடு வேல்ஸ் வளாகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது .
    எம்ஜிஆர் சிலையை ஏ.சி. சண்முகம் நடிகர் ரஜினி வைத்து எம்ஜிஆர் நிகர் பல்கலை கழகத்தில் திறந்தார் .
    பி ஆர் ஓ -பொன்விழா நடத்திய நிகழ்ச்சியில் எம்ஜிஆரை பாராட்டிய நடிகர்கள் - நடிகைகள் .
    டிஜிட்டலில் வெளிவர தயாராக உள்ள எம்ஜிஆர் படங்கள் . அன்பே வா . அலிபாபாவும் 40 திருடர்களும் .மாட்டுக்கார வேலன் .
    எம்ஜிஆரின் காவல்காரன் படம் வண்ணத்தில் உருவாக உள்ளது
    டாக்டர் பெரியசாமி - எம்ஜிஆர் புத்தகம் வெளியிட்டார் .
    டாக்டர் ஹண்டே - எம்ஜிஆர் புத்தகம் வெளியிட்டார் .
    இந்து பத்திரிகை வெளியிட்ட காலத்தை வென்ற எம்ஜிஆர் புத்தகம் . 25000 புத்தகங்கள் விற்று சாதனை .
    பம்மல் சாமிநாதன் வெளியிட்ட எம்ஜிஆர் பட ஆல்பம் .
    உரிமைக்குரல் இதழ் வெளியிட்ட எம்ஜிஆர் ஆல்பம் .
    சத்யா வெளியிட்ட எம்ஜிஆர் ஆல்பம் ,
    31 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் எம்ஜிஆர் பற்றிய புத்தகங்கள் .
    பெங்களூரில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா தலைமயில் நடிகை சௌகார் ஜானகி ஜானகி கலந்து கொண்ட எம்ஜிஆர் விழா .
    பெங்களூரில் நடிகை சரோஜாதேவி கலந்து கொண்ட எம்ஜிஆர் விழா .
    சமூக வலை தளங்களில் எம்ஜிஆர் பற்றிய செய்திகள் முதலிடம் வகிக்கிறது .
    வல்லமை - இனைய தளத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டுரை போட்டி - மிகவும் அருமை .
    எம்ஜிஆர் - REMEMBERED தொடர் கட்டுரை 7 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது .
    தமிழகத்தில் எல்லா ஊடகங்களும் ,பத்திரிகைகளும் எம்ஜிஆர் -100 சிறப்பித்தார்கள் .
    அமெரிக்கா , இங்கிலாந்து , சவூதி ,மலேசியா , சிங்கப்பூர் , இலங்கை போன்ற நாடுகளில் எம்ஜிஆர் -100 கொண்டாட்டம் .
    மய்யம் இணைய தளத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற தலைப்பில் விரைவில் ஒரு லட்சம் பதிவுகளை கடக்க போகிறது .
    எம்ஜிஆர் ரசிகர்கள் பல தலை முறைகள் கடந்து புதிய தலை முறை எம்ஜிஆர் ரசிகர்களோடு இணைந்து எம்ஜிஆரை நேசித்து கொண்டாடி வருகிறார்கள் .
    டிஜிட்டல் -எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் இந்த ஆண்டில் எதிர்பார்க்கலாம் .
    சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் எம்ஜிஆர் பெயர் சுழன்று கொண்டு வருகிறது .
    எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலை ஒட்டு வாங்கி நிலைத்து விட்டது .
    எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் 2022ல் பொன்விழாவை நிறைவு செய்கிறது .
    மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு அன்றும் வெற்றி . இன்றும் வெற்றி . என்றென்றும் வெற்றி ............... Thanks.........

  10. #1128
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் " திரையுலக சாதனைகள் " புரட்சித்தலைவரின் அரசியல் பிரவேசத்தால் நடிக்க முடியாமல் நின்று போன பல படங்களின் பெயர்கள் மட்டும்.

    60 வயதில் ஒரு நடிகர் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த படங்களின் எண்ணிக்கை 25ஐ தாண்டுகிறது என்றால், இதுவும் ஒரு புரட்சி ! ஒரு உலக, கின்னஸ் சாதனையே !

    இந்த படங்கள் அனைத்தும் புரட்சித்தலைவரின், 1972க்கு பிறகு தீவிர அரசியல் பிரவேசத்தால், கைவிடப்பட்ட படங்கள் என்பதை திர்யின் பார்வையாளர்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் !

    துரதிருஷ்டம் செய்த நம் கண்கள், திரையில் காண முடியாத, சாதனைகளின் சிகரம் பொன்மனசெம்மலின் பொற்காவியங்கள் :

    1. நம்மை பிரிக்க முடியாது :

    நாஞ்சில் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படவிருந்த படம். ஒரு சர்க்கஸ் காரியின் சாகஸமிக்க வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு அமைந்த இந்த படத்தில் தலைவருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. உரையாடல் சொர்ணம் எழுத இயக்க்விருந்தது ப. நீலகண்டன்.

    2. மரகத சிலை :

    ஆடலழகி ஒருத்தியின் வாழ்க்கையை மையமாக கொண்டு, குமரி பிலிம்ஸ் தயாரிப்பில், மக்கள் திலகத்துடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் மஞ்சுளா மற்றும் லதா. வெளி நாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற திட்டமிட்டிருந்தனர்.

    3. வாழு வாழ விடு :

    எம். ஜி. ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த இப்படத்திலும் லதா மற்றும் மஞ்சுளா ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். விளம்பரத்துடன் .நின்று போன படம்.

    4. ஆண்டவன் கட்டிய ஆலயம்

    எம். ஜி. ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த மற்றொரு படம் இது. தத்துவக் கருத்துக்களை உள்ளடக்கிய இப்படத்தில் நாயகியர் முடிவாகாத நிலையில், படம் தயாரிப்பது கைவிடப்பட்டது.

    5. “ கொடை வள்ளல்"

    திருமகள் என்ற படத்தை தயாரித்தளித்த கோவை கோவிந்தராஜன், தனது நந்தகுமார் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படவிருந்த அடுத்த படம் : “ கொடை வள்ளல்" இப்படத்தில் ஒன்பது மாறுபட்ட கதா பாத்திரங்களில் பொன்மனச்செம்மல் நடிப்பதாக இருந்தது. புரட்சித் தலைவருடன், லதா, மஞ்சுளா உட்பட 9 நாயகியர் நடிக்கவிருந்தனர். உரையாடல் ஏ.கே. வில்வம் எழுத ப நீலகண்டன் இயக்க விருந்தார்.

    6. தந்தையும் மகனும்

    தேவர் பிலிம்ஸ் சார்பில், எம். ஏ. திருமுகம் இயக்கத்தில், எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பத்மினியும், கே. ஆர். விஜயாவும் நடிக்க விருந்தனர். " தினத்தந்தி " நாளிதழில் முழு பக்க விளம்பரத்துடன் வெளிவந்தது

    7. மக்கள் என் பக்கம் :

    தயாரிப்பாளர் - இயக்குனர் என். எஸ். மணியம் மற்றும் முசிறிப்புத்தன் இனைந்து எம். எம். மூவிஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த இப்படத்தில் ஜோடியாக நடிக்க நடிகைகள் முடிவாக இருந்த நிலையில் புரட்சித் தலைவரின் அரசியல் பிரவேசத்தால் கைவிடப்பட்டது. இயக்கம் என். எஸ். மணியம்.

    8. நானும் ஒரு தொழிலாளி :

    சித்ரயுகா கண்ணையன் தயாரிப்பில், புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில், மக்கள் திலகமும், நடிகை லதாவும் நடித்த ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டது. .

    9. சமூகமே நான் உனக்கே சொந்தம் :

    லட்சுமி பிலிம்ஸ் சார்பில், இயக்குனர் கே. ராகவன் இயக்கத்தில், லதா ஜோடியாக மக்கள் திலகம் சில காட்சிகளில் நடித்தார். வழக்கம் போல் இந்த படமும் புரட்சித் தலைவரின் அரசியல் பிரவேசத்தால் கைவிடப்பட்டது.

    10. தங்கத்திலே வைரம் :

    இயக்குனர் கே. எஸ். ஜி. என்றழைக்கப்படும் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், சித்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த திரைப்படம். மக்கள் திலகத்துடன் முதன் முறையாக கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இணைந்து தரவிருந்த படம் இது. திரு. கே. எஸ். கோபாலகிருஷ்ணன், நடிகர் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து "குலமா குணமா", நடிகர் ஜெமினி கணேசனை வைத்து "பணமா பாசமா", நடிகர் ஜெய்ஷங்கரை வைத்து "உயிரா மானமா" போன்ற படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. " தினத்தந்தி " நாளிதழில் முழு பக்க விளம்பரத்துடன் வெளிவந்தது.

    11. புரட்சிப்பித்தன் :

    ரங்கநாயகி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் டி. ஆர். ராமண்ணா அவர்கள் தயாரிக்க விருந்த இப்படத்தில் பொன்மனச்செம்மல் புதுமையான கதா பாத்திரத்தில் தோன்றும் காட்சி சில படம் பிடிக்கப்பட்டது. ஜோடியாக நடிகை லதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். " தினத்தந்தி " நாளிதழில் முழு பக்க விளம்பரத்துடன் வெளிவந்தது.

    12. மண்ணில் தெரியுது வானம் :

    உதயம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இதயம் பேசுகிறது மணியனும், வித்வான் வே. லட்சுமணனும் இணைந்து தயாரிக்க விருந்த இப்படத்தில் நடிகை லதா அல்லது புதுமுக நடிகை ஜோடியாக நடிக்கலாம் என்று பேசப்பட்டது.

    13. தியாகத்தின் வெற்றி (முன்னர் வைக்கப்படிருந்த பெயர் " அமைதி ")

    மக்கள் திலகம் பங்கு பெறும் சில காட்சிகள், ஜோடியாக நடிக்கும் லதாவுடன் சேர்ந்து எடுக்கப்பட்டன. கே. சங்கர் இப்படத்தினை இயக்குவதாக இருந்தது.

    14, உங்களுக்காக நான் :

    செந்தில் மூவிஸ் சார்பில் ஜெமினி கணேசன் - பத்மினி நடித்த "தேரோட்டம்" படத்தினை தயாரித்த வி. டி. அரசு தனது அடுத்த தயாரிப்பாக புரட்சித் தலைவர் ராணுவ கேப்டனாக நடிக்கும் "உங்களுக்காக நான்" படத்தை தயாரிக்க விருந்தார்.

    15. எல்லைக்காவலன் :

    விளம்பர அறிவிப்புடன் நின்று போன மற்றொரு படம் இது. இந்த படத்தினையும் எம். ஜி. ஆர். பிச்சர்ஸ் சார்பில் தயாரிக்க திட்டமிருந்தனர்.

    16. கேப்டன் ராஜு :

    " இன்று போல் என்றும் வாழ்க " காவியத்தை தயாரித்த சுப்பு புரொடக்ஷன்ஸ் தங்களது அடுத்த தயாரிப்பாக " கேப்டன் ராஜு" படத்தை தயாரிக்கவிருந்தனர். இதற்கான ஆதாரபூர்வமான அறிவிப்பும் வெளியாயிற்று. தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டையில், விளம்பரமும் செய்திருந்தனர் சுப்பு புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினர்கள் திரு. கருப்பையா மற்றும் வி. டி எஸ். லஷ்மண் ஆகியோர்.

    17. எங்கள் வாத்தியார் :

    " என் அண்ணன் " வெற்றிக்காவியத்தை தொடர்ந்து வீனஸ் பிச்சர்ஸ் சார்பில் திரு. கோவிந்தராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி தயாரிக்கவிருந்த அடுத்த படம் " எங்கள் வாத்தியார் ". இதில், மக்கள் திலகத்துடன் நடிகை ஜெயலலிதா தோன்றும் சில வெளிப்புறப்படப்பிடிப்பு காட்சிகள் (வைகை அணை என்று கருதுகிறேன்) படமாக்கப்பட்டன.

    18. கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு :

    " உலகம் சுற்றும் வாலிபன் " வெற்றிக் காவியத்தை தொடர்ந்து, எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் சார்பில் அடுத்த தயாரிப்பாக " கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு" என்ற படத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டது. இந்த படத்தில், முதன் முறையாக, மக்கள் திலகத்துடன் நடிக்க நடிகை ஜெயசுதா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்பது பலரும் அறியாத செய்தி.

    19. கங்கை முதல் கிரெம்ளின் வரை :

    இந்திய - ஆஸ்திரேலிய கூட்டு தயாரிப்பில் உருவாக விருந்த படம் இது. இது குறித்து மேற்கொண்டு ஏற்பாடுகளை செய்ய ஆஸ்திரேலிய பிரபல இயக்குனர் ஜான் மெக்காலம் சென்னை வந்து நம் ஒப்பற்ற இதய தெய்வம் புரட்சித்தலைவரையும் சந்தித்து பேசினார். செய்தித்தாள்களில் இது பற்றிய செய்தி பிரசுரமானதில் இருந்து தமிழ் திரை உலகினர் மத்தியில் ஒரு புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டது.

    20. நினைத்ததை முடிப்பவன் காவியத்தை தொடர்ந்து, ஓரியண்டல் பிக்சர்ஸ் நிறுவனத்தாரின் அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நம் மக்கள் திலகமே ! விளம்பர அறிவிப்புக்களுடன் நின்று போன படங்களில் இதுவும் ஒன்று.

    21. அண்ணா பிறந்த நாடு :

    ஜெயப்பிரதா கம்பைன்ஸ் சார்பில், ஒப்பனையாளர் பீதாம்பரம் (இயக்குனர் பி. வாசு அவர்களின் தந்தை) தயாரிப்பில் உருவாகவிருந்த இப்படத்தின் விளம்பரத்துக்காக புரட்சித் தலைவர் அவர்கள், வழக்கறிஞர் வேடத்தில் அருமையான ஸ்டைலான போஸ் அளித்து அசத்தியிருநத்தார். அப்போதைய நாளிதழ்களில் இந்த புகைப்படம் வெளிவந்து, பரபரப்பை ஏற்படுத்தியது.

    22. நல்லதை நாடு கேட்கும் :

    பிரபல மேக்கப்-மேன் நாராயணசாமி அவர்கள் தயாரிப்பில், இயக்குனர் கர்ணன் இயக்கத்தில், நடிகை பத்மபிரியா ஜோடியாக நடிக்க சில காட்சிகள் டமாக்கப்பட்டன. பின்னர், இந்த படம் திரு. ஜேப்பியார் அவர்களால் தொடரப்பட்டு, வெள்ளித்திரைக்கு வந்தது.

    23. ஆளப் பிறந்தவன் :

    விளம்பரத்துடன் கை விடப்பட்டது. எம். ஜி. சக்கரபாணி அவர்களுடன் வேறு ஒரு நிறுவனம் இணைந்து தயாரிப்பதாக விருந்தது. மக்கள் தலைவரின் அரசியல் பிரவேசத்தால், இந்த படமும் தயாரிப்பிலிருந்து கைவிடப்பட்டது.

    24. இதுதான் பதில் :

    எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய இரண்டு பாடல்களுடன் பதிவு செய்யப்பட்ட இப்படம், புரட்சித் தலைவரின் அரசியல் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை சம்பந்தப்படுத்தி, அன்றைய ஆளுங்கட்சினருக்கு பதிலடியாக, சவாலாக திகழவிருந்தது. பொன்மனசெம்மலின் தீவிர அரசியல் ஈடுபாடு காரணமாக தயாரிப்பு பின்னர் கைவிடப்பட்டது.

    25. உன்னை விட மாட்டேன் :

    சிவாஜி கணேசன் நடித்த இளைய தலைமுறை படத்தை தயாரித்த ஜி. கே. தர்மராஜன் தனது அடுத்த படத்தை ஜி. கே. பிலிம்ஸ் சார்பில் புரட்சி தலைவரை வைத்து தயாரிக்க திட்டமிருந்தார். இப்படத்துக்காக, இசை ஞானி இளைய ராஜா இசையமைப்பில் ஒரு பாடல் பதிவானது. இதில் மக்கள் திலகத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகை சத்யகலா.

    26. வேலுத்தேவன் :

    மோகன் புரொடக்ஷன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் மோகன் ராம் அவர்கள் தயாரிப்பதாக இருந்த படம் "வேலுத்தேவன்". இப்படத்துக்காக, " தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் " என்று மக்கள் திலகம் பாடும் பாடல் காட்சியும் எடுக்கப்பட்டது. இந்த காட்சி, பின்னர், தனது தயாரிப்பில் உருவான " காலத்தை வென்றவன் " காவியத்தில் இடம் பெறச் செய்தார்.

    27. இமயத்தின் உச்சியிலே :

    விளம்பர அறிவிப்புடன் நின்று போன படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று.

    28. " பைலட் ராஜா "

    தயாரிப்பாளர் - இயக்குனர் ஏ. பி. நாகராஜன் அவர்களின் சி. என். வி. மூவிஸ் சார்பில் " நவரத்தினம் " காவியத்தை தொடர்ந்து, " பைலட் ராஜா " என்ற பெயரில் மக்கள் திலகத்தை வைத்து தயாரிக்கவிருந்தார். விளம்பர அறிவிப்புடன் நின்று போனது.

    29. அண்ணா நீ என் தெய்வம் : நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்து வெளிவந்த "எங்கா மாமா" படத்தினை அடுத்து, ஜே. ஆர். மூவிஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட அண்ணா நீ என் தெய்வம், மக்கள் திலகத்தின் நடிப்பில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர், நடிகர் திரு.பாக்கியராஜ் அவர்கள் தொடர்ந்து "அவசர போலிஸ் 100" என்ற புதிய தலைப்பிட்டு நடித்து வெள்ளித்திரைக்கு கொண்டு வந்தார்.

    குறிப்பு : மேற்கண்ட படங்களை தவிர,

    1. அப்போதைய பிரபல விநியோகஸ்தர் சுந்தர்லால் நஹாதா அவர்கள் தனது நஹாதா புரொடக்ஷன்ஸ் சார்பில் மக்கள் திலகத்தை வைத்து படம் ஒன்றை தயாரிக்க அவரை அணுகி, ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில், அன்றைய ஆட்சியாளர் கலைஞர் திரு. கருணாநிதி அவர்களின் மிரட்டலால் (நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ என்பது தெரியவில்லை) இத்திட்டம் கைவிடப்பட்டது.

    2. அதே போன்று, இந்தி மொழியில் வெற்றி பெற்ற, நடிகர் ராஜேஷ் கன்னா நடிப்பில் உருவான "பேவார்ச்சி" என்ற திரைப்படத்தினை தழுவி தமிழில் மக்கள் திலகத்தை வைத்து "சமையல் காரன்" என்ற தலைப்பில், ஏ. ஏல். சீனிவாசன் அவர்கள் படம் தயாரிக்கவிருந்தார். ஆட்சியாளரின் மிரட்டலால் கைவிடப்பட்ட படங்களில் இதுவும் அடக்கம்.

    3, நம் இதய தெய்வம் 1972ல் தனிக்கட்சி தொடங்கும் முன்பு, ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ. வி. எம். மெய்யப்ப செட்டியார் அவர்கள், அன்பே வா வெற்றிக்காவியத்தை தொடர்ந்து, மக்கள் திலகத்தை கதாநாயகனாக கொண்டு புதிய படம் ஒன்றை தயாரிக்க முற்பட்டார். இப்படத்தில் அவருக்கு இணையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை ஜெயலலிதா. அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களுடன் கொண்ட நல்லுறவு காரணமாகவும், தொடர்ந்து தயாரிப்பில் ஈடு பட்டால் ஒரு வேளை கலைஞர் கருணாநிதி அவர்களின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தின் காரணமாகவும், செட்டியார் அவர்கள் இந்த பட திட்டத்தை கை விட்டார்.

    4. மேற்கூறிய படங்களில் சில பாடல் காட்சிகளுடனும், சில நடிப்புக் காட்சிகளுடனும், சில விளம்பர அறிவிப்புக்களுடனும், தொடர முடியாமல், நின்று போயின............ Thanks...

  11. #1129
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை மாவட்டம் நத்தம் சென்ட்ரலில் நாளை முதல் (31/08/2019)வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர்.இரு வேடங்களில் கலக்கலாக நடித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
    தகவல் உதவி .மதுரை நண்பர் திரு .எஸ்.குமார்........ Thanks...

  12. #1130
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #நினைத்தது #நடந்தது...

    #அட்வான்ஸ் #வாழ்த்துக்கள் #லதாம்மா

    கட்சியில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர். விசுவாசிகளுக்கு முக்கியத்துவம் தருவதன் மூலம்தான் வலிமையடைய முடியும் எனவும் கருதுகிறார் எடப்படி பழனிச்சாமி.

    அந்த வகையில், கட்சிக்கு ஒரு பெண் பிரபலம் தேவை என நினைக்கும் அவர், திரையுலகில் ஜெயலலிதாவுக்கு மாற்றாக புரட்சித்தலைவரால் அடையாளம் காட்டப்பட்ட லதாவை மீண்டும் பரபரப்பு அரசியலுக்கு கொண்டு வந்து அவர் மூலம் எம்.ஜி.ஆர்.விசுவாசிகளை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளார்.

    அதற்கு அச்சாரமாக, வெளிநாட்டிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் திரும்பியதும், லதாம்மாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கி எம்.ஜி.ஆர். விசுவாசிகளை ஒருங்கிணைக்கும் அசைன்மெண்ட் அவரிடம் தரப்படலாம் ‘’ என்கிறார்கள் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள்......

    திரு.பொன்னையன் அவர்கள் புரட்சித்தலைவரின் நம்பிக்கைக்குரியவர்...மூத்த தலைவர்...
    திரு பொன்னையன் அவர்களின் காணொளியை பதிவு செய்துள்ளேன்...
    Please watch...

    https://www.nakkheeran.in/special-ar...adi-palanisamy........... Thanks............

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •