-
29th March 2019, 11:10 PM
#2651
Junior Member
Platinum Hubber
-
29th March 2019 11:10 PM
# ADS
Circuit advertisement
-
30th March 2019, 02:17 PM
#2652
Junior Member
Diamond Hubber
சென்னையில் மக்கள் திலகத்தின் திரைப்பட சாதனைகளின் தொடர்ச்சி..... 1973 முதல் 1977 வரை தலைவரின் காவியங்கள் வெளியானது - 15 இதில் 8 படங்கள் 100 நாளை கடந்து சாதனை! 1) உ.சு.வாலிபன் முதலிடம் தேவிபாரடைஸ் 182.,அகஸ்தியா 176 உமா 112. 2) இதயக்கனி சத்யம் 105.மகாராணி 105.உமா105.கமலா 72 3) மீனவநண்பன் தேவிபாரடைஸ் 104.அகஸ்தியா.88 உமா 88, கமலா 40.4).இன்று போல் என்றும் வாழ்க. தேவிபாரடைஸ்102.மகாராணி 86, உமா 78. 5) பல்லாண்டு வாழ்க தேவி பாரடைஸ் 104 அகஸ்தியா104 சரவணா 70. 6) நீதிக்குத் தலை வணங்கு தேவிகலா 106.மகாராணி 106.உமா77 கிருஷ்ணவேனி 43 ஒடியன் 36 . 7) உரிமைக்குரல் - ஒடியன் 106 மகாராணி106.உமா106.நூர்ஷகான் 50. 8).நேற்று இன்று நாளை பிளாசா 105 மகாராணி 105 கிருஷ்ணவேனி 72 சயானி 62. ஆகிய 8 படங்கள் வெவ்வேறான 8 அரங்கில் 100 நாளை கடந்துள்ளது. தேவிபாரடைஸ்(4). அகஸ்தியா (2). உமா( 3) சத்யம் (1) மகாராணி(4) பிளாசா (1) தேவிகலா (1) ஒடியன் (1) 17முறை 100 நாளை கடந்து மிகப்பெரிய அரங்கான தேவிபாரடைஸில் 182 நாள் ஒடிய உ.சு.வாலிபன் தென்னகத்திலேயே ஒரே அரங்கு மூலம் அதிக வசூலை முதன் முதலில் பெற்றது... . ரூ.13,63,914.75. ஆகும்.இச்சாதனை 1978 வரை நிலைத்தது... தலைவர் கலையுலகில் பவனி வந்த 1977 வரை வெல்ல முடியவில்லை. மீதீ 7 படங்களின் நிலவரம் 100 நாள் ஒடாமலேயே 12 லட்சத்தை பெற்ற படங்கள் நினைத்ததை முடிப்பவன் வசூல் : 12,87,490.51. ஆகும். உழைக்கும் கரங்கள் ரூ. 12,42,050.33. ஆகும். அடுத்து 10 லட்சத்தை பெற்ற படம் சிரித்து வாழ வேண்டும் ரூ. 10,55,974.05 ஆகும். அடுத்து ஊருக்கு உழைப்பவன் வசூல் ரூ. 9,13,395.88. ஆகும். அடுத்து நவரத்தினம் வசூல் ரூ :. 9,23,416.45 ஆகும். நாளை நமதே வசூல் : 8,82,734.79. தலைவரின் ஒரே ஒரு படமான பட்டிக்காட்டுப் பொன்னையா படம் மட்டும் 6 லட்சத்திற்குள் வசூலானது...... தலைவர் முதல்வரான பின் 1978 ஆம் ஆண்டு வெளியான மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன் திரைப்படம் 50 நாள் வரை ஒடி பெற்ற வசூல் ரூ. 11,56,560.62 ஆகும். நடிகர் சிவாஜி கணேசன் படங்கள் சாந்தியில் திரையீட்டும் 10 ,12லட்சத்திற்குள் வசூலான பல படங்களை தலைவரின் படங்கள் 100 நாள் ஒடாமலேயே வென்றுள்ளது... பாரத விலாஸ்.கெரளவம் எ.த.ராஜா. , அவன் தான் மனிதன், ம.வந்தானடி 5 படங்கள் 10 முதல் 12 லட்சம் தான் வசூல். சென்னையில் 1977 வரை சாந்தி தியேட்டர் கணக்குபடி அதிக வசூல் படம் அவர்களுக்கு த.பதக்கம் அ.ஒரு. கோயில், தீபம் 4 வது வ.மாளிகை.... இப்படம் 1971 ல் ரிக்க்ஷாக்காரன் வெள்ளி விழா ஒடாமலேயே குறைந்த வசூலில் 1972.ல் வெளியான படமான வ.மாளிகை ( சாந்தி 176 கிரவுன் 140 புவனேஸ்வரி 140. மொத்த நாள் - 456 நாள் பெற்ற வசூலை தலைவரின் ரிக்க்ஷாக்காரன் தேவிபாரடைஸ் 142 கிருஷ்ணா 142 சரவணா 104 மொத்தம் 348 நாள் ஒடி) வசூலை வென்றது. 1973 முதல் 1977 வரை 14 படங்கள் மகத்தான வசூலை, நாட்களை, .அரங்குகளை அதிகம் பெற்று தமிழ்ப்பட உலகம் என்றால் MGR. என்ற மூன்றெழுத்து மட்டுமே என புகழாரம் சூட்டப்பட்டது..... மேலும் தொடருவோம்.. உரிமைக்குரல் ராஜு............. Thanks wa.,
-
30th March 2019, 02:26 PM
#2653
Junior Member
Diamond Hubber
நம் புரட்சித்தலைவரின் கலையுலக சாதனைகளே ..............கடல் போன்றுள்ளது. ....அவைகளை வெளியிட நாள் போதாது.... அதன் பின் தலைவரின் அரசியல் சாதனைகள். ............ கணக்கில் அடங்காதுள்ளது... அதன் பின் தலைவரின் மனிதநேய பண்புகள் .............விரிந்து கிடக்கிறது... அதன் பின் தலைவர் கொடுத்த கொடை .......பற்றி எழுதினால் என் ஆயுளே முடிந்து விடும் அளவுக்கு நிரம்பியுள்ளது....... அடுத்து தலைவரின் அடுத்தடுத்து திரையிடப்பட்டு எண்ணில் அடங்காத திரைப்படங்களின் வெளீயீடுகளை வெளியிட தலை சுற்றுகிறது... அப்பப்பா ........நித்தமும் தலைவரின் விளம்பரமில்லாத புகழே எங்கும் பரவி கிடக்கிறது. இப்படி ஒரு தலைவரா நம் தமிழ் நாட்டில் இருந்தார் என்று நினைக்கும் போது உள்ளமெல்லாம் ஆனந்த தாண்டவமாடுகிறது.....அந்த வரலாற்று தலைவரின் புகழை நானும் பாட என் தாய் , தந்தை இருவருக்கும் நான் பிறப்பதற்கு பூமியில் என்ன தவம் செய்தேனோ. அழியாத புகழின் அஸ்திவாரம். தலைவரின் ஜாதகம் ! என்னவென்றால்.... அவரின் புகழை மறைக்க, மறக்க மக்களிடமிருந்து பிரிக்க நினைத்தவர்கள் , நினைக்கின்றவர்கள் யாவரும் அவர்களாகவே அழிந்து போகும் சரித்திரத்தை மட்டுமே உருவாக்கி கொண்டிருப்பவர் தான், யுகப்புருஷராக வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் மனித புனிதர் எம்.ஜி.ஆர் அவர்கள்! தலைவரின் புகழை நல்ல முறையில் பாடுபவர்கள் அவருக்காகவே நல்லசெயல்களை செய்பவர்களுக்கு மூன்றெழுத்து மந்திரமாக திகழும் தீர்க்கதரிசியான நம் பொன்மனச்செம்மல் உடன் இருந்து நல்லதொரு ஆசியை எந்நாளும் வழங்கி கொண்டிருப்பர். இந்த இயற்கையான சத்தியம் தான் உண்மையாகும்.... ஆகையால் தலைவரின் தூயத்தொண்டாற்றும் நல்லவர்களுடன் நட்புறவு கொண்டால் நாமும் நம் குடும்பமும் சந்தோஷமாக வாழும். தலைவரின் பொன்மொழி... ஒன்று ஒரு கெட்டவன் இருந்தால் நூறு நல்லவன் கெடுவான். நாம் முன்னேற்ற பாதையிலே மனசை வைத்து முழுமுச்சாய் அதற்காக (தலைவரின் புகழுக்காக ) தினம் உழைத்து ஒற்றுமையாக இருந்து தொடர்ந்து தலைவரின் புகழ் பாடுவோம். வள்ளலின் வழியில்... உரிமைக்குரல் ராஜு......... Thanks wa.,
-
30th March 2019, 02:30 PM
#2654
Junior Member
Diamond Hubber
சூப்பர் டீலக்ஸ்
________________
விஜய் சேதுபதி
காயத்ரி , சமந்தா
இயக்குனர்
தியாகராஜன குமார ராஜா
விஜய் சேதுபதி திரு நங்கை வேடம்
மனம்(கன) கச்சிதம்
காயத்ரி தான் நடித்த படம் அனைத்திலும் யதார்த்தம் இதிலும் குறைவில்லை
சமந்தாவும் நடிப்பில் நிறைவு செய்கிறார்
சமந்தாவின் கணவராக வரும் பகத் பாசில் நீ ஒன்றும் பத்தினி இல்லை சொன்னவுடன் விளக்கெரிய என்று கதற விளக்குகள் பளிச்
இயக்குனரும் பளிச்
படம் பல பின் வளைவுகள் கொண்டிருந்தாலும்
நம்மை ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைக்கிறார்
90 சதவீத படங்களில் தமிழ் திரைப்படம் மக்கள் திலகத்திற்கு தன் நன்றி கடனை செலுத்தி விடுகிறது தொழிலாளி பட வசனம்
பாசம் படத்தின் பாடல்
நம் உடம்பின் செல்கள் தான் நம்முடைய சிற்றரசர்கள் என்ற விஞ்ஞான உண்மையை வெளிக்கொணர்ந்தாலும்
அன்றும் , இன்றும் , என்றும்
உலகை இயக்க வல்லது
மக்கள் திலகத்தின் இந்த வரிகள் தான்
முறையாக வாழ் வோர்க்கு எது நாகரிகம் ?
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம் ! என்றென்றும் வாழ்க இதயக்கனி புகழ் பிம்பம்......
குறிப்பு : வித்தியாசமான படம் பார்ககலாம் !.... Thanks wa.,
ஹயாத் !
-
30th March 2019, 04:34 PM
#2655
Junior Member
Platinum Hubber
-
30th March 2019, 04:35 PM
#2656
Junior Member
Platinum Hubber
-
30th March 2019, 04:37 PM
#2657
Junior Member
Platinum Hubber
-
30th March 2019, 04:42 PM
#2658
Junior Member
Platinum Hubber
-
30th March 2019, 04:43 PM
#2659
Junior Member
Platinum Hubber
-
30th March 2019, 04:44 PM
#2660
Junior Member
Platinum Hubber
Bookmarks