Page 280 of 402 FirstFirst ... 180230270278279280281282290330380 ... LastLast
Results 2,791 to 2,800 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2791
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த ஞாயிறு முதல்

    திருப்பூர் k s திரையரங்கில்

    ரிக்*ஷாக்காரன்

    நேற்று முதல்

    தாராபுரம்

    சத்யாவில்

    நினைத்ததை முடிப்பவன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2792
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு முறை காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின்
    இல்லத்தில் ஒரு விசேஷம்.

    எம்.ஜி.ஆர்..சிவாஜி உள்ளிட்ட அனைவரும் அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார்கள்.

    எஸ்.எஸ்.ராஜேந்திரன்.அவரது மனைவி நடிகை விஜயகுமாரியும் சென்று இருக்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது மக்கள் வெள்ளம் கார் நின்ற இடத்திற்க்கு யாரும் திரும்பி வர முடியவில்லை.

    எம்.ஜி.ஆர் மட்டும் தனது கார் அருகே வந்துவிட்டார் .விஜயகுமாரி கூட்ட நெரிசலில் சிக்கி விட்டார் உடனடியாக தனது பாதுகாவலர்கள் மூலம் அவரை மீட்டு தனது காரில் அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்க்கு வந்து விட்டார்.

    அது எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கும்...விஜயகுமாரிக்கும் திருமணம் நடந்து முடிந்த சமயம்..

    புரட்சி தலைவர் ...ஜானகி அம்மாவிடம் சொல்கிறார்..

    " நம்ம வீட்டு பொண்ணு கல்யாணம் ஆகி முதன் முதலாக நம்ம வீட்டுக்கு வந்திருக்கு.." என்று.

    உடனே ஜானகி அம்மா விஜயகுமாரியின் நெற்றியில் குங்குமம் வைத்து ஒரு தாம்பளத்தில் பட்டு புடவை ஒன்றையும்...பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் தாய் வீட்டு சீதனமாக வைத்து தருகிறார்.

    ஒரு தடவை விஜயகுமாரியை எம்.ஜி.ஆருக்கு கதாநாயகியாக ஒரு தயாரிப்பாளர் நடிக்க வைக்க நினைக்கிறார்...எம்.ஜி.ஆர் மறுத்து விடுகிறார்..
    " விஜயகுமாரி எனக்கு தங்கை போன்றவர் அவருடன் நான் ஜோடியாக நடிக்க முடியாது' என்று சொல்லி விட்டார்.

    எம்.ஜி.ஆர் தலைவரல்ல
    ஒரு மகாமனிதர்
    Last edited by ravichandrran; 19th March 2020 at 03:39 AM.

  4. Likes orodizli liked this post
  5. #2793
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றைய 18.03.2020 "தினமலர் " வாசகர்கள் கடிதம் மூலம்

    தமிழர்கள் கட்டுரையில் சில துளிகள் ..

    1. இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு பின்னரும் தமிழனாக பிறக்காமல் ..தமிழனுக்காக ..தமிழுக்காக வாழ்ந்த இந்த மனிதர் M .G .R பற்றி தமிழர்கள் பேசுவார்கள்
    ..எழுதுவார்கள் .
    .கட்டுமரம் இன்னும் சில ஆண்டுகளில் மறக்க படுவார்

    2. MGR. ன் முடி தொப்பியில் ஒரு முடி தூசியின் அளவுக்கு கூட ரஜினியை ஒப்பிட முடியாது .. அப்படி ஒப்பீடு செய்பவர் MGR.ஐ பற்றி அறியாதவராகவே இருக்கமுடியும் ..MGR.தன்வாழ்வைவையும் ..சொத்துக்களையும் ,ஏன் அணைத்து வருவாய்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தவர் .. அவரைப் மற்றவர்களுடன் ஒப்பிடுவது அறிவீனம் ...

    3.எம் ஜி ஆருடன் யாரையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. பொது மக்கள் ஆதரவு அவருக்கு இருந்த மாதிரி யாருக்கும் அமையாது. முயலை விட்டு காக்கை பிடிப்பது போன்று தான்......... Thanks.........

  6. #2794
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

  7. #2795
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    .......... Thanks...

  8. #2796
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ... Thanks......

  9. #2797
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ``எம்.ஜி.ஆர் கொடுத்த வீடு... யாருக்கும் கொடுக்க மாட்டேன்!" திருவல்லிக்கேணி குள்ளம்மாள் பாட்டியின் கதை - https://www.vikatan.com/news/miscell...mal-paati.html......... Thanks...

  10. #2798
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய காலை வணக்கம்..!!

    #எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்

    சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.

    சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !

    இது தான் திமுகவை மக்களிடம் முழுவதுமாக கொண்டு சென்றது என்று அண்ணா அடிக்கடி சொல்லுவார்..!!!... Thanks......

  11. #2799
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 103 வது*மனித நேய*விழா,1970ம் ஆண்டில்*வெளியான*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.*திரைக்காவியங்களின்* பொன்விழா*
    ----------------------------------------------------------------------------------------------------------------

    , சென்னை*தி.நகர்* சர்* பி.டி.தியாகராயர் அரங்கில்*கடந்த*ஞாயிறு ( 15/03/20)* அன்று*காலை*11 மணி முதல் இரவு 9 மணி வரை* உரிமைக்குரல் மாத*இதழ் சார்பில்*திரு.பி.எஸ். ராஜு*தலைமையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*103 வது*மனிதநேய*விழா மற்றும் மாட்டுக்கார வேலன், என் அண்ணன் ,தலைவன் ,தேடிவந்த*மாப்பிள்ளை, எங்கள் தங்கம் திரைக்காவியங்களின் பொன்விழா நிகழ்ச்சி வெகு விமரிசையாக அனுசரிக்கப்பட்டது .* நிகழ்ச்சியில் , கவியரங்கம் , பொன்விழா மலர் வெளியீடு , பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி, சிறப்பு*விருந்தினர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி புகழுரை*ஆகியவற்றுடன்*இனிதே*நிறைவுற்றது.*


    காலை*11 மணி அளவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*திருஉருவ*படம் மேடையில்*திறந்து வைக்கப்பட்டது .* குத்துவிளக்கேற்றி*, பூஜைகள், ஆராதனைகள் செய்து* கவிஞர் திரு.முத்துலிங்கம்*, திரு.எம்.ஏ.முத்து (மக்கள் திலகத்தின் உடை அலங்கார நிபுணர் ) ஆகியோர் வழிபட , உள்ளூர், மற்றும் வெளியூர் பக்தர்கள்*தொடர்ந்து பூஜைகள் செய்து வழிபட்டனர் .


    பின்னர், பிரபல*பத்திரிகையாளர் திரு.துரை கருணா*அவர்கள் அனைவரையும்*வரவேற்று , நிகழ்ச்சி நிரலை*அறிவித்தார் .அதன் பின் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை*புகழ்ந்து கவியரங்கம் நடைபெற்றது .* நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டம், கூத்தா*நல்லூர்*திரு.முகமது*அஷ்ரப்*, திருமதி சாந்தி, சேலம், திரு.பாரதி சொல்லரசன் ,சேலம், விழுப்புரம்*வளவனூர் திரு.இரா.முருகன், திரு.விஸ்வநாதன், திண்டுக்கல், திரு.அருகன் அடியார், ஆரணி, திரு.கவிதை மைந்தன், மதுரை, திரு.கவிராயர் கேசவன், திரு.கவிக்குமரன் , சென்னை*ஆகியோர்*பங்கேற்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு*புகழ்மாலை*சூட்டினர்*


    கவியரங்கத்தை தொடர்ந்து, மாட்டுக்கார வேலன், என் அண்ணன் , தலைவன், தேடிவந்த*மாப்பிள்ளை, எங்கள் தங்கம் ஆகிய படங்களின் பொன்விழா மலரை*கவிஞர் திரு.முத்துலிங்கம்*வெளியிட திரு.எம்.ஏ.முத்து அவர்கள் பெற்றுக் கொண்டார் . கவியரங்கத்தில் பங்கு பெற்றவர்களுக்கும், கவிஞர் திரு, முத்துலிங்கம், திரு.எம்.ஏ . முத்து* ஆகியோருக்கும் பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசுகள்*வழங்கப்பட்டன .


    பிற்பகல் 1 மணியளவில் உணவு இடைவேளை விடப்பட்டது . விழாவிற்கு*வந்திருந்த அனைவருக்கும் , தி.நகர் , பாண்டி பஜார், பாலாஜி*பவனில்*மதிய*உணவு அளிக்கப்பட்டது .**


    பிற்பகல் 2 மணியளவில் நடிக*மன்னன் எம்.ஜி.ஆர். படங்களில் இருந்து முக்கிய*காட்சிகள், வசனங்கள், பாடல்கள்*பக்தர்களுக்காக மேடையில்*சிறிய*திரையில்*ஒளிபரப்பு செய்யப்பட்டது* பிற்பகல் 3 மணியளவில்* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நீடித்த*புகழுக்கு*காரணம்*கொடை*உள்ளமா* அல்லது* தமிழ் பற்று உள்ளமா* என்கிற தலைப்பில்*பட்டி மன்றம் நடைபெற்றது . நிகழ்ச்சியில் , பேராசிரியர் திருமதி மல்லிகா, திரு.சிந்தை வாசன் ஆகியோர்* கொடை*உள்ளம் என்ற தலைப்பிலும், திரு.இரா. முருகன், விழுப்புரம், திருமதி* சந்தியா* தமிழ்செல்வம்**ஆகியோர்*தமிழ் பற்று உள்ளம்தான்*என்ற தலைப்பிலும் வாதிட்டு பேசினார்கள் .*நடுவராக*திரு.தாமரைப்பூவண்ணன்* அவர்கள் பொறுப்பேற்று இடையிலே*சில*பாடல்கள்*பாடி , கொள்கை வேந்தன்*எம்.ஜி.ஆர். அவர்கள் திரையுலகிலும், தன் ஆட்சி காலத்திலும்* தமிழுக்கு*சிறந்த*தொண்டாற்றினார்*என்று பல உதாரணங்களை சுட்டிக்காட்டினார் ,* தஞ்சையில் தமிழ் பல்கலை*கழகம்*(ஆயிரம் ஏக்கரில்*), பெரியாரின்*எழுத்து சீர்திருத்தம், கொடைக்கானலில் அன்னை தெரசா*பெண்கள்*பல்கலை*கழகம், மதுரையில்*ஐந்தாவது உலக தமிழ் மாநாடு, போன்ற பல திட்டங்கள்*.செயல்படுத்தினார் ., தன்* வாழ்நாளில்* இளமை பருவத்தில் இருந்து , இறுதிவரையில்*கொடை உள்ளம் கொண்டு* பலபேர்*வாழ்க்கையில்*ஒளியேற்றினார் . விளம்பரங்கள் இல்லாமல் அவர் செய்த உதவிகள் எண்ணற்றவை. பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, நடிகர்*சோ*போன்றவர்கள்* .இதை*சுட்டிக்காட்டி*பேசியுள்ளனர் . நடிகர்*சோ ஒருமுறை* பேசும்போது,* வீட்டில்*உலை வைத்துவிட்டு, அரிசிக்காக ஒருவர் வீட்டு*வாசலில்*காத்திருப்பது என்றால் அது எம்.ஜி.ஆர். வீடாகத்தான்*இருக்கும்.* எம்.ஜி.ஆர். விளம்பரத்திற்காகத்தான் உதவிகள், நன்கொடைகள்*செய்கிறார் என்று பலர் விமர்சனம் செய்வதை நான் கேட்டதுண்டு. அதில்*எள்ளளவும் உண்மை இல்லை. வசதி படைத்தவர்கள் ,நிறைய பேர்கள் இருந்தாலும், எவ்வளவு பேர்களுக்கு*அந்த கொடை*உள்ளம் , மற்றும் உதவிகள்*செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றும் . நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் . ஆகவே, மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். செய்த தான*தருமங்கள்*தான் அவர்* உயிரை* குண்டு*சுட்டபோதும், எமன் நெருங்கியபோதும், காப்பற்றியது என்பது*அனைவரும் அறிந்த வரலாறு .என்று*நடுவர் தீர்ப்பு கூறினார் .


    மாலை 4 மணியளவில் தேநீர் இடைவேளைக்கு பிறகு ,ஸ்ரீதேவி பைன் ஆர்ட்ஸின் ஸ்ரீதர்* நவராக்ஸ் குழுவினரின்*இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது . எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்களின்*திரைப்பட பாடல்கள் கீழ்கண்டவாறு இசைக்கப்பட்டன ;


    1. ஒன்றே குலம் என்று பாடுவோம்* - பல்லாண்டு வாழ்க*
    2.உலகம் பிறந்தது எனக்காக* - பாசம்*
    3.ஆஹா நம் ஆசை நிறைவேறுமா* - தாய்க்கு பின் தாரம்*
    4.தங்க பதக்கத்தின் மேலே - எங்கள் தங்கம்*
    5.பன்சாயி , காதல் பறவைகள்* - உலகம் சுற்றும் வாலிபன்*
    6.காவேரி கரையிருக்கு* - தாயை காத்த தனயன்*
    7.போய் வா நதி அலையே* - பல்லாண்டு வாழ்க*
    8.நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு* - என் அண்ணன்*
    9.நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - நேற்று இன்று நாளை*
    10.நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் - என் அண்ணன்*
    11.இந்த பச்சைக்கிளிக்கு - நீதிக்கு தலைவணங்கு*
    12.ஒரே முறைதான் உன்னோடு - தனிப்பிறவி*
    13.காலத்தை வென்றவன்* நீ* - அடிமைப்பெண்*
    14.நினைத்ததை நடத்தியே முடிப்பவன் -* நம் நாடு*
    15.புதிய வானம் புதிய பூமி* -அன்பே வா*
    16.கல்யாண வளையோசை* - உரிமைக்குரல்*
    17.நீங்க நல்லா இருக்கோனும்* *- இதயக்கனி*
    18. கண்ணை நம்பாதே* - நினைத்ததை முடிப்பவன்*
    19.உன்னை நான் சந்தித்தேன்* - ஆயிரத்தில் ஒருவன்*
    20.வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் -தேடிவந்த மாப்பிள்ளை*
    21.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வத்தாய்*
    22.மாணிக்க தேரில் மரகத கலசம்* - தேடிவந்த மாப்பிள்ளை*
    23.இறைவா உன் மாளிகையில்* - ஒளி விளக்கு*
    24.நான் உங்கள் வீட்டு பிள்ளை* - புதிய பூமி*
    25.கண் போன போக்கிலே* - பணம் படைத்தவன்*
    26.யாரது யாரது தங்கமா* - என் கடமை*
    27.உனது விழியில் எனது பார்வை* -நான் ஏன் பிறந்தேன்*


    இரவு 7 மணியளவில் சென்னை பெருநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி அரங்கத்திற்கு வந்து , மேடையில் அவருக்கு அளித்த மரியாதைகளை ஏற்றபின் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு புகழ் பாடி பேசினார் .


    தும்பிவாடி துரைசாமி என்கிற பெயரை சைதை துரைசாமி என்று பெயர் மாற்றம் செய்தவர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். என்னை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி அழகு பார்த்தார் .* சில காலம் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிட்டியது ,அதற்கு நன்றி கடனாகவும், கடமையாகவும், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அவரது பெயர், அவர் வாழ்ந்த ராமாவரம் இல்லம் அமைந்துள்ள* மவுண்ட் பூந்தமல்லி சாலைக்கு , எம்.ஜி. ஆர். சாலை என்ற பெயர் , சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவர் பெயர்* போன்றவற்றை மத்திய , மாநில அரசுகளுக்கு முறைப்படி பரிந்துரை செய்து , அவற்றில் வெற்றியும் அடைந்தேன் .என் வாழ்வில் நான் அடைந்த பாக்கியம் ஆக இவற்றை கருதுகிறேன் .**1970ம் ஆண்டில் வெளியான நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்களின்*பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுவது பெருமையாக கருதுகிறேன் 1970ல் வெளியான படங்கள் ஒவ்வொன்றிலும் மக்கள் சிந்திக்க கூடிய , பயன்படக்கூடிய கருத்துக்கள், சமூக சீர்திருத்த வசனங்கள், வாழ்க்கை நெறிக்கு*உபயோகமான கருத்தான பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன .* மாட்டுக்கார வேலன் வெள்ளிவிழா படம் . என் அண்ணன், எங்கள் தங்கம் போன்ற படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியவை .* மேகலா பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சம்பளம் வாங்காமல் இலவசமாக நடித்து கொடுத்து*முரசொலி பத்திரிகை அலுவலகம் சிக்கலில் இருந்து விடுபட உதவிக்கரம் நீட்டி*எங்கள் தங்கம் பெரும் வெற்றி பெற்று , வசூல் ஈட்ட காரணமாக திகழ்ந்தார்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.* திரைப்படங்களில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் வழிகாட்டுதலின்படி, அவருடைய சிந்தனைகள், கருத்துக்கள் வசனங்கள், பாடல்கள், வருங்கால இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பது நமது தலையாய கடமை , அந்த வகையில் , இந்த பொன்விழா நடத்தும் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு அவர்களை*நான் மனதார பாராட்டுகிறேன் என்று பேசினார் .



    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆகிய*திரு.ஜெ.சி.டி.பிரபாகரன்* பின்வருமாறு பேசினார் .நான் லயோலா கல்லூரியில் . மாணவர் தலைவர்* தேர்தலில்*.போட்டியிட்டு சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன் , அப்போது சில மாணவர்கள் மதிய உணவு வசதி தேவை பற்றி முறையிட்டார்கள். நான் கல்லூரி முதல்வரிடம் பேசியபோது அப்படி ஒரு திட்டமில்லை என்றார். உடனே, நான்*மாணவர் நல சங்கம் ஒன்று உருவாக்கி அதன்மூலம் சில மாணவர்களுக்கு*மதிய உணவு வசதி ஏற்பாடு செய்ய முற்பட்டேன். உடனே 15 மாணவர்கள் சேர்ந்தார்கள் . பண தேவைக்கு , சில மாணவர்களுடன், ஆற்காடு இல்லத்தில் அப்போது அ. தி.மு.க. தலைவரான எம்.ஜி.ஆர். அவர்களை சந்தித்து திட்டத்தை எடுத்துரைத்தபோது , உடன் பத்தாயிரம் ருபாய் நன்கொடை அளித்தார்* அது போதாது ,எனவே* நடிக -நடிகைகள் மூலமாக கலை நிகழ்ச்சி நடத்தி* பணம் வசூல் செய்து, வங்கியில் டெபாசிட் செய்து அதில் வரும் வட்டியில் நிரந்தரமாக மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பது பயனுள்ளதாகும் என்கிற யோசனையை ஏற்றுக்கொண்டு ,உடனே, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்று பேசுமாறு ஆலோசனை கூறினார்.* அப்போது நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் சிவாஜி கணேசன், மற்றும் நிர்வாகிகளாக, நடிகர் வி.கே. ராமசாமி, மேஜர் சுந்தரராஜன் போன்றவர்கள் இருந்தனர் .* நிர்வாகிகளை சந்தித்தபோது லயோலா கல்லூரி மாணவர் சங்கத்தில் இருந்து ரூ.1,000/-கட்டணம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.* கலைநிகழ்ச்சிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன் . அவரும் சம்மதித்தார் .* நிகழ்ச்சியின் நெருக்கத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் ஷிமோகாவிற்கு படப்பிடிப்பு விஷயமாக சென்றுவிட்டார் . ஒருநாள் தென்னகம் பத்திரிகையில் எம்.ஜி.ஆர். கலைநிகழ்ச்சி விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்ற செய்தி அறிந்து* பதட்டத்துடன், தொலை பேசியில் இதுபற்றி விசாரித்தேன்.* பத்திரிகை செய்தி தவறு, நான் நேரடியாக வரமாட்டேன் என்று கூறினேனா, நிச்சயம் வருவேன் . நிகழ்ச்சி ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறி போனை வைத்துவிட்டார்.* இருந்தாலும் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வரையில் எங்களுக்கு பயம் இருந்தது.* அவர்மட்டும் வராமல் போயிருந்தால்*எங்களை ரசிகர்களும், பொதுமக்களும் பின்னி எடுத்திருப்பார்கள் .* நல்லவேளையாக சரியான நேரத்தில்* பல்கலை கழக நூற்றாண்டு மண்டபத்தில் அரங்கம் அதிரும் வகையில் நுழைந்து எங்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார் .நடிகர் சங்கத்தில் , மாணவர் நல சங்கத்திடம் இருந்து ரூ.1,000/- பெற்றது குறித்து அவர் அறிந்து வைத்திருந்தார் போலும் . அவர் பேசும்போது நடிகர் சங்கத்தின் செயல்பாடு தவறு என்று கூறி, அந்த பணத்தை நான் தருகிறேன் என்று கூறி*அரங்கம் அதிர* ரூ.1,000/- என்னிடம் அளித்தார் .* எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி .


    இப்போது உள்ள தலைமை கழகம் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர்*சூட்டி அழகு பார்க்க கட்சி தலைமை முடிவு செய்யும் பட்சத்தில், முன்னாள் முதல்வரும், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அன்பு மனைவி ஜானகி அம்மையார்*தனது பெயரில் உள்ள சொந்த கட்டிடத்தை எம்.ஜி.ஆர். அவர்களின் வேண்டுகோளின்படி கட்சிக்கு இலவசமாக நன்கொடை அளித்தார் .* எனவே அவர் பெயரை சூட்டுவதுதான் பெருமையாக இருக்கும்,* புரட்சி தலைவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.* முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் சமாதி உள்ளது . அவர் வாழ்ந்த போயஸ் தோட்டம் நினைவு இல்லமாக செய்வதற்கு அரசின் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று பேசினேன் . இறுதியில் அமைச்சரவை இதற்கு சம்மதித்தது .
    தமிழ்நாட்டில் மட்டுமல்ல , வெளிநாட்டில் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் நான் செல்லும்போது, கூட்டங்களில் பேசும்போது எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்தை உச்சரிக்கும்போது எழும் கைதட்டல்கள் இன்றுவரையில் வேறு எந்த தலைவர்களுக்கும் இல்லை என்பதை இதயசுத்தியோடு தெரிவித்துக் கொள்கிறேன் . ஆகவே மறைந்தும் மறையாமல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.*மக்களின் இதய சிம்மாசனங்களில் வாழ்ந்து வருகிறார் .மக்களை அவர் நேசித்தார் .இன்றும் மக்கள் அவரை நினைக்க தயங்குவதில்லை , அவர் என்றும்*மக்கள் மனங்களில் வாழ்வார். அப்படிப்பட்ட தலைவரின் படங்களுக்கு பொன்விழா எடுக்கும் உரிமைக்குரல் ஆசிரியர்* திரு.பி.எஸ்.ராஜு அவர்கள்*பாராட்டத்தக்கவர் .


    இறுதியாக முன்னாள் அமைச்சர் திரு.எஸ். ஆர். ராதா பேசினார் .நான் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அமைச்சரவையில் பணியாற்றியது பொற்காலம் .* *சட்டமன்றத்தில்* கருணாநிதி அவர்கள் ஒருசமயம் பேசும்போது தனக்கு ஆபத்து இருக்கிறது . இந்த ஆட்சியில் எனக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசினார் . வசந்த மண்டபத்தில் இருந்து இதைக் கேட்டு கொண்டிருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் ,விரைந்து வந்து சட்டமன்றத்தில்* இந்த அரசு அண்ணாவின் அரசு , எனவே கலைஞருக்கு உகந்த பாதுகாப்பை அரசு அளிக்கும், என்றார்.* *நான் பிறகு எம்.ஜி.ஆர். அவர்களிடம் சொன்னேன் . நல்லவேளையாக நீங்கள் பதில் அளித்தீர்கள்.இல்லையானால் , நாளைய பத்திரிகையில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் கருணாநிதிக்கு ஆபத்து என்கிற செய்தி வந்திருக்கும் என்றேன்.* ஒருமுறை மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு*நீதி கேட்டு நெடிய பயணம் செய்த கருணாநிதி அவர்கள் , பாத யாத்திரையின்போது கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டு அவதிப்பட்டார்.விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் சில மருத்துவர்களுடன் உதவி குழு ஒன்றை அனுப்பி , பகைவன் என்று பாராமல் உதவினார் .* மேலும் எம்.ஜி.ஆர். அவர்கள் சொன்னார்கள். கலைஞர் அவர்கள் என்றும் உயிருடன் இருக்க வேண்டும் . அப்போதுதான் அவரை எதிர்த்து நான் முதல்வராக நீடிக்க முடியும். ஏனென்றால் கலைஞரின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும் . ஒருவேளை எனக்கு முன்பாக அவர் மறைந்து புதிய எதிரியை எதிர்நோக்கி காய்களை நகர்த்தி ஆட்சி பிடிக்க சிரமங்கள் ஏற்படலாம் . ஆகவே*இந்த சூழ்நிலைதான் எனக்கு எப்போதும் சாதகமாக அமையும் என்றார். அதற்கு தகுந்தாற்போல கடைசிவரை கருணாநிதி , எம்.ஜி.ஆர். அவர்கள் இருக்கும்வரையில் கோட்டைவாசலில் முதல்வராக வரமுடியவில்லை .இப்போதைய ஆட்சியாளர்கள் அ. தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர்.*அவர்களின் இமேஜை பலப்படுத்தி செயல்பட்டால் அவர்களுக்கு எதிர்காலம் உண்டு. அல்லது இருண்ட காலமாகிவிடும் .இறுதியாக இந்த பொன்விழா நிகழ்ச்சியை* நடத்திய உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு*மேன்மேலும்* புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பல விழாக்கள் நடத்தி வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் என்று பேசினார் .

    நிகழ்ச்சியின் இறுதியில் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு*விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவரையும், நன்றி பாராட்டி பேசினார்


    பிற்பகலுக்கு பின்னர் நடந்த நிகழ்ச்சிகளின் போது , அரங்கம் நிரம்பி வழிந்தது . கொரானா வைரஸ் நோய் அச்சுறுத்தலை மீறி, பக்தர்கள் , ரசிகர்கள் திரண்டு வந்து பேராதரவு தந்தது* மகிழ்ச்சி கலந்த ஆச்சர்யம் அளித்தது*


    . விழாவில்*பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம், சைதை கலையுலக பேரொளி எம்.ஜி.ஆர். மன்றம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம், எழும்பூர், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, சென்னை, போன்ற அமைப்புகளின் பக்தர்கள், மற்றும் சென்னைவாழ் பக்தர்கள் ஏராளமானோர்,*திரு.ஆனந்த், திரு.மூர்த்தி, பெங்களூரு,திரு.ரோசய்யா, அரக்கோணம் திரு.கிருஷ்ணன் மற்றும் குழுவினர், திருச்சி, திரு.சத்யமூர்த்தி மற்றும் குழுவினர் சேலம், திரு.ஆறுமுகம், திரு.ஜாலி, திரு.வி.ராஜா, மற்றும் குழுவினர், திருநெல்வேலி, திரு.மலரவன், திரு.பாலமுருகன் மற்றும் குழுவினர், திண்டுக்கல், மதுரை எம்.ஜி.ஆர். பக்தர்கள், திருமதி பெரிய நாயகி*.திரு.மோகன்தாஸ், திரு.புரட்சிமலர் சிவா, கோவை,திரு.வாசுதேவன்,சூலூர், கோவை, திரு.ரவி, ஆரணி* மற்றும் பலர் (வெளியூர் நண்பர்கள் சிலர் பெயர் தெரியவில்லை , மன்னிக்கவும் ) கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

    நிகழ்ச்சி முடிவில் வெளியூர் பக்தர்கள் பலருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது .
    *
    Last edited by puratchi nadigar mgr; 18th March 2020 at 10:23 PM.

  12. #2800
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    M.G.R. அசாத்திய துணிச்சல் மிக்கவர். தவறு எங்கே நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பார். ஒரு காரியத்தில் இறங்க வேண்டுமென்றால் அது ஆபத்தானதாக இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார். அதற்கு எவ்வளவோ உதாரணங்கள்.

    1977-ம் ஆண்டு சட்டப் பேர வைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.

    இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது. மாலை அணிவிப்பதற்காக வந்த எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர். தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினர்.

    அதை எல்லாம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.

    சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படி எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் தென்பாண்டி மண்டலமே குலுங்கியது........... Thanks...........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •