-
24th June 2019, 02:40 PM
#221
Junior Member
Diamond Hubber
என்னைப் பொறுத்தவரை தலைவரின்
வயது யாருக்குமே தெரியாது, ஆனால்1977ல் சட்டமன்றத்தில் தலைவர் பேசிய போது சென்னைக்கு எம்டன் கப்பல் வந்தபோது பாய்ஸ் கம்பெனியில் இருந்தேன்...கப்பலை ப் பார்க்கச் சென்றேன்...ஆனால் பார்க்க முடியவில்லை என்று பேசியது...சட்டமன்ற பதிவேட்டில் உள்ளது...அந்தக்கப்பல் சென்னைக்கு வந்த ஆண்டு 1914...அப்படி இருக்க யார் அவர்...1917ல் பிறந்தார் என்று சொன்னது...,தலைவர் உயிரோடு இருந்தவரை யாருமே சொன்னதில்லையே... Courtesy: fb.........
-
24th June 2019 02:40 PM
# ADS
Circuit advertisement
-
24th June 2019, 02:43 PM
#222
Junior Member
Diamond Hubber
ஆல்பர்ட் பால்... என்கிற நான்... மும்பையில் பிறந்து வளந்தவன். என்னுடைய 13 வயதில் தலைவர் எம்.ஜி ஆர்., படங்கள் (காவியங்கள்) பார்த்துட்டு அவரின் ரசிகன் ஆனேன். ரசிகன் மட்டும் இல்லாமல் தலைவர் ரசிகர்கள் அனைவரையும் ஒன்று இணைத்து மக்கள் திலகம் MGR ரசிகர் மன்றம் என்று மாட்டுங்க என்ற இடத்தில் ஆரம்பித்து வைத்தோம்.இனிமேல் அடிக்கடி எங்கள் ரசிகர் மன்றம் மூலம் செய்த காரியங்கள் உங்களுடன் பகிந்து கொள்வேன்...... Thanks wa.,
-
24th June 2019, 02:51 PM
#223
Junior Member
Diamond Hubber
மும்பையில் மூன்று தியேட்டர்ல தமிழ் படம் தினசரி நாலு காட்சிகள் நடக்கும், மற்ற இடங்களில் ஞாயிறு காலை காட்சி நடக்கும். தலைவர் படம் ரிலீஸ் ஆகும் கூட்டம்
.. அலைமோதும். எங்கள் மன்றம் சார்பாக தியேட்டர் அலங்காரம் செய்யப்படும்.படம் ரிலீஸ் ஆகும் முந்தய இரவு தியேட்டர் போய் எப்படி அலங்காரம் செய்ய வேண்டும் என்பதை நண்பர்களீடம் கூறி விட்டு நான் வீட்டுக்கு போய் விடுவேன். மறுநாள் காலை போய் பார்த்தால் மிகவும் அருமையாக அலங்காரம் செய்து இருப்பார்கள். இப்படி தலைவர் புது படம் ரிலீஸ் ஆகும் நேரங்களில் அலங்காரம் செய்வோம். எங்கள் மன்றம் தவிர மற்ற ரசிகர்கள் குவிந்து விருவார்கள். ............. Thanks wa.,
-
24th June 2019, 02:52 PM
#224
Junior Member
Diamond Hubber
இதயக்கனி திரைப்படம் மும்பையில் ரிலீஸ் ஆன அன்று இரவு மன்றம் சார்பாக சிறப்பு காட்சி நடத்தப்பட்டது. படத்தின் கதாநாயகி ராதா சலுஜா அவர்களை கூப்பிட்டு விழா நடத்தினோம். படத்தின் இடைவெளி நேரத்தில் திரை மேடையில் அவரை கூப்பிட்டு வரவேற்பு அளித்தோம். நாங்கள் மன்றம் சார்பாக ஒரு சிறப்பு மலர் ஒன்றை தயார் செய்து இருந்தோம். அதை ராதா சலுஜா அவர்கள் மூலம் வெளியீடு செய்தோம். ....தலைவர் ரசிகர்கள் மிகவும் சந்தோசம் அடைந்தோம். இது போல பல விஷயம் உங்கள் உடன் பகிர்ந்து கொள்வேன்......... Thanks wa.,
-
24th June 2019, 02:57 PM
#225
Junior Member
Diamond Hubber
1976 ஆண்டு ஜனவரி மாதம் 13 தேதி என்னால் மறக்க முடியாத நாள். மும்பையில் இதயக்கனி சிறப்பு காட்சி ரசிகர் மன்றம் சார்பாக நடத்தி சிறப்பு மலர் வெளியிட்டம். சென்னை சென்று தலைவர் அவர்களை சந்தித்த முடிவு செய்தோம். மன்றம் நண்பர்கள் உடன் கார் மூலம் சென்னை புறப்பட்டு போனோம். தலைவர் சத்திய ஸ்டுடியோவில் இருப்பது தெரிந்து உடன் அங்கு புறப்பட்டு போனோம். ஸ்டூடியோ உள்ள பல தரப்பு முக்கியஸ்தர்கள் தலைவரே காண காத்து இருந்தார்கள். எங்களை கண்ட தலைவர் உதவியாளர் உடனே தலைவருக்கு நாங்கள் வந்து இருப்பதை கூறி உள்ளார். தலைவர் உடனே எங்களை ஷுட்டிங் நடந்த இடத்துக்கு வர கூறினார். நாங்கள் அவரை சந்தித்து நாங்கள் கொண்டு வந்த மலரை தலைவர் கிட்ட காண்பிச்சேன், முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரைக்கும் படித்தார், தலைவர் மிகவும் சந்தோசம் அடைந்தார். மகாராஷ்டிரா முதல்வர், Governer, மற்ற முக்கியமானவர்கள் வாழ்த்துக்கள் மடல் அதில் இருந்தது.பத்து நிமிடம் எங்கள் உடன் பேசிட்டு நாளை பொங்கல் தோட்டத்தில் வந்து போகவும் என்று அன்புடன் அனுப்பி வைத்தார்.எவ்வளவு பெரிய மனிதர்கள் இருந்தும் எங்களை உடனே பாக்க கூப்பிட்டு பேசியதும் எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. தலைவர் ரசிகர்களை எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டோம்......... Thanks wa.,
-
24th June 2019, 10:42 PM
#226
Junior Member
Diamond Hubber
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எந்த அதிகாரப் பதவியில் இல்லாதபோதும் பல்வேறு நாடுகளின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
நடிகராக இருந்த ஒருவரை அவரது மக்கள் சேவைக்காக பல்வேறு உலக நாடுகள் அழைப்பு அனுப்பி கவுரவித்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ள சிறப்பு!
சிறு வயதில் நாடகத்தில் நடிப்பதற் காக எம்.ஜி.ஆர். ரங்கூனுக்குச் சென்றுள்ளார்.
பின்னர், 1965-ம் ஆண்டு இலங்கையில் தொண்டு அமைப்புகள், பத்திரிகை சங்கங்கள் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தன. அதை ஏற்று, நடிகை சரோஜா தேவி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோருடன் இலங்கை சென்ற எம்.ஜி.ஆரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்ற னர். முன்னும் பின்னும் பைலட் கார்கள் அணிவகுக்க எம்.ஜி.ஆருக்கு இலங்கை அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது.
சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர்.
யாழ்ப்பாணம் விளையாட்டு மைதா னத்தில் நடந்த வரவேற்பு கூட்டத்துக்கு இலங்கை நீதிபதி தம்பையா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ‘‘எம்.ஜி.ஆர். சிறந்த கலைஞர் மட்டு மல்ல; சிறந்த கொடையாளி.
என் வாழ்நாளில் இந்தப் பகுதியில் இப்படி ஒரு பெருங்கூட்டத்தை பார்த்ததில்லை. தன்னைக் காண இலங்கையிலும் பெரும் கூட்டம் கூடும் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்துவிட்டார்’’ என்றார்.
இலங்கை பிரதமர் டட்லி சேனநாய காவை மரியாதை நிமித்தமாக சந்தித்த எம்.ஜி.ஆர், அவருக்கு தென்னிந்திய நடி கர் சங்கத்தின் சார்பில் தந்தத்தால் செய் யப்பட்ட நேரு சிலையையும் தன் சார்பில் தந்தத்தில் ஆன மேஜை விளக்கையும் பரிசளித்தார். சிங்கள திரைப்படக் கலை ஞர்கள் சார்பில் இலங்கை விஜயா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளிக்கப்பட்டது. தான் பிறந்த கண்டி நகரையும் சென்று பார்த்தார்.
1965 அக்டோபர் 22-ம் தேதி கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது. இலங்கை உள்நாட்டு அமைச்சர் தகநாயகா வரவேற்புரை வழங்கினார். அப்போது பலத்த மழை. அப்படியும் எம்.ஜி.ஆரின் பேச்சை லட்சக்கணக்கானோர் நனைந்தபடியே கேட்டனர். இலங்கை கலாச்சாரத் துறை அமைச்சர் காமினி ஜெயசூர்யா, எம்.ஜி.ஆருக்கு ‘நிருத்திய சக்கரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த வருமாறு அந்நாட்டு அரசு எம்.ஜி.ஆருக்கு 1972-ல் அழைப்பு அனுப்பியது. அதை ஏற்று, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் உள்ளிட்டோருடன் சிங்கப்பூருக்கு எம்.ஜி.ஆர். சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்தி நடிகர் சசிகபூரும் வந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். சிங்கப்பூர் மேயர், எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளித்தார். எலிசபெத் ராணிக்குப் பிறகு வாகனங்கள் நிறுத்தப்பட்டு எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது!
‘‘எங்கள் குழுவினரின் கலை நிகழ்ச்சி கள் மூலம் சுமார் ஒரு லட்சம் டாலர் வரை (செலவு போக) சேர்ந்திருக்கும் என எண்ணுகிறேன். அந்த வரவேற்பை, அந்நாட்டின் வளர்ச்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது’’ என்று 1973-ம் ஆண்டு ஜனவரி மாத ஃபிலிமாலயா இதழில் சிங்கப்பூர் பயணம் பற்றி எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.
மாஸ்கோவில் 1973-ல் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் கலந்து கொள்ள வருமாறு எம்.ஜி.ஆருக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது. ரஷ்யா செல்லும் முன் டெல்லி சென்ற எம்.ஜி.ஆருக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய படவிழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.
இந்திய அரசின் சார்பில் அப்போது செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால் (பின்னாளில் பிரதமராகவும் பதவி வகித்தார்) கலந்து கொண்டு பேசினார். படவிழா பிரதிநிதிகளுக்கு எம்.ஜி.ஆரை அவர் அறிமுகம் செய்து வைத்ததோடு, தமிழகத்தில் அவரது செல்வாக்கு பற்றியும் அவரது படங்களின் மகத்தான வெற்றிகள் பற்றியும் எடுத்துரைத்தார். லெனின்கிராடு நகருக்கும் எம்.ஜி.ஆர் சென்றார். ரஷ்ய வானொலி நிலை யத்தினர் அவரைப் பேட்டி கண்டு அதை ரஷ்ய மொழியில் ஒலிபரப்பினர்!
பின்னர், மாஸ்கோவில் இருந்து லண்டனுக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.!
லண்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., லண்டன் பி.பி.சி. வானொலிக்கு சிறப்புப் பேட்டி அளித் தார். அங்கிருந்து பாரீஸ் நகருக்குச் சென்று அங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, கிழக்கு ஆப் பிரிக்கா சென்றுவிட்டு இந்தியா திரும்பினார்!
நடிகராக இருந்தபோது, ஒரு நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு!
1974-ம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர். கலந்துகொண்டார்!
1974-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆர். அமெ ரிக்கா சென்றார். அமெரிக்க அரசின் தூதர் வரவேற்று அழைத்துச் சென்றார்.
ஹவாய் பல்கலைக்கழகத்தில் அளித்த பேட்டியின்போது சிக்கலான கேள்வி களுக்கு எம்.ஜி.ஆர். சாதுர்யமாகவும், நேர்மையாகவும் பதிலளித்து வியப்பில் ஆழ்த்தினார்! புகழ்பெற்ற மவுன்ட் சினாரியோ கல்லூரி சார்பில் அவருக்கு வரவேற்பிதழ் அளிக்கப்பட்டது. அரிசோனா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்த போது அதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார்!
ஜப்பான் உள்ளிட்ட கீழ்திசை நாடுகளில் படமாக்கி, தயாரித்து, இயக்கி, எம்.ஜி.ஆர். நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. நிஜத்திலும் அவர் உலகம் சுற்றிய வாலிபன்தான்!
வாழ்க புரட்சித் தலைவர் நாமம்
வளர்க அவர் புகழ்.............. Thanks wa.,
-
24th June 2019, 10:43 PM
#227
Junior Member
Diamond Hubber
ஒரு மாமனிதர் இருந்தார்!
கோடை காலம் விடை பெற்றுக் கொண்டிருந்த ஒரு ஜூலை மாதம் அது…
கல்லூரியின் இளங்கலை வகுப்பில் அப்போதுதான் அடியெடுத்து வைக்கிறார்கள் அந்த மாணவர்கள்.
கல்லூரியைப் பற்றியோ அந்த கடற்கரைச் சாலை பற்றியோ எந்த விவரமும் தெரியாத கிராமத்து மாணவர்கள்…
கல்லூரி அலுவலகத்தில் சேர்க்கைக் கட்டணம் செலுத்தப் போனபோது, திடீரென்று கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்கள்.
அழைப்புக் கடிதத்தில் சொன்னதைவிட 400 ரூபாய் அதிகம். அது ஒரு பெரிய தொகைதான். ஊருக்குப் போய் வாங்கி வந்தால்தான் உண்டு. மணியார்டர் அனுப்பச் சொல்லாம் என்றாலும், முகவரி கிடையாது.
கலங்கி நின்ற அனைவரையும் ஒன்று திரட்டினர் சிலர். ‘முதல்வரைப் பார்க்கப் போகலாம் வாருங்கள்’ எனப் புறப்பட்டனர். கல்லூரி முதல்வரையல்ல… கருணையின் அடையாளமான தமிழக முதல்வர் எம்ஜிஆரை!
20 மாணவர்கள் சென்றார்கள் தலைமைச் செயலகத்துக்கு. வாயிலில் இருந்த இரு காவலர்கள்தான் முதல்வர் அறையைக் காட்டினர். மெட்டல் டிடெக்டர் சோதனையெல்லாம் கிடையாது. மனித நேயத்தின் உணர்வுகள் தெரியாத கருவிகளின் பாதுகாப்பு தேவை இருக்கவில்லை அப்போது.
அட, ‘முன் அனுமதி வாங்கினீர்களா?’ என்றுகூட மாணவ்ரகளிடம் யாரும் கேட்கவில்லை.
முதல்வரின் உதவியாளர் அந்த மாணவர்களில் நால்வரை மட்டும் முதல்வரின் அறைக்குள் அனுமதித்தார்.
எதிரியையும் தன் வசப்படுத்தும் அசாத்தியப் புன்னகையோடு அந்த மாமனிதர், மாணவர்களை வரவேற்றார். அவரால் சரியாக பேச முடியாத காலகட்டம் அது. பக்தர்களிடம் என்ன மொழியில் பேசுகிறார் கடவுள்… அந்த மாமனிதரும் அப்படித்தான். எத்தனையோ லட்சம் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்த ஆண் சரஸ்வதி அவர்.
மாணவர்கள் கண்ணீருடன் சொன்னதைக் கருணையுடன் கேட்டவர்… சற்று தடுமாறியபடி சொன்ன வார்த்தை, ‘நல்லா படிக்கணும்… வகுப்புக்குப் போங்க. நான் பார்த்துக்கறேன்..!’
எழுந்து வந்து தோளில் கையை வைத்து, தேவ ஆசி மாதிரி கூறினார்.
அந்த வார்த்தைகள் இப்போதும், காதுகளில் ஒலித்தபடி இருக்கின்றன… நினைக்கும் போதெல்லாம் நெகிழ்வில் கண்களை நீர் முத்துகள் மறைக்கின்றன.
அந்த அறையை விட்டு வெளியில் வந்த சில வினாடிகளில் முதல்வரின் உதவியாளர் மீண்டும் வந்தார்.
‘போகும்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரைப் பார்த்துவிட்டுப் போங்கப்பா… முதல்வர் உத்தரவு போட்டுட்டார்… கவலைப்படாம பத்திரமா கல்லூரிக்கு போகச் சொன்னார்…’ என்றார்.
தலைமைச் செயலகத்திலிருந்து எழிலகம் செல்வதற்குள் உத்தரவு தயாராக இருந்தது.
‘அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் ரத்து… முதல்வர் எம்ஜிஆர் உத்தரவு!!’
நம்பினால் நம்புங்கள்… இந்த உத்தரவுக்குப் பின் கல்லூரிக்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கட்டிய தொகை வெறும் ரூ.65 மட்டும்தான். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கட்டியது ரூ.15!!
அந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் உதவித் தொகையை உயர்த்தி படிப்புச் செலவு குறித்த கவலையின்றி படிக்கும் வகை செய்தார்…
பொதுவாகவே பெயருக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களையும் படிப்புகளையும் சுமந்து கொண்டே திரியும் வழக்கம் பிடிக்காதவன் நான். எம்ஜிஆர் பார்க்காத பட்டமா…
ஆனால் இப்போது நிச்சயம் அவற்றை என் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் போட்டுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்…
ஏன் தெரியுமா?
இந்த நாட்டின் அடையாளம் காணப்படாத ஒரு குக்கிராமத்தில், ஏழ்மையில் பிறந்தவனும்கூட, சர்வதேச பொருளாதாரத்தில் பிஎச்டி பட்டம் வாங்குமளவுக்கு படிக்க முடியும். அதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கத்தாலேயே செய்து தர முடியும் என்ற நிலையினை முதலில் உருவாக்கிக் கொடுத்தவர் எம்ஜிஆர்தான்!
இன்றைய உயர் அதிகாரிகளில் பலர் அப்படிப் படித்து ஐஏஎஸ் ஆனவர்கள்தான்… மருத்துவர்களில் பலர் வெறும் 1200 ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்தி எம்பிபிஎஸ் படித்தவர்கள்தான்… முனைவர் பட்டம் பெற்று கல்லூரிகளில் ‘ஆதிக்கம்’ செலுத்தும் பல பேராசிரியர்களுக்கும் கல்விக் கண் திறந்த வள்ளல், இரண்டாம் வகுப்பு கூட படிக்காத அந்த மாமேதைதான்… நிஜமாகவே பாரதத்தின் ஒப்பற்ற ரத்தினம் அவர்.
வாழ்க நீ எம்மான்…!
courtesy டாக்டர் எஸ்.சங்கர் M.A., M.Phil., Ph.D.
net- envazhi........... Thanks wa.,
-
25th June 2019, 05:27 AM
#228
Junior Member
Diamond Hubber
திருப்பூர் மணீஸ் சினிமாஸ்
Last edited by ravichandrran; 7th July 2019 at 05:25 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
25th June 2019, 05:30 AM
#229
Junior Member
Diamond Hubber
Last edited by ravichandrran; 25th June 2019 at 05:33 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
25th June 2019, 05:35 AM
#230
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks