-
10th October 2019, 05:35 PM
#1511
Junior Member
Diamond Hubber
இது போல் இனி எப்போதும் யாரும் உருவாக முடியாது,......தன்னை துச்சம் என நினைத்தவன் முன்னால் தவிர்க்க முடியாத சக்தியாக ...மண்ணுக்கும் ...வானுக்கும்...உயர்ந்த மாபெரும் தலைவர்... புரட்சி தலைவர்......... Thanks.........
-
10th October 2019 05:35 PM
# ADS
Circuit advertisement
-
10th October 2019, 05:40 PM
#1512
Junior Member
Diamond Hubber
1972 - அக்டோபர் புரட்சி - மக்கள் திலகத்தின் புகழின் இமாலய வெற்றி..........
புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்கள் திமுகவிலிருந்து நீக்கிய செய்தி அறிந்ததும் அரசியல் - திரை உலக பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் . ரசிகர்கள் மிகவும் கொதித்து எழுந்தார்கள் . சாதாரண பொது மக்களும் அடிமட்ட ஏழைகளும் அதிர்ந்து போனார்கள் .
மக்கள் திலகம் அவர்கள் எந்தவித ஆத்திரம் இல்லாமல் மக்களையும் தன்னுடைய ரசிகர்களையும் நம்பி அடுத்த கட்ட நடவடிக்கைகக்கு தயாரானார் . மக்கள் திலகத்திற்கு ஆதரவு தெரிவித்து அன்றைய வலிமையான ஆளும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் - சட்ட மன்ற - பாராளுமன்ற
உறுப்பினர்கள் ஒருவர் கூட மக்கள் திலகத்திற்கு ஆதரவாக கட்சியை விட்டு வெளியே வரவில்லை
மக்கள் திலகத்திற்கு ஆதரவாக தமிழ் நாடே பொங்கி எழுந்தது . சாலையில் சென்ற அனைத்து வாகனங்கள் மீதும் மக்கள் திலகத்தின் போஸ்டர்ஸ் ஒட்டப்பட்டு சென்றதை நாடு முழுவதும் ஆதரவு அலை வீசியதை அன்றைய நாளேடுகள் - வார ஏடுகள் இந்திய - மற்றும் வெளிநாடுகளில் செய்தியாகவும் எம்ஜிஆரின் மாஸ் பற்றிய கட்டுரையாகவும் வந்தது .
ஒரு நடிகருக்கு ஒரு மாநிலத்தில் இந்த அளவிற்கு மக்கள் செல்வாக்கு - ரசிகர்கள் செல்வாக்கு உள்ளதை வைத்து எம்ஜிஆர் - விரைவில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுக்க போகிறார் என்று
நாடே உணர்ந்து கொண்டது .........
மக்கள் திலகத்திற்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு பெருகுவதை ஒரு சிலரால் ஜீரணிக்க முடியவில்லை . சில பத்திரிகைகள் எம்ஜிஆரின் செய்திகளை இருட்டடிப்பு செய்தார்கள் .
எம்ஜிஆரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலரும் மிரட்டப்பட்டார்கள் . விநியோகஸ்தர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டார்கள் . ரசிக மன்ற நிர்வாகிகள் தாக்கப்பட்டார்கள் - பொய் வழக்குகள் போடப்பட்டது .
மக்கள் திலகம் எதற்கும் அஞ்சவில்லை . நம்பிக்கையுடன் போராடி வெற்றி கண்டார் .
மக்கள் திலகத்தின் "இதய வீணை " படம் வெளிவருவதில் [06.10.1972 வரவேண்டிய படம் ] தள்ளி போடப்பட்டது .
அன்றைய சூழ் நிலையில் "இதயவீணை "படத்திற்கு மேலும் ஒரு பாடல் படமாக்கப்பட்டது .
ஒரு வாலுமில்லே .. நாலு காலுமில்லே என்ற பாடல் படமாக்கப்பட்டு 20.10.1972 அன்று வருவதாக
விளம்பரம் வந்தது .
9.10 -1972 முதல் 16-10 1972 அரசியல் உலகிலும் திரை உலகிலும் ஒரு வித பரப்பரப்பான சூழ் நிலை
நிலவியது . ஒரே கேள்வி ..... எம்ஜிஆர் என்ன செய்ய போகிறார்........ Thanks..........
-
10th October 2019, 05:41 PM
#1513
Junior Member
Diamond Hubber
அக்டோபர் 10 – ஆம் தேதிக்குப் பின்னர் அறிவோம்.
புரட்சித் தலைவரைக் கழக்த்திலிருந்து தறகாலிகமாக நீக்கிவிட்டார்கள் என்னும் செய்தி அன்று மாலைப் பத்திரிகைகள் மூலமும், வானொலிச் செய்தி மூலமும் தமிழகம் முழுவதிலும் காட்டுத்தீயாகப் பரவியது.
அடுத்த நாள் முதல் தமிழகம் முழுவதிலும் தமிழகத்தின் சாலைகளில் ஓடிய வாகனங்களில் எல்லாம், ”பொன் மனச் செம்மல் வாழ்க! பொன்மனச்செம்மலை சஸ்பெண்ட் செய்தததை வாபஸ் வாங்கு!… சர்வாதிகாரம் ஒழிக! அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் வாழ்க என்னும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.
அந்த சுவரொட்டிகளுள் பாதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் கையாலேயே எழுதப்பட்டவையாகும். மீதி உள்ளதை ஆங்காங்கே இருந்த சிறுசிறு அச்சகங்களில் இரவோடு இரவாக அச்சடிக்கப்பட்டவையாகவும் பெரிய அச்சகங்களில் அடிக்கப்பட்டு, ஈரம் காய்வதற்கு முன்னரே எடுத்து வரப்பட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளாயும் இருந்தன.
நெஞ்சில் எழுந்த நினைவலைகள்
சென்னை முதல கன்னியாகுமரி வரையிலும் உள்ள கழகத் தொண்டர்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்து முடிவு செய்து நடவடிக்கையில் இறங்கினார்கள். யாரும் அவர்களைக் கேட்டுக்கொள்ளவில்லை; தூண்டிவிடவில்லை.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்காக பொங்கி எழுந்து களத்தில் குதித்த கழகச் செயல் வீரர்கள் அடுத்த ஒரு வாரகாலம் வரை தம் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
தம் பொருட்டுத் தம் தோழர்கள் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த நெருக்கடியான நிலையில் எம்.ஜி.ஆர் தம் ராமாவரம் தோட்டத்தில் தம் நண்பர்களோடு அமர்ந்து அடுத்துச் செய்யவேண்டியதைப் பற்றி ஆலோசனை செய்துகொண்டிருந்தார்.
அப்போது அவர் உள்ளத்தில் சில பழைய நிகழ்ச்சிகள் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருந்தன.
அறிஞர் அண்ணாவைத் தாம் சந்தித்தது.
முதன்முதலா�..... ............ Thanks..........
-
10th October 2019, 05:44 PM
#1514
Junior Member
Diamond Hubber
இன்று எம்ஜிஆர் ரசிகர்களுக்கு ஓர் பொன்நாள் ! 10-10-1972.
இன்று 10-10-1972 திமுக விலிருந்து எம்ஜிஆர் நீக்கம் ! ஒரு கட்சியில் இருந்து ஒருவரை நீக்கம் செய்ததால் தமிழகம் முழவதும் எதிர்ப்பு போராட்டம் பஸ் மறியல் ஆகியவை இது தான் முதல் முறை !
6 மாதம் தமிழக மந்திரிகள் வெளியே வர முடியவில்லை. முதல் அமைச்சர் கருணாநிதி கூட ஆறு மாதம் கழித்து தான் மேடையில் பேச முடிந்தது. காங்கிரஸ் பத்திரிகைகள் நவசக்தி நாத்திகம் எம்ஜிஆர் க்கு ஆதரவாக பல மாதங்கள் செய்தி வெளியிட்டது........... Thanks Sweetheart Memories.........
-
10th October 2019, 06:53 PM
#1515
Junior Member
Devoted Hubber
Originally Posted by
sivaa
Originally Posted by
SUNDARA PANDIYAN சிவா அய்யா,
103-வது நாளில் சென்னையில் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் ஓடியதாக வசந்த மாளிகை படம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அது அப்படி ஓடவில்லை என்பது உங்களுக்கும் தெரியும்.
அதனால்தான் நேரிடையாக பதில் சொல்ல முடியாமல், நீங்கள் போய் பார்த்தீர்களா என்று கேட்கீறீர்கள்.
நான் சென்னையில் இல்லை. ஆனால், சென்ன நண்பர்கள் மூலம் பேபி ஆல்பட்டை தவிர 103 வது நாளில் வேறு எங்கயும் படம் ஓடவில்லை என்று உறுதியாகத்
தெரியும். ஆன் லைனிலும் தியேட்டர் புக்கிங்கில் சென்று பார்த்தேன். படம் இல்லை.
சரி. நீங்கள் கனடாவில் இருக்கிறீர்கள். இங்கு உள்ள உங்கள் சென்ன நண்பர்கள் யாராச்சும் ஆமாம். 103 நாளில் பேபி ஆல்பர்ட்டை தவிர விளம்பரம் செய்த அந்த தியேட்டர்களில் படம் ஓடியது என்று சொல்லட்டும். அதன்பிறகு நான் பதில் சொல்கிறேன்.
அந்த அளவுக்கு பொய் பேச மாட்டர்கள் என்று நினைக்கிறேன்.
சொல்லப்பட்டவிடயத்துக்கு பதில் சொல்லாமல் எப்பொழுதும் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப்போடுவது இவர்களுக்கு கை வந்த கலை
தூங்குபவனை எழுப்பலாம் தூங்குவதுபொல் பாவனை செய்பவனை எழுப்பமுடியாது.
வாதத்திற்கு மருந்து உண்டு பிடிவாதத்திற்கு மருந்து கிடையாது.
வசந்த மாளிகை 103 வது நாள் சென்னையில் பேபி ஆல்பர்ட்டில் மட்டும்தான் திரையிடப்பட்டது
பேபி ஆல்பர்ட் தவிர சென்னையில் வேறு தியேட்டர்களில் 103 வது நாள் திரையிடப்படவில்லை
ஆனால் வேறு சில ஊர்களில் திரையிடப்பட்டிருந்தது விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.
அதைதான் போய் பார்த்தீர்களா என கேட்டிருந்தேன்
எங்கள் தலைவர் மனநோயாளி அல்ல.
உங்கள் துணை நடிகர்தான் கடைசி காலத்தில் சினிமாவில் மார்க்கெட் இழந்து மனநோயாளியாகி அரசியலில் புகுந்து கட்சித் தலைவர் பதவியாச்சும் கிடைக்காதா என்று ஆசைப்பட்டு ஜனதாதளத்தில் எல்லாம் சேர்ந்தார். தலைவர் பதவிக்காக.
கடைசியில் அந்தக் கட்சியும் காலியாகிவிட்டது. பாவம்.
அரசியல் ஞானி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு ரசிகர்களுக்கு தெரியாமல் எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் யாருக்கும் தெரியாமல் டெல்லி போய் மரகதம் சந்திரசேகர் மூலமாக இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணை நடிகர்தான். கள்ளம் கபடம் இல்லாதவர் ஆச்சே. அப்படித்தான் செய்வார்.
எமர்ஜென்சியால் நொந்துபோன காமராஜருக்கு துரோகம் செய்து அவர் மறைந்தவுடன் ரசிகனுக்கும் தெரியாமல் யாருக்கும் சொல்லாமல் டெல்லி ஓடி இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணைநடிகர்தான். நாங்கள் இல்லை.
நடிகர்திலகம் அன்றுதொட்டு அவர் வாழ்ந்தவரை கொடுத்தகொடைகள் இது நாள்வரை
பெரிதாக வெளியே தெரியாமல் இருந்தவை தற்பொழுது முழுமையாக தெரியவர ஆரம்பித்துள்ளது.
ஒப்பீடு செய்தால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைவிடவும் , சினிமா நடிகர்களுக்குள்
ஏனைய நடிகர்களைவிடவும் பன்மடங்கு கொடுத்தவர் நிஜவள்ளல் கர்ணன் சிவாஜி கணேசன் மடடுமே.
அப்படி இருக்கையில் ஸ்டண்ட் நடிகரின் ரசிகர்கள் ,அவரின் அடிவருடி பத்திரிகைகள்,பணப்பிசாசு எழுத்தாளர்கள்
முதுகு எலும்பற்ற அரசியல்வாதிகள்,கைகூலிகள் அனைவரும் நடிகர் திலகத்தின் கொடை திறன் தெரிந்தும்
கஞ்சன் என்றுதானே சொல்கிறார்கள்.
அதேபோன்று எந்தவித பதவிக்கும் ஆசைப்படாத,நடிகர் திலகத்தை பார்த்து பதவிக்காக கட்சியில் சேர்ந்தார் என்று எழுதுகிறீர்கள்
எழுதுபவர்களுக்கு கை கூசியிருக்கும் சொல்பவர்களுக்கு நா கூசியிருக்கும்.
எங்கள் தலைவரைப் பத்தி அபாண்டமாக தனிப்பட்ட முறையில் எழுதும்போது கைகூசவில்லை. நாக்கு கூசவில்லை. ஆனால், உங்கள் நடிகரைப் பத்தி உண்மையச் சொன்னால் மட்டும் எங்களுக்கு நாக்கு கூசுமா. கைகூசுமா.
சிவா
எங்கள் தலைவரைப் பத்தி மோசமான பதிவு தனிப்பட்ட முறையில் உங்கள் திரியில் போட்டிருக்கிறீர்களே. எங்கள் தலைவருக்கு 3 பெண்டாட்டி என்றாலும் முறைப்படி பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
உங்கள் நடிகரைப் போல ரத்னமாலா என்ற நடிககையை திருமணம் செய்து கொண்ட நட்டாற்றில் விட்டவர் அல்ல. அந்த நடிககை்கு ஒரு பெண் குழுந்தை அதயும் அனாதயாக விட்ட உலக மகா உத்தமன் உங்கள் நடிகன்.
அதப்புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கும் இது எல்லாம் பழய கதை தெரியும்.
உங்கள் திரியில் மக்கள் திலகத்தைப் பற்றி மோசமாக பதிவு எடுத்து நீங்கள் போட்டதால் நான் இதை சொல்ல வேண்டி இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
http://vikatandiary.blogspot.com/200...g-post_28.html
சிவாஜியின் நிழல் மனைவி!
பலம், பலவீனம் இரண்டுமே மனிதர்களுக்கு உண்டு. குணம் மட்டுமல்ல, குறைகளும் எல்லோருக்கும் பொதுவானது. அவன் சாதாரணனாக இருந்தாலும் சரி, சாதனையாளனாக இருந்தாலும் சரி! குற்றமே இல்லாத பரிபூரணன் என்று எவரையும் சொல்லிவிட முடியாது. நற்குணங்களில் அப்பழுக்கு சொல்ல முடியாத தூயோனான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே, வானர ராஜன் வாலியை மறைந்திருந்து கொன்றதில் குற்றம் சாட்டப்படுகிறார். வாலியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல ராமனுக்கு வாய் எழவில்லை. பதில் சொல்ல வாயற்றுப் போன நிலையில், அவரின் தம்பி லக்ஷ்மணன்தான் அண்ணனின் சார்பாக வாலிக்குப் பதில் சொல்கிறான். அவன் அண்ணனின் செயலை நியாயப்படுத்த ஆயிரம் சப்பைக்கட்டு கட்டினாலும், ராமன் செய்தது குற்றம் குற்றம்தான்! அதற்குத் தண்டனையாகத்தான் அடுத்த யுகத்தில் ராமன் கண்ணனாகவும், வாலி ஒரு வேடுவனாகவும் அவதரித்து, கண்ணனை அந்த வேடுவன் மறைந்திருந்து அம்பெய்து கொன்றான்.
ராமர் தனது வாழ்க்கையில் 18 முறை தவறு செய்திருக்கிறார் என்கிறது வால்மீகி ராமாயணம். வால்மீகி ராமாயணத்தைப் பொறுத்தவரை ராமர் கடவுள் அல்ல; மனிதன். தவறு எதுவுமே செய்யாதவனாக ஒருவன் இருப்பானேயானால், அவன் கடவுளாகிறான். எந்தவொரு மனிதனும் தன் வாழ்க்கையில் குறைந்தபட்சம் 18 முறை தவறு இழைப்பான் என்பது புராண ஐதிகம். ஆகவேதான் வால்மீகி தன் கதாநாயகனான ராமனை, கதைப்படி சரியாக 18 முறை தவறு செய்திருப்பவனாகக் காட்டியுள்ளார்.
மனிதர்களிடத்தில் உள்ள குணத்தையும் குறைகளையும் அலசி ஆராய்ந்து, இரண்டில் எது அதிகமோ அதன்படி அவனை நல்லவன் அல்லது கெட்டவன் என்று வகைப்படுத்துங்கள் என்கிறார் வள்ளுவர். ‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்’.
சரி, விஷயத்துக்கு வருகிறேன். சில நாட்களுக்கு முன்புதான் நடிகர் திலகம் பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். இது அவரின் சாதனைக்கும் பெருமைக்கும் எந்தவிதக் குறைவையும் ஏற்படுத்திவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனாலும், இதுவரை சிவாஜி பற்றி நான் கேள்விப்படாத ஒரு விஷயத்தை முதன்முதலாகக் கேள்விப்பட்டபோது என் மனசு சற்றுத் துணுக்குற்றது என்பது உண்மை!
சிவாஜியின் மனைவி கமலாம்மா என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், சிவாஜிக்கு இன்னொரு மனைவி இருந்திருக்கிறார் என்பது தெரியுமா? எனக்கு இத்தனை நாள் தெரியவில்லை.
அந்தப் பெண்மணியின் பெயர் ரத்னமாலா. சென்னை தியாகராய நகரில்தான் வசித்து வந்திருக்கிறார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்மணி என்று அறிகிறேன். அவர் வீட்டு வாசலில் ‘ரத்னமாலா கணேசன்’ என்று பெயர்ப் பலகை இருந்துள்ளது. அந்த கணேசன் ஜெமினிகணேசனாக இருக்குமோ என்று பலர் குழம்பியிருக்கிறார்கள். இல்லை; அது சிவாஜிகணேசனைக் குறிப்பதுதான்.
ரத்னமாலா ஒரு நாடக நடிகை. ‘என் தங்கை’ படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்தவர் ஈ.வி.சரோஜா. அது படமாவதற்கு முன்பு நாடகமாக நடத்தப்பட்டது. அதில் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்தவர் ரத்னமாலாதான். “என் தங்கை நாடக ரிகர்சல் எங்கே, எப்போ நடந்தாலும் தம்பி கணேசன் தவறாமல் வந்துடுவார்” என்று எம்.ஜி.ஆர். குறும்புப் புன்னகையோடு கமெண்ட் அடிப்பது வழக்கமாம். விஷயம் தெரியாதவர்களுக்கு இது சாதாரணமாகப் படும். சிவாஜி ரத்னமாலாவை நேசித்தார் என்று தெரிந்தவர்களுக்கு மட்டுமே அதன் உள்ளர்த்தம் புரியும்.
‘இன்பக் கனவு’ நாடகத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக நடித்தார் ரத்னமாலா. ‘பராசக்தி’ திரைப்படமாக எடுக்கப்படுவதற்கு முன்பு பலமுறை நாடகமாக நடிக்கப்பட்டது. அதில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் ரத்னமாலாதான். அதே போல ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்திலும் சிவாஜிக்கு ஜோடியாக, ஜக்கம்மாவாக (திரைப்படத்தில் இந்த கேரக்டரைச் செய்தவர் எஸ்.வரலட்சுமி) நடித்திருக்கிறார் ரத்னமாலா. சிலர் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்...’ என்று பாடி ஆடிய நடிகைதான் ரத்னமாலா என்று தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அல்ல; அவர் வெறும் ‘ரத்னா’. ரத்னமாலா திரைப்படங்களில் நடித்திருப்பதாகத் தெரியவில்லை.
ரத்னமாலா ஒரு நடிகை மட்டுமல்ல; நல்ல பாடகியும்கூட. படு ஹிட்டான பாடல் ஒன்றைச் சொன்னால் ‘அட, அவரா!’ என்பீர்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ‘போகாதே போகாதே என் கணவா...’ பாடலைப் பாடியது ரத்னமாலாதான். ‘குமார ராஜா’ என்கிற படத்தில் ஜே.பி.சந்திரபாபு பாடிய, ‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே’ பாடல் நமக்குத் தெரியும். அதே படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து, ‘உன் திருமுகத்தை ஒருமுகமா திருப்பு’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார் ரத்னமாலா. ‘அன்னை’ என்றொரு படம்; பி.பானுமதி நடித்தது. அதில் சந்திரபாபுவுடன் இணைந்து ‘தந்தனா பாட்டுப் பாடணும், துந்தனா தாளம் போடணும்’ என்று பாடுபவர் ரத்னமாலாதான். அதே போல ‘குலேபகாவலி’ படத்தில் ‘குல்லா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு’ பாடலைப் பாடியதும் ரத்னமாலாதான். வாழ்க்கை, ராணி சம்யுக்தா என இப்படி அவர் சுமார் 100 படங்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.
சிவாஜி ரத்னமாலாவை ஊரறியத் திருமணம் செய்துகொள்ள முயன்றபோது அவரைத் தடுத்து, “வேண்டாம்! உங்களிடம் மிகச் சிறந்த நடிப்புத் திறன் இருக்கிறது. நீங்கள் மேலும் மேலும் உயரங்களுக்குப் போக வேண்டியவர். உங்கள் இமேஜ் பாழாகிவிடக் கூடாது. ஊரறிய நம் திருமணம் நடக்கவில்லை என்றாலும், நான் உங்கள் மனைவிதான். அதில் சந்தேகம் இல்லை. நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடருங்கள். அதில் குறுக்கே வர நான் விரும்பவில்லை” என்று தீர்மானமாக மறுத்து ஒதுங்கிவிட்டார் ரத்னமாலா. சிவாஜியின் மனைவி கமலாவுக்கும் இந்த விஷயம் தெரியும் என்றும், அவர் ரத்னமாலாவை தன் மனதில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றினார் என்றும் சொல்கிறார்கள். சிவாஜி எந்த ஒரு புதுப் படத்தில் ஒப்பந்தம் ஆனாலும், எந்த ஒரு நல்ல செய்தி கிடைத்தாலும், முதலில் ரத்னமாலா வீட்டுக்குப் போய் அந்தச் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்வார் என்கிறார்கள்.
சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் பிறந்த பெண் குழந்தையின் பெயர் லைலா. லைலாவின் கணவர் பெயர் தன்ராஜ். இவர் ஒரு நாடக நடிகர். விஷயம் தெரிந்தவர்கள் தன்ராஜை ‘சிவாஜியின் மருமகன்’ என்றே அழைப்பார்களாம்.
கடைசி காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட ரத்னமாலா சமீபத்தில்தான், அதாவது 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதியன்றுதான் இறைவனடி சேர்ந்தார். சாகும்போது அவருக்கு வயது 76. அவர் தம் கண்களை தானமாக எழுதி வைத்திருந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சரத்குமார், மனோரமா, மஞ்சுளா உள்ளிட்ட பலர் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
கோவலனை மட்டுமே மனதில் நிறுத்தி கற்பு நெறியிலிருந்து பிறழாமல் வாழ்ந்ததால், சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சமமான இடம் மாதவிக்கும் உண்டு. அதே போல், எந்தவொரு இடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னை நேசித்த சிவாஜியின் நலனையும் உயர்வையும் மட்டுமே கருத்தில் கொண்டு, அவரின் உண்மையான மனைவியாக வாழ்ந்து மறைந்த ரத்னமாலா என் மனதில் ரத்தின மாலையாகவே ஜொலிக்கிறார்.
(
-
10th October 2019, 07:05 PM
#1516
Junior Member
Devoted Hubber
அந்தப் பக்கம் ஒருத்தன் ரொம்ப ஓவரா மரியாதை இல்லாமல் குலைக்கிறான்.
1989 தேர்தலில் திருவயாறு மக்கள் காரித்துப்பி செருப்பாலடித்து தோக்கடிச்சது வாழும் போதே கோமாளியாகி இறந்தும் சிலையாகி நிற்கக் கூட இடமில்லாமல் காங்கிரஸ்காரன் போட்ட கேஸ் காரணமாக விரட்டப்பட்டு கோமாளியானது உங்கள் நடிகன்தான்.
ஊருக்குத் தெரியாமல் ஒரு நாடக நடிகையை மனைவியாக்கி அவளையும் அவள் மகளையும் அம்போனு விட்ட உங்கள் நடிகன் உலக உத்தமானா?
1980-ல் ஒரே நடிகைக்காக அப்பனும் மகனும் அடித்துக் கொண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சம்பவம் நாடறிந்தது. அதிலிருந்து உங்கள் குடும்பத்தை காப்பற்றியது முதல்வராக இருந்த புரட்சித் தலைவர்தான்.
இளையமகன் ஒரு குண்டுபூ நடிகையை ரகசியமாக கல்யாணம் செய்து கொண்ட செய்தி தினத்தந்தியில் முதல் பக்கம் கொட்டை எழுத்தில் போட்டான். அப்புறம் அந்த நடிகையை வெட்டிவிட்டான்.
கடைசியில் அப்பனும் இளைய மகனும் அடித்துக் கொண்ட அந்த நடிகையின் அக்காளையே மூத்த மகன் கல்யாணம் செய்து கொண்டான். அதுவும் திருட்டுத்தனமாக இரண்டாம்தாராமாக.
அப்பனுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கானுங்க.
கேடு கெட்ட நாறிப்போன குடும்பத்தின் அடிவருடிகளான நீங்களா மனித தெய்வம் புரட்சித் தலைவர் பற்றி பேசுவது?
உனக்கெல்லாம் என்னடா தகுதி இருக்கு.
நக்கத் திலகத்தின் ரசிகனான உனக்கே இவ்வளவு என்றால் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்.
-
10th October 2019, 07:09 PM
#1517
Junior Member
Devoted Hubber
ரவிச்சந்திரன்
தப்பாக நினக்காதீர்கள்.
மக்கள் திலகத்தை தனிப்பட்ட முறையில் அவருடைய ஒழுக்கத்தைப்பற்றி எல்லாம் பொறாமை புடிச்சவன்கள் எழுதுகிறான்கள். அதனால்தான் நாம்பளும் சொல்ல வேண்டிய கட்டாயம்.
அவனுங்க திரியில் மோசமான பதிவை எல்லாம் எடுக்காம இருக்கிறான்கள்.
புரட்சித் தலைவரின் பக்தரான நீங்களும் எனது பதிவ நீக்காதீர்கள்.
அவனுங்க நீக்கினால் நாம்பளும் நீக்கலாம்.
நன்றி.
சினிமாவில் யானைகளையும் அரசியலில் நரிகளையும் தோற்கடித்த எக்காலத்திலும் எவனும் நெருங்கக்கூடிய முடியாத புரட்சித் தலைவர் புகழ் வாழ்க.
-
10th October 2019, 07:13 PM
#1518
Junior Member
Devoted Hubber
திரியை நடத்துபவர்கள் மாடரேட்டர்கள் கவனத்துக்கு,
முதலில் நான் தவறாக யாரைப்பற்றியும் எழுதவில்லை.
சிவாஜி கணேசன் திரியில் எப்படி எல்லாம் மக்கள் திலகம் எம்ஜிஆரைப்பற்றி எழுதுகிறார்கள் என்று பாருங்கள்.
அதனால்தான் நான் பதில் சொல்ல வேண்டி வந்தது.
என் மீது நடவடிக்கை என்றால் அவர்கள் மீதும் எடுங்கள். நன்றி
-
11th October 2019, 12:17 AM
#1519
Junior Member
Diamond Hubber
-
11th October 2019, 12:18 AM
#1520
Junior Member
Diamond Hubber
Bookmarks