Page 285 of 402 FirstFirst ... 185235275283284285286287295335385 ... LastLast
Results 2,841 to 2,850 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2841
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குமுதம் வார இதழ் -08/01/20
    --------------------------------------------
    பொங்கலுக்கு போட்டி வைத்த எம்.ஜி.ஆர். -சபீதா ஜோசப்*

    -----------------------------------------------------------------------------------------
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்நாள் முழுவதும் கொண்டாடி மகிழ்ந்த ஒரே பண்டிகை பொங்கல் மட்டும் தான்.* அதற்கு பல காரணங்கள் உண்டு .*

    எம்.ஜி.ஆர். உழவர் தினமான 17ம் தேதி பிறந்தார் .* பிறந்த நாள் கொண்டாடாத எம்.ஜி.ஆர். அந்த நாளில் பொங்கல் திருநாள் கொண்டாடுவார் .* அவருடைய பெரும்பாலான* படங்கள் பொங்கல் திருநாளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றன .

    அவரது நண்பரும் நடிகருமான எம்.என்.நம்பியார் ஒரு சமயம், எம்.ஜி.ஆர். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மிட சிறப்பாக கொண்டாடி வந்தார் .* நலிந்த* கலைஞர்களுக்கு*பொங்கல் பரிசுகள் கொடுப்பார் .* *அன்று காலை முதல் மாலை வரை அவருடன் இருப்பேன் என்றார் .

    சரி, எம்.ஜி.ஆர். வீட்டு பொங்கல் திருநாள் எப்படி இருக்கும் .அந்த நாளில் என்னென்ன விஷேசம் நடைபெறும் என்பதை* 1957 முதல் 1987 வரை எம்.ஜி.ஆரின் மெய்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் (இப்போது 90 வயது ) அவர்களிடம் பேசியதில் இருந்து :*

    புரட்சி தலைவர் தமது வாழ்நாளில் பொங்கல் திருநாளைத் தவிர* வேறு இந்தப் பண்டிகையும் கொண்டாடியதில்லை* *அந்த நாளில் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவார் .* இப்போது அ. தி.மு.க. தலைமை அலுவலகம் இருக்கும் இடம் அப்போது எம்.ஜி.ஆரின் நாடக மன்றமாக இயங்கி வந்தது .* அங்கு தான் வருசா வருஷம் எம்.ஜி.ஆரின் குடும்ப* விழாபோல பொங்கல் விழா நடைபெறும் .**

    பொங்கலுக்கு முதல்நாளே எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தை சேர்ந்தவர்களும், அவரது ஸ்டண்ட்* குழுவை சேர்ந்த நாங்களும் அங்கு கூடிவிடுவோம் .* அன்னான் ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் அந்த இடத்தை அலங்கரிப்பது, முதல் லாரியில் வந்த புடவைகள், வேட்டிகள், பரிசு பொருட்களை அலுவலகத்தில் அடுக்கி வைப்பது வரை அனைத்தையும் செய்வோம்.* அந்த புடவைகள் வேட்டிகள் எல்லாம் ஒரே விலையில் , ஒரே தரத்தில் இருக்கும்.**

    பொங்கல் அன்று காலை ஏழு மணிக்கெல்லாம் எம்.ஜி.ஆர்.அவரது மனைவி, அவரது* அண்ணன் ,சக்கரபாணி, அவர் மனைவி மீனாட்சியம்மாள் , அவரது மைத்துனர் , அவர் மனைவி உள்பட குடும்பத்தினருடன் வந்ததும் விழா களை கட்டும் .* தன் கையாலேயே அனைவருக்கும் புடவை வெட்டி கொடுப்பார்.* அதையே தன குடும்பத்தாருக்கும் வழங்குவார் .* அதே வேட்டியை அவரும்* அணிந்து கொள்வார் . எல்லோரும் புது டிரஸ் போட்டு ஒன்பது மணிக்கு வந்துவிட வேண்டும் .* எம்.ஜி.ஆர். வீட்டில் பொங்கல் வைத்து* நடக்கும்* நிகழ்ச்சியில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்படும் .* ஆண் பெண் வரிசையாக வந்து உண்டு மகிழ்வார்கள் .* அங்கு ஏராளமான இனிப்பு பதார்த்தங்கள் சிறுசிறு துண்டாக வெட்டிவைத்த* கரும்பு துண்டுகள் வழங்கப்படும்* *காலை 10* மணி அளவில்* நாடக மன்ற நிகழ்ச்சிகளை தலைவர் ஆரம்பித்து வைப்பார்*

    கயிறு இழுத்தல்* போட்டி, பெண்களுக்கான மியூசிக்கல் சேர் , ஓட்டப்பந்தயம் , சாக்கு கட்டி குதித்து* ஓடுதல், நடத்தல், ஸ்டண்ட் நடிகர்களின் வீரசாகஸங்கள் , என்று ஏராளாமான போட்டிகள் தொடர்ந்து வரிசையாக நடக்கும் .* எம்.ஜி.ஆர்.* வீட்டு பொங்கல் விழாவில் கலந்து கொள்ள இயக்குனர் சுப்பிரமணியன் , சக நடிகர்களான டி.எம்.கே. முஸ்தபா , என்.என்.நாராயண பிள்ளை, சிவானந்தம்,நீலகண்டன், டி.ஏ* மதுரம், சி.டி.ராஜகாந்தம், புஷ்பலதா , ஜி.சகுந்தலா, கே.ஏ. தங்கவேலு , நம்பியார் . அவர் மதிக்கும் பேரறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர், மதியழகன், சத்யவாணிமுத்து, என்.வி.நடராசன் , துரைமுருகன் என பலரும் வருவார்கள் .**

    1962ல் நடந்த பொங்கல் விழாவில், எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் ஊழியர்களும்* எம்.ஜி.ஆர். நாடக குழுவினரும் , கயிறு இழுக்கும் போட்டியின்போது* கலந்து கொண்டனர் . எம்.ஜி.ஆரும்,அவரது அண்ணனும் எதிரெதிர் நின்று வீட்டுக் கொடுக்காமல் கயிறு இழுத்தார்கள்.* திடீரென்று நடுமத்தியில்* கயிறு அறுந்துவிட* இரு கோஷ்டிகளும் தரையில் விழ ஒரே சிரிப்பு, கரகோஷம்தான் .**

    ஸ்டண்ட் கலைஞர்களின்* வீர* தீர சாகச நிகழ்ச்சிகளின்போது* கலைவாணர் என்.எஸ். கே.வின் நண்பர் வி.கே.ஆசாரி தமது வயிற்றின் மேல் பெரிய பாறாங்கல் வைத்து எங்கள் இருவரை கொண்டு சுத்தியலால் உடைக்க சொல்வார் . சிலம்பாட்டம் , குத்துசண்டை என்று அவரவர்களுக்கு தெரிந்த கலைகளை செய்து காட்டுவார் .* அவர்களுக்கு புரட்சி தலைவர் சிறப்பு பரிசுகளை வழங்குவார் .**

    ஊர்வலம் என்ற நாடகத்தில் ஸ்டண்ட் நடிகர்களான நான், தர்மலிங்கம், புத்தூர் நடராசன், குண்டுமணி, முத்து , திருப்பதிசாமி, கோலப்பன் , என அனைவரையும் நடிக்க வைத்து தலைவர் ரசிப்பார் .* இறுதியில் நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்களின் திறமையை நகைச்சுவையை பாராட்டி பேசி பரிசுகளை வழங்குவார் . இந்த மகிழ்ச்சியான பொங்கல் நிகழ்ச்சிகள்* முடிய இரவு 11 மணியாகி விடும் .* அளவுகடந்த* மகிழ்ச்சியுடன்* வீடு திரும்புவோம் .* இதுதான் புரட்சி தலைவர் வீட்டு பொங்கல் என்றார் .* **
    -

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2842
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் -13/03/20- மறக்கமுடியுமா ?எங்க வீட்டு*பிள்ளை*
    --------------------------------------------------------------
    வெளியான நாள் : 14/01/1965
    நடிப்பு : எம்.ஜி.ஆர். (இரு வேடம் ) பி.சரோஜாதேவி, ரத்னா , எம்.என்.நம்பியார், நாகேஷ், மாதவி, தங்கவேலு ,எஸ்.வி.ரங்காராவ் மற்றும் பலர்*
    இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி* *வசனம் : சக்தி கிருஷ்ணசாமி*
    ஒளிப்பதிவு : வின்சென்ட்* * * * * * இயக்கம் : சாணக்யா*

    தயாரிப்பு :பி. நாகிரெட்டி*

    கடந்த 1958ல்* வெளியான நாடோடி மன்னன் படத்தின் வசூலை, 1965ல் வெளியான எங்க வீட்டு பிள்ளை முறியடித்தது .* ஒரே தோற்றமுடைய சகோதரர்கள், ஆள் மாறாட்டம் செய்யும் பழைய கதைதான் .* ஆனால் அது எம்.ஜி.ஆருக்கு கன கச்சிதமாக பொருந்தியது .**

    ராமுவை கோழையாக வளர்த்து, அவரின் சொத்துக்களை, மைத்துனர் நம்பியார் அனுபவிப்பார் .* நம்பியாரின் கொடுமை தாங்காமல் , ராமு வீட்டில் இருந்து வெளியேறுவார் .* மறுபுறம், இளங்கோ, என்பவர், வீரனாக வளர்கிறார்**சந்தர்ப்ப சூழ்நிலையால், இருவரும் இடம் மாறுகின்றனர் .* *இதனால் நிகழும், மாற்றங்களே கதைக்களம் .

    ராமு, இளங்கோ, என இரு கதாபாத்திரங்களிலும் , எம்.ஜி.ஆர். புகுந்து விளையாடி இருப்பார் .* அப்பாவி ராமுவாக, நம்பியாரிடம் ஆதி வாங்கும் போது, அட எம்.ஜி.ஆரா* இது என விமர்சகர்களை ஆச்சர்யப்பட வைப்பார்.* அதே நேரம், ஆள் மாறாட்டம் வழியாக வரும் இளங்கோ, நம்பியாரை சவுக்கால் அடிக்கும் போது, தன ரசிகர்களை கொண்டாட வைத்தார் .**

    தெலுங்கில் என்.டி.ராமராவ் நடிப்பில் வெளியான ராமுடு பீமுடு* படத்தின், ரீமேக் தான் இந்த படம்.* ஹிந்தியில் திலீப்குமார் நடிப்பில் ராம் அவுர் ஷ்யாம் என வெளியானது .**

    எங்க வீட்டு பிள்ளை படப்பிடிப்பு , 45 நாட்களில் நிறைவடைந்தது .* படபூஜை போட்ட இரண்டே மாதங்களில் முடிந்து வெளியாகியுள்ளது .*

    மாடிப்படியில் ஏறியும் , இறங்கியும் சவுக்கால் நம்பியாரை வெளுத்து வாங்கிய பின்னர்* , நான் ஆணையிட்டால், பாடல் இடம் பெறும் .* இதற்காகவே, எங்க வீட்டு பிள்ளை படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் .

    1965ல் 7 அரங்குகளில் வெள்ளிவிழா கண்ட படம்.* எம்.ஜி.ஆர். படங்களும் சரி,*அவர் திரைத்துறையை விட்டு விலகும் வரை , வேறு எந்த படங்களும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை .

  4. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  5. #2843
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் - வாரமலர்*- திரை இசை திலகம் கே.வி.மகாதேவன் (1918-2018)01/03/2020
    --------------------------------------------------------------------------------------------------------------------
    பாய்ஸ் கம்பெனி நடிகராக இருந்து, எந்தவித பெரிய பக்கபலமும் இல்லாமல் , திரை யுலகில் படிப்படியாக உயர்ந்த எஸ். ராகவன், எம்.ஜி.ஆரை* வைத்து படம் இயக்கி தயாரிக்கும் அளவிற்கு , சபாஷ் மாப்பிள்ளை படத்தில் வளர்ந்திருந்தார் .

    அவருடைய முயற்சிக்கு துணையாக இருந்து , கே.வி.மகாதேவனும் படத்திற்கு வெற்றிப்பாடல்கள் அமைத்துக் கொடுத்தார் .* எம்.ஜி.ஆர். படம் பெற வேண்டிய* வழக்கமான வெற்றியை சபாஷ் மாப்பிள்ளை பெறவில்லை என்றாலும், வித்தியாசமான முயற்சி என்கிற அளவில் பெரிய பாராட்டை பெற்றது .* இன்றளவும், அதன் பிரதி கிடைக்கிறது .* இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக , தன்* மனைவி மாலினியை நடிக்க வைத்திருந்தார் எஸ். ராகவன் .

  6. Thanks orodizli thanked for this post
  7. #2844
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    27 03 2020
    Book park

    Mynaty media
    M Shajahan Bsc

    இறைவனின் முடிவில் எதுவுமே நமது கையில் இல்லை.யாராவது யோசித்தோமா...?

    இருபது நாள் வெளியே வர முடியாமல் இருந்த இடத்திலேயே முடங்க வைத்தது நாமாகத் தேடிக்கொண்டதல்ல...!

    இருக்கும் நாட்களை எப்படி ஓட்டுவது என்ற கவலை ஒருபுறம்.எதுவுமே இல்லாத ஏழைகள் எப்படித் தவிப்பார்கள் என நினைக்கும்போது வரும் சோகம் மறுபுறம்...!

    எதுவுமே நிரந்தரமல்ல என்ற எதார்த்தம் ஒன்று தான் கொஞ்சம் நிம்மதி தருகிறது.சோகத்திலும் கொஞ்சம் சுகம் தருவது இந்த எழுத்துப்
    பணி தான்...!

    இன்று நாம் காணப்போவது...,

    திரையில் இணைந்து சொந்த வாழ்க்கையில் கடைசி வரை இணை பிரியா தம்பதியை இந்தப் பதிவு நினைவு கூர்கிறது...!

    தமிழ்த் திரையுலகம் கண்ட முக்கிய ஜோடியான...,

    மக்கள் திலகம்
    நம் சின்னவர்
    எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகியம்மா தான் அது...!

    இந்த நாளில் நாம் அவர்களை நினைவு கூறக் காரணம் ஒரு திரைப்படம் தான்.

    ஜூபிடரின் பொக்கிஷத்திற்காக நமது வரிசையில் அடுத்து வருவது மோகினி என்ற திரைப்படம்...!

    தமிழகத்து இரு முதல்வர்கள் முதன் முதலில் திரையில் தோன்றக் காரணமான படம்...!

    கலைஞர்கள் என்ற தகுதியை மீறி நம்மை இந்த ஜோடி வியக்க வைக்கக் காரணம் கொஞ்சம் வித்தியாசமானது.

    இருவரும் முதன் முதலில் சந்திக்கும்போது தங்களது இல்லற வாழ்க்கையில் தோல்வியின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தார்கள்.

    அதைப் பற்றி விவரிக்கும் முன்பாக மோகினியைப் பற்றி முதலில் பார்த்துவிடலாம்.

    1948 இறுதியில் வெளியான மோகினி ஜூபிடரின் ஒரு முக்கியமான படம்...!

    அபிமன்யு இதே ஆண்டு தான் வெளியாகியிருந்தது.36 படங்கள் இந்த ஆண்டு வெளியாக அதில் முக்கியமான படமாக சந்திரலேகா இருந்தது...!

    சிட்டாடலின் ஞான சௌந்தரியும் ஹிட்டாக வாசனின் இன்னொரு ஞானசௌந்தரி தோல்வி கண்டது...!

    இன்னொரு தோல்வி சூப்பர் ஸ்டார் பாகவதரின் ராஜமுக்தி...!
    இதிலும் பாகவதருக்கு ஜோடி ஜானகியம்மா தான்...!

    ஜூபிடரின் பிஸியான நேரத்தில் ஆண்டுக்கு இரண்டு மூன்று படங்கள் என வெளியாக அவர்களது ஆஸ்தான கதாசிரியர் ஏ.எஸ்.ஏ.சாமி பிஸியாக இயங்கிக்கொண்டிருந்த நேரம்...!

    அபிமன்யுவிற்கு காசிலிங்கத்தை இணை இயக்குநராகப் போட்ட முதலாளி சோமு இந்த மோகினிக்கும் ஒரு புதுமுக இயக்குநரைத் தேடினார்...!

    அப்படி தேடும்போது அகப்பட்டவர் லங்கா சத்யம்...!

    தெலுங்கில் நடிகராக வாழ்க்கையைத் துவக்கிய சத்யம் செண்பக வல்லியில் இயக்குநராக வாழ்க்கையைத் துவக்கியவர்.42 ல் வெளியான புல்லைய்யா இயக்கிய பாலநாகம்மாவில் நடிகராக வாழ்க்கையைத் துவக்கியவர்...!

    மோகினி தவிர மறுமலர்ச்சி மற்றும் பாரிஸ்டர் பர்வதம் என பல படங்களை இயக்கியவர்.தான் படித்த கதைகளில் இருந்து வழக்கம்போல சாமியின் ஸ்கிரிப்ட் மோகினிக்கும் பயன்பட்டது...!

    ஷேக்ஸ்பியரின் முதல் நாடகமாக கருதப்படும் டூ ஜென்டில்மென் ஆஃப் வெரோனாவிலிருந்து இந்த மோகினி பிறந்தாள்...!

    வெரோனா ஒரு நகரின் பெயர்.இரு நண்பர்கள் வெரோனா விலிருந்து மிலன் நகருக்கு வருவதில் தொடங்கி அவர்களது காதல் சோகம் வீரம் என ஷேக்ஸ்பியர் ட்ராமா நகரும்.சில்வியா ஜூலியா என இரு யுவதிகள் நண்பர்களின் வாழ்க்கையில் குறுக்கிட அதன் பிறகு நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே இந்த நாடகம்...!

    சாமியின் திரைக்கதைக்கு இந்த வெரோனா பெரிதும் உதவியது.அது போக அரேபிய இரவுகளில் வந்த பறக்கும் குதிரையை கொஞ்சம் உல்டாவாக்கி உள்ளே புகுத்த ஒரு பரபரப்பான ஸ்கிரிப்ட் ரெடி.நமது மோகினியின் திரைக்கதை என்ன சொன்னது...?

    மோகன் குமார் மற்றும் விஜயகுமார் இரு நண்பர்கள்.மோகன் அந்த நாட்டின் இளவரசன்.தந்தை மன்னர் ஒரு வித்தியாசமான பேர்வழி.நாட்டு மக்களின் நலனை விட விதவிதமான விநோத கலைப் பொருட்களை சேகரிப்பதற்கென்றே பிறவி எடுத்தவர்.அவருக்கு அழகானதொரு மகள்.அவள் தான் மோகினி.

    இளவரசன் மோகனின் நண்பனான விஜயகுமார் மோகினி மீது மையல் கொள்ள தந்தைக்குத் தெரியாமல் இருவரும் வெளியே சந்தித்து தங்களது காதலை வளர்த்துக்கொள்கிறார்கள்.இந்தக் காதல் இளவரசன் மோகனுக்கும் தெரியும்.இந்த நேரத்தில் மன்னருக்கு பிறந்த நாள் வருகிறது.

    என் வாழ்க்கையில் இது வரை காணாத விநோத பொருளை அன்பளிப்பாகக் கொண்டு வருபவருக்கு எதைக் கேட்டாலும் தருவேன் அமைச்சரே .அதை கண் குளிர கண்டுவிட்டு கண்ணை மூடினாலும் பரவாயில்லை என புலம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் தான் அந்த ஊர் கை வினைஞனான காளிநாதன் ஒரு விநோத பொருளை படைத்துக்கொண்டிருக்கிறான்.அது மரத்தாலான பறக்கும் குதிரை...!

    பிறந்த நாள் பரிசாக தான் பாடுபட்டு உழைத்த பறக்கும் குதிரையோடு வரும் காளிநாதன் மன்னரின் முன் மண்டியிட என்ன மரக் குதிரை பறக்குமா ?

    அப்படி மட்டும் பறந்துவிட்டால் நான் இது வரை கண்ட விநோதங்களில் இது தான் தலை சிறந்தது.எங்கே பறக்க வை பார்க்கலாம்.? ஒரு நிமிடம் மன்னா அதற்கு முன்பாக இந்த குதிரைக்கான விலையையும் சொல்லி விடுகிறேன்.எவ்வளவு வேண்டும் கேள்.அள்ளித் தர தயாராக இருக்கிறேன்.அள்ளியெல்லாம் தர வேண்டாம் மன்னா உங்களது மகள் மோகினியை மட்டும் தந்தால் போதும்...!

    ஏற்கனவே ஒரு முறை அவளைப் பார்த்து மயங்கிய காளிநாதன் கிடைக்கிற இடைவெளியில் காய் நகர்த்த தடுமாறிப்போகிறார் மன்னர்.

    ஆசைக்கும் ஒரு அளவில்லையா காளிநாதா.?
    என் நாட்டை வேண்டுமானா
    லும் எடுத்துக் கொள். குதிரை பறப்பதை ஒரு முறை பார்த்து விடுகிறேன்...!

    காளிநாதன் மசிவதாக இல்லை.ஒரு நாள் அவகாசம் கொடு. மன்னரின் வீக்னஸ் அவனுக்குத் தெரியும்.எப்படியும் ஓகே சொல்லிவிடுவார்.மயங்கிய மோகினியை தேற்றிவிட்டு அவளிடம் மன்றாடுகிறார் மன்னர்.நாளை வரை பறக்கும் குதிரைக்கு நீ தான் பாத்காப்பு.காதலன் விஜயன் விக்கித்து நிற்கிறான்.மன்னரின் கிறுக்குத்தனத்திற்கு ஒரு அளவில்லையா...?

    வெளியே சென்ற இளவரசன் அரண்மனை திரும்ப அழுது புலம்புகிறாள் தங்கை.ஆறுதல் சொல்லிவிட்டு நண்பன் விஜயனுடன் ஆலோசித்துவிட்டு அடுத்த நாள் ஒரு திட்டத்தோடு காளிநாதனிடம் வருகிறான்.என் தங்கையை உனக்கே மணமுடிக்கிறேன் அதற்கு முன்பாக ஒரு வெள்ளோட்டம் விட்டுப் பார்க்கலாமா...?

    இளவரசன் மோகனின் தந்திரம் எனக்கா தெரியாது.விடாக்கண்டன் காளி நாதன் ஓகே சொல்ல பறக்கும் குதிரை மீது அமர எங்கே பறக்க வை பார்க்கலாம்.காளியின் விஞ்ஞான மூளை ஒரு விசையில் இருக்கிறது.கழுத்துப் பக்கம் ஒரு திருகு திருக மரக் குதிரை உயிர் பெற்று பறந்தேவிட்டது...!

    அனைவரும் வாய் பிளக்க காலையில் போன இளவரசன் மாலையான போதும் அரண்மனை திரும்பவில்லை...!

    அடே அயோக்கியா.
    எங்கடா இளவரசன்? பறக்குமா என கேட்டீர்கள் பறந்ததா இல்லையா?. சொன்ன வாக்கை காப்பாற்றுங்கள்.
    என்ன காளிநாதா விளையாடுகிறாயா?. இளவரசன் வரும் வரை இவனை சிறையில் தள்ளுங்கள்.

    விஜயன் ஓடிச் சென்று இழுத்துச் செல்ல எங்க தான் போனான் இளவரசன் மோகன்?

    காளிநாதன் களி தின்றது நீடித்ததா? மோகினி விஜயனின் காதல் என்னவானது? ஒரே பெனிஃபிட் பறக்கும் குதிரையை பார்த்த மன்னர் தான்.வித்தியாசமான இந்த திரைக்கதையின் இன்னொருபக்கம் எப்படி இருந்தது என்பதை மீதிக் கதை அழகாகச் சொன்னது...!

    இதில் குதிரையை பறக்க வைக்க இயக்குநர் லங்கா சத்யம் என்னவெல்லாமோ செய்ய முதலாளி சோமுவிற்கு கடுப்பானது தான் மிச்சம்...!

    இயக்குநர் ரகுநாத் உதவிக்கு ஓடி வர ஒருவழியாக பறந்தது குதிரை...!

    மோகினியில் இளவரசன் மோகனாக டி.எஸ்.பாலையா.அவரது நண்பன் விஜயகுமாராக மக்கள் திலகம்.அவரது ஜோடி மோகினியாக வி.என்.ஜானகி...!


    மோகனின் காதலி குமாரியாக மாதுரி தேவி என இரண்டு ஜோடிகளின் காதல் கலைகளை இந்த மோகினியில் காணலாம்...!

    வித்தியாசமான திரைக்கதைக்கு காளிநாதன் அஸிஸ்டெண்ட் பாத்திரத்தில் நம்பியார் வருவார்.எம்.எஸ்.பாக்கியம் டி.பாலசுப்ரமணியன் புளிமுட்டை ராமசாமி கே.மாலதி டி.பாரதி நிர்மலா தேவி கமலா பாய் ரங்கநாயகி என நிறைய பேர் இருந்தனர்...!

    சாமியின் கதைக்கு வசனம் எஸ்.டி.சுந்தரம்
    இசைக்கு ஜூபிடரின் ஆஸ்தான சுப்பையா நாயுடு மற்றும் சுப்பராமன் ஜோடி...!

    சுந்தர வாத்தியார் பூமிபாலகதாஸ் வரிகள் தர சுப்பராமன் லீலா கே.வி.ஜானகி ஆகியோரோடு நம்பியார் குரலும் இருந்தது.கொரியோகிராஃபி வேதாந்தம் ராகவைய்யா.சுப்பராமன் இவரோடு ஏற்பட்ட பழக்கத்தால் தான் புகழ் பெற்ற தேவதாஸ் பாடல்கள் நமக்குக் கிடைத்தது...!

    வித்தியாசமான வெஸ்டர்ன் மிக்சிங்கை துவக்கி வைத்தது சுப்பராமன் என்றால் மிகையில்லை.
    இள வயதில் மறைந்த சுப்பராமன் நமக்கெல்லாம் பேரிழப்பு தான்...!

    மோகினியின் சிறப்பு மக்கள் திலகம் ஜானகி ஜோடியின் ஈடுபாடு.இனி எவரும் நம்மை பிரிக்கவே முடியாது.பிரிக்கவே முடியாத பிரகாச ஜோடி போன்ற எஸ்.டி.சுந்தரத்தின் வசனங்கள் இவர்களுக்கு அழகாக செட்டானது...!

    தாமதம் ஏனென்றால் தாமரை வாடுவதேன்? சூரியன் என்ன நம் சொந்தக்காரனா? சொந்தம் இல்லாமலா தன் சிவந்த கதிரை உனக்கு இரவல் தந்திருக்கிறான்..

    நம் நட்பு மறையும் மின்னலல்ல.மங்காத மாலைச் சூரியனுமல்ல.அஸ்தமனமில்லா ஆனந்த வாழ்வு.முதல் முதலாக திரையில் இணைந்த இந்த ஜோடிக்காக அமைந்த வசனம்
    கலைஞருடையது.!


    கலைஞர் அவர்கள் ராஜகுமாரிக்கும்
    அபிமன்யுவிற்காகவும்...,

    ஜுபிடருக்கு எழுதிக்கொடுத்த
    வசனங்களில்
    மீதம் இருந்ததை
    கனகச்சிதமாக
    எடுத்து...,

    நிறையவே மெனக்கெட்டு தகுந்த இடத்தில்
    இணைத்துக் கொண்டார்கள்...!

    மக்கள் திலகம் முதன் முதலில்
    ஜானகியம்மா உடன் இம்ப்ரஸ் ஆனது தியாகி படத்தைப் பார்த்தபோது தான்...!

    நரசிம்ம பாரதி ஜமீனாக, ஜானகியம்மா அரிஜனப் பெண்ணாக நடித்த படமது...!

    இருவருக்கும் இடையே ஏற்பட்ட,
    காதலை அப்போதே சொன்னார்
    சின்னவர்...!

    மக்கள் திலகம் மறைந்த தன் மனைவியின் சாயலை அந்தப் பெண்ணிடம் கண்டார்.அதை மறந்தும் போனார்.ஆனால் விதி நேரில் சந்திக்க வைத்தது ராஜமுக்திக்காக..!

    அந்தப் படத்தில் இருவரும் இருந்தாலும் ஜோடியில்லை.
    மனம் விட்டு இருவருமா பேச பாகவதர் உதவி செய்வதாக உறுதியளித்தார்...!

    அப்போது அவருக்கு ஒரு மகன் இருந்ததும் இல்லற வாழ்க்கையில் தோல்வியை சந்தித்ததும் இருவரும் பறிமாறிக்
    கொள்ள இங்கும் அதே சோகம்...!

    அதைப் பற்றி தனது சுய சரிதையில் ஒளிவு மறைவின்றி உள்ளதைச் சொல்லியிருக்கிறார் மக்கள் திலகம்...!

    வைக்கம் நாராயணி ஜானகி என்ற வி.என்.ஜானகி இளமையில் நிறைய சோகத்தை அனுபவித்தவர்...!

    கேரள வழக்கப்படி தாயின் முக்கியத்துவம் பெண்களுக்குக் கிடைக்கும்.அப்பா ராஜகோபாலய்யர் தஞ்சையை பூர்வீகமாகக்கொண்டவர்.சித்தப்பா பாபநாசம் ஏற்கனவே திரையில் முக்கிய ஆளுமை...!

    தந்தையும் பாடல் எழுதுவதால் திரையில் ஈஸியாக நுழைய வாய்ப்பு.ஆரம்ப காலங்களில் ஆடல் மட்டுமே...!

    39ல் வெளியான மன்மத விஜயத்தில் ஆடத் தொடங்கியது.கிருஷ்ணன் தூது கச்ச தேவயானி சாவித்திரி அனந்த சயனம் கங்காவதார் தேவகன்யா சந்திரலேகா என நிறைய படங்களில் நடித்து மோகினிக்கு வரும்போது நல்ல நிலையில் தான் அவர் இருந்தார்...!

    இன்னும் சொல்லப்போனால் மக்கள் திலகத்தை விட அதிக சம்பளம் பெரும் இடத்தில் இருந்தார்...!

    கொத்தமங்கலம் சீனு ஜோடியாக சகடயோகத்தில் இவர் தான் ஹீரோயின்.பதினாறு வயதில் கணபதி பட்டிடம் எப்படியோ ஏமாந்தார்...!

    பணம் ஒன்றையே குறியாகக் கொண்டது பிறகு தான் புரிந்தது.பிரிய விரும்பியபோது சட்ட சிக்கல்கள் குறுக்கிட்டது.பர்த்ருஹரியில் கே.சுப்ரமணியம் சந்திரலேகாவில் எஸ்.எஸ்.வாசன் ஆகியோர் தான் அப்போதைய ஒரே ஆதரவு...!

    பாபநாசத்தின் பெண் என்பதால் இருவரும் தக்களது மகளாகவே நடத்தினர்...!

    மனைவி நோயில் விழுந்து முதல் இல்லறமும் சட்டென மறைய இரண்டாவது வாய்ப்பும் நோயிலேயே கழிய தன்னையும் மனைவியையும் கவனித்துக்கொள்ள இன்னொரு துணை மக்கள் திலகத்திற்கு அப்போது தேவைப்பட கையில் குழந்தையோடு நிற்கும் ஜானகி மீது வந்த பரிதாபமே காதலாக மாறியது...!

    பஞ்சாயத்து பெரியவர்களிடம் வரும்போது மக்கள் திலகத்தின் நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை.அந்த நேரத்திலும் தைரியமாக எடுத்த முடிவு அனைவருக்கும் சுபமாக முடிந்தது...!

    மனைவி சதானந்தவதியின் இறுதிக் காலங்களில் கூடவே இருந்து கவனித்துக்கொண்டது ஜானகி தான்.அவரது மகன் அப்புவை தனது மகனாகவே ஏற்றுக்கொண்ட மக்கள் திலகம் இறுதி வரை அப்படியே இருந்தார்...!

    வாழ்க்கை வாழ்வதற்கே என்ற இலக்கணத்திற்கு இந்த இணை இன்னொரு உதாரணம்...!

    தாங்கள் வாழ்ந்த காலத்தில் தங்களுக்காக இல்லாமல் பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த ஜோடி.கணவனை கண் போல காத்தது திரையுலகமே அறிந்தது தான்...!

    மோகினியில் தொடங்கிய இந்த பந்தம் நாம் படத்தோடு நிறைவடைந்தாலும் மரணம் வரை கூடவே நிழலாக நின்று மக்கள் திலகத்தை கவனித்துக்கொண்டது...!
    இல்லத்தரசிகளுக்கு ஒரு முன் மாதிரி அவர்...!

    ஆஹா..வசந்த மாலை நேரம் என குதிரை மீதேறி ஆரம்ப காட்சியாக ஜானகி பாடும் பாடல்.மந்த மாருதம் குளிர்ந்து வீசிடும் வசந்த மாலை நேரம்.மல்லிகை அல்லி முல்லை மலர வரி வண்டுகள் அலறும் நேரம்.என் காதலர் உள்ளம் தேடும்.காதல் வேகம் போல் இல்லையே உனது கால்கள் தாவும் வேகம்.செல்லு செல்லு பரியே என குதிரையை விரட்ட அங்கே காதலிக்காக காத்திருக்கும் விஜயனாக மக்கள் திலகம்...!

    எந்தன் உயிர் மோகினி.மான் தான் வண்ண மயில் சாயல் காண்கிறேன் என சுப்பராமன் குரலில் பாடியது மக்கள் திலகம் தான்...!

    ஆஹா...இவர் யாரடி? என்னை ஆள வரும் பால வடி வேலனைப் போல் காணுதடி என லலிதா பத்மினி ஜோடியின் ஆடலோடு ஒரு பாடல்...!

    வேலையில்லாதவரடி.வெள்ளையர்கள் அணியும் சேலைகள் பாவாடைகள் மேலாடைகள் கொண்டோடிடும் கண்ணனோ.அறியாமல் உளறாதடி அடீ லலிதா.அடீ பத்மினிப் பெண்ணே எனையே பார்க்கிறார் என அக்கா தங்கையின் அழகான பாடல்...!

    ராஜாதி ராஜன் மெச்சும் ரஞ்சிதம் என் பேரு என்றொரு பாடல்.ஜோராய் நடை நடக்கும் என மற்றொரு பாடல்.ஆஹா..ஆஹா...அதிசயம் அழகான ஓவியம் மற்றும் மாயமாய் வந்தேன் போக வா என் அருகே வா என ஏகப்பட்ட பாடல்களோடு வந்த மோகினி...,

    ஜூபிடரின் முக்கியமான படம் என்பதை விட மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு இது இன்னும் முக்கியம்...!

    இல்லறத்தின் இன்னொரு பக்கத்தை எடுத்துச் சொன்ன இந்த ஜோடி...,

    இன்றைய இணைகளுக்கு இன்னொரு உதாரணம்...!

    மீண்டும்
    சந்திப்போம்...!!!......... Thanks.........

  8. #2845
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் -வாரமலர் -23/02/20-* நெல்லை*
    ---------------------------------------------------------------
    திரை இசை திலகம் - கே. வி. மகாதேவன்* (1918-2018)
    ----------------------------------------------------------------------------------

    எம்.ஜி.ஆரின் மிக வித்தியாசமான படமாக பேசப்பட்ட சபாஷ் மாப்பிள்ளை படத்திற்கு 1960 களின் துவக்கத்தில் கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார் .

    ஏகப்பட்ட ராஜா, ராணி திரைபடங்களில்* எம்.ஜி.ஆர். நடித்து கொண்டிருந்த 50 களில்* அவரை ஒரு காமெடி படத்தின் நாயகனாக* பார்ப்பது , ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவமாகத்தான் இருந்தது .

    எம்.ஜி.ஆருக்கு புதுமையான பாகம்தான் .* ஒரே தமாஷாக நடித்திருக்கிறார் .**அவரது வழக்கமான ராஜ உடையும், கிருதா கிராப்பும்* மாறி இருப்பதே மாறுதல்தானே .* அசல் காமெடியனாக மாறி சக்கை போடு போட்டிருந்தார் .**நடனம் ஆடுகிறார், கத்திச்சண்டை, குத்து சண்டை க்கும் இடமளித்திருக்கிறார் .இந்த படத்தில் எம்.ஜி.ஆரின் முழு திறமையும் உண்டு .* அவருக்கு ஒரு சபாஷ் போடாமல் இருக்க முடியாது .* இந்த படம் அவரை பொறுத்தவரை பூரண வெற்றிதான் . என்று விமர்சித்தது அந்நாளைய பிரபல வார பத்திரிகை .**

    இந்த வகையில் எம்.ஜி.ஆரை புது பாணியில் காட்டியவர்* பெரிய பின்னணி ஏதும் இல்லாத எஸ். ராகவன் என்பவர் .* காரைக்குடி சாமி ஐயங்காரின் மகனான ராகவன் , வைரம் அருணாச்சலம் செட்டியாரின் நாடக குழுவில் பால்ய நடிகனாக இருந்தவர் .* நாடக உலகத்திலும், திரையுலகத்திலும் ஓரளவு அனுபவமும் பயிற்சியும் பெற்றார் .* சபாஷ் மீனாவில்* நடித்த நடிகை மாலினியை மணந்தார் .இந்தப்படத்தில் நடிக்க எம்.ஜி.ஆரை அணுகி சம்மதம் பெற்றார் .* எம்.ஜி.ஆரின் துணை ராகவனுக்கு கிடைக்காமல் இருந்திருந்தால் கூட மகாதேவன் அவருக்கு இசையமைத்து உதவி இருப்பார் .**

    ராகவன் புரொடக்சன்ஸ் சார்பில்* ராகவன் கதை, வசனம் எழுதி இயக்கிய படமாக* எம்.ஜி.ஆர். நடித்த சபாஷ் மாப்பிள்ளை வெளி வந்தது .* படத்தில் எம்.ஜி.ஆரின் பணத்திமிர் பிடித்த மாமனாராக வந்த எம்.ஆர். ராதாவின் கதறல்களில் சிரிப்பு வரவில்லை என்றாலும் எம்.ஜி.ஆர். கைப்பணம் இல்லாமல் பசியோடு மும்பை நகர வீதிகளில் அலையும் காட்சிகள் மனதிற்கு இறுக்கமாக அமைந்தன .
    அப்போது அவர் பாடும் பாடல் , சிரிப்பவர் சில பேர், அழுபவர் பல பேர் , இருக்கும் நிலை என்று மாறுமோ ?**
    மருதகாசியின் வரிகளை மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன்* பாடும் இந்த பாடலில் அவல* சுவை அழகாக முன்வைக்கப்படுகிறது .இந்தியாவின் வர்த்தக தலைநகரமாக விளங்கும் மும்பையில் படம் பிடிக்கப்பட்ட பாடல் என்பதால், வாத்திய இசை சேர்ப்பிலும் , நாகரீக முத்திரை அமைந்தது.* சோகம் இழையோடும் பாடல், செல்வரைக் குருட்டு தனமாக பழி க்காமல், எம்..ஜி.ஆரின்*எதிர்பார்ப்பை இப்படி முன்வைத்தது .**
    உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை*உள்ளதை இழந்திட சொல்லவில்லை*உழைப்பவர் உயர்ந்தால் போ துமய்யா*

    மெய்க்காதலர்கள் சந்திக்கும்போது காலம் தயங்கி நிற்கும்.* இந்த உணர்வைத்தருகிறது, யாருக்கு யார் சொந்தம் என்பது என்ற பாடல்* அதன் கனிவான* கவர்ச்சியைக் கண்ட ராகவன், சுகமாக ஒரு முறையும், சோகமாக ஒரு முறையும் அதை பயன்படுத்தினார் .* காதல் உணர்ச்சியின் மென்பையான ஈர்ப்பு, கர்நாடக இசையின் இதமான கவர்ச்சி ஆகியவற்றுடன், 50 களின் சில பாடல்களுக்குரிய அவசரம் இல்லாத போக்கில் யாருக்கு யார் சொந்தம் என்பது விளங்குகிறது .

    சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா, ஆகியோரின் குரல்களில் ஒலிக்கும் இந்த பாடலில் மகாதேவனின் மேஜிக் உள்ளது .* சீர்காழியில் எதிரொலிக்க குரலாக 90களில் *வலம்* வந்த ஒரு மெல்லிசை பாடகர், ஜோடி சேர்த்துக்* கொண்டு இந்த பாடலை பாடிக் கொண்டிருந்தார் .

    சபாஷ் மாப்பிள்ளை படத்தில் கவுரவ நடிகராக ரயில் வண்டியை கூறலாம் .அதியற்புதமாக நடித்திருக்கிறது .* படத்திற்கு நல்ல ஓட்டத்தையும் தந்திருக்கிறது . உண்மையிலேயே திரைக்கதை ஆங்காங்கே ரயிலில் ஏறித்தான் செல்கிறது .என்று படத்தின் ரயிலோட்டம் ஒரு விமர்சகரை கவர்ந்தது .இதற்கு ஏற்ப, திரைக்கதையின் ஒரு திருப்பத்தில் தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக தன் மீது திணிக்கப்படும். திருமணத்திலிருந்து தப்பிக்க ரயிலேறுகிறாள் கதாநாயகி .**

    அப்போது ரயில் பிச்சைக்காரனின் பாடல், அவளுடைய அப்பாவின் பணத்தாசையை* எதிரொலிக்கிறது .*
    வெள்ளிப்பணத்துக்கும், நல்ல குணத்திற்கும் வெகுதூரம் , இது உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும் .ஒரு பாடம் . என்கிற பாடல் பி.பி.சீனிவாசன் குரலில் ஒலிக்கிறது .* ஸ்ரீநிவாஸின்* சிறந்த பாடல்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள பாடல் இது .**

    சபாஷ் மாப்பிள்ளை படத்தில் பாடல்கள் வெற்றியடைந்ததோடு , அவற்றுக்கான வாத்திய இசை சேர்ப்புகளும் ரம்மியமாக அமைந்தன .* 50களை* பின்னுக்கு தள்ளி மகாதேவன் 60களின் பாணிகளுக்கு* பயணப்பட்டுவிட்டதை அவை குறித்தன ..

  9. Likes orodizli liked this post
  10. #2846
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று 28-03-1936 - 28-03-2020 மகத்தான ஒரு மனிதரை, நடிகரை பொது மக்கள் அரங்கத்திற்க்கு அறிமுகம் செய்த நாள் "சதி லீலாவதி" காவியம் வழியாக......... திரையுலக, அரசியலுலக சக்கரவர்த்தி ஆக என்றும் திகழும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., புகழ் எப்பொழுதும் வாழியவே...

  11. #2847
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்களே, கொரோனா கவலை ஒருபக்கம் 3 நாட்களாக வாட்டி வதைக்கும் சூழலில் அதிலிருந்து மனதை விலக்கி வைக்க நினைத்தேன் அதன்படி இன்று உலக திரையரங்க தினத்தையொட்டி 1980 களின் ஞாபகங்களில் சில துளிகள் இதோ.... படத்தொகுப்பு- (சித்தரிக்கப்பட்டவை)
    உடன்குடி ஷண்முகானந்தா திரையரங்கம்...1980 களில் அவ்வட்டாரத்து மக்களின் கவலைகளை மறக்கடித்து சிரிக்க வைத்த மேடை. ரஜினி, கமல் ஹீரோக்களாக வலம் வந்த அக்காலக்கட்டத்தில் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆரின் பழைய திரைப்படங்கள் மீண்டும் திரையிடப்பட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. குறிப்பாக ஞாயிறு மேட்னி 50 பைசா கவுண்டரில் பெரியதாழை, மணப்பாடு மீனவர்கள் கூட்ட ( கடல்) அலையில் மற்ற ஊர்களில் இருந்து வந்த ரசிகர்கள் கடும் நெருக்கடியில் சிக்கி விழிபிதுங்கி வியர்வையில் குளித்தபடி நிற்பார்கள். மீனவர்கள் முழங்கிய வாழ்த்து கோஷம் இன்றும் அப்பகுதியில் செல்லும்போது ஞாபக அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இடைவேளையில் பாட்டுப் புத்தகம், உள்ளங்கை அளவிலான எம்ஜிஆர் படங்கள் மற்றும் ப்ளோ அப் அளவில் படங்கள் வாங்கி மகிழ்ந்த தருணங்கள் மறக்க முடியாதவை. அடுத்த படம் என்ன என்பதை ஒரு பாடல் காட்சி திரையில் ஓடவிட்டு நடுவில் சிலைடு காட்டுவார்கள். கைத்தட்டல் ஆரவாரம் அதிர வைக்கும். காலைக் காட்சியில் திரையிடப்பட்டிருக்கும் படத்தின் ஒரு பாடலைக்கூட மேட்னி படத்தின் இடைவேளையில் காட்டுவார்கள். பெரும்பாலும் சுற்று வட்டார ரசிகர்கள் சைக்கிளில் மூன்று மூன்று பேராக வந்து இறங்குவார்கள். அந்த வழியாக பயணிக்கும் டவுன்பஸ் இரவு 9.30 க்கு குறிப்பிட்ட சில ஊர் ரசிகர்களுக்காக படம் முடியும் தருணத்தை அட்ஜஸ்ட் செய்து லேட்டாக வரும். அந்த பஸ் டிரைவர் மற்றும் நடத்துநருக்கு மறுநாள் காலையில் பதநீர் வாங்கி கொடுத்து ரசிகர்கள் நன்றி செலுத்துவது வழக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஊர்கள்தோறும் உள்ள பஸ்நிறுத்தம் உள்ள பயணிகள் காத்திருக்கும் அறையின் சுவர்களில் போஸ்டர் ஒட்டுவார்கள். அதில் வெறும் எழுத்துக்களும் அப்படத்தின் கதாநாயகன் போட்டோ மட்டுமே பிரிண்ட் இருக்கும். வண்ண சுவரொட்டி மெஞ்ஞானபுரம் போன்ற பெரிய கடைவீதி உள்ள ஊர்களில் சென்று பார்ப்பது தனி ஆவலாக இருக்கும். இந்த தியேட்டர் அய்யனார், மாயா என பெயர்கள் மாறி தற்போது வணிக வளாகமாக காட்சி அளிக்கிறது. திருச்செந்தூர், சாத்தான்குளம், ஆறுமுகநேரி போன்ற ஊர்களுக்கு இரவு காட்சிக்கு 20 வயதுக்கு மேற்பட்ட அண்ணன்மார்கள் சென்று படம் பார்த்து வருவதை பெரிய சாதனையாக பேசிக் கொள்வார்கள். கடைசியாக உடன்குடி தியேட்டரில் கரகாட்டக்காரன் உள்பட 3 படங்கள் ஒரேநேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு திருவிழாக் கூட்டம்போல மக்கள் திரண்டது ஞாபகம். அப்போது டெண்ட் கொட்டகை திரையரங்குகள் வீரபாண்டியன்பட்டணம், கொட்டங்காடு உள்ளிட்ட பல ஊர்களில் செயல்பட்டன. குறிப்பாக இந்த கிராமங்களில் டெண்ட் கொட்டகை அமைக்கும் பணியை ஊரே உற்சாகத்தில் திரண்டு வந்து பார்க்கும். நாளடைவில் கிராமங்களில் இவையெல்லாம் இடிக்கப்பட்டுவிட்டன. இதனிடையே கிராமங்களில் விசேஷ நாட்களில் 16 mm திரையில் கருப்பு வெள்ளை படங்கள் திரையிடுவார்கள்( இதுபற்றி முதல் கட்டுரையில் கடந்த மாதம் விரிவாக எழுதி உள்ளேன்) பக்கத்து கிராமங்களில் இன்று இரவு படம் போடுவதாக நியூஸ் காட்டுத்தீயாக பரவும். ஆண்களும் பெண்களும் குழந்தை குட்டிகளுடன் படையெடுத்துச் செல்வார்கள். குறிப்பாக செம்மறிக்குளம் என்ற ஊரில் அப்போது ரிலீசாகி ஒருமாதமே ஆன புதிய திரைப்படங்கள் திரையிடுவார்கள். இக்காலக்கட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி கலர் படங்களை கலரிலேயே இந்த ஊரில் கண்டுகளிப்புறும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் டிவி, டிவிடி பிளேயர் கொண்டு வந்து நடுத்தெருவிலும் வீட்டுத் திண்ணைகளிலும் ஒரே இரவில் நாலைந்து சினிமா காட்டினர். இதற்காக பெண்களும் ஆண்களும் ஐந்தோ பத்தோ பணம் வசூலித்து 150 அல்லது 200 ரூபாய் கொடுத்து விரும்பிய சினிமா படம் பார்த்து மகிழ்ந்தனர். விடிய விடிய 4 சினிமா பார்த்துட்டு மறுநாள் பள்ளி வகுப்பறையில் தூங்கி தூங்கி விழுந்து வாத்தியாரிடம் அசடு வழிந்ததும் உண்டு. விடுமுறை காலங்களில் சினிமா துண்டு பிலிம்களை வைத்து முகம் பார்க்கும் கண்ணாடி மூலம் சூரிய ஒளி பாய்ச்சி வீட்டுக்குள் சிறுவர்கள் சினிமா படம் காட்டி விளையாடியதையும் மறக்க முடியுமா? இதே போல சர்ச்சிலும் சிலைடுகள் மூலம் பைபிள் கதை திரையிடுவார்கள். காலங்கள் உருண்டோடின. இன்று வீட்டிலேயே புரஜக்டர் வைத்து படம் பார்க்கும் வசதி வந்துவிட்டது.என்ன நண்பர்களே கொரோனா துக்கத்தில் இருக்கிற இந்த நேரத்துல இப்படி சினிமா பைத்தியமான ஆட்டோகிராப் கட்டுரையா? என கேட்க தோன்றும். இன்று மார்ச் 27 உலக திரையரங்க தினமாச்சே...3 நாள் கவலை தோய்ந்த கொரோனா செய்திகளிலிருந்து விடுபட நினைத்து இந்த நினைவுகளில் மூழ்கினேன். நம்ம வாழ்க்கையும் சினிமா போலத்தான் போய்கிட்டிருக்கு....இப்போ கொரோனா படம் ஓடிகிட்டிருக்கு...முடிவில் சுபமா? அல்லது ரீல் பாதியிலேயே அறுந்துடுமா?..????..?? ... Thanks...

  12. #2848
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    22 .03.2020
    M.Shajahan Bsc.,

    சதிலீலாவதி : 28-03-1936

    இன்று என் பிறந்தநாள்...!


    சதிலீலாவதி பிறந்த
    மார்ச் 28 ல் தான்
    நானும் பிறந்தேன்...!
    வருடம் தான் வேறு(28.03.1960)

    நமது சின்னவரின் முதல் திரைப்படம் "சதிலீலாவதி "...!

    இப்படத்தில் நடிக்க முதலாளி எம்.கந்தசாமி முதலியார் அவர்கள் தான் எம்.ஜி.ஆரை சிபாரிசு செய்து இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க வைத்தார்...!

    இவரது மகன் தான் நடிகர் எம்.கே.ராதா; சதிலீலவதியின் கதாநாயகன்...!

    இந்த படம் எம்.கே.ராதா..., என்.எஸ்.கிருஷ்ணன்...,
    டி.எஸ். பாலையா, கே.ஏ.தங்கவேலு, சகஸ்ரநாமம்...,
    ஆகியோருக்கும் கூட முதல் படம்...!

    சதிலீலாவதி : 28-03-1936

    தயாரிப்பு : - மனோரமா ஃபிலிம்ஸ்
    கதாபாத்திரம் : - ஆய்வாளர் ரெங்கையா நாயுடு ( சிறு வேடம்)
    இயக்குனர் : - எல்லீஸ் R. டங்கன்
    கதை : -
    எஸ்.எஸ் வாசன்
    இசை : -
    சுந்தர் வாத்தியார்
    கதாநாயகன் : - M.K.ராதா
    கதாநாயகி. : - M.R.ஞானம்மாள்
    வெளியான தியதி :-
    28 -03-1936

    இதே மார்ச் 28
    எனக்கும் பிறந்நாள் என்பதில் பெருமை கொள்கிறேன்...!

    ஆனந்த விகடன் இதழில் சுப்பிரமணியம் சீனிவாசன் புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்...!

    1935ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்திருந்தாலும், வழக்கின் காரணமாக இந்தத் திரைப்படத்தின் வெளியீடு தாமதமானது...!

    பின்னர்...,
    28 மார்ச் 1936 ஆம் தேதி படம் வெளியானது...!

    கதைச்சுருக்கம்:-

    சென்னையில் செல்வந்தர் கிருஷ்ணமூர்த்தி தன் மனைவி லீலாவதி மற்றும் மகள் லட்சுமியுடன் வாழ்ந்து வருகிறார்...!

    தன் நண்பன் ராமநாதன் மூலமாக மது மற்றும் சூதாட்டத்திற்கு அறிமுகம் கிடைக்கிறது...!

    பின்னர் மோகனாங்கி என்ற பெண் வசம் ஆசை கொள்வதால் அவளுக்கு ரூபாய் 50000 தருவதாக வாக்கு கொடுக்கிறார் கிருஷ்ணமூர்த்தி..!

    கிருஷ்ணமூர்த்தியின் நண்பன் பரசுராமன் அவரை நல்வழிப்படுத்த முயற்சி செய்கிறார்...!

    அந்த ஆடம்பரமான வாழ்க்கைக்காக கிருஷ்ணமூர்த்தி வாங்கிய கடனை கட்ட இயலாததால் மேலும் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்..!

    அதன் பின்விளைவாக தன் மனைவி லீலாவதியை சந்தேகிக்கிறார்...!

    பின்னர் ஒரு சமயம் குடிபோதையில் கிருஷ்ணமூர்த்தி இருக்கும்பொழுதுதன் நண்பன் பரசுராமனை தான்தான் கொன்று விட்டதாக தவறாக நினைத்து...,

    மனைவி மற்றும் மகளை கோவிந்தனிடம் விட்டுவிட்டு ஸ்ரீலங்காவிற்கு தப்பிச் சென்று...,

    ஒரு தேயிலை தோட்டத்தில் வேலை செய்கிறார் கிருஷ்ணமூர்த்தி..!

    லீலாவதி மற்றும் லட்சுமி இருவரும் வறுமையில் வாடுகிறார்கள்...!


    தலைவரின் முதல் படமான " சதிலீலாவதி" வெளியான அந்த பொன்னான நாளை குறிக்கும் ( 28-03-36 ) குறிக்கும் ஒரு ரூபாய் நோட்டு...,

    மிக்க மகிழ்ச்சியுடன் உங்கள் பார்வைக்கு...!

    இதில்
    சின்னவர் இன்பெக்டராக நடித்திருப்பார்...!

    பின்னொரு நாளில்
    இப்படத்தை
    இயக்கிய டங்கன்
    அவர்கள்...,
    காட்சிப்படுத்திய
    வீடியோ தொகுப்பை
    பதிவிடுகிறேன்...!

    இன்னும் சந்திப்போம்...!......... Thanks.........

  13. #2849
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    துக்ளக் வார இதழ் -11/03/2020
    --------------------------------------------------

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஒரு படத்தில் பணிபுரிந்தால் பத்துப்படத்தின் அனுபவம் கிடைக்கும் . -1973ல் பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் பாடலாசிரியர் ஆக உருவெடுத்தவர் கவிஞர் திரு.முத்துலிங்கம் , பின்னாளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மனம் கவர்ந்த பாடலாசிரியர் ஆனார் . கவிஞர் முத்துலிங்கம்* கலைமாமணி மற்றும் பல விருதுகள், பட்டங்களை பெற்றுள்ளார். அவரை துக்ளக் வாசகர்கள் துக்ளக் பத்திரிகை அலுவலகத்தில் கண்ட பேட்டி விவரம் ;


    கே.எஸ். ராமன் : ஆரம்பத்தில் முரசொலியில் பணிபுரிந்த நீங்கள் , அங்கிருந்து* எப்படி எம்.ஜி.ஆர். பக்கம் வந்தீர்கள் ?
    முத்துலிங்கம் : இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை .* 1966ல் நான் முரசொலியில் துணை ஆசிரியராக இணைந்தேன்.* 1972ல்* எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் அவருடன் சென்றுவிட்டேன் .* பிறகு அலைஓசை பத்திரிகையில் வேலை பார்த்தேன்.* அவர்களும் பின்னாளில் எம்.ஜி.ஆரை விமர்சிக்கத் துவங்கியதும் அங்கிருந்தும் வெளியேறினேன் .* எனவே, நான் ஆரம்பம் முதலே எம்.ஜி.ஆர். பக்கம் தான் இருந்தேன் .* எம்.ஜி.ஆர். கட்சி துவங்கியதும் அ/ தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்தேன் .* இன்றுவரை அ.தி.மு.க. வில் ஒரு நட்ச்சத்திர பேச்சாளராகவே தொடர்ந்து இருந்து வருகிறேன் .**


    எஸ்.டி.வரதராஜன் :* எம்.ஜி.ஆர். படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பு எப்படி தேடி வந்தது ?
    முத்துலிங்கம் : நான் முரசொலியை விட்டு விலகியதும் அலை ஓசை பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன் .* அந்த பத்திரிகை எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்ய ஆரம்பித்ததால் , நான் அங்கிருந்தும் வெளியேறினேன் .* எனவே, எம்.ஜி.ஆரை சந்தித்து வாய்ப்பு கேட்கலாம் என்று அவருடைய அலுவலகத்திற்கு சென்றேன் .* இண்டர்காமில் என்னுடன் பேசிய எம்.ஜி.ஆர். நான் விஷயத்தை சொல்லும் முன்பாகவே, வேலையை விட்டுடீங்க .போலிருக்கு .* பணம் கொடுக்க சொல்கிறேன் .* வாங்கிட்டு போங்க என்றார் .* நான் எனக்கு பணம் வேண்டாம் .* பாட்டெழுத்தும் வாய்ப்பு கொடுங்கள் என்றேன்.* அதைக் கொடுக்கும்போது கொடுக்கிறேன் .* இப்போது பணத்தை வாங்கிக்கங்க என்றார் அவர். ,* நான் திரும்பவும் எனக்கு பணம் வேண்டாம் , வேலை கொடுங்கள்* என்றேன்* *அவர் கோபமாய் போனை வைத்துவிட்டார் .* ஆனாலும் என்னை நினைவில் வைத்திருந்து அவராகவே "நினைத்ததை முடிப்பவன் " என்ற படத்திற்காக அழைத்தார் .* ஆனால் அந்த நேரம் எனக்கு அம்மை போட்டிருந்ததால் நான் ஊருக்கு சென்று விட்டேன் . பின்னர் நான் எம்.ஜி.ஆருக்கு எழுதிய முதல் பாடல் "உழைக்கும் கரங்கள் " படத்தில் கந்தனுக்கு மாலையிட்டால் என்ற துவங்கும் பாடல்.


    நான் அவரிடம் பணம் வாங்கி கொள்ள மறுத்தது 1974ம் வருடம் .* ஆனால் , அவர் முதலமைச்சராகி பல்வேறு பணிகளுக்கு இடையே, இருந்தபோது கூட இதை நினைவில் வைத்து* 1981ல் எனக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கியபோது , முத்துலிங்கத்திற்கு நானாக* வலிய சென்று உதவ முற்பட்டபோதும் கூட, அவர் எனக்கு பணம் வேண்டாம்.* வேலை கொடுங்கள் என்று கேட்டதை என்னால் மறக்க முடியாது .* பாவேந்தர்* பாரதிதாசன்* தன்* காலைக்கூட குனிந்து பார்க்க தயங்கும் சுயமரியாதைக்காரர் .* அப்படிப்பட்டவரின் பெயரிலான விருதை நான் முத்துலிங்கத்துக்கு தராமல் வேறு யாருக்கு தரப் போகிறேன்* என்று பேசினார் .* அவர் இதயத்தில் இடம் பிடித்திருந்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ந்து போனேன் .*


    ஆர். ரெங்கசாயி : பாடல்கள் விஷயத்தில் எம்.ஜி.ஆரை திருப்திப்படுத்துவது கடினம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .* அது எந்தளவிற்கு உண்மை ?

    முத்துலிங்கம் : நூறு சதவிகிதம் உண்மை .* எம்.ஜி.ஆர். படத்துக்கு பாடல் எழுதுவது என்றால் மூன்று, நான்கு பல்லவிகள் , சரணங்கள் எழுத வேண்டும் .* அதில் ஏதேனும் ஒன்றை எம்.ஜி.ஆர். தேர்வு செய்வார் .* வரிகளில், வார்த்தைகளில் நிறைய மாற்றங்கள் சொல்லுவார் .* எம்.ஜி.ஆரிடம் ஒரு படத்தில் பணிபுரிந்தால், பிறரிடம் பத்து படங்களில் பணியாற்றிய அனுபவம்* நமக்கு கிடைத்துவிடும் .**


    எஸ். பாஸ்கரன் :* ஒரு பாடலாசிரியருக்கு* எங்கிருந்து வார்த்தைகள் கிடைக்கும்?

    முத்துலிங்கம் : காதுகள் திறந்திருந்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கும்.* *ஊருக்கு உழைப்பவன் என்ற படத்தில்* எம்.ஜி.ஆருக்கு உண்மையிலேயே ஒரு மனைவியும் , குழந்தையும் இருக்கும்போது , அவர் இன்னொரு பெண்ணுக்கு கணவனாக வும் , அவளது குழந்தைக்கு தந்தையாகவும் நடித்துக் கொண்டிருப்பார் .* அந்த நிலையில், தனது நிஜமான குழந்தை இறந்து* போய்விட, அதை அடக்கம்* செய்துவிட்டு* தான் தந்தையாக நடிக்கின்ற வீட்டுக்கு போகும்போது அங்கே உள்ள குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் .* அப்போது எம்.ஜி.ஆர். பாடவேண்டும் . அவர் தனது நிஜ குழந்தை இறந்ததை நினைத்து அழுவதா அல்லது இந்த குழந்தையின் சந்தோஷத்தை நினைத்து சிரிப்பதா என்ற தடு மாற்றமான காட்சியில் பாட வேண்டிய பாடலை நான் எழுதினேன் . பல்லவியை உடனே எழுதி கொடுத்துவிட்டேன் .* அடுத்த பல்லவியை* உடனே எழுத முடியவில்லை .* நான்* எழுந்து நார்த் போக் சாலையில் சுருட்டு பிடித்தபடி நடக்க ஆரம்பித்தேன்
    .

    நான் இதுவரை 1994 பாடல்களை எழுதியிருக்கிறேன் .* சுமார் 200,300பாடல்களுக்கு மட்டும் சுருட்டு புகைத்தபடியே , அங்குமிங்கும் நடந்துதான் பாடல் எழுதி கொடுத்திருக்கிறேன் .* இந்த பாடலுக்காக வும் அப்படி நடந்தபோது , வழியில் ஒரு கார் என்னை உரசியபடி வந்து நின்றது .* உள்ளே பார்த்தல் நடிகர் இசரிவேலனும், வில்லன் கண்ணனும் இருந்தார்கள் .* அவர்கள் என்னை பார்த்து, இந்த வாரம் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்* அருமையாக இருந்தது . சற்றுமுன்பு கூட* தலைவரிடம் முத்துசாமி அதை சிலாகித்து கூறிக்கொண்டிருந்தார் என்று சொன்னார்கள் .* உடனே எனக்கு பொறி தட்டியது . அவர்களை அனுப்பிவிட்டு நேரே எம்.எஸ். வி. முன்பாக பொய் அரமந்தேன். பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன் .* என்று ஆரம்பித்து கிடுகிடுவென்று பாடலை* எழுதி முடித்தேன்.* ஆனாலும் , எம்.ஜி.ஆர் . திருப்தியடைய**மாட்டார் என்பதற்காக, மூன்றாவது* ஒரு பல்லவியும், சரணமும் எழுதி எம்.ஜி.ஆரிடம் மூன்றையும் காட்டினேன் .* அவர் ஓ.கே. செய்த பாடல்தான் பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் என்று ஹிட்டான பாடல் .*

    *

    ஆர். சுந்தரராமன் : எம்.ஜி.ஆருடைய* தேர்தல் பிரச்சாரத்திற்கு , உங்கள்பாடல்கள்தான் உபயோகமாக இருந்தது* என்பது உங்களுக்கு பெருமை தரும் விஷயம்தானே

    முத்துலிங்கம் : 1977ம் ஆண்டு வெளியான , இன்று போல் என்றும் வாழ்க என்ற படத்திற்காக, நான் எழுதிய இரண்டு பாடல்களும் தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆருக்கான பிரசார பாடல்கலாக அமைந்தன . அந்த படத்தில் முதல் பாடலுக்கான பல்லவியை எம்.ஜி.ஆர். ஓ.கே. செய்து விட்டதால், மறுநாள் காலை 9 மணிக்கு ரெக்கார்டிங் கிற்கு ஏற்பாடு செய்து, கே.ஜெ. ஜேசுதாஸ் உட்பட எல்லோரும் வந்துவிட்டார்கள் .* நான் இரவோடு இரவாகச் சரணங்களை எழுதிக் கொண்டு பொய் அதிகாலை எம்.ஜி.ஆரிடம் காட்டினேன். ஆனால் எம்.ஜிஆர். சரணங்கள் திருப்தியாக இல்லை என்று கூறிவிட்டார் .* அதனால் ரெக்கார்டிங் திட்டமிட்டபடி தொடங்கவில்லை . ரெக்கார்டிங் தியேட்டரில் ஏ.சி.ரூமில் அமர்ந்து கொண்டு என்னால் சரியாக யோசிக்க முடியவில்லை .* எனவே, வெளியே வந்து சுருட்டு புகைத்தபடி , அங்கிருந்த சவுக்கு மரங்களை ஒவ்வொன்றாக பிடித்தபடி நடந்து கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன் .* அதை பார்த்த தயாரிப்பாளர் லட்சுமணன் செட்டியார், இந்த முத்துலிங்கம் என்ன இந்த மரத்தைப் பிடிக்கிறான் .* அந்த மரத்தைப் பிடிக்கிறான் . ஆனால் ஒரு சரணத்தைப் பிடிக்க மாட்டேங்கிறானே என்று கமெண்ட் செய்ய ,அது என் காதில் விழுந்தது . உடனே, கோபமடைந்த நான், எம்.எஸ். வியிடம் சென்று ஒழுங்காக சரணம் பிடிக்கிறவனை வச்சுப் பாட்டு எழுதிக்கோங்க என்று கோபப்பட்டு வெளியேற முற்பட்டேன் .**


    எம்.எஸ். வி.யம், இயக்குனர் சங்கரும் என்னை தடுத்து நிறுத்தி , சினிமா துறையில் இதெல்லாம் மிகவும் சகஜம் .* நாங்களெல்லாம் இதை விட பெரிய அவமானங்களை* சந்தித்து விட்டு வந்திருக்கிறோம். என்று கூறி என்னை சமாதானப்படுத்தினர்.* அதன் பிறகு ஒரு வழியாக சரணங்களை எழுதி, எம்.ஜி.ஆரிடம் ஒப்புதல் வாங்கி இரவு 9 மணிக்கு அந்த பாடலின் ரெக்கார்டிங் நடைபெற்றது.* அந்த பாடல்தான் , அன்புக்கு நான் அடிமை , தமிழ் பண்புக்கு நான் அடிமை என்ற ஹிட்டான பாடல் .* அந்த படத்தில் இடம் பெற்றஇன்னொரு பாடல் , இது நாட்டைக் காக்கும் கை, உன் வீட்டை காக்கும் கை , இந்த கை நாட்டின் நம்பிக்கை என்ற பாடல்.* இந்த இரண்டு பாடல்கள்தான் அ .தி.மு.க. வின் பிரசார பாடல்களாக வீதிகளெங்கும் ஒலித்தன .* எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றதும் ,* அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட்* பத்திரிகையில், அந்த இரண்டு பாடல்களையும் குறிப்பிட்டு , இப்படி சினிமாப்பாடல்கள் மூலமாக பிரசாரம் செய்து* இந்தியாவில் ஒரு நடிகர் ஆட்சியை பிடித்திருக்கிறார்* என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள் .* அது எனக்கு பெருமையாக இருந்தது உண்மைதான் .*


    ஆனால், இப்படி நாம் சந்தோஷப்படலாமே தவிர இதுதான் உண்மை என்று நம்பிவிடக் கூடாது .* ஏனென்றால், வெறும் பாடல்களால் மட்டுமே, மக்கள் ஈர்க்கப்பட்டு எம்.ஜி.ஆருக்கு வாக்களித்து விடவில்லை .* ஆரம்ப காலத்தில் இருந்தே அவர் செய்து வந்த சேவைகள், மக்கள் மீது காட்டிய அக்கறை ,அவர் செய்த தான தருமங்கள், ஆகியவை காரணமாக குழந்தைகளும், தாய்மார்களும் அவர்* மீ து மிகுந்த மரியாதையையும்* பாசத்தையும் பொழிந்தனர் .* அதன் காரணமாகத்தான் அவர் வெற்றி பெற்றாரே தவிர , வெறும் சினிமா காட்சிகளும், பாடல்களும் அவரை முதல்வராகி விடவில்லை .* *இன்று பல நடிகர்கள் , தங்களின் சினிமா பிரபலத்தை வைத்து அரசியலுக்கு வந்து முதல்வராகி விடலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள்.* அது எல்லோருக்கும் வசப்பட்டு விடாது .எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்.தான் .

  14. #2850
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அந்தி மழை மாத இதழ் _மார்ச் 2020
    ------------------------------------------------------
    தமிழக சினிமா மற்றும் அரசியலில் எம்.ஜி.ஆர். - ஒரு அலசல்*
    ------------------------------------------------------------------------------------------------


    காங்கிரசில் இருந்துவிட்டு 1953ல் தி. மு.க. வில் இணைந்த எம்.ஜி.ஆர். 1962ல் எம்.எல்.சி.ஆனார் .* 1967 தேர்தலில் அரசியலில் பங்கேற்று , எம்.எல்.ஏ ஆகி கட்சியின் பொருளாளராக பதவி உயர்வு பெற்று பின் கட்சியின் தலைமையோடு மனக்கசப்பில் புதிய கட்சி தொடங்கினார் .**


    ஆக்டொபர் 1972ல் கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆர். ஜூன் 1977ல் முதல்வராகிறார் .இதே கால கட்டத்தில் , அவர் நடித்த 17 படங்கள் வெளியாகி, எம்.ஜி.ஆரின் பிம்பத்தை மக்கள் மனதில் திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தின .புதிய கட்சி ஆரம்பித்த 1972ம் ஆண்டில் , சங்கே முழங்கு, நல்ல நேரம், ராமன் தேடிய சீதை, நான் ஏன் பிறந்தேன்,அன்னமிட்டகை , இதய வீணை என்று ஆறு படங்கள் வெளியாகின .* அது தற்செயலா அல்லது உச்சத்தில் இருக்கும்போது கட்சி ஆரம்பிக்க வேண்டுமென்ற* திட்டமிடலா என்ற கேள்விக்கு விடையில்லை .ஆனால் 1973ல் எம்.ஜி.ஆரின் இரண்டு படங்கள் மட்டும் வெளியாகின .* எம்.ஜி.ஆரின் ரசிகர் மன்றங்கள் திறம்பட இயங்கின .* ஒரு கட்சியின் கிளைகள் போன்று செயல்பட்ட மன்றங்களுக்கு போதுமான நேரத்தை செலவழித்துதான் கட்சியின் பொறுப்புகளைத் தாண்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இருமுறை (1957-59,1961-63) பதவி வகித்துள்ளார் .* அவர் தயாரித்த மூன்று படங்களான நாடோடி மன்னன், அடிமை பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகியவை மூன்று மிக பெரிய கமர்ஷியல் வெற்றி படங்கள் .* தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் தகுதியின் அடிப்படையில் முதலிடம் எம்.ஜி.ஆருக்குத் தான் .மக்களின் நாடி துடிப்பு, பற்றிய புரிதலும், கட்சியை நடத்தும் திறனும் அவருக்கிருந்தாலும், எம்.ஜி.ஆர். 1953-1977ஆண்டுகளுக்கு மத்தியில் சுமார் 42,000 மணி நேரங்கள் அரசியலுக்காக செலவழித்திருக்க கூடும்* என்பதையும் மறந்துவிட முடியாது .அவருடைய சினிமா* மற்றும் அரசியல் சாதனைகள், வெற்றிகள், ஒரு வரலாறு, சகாப்தம் . வேறு எவராலும் இனி சாதிக்க முடியுமா என்பது மிக பெரிய கேள்விக்குறி .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •