Page 244 of 401 FirstFirst ... 144194234242243244245246254294344 ... LastLast
Results 2,431 to 2,440 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #2431
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை- சென்ட்ரல் dts அரங்கில் மக்கள் திலகம் "குடியிருந்த கோயில்" சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை முன்னிட்டு திரையிடுவதாக இருக்கும் சூழ்நிலையில் தேர்தலை காரணம் காட்டி திரையிட கூடாது, சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என சொல்வதாக தகவல் வருகிறது... இப்போதும் புரட்சி தலைவர் படத்தை கண்டு பயப்படுவதை நாம் என்னவென்று சொல்ல??? !!!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2432
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் மறைந்துவிட்டாரா? யார்சொன்னது வரும் மதுரை சித்திரைத்திருவிழா மதுரை சென்ட்ரல்சினிமா டி.டி.எஸ் புரட்சித்தலைவர் நடித்த "குடியிருந்தகோயில் "படம் வெளியிட தேர்தல் அதிகாரி மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தடைசெய்கின்றனரே கேட்டால் புரட்சித்தலைவர் அரசியல் தலைவராம் மறைந்துவிட்ட மாமனிதர் இன்னமும் இருக்கின்றார் தானே , அதனால்தான் அவர்படம்போட்டால் அவருடைகட்சி ஜெயித்துவிடும் என்ற சந்தேகம் பயம் சிவாஜி நடித்த தியாகம் படம் போடத்தடை ஏதுமில்லை இன்னமும் அனைவரையும் தெறிக்கவிட்டு என்றும் வெல்லும் புரட்சித்தலைவரின் புகழ் ஓங்குக மதுரை.எஸ் குமார்.......... Thanks wa.,

  4. #2433
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அன்றும் இன்றும் என்றும் மக்கள் தலைவர் எம். ஜி .ஆர் .உடலால் மறைந்தாலும் உருவம் கண்டு மக்கள் வாக்கு அளித்து விடுவார்களோ என்று எண்ணி தேர்தல் அதிகாரிகள் ,எதிர்க்கட்சிகள் அலறும் நிலையை பாருங்கள் .தலைவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .பல காலம் நம்முடன் வாழ்ந்து எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் ஆனால் ஆட்சியாளர்கள் இன்னும் தலைவரின் மதிப்பு செல்வாக்கு ஆகியவற்றை உணர்வதாக தெரியவில்லை... Thanks wa.,

  5. #2434
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நிஜம்!! சுடாது?
    --------------------------
    எம்.ஜி.ஆருக்கு மோட்ச தீபம் ஏற்றினார் காஞ்சிப் பெரியவர் என்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம்!!
    அதைப் பற்றி கொஞ்சம் ஆராயலாமா??
    சுந்தரம் ஐயர்!!
    1992இல் காலமானவர்.
    காஞ்சிப் பெரியவரின் தீவிர பக்தரான இவரது அறுபதாம் கல்யாணத்தையே காஞ்சி முனி தான் ,,தமது சங்கர மடத்தில் நடத்தி இவருக்கு அருள் பாலித்தார்!!
    அவர்,,அடியேனிடம் சொன்ன நிகழ்வு தான் இந்தத் தகழ்வு!!
    அது 1987 டிசம்பரில் சந்திரன்--கார் முகிலுக்குள் புகுந்து கொண்ட துயரமான நாள்??
    அகிலம் எங்கும் அரற்றலுடன் கூடிய தருணம்!
    காஞ்சி மடத்திலோ கனத்த மௌனம்?
    தவ நிலை கலையாது சவ நிலையில் அசையாது --
    சிவ சிலையாகக் காஞ்சிப் பெரியவர்??
    குளிர்ந்த பூ என்னும்--
    தண் மலர் என்ற கண் மலர் திறக்கும் காஞ்சிப் பெரியவரின் வாயில் இருந்து--
    பொன் மலர் வார்த்தைகள் வெளிப்படுகின்றன?
    ராமச்சந்திரனுக்கு மோட்ச தீபம் ஏத்தணும்!!
    காஞ்சியைக் காக்கும் காமாட்சிக் கோயிலில் ஒரு அகல் விளக்கு--சில ஆன்மாக்களின் அருளைப்-- புகல் விளக்காக இந்தப் பிரபஞ்சத்தில் பொழிந்து கொண்டே இருப்பது தான் அந்த விளக்கு நமக்கு விளக்கும் உண்மை!!
    ஆட்சி தீபம் அருமையாக இருப்பதற்கு--
    சாட்சி தீபம் மட்டுமல்லாது சில அதிர்வுகளின்-
    காட்சி தீபம் தான் அந்த மோட்ச தீபம்!!
    காந்தி,,நேரு,,இந்திரா --இப்படி எல்லோருக்கும் இல்லாமல் எம்.ஜி.ஆருக்கு மட்டும் இப்படி ஒரு தீபம் ஏற்றுவதால் என்ன லாபம்??
    சீடர் அனைவரும் சிந்தை குழம்ப--
    வேடர் தம் கவனத்தைப் போல் தம் காரியத்திலேயே கருத்தாகக் காஞ்சிப் பெரியவர்??
    பணியை முடித்தப் பெரியவர்--
    பனியை ஒத்த அருள் குரலில் ரத்தினச் சுருக்கமாக காரணத்தை விளக்கியது இரண்டே வாக்கியங்களில்?
    சிலரது ஆத்மாக்கள்!!
    எனது கடமை!!
    இவ்வளவு சுருக்கமாகப் பெரியவர் சொன்னதன் பொருளில் தான் எவ்வளவு உருக்கம்??
    எம்.ஜி.ஆரின் ஆன்மா ஒரு சாதாரண மானிட ஆன்மாவே அல்ல?
    செத்த புருஷர்கள் அனைவரைப் போலில்லாது-மத்த புருஷர்களோடு ஒப்பிட முடியாத--
    சுத்த புருஷர்!! சுருங்கச் சொன்னால் எம்.ஜி.ஆர் ஒரு----
    சித்த புருஷர்!!
    கவனிக்க வேண்டும் இங்கே!!
    காஞ்சிப் பெரியவர்,,நம்மைப் போல் எம்.ஜி.ஆர் படம் பார்த்து விசில் அடித்தவரல்ல??
    அவரிடம் உதவி பெற்ற கட்சிக்காரரும் இல்லை??
    ஆன்மிகம் என்னும்--
    அற நெறியில் இருப்பவர்களுக்குப்--
    பிற நெறியில் இருப்பவர்களின் உண்மையான-
    நிற நெறி நிச்சயம் தெரிந்திருக்கும் !!அவர்களின்--
    புற நெறிப் புரிந்திருக்கும் தானே???
    உண்மை சுடும்! என்பார்கள்!--ஆனால்??
    இந்தப் பதிவு நிஜம்! ஆனால் சுடவில்லை??
    அதிசயம் ஆனால் உண்மை என்பார்கள்!!
    இங்கேயோ--இது---
    அதிசயமில்லை?? ஆனால் உண்மை!!
    ஒப்புக் கொள்ளலாம் தானே உறவுகளே????.. ............ Thanks wa.,

  6. #2435
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சிலர் தாங்கள் செய்யும் அற்ப விஷயங்களைக் கூட அரியாசனம் ஏற்றிவிட பேராசை படுகின்ற காலமிது.😜😜

    💐💐💐ஆனால் மாபெரும் மனிதர்கள் அரிய பெரும் சாதனைகளை அஸால்டாக செய்து விட்டு அமைதி காக்கின்றனர். அது அவர்களது பெருந்தன்மையை பறை சாற்றினாலும் நாம் மௌனம் காப்பது எவ்விதத்தில் நியாயம்? எனவே தான் என்னுடைய இந்தப்பதிவு 💐💐💐

    நான் யாரைப் பற்றி கூறுகிறேன் என்பதை பலர் யூகித்திருப்பீர்கள். ஆம், அவர் வேறு யாருமல்ல, மனித நேய அறக்கட்டளை நிறுவனரும் தலைவரின் உண்மைத் தொண்டரும் தலைவர் பக்தர்களின் உறைவிடமுமான அண்ணன் திரு சைதை துரைசாமி தான். ஒரு தனி மனிதனாக தலைவரின் பூர்வீக இல்லத்தை புதுப்பித்த கையோடு நமது தாய்மொழி தமிழுக்கும், தமிழர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்ட தானைத் தலைவருக்கும் மிகப் பெரிய அங்கீகாரத்தை இந்திய அளவில் தனது தனிப்பட்ட செல்வாக்கின் மூலம் பெற்றுத் தந்திருக்கிறார். இவ்வுண்மையை உலகிற்கு உணர்த்தவே இப்பதிவு.

    பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் கடந்த 6 ம் தேதியன்று பெருங்களத்தூரில் தான் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழர்களாகிய நாமனைவரும் பெருமையும், பெருமகிழ்ச்சியும் கொள்ளும் வகையில் இரண்டு முக்கிய முடிவுகளை வெளியிட்டார், அவை:

    1. புரட்சித் தலைவரை வானளாவப் புகழ்ந்துவிட்டு சென்னை சென்ட்ரல் இனி எம்ஜிஆர் என்ற பெயரில் அழைக்கப்படும்,

    2. சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படும் மற்றும் வந்தடையும் தகவல்கள் தமிழிலும் இனி ஒளிபரப்பப்படும் ஆகியவையாகும்.

    தமிழர்களாகிய நாம் பெருமை படும் வகையில் வந்த இவ்விரண்டு அம்சங்களுக்கு காரணகர்த்தா யாரென்று ஆராய்ந்தால் அது நம் சைதையாரைத் தவிர வேறு யாருமல்ல. இவ்வளவு பெரிய சாதனையை ஜஸ்ட் லைக் தட்டாக செய்துவிட்டு ஒன்றும் அறியாதவர் போல் இருப்பது அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்த்து விட்டது. ஆகையால் தான் முன்னாள் சென்னை மேயர் அவர்கள் நம் எண்ணங்களில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார். இரண்டு வரலாற்று சிறப்புமிக்க அறிவுப்புகளுக்கு அவர் பின்புலமாக இருந்துள்ளார் என்பது நம்மைப் போன்ற தலைவர் பக்தர்கள் கொண்டாடி மகிழ வேண்டிய நிகழ்வென்றால் அது மிகையாகாது.

    எப்படி இது நிகழ்ந்தது என்பதை சுருக்கமாக விவரிக்கிறேன்.

    சென்னை சென்ட்ரலுக்கு தலைவர் பெயர் சூட்ட வேண்டுமென்று முதன்முதலாக வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்ற உலக எம்ஜிஆர் பேரவை மாநாட்டில் மத்திய அரசுக்கு கோரிக்கை இடுகிறார். அந்த மாநாட்டிலேயே கவர்னரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கிறார். இதன் தொடர்ச்சியாக அமைச்சரவை கூட்டத்தில் மாண்புமிகு முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்களுக்கு பரிந்துரைக்கப்படுவதை உறுதி செய்து கொள்கிறார். தனது தனிப்பட்ட செல்வாக்கின் மூலம் இதனூடே தமிழ் நாட்டிற்கு நலம் பயக்கும் வேறு சில முக்கிய கோரிக்கைகளும் மத்திய அரசிடம் வைக்கப்படுகிறது. அக்கோரிக்கைகளில் ஒன்று தான் சென்னை விமான நிலையத்தில் தமிழுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படவேண்டுமென்பது. கோரிக்கை வைத்ததோடு தன் பணி முடிந்தது என்று விட்டு விடாமல் தன்னால் இயன்ற வரை அழுத்தம் கொடுத்துக்கொண்டே வருகிறார். இறுதியாக திரு மோடி அவர்கள் சென்னை வருவதற்கு முன்பு மிகவும் முன் யோசனையுடன் தமிழ் நாட்டின் நலன் காக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டுமென்று தனது கோரிக்கைகளை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறார். இவ்வளவு அரும்பாடுபட்ட பின்பு தான் மார்ச் 6 அன்று இரண்டு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதுவரை இந்திய அளவில் அகில இந்தியத் தலைவர்களுக்கோ அல்லது மாநில அளவில் மாநிலத் தலைவர்களுக்கோ மாநிலத்தின் தலைநகரில் அதி முக்கிய பேருந்து நிலையத்திற்கும், இரயில் நிலையத்திற்கும் எந்தத் தலைவரின் பெயரும் சூட்டப்படவில்லை. இம்மாபெரும் சிறப்பு வாய்க்கப் பெற்றவர் நம் புரட்சித் தலைவர் ஒருவரே என்பதில் இருவேறு கருத்துகள் கிடையாது. நாம் அனைவரும் பெருமையும் பேருவகையும் கொள்ளும் வண்ணம் எந்த இந்தியத் தலைவருக்கும் கிடைக்கப் பெறாத, நமது எதிரிகளும் தீய சக்திகளும் பொறாமையடையும் வகையில் கிடைக்கப்பெற்ற சாதனையென்றால் அது மிகையன்று. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் தலைவர் புகழ் மறைவதில்லை, ஆணைகளிட்டே தடுப்பவர்கள் இருப்பினும் நீரிலே அமிழ்த்தப்பட்ட காற்றடித்த பந்து சீறி மேலெழுவது போல் அவரது மகிமை வெளிப்பட்டு நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை நாம் கண்கூடாக காண்கிறோம். கோயம்பேடு பேருந்து முனையத்திற்கு தலைவர் பெயர் தான் வைக்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டவர் திரு சைதை சா. துரைசாமி. இப்போது அவரது சீரிய முயற்சியால் அதைவிட பெரும் பேறாக சென்ட்ரல் இரயில் நிலையம் இனி தலைவர் பெயரால் அழைக்கப்படும் என்கிற இனிப்பான தகவல் நம்மனைவரையும் எல்லையில்லா மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது. சைதையாரின் இச்செயற்கரிய செயலை மனமார பாராட்டுகின்ற அதே வேளையில் புரட்சித் தலைவரின் அழியாப் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு தலைவரின் பெயரை சூட்டிய பாரதப் பிரதமர் திரு மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த அரிய பெரும் செயலால் பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் உலகெங்கும் வாழும் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களின் இருதயத்தில் இடம் பிடித்து விட்டார். இதை ஏன் நான் இங்கு வெளிப்படையாக குறிப்பிடுகிறேன் என்றால், நான் உட்பட தலைவர் தொண்டர்களிடம் மட்டுமே காணப்படும் அரிய பெரும் குணம் ஒன்று உண்டு. அது யாதெனில், தலைவரை யாராவது உண்மையாக புகழ்ந்து விட்டாலோ அல்லது தலைவரால் ஈர்க்கப்பட்டவர் தான் இவர் என்று தெரிந்து விட்டாலோ அவரை எந்த நிலையிலும் கைவிட மாட்டார்கள். திரு மோடி அவர்கள் தந்திருக்கும் இந்த அரிய பரிசிற்கு தலைவர் பக்தர்கள், தலைவர் வாலிபனில் கூறியது போல் தக்க கைமாறு செய்யாமல் விட மாட்டார்கள் என்பது மட்டும் திண்ணம். அவரது குறி எம்ஜிஆரின் ஓட்டு வங்கியாகவே இருப்பினும், தலைவர் பெயரைச் சொன்னால் தான் தமிழ்நாட்டில் ஓட்டு என்ற உண்மை அதன் மூலம் எதிரிகளுக்கு விளங்கட்டும்.

    சைதையார் மேடைக்கு மேடை முழங்குவது போல் 1957 முதல் இன்று வரை தமிழ்நாட்டின் தேர்தல் முடிவை நிர்ணயிப்பவர்கள் எம்ஜிஆரென்ற மாபெரும் சக்தியால் இயங்கி வரும் இரத்தத்தின் இரத்தங்கள் தான் என்பது மீண்டுமொரு முறை இவ்வுலகிற்கு உணர்த்தப்படும் வகையில் வார்த்தைகளால் தலைவரை அர்சித்த திரு மோடி அவர்களுக்கு தலைவர் பக்தர்கள் தங்களது நன்றியை வாக்குகள் மூலம் தெரிவிப்பார்கள் என்பதை ஆணித்தரமாக தெரிவிக்கிறேன்.

    வெற்றி வாகை சூடிய பின் இது போன்ற மேலும் பல புகழ்மாலைகள், திட்டங்கள் தலைவர் பெயரால் அலங்கரிக்க படவேண்டும். அதுவே தன்னலமின்றி தமிழர்களின் வாழ்வே தனது மூச்சாக வாழ்ந்த தன்னிகரில்லாத் தலைவனுக்கு செய்யும் நன்றிக்கடனாக அமையும்.

    சைதையாரின் கல்விப்பணி மற்றும் சமூகப் பணிகளுடன் இதுபோன்ற சுயநலமில்லா சேவைகளும் மேலும் மேலும் சிறப்படைய நாமனைவரும் வாழ்த்துவோம். 🙏🏻🙏🏻🙏🏻

    எனவே நல்ல பல காரியங்கள் செய்வதற்கு நல்ல எண்ணமும் விடாமுயற்சியும் இருந்தால் போதும். பணம், பதவி, செல்வாக்கெல்லாம் அதன் பிறகே.

    தலைவர், “பல்லாண்டு வாழ்க” படத்தில் கூறுவார்

    "நல்லதை நோக்கி நாம் ஓரடி எடுத்து வைத்தால் அது நம்மை நோக்கி பத்தடி வருமென்று"

    எனவே நல்ல எண்ணங்களைக் கொண்டு நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம். தலைவர் புகழ் தமிழ் கூறும் நல்லுலகம் உள்ளவரை ஓங்கி வளர்ந்து கொண்டே இருக்கும், அதை மறைப்பவர்கள் மறைந்து போவார்கள், வசை பாடுபவர்கள் வீழ்வார்கள்.

    புரட்சித் தலைவர் நாமம் வாழ்க✌🏻✌🏻

    பொன்மனச்செம்மல் புகழ் ஓங்குக 🌱🌱🌱

    க. சந்திரசேகர், தலைவர் பக்தன், சென்னை.... Thanks fb.,

  7. #2436
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வாய்கிழியக்கத்துவது முழிபிதுங்கப் பார்பது யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் நெஞ்சைப்பிடித்துக் கொண்டு ஓடுவது தான் நடிப்புஎன்றால் ஒரு உயிரைக்காக்க தனதுஉயிரைப் பெரிதாகநினைக்காமல் எதிரிகளோடு கிடைக்கும் ஆயுதத்தை கையில் எடுத்து அதை சரியான முறையில் கையாண்டு எதிரிகளை ஓட.ஓட. விரட்டும் வீரமும் ஒரு அற்புதமான நடிப்புதான் கலைதான் என்ற புரட்சித்தலைவரின் இயல்பான நடிப்பாற்றல்............. அனைவருக்கும் இனிய காலைவணக்கம் மதுரை.எஸ் குமார்

  8. #2437
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    காலத்தை வென்று என்றும் மனிதநேயத்தின் மாமனிதராக எங்களின் இறை தூதுவராக நம்மை வழி நடத்தி செல்லும் தீர்க்கதரிசியாக நம் நெஞ்சங்களில் வாழும் அன்பு தலைவராம் புரட்சித்தலைவரின் புகழை பாடும் பல விழாக்களை எடுத்த நாம்! இப்பொழுது இதயதெய்வத்தின் மனிதநேய102 வது பிறந்த நாள் விழாவுடன்... 1958 ல் தமிழ் சினிமா உலகம் மூலம் ஒரு ஆட்சி எப்படி சிறப்பாக மக்களின் ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதை இந்த உலகத்திற்கு தான் பங்கு கொண்ட கதாபாத்திரத்தின் வாயிலாக தன் சொந்த தயாரிப்பில் இயக்கி வெளியிட்ட புரட்சிப்படைப்பான எம்.ஜி.யார். பிக்சர்ஸின் நாடோடி மன்னன் காவியத்தை தொடர்ந்து 2வது காவியமாக 1969 ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் படைப்பில் வெளியாகி ஒரு ஆட்சி எப்படி இருக்ககூடாது என்பதை சித்தரித்து காண்பித்து உலக அரங்கிற்கு அறை கூவல் விட்ட படைப்பு.வெளி நாட்டு படங்களை விட இந்திய மண்ணிலும் ஒரு பிரமாண்டத்தை உருவாக்க முடியும் என்பதை அடிமைப்பெண் திரைக்காவியம் மூலம் தன் சொந்த தயாரிப்பில் வெளியிட்ட அடிமைப்பெண் காவியத்திற்கு 2019 ல் பொன்விழாவை பொன்விழா சாதனை மலருடன் வெளியீட்டு கொண்டாடி மகிழ்வோம். அதன் பின் 2014 ல் தலைவர் புகழை மட்டுமே பாடி நற்பணிகளை செய்து ஒற்றுமையுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல் பட்டு வரும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் நற்பணி சங்கத்தின் 5 ம் ஆண்டு விழாவுடன் 102.நபர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி புரட்சித்தலைவரின் வழியில் செல்கின்றோம். இந்த மூன்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து...... புரட்சித்தலைவரின் புகழ்பாடும் முப்பெரும் விழாவாக சென்னையில் வருகின்ற 21.04.2019.ஞாயிறு அன்று தி.நகர் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளை அழைத்து சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றோம். தாங்களும் தலைவரின் புகழ்பாடும் விழாவில் இனிதே கலந்து நாம் யாவரும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் குடும்பத்தின் உறவுகளாக, உண்மை உள்ளங்களாக.அன்பின் வடிவமாக திகழ்வோம்! வாருங்கள் தலைவரின் புகழை சுயதலமின்றி பாடும் உண்மை உள்ளங்களே வாருங்கள்.... வரவேற்கின்றோம்!. இங்ஙனம். ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ்! மற்றும் பொன்மனச்செம்மவ் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம்..... Thanks wa.,

  9. #2438
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரையுலக சக்கரவர்த்தி, திரைப்படங்கள் மூலம் வசூலை எந்நாளும் தந்து கொண்டிருக்கும் ஒரே வசூல் சக்கரவர்த்தி , அகில உலக திரைவானில் எடுத்துக் கொண்டோமானால் அவர் மக்கள்திலகம் ஒருவர் மட்டுமே என்பது விஞ்ஞான அடிப்படையில் உண்மையாகிறது. இதை வரவேற்பவர்கள் பலர் இருந்தாலும்..... ஒரு சில உள்ளங்கள் தவறான கண்ணோட்டத்திலேயே அன்று முதல் இன்று வரை பொறாமை கொண்ட பார்வையுடனே பார்கின்றார்கள். உண்மையை எடுத்து சொன்னாலும் அதை சிந்திக்காமல் தாங்கள் எழுதுவது பதிவிடுவது தான் சாதனை என்கிறார்கள். ஆனால் நம் மக்கள் திலகம் திரைப்பட உலகில் 1936 முதல் 1949 வரை (ராஜகுமாரி திரைப்படத்தை தவிர்த்து) அன்றை பல முன்னனி நடிகர்களுடன் சுமார் 20 படங்களில் நடித்துள்ளார்கள். நாம் அதை கணக்கில், சாதனையில், ஒடிய படங்கள் என பட்டியலில் சேர்க்காது... 1950 ம் ஆண்டு வெளியான மருத நாட்டு இளவரசி திரைப்படத்திலிருந்து 1978 ஜனவரி மாதம் வெளியான தலைவரின் மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன் திரைப்படம் வரை தனிப்பெரும் கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டு அவ்வருடங்களில் வெளியான திரைப்படங்களில் நேரடி தமிழ் படங்கள் மட்டும் பார்த்தால் 1947.ல் வெளியான ராஜகுமாரி திரைப்படத்தையும் சேர்த்து 115 திரைப்படங்களாகும். 1950 ல் மருத நாட்டு இளவரசி முதல் மதுரையை மீட்ட சுந்திரப்பாண்டியன் வரை (.அதாவது 'ம' வரிசையில் தொடங்கி 'ம" வரிசையில் முடிந்த இத்திரைப்படங்கள் மட்டுமே புரட்சித்தலைவரின் லட்சியத்தில், கொள்கையில் சிந்தனையில், வெளியானவை களாகும். இதுவே தமிழ்படவுலகில் முதன்மை சாதனையாகும்!.மேலும் முதல் வெளியீட்டிற்கு பின் அடுத்தடுத்து வெளிவராது பெட்டியிலேயே முடங்கி போன பல ஆயிரக்கணக்கான நடிகர்களின் படங்கள் போல் இல்லாது தான் திரையுலகில் பவனிவந்த காலங்களிலும் சரி அதன்பின் முதல்வரான பின்பும் சரி மக்கள் உள்ளத்தில் மறைந்தும் மறையாது புகழ் மனம் வீசும் 31 ஆண்டு களிலும் சரி அன்று முதல்(1947..... 2019) இன்று வரை சுமார் 72 ஆண்டுகளில் புதிய திரைப்படங்கள் ஏற்படுத்திய சாதனைகளை விட அடுத்தடுத்து பல ஆண்டுகளாக வெள்ளித்திரையில் நம் மக்கள் திலகம் சாதித்த வெற்றிகளும், சாதனைகளும், வசூல்களும் கணக்கில் அடங்காத பிரமிக்கும் இமாலய சரித்திரங்கள் ஆகும். மேலும் தலைவரின் சாதனைகள் நாளை முதல் உங்கள் பார்வைக்கு தினம் தோறும் தொடரும்.. நன்றி. உரிமைக்குரல் ராஜு. ....... Thanks wa., Share...



    ..

  10. #2439
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தன் வியர்வை சிந்தி உழைத்து, சினிமாவில் நடித்து கட்சிக்காக செலவளித்தவர் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்,

    கட்சி துவக்கி பல இன்னல்களை சந்தித்து, முதல் தேர்தலில் ( திண்டுக்கல்) இரட்டை இலை சின்னத்தை விளம்பரப்படுத்தகூட விடாமல் செய்தனர் அப்போதைய ஆளுங்கட்சி திமுக, காங்கிரஸ், மற்றும் சில கட்சிகள்,

    அதையெல்லாம் மீறி வெற்றிபெற்றது புரட்சி தலைவரின் கட்சி,

    1972 ல் துவக்கிய கட்சியில் 1982ல் சேர்ந்த ஜெயலலிதாவை உயர்த்தி காண்பிக்கும் இன்றைய அஇஅதிமுக கட்சியினரே, பழைய வரலாறை திரும்பி பாருங்கள்,

    விதைத்தவர் புரட்சி தலைவர், அவர் ஊழல் ஆட்சியில்லாத, குடும்ப வாரிசு இல்லாத, மக்களுக்கு சேவை செய்வதையே குறிக்கோளாக கொண்டு, பொதுநல நோக்கத்திற்காக துவக்கினார், அதன்படி செயல்பட்டார்,

    ஆனால் அவர் கட்சியில் அவர் படமில்லை,
    கட்சி வேண்டும், சின்னம் வேண்டும், புரட்சி தலைவர் வேண்டாமா..? உங்களுக்கு ..?

    புரட்சி தலைவரால் உருவாக்கபட்ட இரட்டை இலை கண்ணீர்தான் வடிக்கும்..... Thanks wa.,

  11. #2440
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    காலத்தை வென்ற எம்ஜிஆர் . . .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிரோடிருந்தவரை அவரின் கருத்துக்கும் கொள்கைக்கும் வேண்டாதவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் இருந்திருக்கின்றனர், ஆட்சியிலும் சரி மற்ற விசயங்களிலும் சரி. இது மறுக்கப்பட முடியாத உண்மை.

    அவரின் அழகான தோற்றத்தினால் மக்கள் அவர்பால் கவரப்படுகின்றனர் என சிலர் எண்ணியிருக்கக்கூடும். அதனால், இப்படி நினைப்போர் எதிர் தரப்பில் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆயினும், அழகுக்கும் அப்பாற்பட்ட பல அரிய, உன்னதமான கொள்கைகளைக் கொண்டவர் எம்ஜிஆர் எனத் தெரிந்ததனால்தான் பெரும்பாலோர் அவரைத் தங்களின் இதயதில் வைத்துப் பூஜிக்கிறார்கள்.

    அவர் காலமான பின், அவரின் உயிலைப் படித்து உள்ளம் உருகி அதனால் ஈர்க்கப்பட்டோரும் உண்டு. ஊடல் நலக் குறை உள்ளோருக்கு அவர் விட்டுச்சென்றது போல் வேறு யாரேனும் செய்யக்காணோம். வாய் நிறைய பலர் பேசலாம். செயலில் காட்டி சிகரத்தைத் தொட்டவர் பொன் மனச் செம்மல் எம்ஜியார் அவர்கள் மட்டுமே.

    தனி நாடு கோரி பல இடர்பாடுகளில் சிக்கித் தவித்த இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும் என பெரிதும் நம்பினார். ( பின்னாளில், அவர் ஆட்சியில் இல்லாதபோது ஏற்பட்ட போரைத் தடுக்க முடியாது அந்த இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் பலியை பார்க்க நேர்ந்தது தமிழகம்).

    காலத்துக்கேற்ப தன்னை புதுமையாக காட்டியவர் எம்ஜிஆர். ராஜா ராணி பாணியிலான காலங்களில் இருந்து சமூக படங்களில் 'பேண்ட் சூட்' என கண்களைக் கவரும் வண்ணம் திரையில் தோன்றி பார்ப்போரைக் கவர்ந்தவர் அவர்.

    “ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை….” ஏன அவர் பாடியபோது, அவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி உள்ளம் குளிர்ந்த பெரியோர் பலர்.
    60ம் ஆண்டுகளில், எனக்கு விவரம் தெரிந்து கண்கூடாக நான் கண்ட உண்மை இது. அவர் அங்கே செய்யும் ஒவ்வொரு நல்ல விசயமும் இங்கே நமது நாட்டிலும், வேறு பல அயல் நாடுகளிலும் எதிரொலித்தது. அதுவே அவரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தது. இது ஒரு நடிகராக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்று. அதையும் தாண்டி உயர்தர எண்ணம் கொண்டோர் மட்டுமே இதுபோன்ற இமாலய சாதனைகளைச் செய்ய இயலும்.

    இப்போது நம் நாட்டில் உள்ள மற்ற இனத்தவரிடம் தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரை சொல்லச் சொன்னால், அவர்கள் சொல்வதில் தமிழ் நடிகர்கள் பெயர் இடம் பெறுவது அபூர்வமானாதாக இருக்கும். சிலருக்கு ரஜினியைத் தெரிந்திருக்கலாம். ஆனல், அன்று கிட்டத்தட்ட அனைவருக்கும், அதாவது மலாய், சீன இனத்தவருக்கும் எம்ஜிஆரைத் தெரிந்திருந்தது. தோட்டப் புறங்களில் திரையிடப்பட்ட அவர் படங்களை சீனர்களும் மலாய்க்காரர்களும் ஆர்வத்தோடு அமர்ந்து கண்டு களித்தனர். இது மக்கள் திலகத்துக்கே உரிய தனிச் சிறப்பு.

    அவரின் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தைப் போல் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் பல. அதே கதை, அதே பாணியிலான நடிப்பு. திரைக்கதைகளில் மட்டுமல்ல, சினிமாவில் அவர் கையாண்ட பல விசயங்களையும் பின்பற்றுவோர் இன்று நிறைய உண்டு. அப்படி பின்பற்றி வெற்றிபெற்றோரும் அதிகம்.

    அன்றைய நடிகர்களில் சுறுசுறுப்பாக திரையுலகில் ஆட்சி புரிந்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். ஸ்டன்ட் நடிகர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவே தனது எல்லாப் படங்களிலும் சண்டைக் காட்சிகளை வைத்த ஒரே நடிகர் இவர்தான் எனலாம். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.

    எம்ஜிஆர் பாடல்களில் புத்துணர்வு பெருகும். ஆது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி. எதிர் மறை எண்ணங்கள் எங்கேயும் இல்லாது பார்த்துக் கொண்டார். மற்ற நடிகர்களைப் போல ஒரு சில பக்கங்களில் இவரின் இசையார்வத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காதுக்கினிய இசையுடன் திரையில் ஒலிக்கச்செய்த மாபெரும் கலைஞர் இவர்.

    'டி.எம்.எஸ்ஸின்' குரல் வலிமையை வெளிக்கொணர்ந்தது எம்ஜிஆருக்காக அவர் பாடிய பாடல்களே. அதன் பின்னர் மற்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து பேரும் புகழும் பெற்றார். அதே நேரத்தில் எம்ஜிஆர் யாரையும் சார்ந்து அவர்களது கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இதற்கு உதாரணமாக இன்றும் நம்மிடையே கம்பீரமாக உலாவருபவர்தான் எஸ் பி பாலா.

    ‘கண் கவரும் சிலையே, காட்சி தரும் கலையே
    கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே…” எனும் மென்மையான குரலும் ஒத்துப்போகும்.

    ‘பாடும் போது நான் தென்றல் காற்று
    பருவ மங்கையோ தென்னங்கீற்று….’ ஏனும் வித்தியாசமான குரலும் ஒத்துப்போகும்.

    இதற்குக் காரணம், எம்ஜியாரின் பாடல்களை யார் பாடினாலும், படத்தைப் பார்த்த அடுத்த சில தினங்களில் அந்தப் பாடலை எம்ஜிஆர் அவர்களே பாடுவது போல தோன்றியதால் தான். அப்படி ஒரு மகிமையை எம்ஜிஆர் கொண்டிருந்தார்.

    பூவோடு சேர்ந்து தங்களை மணக்கச்செய்தவர் பலர். அவர்கள் அனைவரும் நன்றியோடு பார்ப்பது பொன் மனச் செம்மலை. இப்போதும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என தங்களது மலரும் நினைவுகளில் அவரை குறிப்பிடத் தவறுவதில்லை.

    “காலத்தை வென்றவன் நீ
    காவியமானவன் நீ…….”........ Thanks wa.,

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •