-
19th December 2018, 06:16 PM
#601
Junior Member
Diamond Hubber
வரும் 21-12-2018 முதல் திரையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை- சென்ட்ரல் dts தினசரி 4 காட்சிகள் "ரிக்க்ஷாக்காரன்", மற்றும் கோவை- ராயல் dts தினசரி 4 காட்சிகள் "என் கடமை" ஆகிய காவியங்கள் வெளியாகின்றன...
-
19th December 2018 06:16 PM
# ADS
Circuit advertisement
-
20th December 2018, 01:17 AM
#602
Junior Member
Diamond Hubber
நமது மக்கள் திலகம் பதிவுகளில் நாம் எப்போதும்மே உண்மையான தகவல்கள் இடுகிறோம்... ஒரு சிலர் (மற்ற நடிகர், நடிகை ரசிகர்கள்) facebook, மற்றும் whatsapp தளங்களில் தவறான உண்மைக்கு புறம்பான செய்திகளை துணிந்து பதிக்கிறார்கள்... தயவுசெய்து அம்மாதிரி செய்யாமல் உண்மை நடப்புகளை மட்டும் பதிவிட மனதார வேண்டுகிறோம்...
-
20th December 2018, 09:01 PM
#603
Junior Member
Diamond Hubber
ஒருமுறை ஆன்மீகப் பொியவா் கிருபானந்த வாாியாா் பேசிய பேச்சில் ஆத்திரமடைந்த ஒரு கூட்டத்தால் தாக்கப்பட்டாா் .
தாக்கியவா்கள் ...
புரட்சித்தலைவா்
எம்.ஜி.ஆா். ரசிகா்கள் .
உடனடியாக வாாியாாின் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன . போலீஸ் பாதுகாப்போடுதான் வாாியாா் வெளியே போக வேண்டிய நிலை ஏற்பட்டது .
சாி , வாாியாா் அப்படி என்னதான் பேசினாா் ?
அது பேரறிஞா் அண்ணா அவா்கள் இறந்த நேரம் .... அமொிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்தும் அண்ணாவின் உயிரை மருத்துவா்களால் காப்பாற்ற முடியவில்லை .
அண்ணாவின் கடைசி காலத்தில் அவருக்கு சிகிச்சை அளித்த அமொிக்க டாக்டாின் பெயா் மில்லா் .
அந்த நேரத்தில் வாாியாா் ஒரு கூட்டத்தில் பேசும்போது ,
" ஆண்டவனை நம்பாதவா்கள் அமொிக்காவுக்கே போனாலும் , டாக்டா் மில்லரே வந்தாலும் இப்படித்தான் முடிவு ஏற்படும் என்று சொல்லி விட்டாா் .
பொறுத்துக் கொள்ள முடியாத எம்.ஜி.ஆா்., ரசிகா்கள் எாிச்சலுடன் வாாியாரைத் தாக்க .... இந்த விஷயம் தலைவா் எம்.ஜி.ஆா்., அவா்களின் பாா்வைக்குச் சென்றது .
" வாாியாா் பேசியது தவறுதான் ..... ஆனாலும் என் ரசிகா்கள் அவரைத் தாக்கியதும் தவறுதான் .... !
கண்டிப்பாக அந்தப் பொியவாின் மனம் பண்பட்டிருக்கும் .... பிறா் மனம் புண்பட நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் ....
வாாியாரை எப்படியாவது
சமாதானம் செய்ய வேண்டும் என்று தன்னுடன்இருந்தவா்களிடம் ஆலோசனை கேட்டாா் எம்.ஜி.ஆா்.,
என்ன செய்யலாம் என்று சிலம்புச் செல்வா் பொியவா் ம.பொ.சி. யிடமும் ஆலோசனை கேட்டாா் .
அதுபற்றி " எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடா்பு " என்ற தன் புத்தகத்தில் ம.பொ.சி. அவா்கள் எழுதிய தகவலில் ...
" எம்.ஜி.ஆா். அவா்கள் தம் சொந்தச் செலவில் ஒரு கூட்டத்தை நடத்தி , வாாியாரையும் அழைத்துப் பேசச் செய்தாா் .
அந்த நிகழ்ச்சியில்தான் பொன்மனச் செம்மல் பட்டத்தை வாா்ியாா் எம்.ஜி.ஆா். அவா்களுக்குச் சூட்டினாா் .
எம்.ஜி.ஆாின் ஒரே எண்ணம்
வாாியாா் மீது பக்தி செலுத்தும் ஆத்திகா்களுக்கும் ,
அண்ணாவிடம் பக்தி செலுத்தும்
அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட்ட
பகை தீர வேண்டும் என்பதுதான் . "
எம்.ஜி.ஆா்., திட்டமிட்டபடியே பகை தீா்ந்து நட்பு மலா்ந்தது .
" தீப்பந்தத்தைக் கீழ் நோக்கிப்பிடித்தாலும் அதன் ஜூவாலை மேல் நோக்கி எழுவதுபோல் , உயா்ந்த குணத்தைக் கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது .
ஆமாம் .... அந்த தீ ஜூவாலை இன்னும் உயரஉயர எாிந்து கொண்டேதான் இருக்கிறது .... பொன்மனச் செம்மலின் சமாதியில் ..... Thanks Friends...
.
-
20th December 2018, 09:05 PM
#604
Junior Member
Diamond Hubber
Advance "Happy Prosperous New Year" 2019 Greetings All of You...
-
21st December 2018, 10:45 AM
#605
Junior Member
Diamond Hubber
-
22nd December 2018, 01:03 AM
#606
Junior Member
Diamond Hubber
அன்பு.பணிவு.அடக்கம் தேடிப்பார்த்தேன் தென்படவில்லை இந்தவரிகள் இன்றுபோல்என்றும்வாழ்க வெற்றிப்படத்தில் புரட்சித்தலைவரின் பாடல்வரிகள் இந்தப்போஸ்டரில் அன்பு.பண்பு.பணிவு இதையெல்லாம் கற்றுத்தந்து இந்தக்கட்சிக்கே முகவரியாய்திகழும் இதயதெய்வம் புரட்சித்தலைவர் அவர்களின் சிறியபுகைப்படம்கூட போடுவதற்கு இந்தப்போஸ்டரை போட்டவர்களுக்கு மனம்வரவில்லை ஏற்கனவே இரண்டு மூன்று துண்டுகளாக சிதறிக்கிடந்து நாளையவெற்றி கேள்விகுறியாக இருக்கும் நிலையில் தான்பெயரும் படமும் இல்லாமல் வெற்றி இல்லை என்ற பெரும்பெயருடன் என்றும் விளங்கிகொண்டிருக்கும் மக்கள்தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் படமேயில்லாமல் போஸ்ட்டர் வேறு பிள்ளையார் சுழி போடாமல் எந்தசெயலும்பூர்த்தியாகாது புரட்சித்தலைவரின் பெயரோ படமும்இல்லாமல் வெற்றி பெறமுடியாது இந்த மாதிரி போஸ்ட்டர் கள் போட்டு கட்சியை இல்லாமல்செய்யாதீர்கள் என்றபணிவானவேண்டுகோளில் சிறிய எச்சரிக்கையையும் விடுகின்றான் மதுரை.எஸ் குமார் குறிப்பு இந்தப்போஸ்டரை வேண்டுமென்றேதான் இப்படிப்படம்பிடித்தேன்...... Thanks Friends...
-
22nd December 2018, 01:04 AM
#607
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர். பக்தர்களின் சங்கமம் !
எம்.ஜி.ஆர்., மறைந்து, பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட பின்பும், அவரது பழைய சினிமா படங்களுக்கு இருக்கும் வரவேற்பு கொஞ்சமும் குறையவில்லை.
பிரமாண்டமாக செலவு செய்து எடுக்கப்பட்ட புதிய படங்களுக்கு, பெரிய அளவில் விளம்பரங்கள் செய்தாலும், இரண்டு வாரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்காத நிலையை காண்கிறோம்.
அதே சமயம், 40 வருடங்களுக்கு முன், வெளியான எம்.ஜி.ஆரின் படங்கள், "சிடி, டிவிடி' வடிவில் வந்தும், அந்த படங்கள் சினிமா தியேட்டரில் எப்போது திரையிட்டாலும், அவரது அபிமானிகள், ஆர்வமுடன், தியேட்டருக்கு படம் பார்க்க வருவதை காண முடிகிறது. சொல்லிவைத்தாற்போல், மதுரையில் ஒரு குரூப் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், தமிழ்நேசன் என்பவரது தலைமையில், ஞாயிறு அன்று மாலை எம்.ஜி.ஆர்., படம் திரையிட்டுள்ள தியேட்டர் முன் கூடுகின்றனர்.
தங்களுக்குள், 20 ரூபாய், 30 ரூபாய் என வசூலித்து, அந்த பணத்தில், பெரிய பெரிய மாலைகள் வாங்குகின்றனர்.எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர், "மர்மயோகி மனோகர்' மற்றும் இருவருடன், கேட்டை பிடித்தவாறு, ஏணி ஏதும் இல்லாமலே, விறுவிறுவென்று, "ஸ்பைடர் மேன்' பாணியில், மேலே ஏறுகின்றனர். தியேட்டர் முகப்பில் மேலே இருக்கும் எம்.ஜி.ஆர்., கட்-அவுட் மற்றும் பிளக்ஸ் ஆகியவற்றிற்கு அந்த மாலைகளை அணிவிக்கின்றனர். இந்த சடங்குகள் பல நிமிடங்கள் நீடிக்கின்றன.
இதை மகிழ்ச்சியுடன், கை தட்டியவாறு, ரசிக்கின்றனர் எம்.ஜி.ஆர்., பக்தர்கள். விசேஷ தினம் என்றால், "பால் அபிஷேகம்' வேறு நடக்கிறது.மாலை அணிவிப்பு முடிந்ததும், அனைவரும் தியேட்டர் வாசலில் நின்று, உரத்த குரலில், எம்.ஜி.ஆர்., வாழ்க, பொன்மனச் செம்மல் வாழ்க, மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று என்னென்ன பட்டங்கள் உண்டோ, அதையெல்லாம் கூறி, "வாழ்க' கோஷம் போட்டு, பட்டாசுகளும் கொளுத்தி அந்த ஏரியாவையே அதிரவைத்து விடுகின்றனர். ஐந்து நிமிடம் கோஷம் போட்டபின், அவரவர் காசில் டிக்கெட் வாங்கி, தியேட்டருக்குள் செல்கின்றனர்.
தியேட்டரில் படம் ஆரம்பித்து, எம்.ஜி.ஆர்., வரும் முதல் காட்சி திரையில் தெரிந்தவுடன், மீண்டும் பலத்த கரகோஷம். அதில் சில முரட்டு எம்.ஜி.ஆர்., பக்தர்கள், கையில் சூடம் ஏற்றி, திரை முன்னால் உயர்த்தி காண்பித்து,"தலைவா...' என்று உணர்ச்சி பொங்க கோஷம் போடும் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.இப்படி பழைய படங்கள், எத்தனை முறை திரையிட்டாலும், சலிக்காமல் எம்.ஜி.ஆர்., பக்தர்கள் ஞாயிறு மாலை, மழை வந்தாலும் குடைகளுடன் தியேட்டர் முன் தவறாமல் ஆஜராகி விடுகின்றனர்.நெல்லையைச் சேர்ந்த பிச்சம்மா என்ற மூதாட்டி, வாரம் ஒரு முறை மதுரை வரும் போதெல்லாம், எம்.ஜி.ஆர்., படம் எங்கே திரையிடப்பட்டுள்ளது என்று விசாரித்து, அந்த தியேட்டரில் படம் பார்த்தபின், இரவு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்புகிறார்; இப்படி இன்னும் பலர் உள்ளனர்!
எம்.ஜி.ஆர்., மறைந்து இத்தனை வருடங்களுக்குப் பின்னும், எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல், கடவுளாகப் பாவித்து, அவர் பெருமைகளை கூறும் இந்த எம்.ஜி.ஆர்., பக்தர்களை முறைப்படி வழி நடத்திச் செல்வது பற்றி, எம்.ஜி.ஆர்., பெயர் சொல்லி அரசியல் பண்ணும் இயக்கங்கள் யோசிக்க வேண்டும்!
யோசிப்பார்களா?
நன்றி : திரு.மதுரை எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன் - தினமலர்.
-
22nd December 2018, 01:06 AM
#608
Junior Member
Diamond Hubber
கதாநாயகிகளின் காதல் கீதங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
சரோஜாதேவி
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
ஜெயலலிதா
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
வெண்ணிற ஆடை நிர்மலா
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
மஞ்சுளா
அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
லதா
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்
ஏன் இந்த வேகம் ஏன் இந்த வேகம
பத்மினி
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
ராஜ சுலோச்சனா
அன்புத் திருமுகம் காணாமல் -
நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
காலப் புயலில் அணையாமல் -
நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
உதய சூரியன் எதிரில் இருக்கையில்
உள்ளத்தாமரை மலராதோ ?
அஞ்சலி தேவி
அன்பு மிகுந்திடும் பேரரசே
ஆசை அமுதே என் மதனா
ராஜஸ்ரீ
இளமை பொங்கும் உடலும் மனமும்
என்றும் எனதாக
உரிமை தேடும் தலைவன் என்றும் அடிமை என்றாக
சாவித்திரி
அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ
அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ
பானுமதி
சிந்தைதன்னை கவர்ந்து கொண்ட சீதக் காதியே
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே
சிங்கார ரூபகாரனே என் வாழ்வின் பாதியே
கே.ஆர். விஜயா
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
லக்ஷ்மி
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை
வாணிஸ்ரீ
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி
ரத்னா
அல்லி மலராடும் ஆணழகன்கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்
எல் .விஜயலட்சுமி
உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்
தேவிகா
இணையத் தெரிந்த தலைவா
உனக்கு என்னைப்j புரியாதா
தலைவா என்னைப் புரியாதா
பத்மப்ரியா
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ
ராதா சலுஜா
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
காஞ்சனா
இதுவரை என் கண்களுடன் ... எவரும் பேசவில்லை ...
புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை
இந்த பட்டியலில், நமது இதய தெய்வம் பாரத ரத்னா மக்கள் திலகம் அவர்களின் துணைவி அன்னை ஜானகி, நாயகியாய் அவருடன் இணைந்த "மருத நாட்டு இளவரசி" காவியத்தில், இடம் பெற்ற அருமையான காதல் பாடல் " நதியே நீராழி அதையே சேர்தல் நாம் சேர்ந்தோம் " என்ற பாடலின் இடையே, நம் மன்னவனைப் போற்றி வரும் அற்புதமான வரிகளாகிய "ஆனந்தக்கடல் நீ ! அதிலொரு மீன் போல் மகிழ்வேன், வாழ்வினில் மாறாப் பிரேமையினால்" (அன்பினால்) என்பது விடுபட்டு விட்டது.
அதே போன்று, "மோகினி" என்ற காவியத்தில், இடம் பெற்ற "வசந்த மாலை நேரம் மந்த மாருதம் குளிர்ந்து வீசிடும்" என்ற பாடலின் இடையே அன்னை ஜானகி அவர்கள் நம் பொன்மனசெம்மலை நோக்கி பாடும் " காதல் வேகம் போல் இல்லையே - உனது கால்கள் தாவும் வேகம், வேதை கொண்டு வரும் பாதை கண்டு மெலிவாரே வீர விஜயன் (மக்கள் திலகத்தின் கதா பாத்திர பெயர் விஜயன் என்பது குறிப்பிடத்தக்கது) காட்டும் நடையிலும், திராட்டிலும் - அந்த ஓட்டம் விரைவு வேணும் , செல்லு செல்லு பரியே " (பரி என்ற சொல்லுக்கு குதிரை என்று பொருள் உண்டு) என்ற
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடன் நடித்த கதாநாயகிகள் சிலருக்கு பிற்காலத்தில் தன்னுடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் .
பத்மினி - ரிக்ஷாக்காரன்
அஞ்சலி தேவி - உரிமைக்குரல்
எம்.என் ராஜம் - ஊருக்கு உழைப்பவன்
எஸ். வரலக்ஷ்மி - நீதிக்கு தலை வணங்கு
ராஜசுலோச்சனா - இதயக்கனி
ரத்னா - இதயக்கனி
மக்கள் திலகம் முதலவராக இருந்த நேரத்தில் நடிகை பானுமதி - எம்.என் ராஜம் இருவருக்கும் திரை துறை சார்ந்த பதவிகள் வழங்கி பெருமை படுத்தினார் .
நடிகை ஜெயலலிதா அதிமுகவில் இணைந்து கட்சி பொறுப்பை ஏற்றும் , ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது .......
-
22nd December 2018, 01:09 AM
#609
Junior Member
Diamond Hubber
தமிழகத்திற்காக நல்லாட்சி செய்து பலகடமைகளைச்செய்து என்றும் அசைக்கமுடியாத சக்தியாய்விளங்கும் மணிதமகான் எம்.ஜி.ஆர். அவர்களின் நிணைவுநாளுக்கு மறக்கமுடியாத சாதனையாக கோவை.ராயல். டீ.டீ.எஸ் மக்கள்திலகம் எம் ஜி ஆர் அவர்களின் என்கடமை படம் வெளியிடப்படுகிறது வழக்கம்போல் வெற்றிதான் வசூல்தான் ஆரவாரம் தான் தூள்கிளப்புங்கள் கோவை நண்பர்களே இங்கு அதேவேளை புரட்சித்தலைவருக்கு பாரத்பட்டம் வழங்க காரணமான இமாலயசாதனை படைத்த ரிக்சாக்காரன் மதுரை சென்ட்ரல்சினிமா டி.டி.எஸ் வருகின்றார் நீண்டநாட்களுக்குப்பிறகு நாங்கள் சென்ட்ரல் சினிமாவில் நுழைகின்றோம் சும்மாத்தூள்பரக்கப்போதுது மதுரை எஸ்.குமார் கோவை. ஜெய்குமார் .......
-
22nd December 2018, 03:05 PM
#610
Junior Member
Veteran Hubber
இன்றும் திரையுலகை ஆளும் இதய தெய்வம்
நம் புரட்சித்தலைவர் அவர்கள் அன்றிலிருந்து அரசியல் மற்றும் திரை உலகங்களை ஆண்டு வருவது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் சுமார் அரை நூற்றாண்டுகளாக அனைத்து கதாநாயகர்களின் 9௦ சதவீத படங்களில் (திரு. சிவாஜி கணேசன் படம் உட்பட) அவரின் திருஉருவத்தையோ, அவரது பெயரையோ அவரது படங்களின் காட்சியையோ, அல்லது அவரின் படங்களின் பாடல் வரிகளையே பயன்படுத்தாமல் இல்லை என்ற உண்மை நம் போன்ற ரசிகர்கள் இல்லாமல் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இதை ஒரு கின்னஸ் சாதனை என்றே சொல்லலாம். தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சர்க்கார் படமும் இதில் விதி விலக்கல்ல. அதே போன்று சமீபத்தில் வெளிவந்த திமிரு பிடிச்சவன் படத்திலும் இதே நிலைதான். கதாநாயகன் விஜய் ஆண்டனி ரௌடியான தன் தம்பியுடன் மார்க்கெட் பகுதிக்கு வரும்போது " பொய்யான சிலபேர்க்கு புது நாகரிகம், புரியாத பலபேர்க்கு இது நாகரீகம்" என்ற பாடல் வரிகள் வரும். ரௌடியைப்பார்த்தவுடன் நிற்கும் பாடல், அந்த ரௌடியை கதாநாயகன் சுட்டுகொன்றவுடன் "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர்போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும்" என்று அந்த பாடகர் முடிப்பார். திரையிலும் சரி அரசியலிலும் சரி அனைவரும் எம்ஜிஆர் போல வரவேண்டும் என்றுதான் நினைக்கின்றனரே தவிர வேறு யாரையும் ரோல் மாடலாக நினைப்பதில்லை. இந்த உண்மையை யாரால் மறுக்க இயலும். இதற்கு ஓராயிரம் உதாரணங்கள் இருக்கின்றன. சொன்னால் ஒரு யுகம் போதாது.
தற்போது வெளிவந்திருக்கும் மாரி 2 படமும் இதில் தப்பவில்லை. எம்ஜிஆர் உருவத்தைக்காட்டினால் படம் வெற்றி பெறும் என்று சென்டிமெண்டாக பெரும்பாலான படங்களில் இது போன்ற காட்சிகளை வைக்கிறார்கள்.
உண்மை தொண்டன்
வி. கலியபெருமாள், புதுச்சேரி
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Bookmarks