-
28th March 2019, 08:54 PM
#2591
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகத்தின் சாதனையில் .... மதுரை மாநகரில் முதலிடம். சில வெற்றிகள். நகரில் சினிமா படவுலகம் தொடங்கி 1977 வரை இரண்டு அரங்கில் திரையீடு சாதனை படைத்த காவியம். தாய்க்குப்பின் தாரம். சந்திரா 98 நாட்கள் மீனாட்சி 63 நாட்கள் . மொத்தம் 161 நாட்கள் ஒடிய படம். அடுத்து காம்பளக்ஸில்
இரண்டு அரங்கில் திரையிட்டு ஒரு அரங்கில் 200 நாள் ஒடிய காவியம். உரிமைக்குரல். சினிப்பிரியா 200 நாள் மினிப்பிரியா 29 நாள் மொத்தம் 229 நாள். அடுத்து இரண்டு அரங்கில் வெளிவந்து 100 நாள் ஒடியதும் தலைவர் படங்களே!.1972 ல் நல்லநேரம் அலங்கார் 112 நாள் மூவிலேண்ட் 36 நாள். 1975 ல் பல்லாண்டு வாழ்க. அலங்கார் 110 நாள் . சினிப்பிரியா 28 நாள். நகரில் அதிகம் இரண்டு அரங்கில் திரையிட்ட படங்கள் தலைவரின் காவியங்களே! மேலும் மதுரை சாதனைகள் தொடரும். உரிமைக்குரல் ராஜு........... Thanks wa.,
..
-
28th March 2019 08:54 PM
# ADS
Circuit advertisement
-
28th March 2019, 08:59 PM
#2592
Junior Member
Diamond Hubber
நாகர்கோவில் நகரில் நாடு போற்றும் நல்லவரின் சாதனைகள் சில... நகரில் இதயவீணை முதல் நினைத்ததை முடிப்பவன் வரை வெளியான 7 படங்கள் தொடர் சாதனைகள்....
1) இதயவீணை - 54. 2) உலகம் சுற்றும் வாலிபன் - 112 3) பட்டிக்காட்டு பொன்னையா - 62
4)நேற்று இன்று நாளை - 77 5) உரிமைக்குரல் -. 83. 6) சிரித்து வாழ வேண்டும் - 52. 7) நினைத்ததை முடிப்பவன் - 70 இப்படி தொடர்ந்து நகரில் 2 வருடத்திற்குள் 7 வண்ணப்படங்கள் ஒடிய வரலாறு எந்த நடிகருக்கும் கிடையாது. ........உரிமைக்குரல் ராஜு..... Thanks wa.,
-
28th March 2019, 09:04 PM
#2593
Junior Member
Diamond Hubber
நாகர்கோவில் நகரில் நாடு போற்றும் நல்லவரின் சாதனைகள் சில... நகரில் இதயவீணை முதல் நினைத்ததை முடிப்பவன் வரை வெளியான 7 படங்கள் தொடர் சாதனைகள்....
1) இதயவீணை - 54. 2) உலகம் சுற்றும் வாலிபன் - 112 3) பட்டிக்காட்டு பொன்னையா - 62
4) நேற்று இன்று நாளை - 77 5) உரிமைக்குரல் -. 83. 6) சிரித்து வாழ வேண்டும் - 52
. 7) நினைத்ததை முடிப்பவன் - 70 இப்படி தொடர்ந்து நகரில் 2 வருடத்திற்குள் 7 வண்ணப்படங்கள் ஒடிய வரலாறு எந்த நடிகருக்கும் கிடையாது. .............. உரிமைக்குரல் ராஜு........ Thanks wa.,
-
28th March 2019, 09:05 PM
#2594
Junior Member
Diamond Hubber
சென்னை நகர வெற்றி.. தேவிபாரடைஸ் திரையரங்கில் தலைவரின் இரண்டு காவியங்கள் ஒவ்வொரு ஆண்டிலும் வசூல், ஒடிய நாளில் மாபெரும் சாதனை.... 1975 ல் நி. முடிப்பவன் 105 காட்சி தொடர் அரங்கு நிறைந்து...84 நாளில் பெற்ற வசூல்.. 6,26,932.95 ஆகும். பல்லாண்டு வாழ்க... 104 நாளில் 7,93,428.80 ஆகும். அதன் பின்பு 1977 ல் தலைவரின் இன்று போல் என்றும் வாழ்க திரைப்படம் 101 நாள் வசூல் 8,23,794.90. அதே ஆண்டில் வெளி வந்த தலைவரின் மீனவ நண்பன் 117 காட்சிகள் தொடர் அரங்கு நிறைந்து 104 நாள் ஒடி பெற்ற வசூல். ரூ.8,26,742.50. ஆகும். இவ்வரங்கில் மற்ற நடிகர்களின் படங்கள் 100 நாள் கண்டும் 6 லட்சத்தை தாண்டவில்லை... சொர்க்கம் ( தே.பார) 100 நாள். 5,61,608.50. ராஜா 99.1/2 காட்சி (.முழுமையாக 100 ஒட்டப்படவில்லை அன்று இரவு காட்சி ரத்து... 6.லட்சம் வரவில்லை. அடுத்து நீதி என்ற படம் 99 நாள் வசூல் 5 லட்சத்திற்குள் தான். இது மட்டுமல்ல... அவர்களின் சாந்தி அரங்கில் 100 நாளை கடந்த , ஒட்டப்பட்ட படங்களை தலைவரின் நி. முடிப்பவன் 84 நாள் ஒடி வென்றது. கலாட்டா கல்யாணம் 100.நாள் 4,39,670.52. அடுத்து தெய்வ மகன் 100 நாள் 4,26,337.51..அடுத்து தி.மோகனா 100 நாள் 5,50,690.88 இப்படி பல படங்களை வென்றுள்ளது.. பட்டியல் தொடரும்... உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,
-
28th March 2019, 10:13 PM
#2595
Junior Member
Diamond Hubber
இன்று மதியம் K T V யில் பொன்மனச்செம்மல் வழங்கும் பிரம்மாண்ட வசூல் படைப்பு... Blockbuster Mega Hit... "நினைத்ததை முடிப்பவன்" காவியம் ஒளிபரப்பட்டது....
-
29th March 2019, 03:04 PM
#2596
Junior Member
Diamond Hubber
மதிப்பிற்குரிய அண்ணன் சைதையார் அவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் . இன்று சென்னை தொலைக்காட்சி அருகில் உள்ள அண்ணா அரங்கில் ஐயா H.V.ஹண்டே அவர்கள் எழுதிய தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவி எடுத்த நிகழ்வு பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டது. தலைவரின் அற்புத மனிதநேயத்தை பற்றி திரு. பொன்னையன் அவர்கள். அமைச்சர் திரு. ஜெயக்குமார் அவர்கள் , திரு. ஜே.சி.டி பிரபாகரன் அவர்கள் என பலர் பேசினார்கள். விழாவில் அண்ணா அரங்கம் எப்படி உருவானது பற்றி பேசிய திரு. பொன்னையன் அவர்கள் அரசு பணத்தில் கட்ட. பொருளாதாரம் இல்லை என்றதும் தலைவர் தன் சொந்த பணம் (அன்று1983ல் ) ரூபாய் 25,000 ஆயிரத்தை முன் பணமாக கொடுத்தார் என்று பேசினார். தலைவரின் பெயர் போட்ட, அடிக்கல் நாட்டிய நினைவு தகடு அங்கு உள்ளது. ஆனால் வந்திருந்த பலருக்கும் ஒரு அதிர்ச்சி கண்ணில் பட்டது. அண்ணா அரங்கில் வாயிலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படம் வைக்கப்பட்டது. வரவேற்கிறோம். அதன் அருகில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் படம் அண்ணா படம் அளவுக்கு உள்ளது. ஆனால் அந்த அரங்கம் உருவாக காரணமாக இருந்த நம் அன்புத் தலைவரின் திருவுருவப்படம் இல்லாது கண்டு கண்கலங்கினோம். இதை கூட பார்க்கவில்லை, கவனிக்கவில்லை நம் அரசாங்கம். 1968.ல் தலைவர் ஒரு சமயம் தி.மு.க. கூட்டத்தில் பேசும் போது சொன்னார். முன்பு எல்லாம் அண்ணா அவர்களின் படத்தை நகராட்சியில் முக்கிய இடங்களில் வைத்தால் உடனே அப்புறப் படுத்தினார்கள். அன்றைய (காங்கிரஸ்) .ஆட்சியில் .ஆனால் இன்று நம் அண்ணாவின் படம் எடுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் அண்ணாவின் திருவுருவபப்படம் காட்சியளிக்கிறது என்பதை நினைத்து பூரிப்படைகின்றேன் என்றார் புரட்சித்தலைவர்.அப்படி பேசி அண்ணா அவர்களுக்கு புகழ் பாடிய அருமைத் தலைவரின் படமில்லை. என்பதை நினைத்து வருந்துகின்றோம்.... ஆனால் இது போன்ற நிகழ்வுகளுக்கு அரசாங்கத்தில் யார் காரணம்.... அந்த அம்மையார் இருந்த போது தான் இப்படி ஒரு நிகழ்வு.. இப்பொழுது மனம் திறந்து மேடையில் தலைவரை பற்றி பேசிய அமைச்சர் உட்பட , அவர்கள் நினைத்தால் நாளையே அண்ணா அரங்கில் தலைவரின் திருவுருவ படம் வைக்கலாமே... இதுப் போல தலைவர் நினைவிடம், தலைமை கழகம், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகிய முக்கிய இடங்களில் ( தேர்தல் நடந்த பின்) வைக்கலாமே..... அன்புடன் அனைத்து தலைவரின் பக்தர்கள் சார்பில் தங்களிடம் இந்த அன்பு கோரிக்கை..... நன்றி. அண்ணா! உரிமைக்குரல் ராஜு............. Thanks wa.,...
-
29th March 2019, 03:05 PM
#2597
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகத்தின் சாதனையில் கடலூர் நகரின் வெற்றிகள் சில. நகரில் முதல் 100.நாள் ஒடிய திரைப்படம் மதுரை வீரன் - 1956 நியூசினிமாவில் 111நாட்கள் ஒடியது. இங்கு 1954 ல் மலைக்கள்ளன் 77 நாள். 1956 ல் அலிபாபாவும் 40.திருடர்களும் 76.நாள்1955.ல் குலேபகாவலி முத்தையா அரங்கில் 71 நாட்களும் 1956ல் தாய்க்குப்பின் தாரம் 63.நாளும்,.1957.ல் சக்கரவர்த்தி திருமகள் 60.நாளும்,.புதுமைப் பித்தன் 55 நாளும் ஒடியுள்ளது. மேலும் கடலுரில் அற்புத சாதனைகள் தொடரும்... உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,
-
29th March 2019, 03:08 PM
#2598
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் ஒருலரின் திரைப்படம் மட்டும் தான் ABC என மூன்று சென்டர்களிலும் சாதனையை உருவாக்கியுள்ளது. அதற்கு சில சாதனைகள். 1).அருப்புக்கோட்டை மலைக்கள்ளன் 74 நாள். 2).திண்டிவனம் ஒளி விளக்கு 63 நாள்.3) தென்காசி எங்கவீட்டுப்பிள்ளை 72.நாள் 4) திருப்பத்தூர் ( வேலூர்) உ.சு. வாலிபன் 72 நாள். 5).தேனீ மாட்டடுக்கார வேலன் 70.நாள்(டூரிங் தியேட்டர் லட்சுமி) 6) ராஜபாளையம் என்அண்ணன் 50.நாள் 7) செங்கவ் பட்டு திருமலை அரங்கு மதுரைவீரன் 76 நாள். 8) நாகபட்டினம் நம்நாடு 52 நாள் 9).செங்கோட்டை பத்மனாபா. நாடோடி மன்னன் 55 நாள் 10).விருத்தாசலம் காவல் காரன் 50.நாள் 11) சாலைப்புதூர் ( கருர் அருகில்) உரிமைக்குரல் 50.நாள். 12) திருவள்ளுர் நேற்று இன்று நாளை 50 நாள் 13) வில்லிவாக்கம் நாதமுனி பெற்றால் தான் பிள்ளையா 55.நாள் 14) காட்டு மன்னார் கோவில் ஒளி விளக்கு 50.நாள்.15)சிவகாசி நாடோடி மன்னன் 60.நாள்.16) திருச்சி லால்குடி எங்க வீட்டுப்பிள்ளை 50 நாள்.17) கோவில்பட்டி நல்ல நேரம் 50.நாள். 18).மேட்டுப்பாளையம் ( ஊட்டி) உ.சு.வாலிபன் 57 நாள். 19) கோபி செட்டிபாளையம் மாட்டுக்கார வேலன் 50 நாள்.20) மதுராந்தகம் ஆயிரத்தில் ஒருவன் (.காயத்திரி அரங்கு) .50.நாள். 21) குன்னூர் அடிமைப்பெண் 50 நாள் 22) திருத்துறைப்பூண்டி நம்நாடு 50 நாள். 23) காரைக்கால் ரிக்க்ஷா க்காரன் 50 நாள்.24) மேட்டூர் அடிமைப்பெண் 50.நாள்.25) சங்கரன் கோவில் நாடோடி மன்னன் 50.நாள். தொடரும் சாதனைகள்... உரிமைக்குரல் ராஜு........ Thanks wa.,.
.,
-
29th March 2019, 03:09 PM
#2599
Junior Member
Diamond Hubber
சென்னை பரங்கிமலை ஜோதிஅரங்கில் வெற்றி நடைபோட்ட மக்கள் திலகத்தின் திரைப்படங்கள்... 1975 ல் பல்லாண்டு வாழ்க 76 நாட்களும்,.1976.ல் நீதிக்குத் தலை வணங்கு 71நாட்களும் ஒடி நிரந்தர சாதனையாக நிற்கிறது.
உரிமைக்குரல் ராஜு......... Thanks wa.,
-
29th March 2019, 03:14 PM
#2600
Junior Member
Diamond Hubber
இசையமைப்பாளர் இளைராஜா 1976 ல் அன்னக்கினி படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். அவர் பேசும் போது அவர் இசை அமைத்த அன்னக்கிளி படத்தின் பாடல் தான் எங்கும் ஒலித்ததாகவும் தலைவரின் பாடல்கள் மற்ற நடிகர்களின் பாடல்கள் பெரிய அளவில் மக்களிடம் பாப்புலர் ஆகவில்லை என்று இப்பொழுது பேசுகிறார்.. 1975 1976 களில் புரட்சி தலைவரின் "இதயக்கனி " "நாளை நமதே " "பல்லாண்டு வாழ்க", "நினைத்ததை முடிப்பவன்", " நீதிக்குத்தலை வணங்கு ",உழைக்கும் கரங்கள். ஊருக்கு உழைப்பவன் படபாடல்கள் ஒலிக்காத கல்யாண வீடு பொதுக்கூட்டங்கள் வீடுகளில் ,.ரேடியாவில் இலங்கை வானொலியில் இடம் பெறாத ஒளிப்பரப்பாத நாட்கள் நேரங்கள் இல்லை... இளையராஜாவுக்கு இப்பொழுது தான் ஞானயோதயம் வந்துள்ளது. தலைவரின் ஒரு படத்திற்காவது இசை அமைக்கவேண்டும் என ஏங்கி பேட்டிக் கொடுத்த காலங்களை மறந்து அன்னக்கிளி படபாடலை பற்றி பேசுகிறார். அந்த பாடல்கள் இன்று வரை கேட்கப்படுகிறதா?. அல்லது புரட்சித் தலைவரின் பாடல்களை நாம் மறந்து விட்டோமா. இளையராஜாவின் கர்வம் இன்னும் அடங்கவில்லை. தான் தான் தமிழ் நாட்டில் சிறந்த இசை ஞானி என்று தன்னையே புகழும் கேவலம் இவருக்கு கை வந்த கலையாகும்.. தலைவரின் பாடல்கள் அன்று எட்டு திசையிலும் ஒலித்துக் கொண்டிருந்த நேரம், அனல் பறக்கும் பாடலை கேட்டாலே அன்று அதிர்ந்தது எதிர் கட்சிகள் மாற்று நடிகரின் ரசிகர்கள். 1975 ல் ஒரே பாடலான தென்னகமாம் இன்பத்திருநாட்டில் .... அடுத்து1976ல் நான் பார்த்தா பைத்தியக் காரன் பாடல் ... இந்த பச்சைக்கிளிக்கொரு... பாடல் நாளை உலகை ஆளவேண்டும் பாடல்.. எதிரிகளை கதி கலக்கிய பாடல்கள் ஆகும்... இன்னும் பல பாடல்கள் உண்டு.இளையராஜா தன்னை மறந்து மமதையில் , போதயில் மதி மயக்கத்தில் ரீல் சுற்றுகின்றார். எம்.எஸ்.வீ. , டி.எம்.எஸ்.,.எஸ்.பி. பி, கே.ஜே.யேசுதாஸ் பாடிய பாடல்கள் நம் தரைவரால் புகழ் பெற்று இன்று வரை திகழ்கின்றது...இசையமைப்பாளர் இளைய ராஜா மேலும் தவறான செய்தியை பதிவிட்டால் கண்டன கணைகள் தான் தொடரும்... உரிமைக்குரல் ராஜு..... .. Thanks wa.,
Bookmarks