Page 62 of 401 FirstFirst ... 1252606162636472112162 ... LastLast
Results 611 to 620 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #611
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    21-12-2018 முதல் மக்கள் மனங்களை என்றும் தன்னகத்தே கொண்டிருக்கும் கலையுலக காவலன் சக்ரவர்த்தி ஆகவே திகழும் மக்கள் திலகம் "ஒளி விளக்கு" காவியம் சென்னை- பாலாஜி dts தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை போடுகிறது... வரு பொங்கல் திருநாள், பொன்மனச்செம்மல் பிறந்த நாள் நிகழ்வுகள் முன்னிட்டு இரண்டு காவியங்கள் வருகிறது எனவும் தகவல்......👌 👍

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #612
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய சகோதரர் திரு கலியபெருமாள் விநாயகம் தெரிவித்துள்ள கருத்துகள் முற்றிலும் உண்மை... இப்போது மட்டுமல்ல, எப்போதும் புதிய படங்கள் யார் நடித்தாலும் மக்கள் திலகம் திரு உருவம் காண்பிக்கவும்... அவரை முன்னுதாரணமாக கொள்ளவும் எவருமே விரும்புவர் என்றால் அது மிகையில்லை......

  4. #613
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் "

    என்று சொன்னார் அறிஞர் அண்ணா, அதை வேதவாக்காக கடைபிடித்தவர் "ஏழைகளின் இதயம் "புரட்சி தலைவர்,

    வருடத்திற்கு ஒருமுறை "நினைவுநாள் " நினைப்பது அல்ல புரட்சி தலைவரை,

    உலக தலைவர்களில் 31 வருடங்களாக தினமும் மக்கள் மனங்களால் நினைத்துககொண்டிருக்கும் ஒரே தலைவர் புரட்சி தலைவர் மட்டுமே,

    நாளை உலகெங்கும் புரட்சி தலைவருக்கு நினைவஞ்சலி செலுத்தபடுகிறது.... Thanks

  5. #614
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் போட்ட மாலை!!
    ----------------------------------------------
    எம்.ஜி.ஆர் ஆல விழுதுகளில் இன்றைய விழுது நிச்சயம் உங்களை ஆர்ப்பரிக்க வைக்கும்! வாழ்த்து என்னும் வேர் பதிக்க வைக்கும்!!
    முக நூல் சகோதரர் சிவ பெருமாள்!!
    அது 1974!!
    அந்த ஏழு வயது சிறுவனுக்கு எம்.ஜி.ஆர் மேல் அடங்காத ஆசை!!
    இத்தனைக்கும் அவனது தந்தையோ தீவிர தி.மு.க??
    ஒரு பள்ளியில் சேர்ந்தவன் தினமும் வேறு ஒரு பள்ளிக்குப் படிக்கச் செல்கிறான்??
    பிளாசாவில்--நல்லவன் வாழ்வான்!
    பாரகனில்-ஆயிரத்தில் ஒருவன்!!--இப்படி??
    அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆரை நேரில் பார்க்க முண்டியடித்துச் சென்றவன்--கூட்டத்தில் அடிபட்டு நொண்டியடித்துத் திரும்புகிறான்??--ஆனாலும்--
    மண்டியடித்து அவன் மனதில் படர்ந்திருக்கும் உறுதி--
    எப்படியும் எம்.ஜி.ஆரை நேரில் பார்த்து விட வேண்டும்!
    மெரினாவில் மக்கள் திலகம் உரை நிகழ்த்துகிறார்!!
    போதாதா அந்த சிறுவனுக்கு இந்த விஷயம்??
    ஸ்கூலில் ஆங்கிலப் புத்தகம் வாங்க ,,பெற்றோர் தந்த இரண்டு ரூபாயுடன் கிளம்பிவிடுகிறான்!
    அதிகாலையே அரங்குக்குச் சென்றவனை--மதியம் -மயக்கம் அரவணைக்கிறது? பசி கேள்வி கேட்கிறது??
    எம்.ஜி.ஆரின் கார் உள்ளே நுழைகிறது!!
    ஏராளமானவர்கள்--சால்வை மாலை சகிதம் எம்.ஜி.ஆரை சூழ்ந்து கொள்ள--
    இழந்த சக்தியை எப்படித் தான் பெற்றானோ?? ஓடுகிறான் கடைத் தெருவுக்கு!!
    ஒரு பூ வாங்கி பொன் மனத்தாரிடம் கொடுக்க!!
    கடைக்காரர் ஒருவர்--இந்த சிறுவன்,, எம்.ஜி.ஆருக்கு பூ கொடுக்கப் போகிறானா என்று திகைப்பவர்-
    ஒரு மாலையையே கொடுக்கிறார்??
    ஆவேசத்தோடு மேடையில் ஏறுபவன் அங்கிருந்த பாதுகாவலர்களின் மறிப்பையும் மீறி எம்.ஜி.ஆருக்கு மாலையைப் போட முயல--
    தன் தொப்பியில் அது சிக்காதபடி அதைத் தாமே வாங்கி போட்டுக் கொண்ட எம்.ஜி.ஆர்--அடுத்த நொடியே அந்த மாலையை அந்த மேடையிலேயே அந்த சிறுவனுக்கு அணிவிக்கிறார்!!
    அந்தச் சிறுவன் தான் நம் சிவ பெருமாள்!!
    அது 1983!
    அரிசிக்கு,,அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தி போதிய மானியம் தராத நிலையில்--அரிசி விலை உயர்வைக் கண்டித்து முதல்வரே உண்ணாவிரத்தில் இறங்குகிறார்??
    டெல்லியிலிருந்து முதல்வரிடம் இந்திரா பேசுகிறார்!
    உண்ணாவிரதம் வேண்டாம்! நீங்களே களத்தில் இறங்கினால் மக்கள் மேலும் ஆவேசமடைவார்கள்! நான் முதற்காரியமாக அரிசி விலையைக் குறைக்க ஆவன செய்கிறேன்!!
    இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலை செவியாறக் கேட்ட பெருமாள்--மக்களின் பசியாற போராட்டத்தில் இறங்கிய தன் தலைவனை பெருமிதத்துடன் பார்க்கிறார்!
    எம்.ஜி.ஆர் பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களுக்கும் ஆஜராகும் பெருமாள்--
    பிரதமர்--ஜனாதிபதி ஆகியோருடன் கூடிய எம்.ஜி.ஆர் விழாக்களுக்கு மட்டும் செல்ல மாட்டாராம்??
    என் தலைவன்,,தன் இருக்கையில் இருந்து இன்னொருவருக்காக எழுந்து நிற்பதை நான் ஏன் பார்க்க வேண்டும்??
    1982இல் கலைவேந்தன் எம்.ஜி.ஆர் குழுவை ஆரம்பித்து நடத்தி வரும் இவர்கள்--
    2000 லிருந்து கலைவேந்தன் அறக்கட்டளை என்ற பெயரில் அதை செயல்படுத்தி வருகிறார்கள்!!
    வருடா வருடம் எம்.ஜி.ஆர்--நினைவு--மற்றும் பிறந்த நாட்களில் 500 பேர்களுக்குக் குறையாமல் அன்னதானம் செய்து வருகிறார்கள்!!
    இந்தக் குழுவின் மிக முக்கியமான பெருமை?
    ஒற்றுமை!!
    எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் குழுவைச் சேர்ந்த அனைவரும் செல்கிறார்கள்! ஒரே கௌரவம் தான் அனைவருக்கும்!!
    சுருங்கச் சொல்வதானால்--
    இவர்களுக்கு எம்.ஜி.ஆர்!
    இவர்களால் தான் எம்.ஜி.ஆர்!!!
    உண்மை தானே உறவுகளே??? ...... Thanks Friends...

  6. #615
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் நினைவு தினத்தினை முன்னிட்டு மெகா டிவியில் *** தலைவர் பற்றிய சிறப்புப் பட்டிமன்றம் *** டிசம்பர் 23 நாளை காலை 10 - 12 மணி வரை மலர்ந்து மணம் பரப்பும்.....தவறாது பார்த்து மகிழ அன்புடன் அழைக்கிறேன்...நன்றி ....என்றும் தலைவரின் உண்மை பக்தன் மாதாங்கோவில்பட்டி ஏ.மலையரசுப் பாண்டியன் .... அருப்புக்கோட்டை ( நாளை காலை 8 - 9 அமுதகானம் நேயர் விருப்பம் ....9 - 10, என்றும் M.S.V. & 10 - 12 தலைவர் பற்றிய சிறப்புப் பட்டிமன்றம் )..... Thanks Friends...

  7. #616
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இருந்தாலும், மறைந்தாலும் என்றும் வாழும் மன்னர் மன்னவர் மக்கள் திலகம் வழி நடப்போம் என மீண்டும் உறுதி எடுத்து கொள்வோம்...

  8. #617
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இருந்தாலும், மறைந்தாலும் என்றும் வாழும் மன்னர் மன்னவர் மக்கள் திலகம் வழிநடக்க மீண்டும் மீண்டும் உறுதியேற்போம்...

  9. #618
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஏழைக்கு ஒளி தந்த வள்ளலுக்கு
    இன்று 31 வது நினைவு நாள்.!

    கொடூர இருளில் குடிசையில் ஒண்டிக்
    கிடந்த ஏழை...எளிய மக்களின் இன்னல்
    போக்கிட "ஒத்தை விளக்கு" திட்டம் மூலம்
    கட்டணம் இன்றி ஒளி தந்த. காவல்தெய்
    வம் ஈகைத் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்க
    ளின் 31 வது நினைவு நாள் இன்று.!
    அந்த அற்புத தெய்வ மகனுக்கு அஞ்சலி
    செலுத்தி வணங்கிடுவோம்.!

    வீரக்கனல்மு.மாரிமுத்து..... Thanks Friends....

  10. #619
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த வாரம் வெளிவந்துள்ள கல்கி மற்றும் புதிய தலைமுறை வார இதழ்களில், புரட்சித்தலைவர் கட்டுரை வெளிவந்துள்ளது. சிரமம் இல்லையெனில், வாங்கி படிக்கவும்.
    பாஸ்கரன்,
    கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை..... Thanks

  11. #620
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். நினைவு நாள்...இன்று

    ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் தனது பெயரை எம்.ஜி.ராம்சந்தர் என்றே எழுதிவந்தார். இந்தப் பெயர் வட இந்தியர் பெயரைப் போல் இருக்கிறது எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொள்ளுங்கள் என நடிப்பிசைத் திலகம் கே.ஆர்.ராமாசாமி யோசனை கூறியிருக்கிறார் , அதன் பிறகே எம்.ஜி.ஆர் தனது பெயரை எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொண்டார் .

    0

    சக்கரவத்தித் திருமகள் படத்தில் பாட்டுக் கோட்டையார் எழுதிய பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது என்ற பாடலில் இடம்பெற்ற வரிகளை எம்.ஜி.ஆர் அடிக்கடி சிலாகித்துக் கொள்வாராம்.
    வாழ்வின் கணக்குப் புரியாம ஒண்ணு
    காசைத் தேடிப் பூட்டுது - ஆனால்
    காதோரம் நரைச்ச முடி
    கதை முடிவைக் காட்டுது

    0

    "வசதியும் புகழும் உள்ள பொழுது வராதவர்களெல்லாம் வருவார்கள் , நம்மிடம் வரவு இல்லையென்றால் அவர்கள் வரவும் இல்லை என்றாகி விடும் . ஒருவன் கஷ்டப் படும் பொழுது தேடிப் போய் உதவி செய்கின்ற பெருங்குணம் ராமச்சந்திரனிடம் இருக்கிறது " - என்.எஸ்.கிருஷ்ணன்

    0

    ஊருக்கு உழைப்பவன் படத்தில் நாகேஷ் நடிப்பதாகத் தான் இருந்தது . ஆனால் அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை , உடனே எம்.ஜி.ஆர் தேங்காய் சீன்வாசனை நடிக்க வைத்தார் . பொங்கலன்று எம்.ஜி.ஆர் வீட்டிற்குச் சென்ற முத்துலிங்கத்திற்கு ஊருக்கு உழைப்பவன் படத்திற்காக நீங்கள் எழுதப் போகும் பாடலுக்காக வீனஸ் பிக்ஸர்ஸ் உங்களுக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி தனது 1000 ரூபாயை எடுத்துக் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

    0

    எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் கூட எடுக்காத பாலாஜிக்குக் கூட வருடம் பிறந்தால் 100 ரூபாயும் பொங்கலுக்கு கதர் வேட்டியும் சட்டையும் அளிப்பாராம் எம்.ஜி.ஆர். அந்நேரம் பாலாஜியிடம் "ஏம்பா பணத்தை இங்க வாங்கி அங்க(சிவாஜியிடம்) கொடுக்குற" என்று தமாஷாகப் பேசுவாராம் எம்.ஜி.ஆர்

    0

    எம்.ஜி.ஆர். வாலியிடம் நீங்கள் எழுதிக்கொடுத்த வரிகள் எல்லாம் என் வாழ்வில் பலித்து விட்டது
    ஆனால் இந்த ஒரே ஒரு வரிமட்டும் பலிக்கவில்லை என்று வருத்தமாகச் சொல்வாராம். எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்

    0

    தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் ஒரு படக் கதையை எம்.ஜி.ஆருக்காக எழுதினார்.ஆனால் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு திரும்பி விட்டமையால் இந்தப் படத்தில் நடிக்கவில்லை.சிறிது காலம் கழித்து இநதக் கதை படமாகும் பொழுது ரஜினிக்கு அதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்தப் படம் தான் ராணுவ வீரன்.

    0

    சிவாஜி நடித்த பைலட் பிரேம்நாத் படக்காட்சி ஒன்றை இலங்கை கண்டி நகரில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் படமெடுத்திருக்கிறார்கள். பைலட் பிரேம்நாத் படத்தின் வசனகர்த்தா ஆரூர்தாஸ் கண்டியிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பியதும் எம்.ஜி.ஆருக்குக் கொடுத்திருக்கிறார். தான் பிறந்த மண்ணைக் கையில் வாங்கிய எம்.ஜி.ஆர் கண்ணில் ஒற்றிக் கொண்டு வாயிலும் சிறிது அள்ளிப் போட்டுக்கொண்டாராம்

    0

    உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதனைத் தான் முதலில் இசையமைப்பளராக புக் செய்தாராம் எம்.ஜி.ஆர். உடனே எம்.ஜி.ஆரின் நண்பர்கள் " பாரின் போய் படம் எடுக்கப் போறேங்குற , பக்திப் படத்துக்கு இசையமைக்குறவறப் போயி ... " என்று கிலியூட்டியிருக்கிறார்கள் . அதன்பிறகு தான் எம்.எஸ்.வியைப் பிடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். இந்தப்படத்துப் பாடல்கள் சிறப்பாக வரவேண்டுமென பல மெட்டுக்கள் போட வைத்து எம்.எஸ்.வியை ரொம்ப வறுத்தெடுத்திருக்கிறார் எம்.ஜி.யார். 9 பாடல்கள் ..அனைத்தும் ஹிட். கட்டுக் கட்டாக பணத்தை அள்ளி எம்.எஸ்.விக்கு வாரியிறைத்திருக்கிறார் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை இழந்த குன்னக்குடிக்கு பின்னாளில் நவரத்னம் என்றொரு படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை வழங்கினார் எம்.ஜி.ஆர்.

    0

    கே.வி.மகாதேவன் அடிமைப் பெண் படத்திற்காக ஒரு பாடலுக்கு 52 விதமான மெட்டுகள் போட்டும் எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லையாம் , இறுதியாக அமைந்த 53 வது மெட்டு எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போய்விட்டதாம். அது ஆலங்குடி-சோமு எழுதிய தாயில்லாமல் நானில்லை என்ற பாடலாம்

    0

    நீரும் நெருப்பும் பட சண்டைக் காட்சியின் சூட்டிங்கை நேரில் கண்டு ரசித்து விட்டு , பின்னர் எம்.ஜி,ஆர் பயன்படுத்திய வாளை தொட்டுப் பார்த்த இந்தி நடிகர் தர்மேந்திராவிற்கு ஆச்சர்யம் ! எம்.ஜி.ஆர் பயன்படுத்தியது உண்மையான வாள் !

    0

    சின்னப்பா தேவரின் படங்களில் நடிக்கும் பொழுது அசோகன் சூட்டிங்கிற்கு ஒரு மணி நேரம் முன்பே வந்துவிடுவாராம். எம்.ஜி.ஆர் தாமதாமாக வந்தால் , எம்.ஜி.ஆரைத் திட்டாமல் அசோகனைத் திட்டுவது போல் ஜாடை மாடையாக எம்.ஜி.ஆரைத் திட்டுவாராம் தேவர். அந்தத் திட்டு தனக்கு இல்லை எம்.ஜி.ஆருக்குத் தான் என அறிந்தும் எம்.ஜி.ஆருக்காக பொறுத்துக் கொள்வாராம் அசோகன். எம்.ஜி.ஆருடன் மட்டும் 88 படங்களில் சேர்ந்து நடித்தவர் அசோகன்.

    0

    சூலமங்கலம் சகோதரிகள் (ஜெயலட்சுமி & ராஜ லட்சுமி), தரிசனம் , டைகர் தாத்தாச்சாரி , கற்பூரம் , தேரோட்டம் , பிள்ளையார் ,மகிழம்பூ போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். சூலமங்கலம் சகோதரிகளின் திறமையைக்கண்ட எம்.ஜி.ஆர் அவர்கள் இசையில் ஒரு படம் நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டிருக்கிறார். அந்தப் படத்திற்கு உங்களுக்காக நான் என்ற பெயரும் வைக்கப்பட்டு மூன்று பாடல்களும் பதிவாகி விட்டது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் அரசியலில் குதித்து விட்டதால் அந்தப் படத்தில் அவரால் நடிக்கமுடியவில்லை.

    0

    மிருதங்க சக்கரவர்த்தி படத்தைக் கண்ட எம்.ஜி.ஆர், சிவாஜி நடிப்பில் பிரமித்துப் போய் இருக்கையிலேயே சில நேரம் உறைந்துவிட்டு பக்கத்தில் அமர்ந்திருந்த இயக்குனர் கே.சங்கரிடம் " நடிகன்னு சொன்னா சிவாஜி ஒருத்தர்தான்யா" என உணர்ச்சி மேலிடக் கூறினாராம்.

    0

    சின்னப்பா தேவர் தயாரித்த ஒரு படத்திற்கு அதிசய ஆடு என்று பெயர் வைத்தார்கள் , இந்தப் பெயர் ஏனோ தேவருக்குப் பிடிக்க வில்லை. அந்நேரம் எம்.ஜி.ஆர் நடித்த மாட்டுக்கார வேலன் சுவரொட்டி ஒன்றைப் பார்த்தும் அதிசய ஆடு என்ற தலைப்பை நீக்கிவிட்டு ஆட்டுக்கார அலமேலு என்று வைத்தார். தொடர் தோல்வியை சந்தித்து வந்த தேவர் அவர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றியை தேடி தந்த படம் "ஆட்டுக்கார அலமேலு " .

    0

    மாட்டுக்கார வேலன் படத்தில் வி.கே ராமசாமி எம்.ஜி.ஆருக்கு மாமானாராக நடித்திருப்பார், ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர் வி.கே ராமசாமியின் காலில் விழுவதைப் போல் நடிக்க வேண்டும் , எம்.ஜி.ஆர் என் காலில் விழுவதா ? ஊகூம் .. மாட்டேன்.. என்று அடம் பிடித்திருக்கிறார் வி.கே ராமசாமி .
    எம்.ஜி.ஆரோ " கதைப்படி எனக்கு மாமனார் தானே சும்மா நடியுங்கள் " எனக் கூறி சம்மதிக்க வைத்திருக்கிறார். எனினும் எம்.ஜி.ஆர் , வி.கே ராமசாமியின் காலில் விழும் காட்சியின் சூட்டிங் நடந்த பொழுது வி.கே ராமசாமி சற்று தயக்கத்துடன் சாய்ந்தபடியே தான் நின்றாராம் !

    0

    புதிய பூமி படத்தில் பூவை செங்குட்டுவன் எழுதிய நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை பாடலைக் கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர் , பூவை செங்குட்டுவனை மிகவும் பாராட்டினார்.

    0

    மீனவ நண்பன் படக்காட்சிகள் முடிந்து விட்ட தருவாயில் முத்துலிங்கத்திற்கு இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுக்கவில்லையே என்று எம்.ஜி.ஆர் வருத்தப்பட்டிருக்கிறார். உடனே இயக்குநர் ஸ்ரீதரை அழைத்து முத்துலிங்கத்திற்கு இந்தப் படத்தில் ஒரு பாடல் கொடுங்கள் எனக் கூறியிருக்கிறார். அதற்கு ஸ்ரீதரோ " எந்த சூழலில் அவருடைய பாடலைச் சேர்க்கமுடியும் ? " எனக் கேட்டிருக்கிறார். : உங்களுக்குத் தெரியாதா ஒரு கனவுப் பாட்டா சேர்த்துக்கோங்க " என்று எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார். அந்தப் பாடல் தான் தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து பாடல்.

    Facebook share. Excuse me for sharing a good information on MGR.

    # MGR Death Anniversary today ..... Thanks.....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •